-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டி மேற்கு இந்திய அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி மோடி மைதானத்தில் மோதுகின்றன, 200 ஓட்டங்களுக்கு மேலான ஓட்டத்தினை இந்த போட்டியில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம், பகல போட்டியாக நடைபெறும் போட்டி என்பதால் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும். ஆடுகளம் சிகப்பு நிற மண் என கிரிக் இன்போ கூறுகிறது, ஆரம்ப ஓவர்கள் மிக சிரமமாக வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் அணி ஒரு பெரிய ஓட்டத்தினை எடுக்க வாய்ப்புள்ளது. சிகப்பு மண் சுழலுக்கும் உதவும் ஆனால் தென்னாபிரிக்கா ஒரு முழுநேர சுழலுடனேயே வருவார்கள் கடந்த போடியில் விளையாடிவர்களே இந்த போட்டியிலும் கலந்து கொள்ளக்கூடும். இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு என கூறமுடியாத வகையில் மிகவும் இறுக்கமான பலம் கொண்ட அணியாக இருந்தாலும் தென்னாபிரிக்காவின் திட்டமிடலுக்காக தென்னாபிரிக்கா வெல்லும் என கருதுகிறேன். இரண்டாவது போட்டி சென்னையில் சிம்ப்பாவேயிற்கு எதிராக இந்தியா மோதுகிறது சஞ்சு சாம்சன் விளையாடுகிறார் எனவும் ரிங்கு சிங்கு சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை என கூறப்படுகிறது, கிரிக் இன்போ ரிங்கு அல்லது திலக் என குறிப்பிடுகிறது, மற்றும் ஒரு மாற்றம் வலது ஆதிக்கம் கொண்ட சிம்பாவேயிற்கெதிராக சுந்தருக்கு பதிலாக இடது கை அகசர் மீண்டும் அணியில் இணைகிறார் என கூறப்படுகிறது. இரண்டாவது போட்டி யார் வெல்வார்கள் என்பதற்கு கேள்விக்கே இடமில்லை, ஆனால் சிம்பாவே கொஞ்சமாவது முயற்சி செய்து போட்டியினை சுவாரசியமாக்க வேண்டும், இலங்கை அணி போல அடுத்தடுத்து ஒரு மோசமான தோல்வியினை கொடுக்கும் போட்டியாக இல்லாமல் இரசிகர்களு ஒரு சிறந்த போட்டியினை கொடுக்க முன்வரவேண்டும். பையனின் கருத்தான சஞ்சு சாம்சனை அணியில் இணைக்கவேண்டும் என்ற கருத்தினை இந்திய தெரிவுக்குழுவும் காது கொடுத்து கேட்டுள்ளது போல இருக்கின்றது, ஆனால் அபிசேக்கினை நீக்கவில்லை, ரிங்கு சோந்த காரணத்திற்காக இன்றைய போட்டியில் கலந்து கொள்ளமுடியாமையால் அந்த இடத்திற்கு சஞ்சுவை இந்திய தெரிவுக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தெரியவில்லை! ஜக்கம்மாவினை வைத்து கொஞ்சம் அதிகமாக கலாய்த்துவிட்டோமோ என ஒரு புறம் யோசனையாக இருந்தாலும், பையன் இதனை ஒரு விடயமாக எடுக்கும் நபர் இல்லை என்று நினைத்தாலும் பையன் திடீரென காணாமல் போயுள்ள நிலையில் கோசான் வேறு ஜக்கம்மாவிலிருந்து சர்வதேச பயங்கரவாதியாக மாற்றியதால் உண்மையாக தலைமறைவாகிவிட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவர் இல்லாத யாழ்கள போட்டி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை! ஏதாவது சொற்குற்றம் பொருள் குற்றமிருந்தால் பொறுத்து மன்னித்து மீண்டும் களத்திற்கு வாருங்கள் பையன், அல்லது வேலைப்பழு காரணமாக வராமல் இருந்தால் ஒரு வார்த்தை பதிந்து விட்டாவது செல்லுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணி பாகிஸ்தானுடனான போட்டியிலும் தோற்கவே போகிறது! இலங்கை அணிதான் முதல் முதலாக இந்த உலக கோப்பை போட்டியில் இறுதி ஓவர்களில் சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியிருந்தனர் என கருதுகிறேன், இந்த ஆடுகளங்கள் பந்து பழசாகும் போது ஆடுகளத்தில் மேலும் மெதுவாகிறது, 16 ஆவது ஓவரில் சமீராவின் ஓவரில் அடி விழுந்தபின்பும் அடுத்த ஓவரை மதுசங்கவிற்கு கொடுத்தார்கள். 