Everything posted by ராசவன்னியன்
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
Update: 'சென்னைத் துறைமுகம் - மதுரவாயல்' மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு(NHAI) சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னைத் துறைமுகத்தை சுற்றி முழுவதும் நகர்மயமாகிவிட்டதால் இங்கு வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலைத் திட்டத்தை ரூ.1,800 கோடி மதிப்பில், செயல்படுத்த முடிவு செய்தது. இந்தப் பாலம் கூவம் நதிக்கரை வழியாக அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. கூவம் நதியின் எல்லைப் பகுதியில் குடிசை வாழ் மக்கள் வசிக்கின்றனர். இதன் வழியே பாலம் அமைத்தால் அங்கு வசிக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி விரைவு சாலை திட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. கூவம் நதியின் வழியாக மேம்பாலம் செல்வதால் நதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. எனவே, திட்டத்தை நிறுத்த உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு மீது நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, சிறப்பு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகினர். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் உண்மையப் பார்க்கும் போது, சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் மேம்பால விரைவு சாலை திட்டம் உடனடி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்துக்கு செல்வதற்கும் இந்த மேம்பால விரைவு சாலைத் திட்டம் தேவைப்படுகிறது. எனவே மேம்பால விரைவு சாலைத் திட்டம் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமான திட்டம்தான். ஆழ்ந்து யோசித்த பிறகுதான் கூவம் வழியாக இந்தத் திட்டத்தை தொடர தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. திட்ட சாத்தியக் கூறு அறிக்கையை ஆய்வு செய்த பிறகே, கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. பருவ மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது திட்டத்தின் சிக்கல்களாக கருதப்படுகிறது. அதே நேரம், இதற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த மனுவின் கோரிக்கையை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறோம். இதைத் தொடர்ந்து கடந்த 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்கிறோம். மேலும், இந்தத் திட்டத்தை தொடர்வதற்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்த உறுதிமொழியின் படி, 25 ஆயிரம் கனஅடி மழை நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தவிர, கூவம் நீர் தடையில்லாமல் செல்வதற்கு, கட்டுமானப் பணியின் போது அதில் விழும் கட்டடக் கழிவுகளை, தண்ணீர் செல்வதற்கு தடையில்லாத வகையில் அகற்ற வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thanks: Dinamani.
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
அதனால் தான் மாற்று வழியாக மதுரவாயலை ஒட்டிச் செல்லும் கூவம் நதியின் கரையோரமாகவே சென்னை துறைமுகம் வரை இத்திட்டத்தின் வழித்தடம் வடிமைக்கப்பட்டு, அப்போதைய சம்மந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளிடமும் (இப்போது தடுக்கும் பொதுப்பணித் துறையிடமும் சேர்த்து) தடையில்லாச் சான்றிதழ் (No objection Certificate) வாங்கியே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்மையார்தான் "இது மு.க. காலத்தில் ஆரம்பித்த திட்டமாச்சே..!" என வன்மம் கொண்டு ஒப்புக்காக சப்பை காரணம் காட்டி, முதலில் 'ஓ.கே' சொன்ன அதே பொதுப்பணித் துறை மூலம் முட்டுக்கட்டை போடுகிறார்.
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
நல்ல 'அவதானிப்பு' பாஞ்சு!
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
டங்கு, 19 கி.மீ தூரத்திற்கு முதலில் சாலை அமைக்க அகலமான இடம் வேண்டுமே? பூந்தமல்லி - சென்னை சாலையில், சென்னை சென்ட்ரல் முதல் அமிஞ்சிக்கரை வரை ஏறத்தாழ 12 கி.மீ தூரத்திற்கு சாலையின் நடுவே, அடியில் 15மீ - 20 மீ ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில் தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மேலேயே கனரக வாகனங்கள் செல்லும் இன்னொரு மேம்பாலம் அமைக்க முடியுமா..? பல நாடுகளில் நகரத்தினுள்ளே செல்லும் நதியின் கரையோரமாகவே பாலங்கள் செல்வதை கவனித்துள்ளேன். ஓட்டுநர்கள், கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டியதுதான்!
-
முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
மதுரவாயல் 'பறக்கும் சாலை' திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி! மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை பறக்கும் சாலை திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால், கூவம் ஆற்றின் வழியாக திட்டத்தை செயல்படுத்த தமிழக பொதுப்பணித் துறை எதிர்ப்புத் தெரிவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனுமதி அளித்தும், இதுகுறித்து பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் இன்று தீர்ப்பளித்துள்ளது. http://www.dinamani.com/latest_news/2014/02/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/article2067621.ece இரண்டு ஆண்டுகள் நீதிமன்ற வழக்கால் இழுத்தடிக்கப்பட்ட இத்திட்டம் இனியாவது சுமுகமாய் நிறைவேறினால் நன்று. மூளியாய் நிற்கும் இத்தூண்களுக்கு விடிவு கிட்டும்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நாளை(21-02-2014) 'பிறந்தநாள் விழா' காணவிருக்கும் கலகலப்பு நாயகன் 'தமிழ்சிறி'க்கு வாழ்த்துக்கள்!
