Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. எல்லாப் பாதையும் எப்போதும் ரோம் நகரை நோக்கியே டிசைன் செய்யப்பட்டுள்ளது.
  2. சுட்டது பிழை. அல்லைப்பிட்டில் வாகனத்தை நள்ளிரவில் பொலிஸ் மறித்தபோது வாகனத்தை நிறுதமாமல் மண்டைதீவுப்பக்கம் வாகனத்தை திருப்பியது முதல் பிழை. மண்டைதீவு பொலிஸாருக்கு தகவல் அனுப்ப அங்கு மண்டை தீவு பொலிசால் வாகனத்தை நிறுத்த முயற்சிக்க, அங்கும் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை அல்லைப்பிட்டிக்கு திருப்பியது முதலாவது பிழையை விட அடுத்த பெரிய பிழை. அதன் பின்னர் அல்லைப்பிட்டில் இருந்து துரத்திவந்த அல்லைப்பிட்டிப் பொலிசார் சுட்டிருக்கின்றனர். இரண்டு முறை பொலிசாருக்கு டிமிக்கி கொடுக்க டிமிக்கி கொடுக்க முயற்சித்தது பாரிய தவறு, அதுவும் நள்ளிரவு நேரத்தில். கூட இருந்தவர்களாவது சிறுவனுக்கு அறிவுரை கூறியிருக்கலாம்.
  3. ஒம் கோசான்.இயக்கங்களின் கிளைகள் அமைப்பு ரீதியாக வளர்சசியடையாத காலகட்டம். ஒரு புளொட் உறுப்பினர் தனது இயக்கத்திற்கு நிதி சேகரித்தார். அதே வேளை புலிக்கு சேர்ததவரும் அந்த நகரத்துக்கு வந்து கூட்டம் வைத்தார். புலிக்கு காசு சேர்தவருக்கு இவர் ஊரிலேயே நெருங்கிய நண்பர். புலி உறுப்பினர் தூரம் காரணமாக அடிக்கடி வர முடியாத நிலை. எனவே ஏற்கனவே மக்களிடம் பேசி உறுதியளிக்கப்பட்ட பணத்தை சேர்க்க நம்பிக்கையான ஆள் தேவை. தனக்கு நம்பிக்கையான இந்த புளொட்உறுப்பினரிடம் உதவியை பெற்றார். இவரும் இரண்டு இயக்கத்துக்கும் நிதி சேர்தது புலிக்கு சேர்ந்த பணத்தை தனது நண்பரான புலி உறுப்பினருக்கும் , புளொட்டுக்கு சேர்ந்த பணத்தை தனது அமைப்புக்கும் அனுப்பினார். கணக்கு பார்த்து சரியாக அனுப்பினாரா அல்லது கணக்கு விட்டாரா நாமறியோம். 😂 அந்த நேர வேகத்தில் இது பற்றிய அக்கறையும் இல்லை.
  4. புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.
  5. உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.
  6. இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது. ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.
  7. இது ஒருவரது கருத்து என்றால் அதை கணக்கெடுக்கவே தேவையில்லை. இது சிறு உதாரணம் மட்டுமே. அந்த கொலை நடந்த பின்னர் சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழ் மக்களின் கருத்துகள் இக்கொலைக்கு ஆதரவாகவே இருந்தன. இங்கு இணைத்த கருத்தை விட மோசமான பல கருத்துகளும் வந்திருந்தன. இப்போதும் அந்த சமூக ஊடகங்களை சென்று பார்கலாம்.
  8. நீங்கள் கூறியவை பிற்காலங்களில் நடந்தவை. ஆரம்பத்தில் பல குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இவற்றுக்கு எனது ஞாபகத்தை தவிர ஆவணங்கள் இல்லை. கோபு என்ற நபர் பல குற்றச்செயல்களுக்காக புலிகளால் கொல்லப்பட்டார். போயா என்ற நபரும் இதே காரணத்துக்காக ரெலோ அல்லது ரெலியால் முதல் முறை சுடப்பட்டு யாழ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன று இரவு ஆஸபத்திரிக்குள் நுளைந்து மீண்டும் சுட்டு கொல்லப்படார். இவர்கள் இருவருக்கும் அரசியல் தொடர்பு இருக்கவில்லை. நீங்கள் கேட்டதால் இதை பதிந்தேன். மற்றப்படி நான் கூற வந்த முக்கிய விடயம் இன்று மனித உரிமை, நீதிமன்றம், உலகில் துப்பாக்கி பாவிக்கும் புரொட்டோகோல் எப்படி என்றெல்லாம் முகநூல்களில் வகுப்பு எடுபவர்கள் எல்லோருமே இந்த கொலைகளையும் கடந்த வருடம் நடைபெற்ற மனைவியின் தலையை வெட்டிய குற்றத்தையும் ஒப்பிட்டு பாராட்டி எழுதியவர்கள் தான். அதுவே நான் கூற வந்த கருத்து. அதில் ஒரு முக நூல்க்கருத்து பின்வருமாறு இருந்தது. உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼 ----- தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉
  9. இவையெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டதே எவருக்கும் தெரியாது எமது ஊரில் வீடு உடைத்து களவு செய்பவர் என ற குற்றச்சாட்டுகள் எழுதி அவர் மீது ஒட்டி கொலை செய்யப்பட்டார். சுட்டவரை கண்டவர்களும் உள்ளார்கள். சுட்டவரும் ஊராருக்கு அறிமுகம் ஆனவர்தான். ஆனால் அந்த நேரம் இவையெல்லாம் தவறோ சரியோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. 1983 -1985 ல் இவாறான கொலைகள் பல நடந்தன. இன்று பெயர் விபரங்கள் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. அவரவர் அந்தந்த ஊராருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும். 1986 என்று நினைக்கிறேன் ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்று ஒரு விவரணத்தில் இந்த செயற்பாட்டை ஆவணப்படமாக வெளியிட்டு கண்டித்திருந்தது.
