Everything posted by kandiah Thillaivinayagalingam
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” பாகம் – 7 / “அதிகாரம் மிகவும் அமைதியாக பேசக் கற்றுக்கொண்டது” உடப்பு பள்ளியில் அன்று மணி ஏற்கனவே அடிக்கப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அது பிந்திய மதியம். பணியாளர்கள் அறை வழக்கத்தை விட அமைதியாக இருந்தது. ஆதன் தனியாக வகுப்பறையில் அமர்ந்து இருந்து, குறிப்பேடுகளைத் [notebooks] திருத்திக் கொண்டிருந்தான். அவனது கையில் சிவப்பு மை பேனா [எழுதுகோல்] அசைந்தது, ஆனால் அவனது மனம் அசையாமல் இருந்தது. அன்று படிப்பித்தில் முடிக்கும் தருவாயில், “தயவுசெய்து பள்ளிக்குப் பிறகு கொஞ்சம் காத்து இருங்கள். கூடுதல் கல்வி அதிகாரி [Additional Education Officer] இங்கு வந்து உள்ளார்.” என்று ஒரு செய்தி அவனுக்கு வந்திருந்தது. அது தான் ஆதன் அந்தநேரத்தை பயன் உள்ள வழியில் செலவழித்துக் கொண்டு இருந்தான். அந்த செய்தியை கேட்டு அவன் பெருமூச்சு விடவில்லை. அவன் அதை எதிர்க்கவில்லை. அவன், கூடுதல் கல்வி அதிகாரியை துணிந்து எதிர்கொள்ள நின்றான். அவன் அலுவலகம் சென்ற போது அங்கு இம்முறை, மேசையில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் கோப்புகள் [files] மட்டுமே இருந்தன. அங்கு கூடுதல் கல்வி அதிகாரி அமைதியாக அமர்ந்து இருந்தார். தலைமை ஆசிரியர் அவருக்கு அருகில் நின்றார். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினரோ அல்லது ஆலய குருவோ, எவரும் அங்கு இல்லை. இது ஒரு ஒழுக்கக் கூட்டம் அல்ல. இது நிர்வாகக் கூட்டம். அதிகாரி மெதுவாகப் பேசினார்: “திரு. ஆதன், உங்கள் கற்பித்தல் பதிவு [teaching record] சிறப்பாக உள்ளது. மாணவர்கள் உங்களை மதிக்கிறார்கள். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் படிப்பிக்கும் பொழுது கொஞ்சம் கூடுதலான உணர்வுபூர்வமாக வரலாறு கற்பிக்கப்படுகிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கிறோம்.” என்றார். ஆதன் அமைதியாக அதிகாரி சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். அதிகாரி ஒரு கோப்பைத் தன முன் திறந்தார் — ஆனால் அதைப் படித்துக் காட்டவில்லை. “உங்களைப் போன்றவர்கள்,” அவர் தொடர்ந்தார், “தண்டனை தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார். உடனே ஆதன் அமைதியாகக் கேட்டான்: “எதை நோக்கி வழிகாட்டுதல், ஐயா?” அதிகாரி சிரித்தார். “நடுநிலையை நோக்கி.” ஒரு இடைநிறுத்தத்திருக்குப் பின் அவர் மீண்டும் தொடர்ந்தார் “வரலாறு, இந்த மாவட்டத்தில் உணர்ச்சிபூர்வமானது. அது போலவே மொழியும் காணப்படுகிறது. இங்கு நடந்தவை நடந்தவையே . ஆனால் கருத்தில் கொள்ளுங்கள், உணர்ச்சி சீரமைப்பை அல்லது ஒருமிப்பு ஒன்றை, அதாவது ஒன்றுசேர்தலை உருவாக்குகிறது. அது தான் நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது.” என்றார் ஆதன் பதிலளித்தான்: “உணர்ச்சி புரிதலையும் உருவாக்குகிறது.[Emotion also creates understanding.] ” அதிகாரி கோப்பை மூடினார். "அடுத்த வரும் காலகட்டத்தில், உங்கள் பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கண்டிப்பாக இருக்கவேண்டும். அதற்கு மேலதிகமான கூடுதல் விளக்கங்கள் தேவை இல்லை. அது மட்டும் அல்ல, தனிப்பட்ட, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சான்றுகள் மற்றும் இலக்கியங்களின் ஊடாக விளக்கங்கள் தேவை இல்லை. அரசு ஏற்றுக் கொண்ட மகாவம்சத்தின் ஊடாக மட்டும் வரலாறு இருக்கட்டும், அதில் தவறு, பிழைகள் சுட்டிக்காட்டுவது உங்கள் வேலை இல்லை." அதன் பின் இடைநிறுத்தத்தின் பின், அவர் தொடர்ந்தார்: "இது கண்காணிப்பு அல்ல," என்று அவர் மேலும் கூறி, "இது கட்டுப்படுத்துதல்." மட்டுமே என்றார். ஆதன் மேலே பார்த்தான். தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் என்பவை புத்த சமயத்தை பரப்பவென அன்று பாளியில் எழுதப்பட்ட இனவாதம் கக்கும் பல பொய்களை உள்ளடக்கிய, புத்தரின் போதனைக்கு எதிராக, சோடிக்கப்படட ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்பது அவனுக்குத் தெரியும். புத்தர் மூன்று முறை இலங்கைக்கு பறந்து வந்தார் என்ற கட்டுக்கதையுடன் ஆரம்பிக்கும் தொகுப்பே இவை. இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே இறந்த புத்தரைப் பற்றி, இந்திய நூல்களுக்கு முற்றிலும் மாறாக இந்த ஆரம்பமே இருப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இவ்வாறான பல வரலாற்று பொய்களைப் பற்றி அவன் மனம் தனக்குள் முணுமுணுத்தது. அதை இன்று, குறிப்பாக சிங்கள அதிகாரிகளையும் புத்த பிக்குகளையும் கொண்ட தொல்பொருள் திணைக்களம் செய்யும் கூத்துக்கள் அவன் அறிவான். பாவம் புத்தர் அங்கெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு, சிலையாக முளைக்கிறார். "ஐயா," அவன் கூறினான், "உயிருள்ள ஒன்று வளரும்போது மட்டுமே கட்டுப்படுத்துதல் தேவை.[containment is only required when something alive is growing.], இங்கே நான் வரலாற்றை மட்டுமே படிப்பிக்கிறேன், அதை உண்மையான வாதங்களுடன் எடுத்துக் காட்டுகிறேன். அப்படி என்றால் உண்மையை சொல்லாமல் கட்டுப்படுத்து கிறீர்களா ?" என்று கேட்டான். அதிகாரி பதிலளிக்கவில்லை. கூட்டம் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியாக முடிந்தது. ஆனால், அது தான் அவனை கோபத்தை விட அதிகமாகப் பயமுறுத்தியது. பள்ளிக்கு வெளியே, வேப்பமரம் மட்டும் அசையாமல் நின்றது. ஆதன் தனது மரத்துடன் சாய்த்து வைத்த சைக்கிளை வெளியே எடுத்தான். ஒரு இளைய ஆசிரியர் அமைதியாக ஆதனை அணுகினான். "சார் ... அவர்கள் உங்களைப் பார்த்து கத்தவில்லையா ?." ஆதன் தலையசைத்தார். "அப்படி என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள்," என்று அவன் கூறினான். அன்று மாலை - கடற்கரை அமைதியாக இருந்தது. அலைகள் ஒன்றும் கொந்தளிக்கவில்லை. மழை நின்று விட்டது. சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறையும் போது, வானம் பெரும்பாலும் சூடான ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலிருந்து குளிர் நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு மாறியது. கடல் இந்த வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது, அவை ஆழமான நீலம் அல்லது ஊதா நிற வண்ணச்சாயமாக தோன்றியது. அந்த ஒளிக்குள் யாரோ தோணியில் நின்றபடி வலை வீசிக் கொண்டிருந்தார். அது ஒரு நிழல் மாதிரி இருந்தது. அவர் எதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினார். பாடலின் வார்த்தைகள் காற்றில் கலந்து, அவன் காதிலும் மோதியது. அருகில் நின்ற இன்னும் ஒரு மீனவன், ஆதனிடம் சொன்னான், "சார் - தோணியில்லாத கடல், வலையில்லாத கையைப் போல," என்று. ஆதன் தலையாட்டினான். தொலைவில் அந்த நிழல் தோணியும் நகர்ந்தது. வலையில் சில கருப்பு மீன்கள் மின்னின. ஆதன் மனம் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. காற்று வாங்கவும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அங்கு வந்தான். அவன் சமந்தியைக் கூட அழைக்கவில்லை. அவன் தனியாக நடந்தான். அலைகள் இன்னும் அமைதியாகவே இருந்தன. அப்பொழுது முதல் முறையாக, ஒரு கேள்வி அவன் மனதுக்குள் நுழைந்தது: மற்றவர்களை உடைக்காமல்... அல்லது தன்னைத்தானே உடைக்காமல் எவ்வளவு உண்மையை ஒருவர் சுமக்க முடியும் [How much truth can one carry without breaking others… or oneself?]? அவன் வீடு திரும்பியதும் தனது நாட்குறிப்பில் [டைரி], ஆதன் நிதானமாக, மெதுவாக எழுதினான்: “அவர்கள் இனி என்னைக் குற்றம் சாட்ட மாட்டார்கள். அவர்கள் இனி என்னை எச்சரிக்க மாட்டார்கள். வாயைத் தொடாமல் அல்லது கிளறிவிடாமல் ஒரு குரலை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை இப்ப கற்றுக்கொண்டார்கள். இது நேரடியான தண்டனை அல்ல. இது அதற்கான ஒரு தயாரிப்பு. நாளை, போராட்டம் பகிரங்கமாக இருக்காது. ஆனால் உள்ளே இருக்கும். [Tomorrow, the struggle will not be public. It will be inside]” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 08 தொடரும் துளி/DROP: 2077 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 7 https://www.facebook.com/groups/978753388866632/posts/34171930912455452/? கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8 பாகம் – 8 / “உளவியல் மற்றும் நெறிமுறைகளில் மனதுக்குள் ஒரு முறிவு” அன்று எந்த கடிதங்களும் வரவில்லை. எச்சரிக்கைகள் இல்லை. புதிய உத்தரவுகள் இல்லை. ஆனால் அந்த அமைதி தண்டனையை விட கனமானது. ஏனன்றால் புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல ஆதனுக்கு இருந்தது. உடப்பு பள்ளியில், ஆதன், தனது வகுப்பறையில் கரும்பலகைக்கு அருகில் படிப்பித்தலை தொடங்குவதற்கு நின்றான். அவன் கையில் சுண்ணக்கோல் [chalk] இருந்தது, ஆனால் அவன் மனம், இம்முறை கொஞ்சம் தயங்கியது. அவனுக்கு நன்றாகத் தெரியும் — இப்போது ஒவ்வொரு வார்த்தையும் இனி எடை கொண்டது. ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரிகளுக்குச் சான்றாக மாறக்கூடும். எனவே அவன் யோசித்து மெதுவாக எழுதினான்: “மொழி என்பது நாம் கற்றுக்கொள்வதுதான்.” அத்துடன் ஆதன் நிறுத்தினான். முன்பு என்றால், அவன் இன்னும் அதிகமாக, விளக்கமாக எழுதியிருப்பான். அவன் மொழியின் நினைவாற்றல் பற்றி, வரலாறு பற்றி, அடையாளம் பற்றி பேசியிருப்பான். ஆனால், இன்று, அவன் எழுதிய வரிசையை பாதியிலேயே அழித்துவிட்டான். உடனே ஒரு மாணவன் கையை உயர்த்தினான். “சார் ... நேற்று தமிழ் ஞாபக சக்தியைக் கொண்டு வரும் என்று சொன்னீர்கள். இன்று ... நிறுத்தி விட்டீர்கள்.” என்று கேட்டான் வ குப்பறை அமைதியாக இருந்தது. ஆதன் இளம் மாணவ முகங்களைப் பார்த்தான். அவர்கள் அதிகாரிகள் அல்ல. அவர்கள் கோப்புகள் அல்ல. அவர்கள் உண்மைக்காகக் காத்திருக்கும் குழந்தைகள். ஆதன் அமைதியாகச் சொன்னார்: “சில உண்மைகள் அழிக்கப் படுவதில்லை. அவை காத்திருக்கின்றன.” அப்பொழுது மணி ஒலித்தது. என்றாலும் மாணவர்கள் யாரும் அசையவில்லை. அதேவேளை, சிலாபம் மருத்துவமனையில் சமந்தி தனது கைகளை சிங்க்கில் [sink] கழுவிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் மனது அவளிடம் இல்லை, அது யோசனைகளுக்குள் மாட்டிக் கொண்டு இருந்தது. தண்ணீர் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருப்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஒரு ஜூனியர் நர்ஸ் [junior nurse] அவள் பின்னால் கிசுகிசுத்தாள்: “உன்னை கண்காணிப்பதாக, அருட்சகோதரிகள் சொல்கிறார்கள்.” சமந்தி தலையசைத்தாள். “எனக்குத் தெரியும்.” அப்பொழுது இன்னொரு குரல் பின்னால் கேட்டது : “நீ ஏன் கொஞ்ச நாள் அமைதியாக இருக்கக் கூடாது?” சமந்தி திரும்பினாள். “நான் இப்போது அமைதியாக இருந்தால், என் சொந்தக் குரலை நான் மீண்டும் ஒருபோதும் கேட்க மாட்டேன்.” அன்றிரவு, அவளால் தூங்க முடியவில்லை. பயத்தின் காரணமாக அல்ல— ஆனால் அவள் தேர்ந்து எடுத்த பாதையின் காரணமாக [because of choice]. அவள் திருப்பி கதைத்தால், அவள் குடும்பத்தினர் அருட்சகோதரிகளின் எதிர்கால நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவள் அமைதியாக இருந்தால், அவள் தான் யார் என்பதையே அல்லது தன்னையே மறைந்துவிடுவாள். அந்த எண்ண அலை அவள் மார்பில் ஓடியது. அன்று இரவு இருவரும் கடற்கரையில் சந்தித்தார்கள். அந்த இரவு நேரத்தில் கடற்கரை அலைகளின் மெல்லிய ஓசையுடன் அமைதி தவழும் ஓர் இடமாக இருந்ததுடன், பயோலுமினென்சென்ஸ் (Bioluminescence) எனப்படும் இயற்கையால் நீல நிறத்தில் ஒளிரும் உயிரினங்களால் மாயாஜாலக் காட்சியையும் அளித்தது. அவர்கள் வழக்கத்தை விட தாமதமாக சந்தித்தனர். அன்றிரவு அலைகள் கூட பெரிதாக இருக்கவில்லை. இருண்ட நீர் மட்டுமே, ஆனால் சில நீல நிறத் தோற்றமும் இருந்தன. அவர்கள் இருவரும் கடலின் மாயாஜாலக் காட்சியை பார்த்தபடி வெள்ளை மணலில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டே இருந்தனர். ஆதன், சமந்தியை பார்க்காமல் கடலை பார்த்தபடி, முதலில் பேசத் தொடங்கினான்: "இன்று பாதியிலேயே நான் எழுதுவதை நிறுத்தி விட்டேன், என் கையில் சுண்ணக்கோல் [சாக்கு / chalk] இன்னும் சூடாக இருந்தது. ஆனால் யாரும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்பே நான் என் சொந்த வாக்கியத்தை அழித்துவிட்டேன். “நான் இப்பொழுது என்னையே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.[I am censoring myself]. வேறுவழி, இந்த சூழ்நிலையில் எனக்குத் தோன்றவில்லை.” என்றான். சமந்தி தலையசைத்தாள். அவள் ஆச்சரியப்படவில்லை. “தெரியும்,” என்றாள். அவள் சற்று யோசனையின் பின் அவனுக்கு பதிலளித்தாள்: “நேற்று நான் வீட்டிற்கு, வழமையான குறுக்கு வழியை தவிர்த்து, நீண்ட பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அத்துடன் நான் வழக்கமாகச் செய்யும் உரையாடல்களையும் தவிர்த்தேன். நான் கேள்விகள் கேட்க விரும்பும் இடத்தில், கேள்விகளைக் கேட்காமல் மௌனமாக சிரித்தேன்.” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் நிறுத்தினாள். பின், "நான் என் வாழ்க்கையின் அர்த்தத்தைத் திருத்துகிறேன் [I am editing my life]” என தன் பதிலை முடித்தாள். ஒரு கணம், அவர்கள் இருவரும் அமைதியாக சிரித்தனர். சிரிப்பு மகிழ்ச்சியிலிருந்து எழவில்லை. இரு உடல்களிலும் ஒரே பிளவு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த தருணத்திலிருந்து வந்தது. ஆதன் மெதுவாக மூச்சை விட்டான்: “என் வகுப்பில் அவர்கள் தாராளமாக அமரலாம், ஒவ்வொரு சொல்லையும் எழுதி வைத்துக் கொள்ளலாம். அது எனக்குப் பிரச்சனை இல்லை, என்னால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும், ஏன் என்றால் நான் என்னை கட்டுப்படுத்த பழகிவிட்டேன், ஆனால் இதன் மூலம் நான் சுருங்குவதை என்னால் தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.” என்றான். ஆதனை கவனமாக காது கொடுத்து கேட்டபின், சமந்தி தாழ்ந்த குரலில் சொன்னாள்: “என்னால் வதந்திகளைத் தாங்க முடியும். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் சந்தேகத்தையும், அவர்களின் மௌனத்தையும், அவர்களின் பயத்தையும் நான் ஏற்றுக்கொண்டால் — அந்த அவமானம் என்னை விட்டு என்றுமே போகாது." என்று கூறிவிட்டு ஆதனைப் பார்த்து அவள் தலையாட்டினாள். “எனக்கு உரியதல்லாத அவமானத்தை நான் என்றும் சுமக்க மாட்டேன்.” என்று திடமாகக் கூறினாள். அதன் பின் அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் வீடு திரும்ப எழும்பினர். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் விலகியே நின்றனர். காதல் பலவீனமடைந்ததால் அல்ல - ஆனால் நெருக்கம் வெளிப்படத் தொடங்கியதால். அன்பைக் கூட பதிவு செய்யலாம், தவறாகப் படிக்கலாம், பயன்படுத்தலாம் என்பதால். அப்பொழுது இரவுக் காற்று அவர்களின் மார்பில் அழுத்தியது. கூர்மையாக இல்லை. - படிப்படியாக. - எலும்பில் ஏதோ ஒன்று படிவது போல. இருவரும் கை அசைத்து விலகிச் சென்றனர். அந்த இரவு யாரும் எழுதவில்லை. யாரும் பிரார்த்திக்கவில்லை. யாரும் அழவில்லை. ஆனால் மாற்றமில்லாத ஒன்று நடந்தது. “எப்படி தப்பிக்கலாம்?” என்ற கேள்வி மறைந்தது. “எதைச் சொல்லவேண்டும்?” என்ற கேள்வி பிறந்தது. அந்தக் கேள்வி பயத்தைவிட சத்தமாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 09 தொடரும் துளி/DROP: 2081 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/34204542762527600/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 127 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" “யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள் கண்ணகி. தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து [சுழன்று] தன் முலையை வட்டித்து எறிந்தாள் [வட்டித்துவிட்டா ளெறிந்தாள்: இதன் பொருள் "பிரதிக்கினை பண்ணி எறிந்தாள்" என்பதாகும். அதாவது, அவள் ஒரு உறுதிமொழியைச் சொல்லிவிட்டு, அதை நிறைவேற்றும் விதமாக ஏதாவது ஒன்றை எறிந்தாள் என்று அர்த்தம்.]. எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது. “பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது. காலப்போக்கில், அவள் பத்தினி தெய்வமாக மாறினாள், மேலும் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகவும், நாட்டிற்கு செழிப்பை ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவளை நம்பினர். கண்ணகி வானுலகம் செல்வதற்கு நின்றிருந்த மலை, சேர நாட்டைச் சேர்ந்தது. அக்காலத்தில் சேர நாட்டைச் சேரன் - செங்குட்டுவன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற சேரப் பேரரசனுக்கு மகன் ஆவான்; இளங்கோ அடிகள் என்ற புலவர் பெருமானுக்கு அண்ணன் ஆவன். ஒருமுறை, துயரம் மிகுந்த கண்ணகி வரலாற்றைக் கேட்ட செங்குட்டுவன் பெருமூச்சு விட்டான்; “பொற்கொல்லன் பேச்சைக கேட்டதால் பாண்டியன் செங்கோல் வளைந்தது; ஆயின் அவன் தன் தவற்றை உணர்ந்தவுடனே இறந்ததால் வளைந்த செங்கோல் நிமிர்ந்தது" என்றான். பின்னர் அவன் தன் பட்டதரசியைப் பார்த்து, “நன்னுதால் கணவனுடன் இறந்த கோப்பெருந்தேவி போற்றத்தக்கவளா? தன் கணவன் குற்றவாளி அல்லன் என்பதை உணர்த்திப் பழிக்குப்பழி வாங்கிய கண்ணகி போறறத் தக்கவளா?” என்று கேட்டான். பட்டத்தரசி, ஐயனே, இருவரும் போறறத்தக்கவரே. ஒருத்தி அறக்கற்பு உடையவள்; மற்றவள மறக்கற்பு உடையவள். நாம், நமது நாடு அடைந்து துறக்கம் புகுந்து பத்தினிக் கடவுளைப் பரவுதல் வேண்டும். அவள் தெய்வமாகத் தொழத் தக்க தகுதியுடையவள்,” என்று பதில் அளித்தாள். எனவே, உடனே சேரர் பெருமான் பத்தினிக்குரிய கல்லைப் இமயத்திலிருந்து கொணர்ந்து கங்கையில் நீராட்ட, சேர மன்னன் செங்குட்டுவன், வட இந்திய மன்னர்களுக்கு எதிராகப் படையெடுத்து வடக்கு நோக்கிச் சென்று, இமயமலையிலிருந்து கற்களை தோற்கடிக்கப்பட்ட மன்னர்களின் தலையில் சுமப்பித்துக் கொண்டு வந்தான். அந்தக் கற்களைக் கொண்டு கண்ணகிக்கு ஒரு பத்தினி கோயில் கட்டினான். இலங்கை மன்னன் கஜபாகுவும் இந்த விழாவில் கலந்து கொண்டான். சேரன் செங்குட்டுவனின் பிறந்த நாளில் தான் நடத்தவிருந்த விழாவிற்கு பத்தினி தேவி வர வேண்டும் என்று அவன் வரம் கேட்டான். உடனே அதற்க்கு செவிசாய்த்து ஒரு குரல் கேட்டது. அந்த பாடல் அல்லது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்" ‘தந்தேன் வரம்’ என்று எழுந்த குரலைக் கேட்டு மகிழ்ந்த கஜபாகு, கண்ணகியின் சக்தியை, அவள் பெருமையை நினைவுகூர்ந்து, அவளை கௌரவப் படுத்த தன்னுடைய நாட்டுக்குச்சென்று பத்தினிக்குக் கோட்டம் அமைத்து தானும் அங்கே விழா நடத்தினான் என்பது வரலாறு ஆகும். இதனால் அவனது இராச்சியம் ஒருபோதும் தவறாத மழையும், வளமான பயிர்களுமாக காணப்பட்டது. இந்த பத்தினி வழிபாட்டுப் பண்டிகை 1775ஆம் ஆண்டு வரை சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டதும் ஆகும். இந்த விழா தான் பின்னாளில் 'பெரகரா' ['Perahera'] விழாவாக மாறியது எனலாம். Part: 127 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" Kannaki wrenched her left breast, came right round the city three times, and threw it to burn the City of Madurai. She, in due course, became the Goddess Pattini, and believed to have control over disease and could cause prosperity to the country. The king Kajavahu of Lanka heard of her power, and performed festival on her honour, and his kingdom became blest with never failing rain and abundant crops. This festival became the ‘Perahera’ festival. The Chera king, Seng Kudduvan, went north on expedition against the north Indian kings, and brought stones from the mount Himalaya on the heads of the defeated kings. He made a temple for Kannaki, Pattini temple, with those stones. The king of Lanka, Kajavahu, too attended this festival. He requested a boon from the Goddess Pattini that she should come to the festival he intended to have on the day of the birthday of Cheran Seng Kudduvan. A voice ‘granted’ was heard. The verses related to this are given below. "கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத் தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்" The monarch of the world circumambulated the shrine thrice and stood proffering his respects. In front of him the Arya kings'’ released from prison, kings removed from the central jail, the Kongu ruler of the Kudagxi, the king of Malva and ’Kayavagu (Gajabhau), the king of sea girt Ceylon, prayed reverentially to the deity thus: Please grace our countries by your presence just as have done this auspicious day, a fete day of Imayavaramban’s sacrifice. ’ Then a voice from the welkin issued forth: ‘I have granted the boon.’ The Perahera festival is the continuation of this worship of the Goddess Pattini till about 1775 A. D. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 128 தொடரும் / Will follow துளி/DROP: 2082 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 127 https://www.facebook.com/groups/978753388866632/posts/34206389789009564/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 126 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 126 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" சிலப்பதிகாரக் காவியத்திலிருந்து கண்ணகியின் கேள்வி / பதில் கீழே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன: "தேரா மன்னா! செப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும், வாயில் கடை மணி நடு நா நடுங்க, ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர், ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’ என- " [சிலம்பு: மதுரைக் காண்டம் – வழக்குரை காதை: 50-63] “உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும். புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடைய காற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள். இதே மனுநீதிச் சோழனின் கதையைத்தான், அப்படியே ஒரு சொல்லும் விலகாமல் மகாவம்சம், 21-13 முதல் 18 வரை நாம் காண்கிறோம். சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவகற்காக இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் , அசேலனத் தோற்கடித்து நாட்டைப் பிடித்து நாற்பத்து நான்கு வருடம் ஆண்டான். (அவன்) எதிரிகள், நண்பர்கள் என்ற பேதா பேதம் இன்றி, நீதியின் முன் எல்லோரையும் சமமாக நடத்தி வந்தான். அவன் தனது படுக்கை அறையில், தலைக்கு மேலாக ஒரு மணி நீண்ட கயிற்றுடன் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. அவனிடம் நீதி கோரி வருபவர்கள் அந்த மணியை அடிக்கலாம். அரசனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் மட்டுமே இருந்தனர். ஒரு சமயம் ராஜகுமாரன் ரதத்தில் தீசவாபிக்குச் சென்று கொண்டிருந் தான. அப்போது தாய்ப்பசுவுடன் வீதியில் படுத்திருந்த கன்றின் கழுத்தில் தேர்ச்சக்கரத்தை ஏற்றி, அறியாமல் அதனைக் கொன்றுவிட்டான். துக்கம் தாளாது பசு அரண்மனைக்கு வந்து மணியை அடித்தது. தன் மகனுடைய கழுத்தின் மீது தேரை ஓட்டி, அரசன், தலையைத் துண்டிக்கச் செய்தான். நீதிக்காக தனது ஒரே மகனைக் ஒரு செல்வாக்கு நிரம்பிய மன்னன் கொன்றதைக் இது குறிக்கிறது, ஆனால் அதை மன்னன் எல்லாளனுக்கு இங்கு காரணம் காட்டினார் அதன் ஆசிரியர். ஆகவே மகாவம்ச மன்னன் எல்லாளனை, மனுநீதி கண்ட சோழனின் பிரதியாக இங்கு காண்கிறோம்! “கள்வனைக் கொன்றது கடுங்கோல் அன்று; அரசனது கடமை” என்று அறிவித்தான் அரசன். “நற்றிறம் படராக்கொற்கை வேந்தே! என் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் கொண்டது” என்று எடுத்துக் கூறினாள்; சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக வழக்கை அவள் எடுத்துப் பேசினாள். “எம் சிலம்பு முத்துப்பரல்கள் கொண்டது” என்று கூறியவனாய் அரசன் அதனைக் கொண்டு வந்து முன் வைக்கச் சொன்னான். கண்ணகி முன் சிலம்பினை வைக்க அதனை அவள் உடைக்க அதிலிருந்து பரல் ஒன்று தெறிக்க அது மன்னன் வாய் இதழில் பட்டது; மணி கண்டான்; அவ்வளவுதான், வாய்ச் சொற்கள் அடங்கி விட்டன. மனம் தளர்ந்தான்; அவன் செங்கோன்மை சீர்அழிந்தது; அவன் வெண் கொற்றக் குடை சாய்ந்தது. “பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்; என்னால் இம்மரபு மாசுபட்டது; கெடுக என் ஆயுள்” என்று கூறித் தன் உயிரை விட்டான். அவன் இன்றித் தான் வாழ முடியாது என்பதை உணர்ந்து அரசி நடுங்கியவளாய் அவன் இணையடி தொழுது வீழ்ந்தனள், அவளும் அவனோடு உயிர்விட்டாள். Part: 126 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The relevant verses are given below from the epic Silappathikaram. "தேரா மன்னா! செப்புவது உடையேன்; எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும், வாயில் கடை மணி நடு நா நடுங்க, ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர், ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’ என- " [சிலம்பு: மதுரைக் காண்டம் – வழக்குரை காதை: 50-63] ‘Inconsiderate king! I have something to say. I am a native of much celebrated Puhar, one of whose kings of untarnished glory once allayed the suffering of the dove to the wonderment of gods, and another sacrificed at his chariot-wheel his dear and only son, grieved at the sight of a cow whose eyes were filled with pearl-like tears and who rang the bell at the palace-gate (for justice). From that city, Kovalan, the son of the merchant Masattuvan, belonging to a reputed and exalted family of faultless name, driven by fate, entered your city, O king with tinkling anklets, to earn his livelihood, when he was murdered by you while out to sell my anklet. I am his wife. My name is Kannaki.’ The Mahavamsa, 21- 13 to 18, [A Damila of noble descent, named Elara, who came hither 1 3 from the Cola-country to seize on the kingdom, ruled when he had overpowered king Asela, forty-four years, with even 14 justice toward friend and foe, on occasions of disputes at law. At the head of his bed he had a bell hung up with a long 1 5 rope so that those who desired a judgement at law might ring it. The king had only one son and one daughter. 