Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9210
  • Joined

  • Days Won

    16

யாயினி last won the day on May 11

யாயினி had the most liked content!

About யாயினி

  • Birthday 03/30/1868

Contact Methods

  • AIM
    ----------------------------------------
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Female

Recent Profile Visitors

யாயினி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

2.8k

Reputation

Single Status Update

See all updates by யாயினி

  1. எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...

     

     
    download.jpg
    ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத்தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
     
    ஔவையார் அமர்ந்த திண்ணை வீட்டில் "சிலம்பி" என்ற தாசி குலப் பெண் இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக்கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
     
    கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே கரிக்கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:
     
    "தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
    மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
     
    தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று ஔவையார் கேட்டார் .
    "குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் கரிக்கட்டியால் இவ்விரண்டு வரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப்போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான்அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்" என்று கூறினாள் சிலம்பி.
     
    அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு கரித்துண்டினை எடுத்துஅவ்விரண்டு வரிகளின் கீழே கீழ்க்கண்ட வரிகளைச் சேர்த்துக்கவிதையைப் பூர்த்தி செய்தார்:
     
    "பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு"
     
    என்பதாகும் அவ்வரிகள்.
     
    இதையும் சேர்த்து முழுப்பாடலாக,
     
    "தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
    மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
    அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு "
     
    என ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
     
    தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக்கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும்படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
     
    "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
     
    என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,
     
    "எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
    மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
    கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
    ஆரையடா சொன்னாயது."
    தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
     
    எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப்பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லாவீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
     
    "குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரையென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள்படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.
     
    க. மோகனதாசன் 
     
     
    அவ்வப்போது தேடிப் படிப்பதிலிருந்து.......🖐️
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.