  10. சென்ற வருடம் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரின் தலையை வெட்டிய வரை வீரத்தமிழன் என்று தமிழ் முக நூல்களில் பலர் எழுதினார்கள். செய்தி பின்னோட்டத்தில் பெரும்பாலானோர் அந்த கொலை செய்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கினார்கள். சிலர் ஒரு படி மேலே போய் தலைவன் வழி வந்த வீரத்தமிழன் இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று போற்றிப் புகழ்ந்தாரகள். இப்போது அதே நபர்களின் முகநூல்கள் அப்படியே பிளேட்டை மாற்றி அந்த 17 வயது சிறுவன் தப்புசெய்தாலும் இப்படி தண்டனை கொடுக்க கூடாது, நாட்டில் சட்டம் எதுக்கு இருக்கு, நீதி மன்றம் எதுக்கு இருக்கு இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் கெம்புகிறார்கள். கண்மூடித்தனமான ஒருதலைப்படச கொலைகளுக்கு அன்றும் இன்றும் வக்காலத்து வாங்கியவர்கள் வாங்குபவர்கள் எல்லாம் துப்பாக்கி பாவிப்பதற்கு உலகில் உள்ள புரொட்டகோல் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள்.
  11. பொலிசாரின் செயல் அத்து மீறல் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சம்பவம் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் இதுவே இனிமேல் இப்படியான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உதவும். ஒரு காலத்தில் கோழிக்கள்ளன், நகை களவெடுத்தான் என சிறு குற்றங்களுக்கெல்லாம் எந்த நம்பகமான விசாரணையும் இன்றி தான் தோன்றித தனமாக மின்கம்பங்களில் கட்டி படுகொலை செய்த காட்டுமிராண்டி தனம் போல் பொலிசார் செய்வது நியாயமாகாது.
  12. தாங்களே கும்பலாக செய்தி என்ற பெயரில் உருட்டுகளும் செய்தி திரிப்புகளையும் தங்களுக்கு விருப்பமான் தலைப்புகளை இட்டு யுரூப், ரிக்ரொக், ஃபேஸ் புக் என்று சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது. பின்னர் அதையே கொண்டுவந்து ஆதாரம் என்பது. இப்பவ்வும் அந்தப் பழைய நினைப்பில். 😂
  13. சிறிமாவின் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய விதம் விமர்சனத்துக்குரியது. பல பொருளாதார வல்லுனர்கள் இது பற்றி கூறியுள்ளார்கள். ஆனால், வடபகுதி விவசாயிகள் மட்டுமல்ல, அகில இலங்கை உள்ளூர் உற்பத்தியாளரும் இந்த பொருளாதாரக் கொள்கையால் நன்மையடைந்தனர். மக்கள் அன்றாட பாவனையில் இருந்த வெங்காயம், மிளகாய் ஆகியனவற்றை வட பகுதி விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்ததால் நல்வாய்பாக வட பகுதி விவசாயிகள் உடனடி நன்மையடைந்தனர். மற்றபடி, பாணுக்கு கியூவால் பாதிக்கப்படவர்கள் சிங்கள மக்கள் மட்டுமல்ல, யாழ்பாணம் உட்பட வட கிழக்கிலும் அதே நிலை தான். சடுதியான இறக்குமதி தடையையல் 1973 ன் இறுதியில் இருந்து குறுகிய காலத்திற்கே அது இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் அரச/ தனியார் துறை ஊழியர்கள். சுய தொழில் செய்வோர் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், . 1974 ன் நடுப்பகுதியின் பின் நிலமை சற்று சீராகியது. ஒட்டு மொத்தமாக உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்தன. பல தரவை நிலங்கள் விவசாய நிலங்களாகின. படித்த வாலிபர் திட்டம் என்ற திட்டதின் மூலம் மக்களுக்கு வன்னியில் அரசால் காணிகள் வழங்கப்பட்டது அந்த காலத்தில் தான். ஆனால் திட்டத்தின் எதிர்பார்ப்பின் அளவுக்கு யாழ் மக்கள் தமது சோம்பேறித்தனத்தால் அங்கு செல்லவில்லை என்பது வேறு விடயம். எந்த ஒரு பொருளாதார திட்டமும் அதன் பலனை கொடுக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் இலங்கை