19 ஆவது ஓவர் மட்டுமே தீக்சன வீசினார், மறுவளமாக நியுசிலாந்து அனைத்து இறுதி ஓவர்களையும் சுழல் பந்து வீச்சாளர்களே வீசினார்கள். பந்து திரும்பும் நிலையில் நியுசிலாந்து சோர்ட் பைன் லெக் வைக்காமல் பந்து வீசுகிறது, அசலங்க மட்டுமே பந்தினை சூவீப் அடித்தார் (1) மற்றவர்கள் பெரிதாக முயற்சியே செய்யவில்லை, ஓப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்படும் பந்திற்கு சுவீப் அடிக்கும் போது கணிப்பு தவறினால் எழும் பந்தினை பிடிப்பதற்காக ஒரு பிளை சிலிப் வைத்து பந்து வீசினார்கள் (பிளை சிலிப் சாதாரண சோர்ட் பைன் லெக் போல ரிவர்ஸ் சுவீப்பிற்கு செயல்படும், அத்துடன் சுழலுக்கு எதிராக சுவீப் செய்யும் போது பிடி கொடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தும்), இலங்கை வீரர்கள் சுவீப் செய்யாமல் இறங்கி வந்து திரும்பாத பந்துகளை அடிப்பது போல அடித்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டது பின்னர் ஒரு சாதகமான நிலையில் இருந்து (நியுசிலாந்து பின்னணியின் துடுப்பாட்டம் சிறப்பானதுதான்) போட்டியினை வெல்ல முடியாது இலக்கு எடுக்க அனுமதித்தது பின்னர் துடுப்பாட்டத்தில் மிக மோசமாக விளையாடியிருந்தது, பாவம் இலங்கை இரசிகர்கள். அடுத்த போட்டிக்கு அனுமதி சீட்டு முழுமையாக விற்பனையாகி விட்டதாக கூறுகிறார்கள், அடுத்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை இலங்கை அணி வெளிப்படுத்தி இரசிகர்களை மகிழ்விக்குமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையன் இல்லாத யாழ்கள போட்டியும் பல்லில்லாத இலங்கை அணியும் ஒன்றுதான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த ஆய்வில் இலங்கையின் முக்கிய ஓட்டங்களை பெறும் 3 தொடக்க ஆட்டக்காரர்கள் சுழலுக்கு குறைவான ஓட்ட விகிதங்களை கொண்டிருப்பதனையும் இங்கிலாந்து சுழலில் விக்கெட் எடுத்தது பாற்றி கூறுகிறார்கள், அதனால் மேலே கூறிய எனது கருத்து தவறாக தெரிகிறது நியுசிலாந்து கென்றியுடன் ஒரு முழு நேர சுழல் பந்து வீச்சாளரை பாவிக்க கூடும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று நடைபெறும் இலங்கை, நியுசிலாந்து போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது, கிரிகின்போ தகவலினடிப்படையில் இலங்கை அணியில் குசால் பெரேராவிற்கு பதிலாக பையனின் கமில் மிசாரா விளையாடுகிறார். இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இங்கிலாந்து அணிக்கெதிராக கமிண்டு மென்டிஸ் மற்றும் குசால் மென்டிஸின் பந்து வீச்சாளருக்கே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார் , பாதுகாப்பான சிறிய ஓட்டங்களுக்கான அடித்தேர்வுகள் கூட சிக்கலான பிட்சில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது ஆனால் அவர்களின் முயற்சியினை பாராட்டுகிறார். அதே வேளை கிரிகின்போ மற்ற வீரர்களின் எத்தனிப்பின்மையினை சுட்டிக்காட்டுகிறது. நியுசிலாந்து வீரர் சாப்மன் நீண்ட எல்லைகள் கொண்ட கொழும்பு