Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "மூன்று கவிதைகள் / 24" 'ஏறு தழுவல்' ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு வீரம் கொண்ட காளை அடக்கி அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்! வியர்வையில் வீரம் ஒளிரும் போது மண்ணின் மணம் மார்பில் உறையும் தாயின் மரபு இரத்தத்தில் பேசும்! கோபமல்ல—கட்டுப்பாடே அவன் பலம் அடக்கமல்ல—அறிவே அவன் ஆயுதம்! உயிரை மதித்து காளையை அணைப்பவன் தமிழன்—வீரத்தின் மனித முகம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா கலந்து பேசி முடிவு எடுக்கலாமா? மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம் மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே? நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை இதயம் சொன்னால் அதுவே போதும்! அன்பு நிலைத்தால் நாள் இனிது புரிதல் இருந்தால் தடைகள் இல்லை! கண்கள் சந்தித்து உள்ளங்கள் இணைந்து காதல் மலர்ந்தால் அதுவே திருமணம் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................................................... “ஆடல் காணீரோ” சிந்துவெளி நாகரிகம் கண்ட இவன் குந்து வைத்து மாடி எழுப்பினான்! வெந்த மண்ணில் வடித்த பாவை விந்தை விளைக்கும் ஆடல் காணீரோ! அணங்கின் கைவழி நயனம் செல்க அழகுக் கண்வழி மனமும் போக அவள் மனம்வழி பாவம் சேர அம்மண சிலையின் கூத்து அறிவீரோ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2039 ["மூன்று கவிதைகள் / 24" https://www.facebook.com/groups/978753388866632/posts/33843158675332679/?
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 106 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 106 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் பக்கம் 21 இன் படி, பண்டுவாசுதேவனுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்; ஒரு மகன், அபயன் [Abhaya] மற்றும் ஒரு மகள், உமதுசீதா [Umatusita]. (இராசவலியத்தின் பண்டுவாசுதேவன் என்பது தீபவம்சத்தின் பண்டுவாசனுக்கும், மகாவம்சத்தின் பாண்டுவாசுதேவனுக்கும் சமம் / Panduvasudeva of the Rajavaliya is the equivalent of Panduvasa of the Dipavamsa and Panduvasudeva of the Mahavamsa) இது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முற்றிலும் மாறுபட்டது. அங்கே, பண்டுவாசனுக்கு [அல்லது பண்டுவாசுதேவனுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர், தீபவம்சத்தின் 10 – 2 முதல் 4 வரை, அதேபோல, மகாவம்சத்தின் 9 - 1 வரை பார்க்கவும். பதினொரு குழந்தைகளின் பெயர்களையும் தீபவம்சம் தந்தாலும், மகாவம்சம் மூத்த மகன் மற்றும் மகளின் பெயர்களை மட்டுமே தருகிறது. முன்பு மன்னன் விஜயன், குவேனிக்கு பொய் வாக்குறுதி அளித்தார் (அவர் சத்தியம் செய்து பொய் சொன்னார் பின் அந்த வாக்குறுதியை மீறினார்), இதன் விளைவாக, மன்னன் பண்டுவாசுதேவன் அதன் விளைவுகளை அனுபவித்து, அதனால், பண்டுவாசுதேவன் ஒரு தொந்தரவான கனவு கண்டான். அது அவனை மிகவும் பாதித்தது. அதனால், அவன் மயக்கமடைந்து எழுந்திருக்க முடியாமல் போய், அதன் பின், மீண்டும் எழுந்து வந்ததாக ஒரு நீண்ட கதை உள்ளது. இந்தக் கதை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் காணப்படவில்லை. அவன் சுயநினைவுக்கு வந்து பின்னர் முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு இறந்தான். மற்ற இரண்டு நாளாகமங்களின்படி பண்டுவாசுதேவன் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். பண்டுவாசுதேவனின் சகோதரி தனது தாய் மாமன்களில் ஒருவரின் மகனுடன் ஒன்றாக வாழ்ந்து, பண்டுகாபயன் [Pandukabhaya] என்ற மகனைப் பெற்றெடுத்தார். அவன் தனது ஒன்பது தாய் மாமன்களைக் கொன்று முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். தனது மகனுக்கும், அவன் பண்டுகாபயன் என்றே பெயரிடப்பட்டு, அவன் பின் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் ஒரே ஒரு பண்டுகாபயன் மட்டுமே உள்ளான், மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனது மகன் கணதிஸ்ஸ (Ganatissa) நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இந்த கணதீசன் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. அவனது மகன் மூத்ததீசன் [Mutatissa] அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் முன்போலவே, மூத்ததீசன் பதிவு செய்யப்படவில்லை. மற்ற இரண்டு நாளாகமங்களிலும் காணப்பட்ட மன்னன் மூத்தசிவன் [king Mutasiva] இராசவலியாவில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளார்; ஏனெனில் அந்தப் பெயர் தெளிவான சைவ தமிழ்ப் பெயராக இருப்பதாலோ என்று எண்ணத் தோன்றுகிறது?. விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையிலான ஆட்சிக்காலம், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படியும் இருநூற்று முப்பத்தாறு ஆண்டுகள் ஆகும், அதே நேரத்தில் விஜயன் முதல் தேவநம்பியதீசன் வரையிலான ஆட்சிக்காலம், இராசவலியாவில் இருநூற்று தொண்ணூற்று இரண்டு ஆண்டுகள் ஆகும்; ஐம்பத்தாறு ஆண்டுகள் வித்தியாசம். இப்படியானவையே, இந்த நாளாகமங்களின் நம்பகத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது எனலாம். பக்கம் 22 இல், முற்காலத்தில் தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் இல்லை; ஆனால் ராவணனின் நகரம் அங்கே நின்றது, அவனது துன்மார்க்கத்தால், அவனது கோட்டை, 25 அரண்மனைகள் மற்றும் 400,000 தெருக்கள் அனைத்தும் கடலால் மூழ்கடிக்கப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரி [காப் கொமரின் / cape comorin] அல்லது குமரி முனை கடலால் சூழப்பட்டது என்ற தமிழர்களின் நீண்டகால உணர்வை இராசவலிய வெளிப்படுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது [Rajavaliya expresses the long cherished sentiment of the Tamils that the land to the south of Cape Comorin was engulfed by sea in the past]. தூத்துக்குடி [Thoothukudi அல்லது Tuticorin], குமரி முனையில் இருந்து ராமேஸ்வரம் வரை கடற்கரையோரமாக பாதி தூரத்தில் உள்ளது. மூத்ததீஸ்ஸனின் மகன் தேவநம்பியதீசன் [Devenipetissa, son of Mutatissa], மூத்ததீஸ்ஸன் இறந்தபோது ஆட்சியை ஏற்றான். தேவநம்பியதீசன், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவின் மன்னன் [King Asoka of Jambudvipa] அசோகனின் நண்பன் என்று கூறப்படுகிறது. அசோகன், தேவநம்பியதீசன் மற்றும் நிக்ரோதா [Nigrodha] ஆகியோர் முந்தைய பிறவியில் சகோதரர்கள் என்று கூறுகிறது. மனித வரலாற்றில் முந்தைய பிறவி பற்றிய எதுவும் அபத்தமானது. இராசவலியவின் முந்தைய பிறவி பற்றிய கதை மகாவம்சத்தில் உள்ளதை விட சற்று வித்தியாசமானது. மிஹிந்து (Mihindu / இது மகிந்தாவைக் / Mahinda குறிக்கிறது.) இலங்கைக்கு பறந்து வந்தார். போதி மரக் கிளை தானாகவே துண்டிக்கப்பட்டு, தானாகவே பறந்து இலங்கைக்கு வந்தது. மற்ற இரண்டு நாளாகமங்களில் சங்கமித்தா மூலம் கப்பலில் கொண்டுவரப்பட்டது. தேவநம்பியதீசன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். இராசவலியத்தின்படி மிஹிந்து (மகிந்தா) பதினெட்டு வயதில் புத்த குருவாக பதவியளிக்கப் பட்டார். ஆனால் மற்ற இரண்டு நாளாகமங்களின்படி மகிந்தா இருபது வயதில் புத்த குருவாக தீட்சை அளிக்கப்படடார் . அப்பொழுது சங்கமித்தாவுக்கு பதினெட்டு வயது. எனவே அவள் வயது குறைந்தவள் என்று கருதப்பட்டதால் அவளுக்கு பிக்குணியாக தீட்சை அளிப்பது ஒத்திவைக்கப்பட்டது. Part: 106 / APPENDIX – "Summary of Rajavaliya" As per page 21, Panduvasudeva had two children; a son, Abhaya and a daughter, Umatusita. (Panduvasudeva of the Rajavaliya is the equivalent of Panduvasa of the Dipavamsa and Panduvasudeva of the Mahavamsa) This is in sharp contrast with the other two chronicles. Panduvasa had ten sons and one daughter, 10 – 2 to 4, of the Dipavamsa and 9 - 1 of the Mahavamsa. The Dipavamsa gives all the names of the eleven children, but the Mahavamsa gives the names of only the eldest son and the daughter. There is a long story about Panduvasudeva passing into unconsciousness and recovery due to the broken promises to Kuveni by Vijaya. This is story is not found in the other two chronicles. He came to consciousness and later died after the rule of thirty-two years. Panduvasudeva ruled for thirty years as per the other two chronicles. Panduvasudeva’s sister lived with a son of one of her maternal uncles and gave birth to a son, named Pandukabhaya. He killed his nine maternal uncles and ruled for thirty years. His son is also named Pandukabhaya and ruled seventy years. There is only one Pandukabhaya in the other two chronicles, and he ruled for seventy years. His son Ganatissa ruled for forty years. This Ganatissa is not recorded in the other two chronicles. His son Mutatissa reigned for sixty years. Mutatissa is also not recorded in the other two chronicles. The king Mutasiva in the other two chronicles is completely erased in the Rajavalia; must be because the name is a clear Tamil name. The length of reigns from Vijaya to the start of the Devanampiya Tissa is two hundred and thirty six years as per both the Dipavamsa and the Mahavamsa, where as the length of reigns from Vijaya to the start of Devenipetissa is two hundred and ninety two years; a difference of fifty six years. This is the trustworthiness of these chronicles. It is stated in the page 22 that there was no sea between Tuttukudi and Lanka, the city of Ravana was with so many streets, palaces and fortress and all were overwhelmed by the sea because of the wickedness of Ravana. It is interesting to note that the Rajavaliya expresses the long cherished sentiment of the Tamils that the land to the south of Cape Comorin was engulfed by sea in the past. Tuttukudi is about half way from Cape Comorin to Rameswaram along the coast. This aspect is addressed elsewhere. Devenipetissa, son of Mutatissa, reigned when Mutatissa died. Devenipetissa is claimed to be friend of the King Asoka of Jambudvipa. Asoka, Devenipetissa and Nigrodha were brothers in the previous birth. Anything about previous birth in the human history is absurd. The story about their previous birth is somewhat different from that in the Mahavamsa. Mihindu (Mahinda) came to Lanka by flying. Bo tree branch severed on its own and came to Lanka flying, not by Samghamitta by ship as in the other two chronicles. Devenipetissa ruled for forty years. Mihindu (Mahinda) obtained ordination at eighteen years of age as per the Rajavaliya, but Mahinda’s ordination took place when he was twenty years of age as per the other two chronicles. Samghamitta was eighteen years of age and her ordination was postponed as she was considered underage. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 107 தொடரும் / Will follow துளி/DROP: 2040 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 106 https://www.facebook.com/groups/978753388866632/posts/33843210578660822/?
  3. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 105 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 105 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் புத்தர் தனது மரணப் படுக்கையில், பக்கம் 17 இல், 'எனது மதம் ஐயாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்கு உயிர்ச்சக்தி கொண்டது' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. 1938 இல் மாநில சபை [State Council] விவாதம் ஒன்றில், அப்போது விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்க [D. S. Senanayake] இதை மேற்கோள் காட்டி, 'நாங்கள் ஒரே இரத்தம் ஒரே தேசம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். புத்தர் தனது மதம் ஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறினார். அதாவது, மதத்தின் பாதுகாவலர்களாகிய நாமும் நீண்ட காலம் நீடிப்போம்' [’ We are one blood and one nation. We are chosen people. The Buddha said that his religion would last for five thousand five hundred years. That means that we, as custodians of religion shall last as long’ ] என்று கூறினார். எவராவது தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று கூறினாலும், அப்படி கூறுபவர்கள் இயல்பிலேயே பௌத்தர் அல்ல என்பதே உண்மை. ஏனென்றால், புத்தர் இந்த வகையான தன்னலம் கொண்ட மனநிலையை ஒருபோதும் மன்னித்திருக்க மாட்டார். அவரது தத்துவம் உலகளாவியது [The Buddha would never have condoned this sort of sick mindedness. His philosophy is universal.]. உள்ளூர் மனிதரல்லாத, ஆனால் பெண்ணான குவேனிக்கு [Kuveni, a local non-human lady] மூன்று மார்பகங்கள் இருந்தன, விஜயன் இலங்கையில் தரையிறங்கிய போது, அவனைக் கண்டதும், அவளுடைய நடு மார்பகம் மறைந்துவிட்டன. அப்போது அவள் உடனே தன் கணவர் வந்திருப்பதை அறிந்தாள். ஒரு நாய்க் குட்டியின் வடிவத்தில் வந்து விஜயனின் கால்களை முத்தமிட்டு வெளியேறினாள். எனவே, நாய்களை வீட்டு பிராணியாக வளர்க்கும் மனிதர்கள் அங்கு இருக்கலாம் என்று நினைத்து விஜயன் தனது தோழர்களை ஒவ்வொருவராக நாயைப் பின்தொடர அனுப்பினான். ஆனால், குவேனி அவர்கள் அனைவரையும் பிடித்து ஒரு குளத்தில் மறைத்து வைத்தாள். இதனால், விஜயன் அங்கு வந்து என்ன நடந்தது என்பதைக் கண்டு பிடித்து, அதனால், அவளைக் கொன்று விடுவதாக மிரட்டினான். ஆனால், விஜயன் அவளை மணந்து கொள்ள வேண்டும், அவளை மட்டுமே தனது ராணி - மனைவியாக [queen-consort / பட்டத்து ராணியாக] ஆக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் அனைவரையும் விடுவிப்பதாக குவேனி சொன்னாள். எனவே, விஜயன் குவேனிக்கு, தனக்கு வேறு யாரும் ராணி - மனைவியாக இருக்க மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து திருமணம் செய்து கொண்டான். மேலும் திருமணத்திற்காக கூடியிருந்த தனது சொந்த மக்களைக் கொல்லவும் விஜயனுக்கு குவேனி கைமாறாக உதவினார். கொல்லப்பட்ட உள்ளூர்வாசிகளின் இரத்தம் வெள்ளமாக அங்கு ஓடியது!. எல்லா வகையான தீய செயல்களையும் செய்த விஜயன், எப்படி தேவர்களின் நகரத்தில், ஒரு இடத்தைப் பிடித்தார்? விஜயன் தனது வாக்குறுதியை மீறி, பாண்டிய மன்னனின் மகளை, அரசகுமாரியை, மணந்தான். அவனது எழுநூறு தோழர்களுக்கா, பாண்டிய இராச்சியத்தில் [Pandi kingdom] இருந்தே மணமகள்களையும் எடுப்பித்தான். இதனால் கோபம் கொண்ட குவேனி விஜயனைக் கொல்ல முயன்றாள். ஆனால் புத்தரின் கட்டளைப்படி, கடவுள்களின் மறைமுக உதவியுடன், குவேனி கல்லாக மாற்றப்பட்டாள். அப்படி என்றால், புத்தர் எப்படிப்பட்ட ஞானத்தைப் பெற்றார்? எனக்குப் புரியவில்லை? இருப்பினும், மகாவம்சம், 7-64 இன் படி குவேனி அவளுடைய சொந்த மக்களால் கொல்லப்பட்டாள் என்று பதியப்பட்டு உள்ளது. என்றாலும் குவேனியின் நிகழ்வுகள் தீபவம்சத்தில் விவரிக்கப்படவில்லை. விஜயனுக்கு பாண்டிய மன்னனின் மகளிடமிருந்து சந்ததி கிடைக்கவில்லை. முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு அவன் இறந்து, தெய்வங்களின் நகரத்தில் ஒரு இடத்தைப் பெற்றான். விஜயன் சொந்த நாட்டிலும், இடையில் தங்கிய நாடுகளிலும் எல்லா வகையான தீய செயல்களையும் செய்தான். தன் முதல் இலங்கை மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு தான் அளித்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மீறியது மட்டும் அல்ல, தன் முதல் இலங்கை மனைவியையும் கல்லாக்கினான். இந்த புண்ணிய செயல்களுக்காக அவனுக்கு தெய்வங்களின் நகரத்தில் ஒரு இடம் வழங்கப்பட்டது! இதை யாராவது நம்பகமானதாகக் கருதுவார்களா? மக்கள், மந்திரி உபதிசனை [minister Upatissa] மன்னனாகத் தேர்ந்தெடுத்தனர். உபதிசனின் ஆட்சியின் காலம் எவ்வளவு காலம் என்று குறிப்பிடப்படவில்லை. அத்துடன், உபதிசனின் ஆட்சி மற்ற இரண்டு நாளாகமங்களிலும் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையில் விஜயனின் சகோதரன் சுமித்தின் [Sumit] மகன் முப்பத்திரண்டு அமைச்சர்களுடன் இலங்கைக்கு வந்தான். மகாவம்சத்தின்படி இளைய மகன் வந்தான், அவர்கள் அழைப்பின் பேரில் வந்தார்களா அல்லது வேறு வழியில் வந்தார்களா என்பது தெளிவாகத் இங்கு தெரியவில்லை? ஆட்சி செய்த மன்னன் உபதிசன், சுமித்தின் மகனை, பண்டுவசுதேவன் [Panduvasudeva] என்ற பெயருடன் அரசனாக்கினான். புத்தரின் தந்தையான சுத்தோதனாக்கு (Suddhodana) இராசவலியத்தின் படி இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர்; புஷ்போதனா [Pushpodana] மற்றும் அமிதோதனா [Amitodana]. அமிதோதனா இளைய சகோதரர் ஆகும். அவருக்கு ஆறு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தனர். இந்த இளவரசி தற்செயலாக முப்பத்திரண்டு பெண் உதவியாளர்களுடன் இலங்கைக்கு வந்தாள். அவள் மன்னர் பண்டுவாசுதேவனின் ராணி - மனைவியாக [queen-consort] ஆக்கப்பட்டாள். பண்டுவாசுதேவனுடன் வந்த முப்பத்திரண்டு அமைச்சர்கள், வழக்கம் போல், ராணியுடன் வந்த முப்பத்திரண்டு பெண் உதவியாளர்களை மணந்தனர். ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாக இது கூறப்படுகிறது. அதன் பின், ராணியின் ஆறு மூத்த சகோதரர்களும் இலங்கைக்கு வந்து இலங்கையில் நிரந்தரமாக தங்கினர். விஜயனின் குலத்துடன் புத்தரின் குலமும் ஒன்றிணைந்து இலங்கை மக்கள் தொகை பெருகியது என்பதை வலியுறுத்துவதற்காகவே இந்த நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதன் உண்மைத் தன்மை ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. விஜயனின் எழுநூறு தோழர்களும் மேற்கண்ட முப்பத்திரண்டு அமைச்சர்களும் எந்த தடயமும் இல்லாமல் நாளாகமம்களின் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறார்கள். மகாவம்சம், 8-18 இன் படி அமிதோதனாவுக்கு பண்டு [Pandu] என்ற மகன் இருந்தான், மேலும் அவனுக்கு ஏழு இளவரசர்களும் ஒரு இளவரசியும் இருந்தனர். எனவே இந்த இளவரசி அமிதோதனாவின் பேத்தி ஆகும். இருப்பினும், இராசவலியத்தில் உள்ள இளவரசி அமிதோதனாவின் மகள் ஆகும். இராசவலியத்தில் மகன் பண்டுவைக் காணவில்லை; அதாவது ஒரு தலைமுறையைக் காணவில்லை. மகாவம்சத்தின் படி, பண்டுவுக்கு ஏழு மகன்கள் இருந்தனர், அவர்களில் ஆறு பேர் 9-6 இன் படி இலங்கைக்கு வந்தனர், ஆனால் இராசவலியத்தின் படி, அமிதோதனாவுக்கு ஆறு மகன்கள் இருந்தனர், ஆறு பேரும் இலங்கைக்கு வந்தனர். மகன்களின் பெயர்களும் சரியாகப் பொருந்தவில்லை. இப்படி பல வேறுபாடுகள் அவைகளுக் கிடையில் காணப் படுகின்றன. Part: 105 / APPENDIX – "Summary of Rajavaliya" The Buddha is said to have made a statement on his deathbed, page 17, ‘My religion has such vitality that it will endure for the space of five thousand years’. D. S. Senanayake, then the Minister of Agriculture in the State Council quoted this in the State Council debate in 1938, saying, quote’ We are one blood and one nation. We are chosen people. The Buddha said that his religion would last for five thousand five hundred years. That means that we, as custodians of religion shall last as long’ unquote. Whoever claim that they are chosen people, they are un-Buddhist in nature. The Buddha would never have condoned this sort of sick mindedness. His philosophy is universal. Kuveni, a local non-human lady, had three breasts, and her middle breasts disappeared when Vijaya landed in Lanka. She knew then that her husband had arrived, and came in the form of a bitch dog and kissed Vijaya’s feet and left. Vijaya sent his companions, one by one, to follow the dog thinking that there could be humans keeping dog. Kuveni captured all of them and hid all in a pond. Vijaya came and found out what happened and threatened to kill her. She said that she would release all of them on conditions that ‘Vijaya should marry her and make her only his queen-consort’. Vijaya promised and married Kuveni saying that he would not have anyone else as his queen-consort. Kuveni also helped Vijaya to kill her own people who had assembled for a marriage. There was a deluge of blood of the killed local inhabitants. Vijaya reneged on his promise, and married a daughter of Pandi king. Partners for his seven hundred companions too came from Pandi kingdom. Kuveni tried to kill Vijaya, but Kuveni was turned into a stone with the tacit help of the gods on the command of the Buddha. What kind of enlightenment he attained! Kuveni was killed by her own people as per the Mahavamsa, 7-64. Kuveni episode is not at all narrated in the Dipavamsa. Vijaya had no offspring from the daughter of Pandi king, and died after the reign of thirty-eight years. He obtained a place in the city of the gods. Vijaya did all kind of evil things, left his wife and kids and broke his promise to the first wife. He was rewarded a place in the city of gods for these meritorious work! Would anyone consider this trustworthy? People elected the minister Upatissa as the king. The length of Upatissa’s rule is not given. Upatissa’s rule is not mentioned in the other two chronicles. In the meantime the son of the Vijaya’s brother Sumit came to Lanka with thirty-two ministers. The youngest son came as per the Mahavamsa, and it is not clarified whether they came on an invitation or otherwise. The reigning king made the newly arrived son of Sumit the king with the name Panduvasudeva. Suddodana, the Buddha’s father, had two younger brothers as per Rajavaliya; Pushpodana and Amitodana. Amitodana is the younger brother, and he had six princes and one princess. This princess came to Lanka coincidentally with thirty-two female attendants. She was made the queen-consort of the King Panduvasudeva. The thirty-two ministers who came with Panduvasudeva were married to the thirty-two female attendants who came with the queen, as usual, a happy coincidence. The six elder brothers of the queen also came to Lanka and took abode in Lanka. It is to emphasize that Buddha’s clan populated Lanka along with that of Vijaya’s. Vijaya’s seven hundred companions and the above thirty-two ministers paled into oblivion without any trace. Amitodana had a son Pandu, as per the Mahavamsa, 8-18, and he had seven princes and one princess. This princess is therefore the granddaughter of Amitodana. However, the princess in the Rajavaliya is the daughter of Amitodana. The son Pandu is missing in the Rajavaliya; a generation is missing. Pandu had seven sons, and six of them came to Lanka as per the Mahavamsa, 9-6, but as per Rajavaliya, Amitodana had six sons and all six came to Lanka. The names of the sons are also not tallying properly. The children or grand children of Amitodana must be got up things to have such a generational mismatch. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 106 தொடரும் / Will follow பகுதி Part: 105 https://www.facebook.com/groups/978753388866632/posts/33828375633477650/?