16 When once the son of the ruler was going in a car to the Tissa-tank, he killed unintentionally a young calf lying on 1 7 the road with the mother cow, by driving the wheel over its neck. The cow came and dragged at the bell in bitterness 18 of heart ; and the king caused his son's head to be severed (from his body) with that same wheel.] makes reference to the killing of only son, but ascribing it to the king Elara. The Mahavamsa king Elara is the copy of the Manu Neethi Kannda Cholan! Having introduced the great city that she came from, Kannaki further states that she married the son of a great trader, and she, having chased by fate, came to Madurai. The king innocently argued that punishing a thief was not improper. Kannaki had her other anklet in her raised hand stating that her anklet had gems inside, and demanded what inside the queen consort’s anklet. The king responded that queen’s anklets had pearls inside. Kannaki threw her anklet in rage on the floor, and gems flew from the broken anklet, straight to the face of the king. The king realizing that he unjustly killed Kovalan died on the spot, and the queen too died then and there. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 127 தொடரும் / Will follow துளி/DROP: 2080 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 126 https://www.facebook.com/groups/978753388866632/posts/34187485664233310/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 125 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" அவளுடைய கணவர் கோவலன், நம்பிக்கையற்ற நம்பிக்கையுடன் திரும்பி வந்தபோது, அவள் ஒரு புன்னகையுடன், 'என் காற்சிலம்பை எடுத்துக்கொள்' என்று அவனுக்கு ஆறுதல் வழங்கினாள். இந்தக் காவியத்தின் ஆசிரியர் கண்ணகியை, கணவனின் நன்மை தீமையிலும் அல்லது இன்பத்திலும் துன்பத்திலும் அல்லது எதுவாக இருந்தாலும், அவருடன் நிற்கத் தயாராக இருக்கும் ஒரு அழகான இளம் பெண்ணாக, சித்தரிக்க விரும்பியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருவரும் பாண்டிய இராச்சியத்தின் பண்டைய தலைநகரான மதுரைக்குச் சென்று, அங்கே, எதாவது ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக, கொலுசை அல்லாது சலங்கையை விற்று பணம் பெறச் சென்றனர். கவுந்தி அடிகள் இருவரையும் அழைத்துச் சென்று, இடைக் குலமடந்தையாகிய மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில், 'ஈங்கு, என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்: கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி, தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,' "இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள்." என்று கூறி, அவளின் பராமரிப்பில் ஒப்படைத்தார். அதன் பின், கவுந்தி முனிவர், அங்கிருந்து தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். கோவலன் அதன் பின், கண்ணகியை மாதரியுடன் விட்டுவிட்டு, தனியாக மதுரை நகருக்குச் சென்றார். கோவலன், இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான். அங்கே, அரச பொற்கொல்லன் ஒருவனை கோவலன் சந்தித்தான். அரசியின் காலணியை ஏற்கனவே களவாடிய அந்த அரச பொற்கொல்லன், தான் தப்புவதற்காக, ராணியின் சிலம்பு திருடிய திருடன், இவனே என்று கோவலனை மன்னனுக்கு கூறினான். எந்த விசாரணையும் செய்யாமல், தனது பொற்கொல்லனை நம்பி, அவசர அவசரமாக மன்னன் கோவலனின் தலையை வெட்ட உத்தரவிட்டான். கோவலன் உடனடியாக கொல்லப்பட்டான். வெற்று நிலத்தில் அரிதாகவே நடமாடும் அளவுக்கு செல்வம் நிறைந்த, நல்லொழுக்கமுள்ள இளம் பெண் கண்ணகி, “யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது” என கோபமடைந்து, மன்னனை நேரில் சந்தித்தாள். மன்னன் “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள். “ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”. என்றாள். ஒருநாள் மாலைவேளை, இளவரசன் தற்செயலாக, ஒரு கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர, மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது. அதைக்கண்டு மன்னன் துக்கமடைந்தான். மன்னனின் அமைச்சர்கள், இளவரசன் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், மன்னனின் பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்த தெருவில் தான் சவாரி செய்ததாகவும், அதிக எண்ணிக்கையிலான வீரர்களுடன் சென்றதாகவும் விளக்கினர். அது மட்டும் அல்ல, சக்கரத்தின் கீழ் கன்று இறக்க வாய்ப்பில்லாத வகையில், அதிக சத்தம் இருக்கும் வகையில், தேர் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் மன்னனுக்கு கூறி, இந்தக் கொலை இளவரசன் வேண்டும் என்று செய்தது அல்ல என்று விளங்கப்படுத்தினர். இருப்பினும், மனுநீதி கண்ட சோழன், தனது அன்புக்குரிய ஒரே மகனை சக்கரத்தின் கீழ் படுக்க வைத்து நெரித்துக் கொன்றான். அதனால் தானும், அந்த தாய் பசுவின் வலியை அனுபவிக்க, உணர முடியும் என்று நம்பினான். என்றாலும் அங்கே கண்ணகி இந்த முழு விவரத்தையும் கொடுக்கவில்லை. அதற்கு அவளுக்கு நேரம் இல்லை. ஆனால் காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட , முற்காலச் சோழர்களின் தலைநகரில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறாள். Part: 125 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" When her husband, Kovalan, came dejected with forlorn hope, she offered him with a smile: ‘take my anklet’ (Silambu in Tamil and Hallamba in Sinhala). The author of the epic must have intended to portray Kannaki as a charming young lady who is ready to stand with her husband in the woes and in the weal irrespective of his merit or demerit. Both of them went to Madurai, the ancient capital of the Pandiyan Kingdom, to sell the anklet to get some money, perhaps, to start a business. Kavunti, a sage, accompanied both, and placed them in the care of a shepherd woman, Matari, and the sage Kavunti continued on her way. Kovalan, leaving Kannaki with Matari, went alone to the town of Madurai. The Royal goldsmith happened to meet Kovalan, and framed Kovalan as the thief who stole the queen consort’s anklet which was earlier stolen by the Royal goldsmith. The king in hasty decision gave order to behead him, and Kovalan was killed. Kannaki, the virtuous young lady who rarely walked on bare earth got angry, and confronted the king in person. The king inquired who she was, and the reason for her to be there. She introduced her that she came from the city of Puhar where ruled kings before; a king relieved the distress of a bird and another king sacrificed his dear and only son, grieved at the sight of a cow whose eyes were filled with pearl-like tears and who rang the bell for justice. The king’s ministers explained that the prince was riding the chariot adorned with bells along the street which was exclusively for the use of the king, and went with greater number of soldiers. The ministers were trying to convince the king that the chariot was adorned with bells so that there would have quite a lot of noise so that there was no possibility for calf to get killed under the wheel. The prince went with a large number of soldiers so that the killing wouldn’t have been deliberate act of the prince. They also indicated that the street was for the kingly use only. Still the king, Manu Neethi Kannda Cholan, killed his dear and only son under the wheel so that he could suffer the same pain as the mother cow. Kannaki didn’t give this full detail, but she makes terse references to these two incidents with two ancient kings of Puhar. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 126 தொடரும் / Will follow துளி/DROP: 2078 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125 https://www.facebook.com/groups/978753388866632/posts/34172313542417189/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 124 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 124 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற இலங்கையின் வரலாற்றுக் நாளாகமம்களில் உள்ள சில புராணக்கதைகள் மற்றும் இலங்கைக்கு புத்த மதத்தின் வருகை ஆகியவை தமிழ்நாட்டுடன் அதிக அளவிலும், கேரளா மற்றும் ஆந்திராவுடன் குறைந்த அளவிலும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன என்பதைக் காண்கிறோம். புவியியல் காரணமாக கட்டாயம் ஆந்திரா கேரளாவை விட பெரிய பங்கைக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதேபோல, பழங்கால சிங்கள மக்கள், பொதுவாக, தங்கள் வடக்கு அண்டை நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான உறவைக் கொண்டிருந்திருக்க வேண்டும். வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் நாட்டுப்புறக் கதைகளின் செல்வாக்கையும், இலங்கைக்கு பௌத்தம் பரவியதையும் காட்ட, இரண்டு முன்னணி தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பற்றிய மிகச் சுருக்கமான விவரிப்பைக் கொடுக்க வேண்டியது இன்று அவசியம் ஆகிறது. சிலப்பதிகாரம் மத ரீதியாக நடுநிலையானதாகக் கருதப்பட்டாலும், மணிமேகலை காவியம் ஒரு முழுமையான பௌத்தக் கதை ஆகும். சிலப்பதிகார காவியத்தின் முன்னுரையில், கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் கஜபாகு (Gajabahu) ஆடித் திங்கலில் (கிறிஸ்தவ நாட்காட்டியில் ஜூலை - ஆகஸ்ட்) பத்தினி தேவியின் (கண்ணகி) கதையைக் கேள்விப்பட்டு, காணிக்கைகளை வழங்கி, பத்தினி தேவியை கௌரவிக்கும் வகையில் விழாக்களை நடத்தினார் என்றும் இதனால், நல்ல மழை பெய்து, இலங்கை செழிப்பாக மாறியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் பெரகரா விழா மற்றும் ஆடிவேல் விழாவின் [Perahera festival and the Aadivel festival] மிகப் பழைய வடிவமாக அல்லது அதன் பண்டைய விழாவாக இருக்க வேண்டும். மன்னன் கஜபாகு, ஒரு வெற்றி பெற்ற மன்னராகக் குறிப்பிடப்படவில்லை, ஆனால் அந்தக் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த தென்னிந்திய மன்னரான சேரன் செங்குட்டுவனுடன் நட்புறவைக் கொண்ட இலங்கையின் சுதந்திர மன்னராகக் குறிப்பிடப்படுகிறார். ஒரு காலத்தில் பரந்து விரிந்த சேர இராச்சியத்தின் எச்சம் இன்றைய கேரளம் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, முன்னுரையில் உள்ள வசனங்கள் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அர்த்தத்தின் சுருக்கம் ஏற்கனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. "அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று" அதனைக் கேட்டு, கடலை அகழாகவுடைய [கடலால் சூழ்ந்த] இலங்கையிலுள்ள கயவாகு என்னும் அரசன், அவ்விடத்தே நங்கைக்கு நாடோறும் பலி கொள்ளும் பலி பீடத்தை முற்படச் செய்து பின்பு கோட்டமும் அமைத்து, துன்பங்களைக் கெடுத்து நமக்கு வேண்டும் வரங்களை இவள் தருமென்று துணிந்து, ஆடித் திங்களிலே, தனது நகரின்கண் விழாச் செய்தலை, ஆண்டு தோறும் நிகழ்த்தா நிற்க, மழை குறை வின்றி நிலைபெறுதலானே, பல வளங்களும் நிறைந்து, பொய்யாத விளை வினையுடைய நாடாயிற்று அவனது நாடு என்கிறது மேலே உள்ள இந்தப் பாடல். சிலப்பதிகாரக் காவியத்தின் முதன்மை நாயகி கண்ணகியாக இருந்தாலும், ஒரு நேர்த்தியான நடன அழகியான மாதவி, ஒரு நடன பெண் குலத்தைச் சேர்ந்தவராக, ஒரு கணிகை மகளாக [nautch] இருந்தாலும், சமமான தகுதி கொண்ட நாயகியாகவும் கருதப்படலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவள். கரிகால சோழனின் சபையில் மாதவி நாட்டியமாடிய போது கோவலன் எனும் வணிகனுக்கு மாதவியின் அறிமுகம் கிடைத்தது. கண்ணகியின் கணவரான கோவலன், மன்னனின் முன் மாதவியின் முதல் நடன அறிமுகவிழா நாளில், மாதவியின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்ட கோவலன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் தங்கி, தனது செல்வம் அனைத்தையும் மாதவியின் தாயாரிடம் இழந்தார். பின்னர் மாதவியுடன் ஏற்பட்ட ஒரு அற்பமான பிரச்சினையில், கோவலன் கண்ணகியின் வீட்டிற்குத் திரும்பினான். நடனமும் நடன சமூகமும் அந்த காலத்தில் சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன என்பது வரலாறு. கண்ணகி ஒரு பணக்கார வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதுடன், சிலப்பதிகார காவியத்தின் ஆசிரியர் அவளுடைய செழிப்பான வாழ்க்கையை 'பூமாதேவி கண்ணகியின் சிறிய அழகான கால்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.' என்று விவரிப்பதில் இருந்து இலகுவாக அறிந்து கொள்ளலாம். Part: 124 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" The chronicles of Ceylon; the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya, indicate that the some of the legends in the chronicles, and the arrival of Buddhism to Lanka have close connection with the Tamil Nadu to a greater extent and to Kerala and Andhra to a lesser extent. Andhra should have played a larger role than Kerala because of the geography. Sinhalese people of yore, in general, must have had a very healthy relationship with their northern neighbours. It is necessary to give a very brief account of the two foremost Tamil Epics Silappathikaram and Mannimeghalai to show the influence of Tamil folklores in the chronicles and the spread of Buddhism to Lanka. The Epic Silappathikaram can be considered religiously neutral, but the Epic Mannimeghalai is a fully fledged Buddhist narrative. Silappathikaram: It is mentioned in the prologue, kind of introductory summary at the beginning, of this epic that the king Kajavahu (Gajabahu) of Lanka (Illanagai in Tamil) which is surrounded by sea heard of the story of the Goddess Pattini (Kannaki) and gave offerings and took festivals on her honour in the month of July, (July-August in the Christian Calendar) and it rained well and Lanka became prosperous. This must be the ancient most record of the Perahera festival and the Aadivel festival that take place usually about or during the months of July-August each year in Ceylon. The king Kajavahu is mentioned not as a conquered king, but as an independent king of Lanka with amicable relationship with the most powerful South Indian king of that time, Cheran Seng Kudduvan. The remnant of the once extensive Chera Kingdom is the present day Kerala. The verses in the prologue, as mentioned above, are given below in Tamil. The summary of the meaning is already given above. "அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று" "On hearing this Gajabahu of Ceylon encircled by sea, built a shrine for the Lady of Chastity where daily sacrifices were performed. Thinking that she would remove the distress [ of his land], He also instructed annual festivals commencing with the month Adi [July - August]; Then the rain came to stay, and increased the fertility of the land, So as to produce unfailing crops" [The Silappathikaram, Transilation by V R Ramachandra Dikshitar, M. A., 1939] The prime heroine of the Epic Silappathikaram is Kannaki, but Madhavi, who is an accomplished elegant dancing beauty, can also be considered a heroine of equal merit though born a nautch. Kovalan, the husband of Kannaki, got entranced with Madhavi on the day of her first dancing inauguration in front of the king. He stayed with Madhavi, and lost all his wealth to Madhavi’s mother. Then on a trivial issue with Madhavi, Kovalan returned home to Kannaki. The dancing and the dancing community were then an integral part of the community. Kannaki was from a wealthy merchant family, and the author of the epic describes her opulent life thus; the lady earth never knew Kannaki’s small beautiful feet. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 125 தொடரும் / Will follow துளி/DROP: 2076 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 124 https://www.facebook.com/groups/978753388866632/posts/34156313217350555/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 123 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 123 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' என்ற நூலின், பக்கம் 44 முதல் 45 வரை, பின்வருமாறு குறிக்கப் பட்டுள்ளது: "புத்தர் நடந்து சென்றதாகக் கூறப்படும் ஒரு கல் அங்கு இருந்தது. அந்தக் கல்லில் அவரின் இரு பாதங்களின் தடங்கள் இருந்ததாகவும், அது ஒரு புனித இடமாக கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த இடத்தை மன்னர் சுற்றிலும் வேலியிட்டுப் பாதுகாத்திருந்தார்" என சீன பயணியாய் இருந்த சுவான்சாங் (யுவான் சுவாங் / Xuanzang) கூறிய விவரங்களை, நவீன தொல்லியலாளர்கள் பொதுவாக ஒப்புக் கொள்வதுடன் அவர் அளவீட்டு திறனுடன் மிகச் சரியாக விவரித்திருப்பதாக பாராட்டுகிறார்கள். உதாரணமாக, அந்த பாதத் தடங்களின் அளவை அவர், நீளம் 18 அங்குலம், அகலம் 6 அங்குலம் என குறிப்பிட்டுள்ளார். இது கூட ஒரு மனிதனுக்கு ஒப்பீட்டளவில் பெரியது என்று எண்ணுகிறேன். பாகிஸ்தானின் ஸ்வாட்டில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தரின் பாதச்சுவடு, ஐந்தாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் முறையே புனித யாத்திரை மேற்கொண்டு, வடக்கு ஸ்வாட்டில் புத்தரின் பாதச்சுவடை வணங்கிய சீன துறவிகள் ஃபாக்ஸியன் மற்றும் சுவான்சாங்கின் பயண பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. [Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. A Buddha's footprint at the Archaeological Museum, Swat, in Pakistan, is thought to be the one mentioned in the travel records of the Chinese monks Faxien and Xuanzang, who made their pilgrimages in the fifth and the seventh centuries respectively, and worshipped a Buddha's footprint at the northern Swat.] தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ் நாடுகளுக்கு, பொது ஊழி (Common Era) அல்லது பொதுக் காலம் அல்லது பொது ஆண்டு தொடங்குவதற்கு முன்பே, சமண மதமும் பௌத்தமும் வந்தன. கி.மு. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமண மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது, சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதம் தமிழ் நாடுகளுக்கு வந்தது. மன்னர்களும் பணக்காரர்களும் சமண துறவிகளுக்கு பாறை மேற்பரப்புகளை படுப்பதற்கு ஏற்றவாறு தயார் செய்து வந்தனர் என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மகாவம்சம், 10-97 இல் சமணர்கள் நிகந்தர்கள் [Niganthas] என்று குறிப்பிடப்படுகிறார்கள். உதாரணமாக, 10-94 :சண்டாள கிராமத்துக்கு வட கிழக்கில் சண்டாளர்களுக்காகத் தனியே தாழ்ந்தவர்களுக்கான ஒரு கல்லறை ஏற்படுத்தினான் . 95 இதற்கு வடக்கே, இதற்கும் பாசான மலைக்கு மிடையே வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. 96 அதற்கும் வடக்கே காமனி வாபி வரை பல துறவிகளுக்கான ஒரு மடம் அமைக்கப்பட்டது. 97 அகற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர் களுக்காக ஒரு வீட்டைக் கட்டினன். 98 அப்பிரதேசத்திலேயே கிரி என்னும் பெயருடைய நிகந்தரும், பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர். 99 அங்கு அரசன் நிகந்த கும்பந்தருக்காக ஒரு பிரார்த்தனை மண்டபத்தைக் கட்டினன். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது. காமனிவாபி - இப்போது கரம்பவக்குளம் எனப்படுகிறது. நிகந்தஜோதியர்-சைனத் துறவிகள் - திகம்பரர்கள். திவாகர முனிவரால் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, சைனர்களை (அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது. நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த துறவிகளின் (சைனர்) ஒரு பிரிவின் பெயர் தான் ஜோதியா ஆகும். அனுராதபுரத்தில் உள்ள நிகசுசனாவின் கிழக்கே பாண்டுகபாயா ஒரு வீட்டை, நிகந்தஜோதியருக்கு கட்டினார். மற்றும் தீபவம்சம், 7-34. நிறைய அரசரும் பிராமணர்களும் [Khattiyas and Brahmans / குறிப்பாக இந்திய வரலாறு மற்றும் மரபுகளின் சூழலில், "கட்டியா" என்பது போர்வீரன் அல்லது ஆளும் வர்க்கத்தின் உறுப்பினரைக் குறிக்கிறது.] புத்தரின் சீடராக வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தனர். இதனால் புத்த மதத்திற்கு பெரும் மதிப்பும் பெருமையும் வந்தது. 35. ஆனால் பிற மதத்தோரும் தவறான வழிகாட்டிகளும் [பிரிவினைவாதிகளும் மதவெறியர்களும்] தங்கள் ஆதாயம் மற்றும் மரியாதை இரண்டையும் இழந்தார்கள். உதாரணமாக பண்டரங்கர், ஜடிலர், நிகண்டர், அசேலகர் [Paṇḍaraṅgas and Jaṭilas, Nigaṇṭhas, Acelakas] ஆகியோர் ஆகும். இங்கு Paṇḍaraṅgas என்பது பிராமண துறவிகளின் ஒரு பிரிவு; அவர்கள் புத்தர் காலத்திலும் அசோகரின் காலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒருவேளை அவர்கள் தங்கள் உடல்களை சாம்பலால் மூடியிருக்கலாம். அதே போல, Jaṭilas பிராமண துறவிகளின் ஒரு வகை, அவர்களின் பின்னப்பட்ட முடி காரணமாக அவ்வாறு அழைக்கப் பட்டு இருக்கலாம். Nigaṇṭhas நிகண்ட (நிिगण्ठ) அல்லது நியாண்ட அல்லது நிர்க்ரந்த என்பது ஒரு சமணத் துறவி அல்லது துறவியைக் (அதாவது, மகாவீரரைப் பின்பற்றுபவர்) குறிக்கிறது. Acelakas நிர்வாண துறவி; அதாவது. ஆடையற்ற துறவி ஆகும். 36. அவர்கள் ஏழு வருடங்கள் புத்த விகாரைகளில் தங்கினர். எனவே, அந்த காலத்தில் புத்த சமயத்தில் முக்கியமான நிகழ்வான உபோஸதம் [Uposatha ceremonies / பாரம்பரியமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும், சில சமயங்களில் கால் நிலவு நாட்களிலும் நடைபெறும் ஒரு புத்த மத சடங்கு, இது ஆன்மீக பிரதிபலிப்பு மற்றும் நெறிமுறை நடத்தையை வலியுறுத்துகிறது / a Buddhist ceremony of observance, traditionally held on new and full moon days, and sometimes on quarter moon days, that emphasizes spiritual reflection and ethical conduct] சரியாக நடக்கவில்லை. அதாவது, அது முழுமையடையாத சபைகளால் நடத்தப்பட்டன. எனவே, துறவிகள், புத்திசாலிகள் மற்றும் அடக்கமான ஆண்கள் உபோசத விழாக்களில் தோன்றவில்லை. சைனர்கள் [Jains] தமிழில் சமணர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். Part: 123 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" From the pages 44 to 45 of the Reference 'Ashoka in Ancient India by Nayanjot Lahiri' says: Quote “Then there was a stone on which the Buddha had apparently walked, marked by the impression of both his feet, a sacred feature which the king had surrounded within an enclosure. Modern archaeologists read the Chinese traveller’s description of these details with approval, Xuanzang having shown the sorts of precise measuring skills that are staple of the discipline of archaeology: he mentions the dimensions of the sacred foot prints (18 inches long and 6 inches broad” Unquote. Even this is a comparatively big for a human being. Jainism and Buddhism came to southern India, especially to Tamil countries, before the dawn of the Common Era. Jainism came to Tamil countries about three hundred year B.C., and Buddhism came to Tamil countries about one hundred years after. Kings and rich people used to prepare rock surfaces for Jain monks. Jains are referred as Niganthas in the Mahavamsa, 10-97, [North of this cemetery, between (it and) the Pasana-mountain, 95 the line of huts for the huntsmen were built thenceforth. Northward from thence, as far as the Gamani-tank, 96 a hermitage was made for many ascetics; eastward of that same 97 cemetery the ruler built a house for the nigantha [Name of a sect of ascetics (the Jains) who went about naked] Jotiya [Jotiya - A Nigantha, for whom Pandukabhaya built a house to the east of the Nicasusana at Anuradhapura]. and the Dipavamsa, 7-35. [ 34. Many Khattiyas and Brahmans declared their intention of becoming lay disciples, and great gain and honour accrued to the faith of Buddha; – 35. the schismatics and heretics lost both gain and honour. Paṇḍaraṅgas and Jaṭilas, Nigaṇṭhas, Acelakas, and others – 36. resided (in the Buddhist Vihāras) during seven years; the Uposatha ceremonies were performed by incomplete congregations; saintly, clever, and modest men did not appear at the Uposatha ceremonies.] Jains are referred to as Samannar in Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 124 தொடரும் / Will follow துளி/DROP: 2074 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 123 https://www.facebook.com/groups/978753388866632/posts/34137711259210751/?