ஆடுகளத்தில் ஒற்றை இலக்கங்களை இரட்டை இலக்கமாக்குவதன் அவசியத்தினை கூறுகிறார், இந்த ஆடுகளம் புது ஆடுகளமாக இருப்பதால் (தொடர்ச்சியாக விளையாடும் போது மேலும் மேலும் மெதுவாகிவிடும்) ஓட்ட எண்ணிக்கையான 170 -175 என்பதினை கடந்து 180 - 185 ஆக இருக்கலாம் என கருதுகிறேன் (இன்று விளையாடவுள்ள ஆடுகளம் புதிய ஆடுகளம் என கிரிகின்போ கூறுகிறது). நியுசிலாந்து அணிக்காக லொக்கி பேர்குசன் இன்று விளையாடுவார் என கூறப்படுகின்ற நிலையில் ஜேகப் டபி விளையாடமாட்டார் என தற்போதய நிலவரத்தினடிப்படையில் கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது, புதிய பந்தில் சிறப்பாக வேகப்பந்து வீசும் மட் கென்றி உள்ளார், அவருடன் மத்திய ஓவர்களிலிலும் இறுதி ஓவர்களிலும் சிறப்பாகபந்து வீசும் லொக்கி பேர்குசன் உள்ள நிலையில் வேகபந்து அனைத்துதுறை ஆட்டக்காரரான ஜிம்மி நீசமும் விளையாடுவார் என்பதாகவே கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது. இந்த உலக கிண்ண போட்டியில்பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திணறும் ஜிம்மி நீசம் தொடர்ந்தும் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதிலாக (சுழல் பந்து சகலதுறை ஆட்டக்காரரான பிராஸ்வெல் காயத்தினால் இத்தொடரில் விளையாடவில்லை) வேறு ஒரு சகலதுறை ஆட்டக்காரரை களமிறக்குவார்களா? இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதல் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் வாய்ப்புக்கள் அதிகம். இலங்கை அணியின் பந்து வீச்சில் மாற்றம் இல்லை நியுசிலாந்து அணியில் லொக்கிபேர்குசனும் இஸ் சோதியும் விளையாடுவார்கள் என கிரிகின்போ வீரர்கள் பட்டியல் கூறுகிறது. இந்த ஆடுகளத்தில் ஆரம்ப ஓவர்களில் சுழல் பந்து வேகப்பந்து போல ஆதிக்கம் செலுத்தும் என கருதப்படுகின்றது, நியுசிலாந்து ஆரம்ப இணை வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதால் இந்த போட்டியிலும் மதுசங்க மற்றும் வெல்லாலெகே ஆரம்ப ஓவர்களை போட வாய்ப்புள்ளது. 1-6 ஓவர்கள் முக்கியமாக உள்ள நிலையில் (50 -55 ஓட்டங்களை எடுத்தாக வேண்டிய நிலையில்) நியுசிலாந்து அணி மட் கென்றியுடன் பந்து வீசுவதற்கு ஒரு முழுநேர சுழல் பந்து வீச்சாளர்களை பாவிக்க முடியுமா? சான்ட்னர், சோதி 8 ஓவர்கள் உள்ல நிலையில் கென்றியிற்கு ஆரம்ப ஓவர்களில்3 ஓவர்களை வழங்கப்பட்டுவிடும், பவர் பிளேயில் ஒரு ஓவர் லொக்கி பேர்குசன் வீசுவார் அடுத்த ஒரு ஓவரை ஒரு பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர்களிடம் தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன் (ரச்சின் அல்லது பிலிப்ஸ்) அந்த ஒரு ஓவரை இலங்கை அணி இலக்கு வைக்கும். இந்த போட்டியில் நியுசிலாந்து அணி இலங்கை அணியினை விட சகலதுறையிலும் சிறப்பான தன்மைகள் கொண்டு காணப்படுவதால் நியுசிலாந்து அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளது, ஆனால் ஜக்கம்மா இலங்கை அணி மாயாயாலம் செய்யும் என கூறியுள்ளது. கடந்த போட்டியில் இலங்கை அணித்தலைவர் ஓப் ஸ்டம்ப்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு 3 வீரர்களை பாக்வேர்ட் பொயின்ட், பொயின்ட், கவர் என வைத்து எக்ட்ரா கவர் மிடோப் வைத்து நீண்ட நேரான எல்லைக்கோட்டினை திறந்து வைத்து