-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தாராளமாக நிறுத்தலாம். எனக்கு பதிலளிக்குமாறு நான் உங்களை வற்புறுத்தினேனா? இல்லையே!
- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நேர்மையான யாழ்கள வாசகர்கள் அனைவரும் அதை அறிவார்கள்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
அரசியல் விமர்சனம் என்பது , நடந்த அரசியல் செயற்பாடுகளில் இழைக்கப்பட்ட தவறுகளையும் அதனால் விளைந்த பாரிய அரசியல் பாதிப்புகளையும் விமர்சிப்பதும், எதிர்காலத்தில் அரசியல் செய்வோர் அதன்மூலம் அதை திருத்தி செப்பனிட்டுக் கொள்ள உதவுவதும் என்றே அரத்தமாகும். தமிழர் அரசியலில் எவரும் புனிதமானவர்கள் அல்ல. இதுவரை தமிழரின் அரசியலை தலைமையேற்று செய்தவர்களில் முக்கியமானவர்கள் அனைவருமே அதாவது பொன்னம்பலம், செல்வா அமிர், பிரபாகரன், சம்பந்தன் வரை அனைவருமே தவறு புரிந்து தமிழர் அரசியலை பலவீனப்படுத்துவதில் பங்காற்றியுள்ளார்கள் . ஆகவே, அவர்களின் செயற்பாட்டை விமர்சிப்பதில் தவறு இல்லை. இதில் எவரை விமர்சிகலாமர எவரை விமர்சிக்க கூடாது என்று எவரும் தடை போட முடியாது. 30. வருடங்களாக ஏக தலைமை என்று மற்றயவர்களை பலவந்தமாக முற்றாக தடை செய்து, தமிழரின் அரசியலை முழுமையாக எடுத்த தலைமை, அதிக வளங்களை தமிழரிடம் இருந்து எடுத்து அதிக பாதிப்புகளை தமிழருக்கு கொடுத்த தலைமையின் அரசியல் செயற்பாடுகள் (தனிபட்ட செயற்பாடுகளோ அவதூறுகளோ அல்ல) விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்று நீங்கள் கருதினால் சாதாரண அரசியல்வாதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று ஆகிவிடும். அது தவறானது. ஆனால், தனிப்பட்டட அவதூறுகளை யார் மீதும் செய்ய செய்யக் கூடாது . தனிபட்ட அவதூறுகளை எந்த ஆதாரமும் இன்றி தாராளமாக செய்யும் செய்யும் நீங்கள் இதைக் கூறலாமா?
-
இந்திய தூதகரத்தை விரட்டி,சீன தூதரகம் திடீரென சுற்றிவளைத்த மக்களால் பரபரப்புl
பெருமாள் யாழில் இல்லை என்ற துணிச்சல்தான்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தீர்க்க தரிசன தலைமை என்று தம்மை சொல்லிக்கொண்ட தலைவராலேயே தமிழ்மக்களின் வளங்களை முழுக்க உபயோகித்து பாரியளவு மக்களை பலி கொடுத்து இரண்டு தலை முறை பிள்ளைகளையும் பலியிட்டும் தொடங்கிய இடத்தில் இருந்து பல மடங்கு பின்னோக்கி Reverse gear ல் கொண்டு விட்டு விட்டு சென்ற பிறகு சாதாரண அரசியல்வாதி சுமந்திரன் எம்மாத்திரம்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
மாங்காய் பறிக்க முடியாததை விட மோசமானது, முட்டள்தனமானது என்ன வென்றால், ஒரு சில மாங்காய்களையாவது எட்டிப் பறிப்பதற்கான சந்தர்பங்கள் கிடைத்த போதும், எமக்கு மாங்காய் வேண்டாம் எட்டாத உயரத்தில் இருக்கும் தேங்காய்தான் வேணும் என்று அடம் பிடித்து கடைசியில் மாங்காயும் இல்லாமல் தேங்காயும் போன லூசுத்தனம் தான்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் தேசியத்தின் இன்னோரு குணாம்சம் என்னவென்றால், தான் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளுக்கு நேர்மையுடன் பொறுப்பேற்று அதை திருத்திக் கொள்ளாமல் எப்போது பார்ததாலும் தனது தவறுகளுக்கு அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்கும் மன நிலை. இந்த தப்பிக்கும் மன நிலை உங்கள் கருத்திலும் தெளிவாக தெரிகிறது.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