-
"மூன்று கவிதைகள் / 28"
"மூன்று கவிதைகள் / 28" 'மின்னலாய் ஒரு பின்னல்' [சாந்தம், புயல், வசந்தம் & கானம்] சாந்தம் பூத்த மனது இன்று புயல் மோதித் தடுமாறி வசந்தம் என எண்ணி கானம் இசைத்துக் கரைந்து போனது கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................... ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! திண்ணிய நெஞ்சில் தன்னம்பிக்கை நிலைக்க மண்ணில் புகழும் மங்காது நிலைபெற நண்ணிய வாழ்வு பொன்னாய் மிளிர்கிறது! தெளிவான பாதை எனக்குக் காட்டிட துளிதுளி இன்பம் மனதில் பூக்க ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்பாணம் ............................................................ 'இன்பமான இரவிதுவே இனிமைப் பொங்கும் நல்லுறவே' இன்பமான இரவிதுவே இனிமைப் பொங்கும் அன்புப் பூக்கள் மணம்வீசும் நல்லுறவே! தெள்ளிய நிலவின் ஒளியில் நனைவோம் உள்ளம் மகிழ்ந்து உவகை கொள்வோம் கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்டவளே மெல்லிசை பாடி மெய்மறந்து ஆடுவோம்! துள்ளிடும் இன்பம் சொல்லில் அடங்காது அள்ளிடும் காதல் என்றும் குறையாது தெளிவான பாதையில் இருவரும் இணைந்து ஒளிமயமான வாழ்வை இனிதே நிறைவேற்றுவோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2073 ["மூன்று கவிதைகள் / 28" https://www.facebook.com/groups/978753388866632/posts/34137375435911000/?
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 6 பாகம் – 6 / “உண்மை ஒரு அச்சுறுத்தலாக மாறும் போது” அன்று காலை, எல்லாம் வழமை போலவே இருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக தாம் சிறகுகளை உலர்த்தி உல்லாசமாக பரந்து விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்து புலர்ந்து கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதிற்கு இசைவாக இசை முழங்க, இருளில் கௌவிக்கொண்டிந்த வானத்து சூரியனும் தன் பங்கிற்கு தன் செம்கதிர் ஒளிக்கற்றைகளை பதிக்கத் தொடங்கின. மெல்ல மெல்லமாய் அந்த மாய இருள் ஓடி ஒளித்து கொண்டிருக்கையில், ஆதன் காலை 7:20 மணியளவில் சைக்கிளை வேப்பமரத்தின் கீழ் நிறுத்தி விட்டு, தனது உடுப்பில் ஒட்டியிருந்த ஒரு சில தூசியை தட்டி விட்டு, பாடம் நடத்த வகுப்பிற்கு தயாராக வந்தான். ஆனால் அவன் வகுப்பறைக் கதவைத் தொடுவதற்கு முன்பு, ஒரு பியூன் ஓடி வந்து: “ஐயா... தலைமையாசிரியர் உங்களை உடனடியாகப் பார்க்க விரும்புகிறார்.” என்றான். அலுவலகத்திற்குள் மூன்று பேர், ஆதனை எதிர்பாத்து அமர்ந்திருந்தனர் - தலைமையாசிரியர், ஒரு மூத்த ஆசிரியர் மற்றும் ஒரு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் [PTA] குழு உறுப்பினர். அவர்களின் மேசையில் ஒரு கோப்புறை [folder] கிடந்தது. அது அரசாங்கக் கடிதம் அல்ல — ஆனால் மிகவும் கனமான ஒன்று. - அது ஆதனைப் பற்றிய புகார். தலைமையாசிரியர், ஆதனை கதிரையில் இருக்கச் சொல்லி விட்டு, மெதுவாகப் பேசினார்: “ஆதன் … கடந்த வாரம் வந்த அதிகாரிகள் உன்னைப் பற்றி குறிப்புகளை அனுப்பியுள்ளனர்.” ஆதனுக்குப் புரிந்தது. அது அவன் எதிர்பார்த்தது தான். அன்று அவன் கரும்பலகையில், “தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது நினைவகம்.” என்று அவன் எழுதியது. அதில் ஏதும் தவறு இருப்பதாக அவன் உணரவில்லை. அதனால் அவன் அமைதியாக இருந்தான். முதலில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் கூறினார்: “உங்கள் கற்பித்தல் மிகவும் உணர்ச்சிவசமானது. மிகவும் பண்டைய வரலாறுகளை, தேவையில்லாமல் கிளறுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.” என்றார். ஆதன் பதிலளித்தார்: “மாணவர்கள், தங்களை, தங்கள் மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையை, உறுதியான சாட்சிகளுடன் நான் கற்பிக்கிறேன். அவ்வளவு தான்” என்றான். என்றாலும் அங்கு அமர்ந்து இருந்த மூத்த ஆசிரியர் தொடர்ந்தார்: “நீங்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவராகி வருகிறீர்கள். மாணவர்கள் வீட்டில் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். மாணவர்களிடம் ஒரு விழிப்புணர்வு வருகிறது, அது எப்படி வருங்காலத்தில் மாறும் என்பதே, அதிகாரிகளின் பயம்” என்றார். ஆதன் அதை மறுக்கவில்லை. பின்னர், மிகவும் மென்மையாக, தலைமை ஆசிரியர் கூறினார்: “நீங்கள் மாணவர்களுக்கு ஒன்று பேசுகிறீர்கள், ஆனால், வேறொன்றாக சிலாபத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள செவிலியருடன் நெருக்கமாக பழகுவதாக ஒரு வதந்தியும் உள்ளது.” என்றார். ஆதன் வெளிப்படையாக பதிலளித்தான்: “அவள் என் தோழி.” மட்டும் அல்ல, அவளின் முன்னைய தமிழ் தலைமுறை கட்டாயப்படுத்தி நூறு ஆண்டுகளுக்குள், ஒரு பாதிரியரால் மொழி மாற்றப்பட்டு, சிங்கள மயமாக்கப்பட்டது வரலாறு. அந்த உண்மை உங்களுக்கும் தெரிந்து இருக்கும், ஆனால் மீண்டும் அது நடைபெறாமல் இருக்க, நான் ஒரு சிறிய விளக்கம் கொடுத்தேன். அவ்வளவுதான் . அவனிடம் பயம் இல்லை. சாக்குப்போக்கு இல்லை. வெட்கக்கேடானது என்று எதுவும் இல்லை. தலைமை ஆசிரியர் பெருமூச்சு விட்டார்: “ஆதன் ... நீ ‘கட்டுப்படுத்த முடியாதவனாக’ மாறிவிட்டாய் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” ஆதன் சிரிச்சான். அந்த வார்த்தை எந்த குற்றச்சாட்டையும் விட அவனை அதிகமாக காயப்படுத்தியது. கட்டுப்படுத்த முடியாதது ? — ஏனென்றால் ஆதன் மாணவர்களுக்கு தமிழ், தமிழர், இலங்கை என்பதன் வரலாற்று உண்மையை கூறினான். கட்டுப்படுத்த முடியாதது ?— ஏனென்றால் அவன் பொய் சொல்ல மறுத்துவிட்டான். கட்டுப்படுத்த முடியாதது ?— ஏனென்றால் அவன் மாணவர்களுக்கிடையில் தனி ஒருவனாக உயர்ந்து நின்றான். இறுதியாக அவர்கள் அவனிடம் கோப்புறையைக் [folder] கொடுத்தார்கள். “உன் வகுப்பு நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஆய்வு செய்யப்படும்,” என்று தலைமை ஆசிரியர் அமைதியாக அவனிடம் சொன்னார். பின் ஒரு இடைவெளி விட்டு: “நீ பின்னர் அதிர்ச்சியடையக் கூடாது என்பதற்காக இதை முன்னமே சொல்கிறேன்.” என்றார். அதே நேரத்தில், சிலப்பம் மருத்துவமனையில், சமந்தி [செந்தூரி] வார்டை விட்டு வெளியே வந்தார். அங்கே தொண்டு ஒன்றுக்கு காசு சேர்க்க காத்திருந்த ஒரு கன்னியாஸ்திரீ அல்லது அருட்சகோதரி அவளை மெதுவாக அழைத்தார்: “குழந்தாய்... நேற்று நீ முன்னேஸ்வரம் சென்றதாக கேள்விப்பட்டேன்.” சமந்தி சிரித்தாள்: “ஆம்.” அருட்சகோதரி குரலைத் தாழ்த்திக் கூறினார்: “சிலர் உன்னை... மதம் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.” சமந்தியின் குரல் அமைதியாக இருந்தது: "“நான் எதையும் மாற்றவில்லை. எனக்கு என்னை மட்டுமே, என் சுயம் மட்டுமே நினைவில் இருந்தது. [I didn’t change anything. I only remembered myself.]" அருட்சகோதரி முகம் சுளித்தார்: “உடப்புவைச் சேர்ந்த தமிழ் ஆசிரியருடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், கவனமாக இருங்கள். மக்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையைத் திருப்புவார்கள் என்று.” சமந்தி பதிலளித்தாள்: “உண்மை மக்களை உலுக்கினால், அது உலுக்கட்டும். என் அடையாளம் ஒரு வதந்தி அல்ல. [If truth shakes people, let them shake. My identity is not a rumour.”] அன்று மாலை ஆதனும் சமந்தியும் கடற் கரையில் சந்தித்தனர். அப்பொழுது கதிரவனின் பொன்னிறக் கதிர்கள் கடலிலும் மணலிலும் பட்டு மின்ன, ஆரவாரமான அலைகளின் ஓசையோடு, அமைதியையும் ரம்மியத்தையும் ஒருங்கே தரும் ஓர் அற்புதமான காட்சியாக அது இருந்தது; மக்கள் மகிழ்ந்து, ஓய்வெடுத்து, இயற்கை அழகை ரசிக்கும் ஓர் அனுபவம் அங்கு தானாக மலரும். ஆனால் அவர்களுக்கு அப்படியான எந்த மகிழ்ச்சியும் இருக்கவில்லை. அன்று வழமைக்கு மாறாக காற்று பலமாக இருந்தது, அலைகள் அவர்கள் சார்பாகப் பேசுவது போல் தோன்றியது. ஆதன் கூறினான்: “அவர்கள் என் பணியை ஆய்வு செய்யப் போகிறார்கள். என்னை தங்களுக்குள் கட்டுப்படுத்தவே நினைக்கிறார்கள்.” சமந்தி கூறினாள்: “அவர்கள் என் மதத்தை விசாரிக்கிறார்கள். அவர்கள் என் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அவர்கள் என் சுதந்திரத்தைப் பற்றி அஞ்சுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆனால் 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்! அப்படி இந்த பார்வைகள் இருக்கவில்லை. இருவரும் - முதிர்ந்தோர்கள், இருவரும் - தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக அறிந்திருந்தனர். இருவரும் - ஒரே காரணத்திற்காக, வெவ்வேறு வகையான அழுத்தங்களுக்கு எதிராக நிற்கிறார்கள். மௌனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில், உண்மையை பேசுவது, அந்த எதிர்பார்ப்பாளர்களிடம் ஒரு கிளர்ச்சி போல் தெரிகிறது [Truth looks like rebellion in places where silence is expected]. ஆதன் மெதுவாக கூறினான்: “நான் என் மொழிக்காக நின்றேன். அதனால், இப்போது என் முழு வாழ்க்கையும் கவனிக்கப்படுவது அல்லது சோதிக்கப்படுவது போல் உணர்கிறேன்.” சமந்தி பதிலளித்தாள்: “நான் என் அடையாளத்திற்காக [identity] நின்றேன். அதனால், இப்போது என் முழு மூச்சையும் எண்ணப்படுவது போல் உணர்கிறேன்.” அன்று இரவு, ஆதன் தனது நாட்குறிப்பில் எழுதினான்: “வரலாறு, என்னை பள்ளியில் தண்டித்தது. நம்பிக்கை, மருத்துவமனையில் அவளை கேள்வி கேட்டது. ஆனால் காதல் ... காதல், எங்களுக்கு தலைவணங்காமல் நிற்க தைரியத்தை அளித்தது.” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 07 தொடரும் துளி/DROP: 2071 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 6 https://www.facebook.com/groups/978753388866632/posts/34119947997653744/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 122 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 122 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " விஜயனை அவரது சொந்த தந்தையே தனது சொந்த நிலத்திலிருந்து, அவனின் தீய செயல்களால் வெளியேற்றினார், மேலும் இதனால், அதே குணாதிசயங்களைக் கொண்ட அவனது தோழர்களுடன் ஒரு படகில் செல்ல வேண்டிய கட்டாயம் விஜயனுக்கு ஏற்பட்டது. அந்தப் படகு இலக்கின்றி இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் சுப்பராவை [சுப்பராகா / Suppara] அடைந்தது, சுப்பரா மக்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். அங்கேயும் அவர்கள் தங்கள், காட்டுமிராண்டித்தனமான செயல்கள், திருட்டு, விபச்சாரம், பொய் மற்றும் அவதூறு போன்ற உள்ளார்ந்த நடத்தைகளைக் அல்லது குணங்களைக் காட்டினர். எனவே, கோபம் கொண்ட சுப்பரா மக்கள் விஜயனையும் அவனது தோழர்களையும் கொல்ல விரும்பினர். பின்னர் அவர்கள் தப்பித்து, பருகாச்சாவில் [Bharukaccha] தரையிறங்கி, மூன்று மாதங்கள் அதே தீய செயல்களை அங்கும் செய்தனர். உதாரணமாக, தீபவம்சம் 9-26. விஜயன் பருகாச்சா நகரத்தில் மூன்று மாதங்கள் தங்கி, அங்கிருந்த மக்களை தங்கள் கொடிய செயல்களால் கோபப்படுத்தி விட்டு, அதே கப்பலுக்குள் மீண்டும் ஏறினான். 27. அந்த விஜயனின் மக்கள் குழுவும் கப்பலில் ஏறி, கடலுக்குள் புறப்பட்டனர்; ஆனால் கடும் காற்றால் அவர்கள் வழிதவறி, கடலில் திசைதவறினர். 28. இதனால், அவர்கள் இலங்கைத் தீவை அடைந்து கரையில் ஒதுங்கினர். ஆனால் வறண்ட தரையில் நின்ற அவர்கள் மிகுந்த பசிப்பிணி, தாகம் மற்றும் சோர்வு ஆகியவற்றால் களைப்படைந்ததால், அவர்களால் (?) கால்நடையாக நடக்க முடியவில்லை, அதனால் அவர்கள் அங்கேயே நின்றனர் என்கிறது. என்றாலும் மகாவம்சம் பருகாச்சாவில் தரையிறங்குவதைத் தவிர்த்து உள்ளது அல்லது அப்படியான நிகழ்வு நடந்ததாக பதியவில்லை. எப்படியிருந்தாலும், இது இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆகும். விஜயாவின் வருகை, நாம் முன்பு கூறப்பட்டது போல, கட்டாயம் ஒரு கட்டுக்கதை. மேற் கூறிய நாளாகமம்களின் துறவி ஆசிரியர்கள் தங்கள் சொந்த நலனை மேம்படுத்த எந்த அளவிற்குச் செல்வார்கள் என்பதை இவை காட்டுவதாகும். ஒரு உதாரணமாக, கருணையுள்ள புத்தர் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வருகைக்காக இலங்கையை தயார்படுத்தினார் என்று யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஒரு குற்றவாளி புத்த மதத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்கும் வரை, அவர் செய்த எந்தவொரு குற்றச் செயலும் மகிமை வாய்ந்தது என்பது துறவி எழுத்தாளர்களின் வரலாற்று மரபு போல் தெரிகிறது. அது தான் விஜயன், துட்டகைமுனு மற்றும் அசோகன் போன்றவர்களின் நிலையாக இலங்கை நாளாகமம்களில் தெரிகிறது! மாறாக, ஒரு ஆட்சியாளர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், அவர் ஒரு பௌத்தராக இல்லாவிட்டால் கொல்லப்பட வேண்டும். இதற்கு ஒரு பொதுவான உதாரணம் இந்து அல்லது சைவ மத எல்லாளன் மன்னனாகும். தீபவம்சத்தின்படி மிகவும் பாராட்டத்தக்க பெருமைமிக்க ஆட்சியாளர் எல்லாளன் ஆகும். அவர் ஒப்பற்ற மன்னராக, தீபவம்சம் 18-50. இல் காண்கிறோம். அதாவது, தீபவம்சம் 18- 49. "எல்லாளன்" எனும் ஒரு இளவரசன், அசேலனைக் [Asela] கொன்று, நாற்பத்திநான்கு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தான். 50. காமம், வெறுப்பு, பயம் மற்றும் அறியாமை ஆகிய நான்கு தீய வழிகளைத் தவிர்த்து, இந்த ஒப்பற்ற மன்னன் தன்னிச்சையற்ற நீதியுடன் ஆட்சி செய்தான் என்கிறது. மற்றொரு நாளாகமம் மகாவம்சமும் எல்லாளனைக் கொன்றதை உயர்த்தி, ஆனால் அவரை ஒரு நீதியான ஆட்சியாளராக ஒப்புக்கொள்கிறது. தீபவம்ச ஆசிரியருக்கு அபயாவால் [Abhaya] அல்லது துட்டகைமுனுவால் எல்லாளன் கொல்லப்பட்டதை விவரிப்பது கடினமாக இருந்திருக்க வேண்டும், அதனால் அவர் அதை விவரிப்பதைத் தனது நாளாகமத்தில் தவிர்த்து உள்ளார் போலும். 'Eleven years in Ceylon - in two volumes by Major Forbes, First published 1840. AES Reprint 1994 / Comprising Sketches of the Field Sports and Natural History of that Colony, and an Account of Its History and Antiquities,'' என்ற நூலின் பக்கம் 176 இன் படி, ஆதாமின் சிகரத்தில் அல்லது ஸ்ரீ பாதத்தில் அல்லது சிவனொளிபாத மலையில் [Adam’s Peak / Sri Pada] உள்ள புத்தரின் இடது பாதத்தின் அளவு ஐந்து அடி ஏழு அங்குல நீளமும் இரண்டு அடி ஏழு அங்குல அகலமும் கொண்டது. மேலும் வலது பாதம் தாய்லாந்தில் உள்ள ஃபிரா சாட்டில் [Phra Sat in Thailand] உள்ளது என நம்பப்படுகிறது. புத்தர் ஒரு மனிதர், அவரது பாதங்கள் இவ்வளவு பெரியதாக இருக்க முடியாது. அது அபத்தமானது; ஒருவர் அதன் மீது தூங்கலாம். உண்மையில், அது தூங்கும் நோக்கத்திற்காக, சமண குருவுக்காக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பௌத்த இதிகாசமான மணிமேகலையின் நாயகியான மணிமேகலை, இந்த சம்மண மலைக்கு [Sammana Malai / Jain hill /also spelled Samanamalai or Samanala Malai] வருகை தந்தார். சம்மண மலை என்றால் இந்த மலை சமணர்களுக்குச் சொந்தமானது ஆகிறது. இலங்கையில் புத்த மதம் வருவதற்கு முன்பு, சமணர்களுக்கு, மலையின் உச்சியில் ஒரு படுக்கையை யாரோ தயார் செய்தனர். மணிமேகலை கூட புத்தரின் பாதங்களை வணங்க சம்மண மலைக்கு ["Jain hill "] வந்தார் என கூறப்படுகிறது. சமணர்கள் எல்லாவற்றையும், அவமானத்தையும் கூட கைவிட்டனர். அதாவது சமணர்கள் ஆடை அணியாமல் இருந்தும் அதை நாணுதற்குரிய செயலாகக் என்றும் கருதவில்லை. அது மட்டும் அல்ல, குளிக்க மாட்டார்கள், பல் துலக்க மாட்டார்கள். வேறு எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் அவர்கள் செய்வதில்லை. அவர்கள் வாழும் இடங்களிலிருந்து விலகி வாழ்ந்தனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற கல் படுக்கைகள் பல உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. Part: 122 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" Vijaya was banished from his own land by his own father, and forced to drift on a boat along with his companions who are of same characters. The boat aimlessly reached Suppara, probably on the western coast of India, and the people Suppara hospitably received them. There too they displayed their inborn behaviours: of barbarous deeds, theft, adultery, falsehood and slander. The people of Suppara wanted to kill Vijaya and his companions. Then they escaped, and landed in Bharukaccha and did the same evil deeds for three months, Dipavamsa 9-26. [26. Vijaya, having stopped three months at Bhārukaccha and exasperated the inhabitants, went again on board his ship. 27. That crowd of men having gone on board their ship, sailing over the sea, were driven away by the violence of the wind, and lost their bearings. 28. They came to Laṅkādīpa, where they disembarked and went on shore. Standing on dry ground, being exhausted by great hunger, thirst and fatigue, they were unable (?) to walk on foot.] Then they landed in Lankadipa. The Mahavamsa omitted the landing in Bharukaccha or the Dipavamsa added this. Either way, it is an anomaly. Vijaya’s arrival is a myth as stated elsewhere. The above paragraph is to show that to what extent that the monkish authors would go to advance their own interest. Could anyone imagine that the compassionate Buddha prepared Lanka for the arrival of convicted criminals? The monkish chronicle tradition is that any criminal behaviour is glorious so long as the criminal is connected with the Buddhism. Conversely, however good a ruler is, he shall be killed if he is not a Buddhist. The typical example is the ruler Elara. The most praiseworthy ruler, as per Dipavamsa, is Elara. He was described as; incomparable monarch, Dipavamsa 18-50. [49. A prince, Elāra by name, having killed Asela, reigned righteously forty-four years. 50. Avoiding the four evil paths of lust, hatred, fear, and ignorance, this incomparable monarch reigned righteously.] The other Chronicle Mahavamsa too exalts the killing of Elara while acknowledging him a just ruler. The Dipavamsa author must have found it hard to describe the killing of Elara by Abhaya, he simply avoided describing it. As per the page 176 of the Reference 'Eleven years in Ceylon - in two volumes by Major Forbes, First published 1840. AES Reprint 1994 / Comprising Sketches of the Field Sports and Natural History of that Colony, and an Account of Its History and Antiquities,', the size of the Buddha’s left foot on Adam’s Peak / Sri Pada is five feet seven inches in length and two feet seven inches in breadth, the right footprint being at Phra Sat in Thailand. The Buddha was a human, and his footsteps cannot be this big & It is ridiculously excessive; one can sleep on it. In fact, It look like, it must have been prepared for the sleeping purpose. Mannimeghalai, the heroine of the Tamil Epic Mannimeghalai which is a Buddhist epic, visited this Sammana Malai. Sammana Malai means the hill belongs to Sammanars; to Jains. Someone prepared a bed on top of the hill to Sammannars, to Jains, prior to the advent of Buddhism in Lanka. Even Mannimeghalai came to Sammana Malai ["Jain hill"] to worship Buddha’s feet. Jains forsook everything, even shame, and do not wear anything. Do not bathe, do not brush teeth etc. They do not do anything which may harm any other living being. They used to live away from the living quarters. There are many such stone beds in Tamil Nadu. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 123 தொடரும் / Will follow துளி/DROP: 2072 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 122 https://www.facebook.com/groups/978753388866632/posts/34120392554275955/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 121 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 121 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " இலங்கை அரசியல்வாதிகளும் துறவிகளும் தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து விரட்ட விரும்புவது இதுதான். அதாவது புத்தர் , ஆதிகுடி இயக்கர்களை இலங்கையில் இருந்து விரட்டியதான கதையின் பிரதிபலிப்பே! அந்த மனப்பான்மை தான், பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ், தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் என்ற பெயரில், முக்கிய உலக நன்கொடை நிறுவனங்களின் உதவியுடன் அல்லது இல்லாமல், தமிழர்களின் பொதுவாக திறந்த, அகலமான, மற்றும் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத அல்லது மேம்படுத்தப்படாத மிகப் பெரிய நிலப்பரப்பு வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டன. இந்த நன்கொடை நிறுவனங்களும் இந்த செயல்முறைகளில் அமைதியான பங்காளிகளாகும். ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவை [இந்தியாவை] மிகவும் நல்லொழுக்கமுள்ள, புகழ்பெற்ற மன்னர், தம்மசோகா அல்லது தர்மசோகா என்று அழைக்கப்படுபவர் ஆழ்வார் என்று தீபவம்சத்தில் கணிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தீபவம்சம் 1- 25. நூற்றுப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு [புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது புத்த சபை அல்லது மகாநாடு பற்றிய குறிப்பில்] மூன்றாவது புத்த சபை, சமயப் பரவலுக்காக நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது அல்லது எதிர்வு கூறப்பட்டுள்ளது . 1- 26. பின்னர் இந்த ஜம்புத் தீவின் மீது ஒரு ஆட்சியாளர் இருப்பார், அவர் தம்மசோகர் என்று அழைக்கப்படும் மிகவும் நல்லொழுக்கமுள்ள, புகழ்பெற்ற மன்னர் ஆவார். 1- 27. இந்த மன்னர் அசோகருக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் ஒரு புத்திசாலி மனிதன், மகிந்த ஆகும். இந்த மிகுந்த ஞானமுள்ள மகிந்தர், இலங்கைத்தீவிற்கு புத்தமதம் கொண்டு வருவார் என்கிறது? நம்பினால் நம்புங்கள் இந்த முன்னறிவித்தல் திறனை? மேலும் தீபவம்சம், 6- 21. மகிந்தவுக்கு பத்து வயதாக இருந்தபோது, அவரது தந்தை, அசோகன் தனது சகோதரர்களைக் கொன்றார்; பின்னர் அவர் ஜம்புத் தீவத்தை நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.6- 22. தனது நூறு சகோதரர்களைக் கொன்று, தனியாக தனது குலத்தைத் தொடர்ந்த அசோகர், மகிந்தவின் பதினான்காம் ஆண்டில் அரசராக முடிசூட்டப் பட்டார் என்கிறது. அதாவது, அதே மன்னர், ஆட்சியைத் தொடர, தனது நூறு சகோதரர்களைக் கொன்றார் என்கிறது. இது என்ன வகையான மகிமை? இலங்கை நாளேடுகளின் துறவி ஆசிரியரின் ஒழுக்கம் என்னவென்றால், நீங்கள் உங்கள் நூறு சகோதரர்களைக் கொன்றாலும், நீங்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவராக இருக்கும் வரை நீங்கள் நல்லொழுக்கமுள்ளவர் மற்றும் மகிமை வாய்ந்தவர் என்பதே ஆகும்! அதைத்தான் இன்றும் நாம் காண்கிறோம். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின் துறவி ஆசிரியர்கள் புத்தருக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, மன்னர் அசோகரையும் அவரது பல ஆணைகளின் மீதான அவரது அறிவுரை அல்லது எடுத்துக் காட்டுகளுக்கும் துரோகம் செய்தனர். ஒருவேளை, அசோகர் அரியணை ஏறுவதற்காக தனது சகோதரர்களில் சிலரைக் கொன்றிருக்கலாம். இருப்பினும், நாளாகமங்களின் துறவி ஆசிரியர்கள் தீபவம்சத்தின் படி உங்கள் நூறு சகோதரர்களைக் கொல்லுங்கள் அல்லது மகாவம்சத்தின் படி தொண்ணூற்றொன்பது சகோதரர்களைக் கொல்லுங்கள், எது எப்படியாகினும், நீங்கள் நல்லொழுக்கமுள்ளவர் மற்றும் புகழ்பெற்றவர் என்று உரத்த மற்றும் தெளிவான ஒப்புதலை இங்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. மன்னர் அசோகர் எந்த வருத்தத்தையும் அல்லது மனவருத்தத்தையும் வெளிப்படுத்தாமல் தனது சகோதரர்களில் நூற்று தொண்ணூற்றொன்பது பேரைக் கொன்றதாக இலங்கை நாளாகமங்கள் பெருமையுடன் கூறுகின்றன. அது தான் எனக்கு புரியவில்லை? இன்னும் ஒரு அதிசயம் என்னெவென்றால், புத்தர் இலங்கையை மனிதர்களின் தலைவரான விஜயனின் வருகைக்காக தயார் செய்தார் என்பது ஆகும். ஏனென்றால், விஜயன் எப்படிப்பட்ட தலைவர் என்பது இலங்கை நாளாகமம்கள் படித்தவர்களுக்கு புரியும்! விஜயன் மிகவும் தீய மற்றும் பயங்கரமான செயல்களைச் செய்த ஒரு கொடூரமான மனிதன். உதாரணமாக, தீபவம்சம், 9-6. சிங்கபாகுவுக்கு [Sihabahu or Sinhabahu] 32 மகன்கள் இருந்தனர்; அவர்களில் விஜயன் மற்றும் சுமித்தன் முதன்மையுடைய, அழகான இளவரசர்களாக இருந்தனர். 7. “விஜயன்” என்ற அந்த இளவரசன், கட்டுப்பாடில்லாதவன், கல்வியற்றவனாக இருந்தான்; அவன் மிகவும் கொடூரமான, பயங்கரமான செயல்களைச் செய்தான் மற்றும் மக்களைக் கொள்ளையடிக்கும் செயலிலும் ஈடுபட்டான். 8. நாட்டுப் பொதுமக்களும், வணிகர்களும் ஒன்று கூடி, அரசனை நாடி, விஜயனின் தீய நடத்தையைப் பற்றித் தெரிவிக்கத் தொடங்கினர். 9. அவர்களின் பேச்சைக் கேட்ட அரசன், கொந்தளித்து, அமைச்சர்களுக்குக் உடனடியாக கட்டளை கொடுத்தான்: “அந்த இளவரசனை வெளியேற்றுங்கள்! என்று” 10. “அவனது பெண், ஆண் சேவகர்கள், மனைவிகள், பிள்ளைகள், உறவினர்கள், மற்றும் அவனது அடிமைகள் என அனைவரையும் நாட்டை விட்டே நீக்குங்கள்!” என்பதே அந்த கட்டளை ஆகும்! Part: 121 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" This is what the Srilanka politicians and the monks want to do with the Tamils, to drive them away from their own land. Vast tracks of Tamils lands were forcefully appropriated under various irrigation schemes, as well as in the name of archeological excavations with or without the help of the major World Donor agencies. These Donor agencies are also the silent partners in this processes. It is forecast, Dipavamsa1- 26, [25. a hundred and eighteen years later [A mention of the second convocation, which was held a hundred years after Buddha’s death,] the third convocation will take place, for the sake of the propagation of the Faith. 26. Then there will be a ruler over this Jambudīpa, a highly virtuous, glorious monarch known as Dhammāsoka. 27. This king Asoka will have a son, a clever man, Mahinda, the learned converter of Laṅkādīpa.”] that there would be a ruler over Jambudipa a highly virtuous, glorious monarch known as Dhammasoka. The Dipavamsa records, 6-22, [21. When Mahinda was ten years old, his father put his brothers to death; then he passed four years reigning over Jambudīpa. 22. Having killed his hundred brothers, alone continuing his race, Asoka was anointed king in Mahinda’s fourteenth year.] that the same king killed his one hundred brothers to continue with the reign. What kind of glory is this? Moral of the monkish author of the Ceylon chronicles is that you kill your one hundred brothers; you are virtuous and glorious so long as you belong to the Buddhist faith. The monkish authors of the Dipavamsa and the Mahavamsa not only betrayed the Buddha, but also the King Asoka and his sermons on his several edicts. Asoka might have had killed few of his brothers to come to the throne. However the monkish authors of the chronicles sent a loud and clear approval that you kill your one hundred brothers in the case of the Dipavamsa, ninety nine in the case of the Mahavamsa, still you are virtuous and glorious. The Sri Lankan chronicles proudly claim that the King Asoka killed one hundred or ninety nine of his brothers without expressing any remorse or compunction. The Buddha prepared Lanka for the arrival of Vijaya, the chief of men. What kind of chief he was! He committed most wicked and fearful deeds, Dipavamsa, 9-7. [6. Thirty-two brothers were the sons of Sīhabāhu; Vijaya and Sumitta were the eldest among them, beautiful princes. 7. Prince Vijaya was daring and uneducated; he committed most wicked and fearful deeds, plundering the people. 8. The people from the country and the merchants assembled; they went to the king and complained against the bad conduct of Vijaya. 9. The king, having heard their speech, full of anger, gave this order to the ministers: “Remove ye that boy. 10. Let them remove from the country all those attendants, his wives, children, relations, maid-servants, man-servants, and hired workmen.”] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 122 தொடரும் / Will follow துளி/DROP: 2070 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 121 https://www.facebook.com/groups/978753388866632/posts/34103973475917863/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 120 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 120 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " கொஞ்சம் விபரமாக அங்கு நடந்ததைப் பார்ப்போமானால்: 49. இந்தச் சூழ்நிலையை கருணையுடன் எண்ணிச் சிந்தித்த பெரிய வீரரான சம்புத்தர், ஜம்புதீபத்திலிருந்து வானில் எழுந்து இங்கு வந்தார். 50. யக்கர்கள் கூடிய அந்தக் கூட்டத்தின் மத்தியில், அவர்களின் தலைகளுக்கு மேல், புத்தர் தம் ஆசனத்தைக் கையிலே வைத்தபடி வானத்தில் நிலைத்து நின்றார். 51. அந்த இடத்தில் கூடியிருந்த இயக்கர்களின் கூட்டம், அவரை புத்தர் என எண்ணவில்லை; ஒருவேளை வேறொரு இயக்கன் என்று தான் அப்பொழுது நினைத்தார்கள். 52. மஹியா போக்லா என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஆற்றங் கரையில், சுபாங்கனா தூபா அமைந்த இடத்தில், அதாவது பிற்காலத்தில் மஹியங்கான ஸ்தூபம் அமைந்த புனித இடத்தில், மனிதர்களுள் சிறந்தவர் (புத்தர்), உயர்ந்த தியானத்தில் வானத்திலே நிலைத்து நின்றார். 54. அந்த மகத்தான வீரர், மாயாஜாலங்கள் நிகழ்த்தி, இயக்கன் போல வலிமைமிக்கவனாக, வான வெளியில் மேகக் கூடல்களை உருவாக்கி, மழை, குளிர்ந்த காற்று மற்றும் இருண்ட வானத்தை ஏற்படுத்தினார். 55. (பின் புத்தர் இயக்கர்களிடம் கூறினார்:) “எனக்கு தீயை அடக்கும் சக்தியும், அபாயங்களை நீக்கும் திறனும் உண்டு. இங்கே நான் உட்காருவதற்கு ஒர் இடம் கொடுங்கள். [இல்லையேல்] நான் உங்களுக்கு வெப்பத்தை அளிக்கப் போகிறேன்” என்றார். 56. [இயக்கர்கள் பதிலளித்தனர்]: “நீங்கள் தீய வெப்பத்தை நீக்க இயலுமானால், உங்களுக்கு விருப்பமான இடத்தில் உட்காருங்கள். நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம்; உங்கள் சக்தியை காண்பியுங்கள்.” என்றனர். 57. (புத்தர் பதில் அளித்தார்) : “நீங்கள் அனைவரும் வெப்பத்தை வேண்டுகிறீர்கள்; அதிகப்படியான வெப்பம், எரியும் தீ போன்ற வெப்பத்தை விரைவில் உண்டாக்குகிறேன்.” என்றார். 58. வெயிலான காலத்தில் மதிய நேரத்தில் சூரியன் போல, இயக்கர்களின் கூட்டத்தில் ஒரு கடுமையான வெப்பம் பரவியது. 59. ஒரு உலகம் அழியும் சமயத்தில், கல்பகால முடிவில் [பாலி மொழியில், "கப்பா" (က္ပ) என்பது சமஸ்கிருதத்தில் "கல்பம்" என்று மொழிபெயர்க்கப் படுகிறது, மேலும் இது பொதுவாக ஒரு நீண்ட காலத்தை, காலச் சுழற்சியை அல்லது உலகின் ஒரு யுகத்தைக் குறிக்கிறது.], நான்கு சூரியர்கள் வானத்தில் தோன்றி எரிக்கும் வெப்பத்தை விடவும், புத்தர் அமர்ந்த ஆசனத்தில் இருந்து வந்த வெப்பமும் ஒளியும் அதைவிட அதிகமாக இருந்தது. 63. அந்த வெப்பம் தீவுகளுக்கெல்லாம் பரவி, தாங்க முடியாததாகியது.இயக்கர்கள் பத்துத் திசைகளிலும்—கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மேலே, கீழே என— எல்லா திசை நோக்கி அமைதிக்காக ஓடினார்கள். 66. ஆனால் அந்த மகா அனுபவசாலியான புத்தர் — முனிவர்களின் தலைவன், மகிழ்ச்சியை அளிப்பவரும், கருணையுள்ளவருமான அவர், இயக்கர்கள் துயரத்துடன் பயத்தில் குலைந்ததைப் பார்த்து, அவர்களது மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்த நினைத்தார். 67. [பின்னர் அவர் சிந்தித்தார்] — இதே போல் [இலங்கை போல்] காணப்படும், உயர்வும் தாழ்வுமாக மற்றும் அழகாக அமைந்த நதிகள், மலைகள், குளங்கள், காடுகள் கொண்ட, இலங்கையை முற்றிலும் ஒத்த, கிரி தீவு [the island of Giri] என்னும் மற்றொரு தீவை நினைத்தார் என்று அறிய முடிகிறது. புத்தரும் இயக்கர்களும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதால், இருவரும் ஒரே இனமாக, ஆகவே மனிதர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. பின்னர் புத்தர் பலத்த மழை, குளிர் காற்று, இருள் மற்றும் கடுமையான வெப்பம் போன்றவற்றை அனுப்பி இயக்கர்களைப் பயமுறுத்தினார். அப்படி என்றால், புத்தர் உலகின் முதல் பயங்கரவாதி என்று ஒருவர், இந்த சம்பவத்தை வைத்து இலகுவாக் கூறலாம்! அது உண்மை என்பது போல, இன்று இலங்கையின் வடக்கு கிழக்கில் அவரின் சிலைகள் அத்துமீறி அடாவடியாகத் தோன்றுவதைக் கூறலாம்? இறுதியில், கருணையுள்ள புத்தர், இயக்கர்களை வேறொரு தீவுக்கு, கிரிதீபாவுக்கு ஒருபோதும் திரும்பி வரக்கூடாது என்று ஓடச் செய்தார். தீபவம்சம் 1-78. இதற்கு உதாரணம். 76. புத்தர் தன் மாய சக்தியால், ஒரு கயிறு கொண்டு மாடுகளை இழுப்பது போல, அந்தத் தீவை தன் பக்கம் இழுத்தார். அவர் அந்த தீவுகளைக் [இலங்கை மற்றும் கிரி] கப்பல்களை ஒரு வலுவான கயிற்றால் இணைப்பது போல ஒன்றோடொன்று சேர்த்தார். 77. அழகான தீவை மற்றதுடன் இணைத்த பின்பு, "இனி எல்லா இயக்கர்களும் (அரக்கர்களும்) கிரிதீபத்தில் வாழட்டும்" என புத்தர் கூறினார். 78. வெயிலில் தாகம் அடைந்தவர்கள் நதியை நாடுவது போல, இயக்கர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கிரிதீபத்திற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் மீண்டும் ஒருபோதும் திரும்பி வராமல் அதற்குள் நுழைந்தனர்; பின்னர் முனிவர் அந்த தீவை அதன் பழைய இடத்திற்கு மீண்டும் கொண்டு சென்றார் என்கிறது. கருணையும், இரக்கமுமாய் உயிர்களுக்கு நற்பயன் செய்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட மகா முனிவரை, இப்படிப் பட்ட கொடுமைகள் செய்வதாகச் சொல்லப்படும் படி, இத்தகைய அநாகரிக, குற்றமிக்க செயல்களை அவருக்கே ஒப்புவித்து, புனித புத்தரை அவமதித்துப் புகழிழப்பித்தது அந்த புத்த பிக்கு ஆசிரியர்களே! அவர்கள் செய்தது புத்தருக்க்கு உண்மையில் துரோகமே!! அத்தகைய பொய்க் கதைகளை இயற்றி, அதில் ஏதேதோ பெருமைகளை நிலை நாட்ட முயன்ற அந்தக் காப்பியக்காரர்களுக்கு இது உண்மையில் அவமானமும் வெட்கமுமே! புத்தர், தாழ்வான நிலமும், உயரமான நிலமும் கொண்ட, மற்றும் பல்வேறு அம்சங்களுடன், ஆறுகள், மலைகள் மற்றும் ஏரிகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட, லங்கா [இலங்கை] நாட்டைப் போலவே, இலங்கைக்கு அருகில் இருந்த கிரி தீவைக் கண்டறிந்தபோது, அவர்களை [இயக்கர்களை] அந்தத் தீவுக்குத் துரத்துவதன் நோக்கம் தான் என்ன? இது ஒரு புத்தியுள்ள, பண்பாடு நிறைந்த நாகரிக மனிதனின் செயாலா?? கொஞ்சம் சிந்தியுங்கள்! அதற்குப் பதிலாக, கட்டாயம் அவர் [புத்தர்] அந்தத் தீவைத் தான் தேர்ந்தெடுத்திருப்பார், ஏனெனில் அது ஏற்கனவே அதே பகுதியில், முற்றிலும் இதே போன்ற நிலையில் காலியாக உள்ளது ?? Part: 120 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" [49. Having considered this matter, full of compassion, the great hero rose into the air and came hither from Jambudīpa. 50. In the midst of the assembly of Yakkhas, above their heads, he was seen, standing in the air, holding his seat (in his hands). 51. The assembled hosts of Yakkhas saw the Sambuddha standing there, but they did not think that he was the Buddha; they supposed him to be another Yakkha. 54. There the hero stood, performing miracles by his (magical) power, like a Yakkha of high (magical) power and great (supernatural) faculties; gathering (?) thick clouds, containing thousands of rain drops, he sent rain, cold winds, and darkness. 55. (He then spoke to the Yakkhas:) “I will send you heat; give unto me a place where I may sit down. I possess such power over the fire as will dispel these dangers.” 58. As the sun shines in summer at noon, so fearful heat penetrated the assembly of Yakkhas. 59. Like the heat spread by the four suns at the end of a Kappa, such and greater still was the glow sent forth by the seat of the Teacher. 63. It spread insupportable heat over the islands. The Yakkhas quickly fled in all ten directions, to the east, the west, the south, the north, above, and beneath. 66. And Buddha, the chief among Sages, the bringer of happiness, the compassionate, merciful great Sage, when he saw the afflicted, frightened Yakkhas, thought how to administer joy to the minds of these non-human beings. 67. (He) then (thought of) another island, similar to this, with low ground and high ground, with many various aspects, beautifully adorned by rivers, mountains, and lakes, the island of Giri, most similar to the country of Laṅkā.] Both, the Buddha and the Yakkhas, must have been humans to look similar. The Buddha then terrorized Yakkhas by sending heavy rain, cold wind, darkness and extreme heat etc. The first terrorist of the world, one may say! In the end, the merciful Buddha, made the Yakkhas run away to another island, Giridipa; never to return, Dipavamsa 1-78. [76. Gotama by his (magical) power drew the island towards himself, like the headstalls of bullocks which are drawn (towards the driver) with a strong rope. The Sage drew together one island towards the other, like two ships which are surrounded by stout ropes. 77. Having joined the beautiful island to the other, the Tathāgata transported (?) the Rakkhasas, (saying:) “May all Rakkhasas dwell in Giridīpa . . ” 78. The eager Yakkhas ran to Giridīpa, like thirsty people in summer to a river; they all entered it never to return; the Sage (then) restored the island to its former place.] What kind of merciful and compassionate Buddha was he to indulge in these cruelties? The monkish chroniclers betrayed the Buddha by ascribing these sorts of uncivilized and criminal acts to the Buddha, shame on them! When Buddha found another island, with low ground and high ground, with many various aspects, beautifully adorned by rivers, mountains, and lakes, the island of Giri, most similar to the country of Laṅkā, and also closed to Lanka, What is the purpose of chasing them to that said Island, Instead of that, He would have choose that said Island for his any purposes as It is already vacant with similar condition in same area ?? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 121 தொடரும் / Will follow துளி/DROP: 2068 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 120 https://www.facebook.com/groups/978753388866632/posts/34085106881137856/?