-
சென்னை மெட்ரோ ரயில்...
நன்றி சுவி. நீங்கள் ஜோடியாக வந்தால் (ஓ..ரொம்பவும் கற்பனை செய்து விடாதீர்கள், உங்கள் இல்லத்தரசியுடன் தான்...!) நிச்சயம் முன்னுரிமை அளிக்கபடும் சுவி. ரொம்ப நல்ல மனசு. நன்றி. நன்றி. யாரும் மெட்ரோ ரயிலில் தொங்கியவாறு பயணிக்க முடியாது, ஏனெனில் இதில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மூடினால் தான் ரயில் கிளம்பும், ரயில் நிலையங்களில் மட்டுமே இது திறக்கும்.
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்திய மத்திய அரசும், தமிழ் நாடு அரசும் இணைந்த கூட்டு நிறுவனமாகும். இருவருக்கும் இதில் சம பங்குண்டு. நடத்தப் போவது மத்திய அரசின் வழிகாட்டலில் தமிழக அரசு திறம்பட நடத்தும். (ஒரு நம்பிக்கைதான் ) இத்திட்டப் பணி நடக்குமிடத்தில் சில விபத்துக்கள் நடந்துள்ளன. ஆனால் இறந்த/காயம்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தகாரர்களின் அனுசரனையில் வேலை பார்த்தவர்கள். அவர்களின் ஆயுள் இழப்பீட்டுத் தொகைக்கு அந்நிறுவனமே பொறுப்பு. அரசாங்கமும் கருணைத் தொகை அளித்தது போக, இழப்பீட்டுத் தொகையை சீக்கிரம் வழங்க உரிய அழுத்தமும் , நடவடிக்கையும் அவ்வப்பொழுது எடுத்தே வருகிறது.
-
சென்னை மெட்ரோ ரயில்...
சோதனை ஓட்டத்திற்கு முன் பூஜை வழிபாடு.. கோயம்பேடு நிலையத்தில் புறப்பட தயாரான நிலையில்.. ரயிலின் டிரைவர் அறையில்.. சோதனை ஓட்டத்தில் நகர்வலம்.. உற்சாகமாக கையசைத்து வரவேற்கும் மக்கள்..
-
சென்னை மெட்ரோ ரயில்...
ஆமாம் டங்கு. இது மொத்த திட்டத்தில் தோராயமாக் கால் சதவீதம் மட்டுமே இருக்கும். ஏனெனில் மற்ற பகுதிகளெல்லாம் நிலதிற்கு கீழே 20 மீ ஆழத்தில் குடைந்து சுரங்கம் மூலம் இயக்கப்படுமாதலால், பணிகள் பல்வேறு பிரச்சனைகளுக்கும், சவால்களுக்குமிடையே மிக தாமதமாகவே நிறைவேறி வருகிறது.
-
சென்னை மெட்ரோ ரயில்...
ஆஹா...! சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்துவிட்டதப்பு... http://youtu.be/tOH8BY-Oj0I கோயம்பேடு- அசோக்நகர் இடையே 'மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டம் சென்னை: கோயம்பேடு - அசோக்நகர் இடையே இன்று 2-வது நாளாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14,600 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதை வழியாக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோயம்பேடு பணிமனையில் இருந்து கோயம்பேடு ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இன்று 2-வது நாளாக சோதனை ரயில் ஓட்டம் நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. சோதனை ஓட்டத்தின் போது வழிநெடுக வீடுகளில் உள்ள மக்கள் மாடியில் நின்று கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும். சென்னையில் இயக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயில் மற்ற மாநிலங்களில் ஓடக்கூடிய மெட்ரோ ரெயில்களை விட பல்வேறு சிறப்புகளை பெற்றது. சென்ட்ரல்- எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இது விடப்படுகிறது. மொத்தம் 42 மெட்ரோ ரெயில்கள் சென்னையில் உலா வர இருக்கின்றன. இதில் 9 ரெயில்கள் பிரேசில் இருந்தும், மற்ற ரயில்கள் ஆந்திராவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இந்த ரயில்கள் அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். இந்த ரயில்கள் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். ஒரு மெட்ரோ ரயிலில் (4 பெட்டி) மொத்தம் 1276 பேர் பயணம் செய்ய முடியும் 176 இருக்கைகள் உள்ளன. 1100 பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம். இந்த ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக 16 இடங்களில் கண்காணிப்பு கேமிரா இருக்கும். அவசர வசதிகளும், ஊனமுற்றோர், மற்றும் வயதானவர்கள் பயணம் செய்ய வீல் சேர்களும் இடம்பெற்று உள்ளன. கடந்து சென்ற ரயில் நிலையம், வர இருக்கும் நிலையங்கள் உள்பட பல்வேறு விவரங்களை அறியும் வகையில் எல்.இ.டி.(LED) திரை ரயிலில் இருக்கும். இது தவிர ரயில் நிலையங்களை குறிப்பிடும் வரைப்படமும் பயணிகள் பார்வைக்காக இருக்கும். பயணிகளின் அவசர உதவிக்கு ரயில் டிரைவரை அழைக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதை அழுத்தி அவரிடம் தகவல் தெரிவிக்கலாம். ரயில் பெட்டி முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயிலில் சிறப்பு வகுப்பு, சாதாரண வகுப்பு என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டி முழுவதும் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் வெளியே பார்ப்பதற்கு வசதியாக இருபுறமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ ரயில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை, ஜூன் மாதத்தில் இயக்கப்படும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/tamilnadu/chennai-metro-holds-trial-on-elevated-section-193582.html
-
சென்னை மெட்ரோ ரயில்...