பிரச்சனைகளை இனங்கண்டு அதை உரிய முறையில் தீர்ப்பதை விடுத்து செய்தி மிகைப்படுத்துதல் வெற்று உசுப்பேற்றுதல், வெற்று கோசங்கள், கற்பனைகள் மூலம் கட்டி எழுப்பப்பட்டதே தமிழ் தேசிய கோமாளிக் கருத்தியல். கடந்த 15 வருடங்களில் சமூக ஊடக வருகையால் பொய் செய்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதே யொழிய அத்தனையும் காலாகாலமாக அந்த காலத்திற்கேற்ற முறையில் தமிழ் தேசியம் பேசியவர்களிடம் இருந்தவையே. அதனாலேயே அதனால் ஒரு அங்குலம் கூட முன்னே நகர முடியமல் நின்ற இடத்தில் அப்படியே நின்று குறளி வித்தை காட்டுகின்றனர். வெட்டி வீரம் பேசுவதும் பின்னர் புலம்புவதும் தமிழ் தேசிய அரசியலில் மாறாத சுற்றுவட்டம். இந்த வட்டத்தை சுற்றிச் சுற்றியே தமிழ் தேசியம் பேசும் தாயக/ புலம் பெயர் கோமாளிகள் பொழுது போக்குகின்றனர்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இதில் ஏக்கிய ராஜ்ஜிய அதாவது பிரிக்கப்பட முடியாத நாட்டிற்குள் அதிகார பரவலாக்கல் என்பதை பற்றி சுமந்திரன் பல முறை பேசி உள்ளார். அப்படியான அரசியலமைப்புக்கக முயன்றும் உள்ளார். அதில் தப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் கூறிய மற்றய விடயங்களை சுமந்திரன் பேசினார் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் உண்டா? இருக்கு என்று சொல்பவர் தான் ஆதாரம் தரவேண்டும் என்ற உங்கள் கூற்றுப்பட அந்த காணொளி ஆதாரங்களை இங்கு இணைப்பீர்கள் என நம்புகிறேன். தாங்களே செய்திகளை உருவாக்கி தாமே அதை பிரசுரித்து பின்பு அதையே ஆதாரமாக தமிழர்களுக்குள் மட்டும் காட்டும் கேவலமான அணுகுமுறை தீவிர தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் உள்ள ஒரு பொதுவான குணாம்சம். அதனால் தான் கடந்த 75 ஆண்டுகளாக சற்றும் முன்னேறாமல் அதே இடத்தில் நின்றபடி அதே விடயங்களை திருப்பி திருப்பி பேசி ஜோக் அடித்தபடி தமிழ் தேசியம் பேசுபவர்கள் உள்ளார்கள். மற்றப்படி எல்லா தமிழ் தேசியக்கடசி அரசியல்வாதிகளைப் போலவே சுமந்திரனும் ஒரு தமிழ் அரசியல்வாதியே.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
பாராளுமன்றத்தில் பல தடவைகள் ஆதாரங்களுடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து சுமந்திரன் ஆற்றிய பல உரைகள் உள்ளனவே. ஹன்சார்ட் இலும் அவை பதியப்பட்டுள்ளனவே! அதை விட அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே நீதிமன்றங்களில் வாதாடிய செய்திகள் வந்தனவே.
-
மனிதாபிமான நிவாரணப்பொருட்கள் அடங்கிய குழுவினருடன் இலங்கை வந்தது சுவிஸ் நாட்டு விமானம்!
மனிதாபிமான நிவாரணப்பொருட்களை உரிய வேளையில் வழங்கிய சுவிஸ் அரசுக்கு மிக்க நன்றிகள்.
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
வெள்ளத்துக்கு பிறகு பலர் அசுத்தமான நீரும் நுளம்புகளும் காரணமாக உடல்நலப் பிரச்சனைகள் பெறலாம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். சுத்தமான அல்லது கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்கவும், உடனடி சமைத்த உணவு சாப்பிடவும், காயங்களை மூடி வைத்திருக்கவும், வெள்ளநீரை தவிர்க்கவும். நுளம்பு விரட்டும் கிரீம் பயன்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அடிக்கடி கைகள் கழுவவும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது ஏதாவது விசித்திரமான அறிகுறிகள் இருந்தால் உடனே டொக்ரரைச்சந்திக்கவும்(டொக்ரர் அரச்சனாவை அல்ல😂
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
கொட்டும் மழையிலும் யாழில் இளைஞர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக் கொலை #info4tamil #tamilnewsupdates #TopNews #BreakingNews #TamilNews #srilanka #SriLankaNews #lka #lkanews #jaffnanews கொட்டும் மழையிலும் ஒரு இளைஞர் திருநெல்வேலி சந்திக்கு அணமையில் துரத்தி துரத்தி வெட்டி கொல்லப்பட்டார் என்ற செய்தியை இன்போ தமிழ் வெளியிட்டுள்ளது.
-
சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!
அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை. சங்கர் கலவியில் முக்கியமாக கணித பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அவரைப் போன்ற கல்வியில் மிக திறமையானவர்கள்களின் தியாகம் எல்லாம் வீணாகியதுடன், இன்று புலம் பெயர் அடாவடிகளின் கையில் சிக்கி தமிழரின் அரசியல் பாழ்படுவதால் வந்த கடுப்பில் கூறப்பட்ட கருத்து. அவமானப்படுத்தும் தொனியில் அது தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை மீளப்பெற்றுகொள்கிறேன். மன்னிக்கவும்.