Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

villavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. சிறப்பான கதை அண்ணை. கடைசி வரியில் சிறப்பான(!) சம்பவம் ஒன்றோடு முடித்திருக்கிறீர்கள் 😁. உங்கள் கதைகளில் உரையாடல்கள் மிகவும் இயற்கையாக அமைவது ஒரு நல்லியல்பு.
  2. இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை. எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.
  3. @ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும். இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும். எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.
  4. மிக அருமையாக இருந்தது @ரசோதரன் அண்ணை. ஏனோ தெரியல்லை, இந்த வரியை வாசிக்கும் போது எனது அம்மாவை நினைத்துக் கொண்டேன் கண்களில் நீர் துளிர்த்தது. நன்றி.
  5. இதை வாசிக்கும் போது தான் 'அகம் ப்ரம்மாஸ்மி' இன் அர்த்தம் விளங்குது. எல்லா மனிசருக்கையும் இருக்கும் இந்தப் பிரம்மம் தான் வேலையைக் காட்டுது போலை. 😁
  6. @ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம். வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?
  7. வருத்தத்திற்குரிய நிகழ்வு. ஆநிரை நல்ல உவமானம் @ரசோதரன் அண்ணை, அதை வைத்து நனவிடை தோயும் போது, ஆடு - கறுப்பாடு மேய்ப்பன் - ஏய்ப்பன் மீட்பன் - அழிப்பன் கடவுள் - சாத்தான் எல்லாமே ஒன்று போல் தான் தெரிகிறது, பார்வையின் கோணம் மாறும் போது.
  8. ஆட்சியைப் பிடிப்பதற்கு மிகவும் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட முறையே இது மட்டும் தான் அண்ணை. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் இது மட்டும் எப்போதும் தொடர்ந்திருக்கும். சமூக அரசியல் விஞ்ஞானத்தின் பால பாடம் ☠️.
  9. வணக்கம் ரதன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். கன பேர் அக்பராலை வெளிக்கிட்டு கடைசியா யாழில் தான் சந்திக்கிறம் போல.
  10. விசில், மெல் கிப்சன் நடித்த பொண்ணுங்களுக்கு என்ன தான் வேணும் (What Women Want) என்ற படத்தின் உல்டா என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு கிடைக்கவே கூடாத சக்தி இது தான். எப்படியோ பெண்களுக்குக் கல்யாணம் ஆன கொஞ்சக் காலத்தில் கிடைத்து விடுகிறது (என்று தாங்களே நம்பத் துவங்கி விடுகிறார்கள்) 😁.
  11. அருமை அண்ணை. விற்கிற அளவுக்கில்லாட்டிலும் அம்மம்மாவுக்கு வேப்பம்பூ ஆய்ந்து குடுத்திருக்கிறன். உங்கள் எழுத்துக்குள்ளால் போகும் போது வேம்பு, மலைவேம்பு எல்லாம் தலைக்கு மேலே நிற்கிறது போன்ற உணர்வு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.