New update about Chennai Metro Phase II - Extension of the project up to Thiruvottiyur, Chennai North. சென்னை: வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் வழித் தடத்திற்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா தனது உரையின்போது, ''சென்னை மெட்ரோ ரயில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை இங்கு நான் மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறேன். நமது முதலமைச்சர் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்தடத்திற்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும் இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த அரசால் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் பொது அமைதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதை எதிர்கொண்டு தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அரசு உறுதிக் கொண்டுள்ளது. இதன்மூலம் 2013௧4 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்தை மிஞ்சும்" என்று கூறினார். http://news.vikatan.com/article.php?module=news&aid=23950
-
சென்னை மெட்ரோ ரயில்...
நல்ல எண்ணம் தான். ஆனால் 'வத வத'வென பெருகியுள்ள மக்கள் தொகையினை நினைத்தால், யானைப் பசிக்கு சோளப்பொரி போலத்தான் இந்த வெகுசன திட்டங்கள் முடியும். உதாரணத்திற்கு இங்கேயுள்ள ஒரு நடுத்தர கிராமத்திற்கு சென்று தெருவில் பாருங்கள் எத்தனை மனித தலைகள் வீதியில் தென்படுமென்று, அது நிச்சயம் யாழ்ப்பாண நகரின் சன நடமாட்டத்தை விட அதிகமாகவே இருக்கும். மக்கள் என்று நாம் இருவர், நமக்கு இருவர் என எண்ணத் தலைப்படுகிறார்களோ அப்பொழுதான் இந்தியாவின் திட்டங்களின் பலன் பெரும்பாலான சனங்களுக்கு சென்றடையும்.
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னையின் புதிய விமான நிலைய முனையங்களின் கட்டுமானப் பணிகள் மிக மிக தரமற்றவை. ஏர்போர்ட்ஸ் அதாரிடி அஃப் இந்தியா(AAI)வின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்ற ஊழல் மலிந்த வேலைகள் அவை. இதைத் தவிர சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையின் ஒரு பகுதி, அடையாறு நதியின் மேலே கட்டபட்ட முறையிலும் தரமற்ற வகையில் உள்ளதாக கூறி இன்னமும் பயணிகள் பாதுகாப்பு காரணமாக திறக்கப்படவில்லை. இவையனைத்தையும் சரி செய்யும்வண்ணம் விமான நிலையத்தை தனியார்வசம் ஒப்படைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, முடிவாகும் தருணத்தில், விமான நிலைய ஊழியர்கள் சங்கம், சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடையை சென்ற வாரம் வாங்கியுள்ளனர். அரசு நிறுவனமென்றால் ஊழலில் திளைப்பது புதிதல்லவே? இதற்கு சென்னை விமான நிலையமும் விதிவிலக்காகவா இருக்க முடியும்? மும்பாய், தில்லி, பங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் போன்று சென்னை விமான நிலையமும் சீக்கிரம் தனியார்வசம் (PPP - Private, Public Partnership முறையில்) ஒப்படைக்க இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை!
-
சென்னை மெட்ரோ ரயில்...
இன்னமும் திட்டப்பணிகள் முடிவுறவில்லையே தூயவன், நிறைவுற்றதும் குப்பைகளை பணியாளர்கள் அகற்றிவிடுவர்..ஆனால் சென்னைவாசிகளைப் பற்றி தெரியும் தானே? பெட்டிகளை எப்படி தூய்மையாக வைத்திருக்கப் போகிறார்களென அடுத்த வருடம் தெரிந்துவிடும். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்..தாய் மண் மீது பற்றுறுதிகொள்ளும் வரை உணர்வுகள் வளரவில்லை. All are in 'take it policy'!