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 5 பாகம் – 5 / “முன்னேஸ்வரத்திற்கும் சிலுவைக்கும் இடையில் நிற்கும் சமந்தி [செந்தூரி]” முன்னேஸ்வரம் அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படவில்லை. அது ஒரு சாதாரண நாள். அதுதான் சமந்திக்கும் [செந்தூரிக்கும்] பிடித்திருந்தது. இங்கே, யாரும் யாரையும் சோதிக்கவில்லை. “நீ யார்?” என்று யாரும் கேட்கவில்லை, கடவுள் கூட கேட்கவில்லை. அன்று காலை, அவள் வாழ்க்கையில் முதல் முறையாக, தானாகவே கோவிலுக்கு வந்தாள். அவள் தன் தலைமுடியில் பூக்களை அணிந்தாளா? - இல்லை. அவள் புனித திருநீரைப் [விபூதி] பூசினாளா? - இல்லை. அவள் அங்கே தன்னை மதம் மாற்றிக்கொள்ள வரவில்லை. தன்னை மீட்டுக் கொள்ள வந்தாள். கற்பூர வாசனை அவள் மூச்சை அடைந்ததும், ஒரு நினைவு அவளுக்கு திரும்பியது. அது அவளுடைய பாட்டியின் குரல்: “நீ எதையாவது ஏற்றுக்கொண்டால், குழந்தாய், அது ஒருபோதும் பயத்தின் காரணமாக இருக்கக்கூடாது. [“If you accept something out of fear, then it is not truly yours.” / "நீங்கள் பயத்தால் எதையாவது ஏற்றுக்கொண்டால், அது உண்மையிலேயே உங்களுடையது அல்ல."]” அந்த நினைவு அவளுக்கு பலத்தைத் கொடுத்தது. சமந்தி [செந்தூரி] மூன்று அடிகள் முன்னோக்கி நகர்ந்தாள். சிவலிங்கம் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் அது அவளை பணிவாக உணர வைத்தது. “எனக்கு என்ன வேண்டும்?” அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். தன்னை மாற்றுவதா இல்லை அமைதியாக்குவதா ? - இல்லை எது சொந்தமோ, அது உரிமை என்று மனம் கூறியது. அவள் தானாக [herself] இருக்க பயப்படாத இடம் ஒன்றில், அவள் சொந்தமாக இருக்க விரும்பினாள். சமந்தி முன்னேஸ்வரத்தில் இருக்கும் போது, அவளுடைய அம்மாவும் பாட்டியும் சிலாபத்தில் உள்ள தேவாலயத்தின் முன் நின்றனர். யாரோ ஒருவள் அவர்களிடம் சொன்னார்கள்: "உங்கள் சமந்தி மாறிவிட்டாள் என்று கேள்விப்பட்டேன்." அம்மா பதில் அளிக்கமுன், அவளுடைய பாட்டி சொன்னார்: "இல்லை. இப்போதுதான் அவள் அவளாகவே மாறிவிட்டாள்." முன்னேஸ்வரத்தில் பூசாரி சமந்தியை பார்க்கும் போது, ஒரு கணம் அவள் பின்னால் ஒரு வரலாறு நின்றது. - போர்த்துகீசிய காலனித்துவவாதிகள். - கட்டாய மதமாற்றங்கள். - வாள். - பைபிள். - பயம். ஆனால் இந்தக் கணத்தில் அவை எல்லாம் இல்லை. ஒரு பெண்ணின் மூச்சு மட்டுமே இருந்தது. அவள் விளக்கை ஏற்றவில்லை - அவள் சுடரை மட்டுமே பார்த்தாள். "வெளிச்சம் வெளியில் இருந்து வர வேண்டியதில்லை. அது உள் மனதில் இருந்து வரவேண்டும்" என்பதே அவளின் நம்பிக்கை அங்கேயே அவள் ஒரு சக்திவாய்ந்த செய்தியை ஆதனுக்கு அனுப்பினாள்: "மக்கள் மாறும் இடம் முன்னேஸ்வரம் அல்ல - நீங்கள் யார் என்பதைக் கண்டறியும் இடம் அது." இது அவளுடைய ஆன்மீக விழிப்புணர்வை ஆதனுக்கு வெளிப்படுத்தியது. ஆதன் அந்த குறும் செய்தியை மூன்று முறை படித்தான். அதன் கனத்தை அவன் ஆழமாக உணர்ந்தான். ஆனால் பதில் போடவில்லை. அவன் உடப்புக் கடலோரமாக, கடலுக்கு எதிரே அப்பொழுது நின்றான். மீனவர்கள் வலை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். ஒரு மீனவன் அவனிடம் கேட்டான்: “டீச்சர் சார், அந்தப் பெண் வேறு மதத்தைச் சேர்ந்தவரா?” ஆனால், ஆதனுக்கு எந்த குழப்பமோ தடுமாற்றமோ இல்லை. அவன் உடனடியாக, தெளிவாக பதிலளிதான்: “ஆம்.” அந்த மீனவன் மீண்டும் கேட்டான்: “அதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வராதா?” ஆதன் உறுதியாகக் கூறினான்: “பிரச்சனை வேறொரு மதம் அல்ல - உண்மையை மறைப்பதுதான் பிரச்சினை - அடையாளத்தை இழப்பதுதான் பிரச்சினை” என்றான். மருத்துவமனையில் மாலை நேரம், ஒரு சிங்கள நர்ஸ் சமந்தியிடம் கேட்டாள்: “நீங்க இந்து கோவிலுக்குப் போனதா கேள்விப்பட்டேன்.” சமந்தி புன்னகையுடன் “நான் என் வீட்டுக்குப் போனேன்.” என்று சொன்னாள். அவள் வெட்கப்படவில்லை. அவள் தன் உண்மையான பாரம்பரியத்தை ஏற்றுக் கொண்டாள் என்பதை மறைமுகமாகச் சொன்னாள். அன்று இரவு ஆதனும் சமந்தியும் முதன்முறையாக தொலைபேசியில் பேசினர். அது ஒரு நீண்ட உரையாடல் அல்ல. ஆனால் ஒரு வாக்கியம் மட்டுமே சமந்தி: “நான் தேர்வு செய்த காதல் என் அடையாளத்தை அழிக்கமாட்டுன்னு நம்புறேன்.” யாரையும் மகிழ்விக்க அவள் தன் மதத்தை / வேர்களை மாற்ற மாட்டாள் என்று அந்த ஒற்றை வார்த்தையில் திடமாக கூறினாள். ஆதன்: “அப்படிச் செய்தா அது காதல் அல்ல.” என்று அவனும் பதிலளித்தான். உண்மையான அன்பு நீங்கள் யார் என்பதை அழிக்க வேண்டும் என்று என்றும் கோருவதில்லை என்பதில் அவன் நம்பிக்கையுடன் இருந்தான். அந்த இரவில் சமந்தி கோவில் மற்றும் தேவாலயம் இந்து மற்றும் கிறிஸ்தவம் தமிழ் மற்றும் சிங்களம் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் இவற்றின் இடையில் தன்னை மாட்டிக்கொள்ளவில்லை. தன்னுடனே [herself] நின்றாள். - அவளுடைய உண்மையான அடையாளம் இனி மறைக்கப்படுவதில்லை. அது அவள் ஏற்றுக்கொண்டு பெருமைப்படும் ஒன்றாக மாறுகிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2067 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 5 https://www.facebook.com/groups/978753388866632/posts/34084781131170431/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 119 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 119 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " புத்தர் 29 வயதில் அரச வசதிகளையும், புதிதாகப் பிறந்த மகனையும், இளம் மனைவியையும் துறந்த மற்றும் மிகவும் கருணையுள்ள மாமனிதர் என்று இன்று பலராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த உலக வாழ்க்கையின் துயரத்தால் அல்லற்பட்டு, வருத்தமடைந்து, அந்தத் துயரத்திலிருந்து விடுபட ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினார். தீபவம்சம் புத்தரை முனிவர்களில் முதன்மையானவர், மகிழ்ச்சியைத் தருபவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர் என்று விவரிக்கிறது. புத்தர் 2400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். மேலும் இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகள், புத்தர் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அல்லாதவர்கள் இலங்கையில் இருந்தனர் என்று நம்மை நம்ப வைக்க முயல்வதும் வெளிப்டையாகத் தெரிகிறது; புத்தர் காலத்தில் இலங்கையில் இரத்த தாகம் கொண்ட இயக்கர்கள், காட்டுமிராண்டி பிசாசுகள் மற்றும் கடுமையான இராட்சதர்கள் [blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas] போன்ற மனிதர் அல்லாத உயிரினங்கள் வாழ்ந்ததாக பண்டைய இலங்கை நாளேடுகளில், இலங்கையின் அசல் குடிமக்களை, புத்தரின் கருணையை உண்மையை பொய்யாக்கி, தாம் புத்த துறவி ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு வர்ணிக்கிறார்கள். ஆனால் உண்மையில், இந்தக் கதைகள், அந்த நிலத்தின் அசல் மக்களை ஆபத்தானவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ காட்டிட புத்த துறவிகளால் அபத்தமாக சித்தரிக்கப் படுகின்றன. அதாவது, இதன் மூலம், இந்த பூர்வீக சமூகங்களின் பாரம்பரிய நிலங்களைக் கையகப்படுத்துவதை நியாயப்படுத்த முயன்றனர் என்பதே உண்மை. அதை இன்றும் குறிப்பாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், புத்த குருக்களுடனும், ராணுவ வீரர்களுடனும் இணைந்து, அரச ஆதரவுடன் செய்துகொண்டே இருக்கின்றன. வங்கத்திலிருந்து [Vanga] இலங்கைக்கு வரவிருக்கும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கு [chosen followers] வழி வகுக்கும் வகையில், மேற்கூறிய துணை மனிதர்களை [sub-humans] இலங்கையில் இருந்து அகற்ற புத்தர் விரும்பினார் என்றும் அவர் மூன்று முறை இலங்கைக்கு காற்றில் பறந்து வந்தார் என்றும் இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் ஒரு மனிதப் பிறவி. எனவே அவர் கட்டாயம் பறந்திருக்க முடியாது என்பதே உண்மை! மேலும் அவரது பறத்தல் பற்றிய வர்ணனை அல்லது சம்பவம் இராமாயண காவியத்தில், அனுமான் இலங்கைக்கு பறந்ததாக கூறும் கதையின் திருட்டு என்று இலகுவாக எவரும் கூறலாம். காரணம் தீபவம்சத்துக்கு அல்லது மகாவம்சத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இராமாயணத்தின் ஆரம்ப கட்டம் கிமு 7-5 மற்றும் 5-4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம் என் இன்று ஊகிக்கப்படுகிறது. எனவே அதில் இருந்து இந்த சம்பவ பிரதி எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பது நம்பக்கூடிய ஒன்றே ஆகும். தீபவம்சம் 1- 51 இன் படி, கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் [Sambuddha means the ‘Perfectly Enlightened One’, sammā = perfectly; saṁ = by himself without a teacher; buddha = Enlightened or Awakened One, by realisation of the four Noble Truths. According to Buddhist scriptures, there have been four Sammā Sambuddhas including Lord Gautama Buddha in the present world cycle, and a fifth Sammā Sambuddha named Maithriya is expected to appear sometime in the future. / சம்புத்தர் என்றால் 'முழுமையான ஞானம் பெற்றவர்', சம்மா = பரிபூரணமாக; சாம் = ஒரு ஆசிரியர் இல்லாமல் தானே; புத்தர் = நான்கு உன்னத உண்மைகளை உணர்ந்து ஞானம் பெற்றவர் அல்லது விழித்தெழுந்தவர். பௌத்த சாஸ்திரங்களின்படி, தற்போதைய உலகச் சுழற்சியில் பகவான் கௌதம புத்தர் உட்பட நான்கு சம்மா சம்புத்தர்கள் இருந்துள்ளனர், மேலும் மைத்ரியா என்ற ஐந்தாவது சம்மா சம்புத்தர் எதிர்காலத்தில் எப்போதாவது தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.] அங்கே, நடுவானில் இயக்கர்களின் தலைகளுக்கு மேல் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்றே தவறாக நினைத்தார்கள். Part: 119 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 120 தொடரும் / Will follow துளி/DROP: 2066 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 119 https://www.facebook.com/groups/978753388866632/posts/34067398726242005/?
-
"மூன்று கவிதைகள் / 27"
"மூன்று கவிதைகள் / 27" 'முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ?' முகந்திருப்பிப் போறவளே முழுமனதைத் தாராயோ விழிநீரைத் துடைத்து பேரின்பம் பொழியாயோ தனிமையின் துயரம் போக்கிட வாராயோ கனவினில் ஏனோ கவலைகள் தந்தாயோ பிரிவினில் வாடும் நெஞ்சினைப் பாராயோ அருகினில் வந்து ஆறுதல் சொல்லாயோ இதயத்தின் கதவைத் திறந்து காட்டாயோ காதலின் மொழியை கனிவுடன் சொல்லாயோ வாழ்நாள் முழுதும் என்னுடன் வாழாயோ நிழலெனத் தொடர்ந்து துணையாய் இருப்பாயோ கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................................. 'புகைப்படக் கவிதை' கீழடி சொல்லுதடி தமிழரின் இருப்பை கேளடி வரலாற்றின் ஆழத்தின் தொன்மையை மீட்டிடு பழம்பெருமை மண்ணின் மாண்பினை போற்றிடு உலகிற்கு எமது மேன்மையை கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... 'காத்து நிற்பதிலும் ஒருசுகம் உண்டு' காத்து நிற்பதிலும் ஒருசுகம் உண்டு காணப் பழகுவதிலும் ஒருமகிழ்வு உளது பூத்துக் குலுங்கும் மலரினைப் போலே காலம் முழுவதிலும் அன்பினைத் தாராய்! கண்ணின் இமைபோல் உன்னைக் காத்திடுவேன் மண்ணின் மணம்போல் மணந்து நிற்பேன் வாழும் காலம் உன்னுடன் நடப்பேன் ஆளும் அன்பில் இணைந்து வாழ்வேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2063 ["மூன்று கவிதைகள் / 27" https://www.facebook.com/groups/978753388866632/posts/34051119214536623/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 118 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 118 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" Ancient Coins and Measures of Ceylon என்ற புத்தகம், 1877-இல் வெளியாகி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1879 ஆம் ஆண்டில் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை மொழிபெயர்த்தார் என்பதைக் கவனத்தில் கொள்வது பொருத்தமானது. இந்த 'Ancient coins and measures of Ceylon by T W Rhys Davids'. [On the Ancient Coins and Measures of Ceylon: With a Discussion of the Ceylon Date of the Buddha's Death [Thomas W. R. Davids] புத்தகத்தின் ஐந்தாம் பகுதியின் 38 முதல் 56 வரையிலான பக்கங்களில் கௌதமர் இறந்த தேதியை தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [T. W. Rhys Davids] குறிப்பிடுகிறார், மேலும் கௌதம புத்தர் இறந்த ஆண்டுக்கான பல பொருத்தமான ஆண்டுகளை அவர் கண்டறிந்துள்ளார். இந்த வரம்பு கிமு 400 முதல் கிமு 423 வரை செல்லுகிறது, அதாவது சராசரி ஆண்டு கிமு 412 ஆகும். ஜோர்ஜ் டேனர் அல்லது ஜோர்ஜ் டர்னர் [George Turnour] ஏற்கனவே 1837 ஆம் ஆண்டில் மகாவம்சத்தை மொழிபெயர்த்திருந்தாலும், சிறந்த மொழிபெயர்ப்பின் தேவை அன்று உணரப்பட்டது. எனவே, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் 1908 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை அரசாங்கத்தால் மகாவம்சத்தின் மொழிபெயர்ப்புக்கான ஐரோப்பாவிற்கான ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதன் படி, மொழிபெயர்ப்புக்கு பேராசிரியர் வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் [Wilhelm Geiger] அவர் பரிந்துரைத்தார், மேலும் இந்த மொழிபெயர்ப்பு 1912 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர், புத்தர் இறந்த ஆண்டை கிமு 483 என ஏற்றுக்கொண்டார். இது தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [Rhys Davids] பெறப்பட்ட சாத்தியமான ஆண்டோடு ஒத்துப்போகவில்லை; அவர் மொழிபெயர்ப்பின் பொறுப்பாளராக இங்கு கடமை புரிந்தாலும், அவர் தனது ஆண்டான கிமு 412 ஐ விளம்பரப்படுத்த அல்லது புகுத்த இங்கு முயற்சிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆராய்ச்சியாளர்கள் யோஹன்னஸ் பிரொன்கோர்ஸ்ட், ரிச்சர்ட் கோம்ப்ரிச், அலெக்சாண்டர் வின்னே [Johannes Bronkhorst, Richard Gombrich, Alexander Wynne] மற்றும் பலர் கி.மு 400 கொஞ்சம் கூட அல்லது குறைய ஆண்டை , அதாவது அண்ணளவாக கி.மு 400 ஆண்டை, விரும்புகிறார்கள், இது மேலும் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸை , அவரின் கருத்தை நியாயப்படுத்துகிறது. அவர் இலங்கையில் ஒரு இளம் அரசு ஊழியராக இருந்தார். மேலும் அவர் மிகவும் பலவீனமான அல்லது நியாயமற்ற காரணங்களுக்காக தனது வேலை அல்லது பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி சில ஆண்டுகளில் பாளி உரை சங்கத்தை [Pali Text Society] உருவாக்கினார், இது பாளி மொழிக்கும் மற்றும் புத்த மதத்திற்கும் மகத்தான சேவைகளைச் செய்தது. ஒரு காரியத்தைச் செய்து / செய்ய முயன்று தோல்விகண்ட அல்லது கசப்பான அனுபத்தைப்பெற்ற ஒருவர், மீண்டும் அதே காரியத்தைச் செய்ய வேண்டியிருக்கும் போது மிகமிக எச்சரிக்கையாகவும், பயத்துடனும் இருப்பார். அப்படி அனுபவப்பட்டு கூச்ச சுபாவமுள்ளவராக இருந்த அவர், கி.மு 400 முதல் கி.மு 423 வரையிலான ஆண்டுகளுக்கான தனது வாதத்தை என்றும் வலியுறுத்தவில்லை. புத்தரின் இறந்த தேதிகள் பல்வேறு காலவரிசைகளிலிருந்து பெறப்பட்டுள்ளன என்றாலும், அவை அனைத்தும் சித்தார்த்த கௌதமர் 80 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை அங்கீகரிக்கின்றன. இலங்கையின் நீண்ட காலவரிசையின் படி [Ceylonese Long Chronology] புத்தரின் வாழ்க்கை சுமார் கி.மு 624 தொடக்கம் - சுமார் கி.மு 544 வரை ஆகும். அப்படியே, சரிசெய்யப்பட்ட நீண்ட காலவரிசையின் படி [Corrected Long Chronology]: சுமார் கி.மு 567 தொடக்கம் - சுமார் கி.மு 487 வரையும் இந்திய சுருக்க காலவரிசையின் படி [Indian Short Chronology]: சுமார் கி.மு 448 / 449 தொடக்கம் - சுமார் கி.மு 368 / 369 வரையும் நவீன காலவரிசையின் படி [Modern Chronology]: சுமார் கி.மு 563 தொடக்கம் - சுமார் கி.மு 483 வரையும் ஆகும். கி.பி. 1906 முதல் புத்தரின் பிறப்பு, இறப்பு தேதிகளுக்கான நவீன அறிஞர்களின் ஒருமித்த கருத்து, சுமார் கி.மு 563 - சுமார் கி.மு 483 ஆகும். இது சைனம் நூல்கள், அசோகரின் ஆட்சி, வானியல் கணக்கீடுகள் மற்றும் புத்த சிந்தனைப் பள்ளிகள் [probable dates for the founding of Buddhist schools of thought] நிறுவப்பட்டதற்கான சாத்தியமான தேதிகள் போன்ற வெளிப்புற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இருப்பினும், இந்த தேதிகள் தோராயமானவை, மேலும் துல்லியமான தேதி குறித்த நவீன உணர்வுகளுக்கு அவை மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்றாலும், அவையை உறுதியாக கூறமுடியாது. புத்தரின் பிறப்பு, வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது இறப்புக்கான தேதிகள் ஒருபோதும் உறுதியாக இருக்காது, ஏனெனில் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை முதலில் எழுதிய எழுத்தாளர்கள், தேதியிடுவதில் கவனம்செலுத்தவில்லை; அவர்கள் கதையைச் சொல்வதில் மட்டுமே தான் கூடுதலான அக்கறை கொண்டிருந்தனர். மேலும், புத்தர் தானாக ஒன்றையும் எழுதவில்லை. அது மட்டும் அல்ல, அவரது மரணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் வரை அவரது வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த எந்தப் படைப்புகளும் வெளிவரவில்லை. மேலும், அவர் வாழ்ந்தார் என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொண்டாலும், அவரைப்பற்றி சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை நிகழ்வுகள் வரலாற்று உண்மையைப் பிரதிபலிக்கின்றனவா என்பதை அறிய எந்த வழியும் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். Part: 118 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" Ancient Coins and Measures of Ceylon was later published in 1877, Reference 'Ancient coins and measures of Ceylon by T W Rhys Davids'. [On the Ancient Coins and Measures of Ceylon: With a Discussion of the Ceylon Date of the Buddha's Death [Thomas W. R. Davids] It is appropriate to note that the Dipavamsa was translated by Hermann Oldenberg in 1879, two years after the above publication. T. W. Rhys Davids deals with date of Gautama’s death in the pages 38 to 56 of the Part V of this book, and arrived at a range of years for the probable year of death Gautama Buddha. The range is from 400 B. C. to 423 B. C., and the median year is 412 B. C. with plus/minus allowances. Though George Turnour already translated the Mahavamsa in 1837, a need for a better translation was felt and T. W. Rhys Davids was appointed by the then Government of Ceylon in 1908 as the Editor for Europe for the translation of the Mahavamsa. He recommended Professor Wilhelm Geiger for the translation, and the translation was published by the Government of Ceylon in the year 1912. Geiger adopted the year of death as 483 B. C. This is not in accordance with the probable year derived by Rhys Davids; he did not try promoting his year, 412 B. C. though he was in charge of the translation. The researchers Johannes Bronkhorst, Richard Gombrich, Alexander Wynne and others prefer 400 B. C. plus/minus some allowance, vindicating T. W. Rhys Davids. He was a young civil servant in Ceylon, and his services were terminated on some flimsy grounds. He returned to England and in the course some years he formed Pali Text Society, which did yeoman services to the Pali language and Buddhism. Once bitten twice shy, he didn’t insist on his argument for the range of years of 400 B. C. to 423 B. C. The dates of the Buddha have been derived from various chronologies which all recognize that Siddhartha Gautama lived for 80 years but disagree on the dates those 80 years encompass as explained above / shown below Ceylonese Long Chronology: c. 624 - c. 544 BCE Corrected Long Chronology: c. 567 - c. 487 BCE Indian Short Chronology: c. 448 / 449 - c. 368 / 369 BCE Modern Chronology: c. 563 - c. 483 BCE The modern scholarly consensus for the dates of the Buddha, since c. 1906 CE, has been c. 563 - c. 483 BCE based on external evidence such as Jain texts, Ashoka's reign, and astronomical calculations as well as probable dates for the founding of Buddhist schools of thought. These dates, however, are also approximations and, even though they are more acceptable to the modern-day sensibilities concerning precise dating, are far from certain. No dates for the Buddha's birth, life events, or death will ever be certain because the first writers to set down the events of his life, as noted, did not care about precision in dating; they cared about telling a memorable story. Further, Buddha himself wrote nothing and no works concerning the events of his life appear until many years following his death. Also, Scholars agree that he existed but also agree that there is no way of knowing whether the events of his life as depicted reflect historical truth. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 119 தொடரும் / Will follow துளி/DROP: 2064 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 118 https://www.facebook.com/groups/978753388866632/posts/34051575947824283/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 117 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" இந்திய மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சில கீழே தரப்பட்டுள்ளது. இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட அசோகாவதானம் [Ashokavadana], அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகாவதானத்தின் பல பதிப்புகள் இன்று காணப்படுகின்றன. அவை கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். எனினும் சில பாதிப்புகளின் உரையின் வடிவத்தின் படி, கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.இருப்பினும் அதன் வாய்மொழி தோற்றம் கி மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இது அசோகரின் வாழ்க்கையைப் பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாடலிபுத்திரத்தில் அசோகர் மன்னனாக வருவார் என்று புத்தரே தனது முதன்மையான சீடர் ஆனந்தரிடம் முன்னதாகவே கூறியதாக அசோகாவதானத்தில் கூறப்பட்டுள்ளது? இது புத்தர் பிறந்த நாட்டில், அன்று நிலவிய கதைகளினதும் மற்றும் எழுதப்பட்ட செய்திகளினதும் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும் புத்தர் முன்னறிவித்தல் ["to foretell"] போன்றவற்றை நம்பாதவர் அல்லது எதிர்ப்பவர் ஆகும். எனவே, இதன்படி, புத்தர் கி.மு 369 ஆம் ஆண்டு அல்லது அந்த நேரத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்திருக்க வேண்டும். புத்தரின் மரணத்திற்கும் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கும் இடையிலான காலத்தை 100 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அதாவது அசோகர் கி.மு 269 இல் அரசரானார், எனவே, கி.மு 269 + 100 ஆண்டுகள் = கி.மு 369. இது குறுகிய பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இலங்கை நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள 218 ஆண்டுகளால் கணிக்கப்படும் மகாபரிநிர்வாண காலத்தை விடக் [269 + 218 ஆண்டுகள் = கி.மு 487] குறைவு என்பதால் ஆகும். இது வடக்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் 100 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து, அதாவது இலங்கைக்கு வடக்கே இருந்து வருகிறது. 218 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அது நீண்ட பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தெற்கே உள்ள இலங்கையில் இருந்து வந்ததால், நீண்ட பாரம்பரியம், தெற்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது. புத்தர் இந்தியாவில் பிறந்ததால், அவர் பிறந்த இடத்திலிருந்து அல்லது பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள இந்தியாவின் பகுதிகளிலிருந்து வரும் எந்தத் தகவலையும் அதிகம் நம்பக்கூடியதாக இருக்கும். அதேவேளை, இலங்கை போன்ற தொலைதூர இடத்திலிருந்து அழகாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் எழுதப்படுள்ளதால், அதை மிகவும் துல்லியமான செய்தி என்று நாம் முடிவுகட்டிட முடியாது என்பதே உண்மையாகும், காரணம் புத்தர் இந்தியாவை விட்டு எங்கும் போகவில்லை. மன்னர் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கு 116, 118, 130, மற்றும் 218 என பல தேதிகள் சீனா மொழி நூல்களில் காணக்கூடியதாக உள்ளன. மேலும் 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' என்ற நூலில் பக்கம் 241 இல் உள்ள அடிக்குறிப்பில் 118 என கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. இதன் அடிப்படையில் புத்தரின் மரணம் கிமு 387 [269 + 118] இல் இருக்க வேண்டும். சீனாவின் 218 புத்தகோசரின் சமந்தபசாதிகாவின் [Samantapasadika by Buddhaghosa] மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இவர் [புத்தகோசர்] கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறினார். மகத நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த பாளி மொழியில் இவர் புலமை பெற்றிருந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றபின் இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் அவர் இலங்கைக்கு வந்து விளக்கவுரைகளை மொழிபெயர்த்ததால், இலங்கை பாரம்பரியம் அவரின் செல்வாக்கால் பாதித்திருக்கலாம் என நம்புகிறேன். எனினும் மேற்கூறிய எந்த ஆண்டுகளிலும் அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. மற்றொரு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கோம்ப்ரிச் [Richard Gombrich], கிமு 404 தான் புத்தர் இறந்த ஆண்டாகக் கூறுகிறார், மேலும் அலெக்சாண்டர் வின்னே [Alexander Wynne] தனது "The Historical Authenticity of Early Buddhist Literature” என்ற கட்டுரையில் கிமு 404 ஆம் ஆண்டை புத்தர் இறந்த ஆண்டாக ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார். பாளி நூற் சபை [Pali Text Society] தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [T. W. Rhys Davids] என்பவரால் நிறுவப்பட்டது. அவர் இறந்தபோது, 'நிறுவனர் காலமானார் [‘Passing of the Founder’]' என்ற தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதன் 5வது பக்கத்தில் இவ்வாறு உள்ளது: 1877-ல் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் Ancient Coins and Measures of Ceylon என்ற புத்தகத்தை எழுதினார். இதில், இலங்கை பழங்காலச் சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு புத்தரின் இறப்பு ஆண்டு 412 கி.மு. காலமாக இருந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால், இதை பெரும்பாலும் அறிஞர்கள் ஏற்கவில்லை. பின்னாளில் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸும் இந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார். என்றாலும் இதில் அவர் கூறிய 412 கி.மு. ஆண்டு, முன்பு குறிப்பிடப்பட்ட 404 கி.மு. ஆண்டுடன் நெருக்கமாக இருப்பதைக் காண்கிறோம். Part: 117 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" The following are based on the Indian and other sources. Ashokavadana was written in Sanskrit in the second century A.D., and it is about the life of Asoka. It is stated in the Ashokavadana that the Buddha himself predicted to his foremost disciple Ananda that Asoka would become the king in Pataliputra after one hundred years of his, the Buddha’s, death. This is based on the materials written in the country where the Buddha was born. As per this, the Buddha should have attained Mahaparinirvana on the year 369 B.C. or around that time. When 100 years are used for the time elapsed between the death of the Buddha and the coronation of Asoka, it is known as Shorter Tradition, as it is shorter than the 218 years that is given in the Chronicles of Ceylon. It is also known as Northern Tradition, as 100 years is from India, North of Sri Lanka. When 218 years are used, it is called the Longer Tradition. The Longer Tradition is also known as Southern Tradition, as it is from Ceylon which is south of India. Please note that Any information from the Buddha’s birth place should carry more weight. The record in a far away country might not carry more currency merely because it was written long ago in neat book form. Chinese has many dates, 116, 118, 130, and 218 for King Asoka’s coronation. The year 118 for Asoka after the Buddha is given in the footnote on page 241 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919'. The Buddha’s death based on this should be about 387 B. C. The Chinese 218 is based on the translation of Samantapasadika by Buddhaghosa, and the Ceylonese tradition might have influenced him as he came to Lanka to translate the commentaries. There is no consensus among scholars regarding any of the above cited years. Another researcher, Richard Gombrich, states 404 B.C. as the probable year of the death of Buddha, and Alexander Wynne says in his essay “The Historical Authenticity of Early Buddhist Literature” that he too accepts the year 404 B.C. as the year on which Buddha died. Pali Text Society was founded by T. W. Rhys Davids. When he died, there was an article on him with the title ‘Passing of the Founder’. One paragraph on the page 5 reads thus, ‘In 1877 he was ready with a treatise on the ‘Ancient Coins and Measures of Ceylon’, in which he endeavoured to fix the date of death of Gotama, by arguments founded on Sinhalese tradition, within a few years of 412 B. C. But this result did not win general acceptance and he himself abandoned it in later life’. This is very close to the year 404 B. C. proposed above, in the previous passage. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 118 தொடரும் / Will follow துளி/DROP: 2062 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117 https://www.facebook.com/groups/978753388866632/posts/34032940193021192/?
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 4 பாகம் – 4 / “பாடசாலை மணியும், தேவாலய மௌனமும்” உடப்பு கிராமப் பள்ளியில் ஒவ்வொரு காலையிலும், அந்த நாள் படிப்பு தொடங்க மணி ஒலிக்கும். ஆனால் இன்று காலையில், ஆசிரியர் ஆதனுக்கு அந்த மணி வித்தியாசமாக ஒலித்தது. அந்த பாடசாலை மணி இன்று மாணவர்களை அழைக்கவில்லை, மாறாக ஒரு கடினமான முடிவைச் செய்ய, தன்னை கட்டாயப்படுத்த, அழைப்பது போல் ஆதன் உணர்ந்தான். எனினும் ஆதன் வழக்கம் போல் தனது பாடத்தைத் தொடங்க, கரும்பலகைக்கு முன் நின்றான்.எல்லா மாணவர்களும் ஆசிரியர் ஆதனை நம்பிக்கையுடன் பார்த்தார்கள். அவர்களின் குடும்பங்கள் வெவ்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - சிலர் இந்து கோவிலிலும், மற்றவர்கள் தேவாலயத்திலும் தங்கள் வழிபாடுகளைச் செய்தனர். ஆனால் எல்லா மாணவர்களும், எந்த வேறுபாடும் இன்றி, ஒரு விடயத்தில் ஒன்றாக இருந்தனர் - அது கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது பசி. அப்போது ஒரு மாணவன் வேதனையுடன் ஒரு கேள்வியைக் ஆசிரியர் ஆதனிடம் கேட்டான்: “சார் [ஐயா] ... நம் பாடம் சிங்களத்தில் மாறுகிறதா?” அவன் பயந்து காணப்பட்டான். அந்தக் கேள்வி அவனுடையது மட்டுமல்ல, ஒரு காலத்தின் இடிபாட்டிலிருந்து வந்தது — தங்கள் மொழி வடக்கு கிழக்குக்கு வெளியே மறைந்து வருவதாக உணர்ந்த பல தமிழ் குழந்தைகளின் பயத்தையும் குழப்பத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆதன் மெதுவாக அறிவுடன் பதிலளித்தார்: “வரலாறு என்பது மொழிகளைப் பற்றியது மட்டுமல்ல. வரலாறு ஒரு கண்ணாடியும் கூட — அது நாம் யார் என்பதைக் காட்டுகிறது.” என்றார். அதன் பின், எல்லோருக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஆதன் கரும்பலகையில் எழுதினான்: “தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒரு நினைவு.”, அதாவது தமிழ் கதைகள், கலாச்சாரம் மற்றும் மக்களின் அடையாளத்தை அது சுமந்து செல்கிறது என்று ஒரு விளக்கமும் கொடுத்தான். மறுநாள், பிரதேசக் கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்தார். பலகையை பார்த்தார். “இது தேவையில்லாத அரசியல்.” என்று குற்றம் சாட்டினார். ஆதன் எந்த தயக்கமும் இன்றி, “இது அரசியல் அல்ல. இது நமது வரலாறு.” என்று அவருக்குப் பதிலளித்தான். அதிகாரி கூறினார்: “வரலாறு மக்களைப் பிரிக்கிறது.” ஆதன் அதற்கு, “நாம் அதை மறைக்கும் போதுதான் அது பிரிக்கிறது.” [“It divides only when we hide it.”] என்று விளக்கம் கொடுத்தான். ஆதன் நேர்மையாகப் பேசியதால், அரசாங்கம் அவரது பெயரை ஒரு ரகசியப் பட்டியலில் சேர்த்தது: “கவனிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்.” இது ஆதனை மிகவும் காயப்படுத்தியது - எந்த உடல் காயத்தையும் விட இது அவனுக்கு வேதனை கொடுத்தது, அந்த வார்த்தை வாளை விடக் கூர்மையாக அவனுக்கு இருந்தது. - ஏனெனில் அவன் உண்மையைக் கற்பித்ததற்காக தண்டிக்கப்பட்டான். அன்று மாலை, சிலாபம் மருத்துவமனையில், சமந்தி [செந்தூரி] வழக்கம் போல் தனது நோயாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வயதான நோயாளி அவளைப் பார்த்து அன்பாகக் கேட்டார்: "நீங்க ரொம்ப நல்ல நர்ஸ்... ஆனா உங்க பேர்... அது தமிழா?" அவர் கேள்வியை முடிக்கவில்லை. என்ன சொல்ல அவர் வந்தாரோ, அதைப் சமந்தி [செந்தூரி] புரிஞ்சுக்கிட்டார். அவள் அமைதியாகக் கீழே பார்த்தாள், தன் அடையாளத்தின் கனத்தை உணர்ந்தாள். அந்த நாளின் பிற்பகுதியில், சமந்தி, அங்கே இருந்த ஒரு சிறிய தேவாலயத்தின் கடைசி வரிசையில் அமர்ந்தாள். அவளுக்கு முன்னால் சிலுவை இருந்தது. அவள் மனதிற்குப் பின்னால் முன்னேஸ்வரம் கோவிலின் நினைவுகள் இருந்தன - அவளுடைய சிறுவயதில், அம்மம்மாவுடன் அவள் சென்ற இடம் அது. அவளுக்குள், இரண்டு உலகங்கள் அவளை வெவ்வேறு திசைகளில் இழுத்தன. ஆசிரியர் ஆதன் ஒரு முறை கூறிய வாக்கியத்தை அவள் நினைவில் வைத்தாள்: “அமைதி என்பது மிகக் குறைந்த கீழ்படியிலிருந்து தொடங்குகிறது. [“Peace begins from the lowest step.”]” அவள் யோசித்தாள்: “அமைதி என்றால் நான் யார் என்பதை மறைக்க வேண்டுமா? அமைதி என்றால் என் அடையாளத்தை இழப்பதா?” அவள் இதயம் குழப்பத்தால் கனத்தது. இதற்கிடையில், ஆதன் உடப்பு கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். அங்கே, மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்து, உடைந்த துண்டுகளை ஒன்றாகக் கட்டிக் கொண்டிருந்தனர் - மக்கள் தங்கள் உறவுகளை சரிசெய்ய வேண்டும் என்று ஆதன் விரும்பியது போல. ஒரு மீனவன் ஆதனிடம் கேட்டான்: “ஆசிரியரே, நீங்கள் ஏதாவது பெரிய திட்டத்தைத் திட்டமிடுகிறீர்களா?” ஆதன் ஒரு சிறிய புன்னகையுடன் தலையை ஆட்டினார்: “இல்லை. நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. நான் எங்க இருக்கிறேனோ அங்க தான் நிற்கிறேன், அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை” என்றான். அதாவது தான் ஒரு போராட்டத்தையோ அல்லது இயக்கத்தையோ தொடங்கவில்லை. ஆனால், எம் வரலாறு மற்றும் அடையாளம் பற்றிய உண்மையை மட்டும் பேசிக் கொண்டு இருப்பேன் என்றான். அன்றிரவு, சமந்தி ஆதனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்: “ஏதோ ஒரு குழப்பம் இருந்திருக்க வேண்டும், இன்று தேவாலயம் … அமைதியாக இருந்தது." ஆதன் அதற்கு உடனடியாக பதிலளித்தான் “இன்று பள்ளி… மணி அடித்தபோதும், என்னால் எழுந்திருக்க முடியவில்லை.” இருவரும் வெவ்வேறு வழிகளில் ஒரே விடயத்தைத் தான் சொன்னார்கள் - உயிர் கொடுக்க வேண்டிய இடங்களான - கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் - உண்மையும் அடையாளமும் அடக்கப்படுவதால் காலியாகவும் அமைதியாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் அன்று இரவு அவர்கள் காதலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒரே வலியைப் பகிர்ந்து கொண்டனர் - உண்மை மறைக்கப்பட்டு குரல்கள் அடக்கப்படும் போது வரும் வலி அது. அன்றிரவு, சமந்தி [செந்தூரி] தனது பாட்டியின் பழைய பெட்டியை மீண்டும் திறந்தாள். ஆனால் இந்த முறை, அவள் பயப்படவில்லை - உள்ளே இருக்கும் எந்த உண்மையையும் எதிர்கொள்ளத் தயாராக, உறுதியுடன் திறந்தாள் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 2061 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/34032482543066957/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 116 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 116 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் மற்றும் ரோமிலா தாப்பர் [Wilhelm Geiger and Romila Thapar] உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள், கி.மு 544 ஆம் ஆண்டை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரிக்கின்றனர். வில்லெம் கெய்கர் 1912 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மகாவம்சத்தின் முதல் பதிப்பில், புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 483 ஆம் ஆண்டைப் பயன்படுத்தினார். அதன் ஐந்தாவது அச்சு 2018 ஆம் ஆண்டில் இலங்கை புத்த கலாச்சார மையத்தால் [Buddhist Cultural Centre – Sri Lanka.] வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நகல் இதுவேயாகும். சுமார் 108 ஆண்டுகளுக்கு முன்பு முதல் அச்சில் இருந்ததைப் போலவே, இந்த ஐந்தாவது பதிப்பிலும் கி.மு 483 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 483 ஆம் ஆண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி டாக்டர் ஃப்ளீட்டின் [Dr. Fleet ] கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த விடயத்தில் டாக்டர் ஃப்ளீட்டின் பிற கட்டுரைகளும் உள்ளன, மேலும் பின்வரும் மூன்று கட்டுரைகள் கீழே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. 1. புத்தர் இறந்த தேதி, அசோகரின் பதிவால் தீர்மானிக்கப்பட்டது.[The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26] 2. புத்தர் இறந்த தேதி, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 இதில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது 3. புத்தர் இறந்த நாள், By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 இல் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல, 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition '- - பக்கம் 20 இல், புத்தர் இறந்த இரண்டு நம்பகமான ஆண்டுகள் என கிமு 483 மற்றும் கிமு 486 ஐ கிட்டத்தட்ட சமமான தகுதியுடன் தருகிறது. லும்பினி தூண் கல்வெட்டு (Lumbini pillar inscription) படேரியா கல்வெட்டு [ Paderia inscription] என்றும் அழைக்கப்படும் இது பண்டைய பிராமி எழுத்து முறைகளில், காணப்படும் ஒரு கல்வெட்டாகும். இது 1896 டிசம்பர் இல் நவீன நேபாளத்தின் லும்பினியில் அசோகரின் தூண்களில் தொல்லியலாளர் அலோயிஸ் அன்டன் ஃபுரர் [Alois Anton Führer] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறிய தூண் கட்டளை, ரம்மிண்டே தூண் கல்வெட்டு [Rummindei Pillar Inscription] என்றும் அழைக்கப்படும். அசோகர் தனது ஆட்சியின் இருபதாம் ஆண்டுக்குப் பிறகு புத்தரின் பிறந்த இடத்திற்கு [லும்பினியில் புத்தர் பிறந்தார்] பயணம் செய்து நேரில் காணிக்கை செலுத்தியதாக லும்பினி தூண் கட்டளை பதிவு செய்துள்ளது. பின்னர் அவர் ஒரு கல் தூணை நிறுவினார், அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் வரிககள் குறைக்கப்பட்டன. அவர் அந்த யாத்திரைக்குச் செல்வதற்கு முன்பு ஒரு சூரிய கிரகணம் [solar eclipse] ஏற்பட்டது. 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition' ['அசோகரும் மௌரியர்களின் வீழ்ச்சியும் - ரோமிலா தாபர், மூன்றாம் பதிப்பு'] என்ற குறிப்பின்படி. சூரிய கிரகணம் கிமு 249 இல் என்று கணக்கிடப்படுகிறது. அந்த கிரகணத்திற்குப் பிறகு, மன்னர் அசோகர் யாத்திரைக்குச் சென்ற ஆண்டுகளின் எண்ணிக்கை எங்களுக்குத் உறுதியாகத் தெரியவில்லை. சூரிய கிரகணம் நடந்த அதே ஆண்டில் அவர் புறப்பட்டிருந்தால், மன்னர் அசோகர் கி.மு 249 ஆம் ஆண்டு யாத்திரையைத் தொடங்கியிருக்க வேண்டும். எனவே, புத்தரின் பரிநிர்வாணம் கி.மு 487, 249+218+20 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். என்றாலும், கிரகணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புறப்பட்டிருந்தால், புத்தரின் பரிநிர்வாணம் கி.மு 485, 249-2+218+20 இல் நிகழ்ந்திருக்க வேண்டும். [Two hundred and eighteen years after the Parinibbāna of the Sambuddha Piyadassana was anointed king என்ற நாளாகமம்களின் செய்தியின் படி] இலங்கை நாளாகமம், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளபடி, புத்தர் இறந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்திருந்தால் மட்டுமே இது சரியானதும் ஆகும். மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள, லும்பினியில் உள்ள ரம்மிண்டே சிறிய தூண் கல்வெட்டு அரசாணையின் தொலைப்பிரதி அல்லது தொலைநகல் [Fax (short for facsimile)], வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' ['இந்தியாவின் புத்த பேரரசர் அசோகர், வின்சென்ட் ஏ ஸ்மித் எழுதியது, மூன்றாம் பதிப்பு 1919'] என்ற புத்தகத்தின் பக்கம் 222, கீழே கொடுக்கப்பட்டுள்ளது: "இருபதாம் ஆண்டு ஆட்சி நடைபெறும் போது, தேவனின் பிரியமானவன் என்ற பியதசி (அசோகர்) இந்த இடத்திற்கு சென்று தரிசனம் செய்து வணங்கினார். இதுவே சக்யமுனி [சாக்கியர்களின் முனிவரான] புத்தர் பிறந்த இடம் என்பதால், இங்கே குதிரையைத் தாங்கிய ஒரு கல் செய்யப்பட்டு, ஒரு கல் தூண் அமைக்கப்பட்டது. இறைவன் (புத்தர்) இங்கே பிறந்ததால், இந்த லும்பினி கிராமத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது; கிராமம் எட்டிலொரு பகுதி மட்டுமே வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது." இந்த வினோதமான பதிவு, 1896 இல் கண்டுபிடிக்கப்பட்டு சரியாகப் பாதுகாக்கப்பட்டது / இந்தப் பதிவு அரச கட்டளையால் செதுக்கப்பட்டதாகக் கூறவில்லை என்பதைக் கவனிக்கலாம். அசோகரின் வருகையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வழங்கிய உதவிகளையும் நினைவுகூரும் வகையில், உள்ளூர் அதிகாரியால் இது வரைவு செய்யப்பட்டு செதுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.? Part: 116 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" Most scholars, including Wilhelm Geiger and Romila Thapar, discard the year 544 B.C. as untenable. Wilhelm Geiger used the year 483 B. C. as the year on which the Buddha’s death took place, in the first edition of his translation of the Mahavamsa which was published in the year 1912. The fifth print of the same was published in the year 2018 by the Buddhist Cultural Centre – Sri Lanka. This is the copy referenced in this study. The same year 483 B.C. is used in this fifth edition too, as it was in the first print about 108 years ago. The year 483 B.C. as the Buddha’s year of death was based on the articles by Dr. Fleet as given below. There are other articles also by Dr. Fleet on this subject, and the following three articles are cited below. 1. The Date of Buddha's Death, as Determined by a Record of Asoka, By J.F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1904, pp 1-26 2. Date of Death of Buddha, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1912), pp 239 to 241 3. The Day on Which Buddha Died, By J. F. Fleet, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, (Jan 1909), pp 1 to 34 Romila Thapar, Reference 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition '- page 20, gives 483 B.C. and 486 B.C. as two credible years of Buddha’s death with almost equal merit. In Nepal, the Lumbini Pillar Edict is known as the Rummindei Pillar Inscription, one of his Minor Pillar Edicts. The Lumbini Pillar Edict recorded that Ashoka traveled to the birthplace of Buddha [Lumbini is where the Buddha was born] sometime after the twentieth year of his reign and made offerings personally. Then he got a stone pillar put up and the residents of that area lowered their taxes. There was a solar eclipse before he set out on that pilgrimage, as per Reference 'Asoka and the Decline of the Mauryas - Romila Thapar, Third Edition'. The eclipse of the sun is calculated to be on 249 B. C. We are not sure of the number of years after that eclipse the King Asoka set out on the pilgrimage. If he had set out on the same year as the solar eclipse, then King Asoka must have started on the pilgrimage on the year 249 B. C. Therefore, the Buddha’s Parinirvana must have had occurred on 487 B.C., 249+218+20. If he had set out two years after the eclipse then the Buddha’s Parinirvana must have occurred on 485 B. C.,249-2+218+20. This is correct only if the coronation of Asoka took place two hundred and eighteen years after the death of Buddha, as is given in the Chronicles of Ceylon, the Dipavamsa and the Mahavamsa. The facsimile of the above mentioned Minor Pillar Edict, Rummindei pillar inscription in Lumbini, as given by Vincent A. Smith, page 222 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919', is given below: " By His Sacred and Gracious Majesty the King when he had been consecrated twenty years, having come in person and reverence having been done inasmuch as ' : Here was born Buddha, the sage of the Sakyas" a stone bearing a horse was caused to be made and a stone pillar was erected. Inasmuch as " Here the Holy One was born," the village of Lummini was released from religious cesses and required to pay [only] one-eighth as land revenue." [This curious record, discovered in 1896 and perfectly pre- served / It will be observed that the record does not claim to have been incised by royal command. Presumably it was drafted and engraved by a local authority to commemorate Asoka's visit and the favours conferred by him on that occasion.] நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 117 தொடரும் / Will follow துளி/DROP: 2060 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 116 https://www.facebook.com/groups/978753388866632/posts/34016559807992564/?