  4. சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3 ஒரு முறை, அவன் அவள் முகத்தைப் பார்த்து சொன்னான்: “இன்றைக்கு எல்லாருக்கும் காதல் வேணும். ஆனா அதை நிரந்தரமாக்க யாருக்கும் பொறுமை இல்லை.” “சங்கக்காலத்துல காதலர்கள் ‘உறுதி’யை வாக்கியமாக எதிர்பார்க்கல. நடத்தையில்தான் பார்த்தாங்க.” அவன் நினைவில் ஒரு வரி எழுந்தது: “அறம் இனிது ஆயினும் காதல் இனிது.” அதாவது— அறம் உயர்ந்தது. ஆனால் மனம் இணையும் காதல் அதையும் தாண்டி இனிமை தரும். “அறம் காக்கணும்னு சொல்லி காதலை கொல்லல. காதல் காக்கணும்னு சொல்லி அறத்தை மறக்கல.” அவள் மெதுவாகச் சொன்னாள்: “நீ சொல்றதெல்லாம் அழகா இருக்கு. ஆனா இன்றைக்கு—” அவள் வாக்கியத்தை முடிக்கவில்லை. அந்த சொல்லப்படாத வார்த்தை யாழினியனின் நெஞ்சில் கேள்வியாக நின்றது. அவன் அவள் தோளருகே சற்றே நகர்ந்து அமர்ந்தான். “எனக்குத் தெரியல நாளை என்ன ஆகும்னு,” என்றான். “ஆனா இன்னைக்கு நீ இங்கே இருக்கிறதுல நான் உண்மை.” அவன் அவளை நீண்ட நேரம் பார்த்தான். அவள் எதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள். 2025 ஆம் ஆண்டு இறுதி நாளில், மத்திய லண்டன் ஒரு மென்மையான மழையில் நனைந்து கொண்டிருந்தது. குளிர் கடுமையாக இல்லை; ஆனால் காற்றில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. புத்தாண்டு—2026—பிறக்க இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே. இரவு பன்னிரண்டு மணிக்கு, தேம்ஸ் நதிக்கரையிலும் லண்டன் ஐயின் [Thames River & London Eye] அருகிலும் வானவேடிக்கை வெடிக்கப் போகிறது என்று நகரமே அறிந்திருந்தது. வழக்கமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் அந்த இடத்திற்கு அவர்கள் போகாமல், சனநெரிசல் இல்லாமல், சத்தமில்லாமல், நீரின் ஓசையோடு புத்தாண்டை வரவேற்க விரும்பி, வேறு ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள்— தேம்ஸ் நதியில் ஒரு படகுச் சவாரி. படகு மெதுவாக நகர்ந்தது. விளக்குகளின் பிரதிபலிப்பு நீரில் குலுங்கியது. மழைத் துளிகள் தேம்ஸுடன் கலந்தன; அவள் மூச்சு அவன் அருகில் கலந்தது. அவள் மெதுவாகக் கேட்டாள்: “நாம் இப்படியே இருக்கலாமா?” சிறிது இடைவெளியின் பின் மீண்டும் கேட்டாள்: “ஒருவரை ஒருவர் மாற்ற முயலாமல்…” அவன் பதில் சொல்லவில்லை. தலையசைத்தான். அந்த மௌனம் தான் அவன் சம்மதம். அவன் அவள் நெற்றியில் மென்மையாகத் தொட்டு நின்றான். அது உரிமை அல்ல. அது உறுதி. பன்னிரண்டு மணி அடித்தது. வானம் ஒளியால் பிளந்தது. லண்டன் ஐ [London Eye] சுற்றிக்கொண்டே இருந்தது— ஆனால் அவனுக்கு உலகமே நின்றுவிட்டது போல இருந்தது. 2026 தொடங்கியது. புத்தாண்டு விடியலில், அவள் அவன் தோளில் சாய்ந்தபடி சொன்னாள்: “அடுத்த காதலர் தினத்தில்…” சிறிது தயக்கம்.“எமது நட்பின் முதல் ஆண்டு நினைவில் … நம் நண்பர்கள் முன்னாடி … நமது காதலை அதிகாரப்பூர்வமாக்கலாமா?” அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. கண்கள் மட்டும் பதில் சொன்னது. அவன் தலையசைத்தான். எதற்காக இதுவரை காத்திருந்தானோ — அது தேனாக அவள் வாயிலிருந்து வந்தது. “நீ எனக்கு இப்பவும், எப்பவும் ஒருத்திதான்.” , அவளை அவன் முதல் முறையாக ஆரத்தழுவினான். அந்த அணைப்பு ஆசை அல்ல. அது அவன் மனம் நிரந்தரமாக விரும்பிய உணர்வு. அவள் சொன்னாள்: “நானும்.” ஆனால்… 14.02.2026க்கு ஒரு வாரம் முன்பு, அவள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தாள். அவள் சிரிப்பு குறைந்தது. அவள் வரவு எப்போதாவது ஒருக்க என ஆகியது. பேசும் வார்த்தைகள் கூட குறுகின. “நீ மாறிட்ட மாதிரி இருக்கு,” என்றான் அவன். “இல்ல,” என்றாள். ஆனால் அவள் குரல் நடுங்கியது. அன்று அவள் அவன் கையை வழக்கத்தைவிட நீண்ட நேரம் பிடித்திருந்தாள். அந்தப் பிடிப்பு பாதுகாப்புக்கானது அல்ல விடை சொல்லும் பிடிப்பு என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை. சங்கக் கவிதை எச்சரித்தது: “பிரியும்நாள் அணைதல் அதிகம்.” அவன் அந்த வரியை மனதிலிருந்து தள்ள முயன்றான். ஏனெனில் அவன் காதலை நம்பினான். வாக்குறுதிகளைவிட, நடத்தை மீது. 14.02.2026. காதலர் தினம். அவன் நேரத்துடன் வந்தான். தேர்ந்தெடுத்த உடை—அவள் ஒருநாள் “உனக்கு இது நல்லா இருக்கு” என்று சொன்ன அதே நிறம். முகத்தில் மகிழ்ச்சி. கண்களில் எதிர்பார்ப்பு. நேரம் ஓடியது. நிமிடங்கள் மணிநேரங்களாக மாறின. அவள் வரவில்லை. போன் பண்ணினான் — பதில் வரவில்லை என்றாலும் மனம்—இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தான் .“Girls are always late,” [“பெண்கள் எப்போதும் தாமதமாகத்தான் வருவார்கள்,”] என்று நண்பன் நகைச்சுவையாகச் சொன்னான். அவன் சிரிக்கவில்லை. காதல் நகைச்சுவை அல்ல. அப்போது அவள் வந்தாள். அவனின் முகம் மலர்ந்தது. அடுத்த நொடியில் — அந்த மலர் உதிர்ந்தது. அவள் அவன் கையைப் பிடிக்கவில்லை. வேறு ஒருவனின் கையைப் பிடித்தபடி வந்தாள். பணம் தெரிந்த உடை. அதிகாரம் பழகிய நடை. கண்களில் —திட்டமிட்ட வாழ்க்கையின் அமைதி. “யாழினியன்…” அவ்வளவுதான். “இவன்?” அவன் கேட்டான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனத்தில் ஒரு சங்க வரி அவன் உள்ளத்தை கிழித்தது: “அறத்தொடு நிற்றல் காதல்.” “நான் உனக்கு என்ன குறை செய்தேன்?” அவன் கேட்டான். அவள் அவனை நேருக்கு நேர் பார்க்கவில்லை. கண்கள் தரையில் இருந்தன. உண்மை மேலே வர தயங்கும் போது கண்கள் எப்போதும் கீழே தான் பார்க்கும். அது அவனுக்கு நன்றாகப் புரியும் “இது… practical,[நடைமுறை] ” அவள் மெதுவாகச் சொன்னாள். அந்தச் சொல்லே— காதலின் மரணம். சங்கத் தலைவி இப்படி சொல்லியிருப்பாளா? இல்லை. அவள் சொல்லியிருப்பாள்: “உயிரினும் சிறந்தது காதல்.” அவள் தொடர்ந்தாள்: “Feelings are fine. But life needs stability.” [உன்னுடன் என் காதல் உணர்வுகள் பரவாயில்லை. ஆனால் வாழ்க்கைக்கு நிலைத்தன்மை தேவை.] அவன் சிரித்தான். அது மகிழ்ச்சி அல்ல. புரிதலின் கசப்பு. “Stability-யை [ஸ்திரம்] வாங்கலாம்,” “ஆனா காதலை வாங்க முடியாது.” என்றான். அவளுடன் வந்த அவளின் இன்றைய காதலன் சொன்னான்: “Love is good. But marriage needs sense.” [காதல் நல்லதுதான். ஆனால் திருமணத்திற்குப் புத்தி தேவை.] அதில் இன்றைய உலகத்தின் குரல் இருந்தது. அவன் காதலை அவமதிக்கவில்லை. ஆனால் காதலை வாழ்க்கையின் மையத்திலிருந்து மெல்ல நகர்த்தினான். எனினும் யாழினியின் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதற்கு அவனுக்கு அவசியமும் இல்லை. ஏனெனில் சில உண்மைகள் வாதத்தில் வாழ்வதில்லை. அந்த இரவு அவன் தனியாக நடந்தான். காதல் தோற்றதா? இல்லை. காதல் அவனை விட்டு போகவில்லை. அதைப் பயன்படுத்தியவர்கள் விலகினார்கள். அவ்வளவுதான்! அப்போது அவனுக்குப் புரிந்தது — சங்கக் காலத்தில் காதல் ஒரு வாழ்க்கை. இன்றைய காலத்தில் அது ஒரு நிகழ்ச்சி. அப்போது காதல் உயிரோடு இணைந்தது. இன்று வசதியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. காதலர் தினம் ரோஜா வாங்கும் நாள் அல்ல. அது — நீ உன் நெஞ்சத்தோடு உண்மையாக நிற்கிறாயா என்று நீயே உன்னை கேட்கும் நாள். சிலர் கொண்டாடுவார்கள். சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் — கைவிடப்பட்டாலும் காதலை கைவிடமாட்டார்கள். அவர்கள்தான் சங்கக் காலமும் இன்றைய காலமும் ஒரே சொல்லில் சொல்லும் உண்மையான காதலர்கள். போகும் வழி எனக்கு நீண்டது போனவள் நினைவு நெஞ்சை நெருங்குது விலகிய கைதான் இன்று காலியானது விலகாத காதல் இதயத்தில் நின்றது! வாங்கிய வசதி அவளோடு சென்றது வாழும் உண்மை என்னோடு இருந்தது உலகம் பகட்டில் பணத்தில் வாழுது உயிர் மட்டும் அன்பால் துடிக்குது! இலாபநஷ்டம் எழுதப்பட்ட புத்தகங்கள் போல இவளில் மறந்திருந்த உண்மை தெரியுது மனித வாழ்வை உயிரோடு வைக்கும் மங்காத உறவின் சுடர் காதலாகட்டும்! மாற்றம்தேடி மாறும் காதல் உலகில் தோற்றம்தேடி அலையும் காதல் தினத்தில் கண்ணுக்குத் தெரியாத கருணை எங்கே பெண்மையில் வாழும் அமைதி எங்கே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 2035 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 3 https://www.facebook.com/groups/978753388866632/posts/33809788578669689/?
  5. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 103 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தைக் குறிக்கும் இந்தக் கல்வெட்டுகள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், பண்டைய இலங்கையில் பேசப்படும் ஒரு தனித்துவமான பிராகிருத பேச்சு வழக்கைக் குறிக்கின்றன என்று பரணவிதான கூறினார். [He stated that these inscriptions were written in Brahmi script but represented a distinct Prakrit dialect spoken in ancient Sri Lanka.] இந்த எழுத்துமுறை சிங்கள மொழிக்கு மட்டும் தனித்துவமானது அல்ல - அது அப்போது இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அதே பிராமி எழுத்துமுறையாகும். பின்னர், இந்த எழுத்துமுறை சிங்கள எழுத்துமுறையாக பரிணமித்தது, ஆனால் அது மிகவும் பின்னர் (கி.பி. 6-8 ஆம் நூற்றாண்டு வாக்கில்) நடந்தது. எனவே, இவை இலங்கையில் உள்ள ஆரம்பகால கல்வெட்டுகள் என்றாலும், மேலே கூறிய காரணங்களால், அவை இன்னும் சிங்கள எழுத்துக்களில் எழுதப்படவில்லை - பிராமியில் மட்டுமே என்பதே வரலாற்று உண்மை ஆகும்!. அதாவது அவையை சிங்கள கல்வெட்டுக்கள் என்று எந்த அடிப்படையிலும் கூற முடியாது? இன்னும் ஒன்றையும் நான் கட்டாயம் சொல்லவேண்டும். அதாவது தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது. கி.பி முதல் மில்லினியத்தில் சிங்கள இன அடையாளம் இன்னும் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதை இது குறிக்கிறது. [These all suggests that the Sinhala ethnic identity was still forming during the first millennium CE.] எனவே, ஒற்றை "சிங்கள" அடையாளத்திற்குப் பதிலாக, ஆரம்பகால இலங்கையில் பல்வேறு இந்தோ-ஆரிய மற்றும் திராவிடக் குழுக்கள் இணைந்து வாழ்ந்திருக்கலாம்? [Instead of a single "Sinhala" identity, there may have been various Indo-Aryan and Dravidian groups coexisting in early Sri Lanka.] இராசவலியவில் முதல் பதின்மூன்று பக்கங்கள் இலங்கையின் மனித வரலாற்றுக்கு நேரடி தொடர்பு இல்லாததால், அவையை நாம் புறக்கணிக்கலாம். இது பக்கம் 14 இல் இருந்து இலங்கையைப் பற்றியது ஆகும். சுத்தோதனா (Suddhodana) (சமசுகிருதம்: (Śuddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னரான இவருக்கு அமிதோதனா [Amitodana] மற்றும் புஷ்போதனா [Pushpodana ] என்ற இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர் என இராசவலிய கூறும் அதே சமயத்தில், சுத்தோதனா மன்னருக்கு நான்கு இளைய சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர் என மகாவம்சம் கூறுகிறது. 2-20 இன் படி, சகோதரர்களின் பெயர்கள்: தோதோதனா, சக்கோதனா, சுக்கோதனா, அமிதோதனா மற்றும் இரு சகோரிகள், அ மி தா, பமிதா ஆகும். [Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana. sisters - Amita and Pamita.]. தீபவம்சம் கூட, , 3 - 44 முதல் 46 வரை, அதே பெயர்களைக் கொடுக்கின்றன. அத்துடன் இராசவலியத்தில் உள்ள புஷ்போதனா மகாவம்சம் மற்றும் தீபவம்சம் இரண்டிலும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் இராசவலியத்தில் தோதோதனா, சக்கோதனா மற்றும் சுக்கோதனா இல்லாதது மற்ற இரண்டு நாளாகமங்களுடன் முரண்படுகிறது. பிற்கால புத்தரான சித்தார்த்தரின் மாமாக்கள் பற்றிய இந்த முரண்பாடுகளைக் இது கொண்டு இருப்பதால், கதையின் முழு அல்லது பகுதியும் ஒரு புனையப்பட்ட கதையாக இருக்க வேண்டும்? இந்திய வரலாற்று ஆதாரங்கள் (அசோகரின் ஆணைகள், ஆரம்பகால பௌத்த சூத்திரங்கள் அல்லது ஜாதகக் கதைகள் போன்றவை / such as Ashokan edicts, early Buddhist sutras, or Jataka tales) சுத்தோதனரின் உடன்பிறப்புகள் பற்றியோ அல்லது அவர்களின் சந்ததியினர் ஒரு சிலர் இலங்கைக்கு குடிபெயர்ந்தது பற்றியோ அதாவது, புத்தரின் தம்பி, அமிதோதனாவின் [Amitodana] பேத்தி, கச்சனா [Kaccana] அல்லது பத்தகச்சனா [Bhaddakaccana] என்ற இளவரசி, இலங்கைக்கு வந்து அரசன் பண்டுவாசுதேவாவை திருமணம் செய்ததைப் பற்றியோ, அல்லது அமிதோதனாவின் பேரன்களும், சகோதரியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்து குடியேறியது பற்றியோ குறிப்பிடவில்லை. மேலும், ஆரம்பகால பௌத்த நூல்கள் புத்தரின் உடனடி குடும்பத்தை (பெற்றோர், மனைவி, மகன் மற்றும் உறவினர் ஆனந்தா) மையமாகக் கொண்டு உள்ளத்துடன், அவரின் தந்தையின் சகோதரங்கள் பற்றியோ அல்லது அவர்களின் குடும்பங்கள் பற்றியோ ஒன்றுமே விவாதிக்கவில்லை. உதாரணமாக, இந்த விவரங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், கட்டாயம் ஆரம்பகால இந்திய பௌத்த நூல்களில் இந்த விபரங்களை எதிர்பார்க்கலாம், ஏனென்றால் அவர்கள் பிறந்து வாழ்ந்தது இந்தியாவே, இலங்கை அல்ல. ஆனால் அவை ஒன்றுமே அங்கு இல்லை. எனவே, இலங்கை நூல்களில் மட்டுமே காணப்படும் விரிவான குடும்ப தொடர்புகள் ஆரம்பகால பௌத்த மரபின் ஒரு பகுதியாக இல்லாமல், பிற்கால சேர்த்தல்களாகத் தோன்றுகின்றன. Part: 103 / APPENDIX – "Summary of Rajavaliya" The first thirteen pages may be ignored as having no direct relevance to the human history of Lanka. It is about Lanka from the page 14 only. King Suddhodana had two younger brothers called Amitodana and Pushpodana (P14) whereas King Suddhodana had four younger brothers and two sisters as per the Mahavamsa, 2-20:- Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana are the younger brothers. The Dipavamsa, 3 – 44 to 46, also give the same names. Pushpodana in the Rajavaliya is not mentioned in both the Mahavamsa and the Dipavamsa. Similarly the absence of Dhotodana, Sakkodana and Sukkodana in the Rajavaliya is also in conflict with other two chronicles. The whole or part of the story must be an invented story to have these discrepancies about the uncles of Siddhartha, the later Buddha. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 104 தொடரும் / Will follow துளி/DROP: 2034 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 103 https://www.facebook.com/groups/978753388866632/posts/33792470820401465/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 104 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் இலங்கையின் அரச பரம்பரையை மகிமைப்படுத்தவும், அதை பௌத்தத்துடன் இணைக்கவும் மகாவம்சம் (கி.பி. 5 ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே! அது மட்டும் அல்ல, அதுவே மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிப்பது [“ that this chapter is compiled for the serene joy and emotion of the pious”], அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமிதோதனாவின் மருமகன் தான் புத்தர். எனவே, நாளாகமங்களை எழுதிய துறவிகள், புத்தரின் சக்கிய குலத்துடன் இலங்கைக்கு உயிரியல் தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்பி, அதனால் இலங்கைக்கு அமிதோதனாவின் பேரக்குழந்தைகள் வந்து இலங்கை அரச வசம்சாவளியுடன் கலந்தனர் என்று எழுதியிருக்க வேண்டும். இதன் மூலம், மகாவம்சம் இலங்கை மன்னர்களை புத்தரின் இரத்த உறவினர்களாக சட்டப்பூர்வமாக்கியது. எனவே, புத்தரின் சொந்த உறவினர்கள் அங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், இலங்கை புத்த மதத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் என்ற கூற்றையும் இது வலுப்படுத்தியது. எனவே, புத்தரின் குடும்பத்தைப் பற்றிய மகாவம்சத்தின் பதிப்பு அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது, புத்த மதத்தின் சரியான பாதுகாவலர் என்ற இலங்கையின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக, கற்பனையாக எழுதப்பட்டது என்பது வெள்ளிடைமலை ஆகிறது! . என்றாலும் இதனால், புத்தரின் நேரடி குடும்பம் இலங்கையில் வலுவான இருப்பைக் கொண்டிருந்தது என்ற கருத்து வலுப்படுத்தப்படுகிறது. அது மட்டும் அல்ல, பின்னர், மற்றொரு, புத்தரின் தந்தையின் இளைய சகோதரரின் பேரன், திகவுவின் [Dīghāvu] மகன் காமனி [தீககாமினி], இலங்கை இளவரசி சித்ராவை [அல்லது உன்மாதசித்திராவை] மணந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் புத்தருக்கும் இலங்கையின் அரச குடும்பத்திற்கும் இடையிலான வம்ச தொடர்பை மேலும் வலுப்படுத்தியது. இன்னும் ஒன்றையும் மறக்கவேண்டாம், புத்தரின் மூன்று முறை இலங்கை விஜயம்? கற்பனைகளுக்கு எல்லை உண்டோ ? என்ற கேள்விக்கு இவை சரியான பதில்கள் ஆகின்றன! எனவே, இந்த முழு கதைக்களமும் புத்தருக்கும் இலங்கை மன்னர்களுக்கும் இடையே ஒரு இரத்த வம்ச தொடர்பை நிறுவுவதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இலங்கை முடியாட்சியின் சட்டபூர்வமான தன்மையையும், புத்த மதத்தின் பாதுகாவலர் என்ற அதன் உரிமையையும் மேம்படுத்துவதே குறிக்கோளாக இங்கு இருக்கிறது எனலாம்? வங்க நாட்டு அரசனுக்கும், அவனது மனைவியான கலிங்க நாட்டு அரசிக்கும் பிறந்த பெண், லாலா நாட்டில் சிங்கத்தோடு உடலுறவு கொண்டு சீகபாகு என்ற ஆணையும் சீகவலி என்ற பெண்ணையும் இரட்டைக்குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். சீகபாகு வளர்ந்தபின் தனது தந்தையான சிங்கத்தைக் கொன்று, அதன் தலையை வங்க நாட்டு அரசனுக்கு கொடுத்தான். அதன் பின், வட இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு புதிய இராச்சியத்தை உருவாக்கி, அந்த லாலா நாட்டுக்கு [Lala Desa / Lata region, Gujarat / Maharashtra area of India] அரசனாகி, தனது உடன்பிறந்த சீகவலியை மணந்து பதினாறு இரட்டையர்களைப் [32 மகன்களைப்] பெற்றெடுத்தான். விஜயன் எல்லாவற்றிலும் மூத்தவன். அவர் ஒரு வியாழக்கிழமை பிறந்தார். [ஏழு நாள் வாரம் பண்டைய கலாச்சாரங்களில் வேர்களைக் கொண்டுள்ளது, பாபிலோனிய வானியல் மற்றும் சந்திர சுழற்சிகளைக் கவனிப்பதன் மூலம் இதற்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன] ஆனால் இந்த வியாழக்கிழமை என்ற தகவல் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இல்லை. அங்கே அதே நாட்டில், அதே நாளில் எழுநூறு ஆண்கள் பிறந்தனர் [Be it known that, on the day of Vijaya’s birth, 700 males were born in the same city]. விஜயனின் மோசமான நடத்தை காரணமாக, அவனின் தந்தையுமான மன்னர், இளவரசர் மீது கோபமடைந்தார்; மேலும், மூன்று உலகங்களுக்கும் ஆசிரியரான, நமது புத்தர் இறந்த ஏழாவது நாளில், இளவரசர் விஜயனும், அவனது பிறந்தநாளில் பிறந்த, விஜயனின் உதவியாளர்களான, எழுநூறு போர்வீரர்களும், ஒரு கப்பலில் ஏற்றப்பட்டு, கடலில் அலைய விட்டனர். அவர்கள் தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota or Tammannava, Tambapanni-tota, தம்மன்னா-தோட்டா என்பது "தம்மன்னா / தம்பபன்னி துறைமுகம்" என்று பொருள்படும், இது விஜயன் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த கடலோரப் பகுதியைக் குறிக்கிறது] தரையிறங்கினர். இந்த இடம் இலங்கையின் வடமேற்குப் பகுதியில், இன்றைய மன்னார் அல்லது புத்தளத்தைச் சுற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், விஜயனும் அவனது தோழர்களும் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்த அதே நாளில், அதாவது புத்தர் மரணித்த அதே நாளில், இலங்கையில் தரையிறங்கியதாக தீபவம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன. என்றாலும் புத்தர் இறந்த பல நாட்களுக்குப் பிறகு இராசவலியவின் படி அவர்கள் இலங்கையில் தரையிறங்கியிருக்க வேண்டும். எனவே இது மற்ற இரண்டு நாளாகமங்களுடனும் முரண்படுகிறது. விஜயன் மோசமான நடத்தைகளைக் கொண்டு இருந்தாலும், அவன், மறுபிறப்பு இல்லாத ஒரு மரணம் அடைந்து, நேராக சொர்க்கம் சென்றான்? நம்பினால் நம்புங்கள்? சொர்க்கம் எங்கே நானும் தேடுகிறேன்? மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகிய இரண்டு வரலாற்று நூல்களுக்கு மாறாக, இராசவலியவில் விஜயன் மற்றும் அவரது தோழர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இராசவலியவின் படி விஜயனும் அவரது தோழர்களும் தம்மண்ண-தோட்டாவிற்கு நேரடியாக வந்தனர். இருப்பினும், தீபவம்சத்தின்படி, அவர்கள் முதலில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள இன்றைய சூரத் என்று நம்பப்படும் சுபாராவை [Suppara, believed to be the present day Surat in Gujarat, India] அடைந்து, அங்கேயும் தவறாக நடந்து கொண்டு, தப்பி ஓடி, பின்னர் அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள இன்றைய பருச் என்று நம்பப்படும் பாருகாச்சாவை [Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra] அடைந்து, தங்கள் தீய நடத்தையை மீண்டும் செய்தனர். இருப்பினும், மகாவம்சத்தின்படி, அவர்கள் பருகாச்சாவில் தரையிறங்காமல் சுப்பராகாவிலிருந்து தம்பபன்னியை அடைந்தனர். பாருகாச்சா மற்றும் சுபாரா இரண்டும் இந்தியாவின் மேற்கு கடல் கரையில் உள்ள பண்டைய வர்த்தக கடல் துறைமுகங்கள் என்பதை இங்கே கவனிக்கலாம். இராசவலிய இராவணனின் போரைப் பற்றி குறிப்பிடுகிறது, ஆனால் மற்ற இரண்டு வரலாற்று நூல்களும் இராமன் - இராவணன் போரைப் [Rama-Ravana war] பற்றி குறிப்பிடவில்லை. தீபவம்சத்தில் கிரிதீபா [Giridipa] இராசவலியத்தில் யக்-கிரி [Yak-giri] என்று விவரிக்கப்பட்டுள்ளது. இராசவலியத்தின்படி புத்தர் இலங்கைக்கு மூன்று முறை விஜயம் செய்தார். முதல் வருகை அவர் நிர்வாணம் [Nirvana] அடைந்த ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பிறகு. இரண்டாவது வருகை அவர் நிர்வாணம் அடைந்த ஆறாவது ஆண்டில். ஆனால், நிர்வாணம் அடைந்த ஐந்தாவது ஆண்டில் இது நடந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மூன்றாவது வருகை நிர்வாணம் அடைந்த ஒன்பதாம் ஆண்டு நிறைவில் நடந்துள்ளது. ஆனால், தீபவம்சம், 2 - 52, இந்த வருகை எட்டாம் ஆண்டில் நடந்ததாக கூறுகிறது. ஆகவே இங்கும் நாளாகமம்களுக்கு [chronicles] இடையில் வேறுபாடு காண்கிறோம்? Part: 104 / APPENDIX – "Summary of Rajavaliya" The king of Wangu married the daughter of Kalingu king, and a daughter was born to them. The daughter when grown up united with a lion and gave birth to a twin, a son, Sinhaba, and a daughter, Sinhawalli. Sinhaba killed the father lion and presented the head of the killed lion to the king of Wangu country. Sinhaba created a new kingdom and married his sister, and she gave birth to sixteen twins. Vijaya was the eldest of all. He was born on a Thursday, and this information is not in the other two chronicles. There were born seven hundred males at the same time in the same country. Vijaya and his seven hundred warriors were forced to drift, on the seventh day after the death of the Buddha, in the sea because of their bad behavior, and they landed in Tammanna-tota. The Dipavamsa and the Mahavamsa say Vijaya and his companions landed in Lanka on the very same day the Buddha attained Mahaparinirvana, the death of the Buddha. They must have therefore landed in Lanka as per the Rajavaliya many days after the death of the Buddha. This is in conflict with the other two chronicles. Vijaya died with no possibility of rebirth; went to heaven. There is no mention of the wives and the children of Vijaya and his companions in the Rajavaliya, contrary to the other two chronicles, the Mahavamsa and the Dipavamsa. Vijaya and the companions came direct to Tammanna-tota as per the Rajavaliya. However, as per the Dipavamsa, they first reached Suppara, believed to be the present day Surat in Gujarat, India, misbehaved there too, and made to flee. Then they reached Bharukaccha, believed to be the present day Bharuch in Maharashtra, and repeated their evil behavior. However, as per Mahavamsa, they reached Tambapanni from Supparaka without landing at Bharukaccha. It may be noted here that both Bharukaccha and Supparaka are ancient trading seaports on the western seaboard of India. The Rajavaliya mentions of the war of Ravenna, but the other two chronicles do not mention about Rama-Ravenna war. Giridipa in the Dipavamsa is described in the Rajavaliya as Yak-giri. The Buddha visited Lanka, as per the Rajavaliya too, three times. First visit is on the completion of the nine months of his attaining Nirvana. The second visit is in the sixth year after he attained Nirvana. The Mahavamsa says it took place on the fifth year of Buddhahood. The third visit is on the completion of the ninth year after attaining Nirvana. The Dipavamsa, 2 – 52, says this visit took place in the eight year. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 105 தொடரும் / Will follow துளி/DROP: 2036 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 104 https://www.facebook.com/groups/978753388866632/posts/33810221221959758/?