போன்ற நாடுகளில் வழமையான பொதுத்துறை ஊழல் இந்த பொருளாதார கொள்கை நடைமுறை படுத்தலில் பாரிய சிக்கல்களை உருவாக்கியது. அரச துறையில் ஊழல்கள் மலிந்தது இத்திட்டதை பெரிதும் பாதித்தது. ஊழலை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது. ஆளும் கட்சியினரே பல ஊழல்களை செய்தனர். இது பல எதிர்மறையான அனுபவங்களை மக்களுக்கு கொடுத்தது. இதன் பலனை ஐக்கிய தேசியக்கட்சி 1977 ல் அறுவடை செய்தது. மற்றப்படி நான் சிறிமா ஆட்சியை அப்படியே முழுமையாக ஆதரித்து எப்போதுமே கருத்திடவில்லை. எந்த ஆட்சி என்றாலும் அவர்களால் தமிழருக்கு நன்மையான திட்டங்கள் வரும் போது தந்திரோபாய ரீதியில் கண்டும் காணாமல் அனுமதிக்க வேண்டிய தமிழரசு எல்லா திட்டதையும் மூர்க்கமாக தனது அரசியல் பிழைப்புக்காக எதித்தது. அதற்கு வழமைபோல் பல சொத்தைக் காரணங்களை தூக்கி பிடித்து உணர்சசி அரசியலை மட்டும் செய்தது. அதைத் தவறு என்று குறிப்பிட்டதை தூக்கிப் பிடித்து நான் சிறிமாவை ஒரேயடியாக புகழ்ந்ததாக மடைமாற்றுவது தமிழ் தேசியவாதிகளின் இயல்பு தான் என்பதால் அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை. மக்கள் நன்றியறிதலுக்காக வாக்களித்ததாக கூறியவுடன் நன்றி இலங்கை தமிழரின் இரத்தத்தில் ஊறியது DNA யில் ஊறியது என்று வெற்றுப் பெருமை மார்தட்ட வேண்டாம். இப்படியான வெற்றுப் பெருமை மார்தட்டல்கள் தான் தமிழரை அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது. கொப்பேகடுவ்வுக்கு வடபகுதி மக்கள் வாக்களித்தது நன்றியறிதல் மட்டுமல்ல மீண்டும் சு. க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இறக்குமதி தடை வரும் நாம் நன்மையடையலாம் என்ற சுய நல எதிர்பார்ப்பினாலும் தான். அதில் தவறில்லை சாதாரண மக்கள் அரசிடம் தமக்கு நன்மைகளை எதிர்பார்த்து வாக்களிப்பது இயல்பானது.
  14. உங்கள் கருத்துகளுக்கு நன்றி கோசான். ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக் காட்ட விழைகிறேன். தமிழ்த் தேசிய போர்வையை போர்ததியதன் மூலம் தமது வண்டவாளங்களை அந்த போர்வைக்குள் மறைத்து, நல்ல தமிழன், நல்ல அரசியல்வாதி, நல்ல மனிதன் என்ற பெயரை பெற்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகளில் பலர் உண்டு. அன்றும் இன்றும் அது தான் உண்மை. எவ்வளவு இறுக அந்த போர்வையை போர்கிறர்களோ அந்தளவுக்கு அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாது காப்பாற்றப்படும் கேடயமாக அது செயற்படும் என்பதை புரிந்தவர்கள் அவர்கள். உதாரணங்கள் தந்தால் அதுவே நீண்ட விவாதம் ஆகும் என்பதால் தவிர்ககிறேன். டக்லஸ் நீண்ட காலம் அரசாங்கத்தில் அமைசராக இருந்தாரே தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டு தவிர ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் ஏதாவது திட்டங்கள் ஏதாவது செய்தாரா? எனது பார்வையில் அப்படி இல்லை. ஒரு வேளை எனது கண்ணுக்கு அது தெரியவில்லையோ? அவ்வாறு செய்தார் என்பதை நீங்கள் நிரூபித்தால் அவரது அந்த செயலை நான் ஆதரித்து எழுதுவேன். (கவனிக்க அந்த செயலை மட்டும்)
  15. நீ தமிழன் என்றால் நான் கூறும் தமிழ் தேசிய கோட்பாட்டையும் அதை நான் செயற்படுத்துவதையும் அந்த செயற்பாட்டையும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எதிர் பார்கின்றனர். அவரகள் உரு வந்து ஆடுவதை சாந்தப்படுத்தி நல்வழிப்படுத்த கோசான் சிலவற்றை சிலவற்றை சொல்ல வேண்டும் தானே! அதில் தவறில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.