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” [பத்து பாகங்கள்]
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 3 பாகம் – 3 / “பாட்டியின் பெட்டியில் மறைக்கப்பட்ட தேவாரம்” சிலாபத்திலிருந்து குருணாகலுக்குப் (Kurunegala) போகும் பாதையில் 5 கி.மீ தூரத்தில் பிரசித்தம் பெற்ற முன்னேஸ்வரம் (Muneswram) சிவன் கோவில் உள்ளது. இது இலங்கையிலுள்ள புராதன சிவாலயங்களுள் காலத்தால் முற்பட்ட, தொன்மைமிக்க சிவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இது அங்கு காலத்தால் முற்பட்ட காலத்திலேயே தமிழரின் இருப்பைக் காட்டுகிறது. அப்படிபட்ட பெருமைவாய்ந்த, சிலப்பம் என்ற கடலோர கிராமத்தில் இரவு மலர்ந்தது. அங்கே, அலைகள் வழக்கமாக சத்தமாக இருந்தாலும், இன்று கடல் அலைகள் அமைதியாக கரையைத் தாக்கிக் கொண்டிருந்தன. இந்த அமைதியான அலைகள் பழைய நினைவுகளைச் சுமந்து, அந்த கவலையில் தள்ளாடி துக்கத்தில் செல்வது போல் தோன்றியது - கிராமத்தின் வீடுகள் கூட அவற்றை நினைவில் வைத்திருப்பது போல் உணரும் அளவுக்கு, அவை ஆழமான நினைவுகள் போல் இருந்தன. சமந்தியின் வீட்டின், பின்னணியில், ஒரு பழைய மரப்பெட்டி இருந்தது. அது ஒரு அலமாரி அல்ல. பிணைச்சல்கள் [கீல்கள்] இல்லை, தாழ்ப்பாள் இல்லை. ஆனால் காலத்தால் பூட்டப்பட்ட ஒன்று. எல்லோராலும் அம்மாம்மா என்று அழைக்கப்படும் அவளுடைய பாட்டி, இளமையில் செல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். முன்னேஸ்வரம் கோயிலுக்குப் பின்னால் உள்ள ஒரு சிறிய தெருவில் அவள் பிறந்தாள், அங்கு பக்தியும் பசியும் பிரிக்க முடியாதவையாக அன்று இருந்தன. "செந்தூரி..." , அன்றிரவு சமந்தி தனது பாட்டி தன்னை அந்தப் பெயரில் தன்னை அழைப்பதைக் கேட்டாள். "இங்கே வா." அம்மாம்மா பெட்டியைத் திறந்தாள். பொதுவாக, அதில் பழைய புடவைகள் அல்லது சில சிறிய பொருட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் அதில் வேறு ஒன்று தான் இருந்தது. பாட்டி தன் பேத்திக்கு கிசுகிசுத்தாள்: "இதை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று சொன்னார்கள்." உள்ளே இருந்து, பாட்டி ஒரு பழைய காகிதத்தை வெளியே எடுத்தாள். எழுத்துக்கள் காலாவதியாகி மஞ்சள் நிறமாகிவிட்டன. அது தேவாரங்கள் கொண்ட ஒரு தொகுதி. சமந்தியின் [செந்தூரியின்] கைகள் நடுங்கின. “அம்மம்மா… இது…?” “நம்மது.” ஒரே வார்த்தை - ஆனால் அது இனம், மதம் மற்றும் மறக்கப்பட்ட பாரம்பரியத்தை உள்ளடக்கியது. "அம்மாம்மா, நாம் ஏன்... இப்படி இருந்தோம்?" சமந்தி [செந்தூரி] முழு வாக்கியம் முடிக்கவில்லை. அம்மாம்மா மெதுவாக சிரித்தாள்: “நாம் மாறல, பிள்ள. நம்மை மாற்றினாங்க.” அவள் விளக்கத் தொடங்கினாள்: அது கதை இல்லை. ஒரு சாட்சியம். ஒரு நாள், அனைவரும் வரவழைக்கப்பட்டனர். "இது ஒரு வேண்டுகோள் அல்ல. இது ஒரு உத்தரவு," என்று அவர்கள் கூறினர். - ஒரு கையில் வாள். மறு கையில் வேதங்கள். கோவிலின் மணி அன்றிலிருந்து ஒலிக்க வில்லை. யார் மறுத்தார்களோ, அவர்களுக்கு: அபராதம் வேலை இழப்பு உடல் தண்டனை அந்த நாளில் தான் செல்லம்மா, செல்லம்மா இல்லாமல் ஆனாள். “பெயர் மாற்றினாங்க. சடங்கு மாற்றினாங்க. கோயிலுக்குப் போன கால்களை தேவாலயத்துக்கு திருப்பினாங்க.” "ஆனால் இதயங்கள்?" என்று சமந்தி [செந்தூரி] கேட்டாள். அம்மாம்மா கண்களை மூடிக்கொண்டாள்: "அதை யாராலும் முழுமையாக மாற்ற முடியாது." பின்னர் அவள் பள்ளியைப் பற்றி பேசினாள்: பள்ளி முதலில் தமிழில் இருந்தது. ஒரு நாள், ஒரு ஆசிரியர் கூறினார்: "இனி தமிழ் இல்லை. சிங்களம் மட்டுமே." அந்த தலைமுறையிலிருந்து, எல்லாம் மாறியது. மொழி மாறியது, அடையாளம் மாறியது. சமந்தி [செந்தூரி] அம்மம்மாவின் மடியிலே தேவார காகிதத்தை வைத்தாள். அந்தக் கணத்தில அவளுக்கு ஆதன் நினைவுக்கு வந்தான். “இது காதல் அல்ல. இது மீட்பு.” அவன் முன்பு சொன்ன வார்த்தைகள் இப்போது அவளுக்குப் புரிந்தது. மறுநாள் மருத்துவமனையில், அவள் ஆதனைப் பார்த்தாள். அவள் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவன் புரிந்துகொண்டான். "நீ கண்டு பிடித்தாயா?" என்று அவன் கேட்டான். அவள் தலையசைத்தாள். "நீ எனக்குப் படித்துக் காட்டுவாயா?" அவன் சிரித்தான் "அன்று, இரண்டு பேர் ஒன்றாக வரவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு சகாப்தங்கள் ஒன்றாக வந்தன." நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 04 தொடரும் துளி/DROP: 2057 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33998384206476791/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 115 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 115 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" தீபவம்சம் 6 - 1 [1. சம்புத்தாவின் [sambuddha] பரிநிர்வாணத்திற்கு இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பியதஸ்ஸனா [Piyadassana / பியதஸ்ஸனா என்பது பாலி மொழியில் "அன்பானவர் அல்லது பார்ப்பதற்கு மகிழ்ச்சியானவர்" என்று பொருள்படும் சொல். இது அசோக மன்னருக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பட்டப்பெயர் ஆகும்] அரசராக முடிசூட்டப் பட்டார். மற்றும் மகாவம்சம் 5 - 21: வெவ்வேறு தாய்மார்களுக்குப் பிறந்த தனது தொண்ணூற்று ஒன்பது சகோதரர்களைக் கொன்றபோது, அவர் ஜம்புத் தீவு [Jambudlpa] அல்லது இந்தியா முழுவதிலும் பிரிக்கப்படாத இறையாண்மையை வென்றார். குருவின் [புத்தரின்] நிர்வாணத்திலிருந்து [இறப்பிலிருந்து] அசோகரின் முடிசூட்டு விழா இருநூற்று பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என்கிறது. அதாவது, புத்தர் இறந்த இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்ததாகக் கூறுகிறது. எனவே, இலங்கை நாளாகமம் படியே, புத்தரின் மரணம் கிமு 487 ஆம் ஆண்டில் (269+218 = 487) நடந்திருக்க வேண்டும். இது கிமு 544 ஆம் ஆண்டுடன் பொருந்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனவே, இது முரண்பட்ட தகவல்களைக் குறிக்கிறது? அதாவது, கி.மு 544 ஆம் ஆண்டு என்பது இலங்கை நாளாகமங்களில் கிடைக்கும் தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அசோக மன்னர் முடிசூட்டு விழாவிற்கான கி.மு 269 ஆம் ஆண்டு சந்திரகுப்தர் மற்றும் பிந்துசாரர் ஆகிய வரலாற்று ஆளுமைகளையும், இலங்கை நாளாகமங்களில் கிடைக்கும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டது. மேலும் இருநூற்று பதினெட்டு ஆண்டுகளின் கால இடைவெளி இலங்கை நாளாகமங்கள் இரண்டையும் [தீபவம்சம் & மகாவம்சம்]அடிப்படையாகக் கொண்டது, எனவே கி.மு 487 ஆம் ஆண்டு ஓரளவு இலங்கை நாளாகமங்களையும் ஓரளவு வெளிப்புற ஒத்திசைவையும் [synchronization] அடிப்படையாகக் கொண்டது என்று கருதலாம். புள்ளியிடப்பட்ட பதிவு என்று ஒரு பதிவு உள்ளது [There is a record called Dotted record / வரலாற்று ரீதியாக, "புள்ளியிடப்பட்ட பதிவு" என்பது சமந்தபாசாதிகா [Samantapāsādikā] பற்றிய பௌத்த விளக்கவுரையின் சீன மொழிபெயர்ப்பைக் குறிக்கிறது, புத்தரின் மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு வருடத்தையும் குறிக்கும் ஒரு புள்ளியுடன் இது கையாளப்பட்டுள்ளது.]. புத்தரின் சீடரான உபாலி [Buddha’s disciple Upali], புத்தரின் ஒவ்வொரு மரண ஆண்டு நிறைவிலும் ஒரு புள்ளியை வைக்கத் தொடங்கினார். அவர் இதை தனது மரணம் வரைத் தொடர்ந்தார். பின்னர் உபாலியின் சீடரான தசகர் [Upali’s disciple Dasaka] இதைத் தொடர்ந்தார். மேலும் இந்த பாரம்பரியம் ஒவ்வொரு சீடர்களுக்கு [disciple] ஊடாக தொடர்ந்தது. பின்னர் அது சீனாவில் உள்ள காண்டோவிற்கு [“Canto” = old name for Canton = today’s Guangzhou, China / குவாங்சௌ, (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ, சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும்.] கொண்டு செல்லப்பட்டது. இந்த மரபைப் பராமரித்த கடைசி நபர் சங்கபத்ரர் [Samghabhadra] ஆகும். இது கி.பி 489 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது, மேலும் அவர்கள் கி.பி 489 ஆம் ஆண்டில் 975 புள்ளிகளைக் கணக்கிட்டனர். இவ்வாறு 975 இலிருந்து 489 ஐக் கழித்தால், புத்தர் இறந்த ஆண்டாக கி.மு 486 ஐப் பெறுகிறோம், இது மேலே மதிப்பிடப்பட்ட கி.மு 487 க்கு மிக அருகில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. இது முற்றிலும் வெளிப்புற ஆதாரங்களின் அடிப்படையில் அல்லது சீன புள்ளியிடப்பட்ட பதிவின் அடிப்படையில் கணக்கிடப் பட்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் 975 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு ஒரு புள்ளியால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை சிலர் நம்ப மறுத்துவிட்டனர். மற்றவர்கள் அதை செல்லுபடியாகும் என்று கருதுகின்றனர். அதை நம்புவது அல்லது நம்பாதது தனிப்பட்ட கருத்தாகும். இந்திய தொல்பொருள் ஆணையரான சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் [சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 1814 – 28 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.], தனது "அசோகனின் கல்வெட்டுகள்" [“Inscriptions of Asoka”] என்ற புத்தகத்தில் புத்தரின் மரணம் கிமு 478 இல் நடந்திருக்கலாம் என்று மதிப்பிட்டார். இந்த அறிக்கை கி.பி 1879 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையை அடைந்தது. பின்னர் சர் பட்டம் பெற்ற திரு. பொன்னம்பலம் அருணாச்சலம் [Mr. Ponnampalam Arunachalam, later knighted], ஜனவரி 30, 1906 அன்று கொழும்பில் "சிலோன் வரலாற்றின் ஓவியங்கள்" [“Sketches of Ceylon History”] என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். சர் பொன்னம்பலம் அருணாச்சலம் அந்த சொற்பொழிவில், சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் மதிப்பிட்டபடி கிமு 478 புத்தர் இறந்த ஆண்டாகக் கூறினார், இதன் தொடர்பாக, மேலும் 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004.'' என்ற புத்தகத்தின் பக்கம் 9 இல் உள்ள அடிக்குறிப்பை பார்க்கவும் . அதே போல, The Cambridge History of India, Volume 1 (1922) என்ற புத்தகமும் புத்தர் கிமு 480 இன் சில ஆண்டுகளுக்குள் இறந்தார் என்ற பொதுவான ஒருமித்த கருத்து இருப்பதாகக் கூறுகிறது. Part: 115 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" Both the Dipavamsa 6 - 1 [1. Two hundred and eighteen years after the Parinibbāna of the Sambuddha Piyadassana was anointed king.] and the Mahavamsa 5 - 21 [He, when he had slain his 20 ninety-nine brothers born of different mothers, won the undivided sovereignty over all Jambudlpa. Be it known, 21 that two hundred and eighteen years had passed from the nibbana of the Master unto Asoka's consecration.] state that the coronation of Asoka took place two hundred and eighteen years after the death of the Buddha. Then the Buddha’s death should have taken place on the year, (269+218 = 487), 487 B.C. This does not tally with the year 544 B. C., indicating conflicting information. The year 544 B. C. is solely based on the information available in the Ceylonese chronicles. The year 269 B. C. for the King Asoka’s coronation is based on the historical personalities Chandragupta and Bindusara, and on the information available in the chronicles of Ceylon. The time interval of two hundred and eighteen years is based on both the Chronicles of Ceylon, and therefore the year 487 B. C. can be considered as partly based on the Chronicles of Ceylon and partly on the external synchronization. There is a record called Dotted record. Buddha’s disciple Upali commenced placing a dot on the anniversary of the Buddha’s death. He continued this year after year till his death. Then Upali’s disciple Dasaka continued this, and the tradition is continued year after and disciple after disciple. Then it was taken to Canto in China. The last one who maintained this tradition was monk Samghabhadra. This was continued till the year 489 A.D., and they counted 975 dots in the year 489 A.D. Thus deducting 489 from 975, we obtain 486 B.C. as the year of the Buddha’s death, very closer to the above evaluated year 487 B. C. This can be considered purely based on the external evidences or rather based on the Chinese Dotted record. Some refused to believe that each year is marked with a dot for such a long time of 975 years. Others consider it valid. It has become a matter personal preference to believe it or not. Sir Alexander Cunningham, the Archaeological Commissioner of India, estimated the death of the Buddha to be around 478 B.C. in his “Inscriptions of Asoka”. This report was published in the year 1879 A.D. This reached Ceylon at least in the turn of the twentieth century. Mr. Ponnampalam Arunachalam, later knighted, delivered a lecture titled “Sketches of Ceylon History” on January 30th, 1906 in Colombo. Sir Ponnampalam Arunachalam stated in that lecture that the year 478 B. C. as the year of Buddha’s death as estimated by Sir Alexander Cunningham, see the foot note on the page 9 of the Reference 'Sketches of Ceylon History by P. Arunachalam, 1906, AES Reprint 2004.' The book, The Cambridge History of India, Volume 1 (1922) also states that there is a general consensus that the Buddha died within a few years of 480 B. C. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 116 தொடரும் / Will follow துளி/DROP: 2058 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 115 https://www.facebook.com/groups/978753388866632/posts/33998749653106913/?
-
மூன்று கவிதைகள் / 26"
மூன்று கவிதைகள் / 26" புகைப்படக் கவிதை' பனி பொழியும் மாலை வேளையிலே பணி முடித்து எட்டிப் பார்க்கிறேன்! பகலோன் கதிரும் ஓய்ந்து விட்டது பஞ்சுபஞ்சாய் வான் கொட்டித் தீர்க்குது!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [வண்ணம், புன்னகை, கன்னம் & கண்ணீர்] வண்ணம் கொண்ட அழகு ஆடையிலே புன்னகை பொழியும் அணங்கே! கன்னம் சிவந்தது யாராலோ? கண்ணீர் ததும்பும் ஆனந்தம் இதுவோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................ 'நீயின்றி நானில்லை கண்ணே' நீயின்றி நானில்லை கண்ணே- உன் நிழலின்றி வாழ்வு ஏது மண்ணில்? மூச்சின்றி பிழைப்பில்லை பெண்ணே - என் கிழத்தியின்றி இயக்கம் எங்கே என்னில்? உயிரின்றி உடலில்லை நுண்ணிடையே - தேன் மொழியின்றி இன்பம் யாது உலகில்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2055 ["மூன்று கவிதைகள் / 26" https://www.facebook.com/groups/978753388866632/posts/33980369108278301/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 114 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 114 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" மேலே கூறிய சில உண்மைகளை கீழே கொஞ்சம் விபரமாகத் மீண்டும் தருகிறேன் மேலும் இலங்கை நாளாகமம்களில் மட்டுமே, புத்தர் இலங்கையை ஆசீர்வதிக்கவும் எதிர்காலத்தில் பௌத்தத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மூன்று முறை விஜயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், நவீன வரலாற்றாசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் (உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில்) பொதுவாக இந்த வருகைகளை சிங்கள பௌத்த இராச்சியத்திற்கு மத மற்றும் கலாச்சார சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்காக வரலாற்றாசிரியர்களால் உருவாக்கப்பட்ட குறியீட்டு அல்லது புராண அலங்காரங்களாகக் மட்டுமே [symbolic or legendary embellishments] கருதுகின்றனர். அது மட்டும் அல்ல, இந்த வருகைகளை உண்மையான வரலாற்று நிகழ்வுகளாக எந்த உறுதியான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகளும் எள்ளளவும் ஆதரிக்கவும் இல்லை இலங்கையின் வரலாற்றில், குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் இன மோதலின் போது, மதம் பெரும்பாலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இன மோதலின் மூல காரணங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன - பாகுபாடு, மொழிக் கொள்கை, அரசியல் ஓரங்கட்டல் மற்றும் அரசு ஆதரவுடன் வன்முறை [discrimination, language policy, political marginalization, and state-sponsored violence] ஆகும். மேலும் மத மற்றும் வரலாற்று விவரிப்புகள் [Religious and historical narratives] உண்மையில் தீவிரவாதக் குழுக்களும் அரசியல் தலைவர்களும் தங்கள் செயல்களை நியாயப்படுத்தவும் சிங்கள-பௌத்த தேசியவாதத்தைத் தூண்டவும் தவறாகப் பயன்படுத்தின என்பதே உண்மையாகும். இதனால், கிமு 544 தேதிக்கும் வன்முறைச் செயல்களுக்கும் இடையிலான நேரடி தொடர்பு ஒரு அடையாளமாக இருந்து இருக்கலாம் என்று எண்ணுகிறேன். மதிப்பிற்குரிய ஆனால் சில சமயங்களில் தேசியவாத தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எஸ். பரணவிதானா, மற்றும் நன்கு அறியப்பட்ட வரலாற்றாசிரியரான ஜி.சி. மெண்டிஸ், [Paranavitana and G.C. Mendis] இருவரும் தங்கள் படைப்புகளில் புத்தரின் மகாபரிநிர்வாணத்திற்கான பாரம்பரிய கி.மு 544 தேதியை ஆதரித்தனர். இந்த தேதி இலங்கையில் பின்பற்றப்படும் பண்டைய பௌத்த சகாப்த முறையிலிருந்து வருகிறது, ஆனால் நவீன சர்வதேச புலமை [but modern international scholarship generally places the Buddha’s passing around 400–480 B.C.] பொதுவாக புத்தரின் மறைவை கி.மு 400–480 இல் வைக்கிறது. இன்னும் விபரமாக அலசுவோமானால், இந்த தேதிகள், புத்தரின் மகாபரிநிர்வாணத்திலிருந்து அசோக மன்னனின் முடிசூட்டு விழா வரையிலான காலத்தை மையமாகக் கொண்டுள்ளது. மகாபரிநிர்வாணத்திலிருந்து அசோக மன்னனின் பட்டாபிஷேகம் வரை இருநூற்று பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என்று இலங்கை நாளாகமம் கூறுகிறது. மன்னர்கள் அசோகர், பிந்துசாரர் (அசோகரின் தந்தை) மற்றும் சந்திரகுப்தர் (பிந்துசாரரின் தந்தை) [The kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Bindusara’s father) ] ஆகியோர் இந்திய வரலாற்று ஆளுமைகள் தனித்துவமாக காணப்படுகிறது. முன்னைய காலத்தில், மகா அலெக்சாண்டர் [Alexander] இந்தியா மீது படையெடுத்தார், அது நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வு ஆகும். இதன் படி, சந்திரகுப்தர் மகா அலெக்சாண்டரின் மரணத்துடன் ஒத்திசைக்கப்படலாம் [Chandragupta could be synchronized with the death of Alexander the Great]. அதாவது, ஒரேகாலத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. மகா அலெக்சாண்டர் [Alexander the Great] கி.மு. 323 ஆம் ஆண்டு இறந்தார். இந்த செய்தி மன்னர் சந்திரகுப்தருக்கு நந்த வம்சத்தைத் தாக்க ஒரு உந்துதலை அளித்திருக்கும் [would have given an impetus to the King Chandragupta to attack the Nanda dynasty] எனக் கருதலாம். உதாரணமாக, தாக்குதலுக்குத் தயாராக சந்திரகுப்தர் சுமார் இரண்டு ஆண்டுகள் செலவிட்டிருந்தால், கி.மு 321 ஆம் ஆண்டில் அரியணை ஏறியிருக்கலாம். மேலும் இந்த ஆண்டு வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கரின் [Wilhelm Geiger] மகாவம்சத்தின் மொழிபெயர்ப்பில் அறிமுகப் பக்கம் XLVI இல் கொடுக்கப்பட்டுள்ளது. அசோகர், பிந்துசாரர் (அசோகரின் தந்தை) மற்றும் சந்திரகுப்தர் (அசோகரின் தாத்தா) [kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Asoka’s grandfather)] ஆகிய மன்னர்களின் ஆட்சிக்காலம் மகாவாசம், இந்திய மற்றும் பர்மிய [Mahavasa, Indian and Burmese] ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, மகாவம்சத்தில், மரியாதைக்குரிய இந்த ஒவ்வொரு மன்னர்களின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு, ஒவ்வொருவரும் 24, 28 & 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். எனவே இவற்றை அடிப்படையாகக் கொண்டு, மேலும் கி.மு 321 இல் சந்திரகுப்தரின் முடிசூட்டு விழாவின் அடிப்படையில், அசோகரின் முடிசூட்டு விழா கி.மு 321-24-28 = கி.மு 269 இல் நடந்திருக்க வேண்டும் எனலாம். [இங்கே 24 [சந்திரகுப்தர் (அசோகரின் தாத்தா)] & 28 [பிந்துசாரர் (அசோகரின் தந்தை)]]. Part: 114 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" This pivots on the time elapsed from the Buddha’s Mahaparinirvana to the consecration of the King Asoka. The Ceylon Chronicles state that two hundred and eighteen years passed since the Mahaparinirvana to the consecration of the King Asoka. The kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Bindusara’s father) are Indian historical personalities. That Alexander the Great invaded India and it is a well-documented historical event. Chandragupta could be synchronized with the death of Alexander the Great. Alexander the Great died on the year 323 B. C. and this news would have given an impetus to the King Chandragupta to attack the Nanda dynasty. If he had spent about two years preparing for the attack, then Chandragupta could have ascended the throne in the year 321 B. C. This is the year given in Wilhelm Geiger’s translation of the Mahavamsa in the introductory page XLVI. The length of the reigns of the kings Asoka, Bindusara (Asoka’s father) and Chandragupta (Asoka’s grandfather), are mentioned in Mahavasa, Indian and Burmese sources. For example in Mahavamsa it is stated as 24, 28 & 37 years after the coronation of the respected kings. Based on these as well as Based on the coronation of Chandragupta on the year 321 B.C, Asoka’s coronation should have taken place on, 321-24-28 = 269 B.C. [here 24 [Chandragupta (Asoka’s grandfather)] & 28 [Bindusara (Asoka’s father)]]. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 115 தொடரும் / Will follow துளி/DROP: 2056 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 114 https://www.facebook.com/groups/978753388866632/posts/33981025171546028/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 113 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 113 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" புத்தர் பிறந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் சித்தார்த்தா அல்லது சித்தார்த்தர் [Siddhartha]. அவரது தந்தை சுத்தோதனர் [Suddhodana], தாய் மாயா [Maya]. அவரது மகன் ராகுல் [Rahul] பிறந்தபோது, அவர் தனது வீட்டை விட்டு, சத்தியம் அல்லது ஞானத்தைத் தேடிப் வெளியேறினார். சித்தார்த்தர் பதினாறு வயதில் திருமணம் செய்து கொண்டார், இருபத்தி ஒன்பது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மன்னன். எனவே இவர் ஒரு இளவரசன். என்றாலும் சித்தார்த்தர் அரண்மனையின் எல்லா ஆடம்பர வசதிகளையும் விட்டுவிட்டு, ஒருபோதும் அந்த முன்னிய வாழ்க்கைக்கு திரும்பி வரக்கூடாது என்ற எண்ணத்துடன், வீடற்ற ஒரு வாழ்க்கைக்குச் [homeless life] சென்றார். இருப்பினும், டாக்டர் அம்பேத்கர் [Dr. Ambeddkar] தனது 'புத்தரும் அவரது அறமும்' [‘Buddha and his Dhamma’ ] என்ற புத்தகத்தில், அந்தக் குடும்பம் ஒரு அரச குடும்பம் அல்ல, மாறாக ஒரு பெரிய மன்னனின் கீழ் நாட்டை ஆளும் உன்னத குடும்பங்களில் ஒன்றாகும் என்று கூறுகிறார். அவர் முப்பத்தைந்து வயதில் ஞானம் பெற்று புத்தரானார். கௌதமர் [Gautama] என்பது அவரது வம்சம் ஆகும். எனவே அவர் கௌதம புத்தர் என்று இன்று அழைக்கப்படுகிறார். இவர் அடுத்த நாற்பத்தைந்து ஆண்டுகள் இந்தியாவின் மத்திய கங்கை சமவெளியைக் குறுக்கும் நெடுக்குமாக கடந்து பிரசங்கம் செய்து இறுதியில் இறந்தார். அதாவது எண்பது வயதில் அவர் மகாபரிநிர்வாணத்தை அடைந்தார். இலங்கை மற்றும் ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவு (Jambudipa / இந்தியா) ஆகிய நாடுகளின் முக்கியமான மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் தேதியைக் குறிக்கும் வகையில், தீபவம்சமும் மகாவம்சமும் புத்தர் இறந்த நாளைக் கருத்தில் எடுத்து , அது சார்ந்து காலங்களைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, கிருஸ்துக்கு முன் அல்லது கிருஸ்துக்கு பின் என குறிப்பிடுவது போல, இங்கு புத்தர் இறந்த காலத்தில் இருந்து ஆண்டுகளைக் கணக்கிடுகின்றன. எனவே, புத்தரின் மரணம் தற்போதைய காலகட்டத்துடன், அதாவது பொது சகாப்தம் அல்லது கிறிஸ்தவ சகாப்தத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் [Culavamsa] கிடைக்கும் தகவல்கள் புத்தர் இறந்த ஆண்டாக கிமு 544 ஐக் குறிக்கின்றன. மேலும் விஜயன் மற்றும் அவரது எழுநூறு தோழர்களின் புராண வருகை கி.மு. 544 ஆம் ஆண்டு, அதாவது புத்தர் இறந்த நாளில் நடந்தது எனவும் இலங்கை நாளாகமம்கள் [chronicles] கூறுகின்றன. இதன் படி, புராண விஜயன் இலங்கையில் கால் வைத்த நாளில் இருந்து காலத்தை கணிக்கிறது என்றும் கூறலாம்? தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற இலங்கை வரலாற்று நூல்களில் பல கட்டுக்கதைகள், அற்புத நிகழ்வுகள், அசாதாரண தற்செயல் நிகழ்வுகள், உயிரியல் ரீதியாக சாத்தியமற்ற பிறப்புகள் மற்றும் காற்றில் பறப்பது, பூமியதிர்ச்சிகளை தான் நினைத்தபடி ஏற்படுத்துதல், விருப்பப்படி கடுமையான குளிர் மற்றும் வெப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற மனித ரீதியாக சாத்தியமற்ற சாதனைகள் புதைத்தும் பரவியும் உள்ளன. இவை அனைத்தும், இந்த நாளாகமங்களில், வரலாற்றை அழகாக்க embellishment செய்ய உருவாக்கப்பட்டவை என்று பொதுவாக கூறுகிறார்கள். ஆனால் எது உண்மை வரலாறு, எது கற்பனை என்பதைக் தெளிவாக எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை. இதுதான் இதன் முக்கிய குறை ஆகும். ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உதாரணமாக புத்தரின் உண்மையான வரலாற்றை இந்தியாவின் வரலாற்று சான்றுகளுடன் அறிந்த ஒருவர், புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை தந்தது வெறும் அலங்காரங்கள் என்று அவர் கூறினால், முழு பிக்கு சகோதரத்துவமும் கோபத்தில் எழுந்து புத்தரின் கொள்கைகளை முற்றிலும் மீறி அல்லது தூக்கி எறிந்து பழிவாங்கக் கேட்கும் என்பது நாம் அனுபவப்பட்ட இனக்கலவரங்கள் எடுத்துக் கூறும் உண்மைகள் ஆகும். இவை ஒத்த சம்பவங்கள் கடந்த காலத்தில் இலங்கையில் பல முறை நடந்து உள்ளது. புத்த பிக்குகள் மற்றும் புத்த அறிவுஜீவிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுக ஆதரவுகளுடன், இலங்கை பாதுகாப்புப் படைகளால் தமிழர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் பெரும் பங்களித்தது எனலாம். அதாவது தமது முதல் பிரதிநிதியான புராண விஜயன் புத்தரின் மகாபரிநிர்வாண நாளில், புத்தரின் அனுசரணையுடன், இலங்கையில் புத்த மதத்தை வளர்த்து பாதுகாக்க, இலங்கைக்கு முதல் முதல் வந்ததாகவும், அங்கு அதற்கு முதல் எந்த மனித இனமும் இல்லை என்ற நம்பிக்கையும், தாமே நிலத்தின் முதல் குடி என்ற கண்மூடித்தனமான, வரலாற்று உண்மைக்கு எதிரான கருத்துக்களும் இவைக்கு காரணமாகும். மேலும் முன்னாள் தொல்பொருள் ஆணையர் எஸ். பரணவிதான மற்றும் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஜி.சி. மெண்டிஸ் [The former Archaeological Commissioner S. Paranavitana and the historian and the author G. C. Mendis] ஆகியோர் கி.மு. 544 ஆம் ஆண்டை புத்தரின் மகாபரிநிர்வாண ஆண்டாக பிடிவாதமாக கூறினர். அது மட்டும் அல்ல, இந்த நாளே, சிங்கள இனத்தின் முதல் பிரதிநிதி, புராண விஜயன் இலங்கைக்கு வந்த நாளாகவும் கருதினர். என்றாலும், தீபவம்சம், மற்றும் சூளவம்சம் அல்லது சூலவம்சம் போன்ற இலங்கை நாளாகமம் தவிர பிற மூலங்களிலிருந்து, குறிப்பாக புத்தர் பிறந்து, வளர்ந்து, இறந்த இந்தியா நாட்டு வரலாற்று மூலங்களிலிருந்து, கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பல அறிஞர்கள் கி.மு. 544 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டறிந்துள்ளனர். Part: 113 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" The name given to the Buddha when he was born is Siddhartha. His father is Suddhodana and the mother is Maya. He left his home when his son, Rahul, was born in search of truth or enlightenment. Siddhartha married when he was sixteen and left home when he was twenty nine years of age. Suddhodana, Siddhartha’s father, was a king, and Siddhartha left the comforts of palace to the homeless life: never to return back. Dr. Ambeddkar, however, says in his book ‘Buddha and his Dhamma’ that the family was not a royal family but one of the noble families which rule in turn the country, under a major king. He attained enlightenment at thirty five years of age and became the Buddha. Gautama is his clan, and he is known as Gautama Buddha. He crisscrossed the Central Gangetic Plain of India by walking for the next forty five years preaching, and died, attained Mahaparinirvana, at the age of eighty years. The Dipavamsa and the Mahavamsa refer to the day on which the Buddha died, as the frame of reference to date the reigns of important kings of Lanka and Jambudipa (India). The death of the Buddha, therefore, needs to be related to the current time frame: the Common Era or the Christian era. The information available in the Culavamsa leads to the year 544 B.C. as the year on which the death of Buddha occurred. The legendary arrival of Vijaya and his seven hundred companions happened on the year 544 B.C., on the day of the Mahaparinirvana: the day on which the Buddha died. There are many fables, miraculous happenings, extra ordinary coincidences, biologically impossible births, and humanly impossible feats such as flying through air and causing earth quakes, causing extreme cold and heat at will in these chronicles. An escape statement is always made to consider these as embellishments to adorn the real history. However, it is never specified what to discard and what the real events are. If one suggests that the Buddha’s three visits to Lanka are just embellishments, then the entire Bikkhu fraternity would rise in anger asking for retribution totally in violation of the Buddha’s tenets. It happened many times in Ceylon in the past. The year of the Mahaparinirvana of the Buddha contributed immensely to the criminal acts against the Tamils by the Sri Lanka security forces, with the overt and covert supports of the Buddhist monks and the Buddhist intelligentsia. The former Archaeological Commissioner S. Paranavitana and the historian and the author G. C. Mendis dogmatically claimed the year 544 B. C. as the year of the Mahaparinirvana of the Buddha. Many scholars have found the year 544 B. C. to be untenable based on the information available from the sources other than the Ceylon Chronicles: the Dipavamsa, the Mahavamsa, and the Culavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 114 தொடரும் / Will follow துளி/DROP: 2054 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 113 https://www.facebook.com/groups/978753388866632/posts/33961834450131767/?