  6. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 102 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 102 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் பி. குணசேகரனால் [B. Gunasekara] சிங்களத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு இலங்கை அரசு அச்சகத்தால் வெளியிடப்பட்டது. முன்னுரையில், இது மகாவம்சத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இராசாவலிய தீபவம்சத்தை விட ஏன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை, தீபவம்சம் மற்ற நாளாகமம்கள் போல் புத்தசமயத்தை முன்னிலை படுத்தினாலும், தமிழருக்கு எதிராக இனத்துவசம் பெரிதாக இல்லை. அதே நேரம் இராசாவலிய, அதில் முன்னிலையில் நிற்கிறது! மேலும் முன்னுரையின்படி, மூல ஆசிரியர் யார் என்றோ? மற்றும் தொகுக்கப்பட்ட தேதி எதுவென்றோ தெரியவில்லை. எழுத்து பாணியின் அடிப்படையில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கலாம் என்றும், மொழிபெயர்ப்பாளரின்படி ஆசிரியர்(கள்) சிங்கள இலக்கணத்தில் சரளமாக இல்லை என்றும் ஊகிக்க முடியும். விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் [Wimaladharma Surya 2] எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது, இதில் 17 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர்கள் மிக சமீபத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதன் ஓலை கையெழுத்துப் பிரதிகள் அதிகம் இருக்கவில்லை. அதிலும் கிடைத்த அனைத்து ஓலை கையெழுத்துப் பிரதிகளிலும், இரண்டு மட்டுமே நல்ல தரமானதாக இருந்தது. மேலும் அவை இரண்டும் தனியார் மூலங்களிலிருந்து [private sources], அதாவது தனியாரிடம் இருந்து கிடைத்தவை ஆகும். இந்த வரலாறு விஜயன் முதல் இரண்டாம் விமலதர்ம சூரியன் வரையிலான மன்னர்களின் ஆட்சிக் காலங்களை உள்ளடக்கியது என்றாலும், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டிலும் உள்ள விஜயன் முதல் மகாசேனா வரையிலான ஆட்சிக் காலங்களுக்கு மட்டுமே நமது கவனத்தை இங்கு மட்டுப்படுத்தவுள்ளோம். நாம் மேலே கூறியவாறு கவனத்தில் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் சோரநாகனும் [Chora Naga, also known as Coranaga or Mahanaga] ஆட்சி செய்தான் என்றாலும், அவனைப்பற்றிய விவரங்ககள் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஓரளவு நல்ல கையெழுத்துப் பிரதிகளிலும் வேறுபடுகின்றன என கூறப்பட்டிருப்பது [Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator.], அவ்வாற்றின் உண்மைத் தன்மையை எடுத்துக் காட்டுவதுடன், மேலும் மொழிபெயர்ப்பாளரின் கூற்றுப்படி, இராசவலிய என்பது சிங்கள மன்னர்களின் வரலாற்று விவரம் இதுவென மொழிபெயர்ப்பின் முதல் பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது [It says on front page of the translation that: The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings]. விஜயனும் அவரது துணைவியும் இந்தியாவிலிருந்து வந்தனர். அவர்கள் தங்கள் தங்கள் மொழிகளைப் பேசியிருப்பார்கள். அதேபோல அடுத்த மன்னன் பண்டுவாசுதேவன் (கி.மு. 504-474) அல்லது பண்டுவாசுதேவ மற்றும் அவரது துணைவியும் கூட இந்தியாவிலிருந்து தான் வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கால கட்டத்தில் சிங்களம் என்ற மொழி சொற்பவளவாவது ஆரம்பிக்கவே இல்லை. ஆனால் தமிழ் பூரணமாக வளர்ந்த சங்க இலக்கியங்களுடன் இருக்கிறது, அப்படியே பாளி, சமஸ்கிருத மொழிகளும் ஆகும். சிங்கள மொழி திடீரென வளர்ந்திருக்க முடியுமா? [Could the Sinhalese language have developed on the fly?] இந்தக் கேள்வி சிங்கள மொழியை இழிவுபடுத்துவதற்காக அல்ல, ஆனால், ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பல ஆண்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இந்தக் கேள்வி மொழி அல்லது மக்களைப் பற்றியது அல்ல, ஆனால் தீர்க்கதரிசனங்கள், அற்புத நிகழ்வுகள், அசாதாரண தற்செயல்கள், அசல் மக்களை உயிரினங்களைப் போன்ற பேய்களாக இழிவுபடுத்துதல், முறைகேடான திருமணங்கள் மற்றும் பொருத்தமற்ற பிறப்புக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கதையை எழுதியவர்கள் பற்றியது மட்டுமே!. என்றாலும் வளர்ச்சி அடையாத, ஆரம்பகால சிங்களம் என கருதப்படும், கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிராமி கல்வெட்டுக்குள் கண்டு பிடிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறினாலும், அதில் காணப்படும் 'பருமக' "Parumaka" (පරුමක) என்ற எழுத்தை, எஸ். பரணவிதான போன்ற அறிஞர்கள் "பருமக" என்பது ஆரம்பகால இலங்கை சமூகத்தில் ஆளும் உயரடுக்கினருடன் [ruling elites] தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரியப் பட்டமாக அடையாளம் கண்டு, அதாவது தலைவரைக் ["chief" or "leader"] குறிக்கும் Sanskrit "Pramukha" (प्रमुख) and Pali "Pamukha" தொடர்புபடுத்தி, எனவே அதை, ஆரம்பகால பிராமியில் எழுதப்பட்ட, பழைய சிங்களம் என முடிவு எடுத்தனர். ஆனால் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், இதன் முடிவு வேறாக அமையலாம்? உதாரணமாக, இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக ராசநாயகம், சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம், தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார்கள். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும், பண்டைய காலத்தில், ஆரம்பகால இந்தோ-ஆரியர்கள் (கிமு 1500 வாக்கில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்) முதன்மையாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்தவர்களாக இருந்தனர், நிலம் சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பண்டைய சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி 300) கடல்சார் வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசுகளை விவரிப்பதுடன், தமிழ் மாலுமிகள் ரோம், எகிப்து, கிரீஸ், சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் [Tamil seafarers traded with Rome, Egypt, Greece, China, and Southeast Asia.] வர்த்தகம் செய்தது பண்டைய வரலாற்று சான்றுகள் ஆகும். மேலும் தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள், அவர்களின் நீண்ட தூர கடல் பயணங்களை உறுதிப்படுத்துகின்றன. எனவே, 'பருமக' [பெருமகன்] என்ற படத்திற்குரிய கப்பல் தலைவன்", யார் என்று வரலாற்று சான்றுகளுடன் பார்த்தால், கட்டாயம் அவன் ஒரு தமிழனே! ஆனால், பரணவிதான இந்த மொழியை ஒரு பிராகிருத பேச்சுவழக்காக வகைப்படுத்தி, இது பின்னர் உள்ளூர் மாற்றங்கள் மற்றும் திராவிட தாக்கங்கள் மூலம் சிங்கள மொழியாக பரிணமித்தது என முடிவுக்கு வந்து, எனவே இது ஆரம்பகால , வளர்ச்சியடையாத சிங்கள மொழியின் ஒரு கூறாக முடிவெடுத்தார் என்பதே உண்மை. அவ்வளவு தான்! [Paranavitana classified the language of early Sri Lankan inscriptions as a Prakrit dialect, which later evolved into Sinhala through local changes and Dravidian influences. However, there are some key points that need clarification to avoid misinterpretation.] சிங்களத்தின் முன்னோடி என்று அவர் கூறியது, அவை சிங்களத்தின் வேர்களைக் காட்டுகின்றன என்ற கருத்தில் மட்டுமே, ஆனால் மொழியை அல்ல. [A predecessor of Sinhala, meaning they show the roots of Sinhala but not the language itself.] இவ்வாறு, அவர் அவற்றை சிங்கள மொழியியல் வரலாற்றின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார், ஆனால் இன்று நாம் புரிந்துகொள்கிறபடி சிங்களம் அல்ல என்பதே உண்மை என்று எண்ணுகிறேன். Part: 102 / APPENDIX – "Summary of Rajavaliya" The Ceylon Government Printer first published the translation of the Rajavaliya from Sinhalese to English by B. Gunasekara in 1900. It is claimed in the preface that it ranked next to Mahavamsa in importance. Why the Rajavaliya has greater importance than the Dipavamsa is not stated. Author and the date of compilation are not known as per the preface. It could be inferred that, based on the style of writing, there may more than one author, and the author(s) are not fluent in the Sinhalese grammar as per the translator. List of sovereigns from Vijaya to Wimaladharma Surya 2 is given in this, until the end of 17th century. The author or authors must then be historically of very recent origin. There were not many Ola manuscripts of this existed and only two are considered of good quality of all the Ola manuscripts that were available, and both came from private sources. Though this chronicle is covering the reigns of kings from Vijaya to Wimaladharma Surya 2, we will limit our focus to the reigns form Vijaya to Mahasena: the same period as in both the Dipavamsa and the Mahavamsa. Choranaga reigned in the above period, and the two manuscripts used in the editing differ in his detail as per the translator. It says on front page of the translation that, The Rajavaliya or A Historical Narrative of Sinhalese kings. Vijaya and his consort came from India and they would have spoken their languages, and therefore Vijaya could not be called a Sinhalese king. The next king Panduvasudev and his consort came from India. Could the Sinhalese language have developed on the fly? This query is not to denigrate the Sinhala language, and I am not qualified to comment on that. Development of a language is a continuous process taking years. The query is not about the language or the people, but about those who wrote the story involving prophesies, miraculous happenings, extraordinary coincidences, denigrating the original inhabitants as demons like creatures, many incestuous marriages, and inappropriate birth stories. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 103 தொடரும் / Will follow பகுதி Part: 102 https://www.facebook.com/groups/978753388866632/posts/33774745782173969/?
  7. சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 2 14.02.2025, காதலர் தின கொண்டாட்டத்தின் முடிவில், அவனுக்கு ஒரே நேரத்தில் இச்சையும் வந்தது. அச்சமும் வந்தது. அதனால்த்தான் கொண்டாட்டம் முடியும் தருவாயில் அவன் மெதுவாகச் சொன்னான்: “காதல் மெதுவாக வளரணும்.” அந்தச் சொல்லில் ஒரு எல்லை இருந்தது. ஒரு பொறுப்பு இருந்தது. இதழினி சிரித்தாள். மறுப்பு இல்லை. ஏமாற்றமும் இல்லை. “அதுதான் எனக்கும் பிடிக்கும்,” என்றாள். அந்த ஒரு வரியில், Valentine Day [வேலன்டைன் நாளின்]-யின் எல்லா அலங்காரங்களும் மெல்ல அணைந்தன. அந்த இரவு அவர்கள் காதலர்கள் ஆகவில்லை. ஆனால் காதல்— அவர்களைச் சோதிக்கத் தொடங்கியது. அந்த நாளிலிருந்து அவர்களின் நட்பு நாட்கள் சிவப்பு ரோசாவாக அல்ல — மெதுவாக மலரும் காட்டு மலர்களாக மலரத் தொடங்கின. நேரம் பத்தாத நாட்களாக நகர்ந்தது. பேசுவதற்கு சொற்கள் குறைந்தன; பார்வைகள் மட்டும் ஒருவரை ஒருவர் நிறைவாக ரசித்தன. இலண்டன் பல்கலைக்கழக நூலகம், சின்ன சின்ன காபி கடைகள், தேம்சு நதிக்கரை— அவை இனி இடங்கள் இல்லை. அவை அவர்களின் உலகங்கள். இலண்டன் நூலகத்தில், ஒரே மேசையின் எதிர் முனையில் அமர்ந்து புத்தகம் வாசிப்பதுபோல் நடித்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் பக்கவாட்டுப் பார்வையில் ரசித்துக் கொண்டார்கள். அவர்கள் மெல்ல மெல்ல மற்றவரின் கைகளைப் பிடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவசரப்படவில்லை. “நீ பயப்படுறியா?” என்று அவள் ஒருநாள் கேட்டபோது, “இல்ல… நான் காதலை காப்பாற்ற முயற்சிக்கிறேன்,” என்றான். அவள் பதில் சொல்லவில்லை. அந்த மௌனம் அவனுக்குள் ஒரு சங்கக் கவிதையை எழுப்பியது: யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. சிவந்த நிலத்தில் விழுந்த மழைநீர் போல, அன்பு கொண்ட இரு நெஞ்சங்களும் எவ்வித முயற்சியும் இன்றி ஒன்றாகக் கலந்துவிட்டன. இலண்டன் குளிர்காலம் நண்பன் - நண்பிகளை நெருக்கமாக்கி கலந்து போல. ஒரு மாலை, நூலகத்திலிருந்து வெளியே வந்தபோது, “குளிரா?” என்று அவன் கேட்டான். “சிறிது,” என்றாள். எந்த வார்த்தையும் இல்லாமல், உடனே அவன் தன் மேலங்கியின் [கோட்டின்] முனையை அவள் தோள்மேல் சற்றே இழுத்தான். அவள் தடுக்கவில்லை. அந்தச் சின்னச் செயலில் அவன் நெஞ்சில் ஒரு வரி ஒலித்தது: “மெல்ல மெல்லக் கலத்தல் காதல்.” மெல்லமெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளிஅள்ளி இருவரும் அணைக்க மெல்லமெல்லக் கலத்தல் காதல் ஒரு நாள் தேம்சு ஆற்றங்கரையில் [Thames river] அமர்ந்திருந்தார்கள். நீர் ஓடியது. ஆனால் அவர்களுக்கு நேரம் நின்றுவிட்டது; ஓடவில்லை. அவள் திடீரென அவன் தோளில் தலையைச் சாய்த்தாள். “பேச வேண்டாமே?” என்றாள். “வேண்டாம்,” என்றான். அந்த மௌனம் எந்த முத்தத்தையும் விட அதிக நெருக்கமானது. ஒரு சங்கத் தலைவி அதைப் பார்த்திருந்தால், “மௌனமும் ஒரு மொழிதான்” என்றிருப்பாள். ஒரு இரவு அவள் மனம் உடைந்திருந்தது. “பயமா இருக்கு… எல்லாம் மாறிடுமோன்னு,” என்றாள். அவன் அவள் கையைப் பிடித்தான்— இறுக்கமாக இல்லை; விடாமல் மட்டும். “மாறும் .. ஆனா உண்மை மாறாது,” என்றான். அவள் கண்களில் நீர் திரண்டது. அவன் கையில் அவள் விரல்கள் இன்னும் இறுகின. அந்த நிமிடம் காதல் உடல் அல்ல என்று அவன் உணர்ந்தான். அது — பாதுகாப்பு. "அஞ்சுதல் நீங்கி அணைவதே அன்பு." காதலில் சில வாக்குறுதிகள் சொல்லப்படுவதில்லை. அவை எழுதப்படுவதும் இல்லை. ஆனால் அவை உடைக்கப்படும் போது தான் அதன் இருப்பு தெரியவருகிறது. யாழினியன் உறுதியாய் இருந்தான். ஆனால் இதழினி எதையும் உறுதியாகச் சொல்லவில்லை. அவள் அவனின் பெண் நண்பியாக [girl friend] ஆக இருந்தாள். நெருக்கமாக. அன்புடன். பயமின்றி. ஆனால்—“நாளை திருமணம்.” “என்றென்றும் நீ மட்டும்.” “நாம் பிரியவே மாட்டோம்.” இந்த மூன்றிலும், அவள் ஒரு சொல்லையும் வாய்விட்டுச் சொல்லவில்லை. யாழினியன் இவற்றை வெளிப்படையாகக் கேட்கவும் இல்லை. மெல்ல மெல்ல மலரட்டும் என்று காத்திருந்தான். ஆனால் ஒன்றை மட்டும் இருவரும் மௌனமாகச் செய்தார்கள்— ஒருவரின் பயத்தையோ தடுமாற்றத்தையோ மற்றொருவர் கேலி செய்யவில்லை. ஒரு மாலை, சின்ன காபி கடை ஒன்றில் இரண்டாவது காபி அருந்திக்கொண்டு இருந்தார்கள். அவன் திடீரெனக் கேட்டான்: “இதழினி… நாம் இப்படியே இருந்தா போதுமா?” அந்தக் கேள்வியில் ஆசை இருந்தது. குற்றச்சாட்டு இல்லை. அதில் இருந்தது — பயம். அவள் உடனே பதில் சொல்லவில்லை. ஜன்னல் வழியே வெளியே பெய்துகொண்டு இருந்த மழையைப் பார்த்தாள். “இப்படியே இருந்தது போதும்னு சொல்ல நான் துணியல,” என்று மெதுவாகச் சொன்னாள். “ஆனா பின்னாடி அப்படியே இருக்க மாட்டோம் என்று சொல்லவும் எனக்கு மனசில்லை.” அவன் சிரிக்கவில்லை. அவன் அழவும் இல்லை. “அப்போ நாம என்ன?” என்றான். “நாம்… உண்மை சொல்லிக் கொண்டிருக்கிறோம்,” என்றாள். அந்தப் பதில் அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது ஆறுதலாக இல்லை. சிலருக்கு காதல் ஒரு நாள். சிலருக்கு அது வாழ்நாள். சிலருக்கு அது கொண்டாட்டம். சிலருக்கு அது பொறுப்பு. யாழினியனுக்கு — காதல் ஒரு மலர் அல்ல; அது ஒரு விதை. மண்ணுக்குள் மெதுவாகப் பதிந்து வேர் பிடிக்க வேண்டிய ஒன்று. இதழினிக்கு — காதல் ஒரு உணர்வு. ஆனால் வாழ்க்கை ஒரு தீர்மானம். அவள் அவனை நேசித்தாள். ஆனால் “என்றென்றும்” என்று சொல்லத் தயங்கினாள். அவன் அவளை காத்திருந்தான். ஆனால் “இப்போதே” என்று வற்புறுத்தவில்லை. அவர்கள் காதலில் இருந்தார்கள். ஆனால் ஒரே வேகத்தில் இல்லை. சிலருக்கு காதல் பொழுதுபோக்கு. சிலருக்கு காதல் வாழ்வின் நாடி. யாழினியனுக்கு — அது உயிர். இதழினிக்கு — அது உண்மை, ஆனால் இன்னும் தீர்மானமாகாத உண்மை நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 3 தொடரும் சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 2 https://www.facebook.com/groups/978753388866632/posts/33774366895545191/?
  8. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 101 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 101 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மேகவர்ண அபயன் ஒரு கிளர்ச்சியாளராக மாறி, மலைநாட்டுக்குச் [Malaya] சென்று ஒரு கிளர்ச்சிப் படையை உருவாக்கினார். பின், அவன் மன்னனுடன் சண்டையிடத் திரும்பி வந்து ஒரு முகாமை அமைத்தான். மன்னன் மகாசேனனும் சண்டையிடத் தயாராக வந்தான். இருப்பினும் இருவரும் சமரசம் ஆனார்கள், மேகவர்ண அபயன் மகாவிகாரை இடிப்பை ஏற்கவில்லை என்று மன்னனிடம் கூறினான். மகாவிகாரையை மீண்டும் கட்டுவதாக மன்னன் உறுதியளித்தான். மன்னனின் மனைவிகளில் ஒருவர் தேரர் சங்கமித்தா மற்றும் சோனாவை ஒரு தொழிலாளியின் உதவியுடன் கொன்றாள். மகாவிகாரை மீண்டும் கட்டப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிக்குகள் அங்கு குடியேறினர். பின்னர் மன்னர் பிராமணக் கடவுளின் கோயில்களை அழித்தார். முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இராச குமாரியையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ? உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் இலங்கை வரலாற்றுப் பதிவுகளின் அல்லது நாளாகமம்களின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் தொடர்கிறது Part: 101 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 He became a rebel and went to Malaya to raise a rebel army. He returned to fight the king and pitched a camp. The king Mahasena too came ready to fight. Both however became reconciled, and Meghavannabhaya told the king that he did not approve the demolition of the Mahavihara. The king promised to rebuild the Mahavihara. One of the king’s wives killed the Thera Samghamitta and Sona with the help of a labourer. Mahavihara was rebuilt and bhikkhus came to dwell there after nine years. The king then destroyed the brahmanical temples of god. The foot note 5 on verse 45 says, quote” According to the Tika the Gokanna Vihara is situated on the coast of the Eastern Sea, the two others Viharas in Rohana. The Tika then adds ……. everywhere in the island of Lanka he established the doctrine of Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth”. He destroyed the temples in Trincomalee, in the Brahamanical village Kalanda (the present day Kanthalai). The king Mahasena destroyed temples of Lord Siva in the middle of the fourth century A.D. The Colas were not at all a powerful kingdom at this time, probably not even a small vassalage. The historians of Tamil Nadu used to say this period as the dark period in the history of Tamil Nadu. Cola and Pandya kingdoms were won over by Kalapers who were not Tamils. They ruled approximately from 300 A. D. to 600 A. D. They favoured Buddhism and Jainism. The Pali language was predominant over Tamil and Sanskrit. Buddhism lost its following among the Sinhalese, perhaps due to hard times. They remained Buddhists, but might not have spare money or time to spend on ecclesiastical matter. People in the process forgot about the Dipavamsa and the Mahavamsa. Very few copies of these remained, but forgotten, in very few monasteries. The British Colonial officer in Ceylon, George Turnour, happened to receive a copy of the Mahavamsa from a monk. He translated and published it in 1837. Turnour thus brought the Mahavamsa to the attention of the European scholars. Turnour considered the Mahavamsa his baby and considered it a genuine history of Lanka. Many Europeans followed Turnour. While the British Colonial officers in India Princep, Cunningam etc brought the hidden or the deliberately forgotten Buddhism, the India’s gift to the world, and the forgotten Buddhist Emperor Asoka, to the entire world. We do not have any issue with the pious Buddhist people believing in it for their religious purpose. We only reject the historical legitimacy of it as advanced by the politicians for their political advancement at the cost of Tamils. North Indian Hindus genuinely believe that Hanuman and his monkey brigade built the Adams Bridge connecting Rameswaram and Talai-Mannar. They also seriously believe that Rama won the war over Rawana. They could, therefore, say Lanka belong to them by conquest. Would Sinhalese concede their request? They believe that Rama returned home after his victory over Rawana and ruled for eleven thousand years. Assuming that the war between Rama and Rawana took place before the Buddha, then the war must have taken place about fourteen to fifteen thousand years ago. Rameswaram and Talai-Mannar was connected by land at that time, and there was no need for a bridge. The last ice age ended about seven to ten thousand years ago, and melting of the accumulated snow to mountain heights raised the sea level to separate India and Ceylon. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 102 தொடரும் / Will follow பகுதி Part: 101 https://www.facebook.com/groups/978753388866632/posts/33759906486991232/?
  9. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 10 ✈️ பாகம் 10 – வெல்வின் கார்டன் சிட்டிக்கு திரும்புதல் துபாயின் கடைசி நாளின் காலையில், ஹோட்டல் திரைகள் வழியாக காலைச் சூரியன் மெதுவாக உள்நுழைந்து, தங்க நிற அழகைப் பரப்பியது. திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் — மூவருமே உற்சாகத்துடன் இருந்தனர் என்றாலும் ஓரளவு வருத்தத்தோடும் காணப்பட்டனர். இன்று அவர்கள் வெல்வின் கார்டன் சிட்டிக்கு திரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் இதயத்தில் துபாய் பற்றிய நிறைந்த நினைவுகள் இன்னும் ஒரு பொக்கிஷமாக, அவர்களுடன் பயணித்தன. “தாத்தா… எனக்கு துபாயை விட்டுப் போக மனசில்லை!” என்று தனது சிறிய சூட்­கேஸை அணைத்தபடி நிலன் சொன்னான். தாத்தா அன்பாகச் சிரித்தார். "எனக்குத் தெரியும், சின்னப் பயணி. ஆனால் ஒவ்வொரு சாகசத்திற்கும் ஒரு முடிவு உண்டு - வீட்டில் கட்டாயம் ஒரு புதிய கதை காத்திருக்கும்." என்றார் நிலன் தனக்குப் பிடித்த நினைவுப் பொருளான, மர்ஜன் தீவில் [Marjan Island] இருந்து வாங்கப்பட்ட ஒரு சிறிய மணல் கோட்டை [sandcastle] மாதிரியை வைத்திருந்தான், அதே நேரத்தில் திரேன் துபாய் மால் ஒட்டக சவாரியிலிருந்து வாங்கப்பட்ட தனது சிறிய [மினியேச்சர்] டிராகனைக் கையில் பிடித்திருந்தான். மிராக்கிள் கார்டனில் இருந்து வாங்கப்பட்ட மலர் வடிவங்களைக் கொண்ட ஒரு சிறிய, மென்மையான பொம்மை ஒன்றை பேபி ஆரின் கையில் வைத்திருந்தான். மூவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு, விமான நிலையத்துக்கு சென்றனர்.நிலன் கோபுரத்தின் மேலிருந்து “மேகங்களைத் தொட்ட” அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான். திரேன் ஒட்டகப் பந்தயத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். குட்டி ஆரின் தன் மழலை மொழியில் ஒவ்வொரு சாகசத்திற்கும் தனக்கே உரிய சிறிய பெயரைச் சொல்வது போல், ஏதேதோ சொல்லி சொல்லி, மகிழ்ச்சியாக கூவி விளையாடினான். விமான நிலையத்தில், அவர்கள் பயண ஆயத்தம் [செக்-இன்] மற்றும் பாதுகாப்பு சோதனை — எல்லாவற்றையும் நிதானமாக முடித்தனர். நிலன் தன் கடவுச்சீட்டை [பாஸ்போர்ட்டை] பெரியவரைப் போல கவனமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். திரேன் கன்வேயர் பெல்ட்கள் மற்றும் ஸ்கேனர்களில் தங்கள் சாமான்கள் சீராக நகர்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். குட்டி ஆரின் தாத்தாவின் கையில் பாதுகாப்பாக இருந்தபடி, ஒவ்வொரு ஒளி, ஒலி, அசைவையும் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்த்தான். அவர்கள் எல்லோரும் புறப்படும் அறையில் காத்திருக்கும் போது, நிலன் ஜன்னலுக்குப் பக்கத்தில் தனது முகத்தை ஒட்டி வைத்துக் கொண்டு, வெளிய புறப்படும் விமானங்களுக்கு கையை அசைத்தான். திரேன், அங்கே எத்தனை விமானங்கள் வெளியே நிற்கின்றன என்று ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தான். அதேபோல, ஒவ்வொரு விமானமும் என்ஜின் சத்தத்துடன் நகரும் போது ஆரின் தனது இரு கைகளையும் தட்டினான். விரைவில், விமானத்தில் ஏற வேண்டிய நேரம் வந்தது. குழந்தைகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர், அவர்களின் உற்சாகம் தூக்க கலக்கத்துடன் கலந்திருந்தது. விமானம் வானத்தில் உயர்ந்ததும், நிலன் கிசுகிசுத்தான், “தாத்தா... நாங்கள் எப்போதாவது திரும்பி வருவோமா?” "நிச்சயமா, சின்ன சாகசக்காரனே," என்று தாத்தா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். பின், "அதுவரை, அந்த மாயாஜாலத்தை எங்கள் இதயங்களில் உயிரோடு வைத்திருப்போம்." என்றார். மேகங்களுக்கு மேலே விமானம் பறந்த போது, குழந்தைகள் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்து, தங்களுக்குக் கீழே நகரம் சுருங்குவதைக் கண்டார்கள். துபாயின் கோபுரங்கள் ரத்தினங்களைப் போல மின்னின, பாலைவனம் தங்க மணலைப் போல பரவியிருந்தது, மிராக்கிள் கார்டன் கீழே ஒரு வண்ணமயமான ஒட்டுவேலை போல் அல்லது ஒரு வண்ண பட்டு விரிப்பு போலத் தெரிந்தது. மேகங்கள் தங்களுக்கு போய் வருகிறோம் என விடைபெற்று செல்வது போல், நிலன் கற்பனை செய்தான், திரேன் மீண்டும் தான் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வதை கற்பனை செய்தான், சிறிய ஆரின் பூக்கள் மற்றும் கோபுரங்களைக் கனவு கண்டு தூங்கச் சென்றான். விமானம் இறுதியாக லண்டனைத் தொட்டு, வெல்வின் கார்டன் நகரத்துக்கு காரில் அவர்கள் சென்றபோது, குடும்பத்தினர் குளிர்ந்த காலைக் காற்றில் காலடி எடுத்து வைத்தனர், அங்கு பழக்கமான தெருக்கள், நட்பு அண்டை வீட்டார் மற்றும் வீட்டின் தாராளமான வசதி அவர்களை வரவேற்றது. திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் ஆகியோர் தங்கள் நினைவுகளை ஒரு பொக்கிஷம் போல சுமந்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். தாத்தா தனது சிறிய ஆய்வாளர்களைப் பார்த்து சிரித்தார். "இதயம் இருக்கும் இடம் தான் வீடு," என்று அவர் மெதுவாகச் சொன்னார். "இப்போது, நம் இதயங்கள் - சாகசங்கள், சிரிப்பு மற்றும் மந்திரத்தால் நிறைந்துள்ளன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள் ... ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாகசத்தை, வீட்டில் கூட நடத்த முடியும்." என்றார். அன்று மாலை, குழந்தைகள் நினைவுப் பொருட்களை அவிழ்த்து, துபாயின் படங்களை வரைந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிலன் தனது சிறிய மணல் கோட்டையை அலமாரியில் கவனமாக வைத்தான், திரேன் தனது ஒட்டக உருவங்களை வரிசையாக அடுக்கி வைத்தான், ஆரின் தனது பளபளப்பான மலர் பொம்மையை, முகத்தில் ஒரு திருப்தியான புன்னகையுடன் இறுக்கமாகக் கட்டிப் பிடித்தான். இரவு வந்தபோது, தாத்தா குழந்தைகளைப் படுக்கையில் படுக்க வைத்தார். "இனிய இரவு, என் சிறிய சாகசக்காரர்களே," என்று அவர் கிசுகிசுத்தார். "மேகங்கள், அரண்மனைகள், ஒட்டகங்கள் மற்றும் தோட்டங்களைப் பற்றிய கனவு உலகம் ... எப்போதும் நீங்கள் ஆராய்வதற்காகக் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று அவர்களுக்கு கூறினார். அத்துடன், ஆச்சரியம், சிரிப்பு மற்றும் துபாய்க்கான அவர்களின் மறக்க முடியாத பயணத்தின் மாயாஜாலம் நிறைந்த இதயங்களுடன் குழந்தைகள் அமைதியான தூக்கத்தில் மூழ்கினர்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/33756943097287571/?
  10. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 100 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 100 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சில நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டது. 8 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் யாழ்ப்பாண இராச்சியம் செழித்தது. இந்தக் காலம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால மன்னர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் இந்தப் பெயர் பயன்பாட்டுக்கு வந்தது. இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் விரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தமானில் இருந்து புறப்பட்டு, ஜைலன் (சிலோன்-இலங்கை) / SEILAN] என்ற இலங்கை தீவின் வட பகுதியை அடைந்தான். அங்கு தமிழ் அரசன் செண்டெமைன் [SENDEMAIN / probably a corruption of the Tamil word ‘Sandamann’ or யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன்] அரசாட்சி செய்தான். அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்கினர். அது எந்த ஒரு நட்டையும் சாராத சுதந்திர நாடு. ஆடவரும் பெண்டீரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றி இருப்பார்கள். அரிசி மற்றும் எள்ளு அங்கு விளைகின்றன பால், அரிசி, இறைச்சி இவர்களின் உணவு. எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். [பனை] மரங்களில் இருந்து கள்ளு எடுக்கிறார்கள் என்கிறார். இவைகள் எல்லாம் தமிழும் தமிழரும், சைவமும் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததை எடுத்து காட்டுகின்றன. குறைந்தது பதினெட்டிற்கு மேற்படட பயணிகள், உதாரணமாக ஒரு ரோமன், ஒரு கிரேக்கம், இரண்டு சீனர்கள், நான்கு இத்தாலியர்கள். ஒரு வடமேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரமான டன்கிரில் வசித்த சோனகர், ஒரு போர்த்துகீசிய சிப்பாய்-வரலாற்றாசிரியர், இரண்டு டச்சுக்காரர்கள், ஒரு ஜெர்மன், ஒரு பிரஞ்சு கோமகன், ஒரு டச்சு கடற் படை அதிகாரி, ஐந்து பிரித்தானியர்கள் [a Roman, a Greek, two Chinese, four Italians, a Moor from Tangier, a Portuguese soldier-historian, two Dutchmen , a German, a French Count, a Dutch admiral and five Britons.] ரோமன் காலத்தில் இருந்து பிரிட்டிஷ் காலம் வரை இலங்கைக்கு வந்து, இலங்கையைப் பற்றி தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். அவர்களில் சிலரை நாம் இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம். . இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும்,ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை / வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப் பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந் தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். [Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India & north & east of Srilanka, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout the Indian subcontinent before a series of Indo-Aryan migrations]. மேல் கூறப்பட்ட பயணிகளின் குறிப்புகளுடனும், புத்தரின் மூன்று இலங்கை வருகையை சித்தரிக்கும் கதைகளுடனும், இதையும் [மேலே கூறியவற்றையும்] நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். அத்தியாயம் 37: ஜேத தீசனுடைய மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் இருபத்தேழு வருட காலம் ஆட்சி செய்தான். அவனை அரசனுகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து சங்கமித்தா தேரர் இங்கு வந்தார். "மகா விகாரை பிக்குகள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இவ்வாறு கூறி சங்கமித்தா தேரர், அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டான். இதன் விளைவாக, அரசன் ‘மகா விகாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும் அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப்படும்’ என்று கட்டளை பிறப்பித்தான். மகா விகாரையில் வசித்த பிக்குகளுக்கு இதனால் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், அவர்கள் அதை விட்டுவிட்டு மலை நாட்டுக்கும் உருகுணைவுக்கும் [Malaya and Rohana] சென்று விட்டனர். இதனால் மகாவிகாரை ஒன்பது ஆண்டுகள் பாழடைந்தது. உரிமையாளர் இல்லாத அனைத்து நிலங்களும் ராஜாவுக்குச் சொந்தமானது என்றும் தேரர் மன்னரை நம்ப வைத்தார். பின்னர், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், இதே போன்ற அரச நில ஆணை இயற்றப்பட்டது, இது, அரசாங்கத்திற்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகங்களை, சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்ற உதவியது [Later, during the British colonial period, similar Crown land ordinance was enacted which helped post State Council government to colonize the Tamil’s traditional homelands with the Sinhalese.]. மன்னன் மற்றும் தேரர் சங்கமித்தவுக்கு நெருக்கமான சோனா [Sona] என்ற அமைச்சர் இருந்தார். சோனாவும் பல பிக்குகளும் லோகபாசாதா கட்டிடத்தை [Lohapasada building] இடித்து, இடிக்கப்பட்ட பொருட்களை அபயகிரி விகாரைக்கு எடுத்துச் சென்று அபயகிரி விகாரையில் புதிய கட்டிடங்களை அமைத்தனர். என்றாலும் மகாவிகாரை இடிப்பை ஏற்காத மற்றொரு மந்திரி மேகவர்ண அபயனும் [Meghavannabhaya] அங்கு இருந்தார். Part: 100 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 36 – 133 says ‘Thus, reflecting that sovereignty, being the source of manifold works of merit, is at the same time the source of many an injustice, a man of pious heart will never enjoy it as it were sweet food mixed with poison’. In Silapathikaram, Vanjikaandam – Kaadchik Kaathai, verses 93 to 106, says similar sentiments that the royal life is full of tragedy. The English abstract of the above verses are given below: ‘When he heard the cruel deed of the king of the Pandyan country, the Cera, the king of kings, was anguished and said: ‘Before these words, which well deserve condemnation from any monarch of our status, reached our ears, it is good that the Pandyan laid down his life. For it is the departing soul of the King, that has straightened the sceptre, which was bent by this irrestible act of destiny. ‘If rains fail, great havoc is caused (to the country). If living beings suffer unrighteousness, widespread fear is caused. Paying due regards to the welfare of his subjects, wary of tyrannical rule, a protecting king born of a noble line occupies a position which is suffering and is not to be sought after’.’ The above is the opinion from one of the very few great Tamil kings. The last portion clearly resonates with above quoted Mahavamsa verse 38 – 133. Chapter 37: After Jetthatissa’s death, his younger brother Mahasena came to power, and ruled for twenty-seven years. Thera Samghamitta came from the further coast to consecrate him. This Thera was able to convince the new king Mahasena that the Mahavihara Bhikkhus do not teach the true Vinaya. The king, in consequence, issued an order proscribing anyone from giving food to the bhikkhus in the Mahavihara. The bhikkhus of the Mahavihara left for Malaya and Rohana. The Mahavihara thus became desolate for nine years. The thera also convinced the king that all the ownerless land belong to the king. Later, during the British colonial period, similar Crown land ordinance was enacted which helped post State Council government to colonize the Tamil’s traditional homelands with the Sinhalese. There was a minister, Sona, close to the king and the Thera Samghamitta. Sona and many bhikkhus destroyed the Lohapasada building, and took the demolished materials to the Abhayagiri-Vihara to put up new buildings in Abhayagiri-Vihara. There was another minister Meghavannabhaya who did not approve the demolition of the Mahavihara. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 101 தொடரும் / Will follow துளி/DROP: 2028 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 100 https://www.facebook.com/groups/978753388866632/posts/33743366815311866/?
  11. சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1 அன்று இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில், கடுமையான குளிர் காற்று, மனிதர்களின் முகங்களை சிவப்பாக்கியிருந்தது. குளிர் வெறும் உடலுக்கு மட்டும் அல்ல; அந்த நாளில் மனங்களுக்குள் கூட ஒரு எதிர்பார்ப்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அது 14.02.2025, காதலர் தினம் [வாலண்டைன் டே]. உலகம் முழுக்க காதல் ஒரு நாளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டாடப்படும் நாள். வேடிக்கையாக இல்லையா? தந்தையர் தினம், தாயார் தினம் எனற வரிசையில், இன்று காதலர் தினம். "நாளைத் தேர்ந்து எடுத்து அன்பு செய்தோரல்ல அவர்கள்; நாம் பிறந்த நொடியிலே அன்பு நம்மோடு பிறந்தது! நன்றி சொல்லாத நாளிலும் தாயின் கரம் குறையாது; நினைவு மறந்த காலத்திலும் தந்தையின் நிழல் விலகாது! நாட்காட்டி எண்ணும் உறவு அல்ல நாடிதுடிக்கும் உயிர் உறவு அது; 'ஒரு நாள் கொண்டாடலாமா?' எனில் — ஒவ்வோர் நாளும் அவர்தம் திருநாளே! " அம்மா, அப்பா— இவர்கள் நாள் தேர்வு செய்து நம்மை நேசிக்கவில்லை. நாம் அவர்களை நாள் தேர்வு செய்து நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அம்மாவின் அன்பு – நாம் நன்றி சொல்லாத நாளிலும் தொடர்கிறது. அப்பாவின் பொறுப்பு – நாம் மறந்த நாளிலும் நின்று கொண்டே இருக்கிறது. அவர்கள் உறவு நாட்காட்டியில் [காலண்டரில்] அல்ல, உயிரில் எழுதப்பட்ட உறவு. அதனால் “ஒரு நாள் மட்டும் கொண்டாடலாமா?” அவ்வாறே காதல் – ஏன் ஒரு “தினம்” ஆனது? இங்கேதான் வேடிக்கை தொடங்குகிறது. காதல்— ஒரு காலத்தில் வாழ்க்கை முறை. இன்று அது ஒரு நிகழ்ச்சி. சங்கக் காலத்தில் காதல் என்பது கண்களில் தொடங்கி மனதில் பதிந்து வாழ்க்கையோடு கலந்து விடும் ஒன்று. அப்போது “காதலர் தினம்” என்று ஒன்றே இல்லை; ஏனெனில் ஒவ்வொரு நாளும் காதலின் நாளே! அப்படி என்றால், இன்று காதலர் தினம் ஏன்? ஏனெனில் இன்று காதல் நிலைக்காத ஒன்றாக மாறிவிட்டது. நிலைக்காததை நினைவூட்ட ஒரு நாள் தேவைப்படுகிறது. மறந்துபோகும் ஒன்றுக்கு நாள்காட்டி வேண்டும். அதனால்த் தான்— "காதல் நினைவு நாள்", "பரிசு பரிமாறும் நாள்", "பொதுவெளியில் காட்சிபடுத்தும் நாள்" என்று காதல் ஒரு காலண்டர் நிகழ்வாக [“Love reminder day” , “Gift exchange day”, “Public display day” என்று காதல் ஒரு calendar event] மாறிவிட்டது. இங்கேதான் உண்மையான வேடிக்கை ஆரம்பிக்கிறது. அம்மாவுக்கு ஒரு நாள். அப்பாவுக்கு ஒரு நாள். காதலுக்கும் ஒரு நாள். ஆனால் யோசித்துப் பாருங்கள்— அம்மா, அப்பா நம்மை விட்டு போக முடியாத உறவுகள். காதல்? போய்விடக்கூடிய உறவு. அப்படியிருக் போகக்கூடிய உறவுக்குத்தான் அதிக விளம்பரம். அதிக நிகழ்ச்சி. அதிக அலங்காரம். இதுதான் வேடிக்கை. சங்கத் தலைவி இப்படிச் சொல்வாள்: “அறத்தோடு நிற்றல் காதல்.” அதாவது— காதல் என்பது ஒரு நாள் உணர்ச்சி அல்ல, ஒரு நெறி. நாள் வேண்டிய காதல்— அதிகம் நீடிக்காது. நெறியாக வாழும் காதல்— நாள் தேவைப்படாது. அதனால்… காதலர் தினம் தவறில்லை. கொண்டாடுவதும் தவறில்லை. ஆனால் கேள்வி இது: நீ காதலை கொண்டாடுகிறாயா? அல்லது காதலை மறக்காமல் இருக்க ஒரு நாள் வைத்திருக்கிறாயா? இதற்குப் பதில்தான் நீ காதலன்தானா அல்லது காதலின் பயனாளியா என்று தீர்மானிக்கிறது. அதனால்த்தான்— இது சற்றே வேடிக்கையாக இருக்கிறது. யாழினியன் — அந்த வளாகத்தின் ஓரத்தில் தனியாக நின்றபடி காதலர் தினம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான். “யாழினியன்… நீ ஏன் இப்படி தனியா நிற்கிற?” என்று ஒரு நண்பன் சிரித்துக் கொண்டே கேட்டபோது, “காதலைத் தேட வரல; நடக்குது என்றா நடக்கட்டும்,” என்று அமைதியாகச் சொன்னான். அப்போதுதான் கூட்டத்துக்குள் ஒரு வெண்ணிலா, தரையில் நகர்ந்து வந்தது போல, அவன் உணர்ந்தான். அவள் வந்தாள். இதழினி — அவள் பெயர் என்று சொல்லப்படும் முன்பே, அவள் இருப்பு யாழினியனின் மனதில் பதிந்துவிட்டது. “Hi… I’m Idhazhini.” [ஹாய், நான் இதழினி] என்றாள் அவள். அவள் சொன்ன அந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் அந்தச் சிரிப்பு… அழகுக்காக அல்ல. நேர்மைக்காக இருந்தது போல் அவன் மனது கருதியது. அதனால்த்தான் அவனுக்கு அவளை உடனே பிடித்தது. யாழினியன் உடனே, எந்தத் தாமதமும் இன்றி: “நான் யாழினியன்.” என்றான். அந்தச் சொல்லில் பெருமை இல்லை. மறைவும் இல்லை. ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்தும் அளவுக்கு மட்டும் இருந்தது. “Are you doing PhD?” ["நீங்க முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?"] அவள் கேட்டாள். “Just started.” (இப்பொழுது தான் ஆரம்பித்தேன்) அவன் பதிலளித்தான். அவள் கண்களில் ஒரு மெல்லிய மரியாதை தெரிந்தது. அந்த மரியாதைதான்— அவர்களுக்குள் வந்த முதல் நெருக்கம். அன்று Valentine Day [காதலர் தினம்] கொண்டாட்டம். இசை, விளக்குகள், சிரிப்புகள். சிவப்பு நிறம் எல்லா இடங்களிலும். யாரோ யாரையோ கட்டிப் பிடித்திருந்தார்கள். யாரோ யாருக்கோ காதலை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதழினியும் யாழினியனும் அதிகம் பேசவில்லை. பேசாத அந்த இடைவெளியே அவர்களை அருகில் வைத்திருந்தது. பிரிய மனம் வரவில்லை. அதனால் அவர்கள் அருகில் அருகிலேயே இருந்தார்கள். வார்த்தைகள் தோற்றுப்போகும் இடத்தில், நம் மௌனம் பேசத் தொடங்குகிறது... சிவப்பு நிறம் சூழ்ந்த இந்த இரவில், உன் அருகாமை தரும் கதகதப்பில் காலம் உறைந்து நிற்கிறது. யாரோ யாருக்கோ காதல் சொல்லட்டும், யாரோ யாரையோ கட்டிப் பிடிக்கட்டும்... ஆனால், நம் இதயங்களின் துடிப்பு இந்த நிசப்தத்தில் தான் ஒன்றாகச் சங்கமிக்கிறது. பிரிய மனம் இல்லை நமக்கு, பேசத்தான் அவசியம் இல்லை... அருகில் அமர்ந்திருக்கும் இந்த மௌனமே, ஆயிரம் கவிதைகளைவிட அழகாக நமக்குள் காதல் சொல்கிறது! யாழினியன் அவளைப் பார்க்கும்போது, அவன் நினைவில் ஒரு சங்கத் தலைவி வந்தாள். “காமம் கலந்த காதல் உண்டு எனின், நன்றுமன்.” வெறும் காமமல்ல— காதல் கலந்த காமம் என்றால் அது நன்று என்று சொன்ன அந்தப் பெண், இன்றைய இந்தக் கொண்டாட்டத்தைப் பார்த்திருந்தால் என்ன சொல்வாளோ? அவன் மனம் உடனே மறுத்தது. “அது எல்லாம் உறுதியான பிணைப்பு வந்த பின்பே,” என்று அவன் உள்ளம் அவனுக்குச் சொன்னது. ஆனால் மற்றவர்களின் கவனம் அவர்களிடமிருந்து விலகிய ஒரு நொடி— இதழினி அவன் கையை மெல்ல வருடினாள். அது பிடித்தல் அல்ல. ஒரு அழைப்பும் அல்ல. “நான் இங்கே இருக்கிறேன்” என்ற அமைதியான உறுதி. அவள் தன்னுடன் அவனை மெல்லக் கட்டிப்பிடித்தாள். அவனின் காதருகே ஏதோ கிசுகிசுத்தாள். அந்தச் சொற்கள் தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால் அவனின் மனம் முழுவதும் அது கேட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 2 தொடரும் துளி/DROP: 2027 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/33739053352409879/?
  12. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99D பகுதி: 99 D [99 இன் தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] திரு. பிள்ளை சரியாகக் குறிப்பிடுவது போல, கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தைய மற்றும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்குப் பகுதி நாகர்களின் நிலமாக இருந்தது. இடைக்கால காலத்திற்குப் பிறகு, உக்குரே சிங்கம் ஒரு ராஜ்யத்தை நிறுவியபோது யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் இராச்சியம் தொடங்கியது எனலாம் [As Mr. Pillai rightly observes, the northern part of Ceylon was the land of the Nagas in the centuries preceding and succeeding the Christian era. After a period of interregnum a Tamil Kingdom started in Jaffna when Ukkure Singham established a kingdom] யாழ்ப்பாண அரசைப் பற்றிய அரிய தகவல் ஒன்றை 8ஆம் நூற்றாண்டு அரபுப் பயணி அல் மசுடி / மாசுடி [கி பி 896–956] என்பவர் தன் பயணக் குறிப்பில் எமக்கு தருகிறார். இவர் யாழ்ப்பாண துறைமுகத்தை கி பி 912 இல் அடைந்து, அங்கு தாம் கண்டதை விபரிக்கிறார். [Al-Masudi, the great Mohammedan traveler, reached the Port of Jaffna in 912 A D] அவர் அங்கு ஒரு சைவ [இந்து] அரசனின் இறுதி சடங்கு ஒன்று பார்த்ததாகவும், அங்கு அரசனின் இறந்த உடல் உயரம் குறைந்த ஒரு தேர் மீது வைக்கப்பட்டு, அது வீதியால் இழுக்கப் பட்டது. அப்பொழுது ஒரு பெண் தரையை பெருக்கி, இறந்த ராஜாவின் தலை முடிக்கு தூசி வீசி எறிந்தாள், அத்துடன் அங்கு கூடி இருந்தவர்கள் வாழ்க்கையின் பயனற்ற தன்மையை உணர்ச்சி பொங்கக் கூக்குரலிட்டதுடன், கடவுளை வணங்கி புகழ்ந்து பாடினார்கள் என்றும், உடல் இறுதி சடங்கில் சிதையில் வைக்கும் முன்பு, உடல் முழுவதும் சந்தனம் பூசி, அரசனின் உடல் நாலு பகுதிகளாக வாளால் வெட்டப்பட்டது என்றும் பதிவு செய்து உள்ளார். [Masudi states that the King was placed on a low chariot and while it was being drawn, a woman swept the ground and threw dust on the hair of the dead king, exclaiming the futility of life and extolling the worship of God. Before the body was put on the funeral pyre, it was smeared with sandalwood and cut into four pieces with a sword]. இறந்தவர்களுக்காக வருந்தி பாடும் பாடலே ஒப்பாரி ஆகும். மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது எனலாம். இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறியவும் இது உதவுகிறது. இந்த ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை“ என்று சங்க இலக்கியங்கள் கூறுவதையும் காணலாம். உதாரணமாக, “ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் கற்றோர் உரைப்பது கையறு நிலையே “ என சிற்றிலக்கியமான [சிறு பிரபந்தம்], பன்னிரு பாட்டியல் கூறுகிறது. அப்படி யாழ்ப்பாண அரசன் ஒருவன் விண்ணகம் அடைந்த நிகழ்வையே இங்கு அல் மசுடி விவரிப்பதை காண்கிறோம். போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லை (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்கு செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் என புறநானுறு 93, மிக விரிவாக தமிழரின், குறிப்பாக தமிழ் மன்னர்களின் அன்றைய பண்பாட்டை எடுத்து கூறுகிறது. "அவர் தீது மருங்கு அறுமார், அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, “மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ," [புறநானுறு 93] இதைத் தான் அல் மசுடி கண்டார் என்பதை நாம் இலகுவாக ஊகிக்கலாம், மற்றது அவர் தலைமுடிக்கு தூசி வீசி எறிந்தனர் என்பது கட்டாயம் திருநீறை குறித்து இருக்கலாம்?அப்படியே, கூக்குரலிட்டனர் என்பது ஒப்பாரிப்பாட்டாக இருக்கலாம் ? அது இன்னும் தொடரும் தமிழர் பண்பாடாகும். எனவே இது கட்டாயம் ஒரு தமிழ் சைவ அரசன் என்பது மிகவும் தெளிவாகிறது. அத்துடன் எட்டாம் நூற்றாண்டிலும் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி நடந்தது என்பது வரலாற்று சான்றாக இங்கு சாட்சிகளுடன் பதியப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 100 தொடரும் / Will follow துளி/DROP: 2026 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99D https://www.facebook.com/groups/978753388866632/posts/33724620357186512/?
  13. சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) திருகோணமலையில் உள்ள அந்த தமிழ் பாடசாலை, வெளியில் பார்க்கும் போது சாதாரண பள்ளிக்கூடமாகத் தோன்றினாலும், உள்ளே அது ஒரு சிறிய பாராளுமன்றம் போல இயங்கியது. சட்டங்களுக்குப் பதிலாக சுற்றறிக்கைகள்; வாக்காளர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்கள் [இன்ஸ்பெக்டர்கள்]; பாடப் புத்தகங்களை விட உண்மையான அரசியலை, வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட மாணவர்கள். அங்கு இளம் பட்டதாரி எல்லாளன் கணிதமும் இயற்பியலும் கற்பித்தான். அரசாங்கங்கள் மக்களுக்குக் கீழ்ப்படிந்ததை விட, எண்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. அதே பாடசாலையில், இளம் பட்டதாரி விஹாரமஹாதேவி தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்தாள். மொழி ஆயுதமல்ல — ஆனால் அரசும் அதன் கூட்டாளிகளும் அதை ஆயுதமாக்குகிறார்கள் என்று அவள் நம்பினாள். உடைந்த மின்விசிறிகளின் கீழ், குளிர்ந்த தேநீருடன், அவர்கள் முதன்முறையாக ஆசிரியர் அறையில் சந்தித்தனர். “நீங்க வவுனியாவைச் சேர்ந்தவரா?” என்று அவள் கேட்டாள். “ஆம். வடக்கின் எல்லைப் பகுதி,” என்று எல்லாளன் பதிலளித்தான். அவள் சிரித்தாள். “நானும் அப்படித்தான். மதவாச்சி. உங்கள் எல்லை முடிய, எங்கள் எல்லை தொடங்குது. ஒரே மண்—வேறு பலகைகள்.” இருவரும் தமிழும் சிங்களமும் சரளமாகப் பேசியதுடன், கடினமான போர் காலங்களில் வளர்ந்த அவர்கள், உயிர்வாழும் முக்கியமான பாடங்களையும் கற்றுக்கொண்டனர். அதில் முக்கியமாக, எப்போது தப்பிப்பது பாதுகாப்பானது, எப்போது பேசாமல் இருப்பது புத்திசாலித்தனம் மற்றும் எப்போது மௌனமாக இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதை அவர்கள் இருவரும் நன்றாக அறிந்திருந்தனர். ஏனென்றால் மௌனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம், தண்டிக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். சுருக்கமாகச் சொன்னால், மொழி, பேச்சு மற்றும் மௌனம் அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் நடுநிலையானவை அல்ல என்பதை அவர்கள் கற்றுக் கொண்டனர். ஒரு மதியம், பாடசாலைக்கு வந்த ஒரு கல்வி அதிகாரி அங்கு கூடியிருந்த ஆசிரியர்களிடம் கேட்டார், “இங்கே தேசிய நல்லிணக்கம் எப்படி இருக்கிறது?” எல்லாளன் பணிவுடன் பதிலளித்தான்: “ஐயா, இயற்பியலில், சமநிலை நிலைத்தன்மையை உருவாக்குகிறது. சமூகத்தில், நடுநிலையான நீதி தான் அதைச் செய்கிறது. அது எல்லா இடமும் பரவி இருந்தால்?” அதிகாரி உடனே ஏதோ ஒன்றைத், தனது குறிப்பு புத்தகத்தில் எழுதினார். ஆனால் அது யாருக்கும் என்னவென்று தெரியாது. அவர் சென்ற பிறகு, விகாரமஹாதேவி அவனின் காதில் கிசுகிசுத்தார், “நீங்கள் அதிகமாக உண்மையைப் பேசி விட்டீர்கள்.” எல்லாளன் சிரித்தான். “நான் அதை ஒரு சூத்திரமாகக் குறைத்துத் தான் கூறினேன். ஆனால் மிக வலிமையுடன்.” அவர்கள் அடிக்கடி வரலாறும் இன்றைய அரசியலும் பற்றிய உண்மைகளை, பகிடிகள் கலந்து ஒருவருக்கு ஒருவர் தங்கள் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்தனர். ஒரு மாலை, பள்ளிக்குப் பிறகு, அவர்கள் நடந்து தங்கள் தங்கள் விடுதிக்கு போகும் போது, ஒரு தேநீர் கடையில் கொஞ்சம் ஓய்வு எடுத்தார்கள். அப்பொழுது அவள் சொன்னாள்: “மகாவம்சம் எல்லாளனையும் துட்டுகமுனுவையும் எதிரிகளாக்கியது”. “ஆனால் நிஜ வாழ்க்கையில், எல்லாளனும் விஹாரமஹாதேவியும் தேநீர் பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே” என்றான் எல்லாளன். அவள் சிரித்தாள். “ஏனென்றால் நாங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். நாளாகமங்களை அல்லது புராணங்களை அல்ல.” ஆமாம், பல இலங்கை வரலாற்று புராணப் புத்தகங்கள் பெரும்பாலும் பிளவுகளை உருவாக்கி மக்களைப் போட்டியாளர்களாக மாற்றுகின்றன, உண்மையான இலங்கை வரலாற்றை, உறுதியான சாட்சிகளுடன் அலசுவதில்லை என்று அவன் சுட்டிக்காட்டினான். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, பாடசாலை விடுமுறை என்பதால், கடற்கரையில் அவர்கள் பொழுதுபோக்காக நடக்கும் போது, கைத்தொலைபேசியில் செய்தியும் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது ஒரு அமைச்சரின் உரை வானொலியில் ஒலித்தது: “பண்டைய காலங்களில் பியங்குதீபத்தில் [பியங்குதீபம் / Piyahgudipa], இன்றைய புங்குடுதீவில், சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தனர்.” எல்லாலன் புருவத்தை உயர்த்தினான். "ஆர்வமாக இருக்கிறது," என்று அவன் அமைதியாகச் சொன்னான். "அப்போது சிங்கள மொழியே இன்னும் உருவாகவில்லை. ஏன் என்றால் இது கூறப்பட்டது கி மு இரண்டாம் நூற்றாண்டு துட்டுகெமுனு (Dutugemunu) புராணக் கதையில் " விஹாரமஹாதேவி தனது கையில் இருந்த குளிர் பணத்தை பருகியபடி, “அப்படியானால் மக்கள் இன்னும் பிறக்காத ஒரு மொழியைப் பேசினார்களா?” அவர்கள் யாரையும் கேலி செய்யாமல் மெதுவாக சிரித்தனர். அவர்களின் சிரிப்பு அனுபவத்தாலும் களைப்பாலும் வந்தது— பல வருடங்களாக ஒரே தவறான பதிலை மீண்டும் மீண்டும் திருத்த வேண்டிய ஆசிரியர்களைப் போல.” அந்த வேளை, எல்லாளன் சிறு விளக்கம் கொடுத்தான். "எல்லாளன் தமிழன் மற்றும் சிவனை வழிபாடுபவன் என்று மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், துட்டகைமுனு பேசிய மொழியோ அல்லது அவன் ஒரு சிங்களவன் என்றோ எங்கும் கூறப்படவில்லை. ஆனால் புத்தரை வழிபடுப்பன் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழன் என்ற சொல் பலதடவை அங்கு இருந்தாலும், சிங்கள மொழி, சிங்களவன் என்ற இனம் எங்கும் அதில் கூறப்படவில்லை. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டு கதையாகும். கி.பி 300–700 க்கு இடையில் தான் சிங்களம் பிராகிருதத்திலிருந்து படிப்படியாக வளர்ந்தது. கி.மு 2 ஆம் நூற்றாண்டில், அது ஒரு தனித்துவமான மொழியாக உலகில் எங்கும் இருக்கவில்லை." என்றான். ஒரு முறை உணவு இடைவேளையில் எல்லாளன் சொன்னான்: “மகாசேனா கோகன்ன ஆலயம் [அநேகமாக கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்கலாம்?] போன்ற சிவாலயங்களை அழித்து, அவற்றின் இடத்தில், விகாரைகள் கட்டினான்.” விஹாரமஹாதேவி பெருமூச்சு விட்டாள். “முன்பு ஆலயக் கற்கள் உடைக்கப்பட்டன. இப்போது காணி ஆவணங்கள் உடைக்கப் படுகின்றன.” “முறை மாறியது,” என்றான் எல்லாளன், “ஆனால் பசி மாறவில்லை.” ஆனைக்கோட்டை முத்திரை, திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம், திசமகாராமை தமிழ் பிராமி நாணயம் மற்றும் இவை போன்றவற்றில் தமிழ் மொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்றும், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சுமொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன எனவும் பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதை அவன் சுட்டிக்காட்டினான். உடனே அவள்: "தீபவம்சம் (கி.பி 4 ஆம் நூற்றாண்டு) மற்றும் மகாவம்சம் (கி.பி 5 ஆம் நூற்றாண்டு) ஆகியவை அவற்றின் ஆரம்ப காலத்தில் "சிங்களம்" என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. "சிங்களம்" (தீவு அல்லது மக்களைக் குறிக்கும்) என்ற சொல் சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் (Chulavamsa கி.பி 13 ஆம் நூற்றாண்டு) மட்டுமே முதல் முதல் காணப்படுகிறது" என்றாள். அதாவது அதற்கு முதல் அப்படி ஒரு மொழியைப் பற்றி எங்கும் கூறப்படவில்லை, கல்வெட்டுகளும் சிங்களத்தில் இல்லை. இந்த புராணங்கள் எழுதப்பட்டது பாளி மொழியில் மட்டுமே, மற்றும் கல்வெட்டுக்கள் தமிழிலும் மற்றும் கலப்பு மொழியில் மட்டுமே, அந்த கலப்பு மொழியைத்தான் இன்று ஆரம்ப கால சிங்களம் என்கிறார்கள்!! “புத்தர் பற்றின்மையைக் கற்றுக் கொடுத்தார்,” எல்லாலன் கூறினான். “ஆம்,” அவள் பதிலளித்தாள், “ஆனால் பல இலங்கைத் துறவிகள் மற்றும் தலைமைக் குழுவில், முழுமையாகச் சிங்களவர்களைக் கொண்ட தொல்பொருள் திணைக்களம் இப்போது நில உரிமையைக் கற்பிக்கிறார்கள்.” அதைத் தொடர்ந்து அவர்களின் பேச்சில் நிலப் பிரச்சினைகள் எழுந்தன. “நிலம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்று அவர்கள் [அரசு, அரச பிரதிநிதிகள்] கூறுகிறார்கள்,” என்று அவள் கூறினாள். “ஆம்,” எல்லாலன் பதிலளித்தான், “முதல் கட்டம் — வாக்குறுதி. இரண்டாம் கட்டம் — தாமதம். மூன்றாம் கட்டம் — மறதி,” அவள் அவனை தீவிரமாகப் பார்த்தாள். “நீ மிகவும் கூர்மையாக நகைச்சுவை செய்கிறாய்.” “கூர்மையான நகைச்சுவைகள் நீண்ட காலம் நீடிக்கும்,” என்று அவன் கூறினான். ஒரு மாலை, மின்தடை. மெழுகுவர்த்தி வெளிச்சம் ஆசிரியர் அறையை நிரப்பியது. “இந்த இருட்டு பழகியது போல இருக்கு,” என்று அவள் கூறினாள். எல்லாலன் மெதுவாக பதிலளித்தான், “இது இருள் அல்ல. மின்சாரம் ஓய்வெடுக்கிறது — இந்த நாட்டின் நீதி போல.” என்றான் எல்லாளன். பயம், அரசியல் மற்றும் பிரிவுகள் நிறைந்த உலகில் காதல் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற ஐயப்பாட்டில், அவள் மெதுவாக: “அப்படின்னா காதல்?” என்று கேட்டாள் “காதல் ஓய்வெடுக்கவில்லை. ஆனால் அது மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் நகர்கிறது, ஏனென்றால் சுற்றியுள்ள உலகம் நிச்சயமற்றது என்பதால் ” என்றான் அவன். மாணவர்கள் அவர்களை கவனிக்கத் தொடங்கினர். ஒரு நாள் “ஐயா, நீங்கள் இருவரும் திருமணமானவர்களா?” என்று ஒரு மாணவன் கேட்டான். “இல்லை,” என்று எல்லாளன் கூறினான். “ஆம்,” என்று விகாரமஹாதேவி கூறி, ஆனால் நகைச்சுவையாக: நாங்கள் இருவரும் கற்பித்தல் என்ற ஒரே பாடத்திட்டத்தில் திருமணம் செய்தவர்கள் ” என்றாள். அவர்கள் ஒருபோதும் காதலிப்பதாக வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், அதை அவர்கள் கடைப்பிடித்தனர் - பொதுவான மௌனத்தில் - நகைச்சுவைகளை மொழிபெயர்ப்பதில் - ஒருவரின் உச்சரிப்பை மெதுவாகச் சரிசெய்வதில். அவர்கள் ஆழமாக ஒன்றைப் புரிந்துகொண்டார்கள்: உண்மையான மோதல் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இல்லை. உண்மையான பிரச்சனை சாதாரண மக்களுக்கு எதிராக அரச, இராணுவ மற்றும் சமய அதிகாரம் மட்டுமே. பிளவுபட்ட சமூகத்தில், அன்பைத் தேர்ந்தெடுப்பதே ஒரு துணிச்சலான செயலாக அவர்களுக்கு இருந்தது. உண்மையான காதல் — மொழி, வரலாறு மற்றும் பயத்தை கடந்து செல்லும் காதல் என்பதை அவர்கள் நாளடைவில் உணர்ந்தனர். அவர்கள் - எல்லாளனும் விஹாரமஹாதேவியும் - வரலாற்றில் இடம் பெறவில்லை. அவர்கள் பெயர்கள் எந்த நாளாகமங்களிலும் இல்லை. ஆனால் அவர்கள் கற்பித்த மாணவர்களின் நினைவுகளில் இருக்கிறார்கள். வரலாறு அதிகாரத்தைப் பதிவு செய்கிறது. நாளாகமங்கள் வெற்றியைப் பாடுகின்றன. ஆனால் மனிதநேயத்தை அவை அரிதாகவே நினைவில் வைத்துக் கொள்கின்றன. அவர்கள் — ஒரே பள்ளிக்கூடத்தில் இரு மொழிகளுக்கிடையே பாலமாக நின்றவர்கள். பயமும் அரசியலும் நிரம்பிய காலத்தில் மௌனத்திற்கும் வார்த்தைக்கும் அர்த்தம் கற்றுக் கொண்டவர்கள். ஒரே தேநீரில் இரண்டு மொழிகள், ஒரே மௌனத்தில் இரண்டு வரலாறுகள், ஒரே சிரிப்பில் ஆயிரம் கேள்விகள். அவர்கள் கையில் போர்க் கொடிகள் இல்லை, பாடப்புத்தகங்கள் மட்டுமே. அதிகாரம் பிரிக்க முயன்றதை அறிவு இணைத்தது, பயம் கட்டிய சுவர்களை நகைச்சுவை உடைத்தது. அந்த பள்ளிக்கூடத்தில் பாடத்திட்டம் மட்டும் கற்பிக்கப்படவில்லை— ஒரு நாட்டுக்கான மாற்றுப் பாடமும் அமைதியாக எழுதப்பட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2025 [சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) https://www.facebook.com/groups/978753388866632/posts/33724462253868989/?
  14. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99C பகுதி: 99 C [99 இன் தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] பொன்பரிப்பு அல்லது பொம்பரிப்பு [Ponparippu] தொல்லியல்களம் இலங்கையின் தற்போதைய புத்தளம் மாவட்டத்திலுள்ள பொன்பரிப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது புத்தளம் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வடக்கில், கடற்கரையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள கண்டுபிடிப்புகள், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, புத்தளம், அனுராதபுரம் மற்றும் இலங்கையின் பிற உள் பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இந்தப் பகுதிகளில் காணப்படும் கலசப் புதைகுழிகள் [urn burials] ஆதிச்சநல்லூர் மற்றும் தென்னிந்தியாவின் பிற இடங்களில் காணப்படும் கலசப் புதைகுழிகளுடன் ஒத்தவையாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. 1923 - 1924 ஆம் ஆண்டுகளில் ஏ. எம். ஹோக்கார்ட் (A.M. Hocart) என்பார் புத்தளம் - மன்னார் கரையோரப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டபோது பொன்பரிப்பில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றைக் கண்டுபிடித்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ராஜா டி சில்வா, பல தாழி அடக்கமுறை சார்ந்த பல ஈமத்தாழிகளை அகழ்ந்து எடுத்தார். பின்னர் 1970 ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஆய்வு நடத்திய விமலா பேர்க்லே (Vimala Begley), பெனட் புரொன்சன் (Bennet Bronson), முஹம்மது மௌரூப் (Mohamed Mauroof) ஆகியோரைக் கொண்ட பென்சில்வேனியப் பல்கலைக் கழகக் குழு ஒன்று இப் பகுதியிலிருந்து மேலும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மகாவம்சம் கி.பி முதல் நூற்றாண்டில் இலங்கையின் வடக்கே ஆட்சி செய்த இலம்பகர்ணர்கள் [Lumbakarnars] என்று அழைக்கப்படும் ஒரு குலத்தையும் குறிக்கிறது. உதாரணமாக, சுபகராஜனுக்குப் பிறகு கி.பி 66 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த மன்னன் வசபன் இந்தக் குலத்தைச் சேர்ந்தவன் என்று நாளாகமங்கள் கூறுகின்றன. சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) பாண்டிய நாட்டிலும் இலம்பகர்ண குலத்தின் இருப்பை குறிக்கிறது. பாண்டிய நாட்டைச் சேர்ந்த மாளவ மக்களுக்கும் [Malavas], இலங்கையில் இருந்த இலம்பகர்ண குலத்தினருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன இவர்கள் ஆயுதங்களுடன் போர்த் தொழில் செய்து வாழும் இன மக்கள் என்று அறியப்படுகிறது. இலங்கையின் தொல்பொருள் துறையால் யாழ்ப்பாணத்தில் முதன்முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்டது கந்தரோடை [Kandarodai] தான். அகழ்வாய்வில் கிடைத்த முக்கியமான தொல்பொருள்கள்: [1] தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உள்ள கருமை-சிவப்பு பானைச் சிதறல்கள் – 300 BCE , [2] ரோமன் நாணயங்கள், [3] பாண்டிய, சேர அரசுகளின் தொன்மையான நாணயங்கள், [4] 500 BCE-இல் கரூரிலிருந்து வந்த லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள், [5] இந்தியாவின் 6-ம் - 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த "புராணா" எனப்படும் குறியிடப்பட்ட நாணயங்கள் [6] கண்மை பூசும் குச்சி (Kohl sticks), இது 2000 BCE-இல் எகிப்தியர்கள் பயன்படுத்தியதற்கு ஒத்தவையாக இருந்தது. இந்த அனைத்தும் யாழ்ப்பாணத்தில் பண்டைய காலங்களில் கடலோர வர்த்தகம் மிகச் சிறப்பாக நடை பெற்றதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சமீபத்திய அகழ்வாய்வுகளில் "சிவகணங்கள்" (Sivaganams) இந்த தூபிகளில் [Kantharodai (Kandarodai) Buddhist stupas] காணப்பட்டுள்ளன. டாக்டர் பி.எச்.டி.எச். கோடகும்புரா (பெரும்பாலும் டாக்டர் கோடகும்பரா என்று குறிப்பிடப்படுகிறார்) ஒரு புகழ்பெற்ற இலங்கை தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார் [Dr. P.H.D.H. Godakumbura ]. இவர் தான் இந்த ஆய்வு செய்தவர். இது பௌத்தமும், இந்துவும் ஒரே இடத்தில் இணைந்து இருந்ததற்கு சான்றாக சிவகணங்கள் உள்ளன. இவை பண்டைய யாழ்ப்பாணத் தமிழர்கள் வணிகத்தில் முன்னேறியதையும், பல மதங்களையும் ஏற்று வளர்ந்ததையும் காட்டுகின்றன. மேலும், காரைநகர், ஆனைக்கோட்டை , வல்லிபுரம், பூநகரி, மாந்தை,[Karainagar, Anaikottai, Vallipuram, Poonagari, Manthai] ஆகிய இடங்களில் கிடைத்த மூன்றாம் நூற்றாண்டு BCE-இல் தோன்றிய தொல்பொருள்கள், யாழ்ப்பாணத்தில் பெருங்கற்காலம் அல்லது பண்டைய மெகலிதக் கலாச்சாரம் (Megalithic Culture) இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் குதிரைமலை (சிங்களம்: කුදිරමලෙයි, கிரேக்கம்: Hippuros, ஆங்கிலம்: Horse Cliff) என்பது இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்த முனை பகுதியும் பண்டைய துறைமுக நகரமும் ஆகும். இது முன்பு யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர். இது நல்லூருக்கு முன் தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கியது. இப்பகுதி ஆட்சியாளர்களில் அல்லி ராணி, கொற்றன், அவரது தந்தை (பிட்டன்) மற்றும் சமகாலத்தவர்களான அதியமான் நெடுமான் அஞ்சி மற்றும் அவரது மகன் குமணன் ஆகியோர் அடங்குவர் என Kolappa Pillay Kanakasabhapathi Pillay. (1963). South India and Ceylon. சென்னைப் பல்கலைக்கழகம். pp. 39 கூறுகிறது. இது புறநானுறு பாடலிலும் பிட்டங்கொற்றன் பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. [Pittan-Korran was a chieftain (Velir) of Kudiramalai, a port city in ancient Tamilakam, which is identified with the Kudiramalai region in present-day northwestern Sri Lanka. He served as a commander-in-chief under the Chera king during the 1st century BCE – 1st century CE.] வல்லிபுரத்தில் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு தேதியிட்ட) காணப்படும் வல்லிபுரப் பொற்சாசனம் அல்லது தங்கத் தகடு கல்வெட்டுகளில், "வித்த மகரஜ வஹயா ரஜெஹி அமெதெ இஸிகிரயே நகதிவ புஜமெதி படகர அதநெஹி பியகுகதிஸ விஹர கரிதே.” இப்பொற்தகட்டின் நடுவில் பிராமி எழுத்துகளால் பிராகிருத மொழியில் இப்படி பொறிக்கப்பட்டுள்ளது. இப்பொற்சாசனத்தை முதன்முதலாக வாசித்து இச்சாசனத்தின் மொழிபெயர்ப்பையும், அதன் பொருள் விளக்கத்தையும் பேராசிரியர் பரணவிதான, எப்பிகிராபியா சிலனிக்கா (Epigraphia Zeylanica) என்ற இலங்கையின் கல்வெட்டுச் சாசன நூலின் நான்காவது பாகத்தில் வெளியிட்டிருக்கிறார். அது, வஸப மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரான இஸிகிரய நாகதீவை நிர்வாகம் செய்யும் போது, படகர அத்தனாவில் பியகுக திஸ்ஸ விகாரையைக் கட்டுவித்தான் என்று விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. இதில், முதல் வரியில் காணப்படும் ‘வஹ’ என்ற பதம் கி.பி. 124 – 168 ஆண்டுக் காலத்தில் அநுராதபுரத்திலிருந்து ஆட்சி புரிந்த வசபனைக் குறிப்பிடுவதாகத் கூறுகிறார். ஆனால், இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளிலும் வசபனின் பெயர் ‘வஸப’ அல்லது ‘வஹப’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே ஒழிய எந்தக் கல்வெட்டிலும் இந்த அரசனின் பெயர் ‘வஹ’ என எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இரண்டாவது, இச்சாசனத்தின் இரண்டாவது வரியில் காணப்படும் “இஸிகிரயே நகதிவ புஜமெநி” என்பதற்கு ‘இஸிகிரயன் நாகதீபத்தை நிர்வகித்த பொழுதில்’ அல்லது ‘நிர்வகித்த தலத்தில்’ என்று பொருள் படுகிறது. என்றாலும், அவரால் ‘இஸிகிரய’ என்ற பெயருக்கு வடமொழியிலிருந்தோ, சிங்களத்திலிருந்தோ [“பழைய சிங்கள மொழி” எனக் கூறி] மூலத்தைக் கண்டுபிடிக்க முடியாமையால், இப்பெயர் இந் நாட்டிற்குப் புறம்பானதொரு பெயர் என முடிவெடுத்தார். ஆனால், அவர் மறைத்தது அது ஒரு தமிழ் பெயர் என்பதையே! அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு அவரின் நோக்கம் வெள்ளிடைமலையே! இஸிகிரியன் என்ற பெயர் ‘ராயன்’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனக்கருதிய பரணவிதானவிற்கு, இது ஒரு தமிழ்ப் பெயர் என்று ஏன் தெரியவில்லை? உதாரணமாக, தமிழில் ராயன் என்பது ஒரு குழுத்தலைவரைக் குறிப்பிடும் பெயராகும். முடிநாகராயன், மழவராயன், பல்லவராயன், வசந்தராயன், காத்தவராயன் என்பன தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் பெயர்களாகும். மற்றும், இச் சாசனத்தின் முதல் வரி இசிகிரயனை ‘ரஜெஹி அமெதெ’ எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள் ராஜ்யத்தின் பிரதிநிதி அல்லது அரச அதிகாரி என்பதாகும். ஆகவே குறிப்பிடப்பட்டுள்ள 'இசிக ராயன்', ராயன் என்ற பட்டத்துடன் கூடிய ஒரு மாளவத் தலைவராக இருக்கலாம்? நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 D தொடரும் / Will follow பகுதி Part: 99C https://www.facebook.com/groups/978753388866632/posts/33705538969094651/?
  15. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 9 🌸 பாகம் 09 - துபாய் அதிசய தோட்டத்தின் [துபாய் மிராக்கிள் கார்டன்/ Dubai Miracle Garden] அற்புதங்கள் காலை நேரம் பிரகாசமாகவும் வெளிகளில் அது மென்மையான தென்றலுடனும் இருந்தது. குடும்பம் துபாய் அதிசயத் தோட்டம் அல்லது மந்திரத் தோட்டத்தை [மிரக்கிள் கார்டன் / Miracle Garden] நோக்கி பயணம் செய்தது — வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த உலகம் அது. காரில் இருந்த போதே, நிலன் தூரத்தில் பரந்து விரிந்த சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா மலர்களின் வரிசை அடிவானத்தில் நீண்டு கொண்டிருப்பதைக் கண்டான். கார் கண்ணாடியில் முகத்தை அழுத்திக் கொண்டபடி, “தாத்தா... அந்தப் பூக்கள் அனைத்தையும் பாருங்கள்!” என்று நிலன் கத்தினான். திரேன் உற்சாகத்தில் முன்னோக்கிச் சாய்ந்தான், அதே நேரத்தில் குட்டி ஆரின் மலர்களின் வண்ணங்களில் கவரப்பட்டு, மகிழ்ந்து கைதட்டினான். அவர்கள் தோட்டத்துக்குள் நுழைந்தவுடன், குழந்தைகள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். அந்த தோட்டம் ஒரு மாயக் கதையின் உலகம் போல இருந்தது. பிரமாண்ட மலர் வளைவுகள், மேலே வானில் சுரங்கங்களாக அமைந்திருந்தன; ரோஜா, பெட்டூனியா, ட்யூலிப் [roses, petunias, and tulips] மலர்களின் வாசனை காற்றை நிரப்பியது. ஒவ்வொரு பாதையும் புதிய அதிசயத்திற்கே வழி காட்டிச் சென்றது — இதயங்கள், நட்சத்திரங்கள், விமானங்கள், மற்றும் வாழ்க்கை அளவிலான டிஸ்னி கதாபாத்திரங்கள் வரை மலர்களால் உருவாக்கப்பட்டு இருந்தன! நிலன் முழுக்க மலர்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய மிக்கி மவுஸ் சிலையை நோக்கி ஓடினான். அதில் உள்ள பிரகாசமான வண்ணமயமான பூவிதழ்களைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்தான். திரேன் ஒரு டிராகன் வடிவ மலர் சிலையை கண்டு பிடித்து, அதில் மந்திர வானம் ஒன்றில் பறப்பது போல் கற்பனை செய்து மகிழ்ந்தான். குட்டி ஆரின் தாத்தாவின் கைகளில் நிம்மதியாக இருந்து கொண்டு, ஒவ்வொரு புதிய நிறத்தையும் வடிவத்தையும் கண்டு மகிழ்ந்தான். தாத்தா அவர்களை வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும் தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சிகள் அங்கும் இங்கும் காற்றில் அழகாக சிறகடித்து பறந்து கொண்டு இருந்தன. நிலன் ஒரு மஞ்சள் - ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சியை பின்தொடர்ந்து, “என்னுடன் வா, குட்டி தோழனே!” என்று மெதுவாக மெதுவாகச் சொன்னான். திரேன் இரு கைகளையும் மெதுவாக நீட்டி நீட்டி ஒன்றையாவது பிடிக்க முயன்றான்; ஆரினின் கண்கள் ஒவ்வொரு சிறகின் அசைவையும் மகிழ்ச்சியுடன் பின்தொடர்து சிணுங்கின. பிறகு அவர்கள் தோட்டத்தின் மையக்காட்சியாக இருந்த, மலர்களால் ஆன அரண்மனைக்கு வந்தனர். அங்கே வண்ணமயமான மலர்களால் ஆன கோபுரங்கள் வானைத் தொட்டன; சுற்றிலும் பாலங்கள், சிறிய நீரூற்றுகள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் மகிழ்ச்சியாக ஓடி, தாங்களே ஒரு இளவரசர், இளவரசி என கற்பனை செய்து விளையாடினார்கள். நுழைவாயிலில் நிலன் வியப்புடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டான்; திரேன் கோட்டையை கண்ணுக்குத் தெரியாத டிராகன்களிடமிருந்து போராடி பாதுகாப்பதாக பாசாங்கு செய்தான். அங்கே இருந்த பெட்டிக் கடை ஒன்றில், மலர் வடிவ ஐஸ்கிரீம்கள் [flower-themed ice creams] விற்பதைக் கவனித்த தாத்தா, அவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை கொடுக்க, ரோஜா மற்றும் சூரியகாந்தி வடிவில் வடிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை வாங்கி அவர்களுக்கு கொடுத்தார். அதை பார்த்து குழந்தைகள் ஆச்சரியப்பட்டனர். நிலன் தனது “ரோஜா” ஐஸ்கிரீமை நக்கி, நக்கி மெதுவாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டு, அண்ணனுக்கு ஐஸ்கிரீமை காட்டி காட்டி சிரித்தான்; திரேன் தனது கூம்பில் வண்ணங்களின் சுழற்சியைக் [swirl of colors on his cone] கண்டு வியந்தான்; குட்டி ஆரினுக்கும் சிறிய ஐஸ்கிரீம் ஸ்கூப் [பகுதி / scoop] கிடைத்தது. அதை விரல்களில் தடவி தடவி மகிழ்ந்தான். அந்த மலர் தோட்டத்தில், பாரம்பரிய உயரமான, அடர்த்தியான வேலிகளுக்குப் பதிலாக, பூக்கும் தாவரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, குழப்பங்கள் நிறைந்த மலர் பாதைகள் (flower maze), பெரிய ஊஞ்சல் மற்றும் மலர் வளைவுகளுக்கு அடியில் இருக்கும் சிறிய தேவதை வீடுகள் [tiny fairy houses tucked under flower arches] போன்றவற்றை மறைத்திருந்த மூலைகளும் இருந்தன. நிலனும் திரேனும் சிரித்துக்கொண்டு அந்தக் குழப்பங்களில் ஓடினார்கள், ரகசிய வழிகளைத் தேடினார்கள்; தாத்தா அவர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு, அதேநேரம், மெதுவாக ஆரினைத் தூக்கி சிறிய தேவதை வீட்டின் ஜன்னல்களுக்குள், அவனை எட்டிப் பார்க்க அனுமதித்தார். சூரியன் மறையத் தொடங்கியபோது, தோட்டம் வேறொரு உலகமாக மாறியது. மலர்கள் மென்மையான விளக்குகளில் ஒளிர்ந்தன; பாதைகள் மாய தூள் தூவப்பட்டது போல் மின்னின. “தாத்தா… இது மந்திரம் போல இருக்கு,” என்று நிலன் மெதுவாகச் சொன்னான். இருவரினதும் கைகளையும் பிடித்தபடி, “ஆம், என் சிறு ஆராய்ச்சியாளர்களே,” என்றார் தாத்தா. “நாம் பார்த்து ரசித்த ஒவ்வொரு சாகசம் [துணிகர செயல்] போலவே, இந்த மிரக்கிள் கார்டனும் [Miracle Garden], நாம் ஆச்சரியத்துடன், துளி துளியாகத் தேடி அனுபவிக்கும் போது, நமக்கு உலகம் எவ்வளவு அழகானது என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது” என்றார். மலர்கள், வண்ணத்துப்பூச்சிகள், கனவுகள் நிரம்பிய வானவில் வழியாக நடந்த நாள், அவர்களின் இதயங்களில் வண்ணங்களாக, மகிழ்ச்சியாக, இனிய நினைவுகளாக மலர்ந்தபடி, அவர்கள் தோட்டத்திலிருந்து வெளியேறினர்.🌺 நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 10 தொடரும் கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 9 https://www.facebook.com/groups/978753388866632/posts/33705457379102810/?
  16. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99B பகுதி: 99 B [99 இன் தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] மகாவம்சத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, பல பண்டைய இலங்கை மன்னர்கள் கொடூரமான அதிகாரப் போராட்டங்களில் ஈடுபட்டனர் - பெரும்பாலும் அரியணையைக் கைப்பற்ற தங்கள் சொந்த சகோதரர்களையோ அல்லது உறவினர்களையோ கொன்றனர் - ஆனால் புத்த மதத்தின் அர்ப்பணிப்புள்ள புரவலர்களாகவே [காப்பவர்] இருந்தனர், தூபிகள், மடங்கள் கட்டினார்கள், சங்கத்தை (பௌத்த துறவி சமூகம்) தாராளமாக ஆதரித்தனர். சில ராணிகள் புதிய ஆட்சியாளரை உடனடியாக கணவராக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து ராணி பதவியில் இருந்தனர். என்றாலும் , பல ராணிகளுக்குப் புதிய மன்னர் தங்கள் கணவரைக் கொன்றிருந்தாலும், அவரை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அவர்களின் உயிர்வாழ்வும் அந்தஸ்தும் ஆளும் சக்தியுடன் இணைந்து செயல்படுவதைப் பொறுத்தது என்பதே இதற்குக் காரணமாக கூட இருக்கலாம்? மேலும் வன்முறைச் செயல்கள் இருந்தபோதிலும், மன்னர்கள் ஆட்சி செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தேவைப்பட்டது, ஒரு பௌத்த சமூகத்தில், கோயில்களையும் துறவிகளையும் ஆதரிப்பதே பொது அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும் என்பதாக அவர்கள் நம்பினார்கள், மற்றும் அப்படியான நம்பிக்கை தான் அங்கு விதைக்கப்பட்டும் இருந்தன. ஏன் இன்றும் இலங்கையில் நடப்பதை உற்று நோக்குங்கள், அது உங்களுக்குப் புரியும்? பௌத்த போதனைகள் கர்மா மற்றும் புண்ணியத்தை வலியுறுத்துகின்றன. எனவே, தூபிகளைக் கட்டுவதன் மூலமும், மடங்களுக்கு நிலம் வழங்குவதன் மூலமும், மத விழாக்களுக்கு நிதியளிப்பதன் மூலமும், அவர்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யலாம் என்பது எவ்வளவு வேடிக்கையான செயல் ? இதையா புத்தர் போதித்தார்? சற்று சிந்தியுங்கள்! யாழ்ப்பாணத்தின் எழுத்தறிவற்ற கிராம மக்களிடையே பேசப்படும் ஏராளமான சங்கச் சொற்கள் மீண்டும் சங்கத் தொடர்புகளை ஆதரிக்கின்றன. உதாரணமாக, அவன் இவன் என்ற இரு சொற்களுக்கும் இடைப்பட்ட உவன் என்பது தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. அதைப் போலவே சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்ட பொருளைக் குறிக்கும் உது, உவர், உப்பால், உங்கை (உங்கே), உம்பர், உவண், உவள், உதை (அதை), உதுக்கு முதலிய பல சொற்கள் யாழ்பாணத் தமிழில் வழக்கில் உள்ளன. தமிழகத் தமிழில் அவை இல்லாமல் போய்விட்டன. மேலும் யாழ்த் தமிழில் வழங்கும் பல சொற்கள் அதே வடிவத்தில் தமிழகத் தமிழில் வேறு பொருள்களைப் பெற்று வழங்குகின்றன. மேலும் கிழக்கிலங்கையின் வரலாறும் கி.மு. 5ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து அது சங்க கால தமிழ் நாட்டு மக்களுடன் நெருங்கிய தொடர் கொண்டிருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். அத்தொடர்பானது பேச்சு வழக்கில் தற்போதும் காணப்படுவது சிறப்பம்சம். உதாரணமாக, தொல்காப்பியர் காலச் சொற்கள் இன்றும் கிராமப்புற பேச்சு வழக்கில் காணப்படுகிறது. கா, அதர், குடி, மருங்கு, மறுகா, கரப்பு, அரவம், செக்கல், யாமம், கடுவன் என்பனவற்றைக் குறிப்பிடலாம். யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, என வரூஉம் ஆயேழ் சொல்லும் அசை நிலைக் கிளவி (தொல்காப்பியம் - சொல் 279) பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச்செங்கோலின் செய் தொழிற் கீழ்ப்பட்டாளோ இவள்? இவள் காண்டிகா! (மருதக்கலி) காணிகா வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மட மகளிர் எல்லீருங் கேட்மின் (சிலப்பதிகாரம்) இன்றும் கிராமப்புறங்களில் “கா” அசைச் சொல் மரியாதையாக வயதானவரை அல்லது தமக்கு நெருக்கமானவரை அழைக்கப் பயன்படுகிறது. “என்னகா பாடு?” என்பது ‘எப்படிச் சுகம்?’ என்று வினவ பாவிக்கப்படுகிறது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 C தொடரும் / Will follow துளி/DROP: 2022 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99B https://www.facebook.com/groups/978753388866632/posts/33687881290860419/?
  17. கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 06 "நான் உன்னை காதலிக்கிறேன்," என்று அவர் ஒரு நாள் சொன்னார். அவள் அந்த உணர்வை நிராகரிக்கவில்லை. உங்களைப் பொறுத்தவரையில், பயமும் இல்லை. மறுப்பும் இல்லை ” என்றாள். அனால் அதன் பின்னணியில் உள்ள திருமணம் என்ற கட்டமைப்பைத் தான் நான் நிராகரிக்கிறேன் என்றாள். " என் இருப்பு, சகிப்புத் தன்மையைச் [பொறுத்துக் கொள்ளும் தன்மையை ] சார்ந்திருக்கும் வேறொரு வாழ்க்கையில் நான் நுழைய மாட்டேன்.[“I will not enter another life where my existence depends on tolerance.”] " என்று மேலும் கூறினாள். கண்மணி தான் விரும்பிய இடத்திலேயே இருந்தாள். தனிமையாக இல்லை. உடைந்து போகவில்லை. முழுமையானவளாக . அவளருகில் மகள் நிம்மதியாக உறங்கினாள் — பயமற்ற சுவாசத்துடன். கண்மணிக்கு இப்போது தெளிவாயிற்று: சில பெண்கள் ஆண்களை விட்டு போவதில்லை. அவர்கள் அமைப்புகளை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த வெளியேற்றத்தில் தான் அவர்கள் தங்களை மீட்டெடுக்கிறார்கள். அதன் பின், ஓய்வு பெற்ற அதிகாரி ஒரு கவிதை அவளுக்கு அனுப்பினார்: "The gentle breath of your memory, A light in my night, Yet love unapproachable, I long to touch you." "உன் நினைவின் - மெல்லிய சுவாசமே என் இரவில் - விளக்காக ஒளிர்கிறது! நெருங்முடியாத காதல் - உன்னுடையது என்றாலும் உன்னைத் தொட - நான் ஏங்குகிறேன்." கவிதை கண்மணிக்கு ஆசையைத் தூண்டியது, ஆனால் அவளின் திருமணக் கதவு மட்டும் மூடியே இருந்தது. அதிகாரி அவளை, அவளுக்கு பொருத்தமான திருமண வாழ்வில் இணைய, அவளுக்கு மீண்டும் அப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்க, பலவழிகளில் முயன்றார். ஆனால் அவள் ஒரு புரியாத புதிராகவே இருந்தாள். அவள் விவாகரத்து செய்தபோதும், அவளின் கழுத்தில் அவன் கட்டிய தாலி இன்னும் இருக்கிறது. அவன் அவளுக்கு அணிந்த மெட்டி இன்னும் இருக்கிறது. அவள் சொல்லும் காரணம், இந்த சமுதாய அமைப்பில், தான் தனியாக வெளியே போகும் பொழுது, இது பாதுகாப்பானது. அதற்கு மட்டுமே அவை! இணைய ஒளியில் ஒளிர்ந்து முகநூல் கடலில் மிதந்து நலமா எனக் கேட்டு நங்கை இவள் வந்தாள் கவிதை மலரை மணந்து கருத்துப் பல கூறி சுகமா எனக் கேட்டு சுந்தரி இவள் வந்தாள் நெருங்கி இணையத்தில் உறவாடி நெஞ்சம் குளிரக் கதைத்தாள் திருமண வாழ்வின் முறிவை மூடி மறைக்காமல் சொன்னாள் கல்யாண வாழ்வின் வெறுப்பால் மீண்டும் தலைநீட்ட மறுத்தாள் ஆனால் காதல் கவிதை ரசிப்பாள் அதில் பாலியல் உறவும் ரசிப்பாள் மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை சொல்லத்தெரியாத கனவும் உண்டு தீர்க்கமுடியாத ஆசையும் உண்டு அழகான தேவதை அவள் அறியாத பருவம் அல்ல தெரியாத ஒன்றும் இல்லை புரியாத புதிர் அவள் இப்படித்தான் அந்த அதிகாரி, அவளைப்பற்றி தன் நாட்குறிப்பில் அழகான, இலக்கிய நயம் கொண்ட கவிதை வடிவில் பதிவு செய்தார். அவளுக்கு கவிதைகள் பாதுகாப்பான ஆசையாகவும், உரையாடல் தனிப்பட்ட நெருக்கமாகவும் மாறியது. அவள் தினமும் படித்து, உரையாடி அதில் மகிழ்ச்சியைக் கண்டாள். ஆனால் அவளின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கண்மணி தனது தனிமையை வலிமையாக மாற்றினாள். அவள் மீண்டும் திருமணத்தை விரும்பவில்லை. கவிதை, உரையாடல் மற்றும் நெருக்கமான தொடர்பு அவளுக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டு வந்தது. தனது குழந்தை மற்றும் வேலை இரண்டையும் தன்னுடன் சேர்த்து, அவள் தனக்கு என ஒரு முழுமையான வாழ்க்கையை உருவாக்கினாள். அவள் முதல் தடவையாக ஓய்வு பெற்ற அதிகாரிக்கு தானே எழுதி ஒரு கவிதை அனுப்பினாள். அது காதல் கவிதை அல்ல. அதிகாரியின் நாட்குறிப்பு கவிதைக்கு ஒரு பதிலாக. நான் விட்டு வந்தது ஒரு மனிதனை அல்ல. ஒரு வீட்டை அல்ல. ஒரு பெயரை அல்ல. நான் விட்டு வந்தது என்னைச் சுருக்கும் ஒரு கட்டமைப்பை. என்னை நேசித்தவர்கள் இருந்தார்கள். என்னை விரும்பியவர்களும் இருந்தார்கள். ஆனால் என்னை நானாகவே இருக்க விடாத இடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். காதல் எனக்குத் தடை இல்லை. கவிதை எனக்குத் தவறு இல்லை. நெருக்கம் எனக்குப் பயமில்லை. ஆனால் “சகித்துக் கொள்” என்று தொடங்கும் வாழ்க்கைக்கு நான் இனி வாசல் திறக்கவில்லை. என் கழுத்தில் தாலி இருக்கிறது. என் காலில் மெட்டி இருக்கிறது. அவை நினைவுகள் அல்ல — கவசங்கள். இந்தச் சமுதாயம் ஒரு பெண்ணை தனியாக பார்க்கத் தயாரில்லை என்பதால் நான் அவற்றை என் உடலோடு வைத்திருக்கிறேன். என் மனத்தோடு அல்ல. என் அருகில் என் மகள் உறங்குகிறாள். அவளின் மூச்சு எனக்குச் சொல்லித் தருகிறது — பாதுகாப்பு ஒரு ஆணின் நிழலில் அல்ல; ஒரு பெண்ணின் நிம்மதியில் தான். எனக்குக் கவிதைகள் வந்தன. நான் அவற்றைப் படித்தேன். சில வரிகளில் நான் சிரித்தேன். சில வரிகளில் என் உள்ளம் ஈரமானது. ஆனால் என் கதவு அப்படியே இருந்தது. மூடியே. என்னைப் புதிர் என்றார்கள். உண்மையில் நான் தீர்வு. நான் உடைந்தவள் அல்ல. நான் கைவிடப்பட்டவள் அல்ல. நான் தோற்றவள் அல்ல. நான் என்னை மீட்டுக் கொண்டவள். சில பெண்களுக்கு திருமணம் வாழ்க்கை. சில பெண்களுக்கு விவாகரத்து வாழ்க்கையின் தொடக்கம். நான் தொடங்கிய இடத்தில்தான் இப்போது நிற்கிறேன் — என்னுடன். கண்மணி இப்போது ஒரு “விவாகரத்து பெற்ற பெண்” அல்ல. அவள் — தன்னை மீட்டுக் கொண்ட பெண். சில பெண்களுக்கு திருமணம் வாழ்க்கை. சில பெண்களுக்கு விவாகரத்து தான் வாழ்க்கையின் தொடக்கம். கண்மணி இதில் இரண்டாவது வகை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முற்றிற்று துளி/DROP: 2021 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/33687281527587062/?
  18. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 99 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சிறிநாகன் இறந்த பிறகு அவனது மகன் ஒகாரிக திச்சன் [Voharika Tissa, also known as Vira Tissa, or Tissa the Lawgiver ], சட்டம் மற்றும் பாரம்பரியம் பற்றிய அறிவுடன், இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இங்கே வோஹாரிகா அல்லது ஒகாரிக [Vohārika] என்பது "முடிவெடுப்பவர்," ஒரு வழக்கு அல்லது சட்டத்துடன் தொடர்புடைய ஒருவர், நீதிபதி, சட்ட நீதிமன்றங்களில் ஒரு உயர் அதிகாரி போன்ற கருத்துக்களைக் குறிக்கிறது. இந்த நாட்டில் முதன்முதலில் (உடல்) காயத்தை ஏற்படுத்தும் தண்டனையை, தடை செய்யும் ஒரு சட்டத்தை அவன் இயற்றியதால், அவனுக்கு மன்னன் ஒகாரிக தீசன் என்ற பெயர் வந்தது. அபயநாகன் [Abhaya Naga] என்பவன் மன்னன் ஒகாரிக திச்சனின் தம்பி. அவன் தனது சகோதரனின் மனைவியான ராணியின் மீது காதல் கொண்டான். இது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அவன் ஓடிவிட்டான். பின்னர் அபயநாகன் தன்னுடன் பல தமிழர்களை ஒன்று சேர்த்து தன் அண்ணன் மன்னனுடன் சண்டையிடச் சென்றான். மன்னன் தனது மனைவியை குதிரையில் ஏற்றி மலை நாட்டுக்கு ஓடிவிட்டான். அபயன் அல்லது அபயநாகன் அவனைப் பின்பற்றி தனது சகோதரனைக் கொன்றான். அபயன் ராணியுடன் திரும்பி வந்து, எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அபயனின் மரணத்திற்குப் பிறகு அவனது சகோதரன் ஒகாரிக தீசனின் மகன் இரண்டாம் சிறிநாகன் [Siri Naga II] இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தனது தந்தை இறந்த பிறகு ஒரு வருடம் ஆட்சி செய்தான். வசனம் 58 முதல் 62 வரை, வழமை போல, கற்பனைக் கதைகள் உள்ளன. இறுதியில் முதலாம் சங்க தீசன், சிறிசங்கபோதி மற்றும் கோதகாபயன் [Samghatissa, Samghabodhi and Gothakabhaya] என்ற மூன்று அரச குடும்பத்தில் பிறக்காத, இலம்பகர்ண வம்சத்தவர்களால் [Lambakannas, இலங்கை மன்னர்களை அடிக்கடி ஆதரித்து சேவை செய்த முக்கிய போர்வீரர் குலங்களில் ஒன்று.] கொல்லப்பட்டான். [மகாவம்சத்தின்படி, இலம்பகர்ணர் அரச உதவியாளர்கள் என்றும் கூறலாம் ] சம்க தீசன் அல்லது சங்க தீசன் முதலில் மற்ற இருவரால் அரசனாகப் முடிசூட்டப் பட்டான். அவன் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அரசன் அவ்வப்போது அரண்மனைப் பெண்களுடனும், மந்திரிகளுடனும் பாசீன தீபகத்துக்கு [Pacinadipaka, இதற்கு கிழக்குத் தீவு என்று பொருள். இலங்கையின் வட முனக்கும் இந்தியாவுக்கு மிடையேயுள்ள ஒரு தீவு இது என்று கருதப்படுகிறது] நாவல்பழத்தை அருந்தப் போவது வழக்கம். மன்னன் வருவதை விரும்பாத அங்கிருந்த மக்கள் அரசன் பழங்களைப் பறித்துண்ணும் நாவல் மரத்துக்கு விஷமுட்டி விட்டனர். இதனால் விஷம் உட்கொண்டு இறந்தான். எனவே, சிறிசங்கபோதி அல்லது சிறிசம்கபோதி மன்னராகப் முடிசூடப்பட்டான். கோதகாபயன் படைகளின் தளபதியானான். சிறிசம்கபோதி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மீண்டும் அத்தியாயம் 36 இல், 74 முதல் 90 வரையிலான வசனங்களில் இரண்டு கற்பனைக் கதைகள் உள்ளன. அரசனுடைய மந்திரியாக இருந்த கோதகாபயன் கிளர்ச்சிக்காரனாக மாறி வடக்கே இருந்து தலைநகர் நோக்கிப் படையெடுத்தான். தன்னுடைய நீர் வடிகட்டியை எடுத்துக் கொண்டு அரசன் தான் மட்டும் தனியாக மற்றவர்களுக்கு கஷ்டம் நேரக்கூடாது என்பதற்காக தென் வாயில் வழியே தப்பி ஓடினான். மேகவண்ணபயன் [Meghavannabhaya] என்றும் அழைக்கப்படும் கோதகாபயன், இவ்வாறு மன்னனாகி பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். தனது ஆட்சியின் பொழுது, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் அறுபது பிக்குகளை அவன் இன்றைய தமிழ்நாட்டின் கடற்கரை வரை துரத்தினார். பேயோட்டுவது போன்ற மந்திரங்களைக் கற்ற, சோழ நாட்டைச் சேர்ந்த சங்கமித்தா [Sanghamitta] என்ற ஒரு பிக்கு, நாடு கடத்தப்பட்ட தேரர் ஒருவருக்குச் சீடராக இருந்து, பின்னர் மகா விகாரை பிக்குகளிடம் வெறுப் படைந்தவராக, இங்கு வந்தார். தூபராமாவில் [Thuparama or Thuparama Dagaba என்பது இலங்கையின் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால பௌத்த தூபியாகும். இது இலங்கையின் மிகப் பழமையான தூபியாகவும், நாட்டின் மிகவும் புனிதமான பௌத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது] கூடியிருந்த பிக்குகள் கூட்டத்தில் வலிய நுழைந்து அங்கு சங்கபால பரிவேனாவில் [parivena of Samghapala, சங்கபால பரிவேனா என்பது பண்டைய இலங்கையில் ஒரு துறவி கல்வி நிறுவனம் அல்லது புத்த துறவிகளுக்கான வசிப்பிடமாக இருந்தது.] வசித்த தேரர் சொன்ன வார்த்தைகளை மறுத்துப் பேசினார் அல்லது துப்பராம விகாரையின் பிக்குகளை தோற்கடித்தார். அந்த தூபராமா முதன்மை தேரருடைய பெயர் கோதாபயன் [thera Gothabhaya] என்பதாகும். இவர் அரசனுக்குத் தாய் மாமன் ஆவார். இவர் அரசனுடைய மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்தார். அவரிடம் மிகவும் திருப்தியடைந்திருந்த மன்னன் தன்னுடைய மூத்த மகன் ஜேத தீசனையும் அல்லது சேட்டதிச்சனையும் [Jetthatissa], இளைய மகன் மகாசேனனையும் [Mahasena] பிக்குவின் பொறுப்பில் விட்டிருந்தான். பிக்கு இரண்டாவது மகனிடம் அதிக அன்பு பாராட்டி வந்ததால் ஜேததீசன் அவரிடம் விரோதம் கொண்டிருந்தான். தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஜேததீசன் அரசனானான். தந்தையின் ஈமச் சடங்கின் போது தன்னுடன் ஊர்வலத்தில் வராத மந்திரிகளை அவன் தண்டிக்க எண்ணினான். முதலில் தம்பியைப் போக விட்டு பின்னால் சடலத்தை எடுத்துச் செல்லச் செய்தான். அதற்குப் பின்னால் மந்திரிகளை வரச் செய்து ஊர்வலத்தின் கடைசியில், தான் அவன் வந்தான். தம்பியும் சடலமும் வாயிலைக் கடந்து வெளியேறியதும் சட்டென்று கதவை மூடச் செய்தான். பின்பு துரோகிகளான மந்திரிகளைக் கொன்று தந்தையின் சிதையைச் சுற்றி அவர்களின் உடல்களைக் கம்பத்தில் நட்டு வைக்கச் செய்தான். இவ்வாறு செய்ததன் காரணமாக ‘கொடிய' என்ற அடைமொழியால் அவன் பின் அழைக்கப் பட்டான். சேட்டதிச்சன் அல்லது முதலாம் சேட்டதிச்சன் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். Part: 99 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Sirinaga his son, Tissa ruled for twenty-two years. He forbade bodily injury as punishment. Abhayanaga was the younger brother of the king Tissa. He fell in love with the queen, consort of his brother. He ran away when this was discovered. Later Abhaya collected many Damilas with him and went to fight the king. The king took flight to Malaya, hill country, with his consort on horseback. Abhaya followed suit and killed his brother. Abhaya returned with the queen and ruled eight years. After Abhaya’s death, the son of his brother Tissa, Sirinaga, ruled for two years. Sirinaga’s son Vijaya Kumaraka ruled for one year after the death of his father. There are fictitious tales from verse 58 to 62, and in the end the king was murdered by three Lambakannas: Samghatissa, Samghabodhi and Gothakabhaya. Samghatissa was first consecrated as the king by the other two. He ruled for four years. He was poisoned by the people of Pacinadipaka, and Samghabodhi was consecrated as the king and Gothakabhaya became the commander of the troops. Samghabodhi ruled two years. He was also known as SiriSamghabodhi. There are two fanciful stories in verses from 74 to 90. Gothakabhaya, the treasurer of the king, became a rebel and came to fight the king, SiriSamghabodhi. The king SiriSamghabodhi ran away as he did not want harm come to anyone. Gothakabhaya thus became the king and ruled for thirteen years. He chased about sixty bhikkhus of different sects to the further coast: to the coast of present day Tamil Nadu. A bhikkhu from Cola people came and defeated the bikkhus of Thuparama Vihara or something similar. The king died, and the elder son Jetthatissa ascended the throne. He killed many ministers and impaled them. He was known as the Cruel because of this act. His younger brother was Mahasena. Jetthatissa reigned for ten years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 B தொடரும் / Will follow துளி/DROP: 2020 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 99A https://www.facebook.com/groups/978753388866632/posts/33671588222489726/?
  19. "மூன்று கவிதைகள் / 23" 'பொங்குக பொங்கல்' கற்ற அறிஞர்கள் வரலாறு பாட கற்புக் கன்னிகள் கோலம் போட உற்றார் உறவினர் கதிரவனை வணங்க ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில் பொது வெளியில் தோரணம் ஆட பதுமை கூடி பொங்குக பொங்கல்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்] ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்! செல்வம் பூட்டி வைப்பதல்ல தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .............................................................................. "மூவெழில் மூன்று" காற்றின் இசையில் கனவுகள் மலர, நினைவுகள் வான் உயர, அமைதியில் உறையும் ஆனந்தக் கற்பனை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ..................................................................... துளி/DROP: 2019 ["மூன்று கவிதைகள் / 23" https://www.facebook.com/groups/978753388866632/posts/33671173965864485/?
  20. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 98 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 98 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 36: மகல்ல நாகனுடைய [Mahallaka Naga] மறைவுக்குப் பின்பு அவனுடைய மகன் பாதிக தீசன் [Bhatika Tissa] இலங்கையில் இருபத்திநான்கு வருடம் ஆட்சி செய்தான். பாதிக தீசன் இறந்த பிறகு அவனது தம்பி கனித தீசன் அல்லது கனித தீசகன் [Kanittha Tissa,also known as Kanitu Tis] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். நாகதீபத்தில் உள்ள ஆலயத்தைப் புனர்நிர்மாணம் செய்தான். இது நாகதீபத்தில் உள்ள ஒரு கோயில், ஒரு புத்த விகாரை அல்ல என்பதை நினைவில் கொள்க. இவைகளுக்கு அத்தியாயம் 36, வசனம் 6 இல் இருந்து 9 வரை பார்க்கவும், "பாதிக தீசனுடைய மறைவுக்குப் பின்பு அவனுடைய தம்பி கனித தீசகன் இலங்கைத் தீவில் பதினெட்டு வருட காலம் ஆட்சி செலுத்தினான். பூதாராமாவிலிருந்த மகாநாக தேரரிடம் [thera Mahanaga in the Bhutarama] பெருமதிப்புக் கொண்ட அவன் அவருக்காக அற்புதமான முறையில் அபயகிரியில் ரத்தின பாஸாதாவைக் [Ratanapasada in the Abhayagiri] கட்டினான். மேலும் அபயகிரியில் பெரிய மதிலையும் பரிவேனாவையும் [a wall and a great parivena] அமைத்தான். அதுபோல் மணிசோம [Manisoma] விகாரையையும் அமைத்தான். அந்த இடத்தில் சேதியத்துக்கு [cetiya] ஒரு ஆலயத்தைக் கட்டினன். அதேபோல் அம்பாதல தூபத்தையும் [Ambatthala-thupa] அமைத்தான். மேலும் நாகதீபத்திலுள்ள ஆலயத்தைப் புனர்நிர்மாணம் செய்தான்." பூதாராமா - பண்டைய இலங்கையில் கட்டப்பட்ட ஒரு மடாலயம் அல்லது கோயில், புத்த துறவிகளுக்கான ஒரு இடமாக கட்டப்பட்டிருக்கலாம்? அபயகிரியில் உள்ள ரத்தின பாஸாதா - அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி மடாலயத்திற்குள் உள்ள ஒரு அமைப்பு, துறவற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பல மாடி கட்டிடம் ஆகும். "ரத்தின பாஸாதா" என்றால் "நகை அரண்மனை" அல்லது "ரத்தின மாளிகை", அதாவது, இது ஒரு அற்புதமான அமைப்பு என்பதைக் குறிக்கிறது. பரிவேனா என்பது ஒரு துறவற கல்வி நிறுவனம் அல்லது துறவிகளுக்கான குடியிருப்பு வளாகம் ஆகும். ஆனால் அது ஒரு குறிப்பிடத்தக்க மடத்தையும் குறிக்கலாம். மணிசோம விகாரை - மணிசோம என்ற ஒரு நபரின் பெயரிடப்பட்ட ஒரு புத்த மடாலயம் (விகாரை). அவர் ஒரு முக்கியமான நன்கொடையாளர் அல்லது ஒரு மரியாதைக்குரிய துறவியாக இருக்கலாம்? அம்பாதல தூபம் அல்லது தூபி - மிஹிந்தலையில் இருப்பதாக நம்பப்படும் அம்பாதலத்தில் அமைந்துள்ள ஒரு தூபி (பௌத்த நினைவுச்சின்னம்). மிஹிந்தலை என்பது பேரரசர் அசோகரின் மகன் அருகதர் [Arhat or Arahant] மகிந்த முதன்முதலில் இலங்கைக்கு புத்த மதத்தை அறிமுகப்படுத்திய புனிதத் தலமாகும். சேதியம் - புத்தர் அல்லது மதிப்பிற்குரிய துறவிகளின் நினைவுச்சின்னங்களை வைப்பதற்காக கட்டப்பட்ட ஒரு தூபி அல்லது புனித நினைவுச் சின்னத்தைக் குறிக்கிறது. பொதுவாக, சேதியங்கள் பௌத்த மரபுகளில், குறிப்பாக இலங்கையில் குறிப்பிடத்தக்க வழிபாட்டுத் தலங்களாகும். மேலும் அவை வணக்கத்திற்குரிய பொருட்களாகவும் செயல்படுகின்றன. அருகதர் - ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy) அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு குறிப்பிடுகிறது. கனித தீசகனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன், குஜ நாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] ஒரு வருடம் ஆட்சி செய்தான். குஜ நாகனுடைய தம்பி குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuncanaga] என்பவன் அண்ணனைக் கொன்றுவிட்டு அரசனாகி இலங்கையை இரண்டு வருட காலம் ஆண்டான். குஞ்ச நாகனுடைய மனைவியின் தம்பி முதலாம் சிறிநாகன் [Sirinaga] என்பவன், முதல் படைத் தலைவனாக இருந்த பொழுது, அரசனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினான். போதிய படை வீரர்களைத் திரட்டியதும் தலைநகரைத் தாக்கினான். அரசனுடைய படைகளுடன் போரிட்டு குஞ்ச நாகனைத் தோற்று ஓடும்படி செய்தான். இலங்கையின் ஆட்சியைத் தன் வசப்படுத்திக் கொண்டு அனுராதபுரத்தில் பத்தொன்பது வருட காலம் ஆண்டான். Part: 98 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 36: After the death of Mahalaka Naga his son, Bhatikatissaka reigned for twenty-four years. After the death of Bhatikatissaka, his younger brother Kanitthatissaka ruled for eighteen years. He ordered the restoration of the temple in Nagadipa. Note this is a temple in Nagadipa, and not a Vihara. After the death of Kanitthatissaka his Khujjanaga ruled for one year. His younger brother Kuncanaga killed the king and ruled two years. Commander of the troops was Sirinaga, and he was the brother of the consort of the king. He became the rebel and fought the king. The king ran away. Sirinaga ruled for nineteen years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 99 தொடரும் / Will follow துளி/DROP: 2018 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 98 https://www.facebook.com/groups/978753388866632/posts/33653107911004424/?
  21. கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 8 🌙 பாகம் 08 - துபாய் வணிக வளாகத்தில் [துபாய் மாலில்] மாயாஜால மாலை துபாயில் மாலை மலர்ந்தது, நட்சத்திரங்கள் பூமிக்கு வருவது போல நகர விளக்குகள் பிரகாசிக்கத் தொடங்கின. தாத்தாவும் பேரன்களும் துபாய் மாலுக்கு [Dubai Mall] திரும்பவும் சென்றனர். ஆனால் இந்த முறை, சாகசம் வித்தியாசமாக இருந்தது - அது மாயாஜாலமாகவும், வண்ணமயமாகவும் [magical, colorful], குழந்தைகளை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. மீண்டும் மாலுக்குள் நுழைந்ததும் திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரினின் கண்கள் விரிந்தன. மின்னும் விளக்குகளால் அந்த இடம் பிரகாசித்தது, வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் நீரூற்றுகள் [fountains] பாய்ந்து கொண்டு மின்னின. பிரமாண்டமான உட்புற நீர்வீழ்ச்சி [indoor waterfall] சூடான விளக்குகளின் கீழ் பிரகாசித்து, பளிங்குத் தரைகளில் மின்னும் வடிவங்களைப் பிரதிபலித்தது. “தாத்தா... இது தானா பாட்டி சொல்லும் தேவலோகம்?” நிலன் தனது தம்பியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு கிசுகிசுத்தான். முதல் முதலாக அவர்கள் துபாய் மீன் காட்சியகம் மற்றும் நீருக்கடியில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு [Aquarium and Underwater Zoo] சென்றார்கள். அங்கு கற்பனை செய்யக் கூடிய அனைத்து வண்ணங்களிலும் மீன்கள் வைக்கப்பட்டிருந்தன. நியான் மீன்களின் ["Neon fish" / அமேசான் படுகையில் இருந்து வரும் ஒரு சிறிய, பிரகாசமான வண்ண மீன், அதன் மாறுபட்ட நீலம் மற்றும் சிவப்பு வரிக்கு பெயர் பெற்றது.] கூட்டம் ஒரு சரியான ஒழுங்கில் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டு மயங்கிய நிலன் கண்ணாடியில் தனது மூக்கை அழுத்தி அதை அருகில் பார்த்து ரசித்தான். தண்ணீரில் அமைதியாக சறுக்கிச் செல்லும் ஒரு சிறிய சுறாவை திரேன் சுட்டிக்காட்டி, அதை ஒரு நட்பு கடல் டிராகன் [sea dragon] என்று கற்பனை செய்தான். வண்ணமயமான கதிர்கள் நீரில் அழகாக தெறித்து சென்ற போது குழந்தை ஆரின் கைதட்டினான். தாத்தா அவனை கண்ணாடிக்கு அருகில் தூக்கி, கடல் உயிரினங்களைப் பற்றிய சுவாரஸ்யமான வேடிக்கையான கதைகளைக் கிசுகிசுத்தார். அடுத்து, அவர்கள் மெய்நிகர் சாகசங்கள் [virtual adventures] மெய்நிகர் உண்மை or தோற்ற மெய்ம்மை (virtual reality) மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்கள் [VR and entertainment zones] வழியாக அலைந்தனர். நிலன் ஒரு சிறிய VR ஹெட்செட்டை [headset] அணிந்து கொண்டு துபாயின் வானலையில் "பறந்து", மெய்நிகர் [மாய] ரோலர் கோஸ்டரில் சவாரி செய்த திரேனைப் பார்த்து கை அசைத்தான். குழந்தைகள், தாம் கடக்கும் வானளாவிய கட்டிடங்களையும் மணல் பாலைவனங்களையும் "பெரிதாக்கி" [“zoomed”], அவ்வற்றை ரசித்து சிரித்தனர், அவர்களின் கற்பனைகள் மெய்நிகர் உலகத்துடன் ஒன்றாகக் கலந்தன. குட்டி ஆரின் தாத்தாவின் கையில் இருந்து கொண்டு, ஒளிகளையும் ஒலிகளையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு மகிழ்வாக இருந்தான். துபாய் மாலுக்கு வெளியே உள்ள நீரூற்று நிகழ்ச்சி துபாய் நீரூற்று என்று அழைக்கப்படுகிறது, இது புர்ஜ் ஏரியில் [ Burj Lake] அமைந்துள்ள ஒரு பெரிய நடன நீர் [a large choreographed water], ஒளி மற்றும் இசை நிகழ்ச்சியாகும். பிற்பகல் நிகழ்ச்சிகள் தினமும் மதியம் 1:00 மணி மற்றும் 1:30 மணிக்கும், மாலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை நடைபெறும். எனவே, மெய்நிகர் வேடிக்கைக்குப் பிறகு, தாத்தா குடும்பத்தினர் மாலுக்கு [Mall] வெளியே நடந்த துபாய் ஃபவுண்டன் ஷோவிற்குச் [Dubai Fountain show] சென்றனர். சூரியன் மறைந்திருந்து, வானம் இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பிரகாசித்தது. தண்ணீர் இசைக்கு ஏற்ப நடனமாடி, வானவில் விளக்குகளுடன் பிரகாசித்தது. ஒரு பெரிய மின்னும் வாள் போல ஒரு நீர் ஜெட் [water jet] எழும்பும் ஒவ்வொரு முறையும் நிலன் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்தான், அதே நேரத்தில் திரேன் நீரூற்றின் அசைவுகளுக்குத் தக்கவாறு பின்பற்றி சிரிப்புடன் சுழன்று சுழன்று துள்ளிக் குதித்தான். மின்னும் மற்றும் ஆடும் நீரால் [sparkling water] கவரப்பட்டு, குழந்தை ஆரின், கை அசைத்து பை பை [Bye Bye] என்று கத்தினான். பின்னர் தாத்தா அவர்களை ஒரு சிறப்பு வாய்ந்த இனிப்பு கஃபேக்கு [ special dessert café] அழைத்துச் சென்றார், அங்கு குழந்தைகள் தங்கள் சொந்த கப்கேக்குகளை [cupcakes] வண்ணமயமான ஐசிங் [icing], சிறிய இனிப்புத் துண்டுகளை தூவுதல் [ஸ்பிரிங்க்லிங்ஸ் / sprinkles] மற்றும் சிறிய சாக்லேட் அலங்காரங்களால் அலங்கரித்தனர். நிலன் அவர்கள் சமீபத்தில் பார்த்த நீரூற்றின் [fountain] ஒரு சிறிய வடிவத்தை உருவாக்கினான். திரேன் அவர்கள் பார்வையிட்ட கோபுரங்களால் ஈர்க்கப்பட்டு ஒரு வானளாவிய கோட்டை ["ஸ்கை கேஸில் / “sky castle”] வடிவத்தில் கப்கேக்கை உருவாக்கினான். மேலும் ஆரினுக்கு பொழுதுபோக்காக கடித்து, கைகளால் எடுத்து பிசைந்து விளையாட ஒரு சிறிய கப்கேக்கைக் தாத்தா கொடுத்தார். கடைசி மாயாஜால தருணம், குடும்பத்தினர் மாலுக்குள் [mall] இருந்த ஒரு சிறிய உட்புற பொழுது போக்கு மண்டலத்திற்கு [indoor amusement zone] அலைந்து திரிந்தபோது வந்தது. சுழலும் வட்ட வடிவ தளத்தில் அமர்ந்து சவாரி செய்யும் [carousel] ஒரு பொழுதுபோக்கு கேளிக்கைக் கூடம் விளக்குகளால் மின்னியது. நிலன் தங்க நிறத்தில் மின்னும் குதிரையின் மீது குதித்து அமர்ந்து இருந்து கொண்டு, டிராகன் வடிவ இருக்கையில் [dragon-shaped] அமர்ந்திருந்த திரேனை நோக்கி கை அசைத்தான். கேரசல் [carousel] சுழலும்போது மென்மையான இசை ஒலித்தது. அவர்களின் சிரிப்பு, விளக்குகளின் மின்னும் ஒலிகளுடனும் அவர்களைச் சுற்றியுள்ள இசைகளுடனும் கலந்தது. தாத்தாவின் கைகளில் பாதுகாப்பாக இருந்த குழந்தை ஆரின், மெல்லிசைக்கு ஏற்ப கூச்சலிட்டு ஆடினான். குழந்தைகளின் சிரிப்பு, அதன் ஒளிகள், இசை எல்லாம் ஒன்றாய்க் கலந்து காற்றில் மிதந்தது. இரவு வெகுநேரமாகி விட்டதால், தாத்தா குடும்பத்தினர் மாலுக்குள் இருந்த ஒரு வசதியான நீரூற்று [cozy fountain] அருகே ஒன்றாக அமர்ந்தனர். தாத்தா அவர்களை அருகில் இழுத்து, “சிறிய ஆய்வாளர்களே, ஒவ்வொரு நாளும் மாயவித்தை அல்லது மந்திரம் [magic] போல் இருந்தது. ஆனால் இன்றிரவு நாம் ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட சாகசங்கள் தான் உண்மையில் சிறந்த சாகசங்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்” என்றார். நேரம் போக போக தாத்தாவின் தோளில் நிலன் தலை சாய்ந்து கொண்டு, “தாத்தா... இன்று மிகவும் மாயாஜால நாள். இன்றிரவு இதை நாம் கனவு காண முடியுமா?” என்று கேட்டான். தாத்தா புன்னகைத்தார். “நிச்சயமாக, என் குட்டிகளே. கண்களை சற்று மூடுங்கள் — நீரூற்றுகளும், கோபுரங்களும், வான்கோட்டைகளும் உங்கள் கனவுகளில் நடனம் ஆடட்டும்.” என்றார் ஒருவரை ஒருவர் கைகளை இணைத்துக் கொண்டு அவர்கள் துபாய் மாலிலிருந்து வெளியே வந்தனர். நகரத்தின் விளக்குகள் அவர்களின் கண்களில் பிரதிபலித்தன. குழந்தைகளின் இதயங்கள் மகிழ்ச்சி, ஆர்வம், மற்றும் நாளை எதிர்கொள்ளும் புதிய சாகசங்களால் நிரம்பியிருந்தன. ✨ நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பாகம்: 09 தொடரும் துளி/DROP: 2017 [கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 8 https://www.facebook.com/groups/978753388866632/posts/33652888391026376/?
  22. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 97 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வசபனின் மரணத்திற்குப் பிறகு, வங்கனாசிக தீசன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகா மங்கள என்ற பெயரில் ஒரு விகாரை [Mangla Maha Viharaya] கட்டினான். அவனது மனைவி மகா மாதா முன்பு உணவளித்த தேரரின் நினைவாக ஒரு விகாரை கட்ட பணம் சேகரித்தார். வங்கனாசிக தீசன் இறந்த பிறகு அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I] ஆட்சிக்கு வந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதலாம் கஜபாகு [அல்லது Gajabahugamani] அதிகமாக தமிழ் பெற்றோரையும் மற்றும் தமிழ் தாத்தா பாட்டியையும் கொண்டு இருப்பதால், இவனும் தமிழனாக கருத வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியபோது, அந்த இந்திர விழாவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னனே இவனாகும். கஜபாகுவின் மரணத்திற்குப் பிறகு, இவனது மாமனார் மகாலக நாகர் [Mahalaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவர் தீவில் ஏழு விகாரைகளைக் கட்டினான். வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் விகாரைகளைக் கட்டிய ஒரே மன்னனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தமிழ் அல்லது திராவிட கூறுகளைக் கொண்ட பெயர்களைக் கொண்டிருந்ததுடன் தீவின் ஆரம்பகால மக்களில் ஒருவரான நாக மக்கள், தென்னிந்திய தமிழ்ப் பகுதிகளுடன் வலுவான கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைக் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது. நாக என்ற சொல் தமிழ் மற்றும் பாலி இலக்கியங்களில் காணப்படுகிறது. இது நாகதீபம் (நயினாதீவு) போன்ற இடங்களில் வாழ்ந்த பாம்பு வழிபாட்டு மக்களைக் குறிக்கிறது. சிங்களம் ஒரு தனித்துவமான மொழியாக உருவாவதற்கு முன்பு, தீவின் மக்கள் பிராகிருதம் மற்றும் [அல்லது] ஆரம்பகால திராவிட மொழியைப் பேசினர். தொல்பொருள் ஆய்வில், ஆரம்பகால பிராமி கல்வெட்டுகளில் (கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது) கூட, பல தனிப்பட்ட பெயர்கள், குலப் பெயர்கள் மற்றும் பட்டப்பெயர்கள் தமிழ் சொற்களை ஒத்திருக்கின்றன. சிங்களம் ஒரு கட்டமைக்கப்பட்ட மொழியாக கி.பி 5-6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் உருவாகத் தொடங்கியது. இது பாலி (பௌத்த நூல்கள் காரணமாக), சமஸ்கிருதம் மற்றும் உள்ளூர் [பிராகிருத / திராவிட அல்லது தமிழ் மொழிகளால்] பேச்சுவழக்குகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டது. அதாவது மகாவம்சம் எழுதும் பொழுது, உண்மையில் சிங்களம் என்ற மொழி உருவாகவில்லை, அது மிக மிக ஆரம்ப நிலையில் தான் இருந்துள்ளது, ஆனால், தமிழ் மிகவும் வளர்ந்த உச்ச நிலையில் இருந்துள்ளது. அதனால்த் தான் மகாவம்சத்தில் தமிழர் என்ற சொல்லே காணப்படுகிறது, ஆனால் சிங்களம் அல்லது சிங்களவர் என்ற சொல் அங்கு இல்லை. ஆக சிஹல ["Sihala" (Sīhaḷa, සිහළ, சீஹள] என்ற சொல் ஒருக்காவோ இரண்டுதரமோ மட்டுமே அங்கு கூறப்படுகிறது, ஆனால் அது மகாவம்சத்தின் (5 ஆம் நூற்றாண்டு பாலி நாளேடு) படி, சிஹல (சிஹால) என்ற பெயர் சமஸ்கிருத / பாலி வார்த்தையான "சிஹா" ("Sīha" lion/ சிங்கம்) மற்றும் "லா" ("La" நிலம்/இடம்) ஆகியவற்றிலிருந்து உருவானது, அதாவது "சிங்கத்தின் நிலம்" அல்லது "சிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்" என்ற அர்த்தத்தில் மட்டுமே காணப்படுகிறது. மற்றும் படி மொழி ஒன்றையோ அல்லது அப்படியான மொழி ஒன்றை பேசுபவர்கள் பற்றியோ குறிக்கவே இல்லை. வட இந்தியாவிலிருந்து குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தோ-ஆரிய பேச்சுவழக்கில் இருந்து சிங்களம் தோன்றியது என்றாலும், தமிழ் மற்றும் பிற தென்னிந்திய சமூகங்களுடனான தொடர்பு காரணமாக திராவிட மொழிகளால் பெரிதும் செல்வாக்குக்கு உள்ளானது என்பது வரலாறு. இலங்கை தென்னிந்தியாவுடன், குறிப்பாக தமிழ்நாட்டுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், அனுராதபுர காலம் (கிமு 377 முதல்) பல தமிழ் ஆட்சியாளர்கள் அல்லது தமிழ் தொடர்புகளைக் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்டு இருந்ததும் தெரியவருகிறது. அத்துடன் இலங்கையின் பல இடப்பெயர்கள் தமிழ் மற்றும் நாக பூர்வீகம் கொண்டவையாகவும் உள்ளன. உதாரணமாக, நாகதீபா (நயினாதீவு). மேலும் அனுராதபுரம் - சில கோட்பாடுகள் "அனுராத" திராவிட இணைப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன ["Anu" and "Ratha" resemble Tamil words rather than purely Sanskrit. "Anu" could come from Tamil "Anu" (அணு) meaning small or a prefix denoting something related. "Ratha" (ரத) means chariot in Sanskrit, but in Tamil, "Rathapuram" (ரதபுரம்) is a common place-name structure. It suggests a settlement or city related to a chariot or a ruling class.]. திருகோணமலை ஒரு தமிழ் வம்சாவளி பெயர் மற்றும் கதிர்காமம் ஒரு தமிழ்-சைவ யாத்திரைத் தலம். மற்றும் ஆரம்பகால ஆட்சியாளர்கள் இன்று புரிந்து கொள்ளப்படுவது போல் பிரத்தியேகமாக "சிங்களவர்" அல்லது "தமிழர் " அல்ல, மாறாக வெவ்வேறு இனக்குழுக்களின் கலவையாக இருந்திருக்கலாம்? மற்றது அப்பொழுது தமிழ் மொழி முழுமை பெற்று இருந்தாலும் சிங்கள மொழி என்ற ஒன்று ஆரம்பிக்கவே இல்லை. சுருக்கமாக, ஆரம்பகால இலங்கையில், குறிப்பாக தனித்துவமான சிங்கள அடையாளம் தோன்றுவதற்கு முன்பு, ஆழமான தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகள் இருந்தன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. நவீன தேசியவாதம் தமிழ் மற்றும் சிங்கள வரலாறுகளைப் பிரிக்கும் முயற்சிக்கு வழிவகுத்தாலும், உண்மை என்னவென்றால், இரண்டு கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தன. சிங்கள மொழியே உண்மையில், காலப்போக்கில் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகளுடன் வளர்ந்தது என்பது வெள்ளிடைமலை. இதற்கு சிறந்த உதாரணம் தொலெமி அல்லது தாலமியின் [Ptolemy] வரைபடம் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) தமிழ் ஒலிப்பு முறையை ஒத்த பெயர்களைக் கொண்ட இலங்கை நகரங்களைக் குறிக்கிறதுடன் [Ptolemy’s map (2nd century AD) refers to Sri Lankan cities with names resembling Tamil phonetics.] அனுராதபுரத்திலேயே உள்ள ஆரம்பகால பிராமி கல்வெட்டுகள் (கிமு 3-2 ஆம் நூற்றாண்டு வரை) தமிழ்-பிராக்ருத செல்வாக்குகளைக் காட்டுகின்றதும் [Early Brahmi inscriptions in Anuradhapura (dating to the 3rd-2nd century BCE) show Tamil-Prakrit influences.] ஒரு எடுத்துக்காட்டு ஆகும். Part: 97 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Vasabha, Vannakatissa ruled for three years. He built a Vihara with the name Mahamangala. His consort Mahamatta collected money to build a Vihara in memory of the Thera whom she fed previously. On the death of Vannakatissa his son, Gajabahugamani came to power and ruled for twenty-two years. Gajabahugamani is Tamil being born to Tamil parents and Tamil grandparents. He is the king Kajavahu who went to attend the Indravilla in Tamilnadu. This helped fix the date of the great king Cheran Sengutuvan. After the death of Gajabahugamani, his father in law, Mahalaka Naga ruled for six years. He built seven Viharas in the island He was the only one on record to have built Viharas in north, south, west and east. Mahalaka Naga was also a Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 98 தொடரும் / Will follow துளி/DROP: 2016 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634819606166588/?
  23. கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 ஒருநாள் ஓய்வு பெற்ற அதிகாரி: “நான், ஒருவேளை, இளமையாக இருந்திருந்தால்… நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா?” என்று சும்மா ஒரு கதைக்கு கேட்டார். அதற்கு கண்மணி : “இல்லை... இனிமேல் என்றும் இல்லை ... நான் பட்ட துயர் காணும் ... நான் குடும்ப வாழ்வில், ஆண் பெண் குடும்ப உறவில் மரத்துப் போனேன்" என்றாள். “உனக்கான மகிழ்ச்சியை ஏன் மறுக்க வேண்டும்?” “நான் திரும்ப ஒருமுறை மீண்டும் மாட்டிக்கொள்வதை மறுக்கிறேன் ,” என்று அவள் பதிலளித்தாள். “இனி வரும் திருமணம் வேறுபட்டதாக இருக்கலாம்.” “ஆம். “மாறலாம்” என்று சொல்வது எளிது. ஆனால் அந்த மாற்றத்தின் ஆபத்தை மீண்டும் ஏற்கச் சொல்லப்படுவது எப்போதும் பெண்களுக்கே. ஆண்களுக்கு திருமணம் ஒரு முயற்சி. பெண்களுக்கு அது ஒரு சூதாட்டம்.” [Yes. But women are expected to risk that difference. Men are not.]” அவர் அவளை தனிமையிலிருந்து காப்பாற்ற விரும்பினார். அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவள் விரும்பினாள். அதிகாரி: “ஏன்?” கண்மணி: “ஏனென்றால் அப்போதும் கூட, நான் அதிகமாக அனுசரித்துச் செல்ல வேண்டியவளாக இருப்பேன். இன்னும் சமரசம் செய்ய வேண்டும். இன்னும் மன்னிக்க வேண்டும்.” அவள் தன் இறுதி எண்ணத்தை கவனமாக இடைவெளி விட்டுச் சொன்னாள் கண்மணி: “சாத்தியத்தை விட, அமைதியை நான் தேர்வு செய்கிறேன். நம்பிக்கையை விட, தெளிவை நான் தேர்வு செய்கிறேன். அதற்காக நான் அன்பை நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அழிப்பை மறுக்கிறேன் என்று அர்த்தம்.” அவர், அவளின் வார்த்தைகளை கவனமாக கேட்டார். அவளை மீண்டும் சம்மதிக்க வைக்க, அதன் பின் அவர் முயற்சிக்கவில்லை. சில உரையாடல்கள் உடன்பாட்டுடன் முடிவதில்லை. அவை புரிதலுடன் முடிவடைகின்றன. அவள் அன்பை விரும்பினாள். அவள் ஆசையை ரசித்தாள். அவள் தன்னை ரசிப்பதை விரும்பினாள். ஆனால் கவனிப்பு என்ற வேடத்தில், அதிகாரம் இருப்பதை வெறுத்தாள் திருமணம் ஒரு காலத்தில் அவளுடைய குரலை எடுத்துக் கொண்டது. அதைத் திரும்பப் பெற அவள் இனிமேல் ஒருநாளும் பேரம் பேச மாட்டாள். அதன் பின் ஒருநாள், ஓய்வு பெற்ற அதிகாரி கண்மணிக்கு காதல் மற்றும் ஏக்கம் [romantic, sensual, longing] கொண்ட, அழகிய தமிழ் கவிதைகளை அனுப்பினார். உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும் குளத்தில் நீந்தும் தாமரையைப் போல் மன ஓடையில் நீந்துகின்றது உன் நினைவு வாழும் வரை உயிரிலும் எண்ணத்திலும் நீயே.. வானவில்லாய் எனக்கு அழகு பொழிந்து ஏழு நிறமாய் உன் கோலத்தைக் காட்ட காற்றைக் கண்ட மரம் போல் என் மனமும் கவலை மறந்து ஆடிப் பாடி நடனமாடுகிறதே … எனக்குள் தனிமையைத் தவிடு பொடியாக்கி எனக்குள்ளே எங்கோ இருந்து இசைக்கிறாய் உன்னைத் தேடி அலைந்திடும் தேடலில் உன் வண்ணமும் என்னைத் தீண்டி மயக்குதே ... ஒளியிழந்த விழிகளுக்கும் நீ கனவைத் தந்தாய் இருண்டுவிடும் என்னுலகம் மீண்டும் - கலைந்துவிடாதே மறக்க முடியாத பிம்பமாய் தவிர்க்க முடியாத நினைவாய் கண்ணின் கண்மணியாய் வந்தவளே - விலகிவிடாதே.. அவள் அவற்றை ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப படித்தாள். உடைமையைக் கோராத ஆசையை அவள் ரசித்தாள் [She enjoyed desire that did not demand possession.]. கவிதை, விளைவுகளின்றி நெருக்கத்தை அனுமதித்தது [Poetry allowed intimacy without consequence.]. கடமை இல்லாமல் ஏங்குதலுக்கு வழிவகுத்தது. [Longing without obligation.]. “என்னை அழைக்கும் ஆசை என்னை அச்சுறுத்தவில்லை. என்னைச் சொந்தம் கொள்ளும் முயற்சிதான் என்னை நடுங்கச் செய்கிறது.” [Desire does not frighten me, she realised. Ownership does.] என்றாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் துளி/DROP: 2015 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634639602851255/?
  24. “ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026) எழுபத்தெட்டு ஆண்டுகள் கொடியேறி நிற்கிறது ஆனால் எல்லோரும் தலையை உயர்த்தவில்லை சுதந்திரம் ஒவ்வொருமுறையும் விழாவாக வருகிறது ஆனால் நீதி மட்டும் வாசலில் நின்றுவிடுகிறது! வாக்களிக்க சுதந்திரமாம், தேசியகீதம் பாட சுதந்திரமாம் அனுமதிக்கப்பட்டதை நினைவில் கொள்ள சுதந்திரமாம் இரத்தம் குடித்ததை, கற்பழித்ததை மறக்கச் சுதந்திரமாம் கொடியை ஏற்றி உன்னை மறக்க சுதந்திரமாம்! திரும்பாத காலடிகளை, மீளாத உயிர்களை துப்பாக்கிமுனையில் பறிபோன வயல்களை, ஆலயங்களை வரலாறுகள் மாற்றியமைத்து மறுபெயரிடவைகளை "வளர்ச்சி”யின் போர்வையில் மறந்திட சுதந்திரமாம்! சந்தேகம்தவிர்க்க கட்டித்தழுவும் மொழிகள் ஒருபக்கம் தேசத்துரோகமாகும் நினைவகங்களின் வழிபாடுகள் மறுபக்கம் கண்காணிப்புடன் பதில் அளிக்கப்படும் கேள்விகள் ஒருபக்கம் சிறைச்சாலையால் மௌனம் ஆக்கப்படும் எதிர்ப்புகள் மறுபக்கம்! பெண்கள் உடலில் போர்கொடுமைகளை இன்னும்சுமக்க குழந்தைகள் சோதனைச் சாவடிகளை பயத்துடன்கடக்க மாணவர்கள் பயத்தின் வடிவத்தை தினம்கற்றுகற்று கீழ்ப்படிந்து தங்கள் சுதந்திரத்தை அடகுவைக்கிறார்கள்! சட்டம் சமத்துவத்தை உறுதி அளித்தாலும்-- நீதி வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது சில கல்லறைகள் விசாரிக்கப் படுகின்றன சில கல்லறைகள் காப்பகப் படுத்தப்படுகின்றன சிலவற்றை புல்டோசர்கள் உடைத்து அழிக்கின்றன! தடுப்புக்காவலுக்கு குற்றச்சாட்டு தேவையில்லாத போது உண்மைக்கு அனுமதி தேவைப்படும் போது முரண்பாடு நீக்க மறப்பதைக் கோரும்போது இதுதான் சுதந்திரமா? நெஞ்சு வலிக்கிறது! ஆனாலும் நாங்கள் சகித்துக் கொள்கிறோம். சங்கிலிகள் உடைந்து விட்டதால் அல்ல நாம் மரத்துப் போக மறுப்பதால் நாம் நினைவுகூர்ந்து தினம் வாழ்வதால்! நிலம் திரும்பக் கொடுக்கப்படும் நாள் எதுவோ காணாமல் போனவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படும் நாள் எதுவோ நினைவுகூறல் குற்றமல்ல என்று சொல்லப்படும் நாள் எதுவோ அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்! எல்லோரும் சட்டத்தின்முன் சமமான நாள் எதுவோ அதிகாரம் வழிவிட்டு விலகிய நாள் எதுவோ தொல்லியல் ஆயுதம் ஒழிந்த நாள் எதுவோ நம்பிக்கை பலத்தால் திணிக்கப்படாத நாள் எதுவோ அதுதான் சுதந்திரம் பெற்ற நாள், மகிழ்வு தந்த நாள்! அதுவரை, இந்தநாளை பட்டாசுகளால் அல்ல கேள்விகளால் தைரியத்துடன் நாம் புறக்கணிப்போம் சுதந்திரத்திற்கான முடிக்கப் படாத கோரிக்கையுடன் கருத்தக் கொடிகளை ஏற்றி வெளிப்படுத்துவோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் சுதந்திரம்: இன்னும் சமத்துவமற்ற ஒரு வாக்குறுதி (இலங்கை, 2026) பிப்ரவரி 4 ஆம் தேதி, இலங்கை சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. கொடிகள் பறக்கின்றன, உரைகள் எதிரொலிக்கின்றன, வரலாறு ஒத்திகை பார்க்கப்படுகிறது. இருப்பினும், பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கு - சுதந்திரம் என்பது ஒரு வாழும் யதார்த்தமாக இல்லாமல் ஒரு அரசியலமைப்பு அறிக்கையாகவே உள்ளது. பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் கடந்த போதிலும், இன அடிப்படையிலான பாகுபாடு, சட்டத்தின் இரட்டை அளவுகோல்,பாதுகாப்பு பெயரில் அடக்குமுறை இன்னும் தொடர்கிறது. நாடு அதிகாரப்பூர்வமாக இறையாண்மை கொண்டதாக இருந்தாலும், கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியால் வரையறுக்கப்படும் உண்மையான சுதந்திரம் - இன்னும் சமமற்ற முறையில் இனங்களுக்கிடையில் விநியோகிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்தவரை, போருக்குப் பிந்தைய யதார்த்தம் பின்வருவனவற்றால் குறிக்கப்படுகிறது: இராணுவம் அன்றாட வாழ்வில் தலையிடுகிறது தொல்பொருள் என்ற பெயரில் நிலங்கள் பறிக்கப்படுகின்றன இந்து ஆலயங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் ஆக்கிரமிக்கப் படுகின்றன பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கின்றி நீண்டகால தடுப்புக்காவல்கள் நினைவேந்தல் மற்றும் கருத்து வேறுபாடுகளை கண்காணித்தல், தடைகள் போடுதல். போர்க்கால அட்டூழியங்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறல் இல்லாமை, நீதி வழங்காமை நல்லிணக்கம் பெரும்பாலும் பேசப்படுகிறது, ஆனால் அரிதாகவே நேர்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே மறக்கச் சொல்கிறது. அதே நேரத்தில் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு உயர்வு கொடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை மௌனம் ஆக்குகிறார்கள். நினைவுகூர்தல் குற்றமாக்கப்படுகிறது, ஆனால் மறுப்பு அதிகாரப்பூர்வமாக்கப்படுகிறது. அதாவது, இறந்தவர்களை நினைவுகூருவது, உண்மையை பேசுவது அல்லது ஆதாரங்களை சேகரிப்பது சட்டவிரோதமானதாகவோ, தேசத்துரோகமாகவோ கருதப்பட்டு, அதைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் அல்லது சிறைபிடிக்கப் படுகிறார்கள். அதே நேரத்தில், நடந்த கொடுமைகள், இனப்படுகொலை அல்லது வன்முறையை அரசு நிறுவனங்கள், அரசமைப்பு, அதிகாரிகள் அல்லது வரலாற்றாசிரியர்கள் அதிகாரப்பூர்வமாக மறுக்கிறார்கள். அதாவது "அப்படி ஒன்றும் நடக்கவில்லை" அல்லது "நடந்தது சரிதான்" என்று அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக பிரச்சாரம் செய்கின்றன. இது கொடுமையிலும் கொடுமை இல்லையா ? அதுவும் புத்தரை வழிபாடுபவர்களால்?? தீவு முழுவதும் ஆட்சியை ஊழல் தொடர்ந்து அரித்து வருகிறது. ஊழல் பொதுவாக ஒரு இனத்துக்கே உரியது அல்ல — என்றாலும் சட்டத்தின் ஆட்சி நீதியை நோக்கி அல்ல, அதிகாரத்தை நோக்கி சாய்கிறது. அத்தகைய சூழலில், அதன் விளைவுகள் சிறுபான்மையினரை அதிகமாக நசுக்குகின்றன. சுதந்திரம் என்பது காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். அதாவது உண்மையான சுதந்திரம் என்பது: பயமில்லா, பாகுபாடு இல்லா வாழ்வு இராணுவமயமாக்கப்பட்ட தேசியவாதமோ அல்லது மத தீவிரவாதமோ இல்லா வாழ்வு சமச்சீர் சட்டம் நிலம், மொழி, பண்பாடு பாதுகாப்பு பொய்மைப்படுத்தப் படாத உண்மை வரலாறு நீதி மற்றும் பொறுப்பு ஒரு தேசம் அதன் காயங்களை அமைதிப்படுத்துவதன் மூலம் குணப்படுத்த முடியாது. எனவே, இவை இல்லாமல், சுதந்திர தினம் ஒரு விழா மட்டுமே— விடுதலை அல்ல. உண்மையான சுதந்திரம் எப்போது வரும் என்றால் : சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் நிலம் திருப்பித் தரப்படுகிறது, மறுபெயரிடப்படவில்லை வரலாறு உண்மையாகச் சொல்லுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் அல்ல பன்முகத்தன்மை பாதுகாக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படவில்லை நீதி என்பது மறுசீரமைப்பானது, செயல்பாட்டுக்குரியது (நாடகத்தனமானது) அல்ல. அதாவது, நீதி என்பது குற்றவாளியைத் தண்டிப்பதோடு நின்றுவிடாமல், பாதிக்கப்பட்டவரின் இழப்பைச் சரிசெய்து (Repair), சமூகத்தில் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் (Restore). இது ஏனோதானோவென்று பெயரளவில் தண்டனை வழங்கி, நாடகம் ஆடுவது (Performative) போல இருக்கக் கூடாது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - அது ஒரு முடிக்கப்படாத பயணத்தின் நினைவூட்டலாகும். சுதந்திரம் மரபுரிமையாக இல்லை. இது கட்டமைக்கப்படுகிறது - தைரியம், உண்மை மற்றும் கூட்டு பொறுப்புக்கூறல் மூலம். "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்! [இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு / கீதாஞ்சலியில் இருந்து] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] “Independence, Still Deferred” (04.02.2026) Seventy-eight years since the flag was raised, Yet some hands still tremble to lift their heads. Freedom arrived dressed in ceremony, But justice stayed locked outside the gate. They say we are free— Free to vote, free to sing an anthem, Free to remember only what is permitted, Free to forget what still bleeds. In the North, the land remembers footprints Of those who never returned. Fields guarded by guns, Shrines renamed, histories relabelled, Bones buried beneath “development”. A language spoken softly to avoid suspicion, A memory treated as sedition, A question answered with surveillance, A protest met by silence—or prison. Women still carry wars in their bodies, Children inherit checkpoints instead of playgrounds. Students learn early the geography of fear, And the curriculum of obedience. The law promises equality, But justice speaks different tongues. Some graves are investigated, Some are archived, Some are erased by bulldozers at dawn. Is this independence— When detention needs no charge, When truth needs permission, When reconciliation demands forgetting? Yet still, we endure. Not because the chains are gone, But because we refuse to become numb. Independence is not a date. It is the day land is returned, The day the disappeared are named, The day memory is not a crime. It is the day Tamil, Sinhala, Muslim Stand equal before law—not power. The day archaeology stops being a weapon, The day faith is not enforced by force. Until then, We mark this day not with fireworks, But with questions, With courage, With an unfinished demand for freedom. [Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna] Independence: A Promise Still Unequal (Sri Lanka, 2026) On the 4th of February, Sri Lanka celebrates independence. Flags rise, speeches echo, and history is rehearsed. Yet for many—particularly Tamil-speaking communities—independence remains a constitutional statement rather than a lived reality. Seventy-eight years after the end of British rule, Sri Lanka continues to struggle with structural injustice, selective law enforcement, and ethnic majoritarianism. While the country is officially sovereign, true freedom—defined by dignity, equality, and justice—remains unevenly distributed. For Tamils in the North and East, the post-war reality is marked by: Militarisation of civilian life Land appropriation under archaeology and security narratives Encroachment on Hindu temples and cultural spaces Prolonged detentions under the Prevention of Terrorism Act Surveillance of memorialisation and dissent Absence of accountability for wartime atrocities Reconciliation is often spoken of, but rarely practised with sincerity. Victims are asked to forget, while perpetrators are promoted. Memory is criminalised, while denial is institutionalised. Corruption continues to corrode governance across the island. From daily bribery to elite impunity, the rule of law bends not toward justice, but toward power. In such an environment, minorities suffer disproportionately, lacking both protection and political leverage. Independence must mean more than independence from colonial rulers. It must mean freedom from: Fear Discrimination Militarised nationalism Religious extremism Historical falsification A nation cannot heal by silencing its wounds. True independence will arrive only when: All citizens are equal before the law Land is returned, not renamed History is told truthfully, not selectively Diversity is protected, not controlled Justice is restorative, not performative Until then, February 4th is not merely a celebration—it is a reminder of an unfinished journey. Independence is not inherited. It is built—through courage, truth, and collective accountability. "Where the mind is without fear and the head is held high Where knowledge is free Where the world has not been broken up into fragments By narrow domestic walls Where words come out from the depth of truth Where tireless striving stretches its arms towards perfection Where the clear stream of reason has not lost its way Into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee Into ever-widening thought and action Into that heaven of freedom, my Father, let my country awake" [Gitanjali / Rabindranath Tagore] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] துளி/DROP: 2014 [“ஒத்திவைக்கப்பட்ட சுதந்திரம்” / “Independence, Still Deferred” (04.02.2026) https://www.facebook.com/groups/978753388866632/posts/33625230760458806/?
  25. "சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல" காலனித்துவ ஆட்சிக்கு 78 ஆண்டுகளுக்குப் பிறகும், இலங்கை இன்னும் கடினமான கேள்விகளைக் கேட்டு வருகிறது: பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? குழந்தைகள் பயத்திலிருந்து விடுபட்டுள்ளார்களா? நீதி சமமானதா? நிலம் திருப்பித் தரப்படுகிறதா? நினைவு கூறல் ஒரு குற்றமா? பலருக்கு - குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கு - சுதந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே உள்ளது, நீதி தாமதமாகிறது, மற்றும் நல்லிணக்கம் நிபந்தனைக்குட்பட்டதாக உள்ளது. உண்மையான சுதந்திரம் தொடங்குவது: உண்மை அடக்கப்படாதபோது, சட்டம் ஆயுதமாகாதபோது, பயம் இல்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்கும்போது. அதுவரை, பிப்ரவரி 4 என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல - நிறைவேறாத விடுதலையின் நினைவூட்டல். — கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் "Independence is not just a flag or a date" 78 years after colonial rule, Sri Lanka is still asking hard questions: Are women safe? Are children free from fear? Is justice equal? Is land returned? Is memory a crime? For many—especially Tamil-speaking people— freedom remains selective, justice delayed, and reconciliation conditional. True independence begins when: truth is not silenced, law is not weaponised, and every citizen lives without fear. Until then, February 4th is not just a celebration— it is a reminder of unfinished freedom. — Kandiah Thillaivinayagalingam Athiady, Jaffna துளி/DROP: 2012 ["சுதந்திரம் என்பது ஒரு கொடியோ, ஒரு தேதியோ அல்ல"] https://www.facebook.com/groups/978753388866632/posts/33616508844664331/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.