-
சென்னை மெட்ரோ ரயில்...
சென்னையில் கோயம்பேடு பணிமனை முதல் கோயம்பேடு ரயில் நிலையம் வரையிலான 1.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை வெற்றிகரமாக நடந்தது. முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறினர். சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே, அண்ணா சாலை, சைதை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து வேப்பேரி, அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையுமாக இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் ரூ.14,600 கோடி செலவில் மும்முரமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த நவம்பரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து அங்குள்ள 800 மீட்டர் நீள ‘டெஸ்ட் டிராக்’கில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது. ரயிலின் வேகம், பிரேக் சிஸ்டம், ஏ.சி.யூனிட், தானியங்கி கதவுகளின் செயல்பாடு உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன. 1.5 கி.மீ.க்கு நடந்த சோதனை இந்நிலையில், கோயம்பேடு பணிமனை - கோயம்பேடு ரயில் நிலையம் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடந்தது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து 1.5 கி.மீ. தூரத்தில் அடுத்த நிலையமான கோயம்பேடு ரயில் நிலையம் உள்ளது. இதில் 1 கி.மீ. தூரத்துக்கு ‘ரேம்ப்’ எனும் சாய்தள ரயில் பாதை போடப்பட்டுள்ளது. பணிமனையில் இருந்து கோயம்பேடு ரயில் நிலையம் வரை வியாழக்கிழமை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மெட்ரோ ரயில் போக்குவரத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். எல்லாமே ஆட்டோமேட்டிக் இன்னும் 2 வாரத்துக்குள் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 8 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஏப்ரலில் இருந்து ஆலந்தூர் வரை சோதனை ஓட்டம் நடக்கும். சிக்னல், மெட்ரோ ரயில் இயக்கம் என அனைத்தும் ஆட்டோமேட்டிக் என்பதால் 4 மாதங்கள் வரை சோதனை ஓட்டம் நடைபெறும். முதல்கட்டமாக, கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம். சிட்கோ வரை 8 கி.மீ.க்கு தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டது. அசோக் நகர் வரை 6.5 கி.மீ. தூரத்துக்கு மின் பணிகளும் முடிந்துவிட்டது. உடனுக்குடன் சிக்னல் வேலைகளும் நடக்கின்றன. 'கத்திப்பாரா' வரையிலான பணிகள் பிப்ரவரியிலும், ஆலந்தூர் வரையிலான பணிகள் ஏப்ரலிலும் முடியும். ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி செப்டம்பரில் முடியும். முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து அக்டோபர் இறுதியில் தொடங்கும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர். source:http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5636572.ece
-
சென்னை மெட்ரோ ரயில்...
வருது வருது ...! ஆ...விலகு...விலகு!! வேங்கை வெளியே வருது...!!! அதான் நம்ம சென்னை 'மெட்ரோ ரயில்' சோதனை ஓட்டத்திற்காக கோயம்பேடு பணிமனையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் வரை சுமார் 1.5கி.மீ தூரம் பரீச்சார்த்த ஓட்டத்திற்காய் ஓட்டம்விட்டு மக்களுக்கு நோட்டம் பார்க்க விடப்பட்டது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அருமையான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடல். மறைந்த நடிகர்களான ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன் மற்றும் விஜயகுமார், ஒய் விஜயாவின் அன்றைய தோற்றம் நன்றாகவே இருக்கிறது. பகிர்விற்கு நன்றி, டங்கு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய வாழ்த்துக்களுக்கு நன்றி, யாழ்வாலி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனமார வாழ்த்திய தமிழ்சிறி, புங்கையூரன், கறுப்பி, தமிழரசு, சுமேரியர், துளசி, சோழி, நிலாமதி, விசு, டங்குவார், நிழலி, தமிழினி, நுணா, சுவி, துல்பன் மற்றும் யாழ் உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன், - ராசவன்னியன்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- படத்தைப் பார்த்து கதை அறிக...!- சிந்தனைக்கு சில படங்கள்...
இந்த '15 நாள்' நாராயண சாமி, எப்பொழுதும் சென்னை உள்நாட்டு முனையத்தினுடாக விமானம் ஏறும்போதும், இறங்கும்போதும் நிருபர்களை அழைத்து, இன்னும் பதினைந்தே நாளில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என சலிக்காமல் கடந்த மூன்று வருடமாக தொடர்ந்து வாக்கு அருளி சாதனை படைத்த சிங்கம். ஆனால் இன்னும் மின்சாரம் தான் வந்த பாடில்லை! அரசின் செலவில் வார வாரம் டெல்லிக்கும், சென்னைக்கும் பறக்கும் இவருடைய விமான பயணச் செலவுகளை கணக்கிட்டால், அதுவே மில்லியன் கணக்கில் பணம் தேறும்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.