-
சிறு கதை - 201 / “குனிய மறுத்த மனிதன்” [வளைவில்லா முதுகெலும்பு]
சிறு கதை - 201 / “குனிய மறுத்த மனிதன்” [வளைவில்லா முதுகெலும்பு] ஜெர்மனியின் அமைதியான புறநகர்ப் பகுதிகளில் ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர், அரவிந்தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் தனது வாழ்க்கையை அங்கே மெதுவாகக் ஒவ்வொரு செங்கலாகக், தனது விடா முயற்சியாலும் மனைவியின் ஊக்கத்தாலும் கட்டியெழுப்பினார். இலங்கையில் போரின் நிழலில் தனது வாலிப பருவத்தை கழித்த அவர், சில தசாப்தங்களுக்கு முன்பு தனது தாயகத்தை விட்டு வெளியேறி, நினைவாற்றல் மற்றும் உறுதியை மட்டுமே சுமந்து ஜெர்மனி வந்தார். ஜெர்மனியில், அவர் ஒரு சிறிய தொழிலைத் தொடங்கினார். அது பிரமாண்டமாக இல்லை, ஆனால் அது நேர்மையானது. அவருக்கு அன்பான மனைவி, ஒழுக்கமான குழந்தைகள் மற்றும் அமைதியான, பாதுகாப்பான வீடு இருந்தது. ஓய்வு நேரத்தில், அவர் கதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாறு, இன்றைய சமூக, அரசியல் நிலை, நம்பிக்கைகள் மற்றும் சீரழிவுகள் பற்றி தன் எண்ணங்களை எழுதினார். அவர் அவற்றை முகநூலிலும் மற்றும் சமூக தளங்களிலும் பதிவிட்டார் - புகழுக்காக அல்ல, ஆனால் தன் இனத்துடன், தன் நாட்டுடன், தன் மொழியுடன் ஒரு தொடர்புக்காக. ஜெர்மனியில் நாளடைவில் அவர் அமைதியையும் நிலைத்தன்மையையும் கண்டார். எழுத்தில் அவர் சுவாசத்தைக் கண்டார். தமிழ் புலம்பெயர்ந்தோர் அதைப் படித்தனர். அவர்கள் நேர்மையான மற்றும் ஊக்கப்படுத்தும் கருத்து தெரிவித்தனர். சிலர் தாங்கள் புதைத்து வைத்திருந்த உணர்வுகளுக்கு வார்த்தைகள் கொடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர். வேற்று வானம் வேர்களை மறைத்தாலும் அரவிந்தன் நெஞ்சிலோ மண்ணின் மணம்! எரிந்த சாம்பல் மண்ணில் புதைந்தாலும் பரிந்து பேனா என்றும் நீதிதேடும்! பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து வந்தாலும் ஆவலாய் மனம் அங்கேயே சுற்றித்திரியும்! வேரறுத்து பயமுறுத்தி நிலைகுலைக்கப் பார்த்தாலும் அறத்தின் நிழலில் அவன் ஆன்மா மீண்டெழும்! ஒரு நாள், அவரின் முகநூலில் ஒரு நண்பர் கோரிக்கை தோன்றியது. முகநூல் பெயர்: Malar Vimala.[“மலர் விமலா”] இணைக்கப்பட்ட செய்தி பின்வருமாறு இருந்தது: “உங்கள் கதைகளும் கவிதைகளும் மிகவும் நல்ல தரத்தில் உள்ளன. வாழ்த்துக்கள்!” அரவிந்தன் பணிவுடன் ஏற்றுக்கொண்டார். சக தமிழர்களின் ஊக்கம் எப்போதும் அவரது இதயத்தை வெப்பப்படுத்தியது, சந்தோசப்படுத்தியது. விரைவில், அவள் மற்றொரு செய்தியை அனுப்பினாள்: “நான் உங்கள் சுயவிவரத்தைப் பார்த்தேன். அது மிகவும், மிகவும் பாராட்டத்தக்கது. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, உங்களைமாதிரி ஒரு நண்பர் அடைந்ததற்கு” என அவள் அவருக்கு நன்றி தெரிவித்தார். மறுநாள், அவள் அழைத்தாள் - ஆடியோ மட்டுமே. அவள் மெதுவாகப் பேசினாள். அவள் ஒரு ஒற்றைத் தாய் என்று சொன்னாள். எட்டு வயது மகள். ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்கிறாள். வாழ்வுக்கு போராடுகிறாள். மகளுக்கு தரமான கல்வி கொடுக்க முடியாமல் திண்டாடுகிறாள் என சுருக்கமாக சொல்லிவிட்டு, “உங்களால் உதவ முடியுமா?” என்று அரவிந்தனிடம் கேட்டாள். அரவிந்தன் அமைதியாக பதிலளித்தார்: “நான் பேஸ்புக் மூலம் யாருக்கும் பணம் அனுப்புவதில்லை. யாருக்காவது உதவி தேவைப்பட்டால், நான் அவர்களை, அவர்களின் உண்மைத்தன்மையை முதலில் சரிபார்க்க வேண்டும். நான் கண்மூடித்தனமாக, அவர்களின் வேண்டுதலை ஆமோதிப்பதில்லை, அது உனக்கும் பொருந்தும். எனவே முதலில் உன்னைப்பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அனுப்பு. அதன் பின்பு நான் சொல்லுகிறேன் என்றார். அமைதி நிலவியது. அவள் ஒன்றும் பேசவில்லை. சில வினாடிகள் பின், “நான் பிறகு அழைக்கிறேன்,” என்று அவள் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். ஆனால், ஒரு மணி நேரம் கழித்து, முன்னறிவிப்பு இல்லாமல் ஒரு அழைப்பு வந்தது. அது எடுத்த பிறகு தான் அரவிந்தனுக்குத் தெரிய வந்தது அது ஒரு வீடியோ அழைப்பென்று. அவன் கையில் போனை வைப்பதற்கு முன்பே, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பே, உரையாடல் ஏதோ தொந்தரவாகவும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும் மாறியது. அவள் அதிர்ச்சியூட்டும் விதமாக நடந்து கொண்டாள், சம்மதம் இல்லாமல் எல்லைகளைக் கடந்து, அந்த தருணத்தை எதோ ஒன்றில் சிக்க வைக்க முயன்றாள். “இப்படியான நடவடிக்கை வேண்டாம்!” என்று அவன் கூர்மையாகச் தாழ்மையாகச் சொன்னான். அந்த திடீர் கோலத்தால், அவனிடம் ஏற்பட்ட தடுமாற்றத்தால், கொஞ்சம் அவனுடைய அடுத்த நடவடிக்கைகள் மெதுவாகின. ஆனால் அவன் குரல் பயப்படவில்லை. அது கோபமாக இருந்தது - கண்ணியத்திற்கு அவமானம் ஏற்பட்டதில் புண்பட்டது. அவன் அழைப்பைத் துண்டித்தான். முதலில் புகழ்பாடி பின் பாசம்காட்டி ஏமாறவைத்து மிரட்டும் தொழில் இது! முன்னுக்கு புன்னகை பின்னுக்கு பலவந்தம் நிழற்படம் என்றும் உண்மை சொல்லாது! திரைமறைவில் ஆடும் தீய எண்ணத்தால் மறைத்த முகத்தில் நாணயம் தெரியாது! அச்சப்படுத்தும் ஒரு அழுக்கு வியாபாரத்தால் தடுமாற வைப்பதே அவர்களின் இலக்கு! ஆனால் சில நொடிகள் கழித்து, ஒரு செய்தி: "என்னுடைய கோலத்தையும், நீ மறுபக்கம் இருப்பதையும் பதிவு செய்துள்ளேன். இப்போது நீ பணம் அனுப்ப வேண்டும். இல்லை எனறால், உன் மானம் போகும்" என்று அவளின் பொறி தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டது. "நான் அத்தகைய அசிங்கத்தின் ஒரு பகுதியாக என்றும் இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை. எனக்கு என்னை யார் என்று தெரியும் . என் நண்பர்களுக்கும் தெரியும். ஆகவே உன்மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. நான் பயப்படுவது உண்மைக்கும் நேர்மைக்கும் மட்டுமே. அந்த இரண்டும் உன்னிடம் இல்லை" என்று பதில் அனுப்பினான். அதன் பின் அவன் அவளின் "Malar Vimala" என்ற முகநூலை முடக்கி [blocked], முகநூல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார். ஆனால் சில நிமிடங்களுக்குள், அவரது "தந்தைகள் மகள்களைப் பாதுகாப்பது பற்றிய கவிதை"களில் ஒன்றின் கீழ் ஒரு கருத்து குறிப்பாக, "Hindu Sanjeeve" என்ற முகநூல் பெயரிடம் இருந்து வந்தது - அது ஒரு சிறிய வீடியோ கிளிப். "கவிதைக்குப் பின்னால் உள்ள உண்மையான முகத்தைப் பாருங்கள்." என்ற குறிப்புடன், அவளின் [Malar Vimala] ஒரு சிறிய திருத்தப்பட்ட வீடியோ அழைப்பின் பகுதி. அதைத் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தல்: "நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் இதை நாங்கள் பரப்புவோம்." இப்போது உண்மை தெளிவாகியது. இது போராடும் தாய் அல்ல. இது ஒரு பொறி. ஒரு டிஜிட்டல் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல். அவர் எந்தவித பீதியிலும் அதை நீக்க அவசரப்படவில்லை. அந்த தேவையும் அவருக்கு இருக்கவில்லை. வரம்பு மீறிய பொதுவெளி காட்சி, அவளே, தானே காட்டுவதே, மற்றும் படி அடுத்த பக்கம் அவர் , அந்த பொறியில், பார்வையாளராக அகப்பட்ட காட்சி மட்டுமே. அவர் அதை முகநூல் நிர்வாகத்திடம் அறிவித்தார். அவர்களும் ஏற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதிப்படுத்தினார். அதன் பின் அவர் அந்தக் கணக்கையும் ["Hindu Sanjeeve"] முடக்கினார். ஒரு கணம், வீடு மீண்டும் அமைதியாக இருந்தது. அவரது முகபாவத்தில் அவரது மனைவி ஏதோ ஒன்றைக் கவனித்தார். பயம் அல்ல - ஆனால் கனம். அவர் அவளிடம் எல்லாவற்றையும் கூறினார். முதல் செய்தியிலிருந்து கடைசி அச்சுறுத்தல் வரை. அவர் மறைக்கவில்லை. அவர் விவரங்களை மென்மையாக்கவில்லை. அவர் நடுங்கவில்லை. அவள் அனைத்தையும் அமைதியாக இருந்து கேட்டாள். அவர் முடித்ததும், "நீங்க எந்தத் தவறும் செய்யவில்லை" என்று மட்டுமே சொன்னாள். அந்த வாக்கியம் எந்த சட்டப்பூர்வ தற்காப்பையும் விட அதிக எடையை உயர்த்தியது, ஆறுதலை அவருக்கு கொடுத்தது. அன்று இரவு, மற்றொரு முகநூல் பெயர் அதே சிறிய வீடியோ துணுக்கை [கிளிப்பை] அனுப்ப முயன்றது. மற்றொரு அச்சுறுத்தல் முயற்சி. ஆனால் அவர் அதை அப்படியே விட்டுவிட்டார். அதை பொருட்படுத்தவே இல்லை. இப்போது அவருக்குப் புரிந்தது: இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அல்ல. இது ஒரு வலைப்பின்னல். சமூக அந்தஸ்து கொண்ட, பொதுவாக உழைக்கும் அல்லது செல்வந்த ஆண்களை குறிவைக்கும் கும்பல். நேரடியாக சம்பவத்தைப் பற்றி அல்ல - ஆனால் உண்மையைப் பற்றி அவர் தனது சமூக தளத்தில் எழுதினார். "ஒரு கண்ணாடியை அதன் மீது வீசப்பட்ட சேற்றால் அழுக்கடையச் செய்ய முடியாது. எறிந்த கைகள் மட்டுமே கறை படிந்திருக்கும். [“A mirror cannot be dirtied by the mud thrown at it. Only hands that throw remain stained.”]" அவதூறு துணுக்கை [கிளிப்பைப்] பார்த்த அதே நபர்களில் சிலர் இப்போது அவரது வார்த்தைகளையும் படித்திருக்கலாம்? சிலர் புரிந்துகொண்டு இருக்கலாம்? சிலர் அந்த சம்பவம் எதற்காக என்று அலசிக்கொண்டும் இருக்கலாம்? அந்த துணுக்கு வீடியோ [கிளிப்] தோன்றுவதை நிறுத்தியது. ஆனால், ஒருவேளை அவர்கள் வேறொரு பாதிக்கப்பட்டவரிடம் சென்றிருக்கலாம்? ஒருவேளை அவர்கள் வேறு இடங்களில் முயற்சித்திருக்கலாம்? ஒருவேளை அவர்கள் இணையத்தின் மறைக்கப்பட்ட மூலைகளில் தங்கள் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்திருக்கலாம்? ஒருவேளை இந்த துணுக்கு வீடியோ எங்கேயாவது இன்னும் முயற்சிக்கலாம்? யாருக்கும் தெரியாது ? ஆனால் அவர் வளையவில்லை. அவர் பணம் கொடுக்கவில்லை. அவர் மன்றாடவில்லை. அவர் தனது எழுத்துப் பணிகளை நீக்கவில்லை. அவர் தனது பக்கத்தை மூடவில்லை. அன்று மாலை அரவிந்தன் தனது சமூக தளத்தில்: “முகங்கள் போலியாக இருக்கக்கூடிய உலகில், இதயம் உண்மையாக இருக்கட்டும். நான் பொய்களால் சோதிக்கப்படலாம், ஆனால் நான் அவற்றுக்கு அடிபணிய மாட்டேன்.” என்று எழுதினார், ஒரு பாதிக்கப்பட்டவராக அல்ல. ஆனால் பயத்தை விட உண்மையைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதராக. அவர் தொடர்ந்து கதைகளை வெளியிட்டார். இறுதியில், அவரை வரையறுத்தது அவர் முன் வைக்கப்பட்ட பொறி அல்ல - மாறாக அதன் முன் மண்டியிட மறுப்பதுதான். நற்பெயரை ஒரு சொடுக்கில் தாக்கக்கூடிய உலகில், வலுவான பாதுகாப்பு என்பது சுத்தமான மனசாட்சி. அரவிந்தன் அன்று இரவு அவதூறிலிருந்து தப்பிய ஒரு மனிதனாக அல்ல - ஆனால் சோதிக்கப்படும்போது நிமிர்ந்து நின்ற ஒரு மனிதனாகத் தூங்கினார். சில நேரங்களில், அதுதான் மனிதத்தின் அமைதியான வடிவம். மிரட்டல்கள் மின்ன லெனத் தாக்கினாலும் பொய்கள் மேகங்க ளெனக் கூடினாலும் உண்மை மலையென நிமிர்ந்து நிற்கும்! வளைந்து கொடுக்கும் சிறுசெடி தப்பலாம் நிமிர்ந்து நிற்கும் மரமே வானைத் தொடும்! வளைவது சிலநேரம் பாதுகாப்பு ஆனாலும் நிமிர்ந்து நிற்பதே மனிதத்தின் உண்மை ஒளி! வேரறுக்கப் பார்த்தாலும் வீழ்வதில்லை அவன் அறத்தின் நிழலில் அரவிந்தன் மடிவதில்லை! நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்பாணம் துளி/DROP: 2051 [சிறு கதை - 201 / “குனிய மறுத்த மனிதன்” [வளைவில்லா முதுகெலும்பு] https://www.facebook.com/groups/978753388866632/posts/33939018299080049/?
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 112 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 112 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் தீபவம்சம் / மகாவம்சம் / இராசவலியத்தின்படி விஜயன் முதல் மகாசேனன் வரையிலான இலங்கையின் இறையாண்மைகள் [படம் இணைக்கப்பட்டுள்ளது] [இங்கு புத்தரின் மரணம் கி.மு. 483 என்று எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது கேள்விக்குரியது ஆகும். மேலும் விரிவான விவரங்களுக்கு புத்தரின் மரணம் குறித்த அத்தியாயத்தைப் பார்க்கவும்] குறிப்புகள்: தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி மன்னர்களின் வரிசை பொதுவாக முறையாக பின்பற்றப்படுகிறது. இராசவலியத்தின்படி உள்ள வரிசை மற்ற இரண்டு நாளாகமங்களில் உள்ள வரிசையுடன் பொருந்தவில்லை. இராசவலியத்தின்படி உள்ள மன்னர்களின் பெயர்களும் மற்ற இரண்டு நாளாகமங்களில் கொடுக்கப் பட்டுள்ளவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை. மகாசேனனுக்குப் பிறகு இராசவலியத்தில் உள்ள மன்னர்கள் இங்கு கருதப்படவில்லை. விஜயன், துட்டகாமினி, எல்லாளன், மகாசேனன் போன்ற ஆதிக்க ஆளுமைகள் தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆட்சிக் காலங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இராசவலிய வரிசை சரிசெய்யப் பட்டுள்ளது. இராசவலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில மன்னர்களின் பெயர்கள் எந்த நியாயமும் அல்லது தொடர்பும் இல்லாமல் இருக்கின்றன. என்றாலும் முடிந்த அளவு இராசவலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள வரிசையின் படி பின்பற்றப் பட்டுள்ளன. இராசவலியத்தில் பாண்டுகபய-1 சந்தேகத்திற்குரியது; அவரது ஆட்சியின் ஒரு பகுதி மற்ற இரண்டு நாளாகமங்களில் பதினேழு ஆண்டுகள் இடைக்காலத்தை ஏற்படுத்தி சரிசெய்யப்பட்டுள்ளது. கணதீசன் [Ganatissa] மற்றும் மூத்ததீசன் [Mutatissa] தீபவம்சத்திலும் மகாவம்சத்திலும் பாண்டுகபயன் மற்றும் தேவநம்பியதிசன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களுக்கு இடையில் உள்ளனர். எனவே தொடர்ச்சியை சரிபண்ணுவதற்காக, இராசவலியத்தில் கணதீசன் மற்றும் மூத்ததீசன் ஆகியோர் பாண்டுகபயனுக்கும் தேவநம்பியதிசன்க்கும் இடையில், ஒன்றாக, ஒரே வரிசையில், அதாவது வரிசை 7இல் இரண்டு மன்னர்களும் ஒருமிக்க வைக்கப்பட்டுள்ளது. இராசவலியத்தின் வாலகம்பாகு [Valagambahu] மற்ற இரண்டு நாளாகமங்களில் வட்டகமணியாக [Vattagamani] இருக்கவேண்டும்?. மேலும் மூன்று நாளாகமங்களையும் சரிபடுத்துவதால், வால்கம்பாகுவின் இடம் இராசவலியத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி இங்கு போடமுடியவில்லை. இந்தக் குறிப்பிட்டக் காலகட்டத்தில் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இவ்வளவு நீண்ட ஆட்சி இல்லாததால், மகாதெலிய திஸ்ஸனின் [Mahadeliya Tissa] ஐம்பது ஆண்டுகால ஆட்சி சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது?. வாலகம்பாகுவின் இரண்டு ஆட்சிகளுக்கு [முதல் & இறுதி] இடையில் ஐந்து தமிழர்கள் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இதை தமிழர் 1,2,3,4,5 என குறித்து சரிசெய்யப்பட்டுள்ளது. Part: 112 / APPENDIX – "Summary of Rajavaliya" Sovereigns of Ceylon from Vijaya to Mahasena as per Dipavamsa/ Mahavamsa / Rajavaliya [Image attached] [Buddha’s death is assumed as 483 B. C., though it is questionable. Refer the chapter on the death for the Buddha for further detail.] Notes: The order of the sovereigns is followed as given in the Dipavamsa and the Mahavamsa. The order as per the Rajavaliya doesn’t tally with the order in the other two chronicles. The names of the sovereigns as per Rajavaliya are also very different from that given in the other two chronicles. The kings in Rajavaliya after Mahasena is not considered. The Rajavaliya order is adjusted so that the dominant personalities like Vijaya, Dutthagamani, Elala, Mahasena etc align with the reigns as given in the Dipavamsa and the Mahavamsa. Some names of sovereigns as given in the Rajavaliya are given without any justification, but to the possible extent followed order as given in the Rajavaliya. Pandukabhaya-1 in Rajavaliya is suspect; part of his reign must be to allow for the interregnum of seventeen years in the other two chronicles. Ganatissa and Mutatissa are between the reigns of Pandukabhaya and Devanampiyatissa in the Dipavamsa and the Mahavamsa. Ganatissa and Mutatissa of the Rajavaliya are placed between Pandukabhaya and Devanampiyatissa. One row, row 7, is allowed for two kings; for Ganatissa and Mutatissa to keep the continuity to the possible extent. Valagambahu of the Rajavaliya should correspond to Vattagamani in the other two chronicles. The location for Valgambahu is not as given in the Rajavaliya. Mahadeliya Tissa’s reign of fifty years must be suspect as there is no such a long reign in the other two chronicles around this period. Five Tamils in between the two reigns of Valagambahu ruled for a total of fourteen years, marked as Tamil - 1.2.3,4,5 நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 113 தொடரும் / Will follow துளி/DROP: 2052 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 112 https://www.facebook.com/groups/978753388866632/posts/33939366805711865/?