முடியுமானால் நேரான எல்லைக்கோட்டிற்கு ஓப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தினை உள் வளையத்தில் உள்ள வீரர்களுக்கு மேலாக அடிக்க இறுதி ஓவர்களில் தூண்டினார், இன்றைய போட்டியிலும் அவ்வாறான ஒரு களத்தடுப்பினை எதிர்பார்க்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏற்கனவே குழம்பி போயுள்ளேன், மாயாயாலம் நடக்கும் என மொட்டையாக சொல்லிவிட்டு பையன் போய்விட்டாரே, எந்த மாயாலாம்? என சரியாக சொல்லாமல் போய்விட்டார் என, சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாதுடன் 95 ஓட்டங்களுக்கு இலங்கை செய்த மாயாலாயாலமா? அல்லது நியுசிலாந்தினை வெல்வதனை மாயாயாலம் என்பதா என.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை நியுசிலாந்து போட்டியில் என்ன நடக்கும் என கேட்டதற்கு பையன் குறி சொல்பவர் போல சூசகமாக மாஜாலாம் நடக்கும் என குறி சொல்கிறாரே?🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் அணியினர் யாழ்களத்தில் உங்கள் பதிவினை உற்று கவனிக்கிறார்கள் என நினைக்கிறேன், நாணய சுழற்சியில் வென்று நீங்கள் கூறிய மாதிரியே பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளனர், அதே போல நீங்கள் கூறிய ஓட்ட இலக்கினையும் எடுத்துள்ளனர், இதனை விட வேறு என்ன ஆதாரம் வேணும்? அப்படியே இன்றைய போட்டி நிலமையினை சொல்லிவிடுங்கள், பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலில் ஓட்டத்தினை கணிக்க முடியாது என சொன்ன உங்களுக்கு எப்படி பின்னர் சரியாக ஓட்டத்தினை கணிக்க முடிந்தது, இதெல்லாம் ஜக்கமாவின் அருள்தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாணய சுழற்சியில் வென்றால் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதே சிறப்பானது, மைதான ஈரலிப்பினால் பந்து மட்டைக்கு இலகுவாக வரும் அத்துடன் பந்து வீசும் அணிக்கு சிரமமாகவும் இருக்கும். 170 இனை பாகிஸ்தான் அடிக்காது என்பதாலேயே பாகிஸ்தானுக்கு இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும், பாகிஸ்தான் ஒரு வேகப்பன்ட்கு வீச்சாளருடன் வருவார்கள் அதனால் பவர் பிளேயில் சுழல் பந்து வீச்சாளர்கள் 2 -3 ஓவர்கள் போட வேண்டிய நிலையில் இங்கிலாந்து 1-6 ஓவர்களில் 55 ஓட்ட்டங்களை எடுக்க இலகுவாக இருக்கும். ஆனால் இலங்கையுடனான போட்டியில் இங்கிலான்ட்கு தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இடது கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை சுழல் மூலம் (இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் வலது கை இணை) ஓட்டத்தினை 37 இற்குள் மட்டுப்படுத்தியதாக நினைவுள்ளது. இரண்டு அணியுமே நல்ல பன்ட்கு வீச்சு, இங்கிலாது பாகிஸ்தானை விட துடுப்பாட்டத்தில் சிறப்பானது ஆகவேதான் இங்கிலாந்திற்கு வாய்ப்பு அதிகம், நானும் பாகிஸ்தானையே தெரிவு செய்துள்ளேன், நான் தெரிவு செய்தததிற்காக வெல்லுவார்கள் என விரும்பலாம் ஆனால் நடைமுறை வேறாகவல்லவா இருக்கிறது. இடது கை சுழல் அக்சரை வெளியே உக்கார வைத்துவிட்டு சுந்தரை கொண்டு வந்தவர்கள், வருணிற்கு பதிலாக அதே இடது கை குல்தீப்பினை இறக்குவார்களா? குல்தீப்பினை விட இந்த ரி20 இல் வருணையே தெரிவு செய்வார்கள் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணி.(Balanaced) இங்கிலாந்து வெல்லும் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுந்தரை அக்சருக்கு பதிலாக எடுத்துள்ளார்கள், தென்னாபிரிக்க இடது துடுப்பாட்ட காரர்களை இலக்கு வைத்து இதனை முயற்சித்திருக்கலாம், காரணம் தெரியவில்லை. வருண் வீசும் விக்கெட்டு விக்கெட் லைனை மாற்றுவதற்காக விக்கெட்டுக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்ந்து அவரரது லைனை குழப்பினார்கள், இறுதியாக வருண் வைட்டாக போட வைத்து அவர்களின் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். குல்தீப் மணிக்கட்டினால் பந்தினை சுழற்றுவதால் அந்த கறுப்பு மண் ஆடுகளத்தில் அதிக திருப்பம் ஏற்படுத்தலாம், வருணின் கூக்கிளி கணிப்பது கடினம், அவரை இலக்கு வைத்து திட்டமிட்டு அடித்தாடினார்கள், இனிவரும் போட்டிகளில் மற்ற அணிகளும் இதனை பின்பற்றுமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இடது கை துடுப்பாட்டக்காரர்கள், ஆடுகளம் கறுப்பு மண் கொண்ட மெதுவான ஆடுகளம், வலது கை மார்க்ரமின் பந்து வீச்சு இடது கை துடுப்பாட்டக்காரருக்கு உள்ளே இருந்து வெளியே போகும் (இ டமிருந்து வலமாக மட்டையின் வெளிப்புறம்). இலங்கை இங்கிலாந்து போட்டியில் வளமையாக தொடக்க ஒவர் போடும் வலது கை சமீரவிற்கும் தீக்சணவிற்கும் பதிலாக இ டது கை மது சங்க இடது கை வெல்லாலெகே பந்து வீசினார்கள், இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர் அதே போல இசான் கிசனும் விக்கெட் கீப்பர் துடுப்பாட்டக்காரர், இசானுக்கு மாற்றீடாகவே சாம்சனை இற்க்குவார்கள், அபிசேக்கிற்கு மாற்றீடாக இறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இசான் கிசன் நன்றாக விளையாடுகிறார் என நினைக்கிறேன்.
-
இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு
நீங்கள் கூறுவது சரியாக இருக்கும் எனவே கருதுகிறேன், பல பிரிவுகள் ஈராக் போல ஒரு நிலை வரலாம் என கருதுகிறேன் (அவ்வாறு நடக்கும் என நினைக்கவில்லை). அமெரிக்கா ஒரு நீண்ட ஒரு மரபு வழி போர் ஒன்றினை செய்யும் நிலையில் உறுதியாக இல்லை (மேலே இணைக்கப்பட்ட கட்டுரையிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது), ஆனால் நிச்சயமாக ஒரு தாக்குதல் செய்யும் என எதிர்பார்க்கிறேன், எனோ தெரியவில்லை; இந்த அமெரிக்க ஈரான் விவகாரத்தில் எதுவுமே நடக்காது என்பது போல ஒரு உணர்வுள்ளது ஆனால் இவ்வாறான செலவு மிக்க நகர்வினை ஒரு அச்சுறுத்தலுக்கு செய்யாது என நம்புகிறேன். உள்நாட்டு கட்டுப்பாடற்ற நிலையில் உதவி செய்ய எந்த தரப்பும் சிந்திக்கின்ற நிலையே காணப்படும், உதவிகளின் பலனை அவை இல்லாமல் செய்துவிடும் என கருதுகிறேன், சில நாள்களில் தெரிந்துவிடும் (10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, முனர் காலக்கெடு முடிவதற்குள் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டமையால்). கடந்தகால தரவுகளினடிப்படையில் ஒரு மாதிரியினை (Simulation) அமெரிக்கா செய்திருக்கும், அவ்வாறான தகவல்கள் வெளிவராத நிலையில் பழைய மாதிரிகளே ( மில்லனியம் சாலன்ச் 2002) அமெரிக்க தரப்பு எதிர்கொள்ளும் சிக்கல்கள் கடினமாக இருக்கின்றது. இந்தநிலையில் ஒரு முழு அளவிலான போர் எந்தளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை.