Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 C பகுதி: 24 C / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும். இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது. மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு (Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).]. தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) (8) அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார். [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian – speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra] மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 25 தொடரும் / Will follow https://www.facebook.com/groups/978753388866632/permalink/31140685415580032/
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 B பகுதி: 24 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது. "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015) எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498 "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த" என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல். இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. நாக மக்கள் ஒரு காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த பழங்கால பழங்குடியினர் என்று சிலரால் நம்பப்படுகிறது. மகாவம்சம், மணிமேகலை போன்ற பல பண்டைய நூல்களில் நாகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாடு தமிழ் இலக்கியத்தில் நாக நாடு என்றும், பாலி இலக்கியத்தில் நாகதீபம் என்றும், கிரேக்க வர்த்தமானி [Greek gazetteer / வர்த்தமானி என்பது ஒரு வரைபடம் அல்லது நிலவரைத் தொகுப்பு இணைந்து பயன்படுத்தப்படும் புவியியல் அகராதி ஆகும் / A gazetteer is a geographical dictionary or directory used in conjunction with a map or atlas.] நாகதிபா [Nagadiba] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகபூமி என்ற பெயர் யாழ்ப்பாணம், உடுத்துறையில் இருந்து எடுக்கப்பட்ட பிராமி பொறிக்கப்பட்ட நாணயத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிக்கும் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையிலிருந்து ஒரு தமிழ் கல்வெட்டிலும் காணப்பட்டது. நாக வழிபடும் பாரம்பரியம் இன்னும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்த வார்த்தைக்கு பல மூலங்கள் உள்ளன. தமிழில் "நாகரிகம்" என்றால் பண்பட்ட மக்கள் என்றும் பொருள் படும். சமஸ்கிருதம், பாலி மற்றும் தமிழ் மொழியில் "நாக" என்பது "பாம்பு" அல்லது "அரவம்" என்று பொருள்படும். க.இந்திரபாலா போன்ற அறிஞர்கள், இவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைத்துக் கொள்ளத் தொடங்கிய பழங்கால பழங்குடியினராகக் கருதுகின்றனர். தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒளியர், பரதவர், மறவர், பறையர், கள்ளர், பள்ளி மற்றும் எயினர் [Oliyar, Parathavar, Maravar, Paraiyar, Kallar, Palli and Eyinar] ஆகியவர்கள் நாக பழங்குடியினர் என்கிறார். பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம். சங்க இலக்கியத்திற்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாக முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு!. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 C தொடரும் / Will Follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31112551158393458/?
  3. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 24 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாக[Naga]வில் முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' மகசுழியின் மகன் குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டான். குடகன்ன திஸ்ஸ என்பது தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம்? அவர் மகாவம்சம் 34-30 படி அனுலாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். அவரது மகன் அபயன் (Abhaya / மகாவம்சத்தில் பட்டிகாபய / Bhatikabhaya) அவரது தந்தைக்கு பின் இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிறகு, குடகன்ன தீசனின் மற்றொரு மகனான மகாதத்திக நாகன் [Mahadathika Naga] பன்னிரண்டு ஆண்டுகள் அரசாண்டான். தத்திக [Dathika] முன்பு கூறியது போல் ஒரு தமிழ் மன்னன். மகாதத்திக, என்பது பெரிய அல்லது உயர்ந்த தத்திக ஆகும். எனவே, மகாதத்திக ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும். நாகசாமி, நாகராஜா, நாகபூசன்னி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பல தமிழ் பெயர்களுக்கு நாக என்பது மிகவும் பொதுவான முன்னொட்டு என்பதையும் கவனிக்க. மகாதத்திக நாகனின் மகன் அமந்தகாமினி [Amandagamani] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தீபவம்சத்தின்படி அவரது முழுப்பெயர் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu]. தந்தை தமிழராக இருந்ததைப் போல அவரும் தமிழராக இருக்க வேண்டும்? அவருக்குப் பிறகு அவரது இளைய சகோதரர் கனிராஜனு திஸ்ஸன் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரும் வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும்? அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] அவனுக்கு ஒரு வருடம் கழித்து ஆட்சி செய்தான்; இவனும் தமிழனாக இருக்க வேண்டும்? தனது சகோதரர், மன்னர் அமந்தகாமினியைக் கொன்று அரியணை ஏறினார் என்பதால், மகாவம்சம் அரசன் கனிராஜனு திஸ்ஸாவை ஒரு தீய மன்னன் என்று குறிப்பிடுகிறது. அமந்தகாமினியின் மகள் சிவாலி அல்லது ரேவதி [Sivali, also known as Revati / சூலபாயனின் சகோதரியான சிவாலி], நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகன் சிவாலியை ஆட்சியிலிருந்து அகற்றி ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இளநாக, அதாவது இளம் நாகம் என்பது தெளிவான தமிழ் பெயர். இளநாகனின் மகன் சந்தமுக சிவா [Candamukha Siva] எட்டு வருடமும் ஏழு மாதமும் ஆட்சி செய்தான். சந்தமுக சிவா என்பதும் தமிழ்ப் பெயராகும். அது மட்டும் அல்ல, சந்தமுக சிவாவின் வம்சாவளி தமிழர் ஆகும். தமிழில் ‘சந்திரமுகி’ [‘Chandramuki'] என்ற பெயரில் ஒரு படம் வந்தது. தமிழ் தேவி [Damila Devi] என்று அழைக்கப்படும் சந்தமுக சிவாவின் மனைவி, ஒரு பௌத்த நிறுவனமான அரமாவிற்கு தனது சொந்த வருமானத்தை வழங்கினார். பௌத்தத்தில், அரம (arama / आराम) என்றால் "துறவற வாழ்விடம்" என்று பொருள். அதாவது துறவிகள் வசிக்கும் மற்றும் அவர்களின் நம்பிக்கையை கடைப்பிடிக்கும் மற்றும் ஒன்றாக கூடும் இடம் என பொருள்படும். மன்னரும் ராணியும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களாகத் தோன்றினாலும் அவர்கள் புத்த அராமாக்கு நன்கொடை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும், தீபவம்சம் பௌத்தத்திற்கு ஆதரவானது, ஆனால் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மகாவம்சத்தில் அவரைப் பற்றிய ஒரு கதை உள்ளது, அதில் தமிழ் தொடர்பை ஊகிக்க முடியும். அடகெமுனுவுக்கும் (ஆமந்தகாபனி அபயன்) வசபாவுக்கும் / வசபனுக்கும் [Adagemunue and Vasabha] இடையில் இருந்த ஏழு அரசர்களைப் பற்றி இராசவலிய கூறுகிறது, என்றாலும் அவர்களின் ஆட்சிக்காலம் குறிப்பிடப்படவில்லை. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது. அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார். [five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?. இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன். மேலும் பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon] Part: 24 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is name ending in Naga indicate Tamils?' Kuttikannatissa, son of Mahachuli, reigned for twenty-two years. Kuttikannatissa could be a Tamil name too. He slew Anula as per the Mahavamsa 34-30. His son Abhaya (Bhatikaabhaya in the Mahavamsa) ruled twenty-eight years after his father. Then, Mahadathika Naga, another son of Kuttikannatissa reigned for twelve years. Dathika was a Tamil king as stated earlier. Mahadathika, big or great Dathika, must also be a Tamil name. Naga is very common prefix to many Tamil names, Nagasamy, Nagarajah, Nagapoosanny, Nagapattinam, Nagarkoil etc. Amandagamani, the son of Mahadathika Naga, reigned for nine years and nine months. His full name is Abhaya Amandagamani as per the Dipavamsa. He should also be a Tamil as his father was a Tamil. His younger brother, Kanirajanu ruled three years after him. He should also be a Tamil by descent. Amandagamani’s son, Culabhaya, ruled one year after him; must also be a Tamil. Amandagamani’s daughter Sivali, also known as Revati, another Tamil, ruled for four months. The son of Amandagamani’s sister, Illanaga, dethroned Sivali and ruled for six years. Illanaga, meaning young Naga, is clearly a Tamil name. Candamukha Siva is the son of Illnaga reigned eight years and seven months. Candamukha Siva is by descent a Tamil. Candamukha Siva is also a Tamil name. There was a Tamil movie with the title ‘Chandramuki”. Candamukha Siva’s wife, known as Damila Devi, bestowed her own revenue to an Arama, a Buddhist institution. The king and the queen seem to be of Saiva faith but they donated to Buddhist Arama. Again, the Dipavamsa is clearly pro Buddhist, but not anti-Tamil. There is a story about him in the Mahavamsa, and it could be inferred Tamil connection in it. The Rajavaliya speaks of seven kings between Adagemunue and Vasabha and the lengths of their reigns are not given. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 B தொடரும் / Will Follow https://www.facebook.com/groups/978753388866632/permalink/31084754941173080/
  4. “அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 23 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 23 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவில் ஒரு பெண்ணைக், 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா?' தீபவம்சத்தின்படி, அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக ஆகிய ஐந்து தமிழ் மன்னர்கள் [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika] மொத்தம் பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தனர். ஆனாலும் இவர்கள் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. தீபவம்சம் 20-17ன் படி தட்டிக என்பது தமிழர் பெயர் என்பதைக் கவனியுங்கள். மகாநாமதேரர் [மஹாநாம] தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்களை, ரோகணத்தில் இருந்து ஒரு பிராமணனையும் மற்றும் ஏழு தமிழர்களையும் சேர்த்து, எட்டு பேராக மகாவம்சத்தில் திரித்து விரிவுபடுத்தினார். அதாவது தீபவம்சத்தில் அரியணைக்கு போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்கள், மகாவம்சத்தில் எட்டு பேர் ஆனார்கள். மேலும் பிராமணனை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். பிராமணனின் பெயர் திஸ்ஸ. எனவே, முன்பு கூறியது போல், பிராமணனும் ஒரு தமிழனாக இருக்கலாம்? பின்னர் ஏழு தமிழர்கள் பிராமணனையும் மன்னனையும் தோற்கடித்தனர். மேலும் மன்னன் தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான சோமாதேவியை, அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமாதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான். ஆனாலும் அனுலாவும் சோமாதேவியும் [Anula and Somadevi] வட்டகாமினியின் மனைவிகள் என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை. ஒருவன் வெளியில் இருந்து வந்து, நாட்டை கைப்பற்ற போரில் ஈடுபட்டு, ஏற்கனவே திருமணமான தோற்ற மன்னனின் மனைவி, தனக்கு காணும் என்று அவளுடன் திருப்தி அடைந்து, நாட்டை விட்டுவிட்டு திரும்பி போனார் என்பதை, யாராவது நம்புவார்களா? மற்றொரு தமிழர், ஒரு பௌத்தர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் புத்தரின் பிச்சைப் பாத்திரத்துடன் திருப்தியடைந்து நாடு திரும்பினாராம் ! பின்னர் தீபவம்சத்தில் கூறப்பட்டதைப் போலவே மற்ற ஐந்து பேரும், இலங்கையை அடுத்தடுத்து ஆண்டனர். இது ஒன்றே மற்றைய மூவரையும் வலிந்து கதையில் உட் புகுத்தியதைக் காட்டுகிறது. பின்னர் அரசன் வட்டகாமினி திரும்பி வந்து, தமிழ் அரசன் தட்டிகனை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைத் கைப்பற்றி, பன்னிரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் தனது மற்றொரு மனைவி சோமாதேவியையும் இந்தியாவிலிருந்து அழைத்து வந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா? எப்படியாகினும், அந்த காலத்திலும் இலங்கை மற்றும் தென்னிந்தியா இடையே வணிகம், சமயப் பரிமாற்றம் மற்றும் அரச மரியாதை தொடர்புகள் இருந்ததுடன், பௌத்த பிக்குகள் மற்றும் வணிகர்கள் இரண்டு தீவுகளுக்கும் இடையே சுதந்திரமாகச் சஞ்சரித்தனர். எனவே, பௌத்த பிக்குகள், வணிகர்கள், மற்றும் இராசஅரண்மனையினர் வழியாக சோமதேவியின் இருப்பிடம் பற்றிய தகவல் அரசனிடம் வந்திருக்கலாம் என்று நம்பவும் ஒரு அரிய வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காஞ்சிபுரம், மதுரை, அனுராதபுரம் போன்ற பகுதிகள் பல உறவுகளால் அன்று இணைக்கப்பட்டிருந்தன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு. மகாவம்சத்தின் 33 ஆம் அத்தியாயம் பத்து அரசர்களைப் பற்றியது, அடுத்த அத்தியாயம் பதினொரு மன்னர்களைப் பற்றியது, அதுக்கு அடுத்த அத்தியாயம் பன்னிரண்டு மன்னர்களைப் பற்றியது, மகிழ்ச்சியான ஒரு ஏறுவரிசையில் அதிகரிப்பு! வட்டகாமினி மதக்கொள்கை கோட்பாட்டை முதல் முறையாக புத்தக வடிவில் எழுதச் செய்தார். பிற்காலப் பகுப்பாய்வில் தமிழ் அரசன் தட்டிக மிகவும் முக்கியமானவராக வருகிறார். வட்டகாமனிக்குப் பிறகு மகசுழி மகாதீசன் [Mahachuli Mahatissa] பதினான்கு ஆண்டுகள் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை ஆட்சி செய்தார். பின்னர் வட்டகாமனியின் மகன் கோரநாகன் [Coranaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனைப் போல அரசாண்டான். மகசுழியின் மகன் திஸ்ஸா [Tissa], கோரநாகனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் சிவா [Siva] ராணி அனுலாவுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்து, ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த வடுக [Vatuka], ஒரு தமிழன் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். வடுகா என்பது தெலுங்கு பேசும் மக்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ஆனால் இங்கு அவர் ஒரு தமிழர் என்று குறிக்கப் பட்டுள்ளது. பின்னர் திஸ்ஸ ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சி செய்தார். பின்னர் ஒரு தமிழ் மன்னர் நிலயா [Nilaya] மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். தீபாவம்சம் 20 - 30 இன் படி, அனுலா மேற் கூறிய சிறந்த நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த அனுலா வட்டகாமினியின் மூத்த சகோதரனின் மனைவி என்றால், அவள் மிகவும் வயதான காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?. வட்டகாமினி அவளை அழைத்துச் சென்றபோது அவள் ஒரு குழந்தையுடன் இருந்தாள். எனவே அப்பொழுது அவளுக்கு 25 வயது என்றால், வட்டகாமினி இறக்கும் போது அவளுக்கு 37 வயது இருக்க வேண்டும். பிறகு மற்றவர்கள், 14+12+3+4, மொத்தமாக 33 ஆண்டுகள், ஆட்சி செய்தனர். எனவே, அவள் 70 வயதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது தெளிவாக இல்லை, ஆனால் சாத்தியம் உள்ளது. சிவா, வடுக, நிலயா என்பன தமிழ்ப் பெயர்கள், இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சிறந்த மனிதர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். திஸ்ஸா கூட தமிழ் பெயராக இருக்கலாம்? Part: 23 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who would believe that, over two thousand years ago, a man from Lanka could find a woman in India after twelve long years?' Then as per the Dipavamsa, five Damila kings, Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika ruled for fourteen years and seven months in total. The Dipavamsa does not say that they come from outside. Note that Dathika is a Damila name as per the Dipavamsa 20-17. Mahanama twisted and elaborated the five Damilas in the Dipavamsa into one Brahman from Rohana and seven Damilas who landed at Mahatittha in the Mahavamsa. The five contestants for the throne in the Dipavamsa became eight in the Mahavamsa. The Brahman and the seven Damilas claimed the throne, and the king set the Brahman against the Damilas. The Brahman’s name is Tissa and, as stated earlier, the Brahman could be a Tamil too. Then the seven Damilas defeated the Brahman and the king, and the king ran away leaving one of his two wives, Somadevi. One of the Damilas took Somadevi and went back. The Dipavamsa does not say that Anula and Somadevi are wives of the King Vattagamni. Would anyone believe that one came from outside, fought a war and satisfied with an already married woman to go away with her? Another one returned with the alms bowl of the Buddha, implying that Damila was a Buddhist! Then the rest is same as given in the Dipavamsa. Then the king Vattagamani came back, and defeated the Damila king Dathika and resumed his reign. He reigned for the total of twelve years and five months. He also brought back his other wife Somadevi from India. Would anyone believe that one, from Lanka, was able to find a woman in India after twelve years? Chapter 33 of the Mahavamsa is about ten kings, the next chapter is about eleven kings and the next chapter is about twelve kings, a happy sequential increase! Vattagamni made the doctrine to be written in the form of books for the first time. The Damila king Dathika is very important in the analysis later. Mahachuli Mahatissa reigned after Vattagamni for fourteen years. Then Vattagamni’s son Coranaga reigned twelve years like a robber. Tissa, the son of Mahachuli, reigned three years after Coranaga. Then Siva cohabited with queen Anula, and ruled for one year and two months. Then Vatuka from foreign country, a Damila, ruled for one year and two months. Vatuka is a term used to denote Telugu speaking people, but he is a Damila here. Then Tissa ruled for one year and one month. Then a Damila king Nilaya ruled for three months. Anula killed the above excellent persons, and ruled for four months, as per the Dipavamsa 20-30. If this Anula was the wife of the elder brother of Vattagamani, then she must have been very active even at very old age. She was with a child when Vattagamani took her with him. If she was 25 years of age, then she should be 37 by the time Vattagamni died. Then others ruled for, 14+12+3+4, 33 years. She should have actively involved even at the age of 70 years. However, it is not clear but the possibility is there. Siva, Vatuka, Nilaya are Tamil names, and all these rulers are described as excellent persons. Even Tissa could be a Tamil name. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 A தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1JSZZBCcpV/?mibextid=wwXIfr
  5. அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 22 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 22 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'துட்ட காமினி ஒரு பௌத்தரை விட ஒரு இந்துவாக இருந்தாரா?' சர் பொன்னம்பலம் அருணாசலம் எழுதிய முருக வழிபாடு [Worship of Muruka’ by Sir Ponnampalam Arunachalam] என்ற கட்டுரையை 'Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909.'' என்ற குறிப்பில் குறிப்பிடுவது சுவாரஸ்யமானது. இதழின் 243 ஆம் பக்கத்தில் உள்ள அடிக்குறிப்பு; 'பெரும்பாலான இலங்கை மன்னர்களைப் போலவே, துட்ட காமினியும், ஒரு பௌத்தரை விட ஒரு இந்துவாக இருந்தார். ரிதி விகாரை (சிங்களம்: රිදී විහාරය) என்பது, இலங்கையின் ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ள, கி.மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேரவாத புத்த கோயில் ஆகும். ரிதி என்பது சிங்களத்தில் வெள்ளியைக் குறிப்பதால் ரிதி விகாரையை தமிழில் வெள்ளிக் கோயில் என்றும் அழைக்கலாம். இந்த விகாரையை துட்ட காமினி கட்டியெழுப்பி, அதன் பிரதிஷ்டையின் போது [தெய்வத்தைப் புதுக்கோயிலில் உரிய பீடத்தில் மரியாதையுடன் அமர்த்தும் விழாவின் போது] அவருடன் 500 பிக்குகள் (பௌத்த துறவிகள்) மற்றும் வேதங்களில் தேர்ச்சி பெற்ற 1,500 பிராமணர்கள் அங்கு சென்றதாகக் கூறுகிறது, இதை மெய்ப்பிக்கிறது. (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara / MSS is the abbreviation for "manuscripts", which is the plural form of the word "manuscript"). புத்த பிக்குகளின் தொகையை விட இந்து பிராமணர்களின் தொகை மூன்று மடங்காக இருப்பதைக் காண்கிறோம் உதாரணமாக, விஜயனும் அவரது சீடர்களும் இலங்கைத் தீவில் இறங்க, பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டி, புத்தர், தேவ லோகத்தில் இருந்து, சக்காவை (Sakka / இந்திரனை) அழைக்கிறார். அவர் உதவிக்காக உபுல்வனை (Upulvan / விஷ்ணுவை) அழைக்கிறார் என மகாவம்சத்தில் இந்து கடவுளையும் தேவ லோகத்தையும் கூறியிருப்தைக் கவனிக்க. அனுராதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 431 பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 347 கல்வெட்டுகள் ஆங்கிலேயர் காலத்திலும், 84 கல்வெட்டுகள் அண்மையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம் மற்றும் இந்துத் தெய்வங்கள் தொடர்பான 116 கல்வெட்டுகள் அனுராதபுரத்திலேயே காணப்படுகின்றன. இவற்றில் நாகர் பற்றி 31 கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. துட்ட காமினி (மு.கி. 161–137) பௌத்த அரசராக வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறார். ஆனால் அவர் மேற்கொண்ட வேத சடங்குகள், முருகன் வழிபாடு, மற்றும் தெய்வாலயங்கள் கட்டியமைத்தல் போன்றவை, அவர் இந்துமத மரபுகளையும் பின்பற்றியதைச் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக கதிர்காமம் முருகன் கோயிலைக் கட்டியதாகவும், பௌத்தராக இருந்தாலும், வேத யாகங்கள் மற்றும் தேவாலய பூஜைகள் செய்தார் என்றும் மற்றும் பைரவர், விஷ்ணு, பத்தினி போன்ற இந்து தெய்வங்களுக்கு அவர் கோயில்கள் கட்டினார் எனவும் கூறப்படுகிறது. இவன் முதன்மையாக, பக்திபூர்வ பௌத்த அரசன் என்றாலும், இந்துமத மரபுகளையும் ஏற்று ஒழுகியவர். அத்துடன், பௌத்தம் மற்றும் சைவ-வைணவ மரபுகள் இரண்டையும் இணைத்து ஆட்சி செய்தார் என்றும் அறிய முடிகிறது. பொ.ஆ.மு 59 – 50 காலப்பகுதியில் இலங்கை மன்னனாகவிருந்த லஜ்ஜிதிஸ்ஸ எனும் மன்னன் கந்தக்க தூபிக்கு பூஜைகள் நடத்தியது பற்றிய குறிப்புகள் மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளன. மிகுந்தலையில் உள்ள மிகப் பழமை வாய்ந்த தூபிகளில் ஒன்றே கந்தக்க தூபியாகும். இங்குள்ள ஒரு வாயிலின் இரண்டு பக்கங்களிலும் மூன்றரை அடி உயரமான ஐந்து தலை நாகத்தின் புடைப்புச் சிற்பங்கள் இரண்டு செதுக்கப்பட்டுள்ளன. எனவே இவனது காலத்திலோ அல்லது இதற்கு சற்று முந்திய காலத்திலோ கந்தக்க தூபி அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன்படி மிகுந்தலையில் கந்தக்க தூபி அமைக்கப்பட்ட காலத்தில் அதாவது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இங்கு நாக வழிபாடு செல்வாக்குடன் விளங்கியிருக்கும் என நம்பக்கூடியதாக உள்ளது. இத் தூபியில் வாகல்கட என்றழைக்கப்படும் வாயிலில் பிள்ளையாரின் வடிவமும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கந்தக்க தூபியில் விநாயகர் மட்டுமல்லாது இரண்டு தூண்களில் அழகிய நந்தியின் சிற்பமும் காணப்படுகிறது. இது இப் பகுதியில் நிலவிய சிவ வழிபாட்டின் அடையாளமாகும். இலங்கை வரலாறு முழுவதிலும் நீதிமன்ற மதம், இந்து மதம் மற்றும் அதன் சடங்கு மற்றும் வழிபாடு ஆகியவையின் ஒரு கலவையாகவும் இருந்தன என்பது இலகுவாக அறிய முடிகிறது. துட்ட காமினிக்குப் பிறகு, அவரது சகோதரர் சத்தாதிஸ்ஸ [சத்தா திச்சன் / Saddhatissa] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். மகாவம்சம் போற்றும் துட்டகைமுனுவின் மரணத்தின் பின்னர் அவரது மகன் சாலியவுக்கு அரச பதவி கிடைக்கவில்லை. சாலிய "தாழ்த்தப்பட்ட" சாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்ததால் தான் சாலியவுக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை என்கிறது சிங்கள வரலாற்று இலக்கியங்கள். அதனாலதான் அவரின் தம்பி ஆட்சி பொறுப்பை ஏற்றாராம். சத்தாதிஸ்ஸனின் மகன் துலதனன் [துலத்தன் / Thulathana] ஒரு மாதம் பத்து நாட்கள் ஆட்சி செய்தான். சத்தாதிஸ்ஸனின் மற்றொரு மகன் லஜ்ஜிதிஸ்ஸ [Lajjitissa] தீபவம்சத்தின்படி ஒன்பது ஆண்டுகள் ஆறு மாதங்கள் ஆட்சி செய்தான். லஜ்ஜிதிஸ்ஸா என்பது மகாவம்சத்தில் உள்ள லஞ்சதிஸ்ஸ [லன்ஜ திச்சன் / Lanjatissa] ஆகும், இவர் மகாவம்சத்தின் படி, ஒன்பது ஆண்டுகள் ஒன்றரை மாதங்கள் ஆட்சி செய்தார். லஜ்ஜிதிஸ்ஸாவின் இளைய சகோதரரான கல்லாட நாகன் [Khallatanaga], லஜ்ஜிதிஸ்ஸவுக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தளபதி [சேனாதிபதி] மகாரத்தக்க [The commander Maharattaka] மன்னன் கல்லாட நாகனை வென்று ஒரு நாள் ஆட்சி செய்தான். மகாரத்தக்க என்பது மகாவம்சத்தில் கம்மகாரத்தக்க [Kammaharattaka] ஆகும். என்றாலும் கல்லாட நாகனின் தம்பியான வட்டகாமினி [வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் / Vattagamani] அவனை உடனடியாகக் கொன்று ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தான். Part: 22 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Dutugemunu was more of a Hindu than a Buddhist?' It is interesting to refer the article, Worship of Muruka’ by Sir Ponnampalam Arunachalam in the Reference 'Ancient Ceylon by H. Parker, Late of the Irrigation Department of Ceylon, 1909.' The Footnote on the page 243 of the journal says; Quote ‘Like most Ceylon Kings he, (Dutugemunu), was more of a Hindu than a Buddhist. An ancient MS of Ridi Vihara, which he built and endowed, states that on the occasion of its consecration he was accompanied thither by 500 Bhikkus (Buddhist monks) and 1,500 Brahmins versed in the Veddas (Paper read at the R. A. S. Ceylon Branch in June 1923 on “Palm leaf MSS. in Ridi Vihara). Throughout Ceylon History the Court religion was Hinduism and its ritual and worship largely alloyed and affected the popular Buddhism and made it unlike the religion of Buddha’. Unquote After Dutthagamani, his brother Saddhatissa ruled for eighteen years. Thulathana, son of Saddhatissa, ruled for one month and ten days. Another son of Saddhatissa, Lajjitissa, ruled for nine years and six months as per the Dipavamsa. Lajjitissa is the Lanjatissa in the Mahavamsa, and ruled for nine years and one half month. Khallatanaga, the younger brother of Lajjitissa, ruled for six years after Lajjitissa. The commander Maharattaka overpowered the king Khallatanaga and ruled for one day. Maharattaka is Kammaharattaka in the Mahavamsa, and Vattagamani, the younger brother of Khallatanaga, promptly killed him and he ruled for five months. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 23 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/14PeVBDy4tG/?mibextid=wwXIfr
  6. “அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 21 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 21 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'சேர் பொன்னம்பலம் இராமநாதன்' சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். சர்.பொன்னம்பலம் ராமநாதன், ஓய்வு பெற்ற பிறகு, மிகுந்த மதப்பற்றுள்ளவராக இருந்த அவர், தனது வாழ்நாள் முழுவதையும் பிரார்த்தனையிலும் தவத்திலும் கழிப்பதற்காக தமிழ்நாடு - இந்தியா சென்றார். மெக்கலம் சீர்திருத்தங்கள் [The Crewe-McCallum reform] 1910 ஆம் ஆண்டு இலங்கையில் நடைமுறைக்கு வந்தது, இது ஒரு இலங்கைக் கல்விமான், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வழிவகுத்தது. அப்பொழுது கரவா (மீனவர்) சாதியைச் சேர்ந்த, கலாநிதி மார்கஸ் பெர்னாண்டோ தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அது உயர்சாதி சிங்களவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. ஆனால் படித்த உயர்சாதி சிங்களவர்களை விட, படித்த கரவா சிங்களவர்கள் அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் கல்வியின் அடிப்படையில் வாக்களிக்கத் தகுதியான தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் அன்று இருந்தனர். அப்போது உயர்சாதி சிங்களவர்கள், படித்த இலங்கைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பொன்னம்பலம் இராமநாதனை வற்புறுத்த தமிழ்நாட்டிற்குச் சென்றார்கள், அவர் அப்போது சார் பட்டம் பெறவில்லை. இதனால், 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1915 ஆம் ஆண்டில், முஸ்லிம் மக்களுக்கு எதிராக, டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்த சிங்களவர்கள் வன்முறை, கொள்ளை மற்றும் தூண்டுதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். இராணுவ சட்டம் அமுல்படுத்தப்பட்டது, மேலும் மேற்கூறிய இருவர் உட்பட பல பௌத்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். அப்பொழுது, ஜேர்மன் நீர்மூழ்கிக் கப்பலின் ஊடாக இராமநாதன் இங்கிலாந்துக்குச் சென்று தடுத்து வைக்கப்பட்டிருந்த பௌத்த சிங்களவர்களை விடுதலை செய்யுமாறு வாதிட்டு வெற்றியும் அடைந்தார். பின்னர் அதே தொகுதிக்கு 1916 இல் இரண்டாவது தேர்தல் நடந்தது. இராமநாதனும் போட்டியிட்டார், இத்தேர்தலில் அவரை எதிர்த்து நின்றவர் உயர்சாதி சிங்களவராக இருந்தாலும், நன்றியுள்ள பல சிங்களவர்கள், கடந்த தேர்தலை விட அதிக பெரும்பான்மையுடன் இராமநாதனை தெரிவு செய்தனர். பின்னர், சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1927 இன் பிற்பகுதியில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கருத்துக்களைக் கேட்க டொனமோர் ஆணைக்குழு வந்தது. சிங்களவர்கள், எண்ணிக்கையில் மேன்மையில் இருந்ததால், எண் பலத்தின் அடிப்படையிலான சீர்திருத்தத்தை விரும்பினர். சார் பொன்னம்பலம் இராமநாதன், அவரது புகழ்பெற்ற மேற்கோளான ‘டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’ [‘Donoughmore means Tamils no more’] மூலம் எண் வலிமைக்கு எதிராக இருந்தார். அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பிறகு தமிழர்கள், மனிதர்களைத் தவிர வேறு எதையோ போலத், தரக்குறைவாக நடத்தப்பட்டனர். உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் சர் பொன்னம்பலம் ராமநாதனை ஒரு இனவெறி பிடித்தவராகக் கண்டித்தனர். இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர் என்பதும் குறிப்பிடத் தக்கது. Part: 21 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Sir Ponnampalam Ramanathan' On his retirement, being a very religious person, he went to Tamil Nadu – India to spend rest of his life in prayer and penance. The Crewe-McCallum reform came into effect in the year 1910 in Ceylon to have one elected member for the Educated Ceylonese. Dr. Marcus Fernando filed his nomination and he belonged to the Karawa (fisher) caste. The so-called high caste Sinhalese could not stomach it, but they did not have a chance as the educated Karawa Sinhalese outnumbered the educated high caste Sinhalese. There was considerable number of Tamils eligible to vote based on education. Then the high caste Sinhalese went to Tamil Nadu to persuade Ponnampalam Ramanathan, he was not knighted then, to contest the election for the educated Ceylonese seat. In the process, Ramanathan was elected to the Legislative Council as the first elected Ceylonese Member to the Legislative Council in 1911. Then in the year 1915, D. B. Jayatileke, D. S. Senanayake and many other wealthy Sinhalese were accused of inciting and causing violence, robbery and other crimes against the Muslim population. Marshall Law was enforced, and many Buddhists, including the above two, were interned. Some were summarily executed. This was during the First World War and the reaction from the British Colonial Government was harsh and swift. Ramanathan went to England, through the German Submarine infested sea, to argue for the release of the interned Buddhist Sinhalese. He was successful. Then there was the second election in 1916 for the same seat. Ramanathan also contested and his opponent was a high caste Singhalese in this election. The grateful Sinhalese elected Ramanathan with larger majority than the previous election. Then, about fifteen years later, the Donoughmore commission came in the latter part of 1927 to hear views for the constitutional reform. The Sinhalese, being in an unassailable numerical superiority, wanted the reform based on the numerical strength. Sir Ponnampalam Ramanathan, he was knighted by that time, was against the numerical strength alone, with his famous quotation; ‘Donoughmore means Tamils no more’. His words were prophetic; Tamils were treated like anything but humans after that. The high caste Buddhist Sinhalese along with the Karawa caste Sinhalese then castigated Sir Ponnampalam Ramanathan as a racist from the latter part of the 1920s, the way Elara was treated in the Dipavamsa, the Mahavamsa and ultimately in the Rajavaliya நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 22 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1E7NPrkNhJ/?mibextid=wwXIfr
  7. கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 04 ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா பற்றி பல கதைகள் வாசித்த நாளில் இருந்து, எப்படியும் அவர்களை பார்க்கவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. நாட்டியத்தில் சிறந்து விளங்கும், அழகான ஊர்வசி, ஹிமாலயத்தின் மகள் மற்றும் சக்திவாய்ந்த, மயக்கும் மேனகா, இந்து தொன்மவியலில், அழகின் அடையாளமாக கருதப்படும், தெய்வீக ரம்பா மற்றும் பிரம்மனால் உருவாக்கப்பட்ட, திகைப்பூட்டும் திலோத்தமா என்ற ஒரு எண்ணம் தான் என் மனதில் இருந்தது. அது சரியா பிழையா, இன்றுதான் அதை முடிவு செய்யப் போகிறேன். நான் என் மனையாளை, நேரத்துக்கு தகுந்தவாறு ' ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா' என்று கூப்பிட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இந்த அரம்பையர்களுக்கு அப்சரஸ் என்ற பெயரும் உண்டு. அப்ஜம் என்றால் தாமரை. சரஸ் என்றால் தடாகம், குளம் என்று பொருள். அப்சரஸ் என்றால் தடாகத்தில் தோன்றிய தாமரை எவ்வளவு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்குமோ அவ்வளவு அழகு நிரம்பியவர்கள் அரம்பையர்கள் ஆவர். ரம்பை தான் இவர்களின் தலைவியாக கூறப்படுகிறாள். இவர்கள் தங்களுக்கென்று ஓர் இடம் வேண்டும் எனவும், தாங்கள் என்றும் இளமை மாறாமல் இருக்க வேண்டும் எனவும் சிவனிடம் வரம் வேண்ட, அவரும் அவ்வரங்களை அளித்து, அவர்களுக்காக "அப்சரஸ்' எனும் லோகத்தையும் உருவாக்கி கொடுத்தார் என்று யாழ் மத்திய கல்லூரியில் படித்தது ஞாபகம் வந்தது. அது போகட்டும், முதலில் எங்கே இசை எங்கே ஓடி விட்டான் என்று பார்க்க வேண்டும் என்று துடித்தேன். உடனடியாக தேடிப்பார்க்க ஒரு டாக்ஸி தேடினேன், அங்கு அப்படி ஒன்றும் நான் காணவில்லை. அப்பத்தான் எனக்கு தெரிந்தது, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானையும் இருக்கிறது என்று. நான் யானையை வரவழைத்து, என்னுடன் நாரதரையும் அழைத்துக் கொண்டு அங்கு இசையைத் தேடத் தொடங்கினோம். கொஞ்ச தூரத்தில் விநாயகர் எலிகள் புடைசூழ, வயிறை தடவி, தடவி, மோதகம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். ஒரு மூலையில் முருகன் மயிலில் இருந்து இறங்கி, வள்ளியுடன் உலாவிக் கொண்டு இருந்தார். நாம் கிட்ட போனோம். இசை ஒரு எலியை கையில் பிடித்து வைத்துக் கொண்டு ரட் [Rat] ரட் என்று துள்ளி துள்ளி சொல்லியபடி, மயிலின் ஒரு இறகை பிடுங்கிக் கொண்டு இருந்தான். எங்களை கண்டதும், கையில் இருந்த எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு, எலிபான்ட் [elephant] எலிபான்ட் என்று ஓடி வந்தான். நான் பின் இசையுடன் மண்டபத்துக்குள் நுழைந்தேன். வாசலில் நின்ற காவலாளி, நாரதர் கலகம் செய்வார் என்று உள்ளே விடவில்லை. அங்கு அழகான ஊர்வசி, மயக்கும் மேனகா, தெய்வீக ரம்பா மற்றும் திகைப்பூட்டும் திலோத்தமா என நால்வரும் இந்திரன், பிரேமா விஸ்ணுவுடன் நின்றனர். சிவனும் பார்வதியும் தங்கள் முழு குடும்பத்துடன் வந்ததும் இரவு நடனம் ஆரம்பிக்கும் என்று அறிவித்தனர். அரம்பையர்கள் தேவலோகத்தில் மொத்தம் 60,000 பேர் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. என்றாலும் இது ஒரு தனிப்பட்ட ஒழுங்கு என்பதால், தேர்ந்து எடுக்கப்பட்ட சிலரை மட்டும் அங்கு உள்ளே வர அனுமதித்தனர். அவர்களில் கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை ஆகிய மூவரும் எங்களை வரவேற்று, முன் வரிசைக்கு அழைத்து சென்றனர். இசைக்கு கொஞ்சம் உயர்ந்த இருக்கை கொடுக்கப்பட்டது. நால்வரின் அசைவுகள் பண்டைய கதைகளைச் சொன்னது - அன்பு மற்றும் ஏக்கம், தைரியம் மற்றும் தியாகம். "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர", என்ற விதியின் படி அப்படியே இருந்தது. அதுமட்டும் அல்ல, 'பண்வழி நடக்கும் பாட்டின் போக்கும், பாட்டின் வழியே தாளம் பயிலும், தாள வழியே காலடி தட்டும்' பண்ணின் சிறப்பினைப் பாடலும், பாடலின் போக்கைத் தாளமும், தாளத்தின் அமைப்பில் ஆடலும் இணைந்து சிறந்து அங்கு விளங்கியது. கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் அங்கு வேளை இருந்தது. "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் " என்பது போல, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினார் நால்வரும்! ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, என்பதை நான் முற்றிலும் அங்கு கண்டேன் ! நீரானவா நிலமானவா விண்ணானவா காற்றானவா ஒளியானவா உயிரினவா பிரபஞ்சத்தை ஆளும் முழுமுதற்க் கடவுளே! நீயே உயிர்கெல்லாம் முதலானவன் எல்லா உலகத்துக்கும் உறவானவன் உயிர்கள் கூடி தாளம்போடும் இசையானவன் எம்மை எந்நாளும் தொடர்கின்ற நிழலானவன் நதியில் நீராகி நிலவெல்லாம் ஒளியாகி பனியில் துளியாகும் இறையானவா புவியில் திறனாகி உயிரெல்லாம் கருவாகி காற்றில் அசைந்தாடும் நிறைவானவா வரம் வேண்டியே உனைப் பாடினோம் சத்தியம் வாழவே நாம் மகிழ்ந்தாடினோம் ! சலங்கை ஒலியாக சரிந்தாடும் மயிலாக தாளத்தின் உயிராக நாம் நடமாடினோம் சபையில் இனிதாக இதம்தேடும் முகமாக இதயம் கலந்தோரை நாம் புகழ்ந்தாடினோம்! இசை தனது மகிழ்ச்சியில் தனது சிறிய கைகளைத் தட்டினார். என்னுடைய இதயமும் மீண்டும் இளமையாக மாறியது போல உணர்ந்தேன். என் கால்கள் என்னை அறியாமலே தாளங்களுக்கு ஒத்ததாக கால்களைத் தட்டியது. நடனத்திற்குப் பிறகு, நாங்கள் நான்கு அப்சரஸ்களுடன் இறுதி இரவு உணவைப் பகிர்ந்து கொண்டோம் - அமிர்தத்தில் தோய்த்த பழங்கள், மணம் கொண்ட பிரியாணி மற்றும் முத்துக்கள் போல ஒளிரும் பால். ரம்பா மிக அருகில் வந்து, சிரித்துக்கொண்டே, “கந்தையா தில்லை, நீ இனி பூமி போக வேண்டும். வரலாற்றில் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேச பூமிக்கு உன்னைப் போன்ற எழுத்தாளர் தேவை” என்றாள். ஊர்வசி இசையிடம் சாய்ந்து, “மழலையே , உன் புன்னகையால் அன்பு மற்றும் உறவு பாலங்களைக் கட்டுவாய்” என்று கிசுகிசுத்தாள். திலோத்தமா அடி மேல் அடி எடுத்து வந்து இசைக்கு திகைப்பூட்டி விளையாட தொடங்கினாள். அந்த இடைவெளியில், தன் அழகு, கவர்ச்சி, இளமை மூன்றையும் கலந்து எடுத்து, மேனகா எனக்கு ஒரு மயக்கம் தந்தாள்!. நல்ல காலம், அங்கே திடீரென புத்தர் வந்தார். அவர் கொஞ்சம் சத்தமாக ' ஒரு மனிதன் பெண்களிடம் கொள்ளும் காம ஆசை இருக்கும் வரை, அவன் மனம் வாழ்க்கையை பற்றிக் கொண்டிருக்கும். அவாவின் விலங்குகளில் கட்டுண்டு மக்கள் நெடுங்காலம் துயரத்தை அனுபவிக்கிறார்கள்' என்று கூறிக் கொண்டு என்னிடம் வந்தார். நானும் மயக்கத்தில் இருந்து விழித்து என்னை அறிந்தேன். அப்சரஸ் நால்வரும் உடனடியாக மிதந்து மெதுவாக மறைந்தனர். அவர்களுடன் சேர்ந்து மேகங்களும் மறைந்தன. தங்க ஒளி மங்கியது. காலை சூரிய ஒளி படுக்கையறைக்குள் பாய்ந்தது. கதவில் யாரோ தட்டும் ஒலி காதில் கேட்டது. ஒருவேளை மேனகா திரும்பி வந்தாளா என்ற ஒரு நற்பாசையில், மெல்ல எழுந்து போய் கதவைத் திறந்தேன். "அப்பா, எழுந்திரு! வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இசையை டேகேர்ல [Daycare] விடணும்" மூத்த மகளின் குரல் கேட்டது. நான் கண்டும் காணாதது போல் மௌனமாக இருந்தேன். இசை இன்னும் மடியில் சுருண்டு, தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்குள் இன்னும் எதோ ஒரு குழப்பம், "அது ஒரு கனவா? அல்லது மறுபக்கத்திலிருந்து வந்த ஒரு நினைவா?" இசை விழித்தெழுந்ததும், மேலே பார்த்து மெதுவாகச் சொன்னான், "தாத்தா, அடுத்த கோடையிலும் நாம் சொர்க்கத்திற்கு போகலாமா?" நான் சிரித்து, அவனது நெற்றியில் முத்தமிட்டு, "நிச்சயமாக, என் குட்டி நட்சத்திரமே. ஆனால் இன்று நீங்கள் உங்கள் காலை உணவை மிச்சம் விடாமல் முடித்துவிட்டால் மட்டுமே" என்றேன். வானத்திற்கு அப்பால் ஒரு அசாதாரண விடுமுறைக்குப் பிறகு, ஒட்டாவாவில் மீண்டும் மற்றொரு சாதாரண நாள் தொடங்கியது! புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புரியாத எம்மை வலைக்குள் வீழ்த்திவிட்டது! நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்! புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே! மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறாய் போற்றப் படுகிறாய் மகிழ்ச்சியும் இன்பமும் அங்கே பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் முடிவுற்றது https://www.facebook.com/share/p/17BGSH5dok/?mibextid=wwXIfr
  8. "மூன்று கவிதைகள் / 05" 'அக்கினியானவளே' செம்மணியில் உன்னைச் சிதைத்தவர்கள் யாரோ செல்லம் கொட்டிய என் தங்கையே! செவ்வாய் திறந்து சொல்ல மாட்டியோ செந்நெல் வயலில் புதைத்தவர் எவரோ செங்கோல் மடிந்த நாள் இதுவோ? அகன்ற மண் எல்லாம் எலும்புக்கூடுகள் அண்ணன் அங்கே காத்துக் கிடக்கிறானே! அன்பு போதித்த புத்தரும் மௌனம் அறிவு தொலைத்த படையினர் பிடியில் அழிந்ததோ கற்பு என் அக்கினியானவளே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ......................................................... 'சீவி முடித்து சிங்காரித்து' சீவி முடித்து சிங்காரித்து கண்ணே, சிவந்த நெற்றியிலே பொட்டும் இட்டு, சீக்கிரம் வாராயோ என்னைக் கொஞ்சயோ! சித்திரம் சொல்லாத வனிதை நீயே, சீதை காணாத காதல் தருவேன்! கூவி அழைக்குது சிட்டுக் குருவி, தாவிப் போகுது அன்ன நடையில், தேவி அங்கே சுந்தரியைக் காண்கிறேன்! ஆவி பொருள் உடல் அனைத்தும், தூவி உன்னை மடியில் தாலாட்டுவேன்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................... 'ஒரு மழைகால இரவு' ஒரு மழைகால இரவு இருளுதே பருவ ஆசை மனதில் தூறுதே இரு கைகள் ஏங்கித் தேடுதே கரு விழியாளே கருணை காட்டாயோ? ஆறு பாயும் பேராதனை வளாகத்தில் ஆறுதல் கொடுக்கும் அழகு மலரே இறுமாப்பு உனக்கு இன்னும் வேண்டுமா வெறுப்பு அகற்றி அருகில் வாராயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் https://www.facebook.com/share/p/1CZWhQNpBP/?mibextid=wwXIfr
  9. "மூன்று கவிதைகள் / 04" 'யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?' யாரடி வந்தார் என்னடி சொன்னார் அரசடி நிழலில் பேசியது என்னவோ? பாரடி என்னை தனிமரமாய் தவிக்கிறேனே கூறடி பதிலை கூச்சத்தைவிட்டு எனக்கு? ஆறடி நிலமே சொந்தமாகும் உலகிலே ஏனடி உனக்கு இத்தனை ஆசைகள்? தேரடி வீதியில் யாருக்கு காத்திருக்கிறாய் சேரடி சொத்தை காதலை விற்றா? பூங்கொடி என்று பெயர்வைத்தது எனோ அங்காடி நாய்போல் அலைவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'விதியின் விளையாட்டு' விதியின் விளையாட்டு உறவைப் பிரிக்குது மதியை இழந்து ஏதேதோ பேசுது ! நதியின் ஓட்டத்தில் அகப்பட்ட துரும்பாய் மோதிமோதி நானும் களைத்து விட்டேன் ! ஊடல் இதுவென முதலில் நினைத்து கூடல் கொண்டு இணைய நினைத்தேன்! ஆடல் பாடல் இரண்டையும் தொலைத்து உடல் மெலிந்து வாடிவதங்கியதே மிச்சம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .......................................... 'திரும்பிப் பார்க்கிறேன்' திரும்பிப் பார்க்கிறேன் அத்தியடியில் நின்று திண்ணையில் அப்பா அம்மாவைக் காணவில்லை திலகமிட்ட படம் மட்டுமே தொங்குது! குண்டுகள் சத்தம் இன்று ஓய்ந்துவிட்டது குழிகளும் மறைந்து கட்டிடங்கள் உயர்ந்துவிட்டது குரூரம் எனோ இன்னும் எதிரொலிக்குது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  10. அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 20 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 20 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் எல்லாளன் மற்றும் துட்டகாமணி யார்?' இளவரசன் எல்லாளன் அசேலனைக் கொன்று நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரை ஒரு ஒப்பற்ற மன்னர் என்று வர்ணித்தது. தீபவம்சம் அவர் ஒரு தமிழர் என்றோ ஒரு இளவரசர் என்றோ சோழ நாட்டிலிருந்து வந்தவர் என்றோ கூறவில்லை. தீபவம்சம், மகாவம்சம் போல், தமிழர் விரோத வெறுப்பைக் கக்கவில்லை. அதன் நலன் பௌத்தம் மட்டுமே, தமிழர்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பின்னர் இளவரசர் அபயா (தீபவம்சம் இறக்கும் போது ஒரே ஒரு முறை 'துட்டகாமணி' என்ற அடைமொழியைப் பயன்படுத்தினார்) முப்பத்திரண்டு மன்னர்களைக் கொன்று இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இளவரசன் அபயா எல்லாளனைக் கொன்றதாகக் கூறவில்லை. ஆகவே, எல்லாளன் முதுமையால் இறந்திருக்கலாம்? அவருக்குப் பிறகு முப்பத்திரண்டு துணை மன்னர்கள் அல்லது தலைவர்கள் ஆட்சி செய்து இருக்கலாம்?. இளவரசர் அபயா அவர்கள் மீது போர்தொடுத்து, அரசைக் கைப்பற்றி இருக்கலாம்?. அங்கு, பல துணை அரசுகளுடன், பல தமிழ் இளவரசர்களும் இருந்ததே உண்மையான கதையாக இருக்க வேண்டும். மூத்தசிவ, சிவா, மகாசிவ, சேனா, குட்டா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள். அப்படியே, திஸ்ஸ, சுரதிஸ்ஸ கூட தமிழர்களாக இருக்க வேண்டும். இளவரசர் அபயாவின் தந்தை காக்கவன்னா [The father of prince Abhaya is Kakkavanna]. ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட தமிழ் வன்னிப் பகுதியின் கடைசி மன்னன் பாண்டரவன்னியனை காட்டிக் கொடுத்தவனின் பெயர் கூட காக்கவன்னியன் [Kakkavanniyan] தான். இது இன்றைய முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்துள்ளது. அதே முல்லைத்தீவு மாவடடத்தில் தான், மீண்டும் ஒரு மிகப்பெரிய இன அழிப்பு மே மாதம் 2009 இல் நடைபெரும் உள்ளது. காக்கவன்னா என்ற பெயர் ஒலிப்பு ரீதியாக காக்கவன்னியன் பெயரை ஒத்திருக்கிறது. காக்கவன்னாவுக்கு மூத்தசிவனுடனோ அல்லது தேவநம்பியதீசனுடனோ இருந்த தொடர்பை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே, மகாநாமா இதைப் பயன்படுத்தி மகாவம்சத்தில் ஒரு கதையை புகுத்தினார் என்பதே உண்மையாக இருக்கலாம்? . மகாவம்சத்தில் பத்து போர்வீரர்களைப் பற்றிய அற்புதமான கதைகள் உள்ளன, ஒவ்வொருவரும் பத்து யானைகளை விட வலிமையானவர்களாம்? எனவே இவை எந்த தீவிரமான விமர்சனத்திற்கும் தகுதியற்றது. இது புத்த மத பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சிக்காக மட்டுமே என்று நாம் இலகுவாக எடுத்துக் கொள்ளலாம். மகாவம்சத்தின்படி துட்ட காமினி (துட்ட கைமுனு) தன் தந்தையின் உயிரியல் மகன் அல்ல. அவர் இறக்கும் நிலையில் இருந்த ஒரு துறவியின் மறுபிறவியாக இருந்தார். அதாவது, அந்த துறவி தான் இறந்ததும், உடனடியாக துட்டகாமணியின் தாயான விகாரா தேவியின் கருப்பையில், தானாகவே கருவாக மாறினார். அதாவது ஒரு ஆணின் அல்லது கணவனின் துணை இல்லாமல், தானாகவே விகாரா தேவியின் வயிற்றில் கருத்தரித்தார்? இந்தக் கருத்தை நான் இங்கு அலசவில்லை, அது அவர் அவர்களின் நம்பிக்கை. எனவே, துட்டகாமணி அரசனின் இரத்த வாரிசு அல்ல. அவர் ஒரு துறவியின் மறு அவதாரம் ஆகும். ஆகவே இவர் சட்டவிரோதமாக முக்கியத்துவம் வாய்ந்த பதவியை, அரச வரிசை இல்லாமல் எடுத்த ஒரு நபர் என்று கொள்ளலாம் [அபகரிப்பவர் ஆகிறார் / usurper]. ஆகவே அவர் அரச வம்சாவளியைத் சட்ட்டபூர்வமாகத் தொடர்ந்திருக்க முடியாது. எனினும் இராசவலியத்தில் மற்றொரு கதையும் காணப்படுகிறது. மகாவம்சத்தில் எல்லாளனைப் பற்றிய விவரிப்பு தாராளமாக உள்ளது. மேலும் அத்தியாயம் 21 இல் கொடுக்கப்பட்டுள்ள கதைகள் 'நாங்கள் பள்ளியில் ஆறாம் அல்லது ஏழாம் வகுப்பின் போது படித்த கதைகளுடன் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டுள்ளன. இலங்கை வரலாற்றாசிரியர்கள் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகளை தாராளமாகப் இங்கு பயன்படுத்தினர் என்பதே உண்மை. எல்லாளன் என்பவர் மனுநீதி கண்ட சோழன் மற்றும் சிபி சக்கரவர்த்தியின் நகல் போல உள்ளது. எல்லாளன் என்ற பாத்திரம், ஒருவன் குணத்திலும் நீதியிலும் ஒப்பிட முடியாதவனாக இருக்கலாம், ஆனால் அவன் பௌத்தனாக இல்லாவிட்டால் அவன் கொல்லப்பட்டு ஒழிக்கப்படுவான் என்ற தர்க்கத்தை வலியுறுத்த இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுதான் நாளாகமங்களில் ஓடும் கொடூரமான தர்க்கம் ஆகும்! என்றாலும் சாதாரண சிங்கள மக்களுக்கு இந்த தர்க்கத்தில் உண்மையான பங்கு இல்லை, அதனால்த்தான் அவர்கள் இப்போதும் எல்லாளனை ஒரு நியாயமான ஆட்சியாளராக மதிக்கிறார்கள். முதலாவது கண்டியின் அதிகாரி, பிலிமத்தலாவ [The First Adikar of Kandy, Pilimatalava,], பிரிட்டிஷ் காலனி அரசின் பிடியில் இருந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வடக்குக்கு, தனது விசுவாசமான குடிமக்களுடன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பல்லக்கில் அனுராதபுரத்தின் ஊடாக வன்னிக்கு காவிச் சென்றனர். அவர் மிகவும் சோர்வுற்று களைத்துப்போய் இருந்தார். என்றாலும் எல்லாளனின் நினைவு தூபி வந்ததும், பல்லக்கில் இருந்து இறங்கி, நீண்ட தூரம் நடந்து போனார் [He was exhausted and tired, but he got down where he thought that the Elara’s memorial was and started walking for a long distance.] அவரின் விசுவாசமான குடிமக்கள், நினைவு தூபியை கடந்து நீண்ட தூரம் வந்துவிட்டோம் என்று சொல்லியும், இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தே, பல்லக்கில் ஏறினார் என்பது வரலாறு. அந்த பெருமைமிக்க தமிழ் அரசன் தான் எல்லாளன்! நான் இந்த நேரத்தில், இன்னும் ஒன்றையும் சொல்லவேண்டும். தீபவம்சம், விகாரமகாதேவியின் எந்த கோரமான ஆசைகளையும் [the gory desires of Vihara Mahadevi] சொல்லவில்லை, ஆக மகாவம்சமும் அதன் பின் எழுதப்பட்ட காப்பியங்களும் தான் சொல்லுகின்றன. அதுமட்டும் அல்ல, தீபவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்களம், දුටුගැමුණු duṭugämuṇu) க்கும் இடையிலான போர் ஆகியவையும் அங்கு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். தீபவம்சத்தின்படி துட்டைகைமுனு ஒரு சிறந்த கட்டிடக்கலைஞர். உதாரணமாக, துட்டகைமுனு மன்னனின் சமயப்பணி பற்றி நோக்கின் 89 விகாரைகளை அமைத்ததாகவும் அதில் ரூவன்வெலிசாய பிரபல்யமான விகாரையாக கருதப்படுகின்றது. மிருசவெட்டிய விகாரை மற்றும் லோகமகாபாய எனும் கட்டடமும் இவரால் அமைக்கப்பட்டுள்ளது. 'Eleven Years in Ceylon-in Two Volumes by Major Forbes, First Published 1840, AES Reprint 1994.' என்ற நூலின் பக்கம் 233 முதல் 234 வரையிலான சில வரிகளை மேற்கோள் காட்டுவது பொருத்தமானது என்று நம்புகிறேன். "1818 ஆம் ஆண்டில், பழமையான கண்டியக் குடும்பத்தின் தலைவரான பிலிமத்தலாவ, அவர் ஈடுபட்டிருந்த கிளர்ச்சி தோல்வியுற்ற பின்னர், அவர் சோர்வுற்று மனமும் உடலும் வலு விழந்து இருந்தாலும், மறைவில் இருந்து வெளியேறி தப்பிக்க முயன்ற பொழுது, எல்லாளனின் பழங்கால நினைவுச்சின்னத்திற்கு அப்பால் அவர் வெகுதூரம் கடந்துவிட்டார் என்று உறுதியளிக்கும் வரை, மரியாதையின் பொருட்டு நடந்து சென்றார். என்றாலும் இந்த மாவட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டு, பிரான்ஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார் (பிரான்ஸ் தீவு மொரிஷியஸ் தீவு); என்றாலும் அவர் எங்கிருந்து 1830 இல் திரும்பி வர அனுமதிக்கப்பட்டார், ஆனால், இயலாமை காரணமாக விரைவில் இறந்தார். [“In 1818, Pilame Talawe, the head of the oldest Kandyan family, when attempting to escape, after the suppression of the rebellion in which he had been engaged, alighted from his litter, although weary and almost incapable of exertion; and, not knowing the precise spot, walked on, until assured that he had passed far beyond this ancient memorial. Pilame Talawe was apprehended in this district, and transported to the Isle France (Isle of France is the Mauritius Island); from whence he was allowed to return in 1830, and soon after died from the effects of intemperance”.] இருப்பினும், அநுராதபுர நகரத்தில், தேவநம்பியதீசனால் கட்டப்பட்ட ஏராளமான புத்த தூபிகளை [குவிந்த மேற்பரப்புடைய நினைவுச்சின்னம்] இடித்து, 44 ஆண்டுகள் கொடூரமாக எல்லாளன் ஆட்சி செய்ததாக இராசவலிய[ம்] கூறுகிறது. இந்தக் கூற்று தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாளன் பற்றிய கருத்துக்கு முற்றிலும் முரண்படுகிறது. அந்த இரண்டு வரலாற்று நூலிலும் எல்லாளனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் அல்லது தவறுகளையும் பேசியதாக ஒரு வார்த்தை கூட அங்கு இல்லை. காலப்போக்கில், புத்த துறவி ஆசிரியர்கள், எல்லாளன் துன்மார்க்கமாக ஆட்சி செய்ததாக, பாமர பௌத்தர்களை நம்பவைப்பதற்கு படிப்படியாக தயார்படுத்தினர் என்பதே உண்மை. என்றாலும் இந்த முயற்சி வெற்றியடையவில்லை, ஏனெனில் இராசவலிய மிக சமீபத்தில் தோற்றம் [பதினேழாம் நூற்றாண்டு] பெற்றாலும் பிரபலமாகவில்லை. இராசவலியை மொழிபெயர்த்த முதலியோர் பி.குணசேகர, தனக்கு நல்ல தரமான கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை என்கிறார். அவரது சொந்த வார்த்தைகளில் [தனக்கு கிடைத்த], 'பல ஓலை கையெழுத்துப் பிரதிகளில், இரண்டு மட்டுமே பொதுவாக புரிந்துகொள்ளக் கூடியதாகவும் பொருள் பிழைகள் இல்லாததாகவும் கருத முடியும்' [‘Of several Ola manuscripts, two only can be credited with being generally intelligible and free from material errors’]. என்கிறார். சிங்கள பௌத்தர்கள் இராசவலிய வரலாற்றுக்கு இவ்வாறான தகுதியைத் தான் வழங்கினர் என்பது அதன் செல்வாக்கற்ற நிலையை குறிக்கிறது எனலாம். அவ்வாரே சர் பொன்னம்பலம் ராமநாதனும் பிற்காலத்தில் சிங்களவர் மத்தியில் செல்வாக்கு இழந்தார் என்பது வரலாறு ஆகும். Part: 20 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who is really Elara & Dutthagamani?' A prince Elara killed Asela and ruled for forty-four years. The Dipavamsa described him as an incomparable monarch reigned righteously. The Dipavamsa does not say he was a Damila prince and did not say that he came from Chola country. The Dipavamsa, unlike the Mahavamsa, never spewed anti-Tamil hatred. Its interest is only Buddhism, and Tamils have no issue with it. Then prince Abhaya (Dipavamsa uses the epithet ‘Duttagamani’ only once, at the time of his death) put thirty-two kings to death and reigned for twenty-four years as per the Dipavamsa. It does not say that prince Abhaya killed Elara. It could be that Elara died of old age, and thirty-two sub-kings or chieftains ruled after him. The prince Abhaya pounced on them, one by one, to capture the kingdom? The real story must have been that there were many sub-kingdoms with many princes, including Tamils. The names like Mutasiva, Siva, Mahasiva, Sena, and Gutta are Tamil names, even Tissa and Suratissa could be Tamils. The father of prince Abhaya is Kakkavanna. The name of the last king, the king of the Tamil Vanni region, killed by the British was Pandaravanniyan, and Kakkavanniyan betrayed Pandaravanniyan. This happened in the present day Mullaitivu District. The name Kakkavanna is phonetically similar to the name Kakkavanniyan. The Dipavamsa does not give the connection Kakkavanna had with Mutasiva or with Devanampiyatissa. Mahanama took advantage of this to spin a story around it in the Mahavamsa. There are fabulous stories about ten warriors, each stronger than ten elephants in the Mahavamsa and it does not merit any serious criticism. This is just for the serene joy of the pious. Dutthagamani was not the biological son of his father as per the Mahavamsa. He was sort of reincarnation of a dying monk, and, instead of dying, he became a foetus inside the womb of Vihara Devi, the mother of Dutthagamani. No one stresses this point. Therefore, he could not have continued the royal line, as he is a reincarnation of a monk, a usurper. There is another story line in the Rajavaliya. The description of Elara in the Mahavamsa is also very generous, and the stories given on the chapter 21 has close resemblance of ‘the stories we studied about ‘Manuneethy Kannda Cholan during our sixth or seventh standard in the school. The Ceylon chroniclers liberally used the folklores of Tamil Nadu. The Rajavaliya, however, says that Elara ‘demolished the numerous dagabas built by Devenipetissa in the city of Anuradhapura, and reigned wickedly for the space of 44 years’. This statement is in conflict with the account of Elara given in the Dipavamsa and the Mahavamsa. There were no ill-spoken words against Elara in those two chronicles. In the course of time, the monkish authors gradually prepared the lay Buddhists to believe that Elara ruled wickedly. This endeavour was not successful as Rajavaliya was not very popular even though of very recent origin. The translator of the Rajavaliya, Mudalior B. Gunasekara, did not have the luxury of much good quality of manuscripts. In his own words ‘Of several Ola manuscripts, two only can be credited with being generally intelligible and free from material errors’. Sinhala Buddhists gave this kind of scant merit to the chronicle Rajavaliya. This is similar to what happened to Sir Ponnampalam Ramanathan. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 21 தொடரும் / Will Follow
  11. அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 19 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 19 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'இரண்டு வெளிநாட்டு குதிரை வியாபாரிகள் மற்றொரு நாட்டின் பெரிய அரசை கைப்பற்ற முடியுமா?' இராசவலியமானது மூத்தசிவனின் ஆட்சியை இரண்டாகப் பிரித்து விரிவு படுத்தி உள்ளது: கணதிஸ்ஸ (Ganatissa) 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும் மற்றும் மூத்ததிஸ்ஸ (Mutatissa) 60 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகவும், ஆட்சி காலத்தை, முன்னையதை விட கூட்டி உள்ளது. மற்ற இரண்டு வரலாற்றுக்களிலும் உள்ள 'மூத்தசிவா' என்ற தமிழ், சைவம் ஒலிக்கும் பெயர் இராசவலியில் 'மூத்ததிஸ்ஸ'வாக மாறியுள்ளது. வரலாற்று நூல்களில் கொடுக்கப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட ஆட்சி கால [இறையாண்மைகளின்] பட்டியலைப் பயன்படுத்தி, இலங்கை "காலவரிசை வரலாறு அல்லது நாளாகமம்" களுக்கு இடையிலான உறுதிப்படுத்தல்கள் மற்றும் முரண்பாடுகளை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தேவநம்பியதிஸ்ஸவின் மறைவுக்குப் பிறகு உத்திய [Uttiya] பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். மகிந்த தேரர் அவரது ஆட்சிக் காலத்தில் தான் காலமானார். சிவன் (மகாவம்சத்தில் உள்ள மகாசிவன்) உத்தியாவுக்குப் பிறகு பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார், மேலும் மகாசிவனுக்குப் பிறகு சுரதிசா மேலும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். இரண்டு தமிழர் இளவரசர்களான சேனா மற்றும் குட்டா [Sena and Gutta] ஆகியோர் பன்னிரண்டு ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்தனர் (மகாவம்சம் இருபத்தி இரண்டு ஆண்டுகள் நீதியாக ஆட்சி செய்தார்கள் என்கிறது). தீபவம்சம் 'தமிழ்' மக்கள் என்று பேசுவது இதுவே முதல் முறை என்றாலும் இளவரசர்களின் ஆட்சிகள் நீதியானவை தான் என்றும் ஒத்துக்கொள்கிறது. தேவநம்பியதிஸ்ஸவின் ஒன்பதாவது சகோதரனான அசேல சேனாவையும் குட்டாவையும் கொன்று பத்து வருடங்கள் ஆட்சி செய்தார். தீபவம்சம் சேனா மற்றும் குட்டா இருவரும் இளவரசர்கள் என்று கூறுகிறது, ஆனால் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமா இருவரும் ஒரு குதிரை வியாபாரியின் மகன்கள் என்று கூறுகிறார். இப்படித்தான் தமிழர்களின் நன்மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக களங்கப்படுத்துகிறார் மகாநாமா. அவர் வேண்டுமென்றே சேனாவையும் குட்டாவையும் அரச வம்சத்தில் பிறக்கவில்லை என்றும் அவர்களை வெளிநாட்டினராக சித்தரிக்கிறார். என்றாலும் இந்த இருவரும் சோழநாட்டிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இருந்து வந்ததாக, முதல் எழுதப்பட்ட தீபவம்சம் கூறவில்லை. மகாவம்சம் இவர்கள் "தமிழ் குதிரை வியாபாரிகள்" என்று மட்டுமே குறிப்பிடுவது நம்பக்கூடியதாக இல்லை. எனவே, சேனன் மற்றும் குத்திகன் [சேனா மற்றும் குட்டா] வெறும் குதிரை வியாபாரிகளாக இருக்கமுடியாது? என்று எண்ணுகிறேன். ஒருவேளை வியாபாரிகள் மாதிரியான ஒரு வேடத்தில் தந்திரமாக இலங்கை அரசுக்குள் ஊடுருவி இருக்கலாம்? இவர்கள் அனுராதபுரத்தை கைப்பற்றி 22 வருடங்கள் நேர்மையான ஆட்சி செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் போர்திறன், ஆயுதங்கள் மற்றும் ஒழுங்கமைந்த சேனை இருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை. அதாவது, இவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல; போர்வீரர் வியாபாரிகள் (merchant-warriors) அல்லது துணை இராணுவத் தலைவர்கள் ஆக இருக்கலாம்? உதாரணமாக, தமிழ்நாட்டில் பழங்காலம் முதல் வேளிர், கரையார், செட்டியார் [Velir, Karaiyar, and Chettiars] போன்ற சமூகங்கள், வாணிபம் மற்றும் போர் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும் செயல்பட்டிருக்கின்றனர் என்பது வரலாறாகும். மேலும் டயோக்ளீஷியன் (Diocletian – ரோமன் பேரரசு), நெப்போலியன் (Napoleon Bonaparte – பிரான்ஸ்), சந்திரகுப்த மௌரியர் (Chandragupta Maurya – இந்தியா) ஆகியோர் அரச பரம்பரையில் இல்லாமல், அரசை கைப்பற்றிய உண்மை வரலாற்று சம்பவங்கள் இருந்தாலும், இவர்கள் அனைவரும் இராணுவத்தில் பதவிவகுத்தவர்கள் அல்லது தனது சொந்த பழங்குடியினருக்கு வலுவான விசுவாச உணர்வு கொண்டவர்களாக இருந்தவர்களாகும். உதாரணமாக டயோக்ளீஷியன் மற்றும் நெப்போலியன் ஆகிய இருவரும் இராணுவத்தில் உயர்ந்து, அதன் பின் பேரரசை கைப்பறியவர்கள் ஆகும். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் அவரிடம் இருந்து கற்று தேர்ந்த பின்பே, சந்திரகுப்த மௌரியர், நந்தர் அரசை வீழ்த்தி, மௌரிய பேரரசை நிறுவியவர் ஆகும். Part: 19 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Can two foreign horse traders conquer the Great Kingdom of another country?' The Rajavaliya amplified the reign of Mutasiva into two: Ganatissa (40 years) and Mutatissa (60 years). The Tamil sounding name Mutasiva in the other two chronicles has become Mutatissa in the Rajavaliya. One can compare and contrast the corroborations and conflicts between the Ceylon chronicles using the list of sovereigns as Appendix to this chapter. Uttiya ruled for ten years after the demise of Devanampiyatissa. Mahinda Thera died during his reign. Siva (Mahasiva in the Mahavamsa) ruled for ten years after Uttiya, and Suratissa ruled for another ten years after Mahasiva. Two Damila princes Sena and Gutta righteously ruled for twelve years (The Mahavamsa says ruled justly for twenty-two years). This is the first time the Dipavamsa speaks of ‘Damila’ people and the reigns of the princes are righteous. The younger, ninth brother of Devanampiyatissa, Asela, killed Sena and Gutta and ruled for ten years. The Dipavamsa says Sena and Gutta are princes, but Mahanama, the author of the Mahavamsa says both are sons of a horse trader. This is how Mahanama tarnishing the image of Tamils, little by little. He was deliberate to denigrate Sena and Gutta as of no royal birth and wanted to portray them as foreigners. The Dipavamsa does not say that both came from Chola or Tamil country. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 20 தொடரும் / Will Follow https://www.facebook.com/share/p/1BF4uw3Vf8/?mibextid=wwXIfr
  12. கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 03 திடீரென்று, இசை ஆர்வமாக சிரித்தபடி புத்தர் இடம் கேட்டான். “சுவாமி, புத்தரே, நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் வந்தேறு குடியாக தஞ்சம் அடைந்த, சிங்க மிருகத்தின் வாரிசு, கெட்ட விஜயனும், தந்தைக்கு பிறக்காத, இறந்த புத்த குருவின் மறுபிறப்பான துட்டகாமினியும், எப்படி நேரடியாகச் சொர்க்கம் போனார்கள்?, ஆனால் அதற்கு முதல் புத்தர் மீண்டும் போதி மரத்தின் கீழ் மௌனமாகி விட்டார். இசை கொஞ்சம் முணுமுணுத்தபடி, என்னை பார்த்து கேட்டான், 'தாத்தா, நரகம் மிகவும் பயங்கரமானதா, அங்கு போகாமல் தப்பிக்க, கொலைகள் கொள்ளைகள் செய்பவனும், தன் ஒரு பங்காக ஆலையங்கள் கட்டி அன்னதானம் செய்தால் போதுமா ?” அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! இன்பம் துன்பம் சமமாக மதித்து கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோம்! உரிமை உள்ள மனிதனாக பெருமை கொள்ளும் இனமாக வறுமை அற்ற குடியாக சிறுமை போக்கி நகருவோம்! ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும் ஆக்கம் கொண்ட சமூகமும் ஈவிரக்கம் காட்டும் அரசும் தரமான உலகைத் தரும்! பாசம் உலாவும் கண்களாய் மோசம் செய்யா இதயமாய் எங்களை நாங்கள் ஆக்கினால் தேசம் ஓங்கிச் சிறக்கும்! பக்கத்தில் இன்னும் நின்ற சிவன் சிரித்தார். அவர் கண்கள் மறுமொழி கொடுத்துக்கொண்டு இருந்தன. பின் “நீங்களே ஏன் போய் நேராக பார்க்கக்கூடாது?” என்று கேட்டார். இசையும் நானும் சம்மதம் தெரிவிக்க, சிவனின் ஏற்பாட்டில், ஒரு கண் சிமிட்டலில், நாம் பாதாள உலகத்திற்குள் இறங்கினோம். ஆனால் இது பண்டைய நூல்களில் இருந்தது போல் அல்லது கற்பனை செய்த பயங்கரமான இடம் அல்ல. இது உண்மையில் தண்டனை அல்ல, கற்றலின் ஒரு பகுதி போல் இருந்தது. அதன் இதயத்தில், மத்தியில் சத்ய சாய் பாபா அமர்ந்திருந்தார், அவரைச் சுற்றி மரியாதைக்குரிய ஓஷோ (பகவான் ரஜ்னீஷ் சந்திர மோகன்), ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவி [நிர்மலா ஸ்ரீவஸ்தவா] அமர்ந்திருந்தனர் மற்றும் சில இடங்கள் நித்யானந்தா, ஆசாரம் பாபு, குர்மீட் ராம் ரஹிம் சிங், ராதே மா போன்றோருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. - சிலர் மனிதர்களால் கடவுள்களாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டனர், சிலர் தாங்களே தங்களை தவறாக கடவுளாக காட்டியவர்கள், ஆனால் அனைவரும் பணிவுடன் இங்கு பிரகாசித்தனர். சாய்பாபா எங்களை வரவேற்றார். "கந்தையா தில்லை, இதோ, இங்கே மீண்டும் நரகலோகம் வந்த மக்களுக்கு அவர்களின் தவறுகளைக் சுட்டிக் காட்டி மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கிறோம்." என்றார். இசை 'இவரின் படத்தை தானே, அம்மம்மா சாகும் பொழுது கையில் வைத்திருந்தார்? பாவம் அம்மம்மா, தப்பிவிட்டார்!' என எனக்கு காதில் முணுமுணுத்தான். இங்கே மதிய உணவு அடக்கமாக இருந்தது - சப்பாத்தி, எலுமிச்சை சாதம், மசாலா பருப்பு, ஆனாலும் அது வெறும் சாப்பாடாக இல்லாமல், அந்த உணவில் அவர்களின் மன்னிப்பும் ஞானமும் கலந்து இருந்தது. அது மட்டும் அல்ல, இந்த உணவு ஆடம்பரமானதாகவோ அல்லது பிரமாண்டமாகவோ இல்லை என்றாலும், ஊட்டமளிக்கக் கூடியதாகவும் ஆறுதலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. பணிவு, சிக்கனம் மற்றும் விருந்தோம்பல் அங்கு தெரிந்தது. இந்த கடவுள்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் பூமிக்குரிய காலங்கள், பாராட்டுகள் மற்றும் தவறுகள், அவர்கள் பெற்ற அன்பு மற்றும் அவர்களை சிக்க வைத்த சம்பவங்கள் பற்றி எங்களுடன் பேசினர். ஆனால், தாம் மீண்டும் அதே பாணியில் இங்கு வாழ்வதால், பிரச்சனை இல்லை என்று மகிழ்வாகக் கூறினர். இலங்கை பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அரசியலால் திரிக்கப்பட்ட நம்பிக்கை எவ்வாறு அற்புதங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியது என்பதையும் மற்றும் அவர்களின் உரையாடலையும் இசை, விளங்குதோ விளங்கவில்லையா கண்களை விரித்து ஆச்சரியமாகக் கேட்டான், சாய்பாபா, எதோ கையை மேலே உயர்த்தினார். ஒரு தங்கச் சங்கிலி எடுத்து, 'இசை'யின் கழுத்தில் போட முயன்றார். ஆனால் இசை அதை தட்டி விட்டான். அவன் பார்த்த பார்வை, இன்னும் உங்க புத்தி மாறவில்லையா' என்று கேட்காமல் கேட்டது? சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன், நானும் இசையும் சொர்க்கத்திற்குத் மீண்டும் திரும்பினோம். உண்மையில் இங்கு இரவோ பகலோ கிடையாது. நான் என் ஆப்பிள் மணிக்கூடு சொல்லுவதை வைத்து கூறுகிறேன். இங்கே வானம் அந்தி நீல நிறங்கள் மற்றும் தங்கக் கோடுகளின் திரைச்சீலை போல் மாறியது. சந்தன மரத்தின் நறுமணம் காற்றில் எங்கும் பரவியது. அன்று முழுவதும் நான் காபி குடிக்கவில்லை, நா வறண்டது. மாலை காபியாவது குடிப்போம் என்று தேடினேன். அப்போது தேவலோகத்தில் ஒரு தேவர்களும் தேவதைகளும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. அப்பொழுது காமதேனுவை அங்கு கண்டேன். அது வந்து "ஐயனே, என்ன வேண்டும்?" என்று கேட்டது. ஒரு நல்லா ஸ்ட்ராங்கா காபி கொண்டுவா என்றேன். ஆனால் அதுவும் தன்னால் அது இயலாது என்று சொல்லிவிட்டது. எதோ சப்தம் கேட்டு, திரும்பி பார்த்தேன். அங்கே தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். தங்க மோகம் இங்கு அதிகம் போல் எனக்குத் தெரிந்தது. அப்பத்தான் நல்லூர் ஞாபகம் வந்தது , அங்கே வாசலில் அலங்கார நல்லூரானின் பொருள் இப்ப விளங்கியது! எங்கள் இருவரையும் ஒரு தெய்வீக மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு தெய்வீக நடனக் கலை பார்க்க அன்று இரவு ஏற்பாடு செய்தனர். இந்த மண்டபம் உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன் மயன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது என்று ஒரு விளக்கமும் தந்தனர். இசை அவர்கள் சொல்லி முடிப்பதுக்குள் மண்டபத்துக்குள் ஓடிவிட்டான். எமக்கு துணையாக நாரதரும் வந்தார். ஒரு மூலையில் யமன் ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பதைக்கண்டேன். நல்லவேளை இசை அந்த பக்கம் போகவில்லை! சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை அன்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் ! சொர்க்கத்தில் இன்று இசையுடன் நான் தூர்ந்த கனவை தூசு தட்டுகிறேன் பார்த்து ரசித்து பூசை செய்கிறேன் நேர்த்திக் கடனாய் காவடி ஆடுகிறேன் !" "மர்ம சாமியார்கள் புடை சூழ ஊர் வலம் சென்றேன் நரகத்தில் நேர்மை பற்றி பிரசங்கம் செய்து சர்ச்சை இல்லாமல் திரும்பி வந்தேன் !" "ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள சொர்க்க லோகத்தில் குடி கொள்ள அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 04 தொடரும் https://www.facebook.com/share/p/1CepkKK4Zb/?mibextid=wwXIfr
  13. "மூன்று கவிதைகள் / 03" 'தர்மத்தின் தலைவர்' தர்மத்தின் தலைவர் குமாரசாமி காமராசரே நேர்மை, எளிமை, சேவை மூன்றையும் நேர்வழியில் செய்து எடுத்து காட்டியவரே மார்பினில் உன்னைத் தினம் வணங்குகிறேன்! குலதெய்வம் காமாட்சி பெயர் சூடியவனே நிலத்தின் உரிமைக்காக சிறை சென்றவனே சிலருக்காக வாழாமல் பலருக்காக வாழ்ந்தவனே ஆலமரத்தின் தத்துவம் உன்னில் அறிந்தேனே! சமஉரிமை வேண்டும் ஈழத் தமிழனுக்கு சத்தியம் வென்று உண்மை நிலைப்பெற சங்கு எடுத்து அறிவுரை சொல்லாயோ சலனம் அற்ற வலிமை கொடுக்காயோ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ..................................................... 'சந்தேகமேகத்திலே காதல் வெண்மதி மறைந்திடுமா' சந்தேகமேகத்திலே காதல் வெண்மதி மறைந்திடுமா குந்தகம் விளைவிக்கும் ஐயப்பாடுதான் எதற்கோ முந்தானை முடிச்சுலே அவிழாது இருப்பவனை நிந்தனை செய்யலாமா நிம்மதியைக் கெடுக்கலாமா சிந்தனை செய்யாயோ கருணை காட்டாயோ? அழகு கொட்டும் வண்ண மயிலே அணைத்து எனக்கு இன்பம் ஊட்டியவளே அன்பு என்பதற்கு இலக்கணம் சொன்னவளே அழவைத்து தள்ளிப் போவது நியாயமா அடுத்தவன் பேச்சை நம்புவது எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ....................................................................................... 'மருந்தே உணவாக ?' மருந்தே உணவாக உணவே மருந்தென மனதில் பதித்து செயலில் காட்டினால், மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு அமையுமே மங்காத உடல்நலம் உன்னைச் சூழுமே! அளவாக எடுத்து அமிர்தமாக அருந்தி அயராது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருந்தால், அழகான வாழ்வு உன்னை அடையுமே அதிசயம் காண்பாயே பலன்களை உணர்வாயே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  14. கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 02 "ஆ, கந்தையா தில்லை! நீங்கள் உங்கள் குட்டிப் பேரன் இசையுடன் வந்திருக்கிறீர்கள்," என்று சிவன் கூறினார். "வா, வா - காலை உணவு தயாராக உள்ளது", என அன்பாக வரவேற்றார். பின் சிவா, 'இசை'யை பார்த்து என்னை ஒருவன் பதினாறு அகவையில், 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே என்று திட்டினான், நியோ அவனின் வர்க்கமூல அகவையில் தாளம் காட்டும் நடையுடன் புகழ்ந்து வருகிறாய்' என்று மெச்சினார். நாம் இருவரும் ஒரு தெய்வீக கொற்றக் குடையின் கீழ் அமர்ந்தோம். தட்டுகள் தங்க நிறத்தில் இருந்தன, உணவு வானளாவியதாக இருந்தது - மேகங்களைப் போல மென்மையான இட்லிகள், நெய் சொட்டும் பொங்கல், பூமியில் உள்ளதை விட இனிமையான தெய்வீக மாம்பழங்கள் அங்கு எமக்கு இருந்தன. தியானத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்த புத்தர் எமக்கு மல்லிகை தேநீர் வழங்கினார். பார்வதி இசைக்கு ஒரு பிரகாசமான இனிப்பு லட்டுவை வழங்கினார். அது 'இசை'யை மகிழ்ச்சியுடன் சிரிக்க வைத்தது. காலை உணவுக்குப் பிறகு, நான் , "சுவாமி, நாங்கள் சில முக்கிய கேள்விகளுடன் வந்துள்ளோம். எங்கள் அன்பான நிலமான இலங்கையில் என்ன நடக்கிறது?" என்று ஆரம்பித்தேன். சிவன் பெருமூச்சு விட்டார், அவரது மூன்றாவது கண் மெதுவாக மினுமினுத்தது. "கந்தையா தில்லை, மண் நினைவால் அழுகிறது. போரின் வலி, அதிகார பேராசை, உண்மையின் மௌனம் - அது இன்னும் எதிரொலிக்கிறது." சுருக்கமாக கூறினார்! ஆனால் எனக்கு, அந்த விளக்கம் சற்றும் திருப்தி அளிக்கவில்லை, என் வாய் 'வாடா வாடா, சுடலை மாடா, அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காம எங்கிட்டும் நிற்காம, என் கவலை தீர்க்க உடனே நீ ஓடி வாடா' என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. சிவனுக்கு அது கேட்டிருக்க வேண்டும். சிவன் தொடர்ந்தார் 'செம்மணியில் செய்யப்பட்டது வெறும் கொலை அல்ல - அது வாழ்க்கையை, தர்மத்தையே அவமதிப்பதாகும். பெண்கள், குழந்தைகள், மண்ணின் மைந்தர்கள் பாதுகாப்பதாக சத்தியம் செய்தவர்களால் சாம்பலாக மாற்றப்பட்டனர். ஆனாலும் நிலம் நினைவில் கொள்கிறது - சாட்சியமளிக்க மண் இன்று செம்மணியில் எழுகிறது.' என்றார்! 'யாழ்ப்பாண நூலகத்தைப் பற்றியும் நான் கூறவேண்டும். சரஸ்வதி வீணையுடன் முன்னுக்கு இருந்தாள், ஆனால் கண்மூடி இருந்துவிட்டாளே?' ஒரு பெருமூச்சு விட்டார். 'அறிவுக் கோயில் எரிமலையாக மாறியது - காலத்தால் அல்ல, வெறுப்பால். அந்த நெருப்பு புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் எரித்தது. புத்தகங்களை எரிப்பவர்கள் நாகரிகங்களை எரிக்கிறார்கள்.' என்று கோபத்துடன் கூறினார். வானரத்தின் வழிவந்த வன்முறையாளர் வளந்தரு நூலகத்தை தீமூட்டி எரித்தார்! கானகத்தின் அமைதியில் தியானித்தவன் கருத்தபுகையில் சத்தியம் இழந்தான்! போதிமரமும் கொதித்து எழ, புத்தனும் போதனையைக் கைவிட்டு சிலையானான்! என்னை ஏறிட்டு பார்த்தார். பின் இசையை கட்டித் தழுவியபடி, 'தமிழ் கண்ணீரில் நனைந்த நிலத்தில் என் சகோதரன் புத்தரின் சிலையை வலுக்கட்டாயமாக எழுப்புவது வழிபாடு அல்ல - அது அவமானம். சிவன் என்ற நான், மதம் என்ற போர்வையில் வெற்றியை ஆசீர்வதிப்பதில்லை. கீழே புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்து நீதி முளைக்கும் வரை, இரத்தம் தோய்ந்த மண்ணில் தர்மம் மலர முடியாது. அதுவரை, இந்த நிலம் தூங்காது.' என்று அமைதியாக கூறினார். பின் 'லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை உண்மை கூற விரைவில் அனுப்புவார் என் நண்பர் புத்தர்' என்றார். பார்வதி கருணையுடன் கூறினார், "ஆனால் நம்பிக்கை சிறிய இதயங்களில் வாழ்கிறது. இசை போன்ற குழந்தைகள் இரக்கத்தின் ஜோதியை சுமப்பார்கள்." என்றார். பக்கத்தில் இந்திரன் [Sakka, king of gods], விஸ்ணு [Upulvan / උපුල්වන් ‍දෙවියෝ] சூழ நின்ற புத்தர் புன்னகைத்தார், "துன்பம் இருக்கிறது, ஆனால் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாதையும் இருக்கிறது. இப்போதும் கூட, சாம்பலுக்கு மத்தியில், கருணையின் விதைகள் வளர்ந்து வருகின்றன." புத்தர் தொடர்ந்தார், "நான் அஹிம்சையைக் கற்றுக் கொடுத்தேன் - வெறும் செயலில் அல்ல, சிந்தனையிலும். செம்மணியில், இறந்தவர்களின் மௌனம், பேச்சை விட சத்தமாக அழுகிறது. அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைக்கப்படும்போது, தேசம் பூமியை மட்டுமல்ல, அதன் சொந்த மனசாட்சியையும் தோண்டி எடுக்கிறது." என்று ஒரு பெருமூச்சு விட்டார். "என்னை சிலையாகி எங்கும் திணிக்கிறார்களே தவிர, வேறு ஒன்றையும் நான் காணவில்லை?" ஏக்கத்துடன் என்னைப் பார்த்தார். 'இசை'யை வாரி எடுத்து கொஞ்சினார். 'யாழ்ப்பாண நூலகத்தின் அழிவு வெறும் புத்தகங்களின் இழப்பு அல்ல - அது ஞானம், கலாச்சாரம், நினைவாற்றல் ஆகியவற்றின் மீதான தாக்குதல். தீயை மூட்டியது மாறன் ( Mara / இவன் ஒரு அசுரன், தனது அழகிய பெண்களை அனுப்பி முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள் மற்றும் மனிதர்களின் கடுமையான தவத்தை கலைக்கும் ஆற்றல் படைத்தவன் ஆவான். ) அல்ல, மாறாக வெறுப்பால் மேகமூட்டப்பட்ட கொடிய மனிதர்கள்!'. 'அன்பு அல்லது சம்மதம் இல்லாமல் தமிழ் நிலங்களில் எனது உருவத்தை வலுக்கட்டாயமாக வைப்பது தம்மம் அல்ல - அது ஒரு துறவியின் உடையில் அரசியல் நாடகம். அடக்குமுறையின் மூலம் பிறந்த ஒரு கோயில், அமைதிக்கான இடம் அல்ல, மாறாக பாசாங்குத்தனத்தின் நினைவுச்சின்னம். நான் உண்மையிலேயே அந்த சிலைகளில் இருந்தால், நான் கட்டாயம் அழுவேன்.' என்றார் "ஒன்றை நினைவில் வையுங்கள் 'என்னைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு: ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். எலும்புகள் மற்றும் முள்வேலி மீது நான் எப்போதாவது அமைதியைக் கட்டினேனா??" புத்தர் துக்கம் தாளாமல் அழுதார். செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே! பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே! விலங்குக்கும் சில பண்பாடு உண்டே விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே விளக்கம் இல்லாத மதபோதனை எனோ களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை! வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 03 தொடரும் https://www.facebook.com/share/p/16puxtSJ2X/?mibextid=wwXIfr
  15. அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 18 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 18 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உண்மையில் தேவநம்பியதிஸ்ஸ இருந்தாரா?' இன்னும் ஒரு ஒப்பீட்டையும் நான் சொல்லவேண்டும். தேவநம்பிய தீசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன். அதேபோல அசோகனும் பிந்துசாரரின் (Bindusara) இரண்டாவது மகனாவார். தேவநம்பிய தீசன் 40 ஆண்டுகள் ஆண்டார் என இலங்கை நாளாகமம் [Ceylon chronicles] கூறுகிறது. இலங்கை நாளாகமத்தின் படி, அரியானை எறியபின் அசோகன் 37 ஆண்டுகள் ஆண்டதாக கூறினாலும், இந்தியா செய்திகளின் படி இது 36 ஆண்டுகளாக காணப்படுகிறது. அசோகன் முறையான முடிசூட்டு விழாவிற்கு நாலு ஆண்டுகள் முன்பே ஆள தொடங்கிவிட்டான். எனவே அவனும் 40 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகிறது. மேலும் இவ்விருவருக்கும் தேவநம்பிய என்றே அதே அடைமொழி [same epithet ‘Devanampiya’] காணப்படுகிறது. அப்படி என்றால் அசோகனுக்கு ஒத்ததாக இலங்கையில் ஒரு தேவநம்பிய தீசன் உண்டாக்கப் பட்டானா என்ற கேள்வியும் எழுகிறது [Is the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet?]? இதனால் போலும் தொல்பொருள் அல்லது கல்வெட்டு சான்று ஒன்றும் தேவநம்பிய தீசனுக்கு இலங்கையில் இல்லை. ஆனால் அசோகனுக்கு அவை தாராளமாக உண்டு. புத்தரின் சமகால மன்னர் பிம்பிசாரன் மற்றும் அசோகனின் தந்தை பிந்துசாரர், இருவரும் வெவ்வேறு ஆட்களாகும். [Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka] மேலே குறிப்பிட்டுள்ளபடி, விஜயன் முதல் தேவநம்பியதிஸ்ஸ வரை எந்த வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரங்களும் இல்லாமல் இந்த மன்னர்கள் காணப்படு கிறார்கள். அப்படி என்றால், அன்றைய காலத்தில் இலங்கையில் அரசர்கள் இல்லை என்பதல்ல. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் இருந்திருக்க வேண்டும், அவர்களின் பெயர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த கண்டு பிடிக்கப்பட்ட மன்னர்கள் 'புத்த மதத்தின் பக்தியுள்ளவர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகளுக்கு / 'serene joy and emotions of the pious.' பதிலாக இங்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மகாவம்சம் அத்தியாயத்தின் முடிவிலும் இது கூறப்பட்டுள்ளது. தேரவாத பௌத்தத்தில், பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் உருவாக்கவென, மகாவம்சம் அதன் வாசகர்களிடையே இப்படி, ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் கூறுகிறது. இது பார்வையாளர்களுக்குள் ஒரு உணர்வுகளை தூண்டவும் மற்றும் கண்மூடித்தனமான ஒரு பக்தியை வளர்க்கவும் என்று நாம் கருதலாம். இது வரலாற்று நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், அதைப் பின்பற்றுபவர்களிடையே ஆழமான உணர்ச்சி மற்றும் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு உரையாக இருக்கலாம். / In Theravada Buddhism, serene joy and emotion of the pious relates to the emotional impact the Mahavamsa aims to create in its readers. It represents both the desired emotional response to its teachings and the ultimate goal of its compilation: to foster spiritual feelings and devotion within the audience. This highlights the Mahavamsa as a text designed not only for historical recounting but also for evoking a deep emotional and spiritual connection among its followers. முன்பே கூறியது போல், சில அனுமானங்களின்படி, மூத்தசிவா குறைந்தது 137 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது, அதன்படி, மூத்தசிவா அரியணை ஏறும் போது அவனுக்கு 77 அகவையாகும். முத்தசிவனுக்கு முப்பது வயது இருக்கும் போது இரண்டாவது மகன் தேவநம்பிய தீசன் பிறந்திருந்தால், அரியணை ஏறும் போது தேவநம்பியதிசனுக்கு 107 வயது இருந்திருக்கும், மேலும் அவர் 147 வயது வரை மிகவும் பழுத்த வயது வரை தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் [(107-30-30)+60+40, அல்லது 137 - 30 + 40 வரை]. இப்போது அசேல மன்னனின் ஆட்சியைப் பார்ப்போம். அசேல முத்தசிவாவின் ஒன்பதாவது மகன். முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அவர் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். தேவநம்பிய திசாவுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதைத் தொடர்ந்து சேனா மற்றும் குட்டாகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். எங்கள் முன்னைய ஊகத்தின் படி அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் இருந்ததால் அல்லது முத்தசிவனுக்கு ஐம்பது வயது இருக்கும் போது அசேல பிறந்தார் என்றால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அல்லது 137- 50 + 40 + 10+ 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். இது ஒரு பரிதாபகரமான பொய்யாக இருக்க வேண்டும். பண்டுக முதல் அசேல வரையிலான ஆட்சியாளர்களின் வயது வழக்கத்தை விட மிக அதிகம். புத்தர் மறைந்து இருநூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இருப்பினும், இந்திய பாரம்பரியத்தின்படி புத்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அசோகரின் முடிசூட்டு விழா நடந்தது. இரண்டு மரபுகளுக்கும் இடையே நூற்று பதினெட்டு ஆண்டுகால மாறுபாடு உள்ளது. இப்போது அறிஞர்கள் புத்தர் இறந்த ஆண்டை கி பி 400 க்கும் கி பி 369 க்கும் இடையில் கணிக்கிறார்கள். பண்டுவாசுதேவரில் இருந்து அசேல வரையிலான ஆட்சியின் நீளம், தமிழ் மன்னர்களான சேனனும் குத்திகனும் [22 ஆண்டுகள்] தவிர, 30, 20, 70, 60, 40, 10, 10, 10 மற்றும் 10 ஆகியவை ஆகும். இவர்கள் எல்லோரும் எல்லோரும் நேர்த்தியான வட்ட இரட்டை எண்களாக இருப்பதும் ஆச்சரியமே! இனி வரும் பாடங்களில் பண்டுவாசுதேவருக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான சகாப்தம் விரிவாக பகுப்பாய்வு செய்யப்படும். Part: 18 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Did Devanampiyatissa really exist?' Let us now look at Devanampiyatissa again. He was the second son of Mutasiva. Asoka was also the second son of Bindusara. Devanampiyatissa ruled for forty years as per the Ceylon chronicles. Asoka ruled for thirty-seven years after his consecration as per the Ceylon chronicles. However, Asoka assumed the power about four years prior to his formal coronation. Asoka therefore ruled forty-one years in total as per the Ceylon chronicles. The Indian tradition says that Asoka ruled thirty-six years after the coronation. Adding four years prior to the coronation, Asoka ruled forty years, as did Devanampiyatissa. Both are with the same epithet ‘Devanampiya’. Therefore, the author of the Dipavamsa created a Lanka counter part of Asoka with the same epithet. He could not have been a real person. That is why there are no archaeological or inscriptional evidence in Lanka about Devanampiyatissa while evidences for Asoka are available in length and breadth of India except in Tamil country. Bimbisara, the contemporary king of the Buddha is different from the Bindusara, the father of Asoka. As noted above, Vijaya to Devanampiyatissa are invented kings without any historical or archaeological evidences. This does not mean that there were no kings in Ceylon during that time. There must have been chieftains in various parts of Lanka, and all their names were obliterated and these invented kings were substituted for the serene joy and emotions of the pious. As stated above, Mutasiva must have lived to a very old age of one hundred and thirty seven. If the second son Tissa was born when Mutasiva was thirty years of age, then Devanampiyatissa would have been 107 years of age when he ascended the throne, and he should have continued to live for the very ripe age of 147 years, [(107-30-30)+60+40, or 137 - 30 + 40] Now let us look at the king Asela’s rule. Asela was the ninth son of Mutasiva. Suppose he was born when Mutasiva was fifty years of age. Considering the rules of Uttiya (10 years), Mahasiva (10 years), Suratissa (10 years), Sena and Guttika (22 years), Asela must have ascended the throne when he was, (107-30-50)+60+40+ 10+ 10 + 10 + 22, 179 years of age and he must have been killed by Elara when Asela was 189 of age, after the reign of ten years. This must be a pathetic lie. The ages of rulers from Panduka to Asela are very much longer than usual. Asoka’s coronation took place two hundred and eighteen years after the demise of the Buddha as per the Ceylonese chronicles. However, Asoka’s coronation took place only one hundred years after the demise of the Buddha as per the Indian tradition. There is a variation of one hundred and eighteen years between the two traditions. Now scholars prefer 400 B. C. to 369 B. C. as the preferred range in which the Buddha died. The lengths of reigns from Panduvasudeva to Asela, except the Damila kings Sena and Guttika [22 years] - 30, 20, 70, 60, 40, 10, 10, 10 and 10 are neat round even numbers indicating cooked up numbers. The era between Panduvasudeva to Dutthagamani is analysed in detail further down in this chapter. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 19 தொடரும் / Will Follow
  16. கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழுது, பேரன் பெரிய சத்தம் போடும் ஒரு விளையாட்டு சிங்கத்தை, தாயின் பக்கத்தில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தான். மகள் கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடு என்று பலமுறை சொல்லிப் பார்த்தாள். பேரன் 'இசை' கேட்பதாக இல்லை. கோபம் கொண்ட மகள், அதை இழுத்துப்பறித்துச் சென்று எங்கோ ஒளித்துவைத்தாள். ஆனால் பேரன் இன்னும் பெரிதாக சத்தம் போட்டு அழுது புரண்டான். உடனே நான் ஓடிச் சென்று அவனைத் தூக்கி கண்ணீரைத் துடைத்து, கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். சும்மா அவனுக்காக எனது மகளைக் கடிந்தேன். அதனால் கொஞ்சம் அழுகையை நிறுத்திய இசை, 'தாத்தா, அம்மாவை ஹெல் [நரகம் Hell] இல் கொண்டு போய் போடுங்க என்று பிடிவாதமாக நின்றான். ஒருவாறு அவனுக்கு பிடித்தமான சில சிற்றுண்டிகளைக் கொடுத்து சமாதானம் ஆக்க முயற்சித்தேன். பின் ஆசைவார்த்தை கூறி, அவனை என் அறைக்குள் தூக்கிச் சென்று, சாய்வு நாற்காலியில், என் மடியில் இருத்தி, அவனுக்கு பிடித்த பெப்பா பன்றி [peppa pig] கதை விடியோவை சத்தம் இல்லாமல் போட்டேன். பின் கொஞ்ச நேரத்தால் அவனுக்கு பிடித்த "தாலாட்டு" ஒன்று மெதுவாகப் பாடினேன். "சின்ன பூவே சிங்காரப் பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தை நிறுத்தி இமைகள் மூடாயோ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?" "பச்சை இலுப்பை அளவாய் வெட்டி பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி படுக்க இதமாய் கம்பளி விரித்து பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?" "யாழ் எடுத்து ராவணன் மீட்க யாவரும் ஒன்றுகூடிக் கானம் கேட்க யானை துதிக்கையால் ஏணை ஆட்ட யாழ் மொழியானே கண் உறங்காயோ?" இசை பின் மடியை விட்டு இறங்கி, ஆனால், சாய்வு நாற்காலியிலேயே அருகில் இருந்து தாலாட்டை ரசித்துக்க்கொண்டு இருந்தான். அவனுக்கு இப்ப நான்கு அகவை. முந்தைய நாள், என் அறையில் அவன் விட்டுச்சென்ற பொம்மை ரயில்களால் அறை நிறைந்திருந்தது. ஆனால் இருள் வானத்தில் பரவியபோது, ஏதோ ஒரு மாயாஜாலம் கிளர்ந்தெழுந்தது. நான் சோர்வாலும், இன்று நேரத்துடன் இரவு உணவு எடுத்து, பசி நீங்கியதால் நாற்காலியில் தாராளமாக இளைப்பாறிக்கொண்டு இருந்தேன். இசை அந்த ரயில்களை பொறுக்கி எடுத்து, அதை விளையாடிக்கொண்டு, அமைதியாக படுத்துக்கொண்டு இருந்தான். திடீரென ஒரு தங்க ஒளி எங்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது. நிலவொளியின் இறகுகளுடன் கூடிய அன்னப்பறவைகளால் இழுக்கப்பட்ட, மேகங்களின் தேர் வானத்திலிருந்து இறங்கியது. ஒரு மென்மையான குரல் எதிரொலித்தது, "வாங்க 'கந்தையா தில்லை', வாங்க 'இசை', வேறு எதிலும் இல்லாத ஒரு கோடை விடுமுறை உங்களுக்கு காத்திருக்கிறது." என்று மெதுவாகக் கூறியது. வரம் கொடுக்கும் தேவதைகள் வந்த போது குழப்பினேன் வந்த போது அவசரப்பட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன்! கரம் பிடிக்க ஆசைகொண்டு கள்ளமாக அவளைத் தொட்டேன் கருத்த விழிகளால் சுட்டுஎரித்து பருத்த மார்பாள் பறந்துசென்றாள்! நான் அண்மையில் எழுதிய பாடல் வரிகளை முணுமுணுத்துக்கொண்டு , அவசரம் அவசரமாக, ஒரு அகல விளிம்பு கொண்ட தொப்பி (குல்லாய்) ஒன்றை எடுத்து, தலையில் அணிந்து, கண்ணாடியை பார்த்து அதைச் சரிபண்ணிவிட்டு, பேரனின் ஒன்று இரண்டு விளையாட்டு பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு சில வினாடியில் அதில் இருவரும் ஏறினோம். என்ன வேகம்! ஒரு நொடியில், அவை நட்சத்திரங்களைத் தாண்டி பறந்து கொண்டிருந்தன. சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவான, வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) என் கண்ணில் தென்பட்டது. புராதன காலத்தில் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் மிகச் சிறந்த பிரம்மரிசிகள் (முனிவர்கள்) ஏழு பேரும் (சப்த ஏழு) வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசினார்கள். அவர்களின் அருகில் தான் இந்த இருவரையும் கண்டேன். அவர்கள் எப்போதும் அங்கே, இத்தனை ஆண்டுகள் ஆகியும் இணைந்து இருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டேன். கொஞ்சம் அருந்ததியுடன், 'ஏன் என் திருமணத்தின் போது, உன்னைக் காணமுடியவில்லை என்று கேட்ப்போம் எனறால்', அது முடியவில்லை!. எமது வானூர்த்தி வேகமாகப் பறந்துவிட்டது! பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும், கண்ணுக்கு விருந்தளிக்கும் சில வால் நட்சத்திரங்கள்களைத் தாண்டி சென்றோம். இசை அவ்வாற்றின் ஒன்றின் வாலை சிறிது நேரம் பிடித்து விளையாடினான். ஆனால் அது நழுவிப் போய்விட்டது. நாம் தரையிறங்கியபோது, அங்கு எல்லாம் மின்னும் ஒளியால் பிரகாசித்துக் கொண்டு இருந்தது. பூக்கும் தாமரைகளின் தோட்டங்கள், தேன் மற்றும் பால் ஆறுகள், மூடுபனி போல மிதந்து வரும் காதுக்கினிய சங்கீதம் எம்மை வரவேற்றது. அந்த விண்ணுலகத்தில், நாம் எம் பாதங்களை தரையில் வைக்கும் பொழுது, என் வாய் என்னை அறியாமலே; மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர் திண்ணென என்னுடல் விருத்தி தாரீரே ஆகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே என்ற தேவாரத்தை தானாகப் பாடியது. கணவனின் கருத்துக்கு எதிராக செயல்படாத மனைவி உமையம்மை, சிறுவன் குமரன், உண்பதே தனது பிரதான வேலையாக கொண்டுள்ள கணபதி இவர்கள் வேண்டாம். விண்ணும் மண்ணும் ஆட்சி செய்து அனைத்து செல்வங்களும் உடையவராக விளங்கும் பெருமானே நீயே வேண்டும் என்று நான் பாட, அதற்கு ஏற்றவாறு இசை, தாளம் போட்டு ஆடி ஆடி வந்தான். அவனின் ஆட்டம், சிவபெருமானை வாசலுக்கே கொண்டு வந்தது. அவரது இமயமலை முடியில் இருந்து கங்கை பாய்ந்தது, அவரது கண்கள் அமைதியாலும் சக்தியாலும் பிரகாசித்தன. அவருக்கு அருகில் பார்வதி தேவி, அரவணைப்பு, அன்பு மற்றும் தாய்மை பாசத்தால் பிரகாசித்தார். அவர்களிடமிருந்து வெகு தொலைவில், ஒரு பெரிய போதி மரத்தின் நிழலில், கௌதம புத்தர் அமைதியாகவும் புன்னகையுடனும் அமர்ந்திருந்தார். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பாகம் 02 தொடரும் துளி/DROP: 1832 [கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/30751677411147503/?
  17. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 17 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.] பகுதி: 17 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / ''திஸ்ஸ' என்ற பெயர் சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதா?' பெயர் 'திஸ்ஸ ' [Tissa] ஒரு பொதுவான புத்த நாடுகளில் உள்ள ஒரு சொல்லாகும். ஆனால் அதே பெயர் கொஞ்சம் நீளமாக, உதாரணமாக திசைநாயகம் / திஸ்ஸநாயகம், திசைவீரசிங்கம் / திஸ்ஸவீரசிங்கம், [Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc ] போன்ற பெயர்கள் தமிழ் மக்களிடமும் உண்டு. அது மட்டும் அல்ல, இதை ஒப்புவிப்பது போல, 2014 / 2015 ஆண்டு, கீழடி தொல்பொருள் ஆய்வில், பெயர் 'திஸ்ஸ' கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த தொல்பொருளின் காலம் ஏறத்தாழ கி மு 300 இல் இருந்து கி மு 400 என கணிக்கப்பட்டும் உள்ளது. தேவநம்பிய தீசனின் காலமும் கி மு 247 இல் இருந்து கி மு 207 என்பதும் குறிப்பிடத் தக்கது. அத்துடன், புத்த மதத்திற்கு மாறமுன், அவன் சிவனை வழிபட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீழடிக்கு வருகை தந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் k ராஜன், தமிழ்-பிராமி கல்வெட்டுகள் கொண்ட பானை ஓடுகள் தகவல் தொடர்பு முறையின் பரவலைக் காட்டுவதாகக் கூறினார். பிராமி எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டாலும், தமிழ் மற்றும் பிராகிருதம் ஆகிய இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. பானை ஓடு ஒன்றில் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட "திஸ்ஸா" என்ற பெயர் பிராகிருத மொழிக்கு சொந்தமானது. பிராகிருதப் பெயர் கீழடிக்கு இலங்கையுடன் கடல்சார் வர்த்தகம் இருந்ததை உணர்த்துவதாக ராஜன் உறுதியாக நம்புகிறார். / 'Digging up Madurai’s Sangam past'. கீழடி, பள்ளிச்சந்தை திடலில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களிடையே சுமார் பதினெட்டு மட்பாண்டச்சில்லுகளில் தமிழ் - பிராமி எழுத்துருக்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அச்சில்லுகளில் வேந்தன், சேந்தன் அவதி, சந்தன், சாத்தன், மடைசி, எரவாதன், உத்திரை, ஆதன், முயன், இயனன், திஸன், குவிரன், குலவன், உலசன், போன்ற தமிழ் சொற்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. [Vendan, Sendan Avadi, Chandan, Satan, Madasi, Eravadan, Uthtrai, Aathan, Muyan, Iyanan, Tissan, Kwiran, Kulavan, Ulasan. இங்கு கடைசியில் உள்ள 'ன்' ['N'] எடுக்கப்பட்டு திஸ்ஸ ஆக மாறி உள்ளது எனலாம். ஒரு காலத்தில் தமிழரும் புத்த மதத்தை தழுவி இருந்ததும் குறிப்பிடத் தக்கது எனவே திஸ்ஸ என்ற பெயர் சிங்களவர்களை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது ஒரு பௌத்தப் பெயராக இருந்திருக்கலாம்? மேலும் தமிழ் நாடுகள் சமணம், சைவம், வைணவம் மற்றும் பிற மதங்களுடன் பௌத்தத்தையும் ஒரு காலத்தில் பின்பற்றின என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது, தமிழ் பகுதிகள், இந்தியா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பல்வேறு மதங்கள் மேலோங்கி இருந்தன, மேலும் சில காலப்போக்கில் செல்வாக்கை இழந்தன, மற்றவை முக்கியத்துவம் பெற்றன என்பதே உண்மை. இலங்கை அம்பாறை மாவட்டத்திலுள்ள கொடுவில்லில் [குடுவில் கல்வெட்டு, அம்பாறை / Kuḍuvil inscription, Amparai] கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ‘திஸ’ [திஸ்ஸ] என்னும் பெயருடைய தமிழ் பெருவணிகனொருவன் அங்குள்ள பௌத்த சங்கத்துக்கு தானம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது. [The cave of the merchants who are the citizens of Dighavapi, of the sons of . . . . and of the wife Tissā, the Tamil. / Paranavitana, Senarath (1970). "Inscriptions of Ceylon - Volume I, Inscription no. 480". inscriptions.lk. Retrieved 14 December 2023.] மேலும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் சுமார் 15 கல்வெட்டுகளில் ‘திஸ’ எனும் பெயர் இடம்பெற்றுள்ளது. வணிக சமூகத்தில் ‘திஸ’ ஒரு தனிச்சிறப்பு மிக்க நிலையைக் குறிப்பதாக இலங்கை ஆய்வாளர் புஷ்பரத்னம் கருதுகிறார். மேலும் அனுராதபுரம் புராதன நகரில் உள்ள அபயகிரி விகாரைப் பகுதியில் தமிழ் குடும்பத் தலைவன் பற்றிய ஒரு பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. அபயகிரி தூபியின் மேற்குப் பக்கத்தில் சுமார் 300 மீற்றர் தூரத்தில் சில கற்பாறைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. [A Brahmic inscription on the head of a Tamil family is found in the Abhayagiri Viharai area in the ancient city of Anuradhapuram. At a distance of about 300 meters on the western side of Abhayagiri obelisk some boulders are found. An inscription is engraved on one of these rocks. ] பேராசிரியர் பரணவிதானா, இந்த கல்வெட்டை மொழிபெயர்த்து இப்படி கூறுகிறார், இது “இல்லு பரதனான தமிழன் சமன மூலம் அமைக்கப்பட்ட தமிழ் குடும்பத் தலைவனின் மடம். சகவின் ஆசனம், நசடவின் ஆசனம், க…திசனின் ஆசனம், .. .. ..ஆசனம், குபிர சுஜாதாவின் ஆசனம், கப்பலோட்டி கரவனின் ஆசனம் எனப் பொருள்படுகிறது என்கிறார். இந்தக் கல்வெட்டில் இரண்டு இடங்களில் தமிழர்கள் என திருப்ப திருப்ப குறிப்பிடப்பட்டுள்ளனர். முதலாவது “தமிழ் சமணன்” என்றும், இரண்டாவது “தமிழ் குடும்பத் தலைவர்” என்றும் ஆகும். இந்த கட்டிடம் தமிழ் பாரம்பரிய சின்னமாக உள்ளது. இங்கும் 'திஸ்ஸ' ஒரு தமிழரைக் குறிக்கிறது. Part: 17 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Does the name 'Tissa' refer only to Sinhalese people?' Tissa is a common name as per the chronicles in the Buddhist countries, but it was a common name with extension, such as Tissanayagam, Tissaveerasingam, and Tissam etc among Tamils too. The Name Tissa was found in the recent archaeological excavation at Keezzadi in Tamil Nadu-India during 2014 to 2015. It was widely reported. This was dated to be about 300 B. C. to 400 B. C. Devanampiyatissa’s reign id from 247 B. C. to 207 B. C. The names, which were found on the potsherds, are Uthiran, Aathan, Saathan, Tissan, Surama etc. If ‘n’ in the name Tissan is left out then it is Tissa. It is therefore clear that the name Tissa does not exclusively indicate Sinhalese. It could have been a Buddhist name, and the Tamil countries were following Buddhism along with Jainism, Saivism, Vaisnava and various other religions during that time. Being part of a continental India, various religions prevailed, and some lost influence with passage of time and others gained prominence. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 18 தொடரும் / Will Follow பகுதி Part: 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/30744917858490125/? எல்லோருக்கும் நன்றிகள்
  18. "மூன்று கவிதைகள் / 02" 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன் அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன் கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்? வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன் கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன் கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன் எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்? பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன் கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 'என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே' என்னிதய ஏட்டினிலே எழுதிவைத்த ஓவியமே கண்ணுக்குள் பொத்திவைத்த காதல் தேவதையே எண்ணத்தில் உன்னைத்தவிர யாரும் இல்லையே கன்னத்தில் தந்திடவா ஓசையில்லா முத்தம்! வெண்ணிலாவில் தழுவியது விழிக்குள் நிற்குது அன்னநடையில் வந்தது இன்பம் பொழியுது திண்ணையில் உறங்கியது தினமும் வாட்டுது தேன்குடிக்க வண்ணமலரைச் சுற்றி வருகுது! பெண்மையின் அழகினைக் கண்ட பின்பே மண்ணில் பிறந்ததின் பயனை உணர்ந்தேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................... 'கொட்டித் தீராதக் காதல்' கொட்டித் தீராதக் காதல் இதுவோ முட்டி மோதாத அன்பு நட்போ கட்டிப் பிடிக்காத அழகு உடலோ எட்டிப் பார்த்து ஏங்குவது எனோ? ஒட்டி உடையில் பெண்மை கண்டேன் வெட்டிப் பேச்சில் வெகுளி பார்த்தேன் சுட்டி விடையில் அனுபவம் அறிந்தேன் தட்டிக் கழித்து பாராமுகம் எனோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள் / 02" https://www.facebook.com/groups/978753388866632/posts/30743827355265842/?
  19. "மூன்று கவிதைகள்" 'உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்' உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உண்மைக் காதல் என்று நம்பிவந்தேன் உடலைத் தந்து என்னை மயக்கினாய் உள்ளதையும் பறித்து வீதியில் விட்டாய்! கண்கள் நான்கும் சந்தித்த வேளை விண்ணில் பறந்தேன் அறிவைத் தொலைத்தேன் எண்ணம் மறந்து கையைப் பிடித்தேன் வண்ண அழகில் பொய்யை மறைத்தாய்! மனைவியை மறந்து புத்தன் ஆனான் மணவாட்டியின் ஆட்டத்தில் புத்தி கெட்டேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................................ 'கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே' கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே கன்னியென்னை முகர்ந்து பார்த்து மகிழ்கிறதே கன்னமிரண்டிலும் முத்தம் கொடுத்து பறக்கிறதே கட்டியணைத்து தேன் குடிக்க மேய்கிறதே! பெண்களென்ன காமம் சுரக்கும் உடலா கிண்ணத்தில் ஏந்திக் குடிக்கும் போதையா பெண்மையைப் போற்றி காதலைத் தேடு மண்ணின் பெருமையை அவளிடம் காட்டு! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... 'பட்டாம்பூச்சியின் தேடல்' பட்டாம்பூச்சி பூவைச் சுற்றித் தேடி பச்சைக் கொடியில் தவம் இருந்து பக்குவமாக மலரின் மணத்தை முகருது! பருவக் காளை பூவையரை நாடி பல்வரிசைக் காட்டி பின்னால் தொடர்ந்து பகட்டை நம்பி தன்னையே தொலைக்குது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/30730529339928977/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.