Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. ஈழ மண்ணின் போர்ச் சூழலையும், அதனால் சாமானியர்கள் படும்பாட்டையும் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநரான சோமிதரன். 1988-ல் இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் போர்ச் சூழலுக்கிடையில் வசித்து வருகிறார் வாசுகி (கபிலா வேணு). அடுத்த நாள் அவரின் மகளின் (சிது குமரேசன்) திருமணம் நடக்கவுள்ளதால், முதல் நாள் சொந்தங்களால் நிறைந்து மொத்த வீடே மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில், அன்று இரவு இந்திய அமைதிப் படையின் கேப்டன் நவீன் சந்திரா தலைமையிலான ஒரு ராணுவக் குழு, ஆயுதப் போராளிக் குழு ஒன்றுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வாசுகியுடைய வீட்டின் அருகில் பதுங்குகிறது. அதைத்தொடர்ந்து, ஒரு சில காரணங்களால் அவ்வீட்டிற்குள்ளும் நுழைகிறது. இந்நிலையில், மறுநாள் திருமணம், வீடு முழுவதும் சொந்தபந்தம், வீட்டிற்குள் நுழைந்த இந்திய அமைதிப் படை, வெளியே போராளிக் குழு, எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றச் சூழல் உருவாகிறது. பல இன்னல்களுக்கிடையில் நீளும் அந்த ஓர் இரவின் வழியாகப் போரின் வலியைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் சோமிதரன் இயக்கியுள்ள 'நீளிரா' திரைப்படம். மகள் திருமணம் குறித்து மகிழ்ச்சி, துப்பாக்கிகளுக்கு அஞ்சாத தீரம், தன்னை நம்பியிருக்கும் பெண்களை நினைத்து வரும் பதற்றம், தன் வீட்டைக் காக்க எடுக்கும் அழுத்தமான முடிவுகள், எங்கும் சரியாத சமநிலையோடு நிற்கும் உறுதி எனப் போர்ச் சூழலுக்கிடையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக தன் தேர்ந்த நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் கபிலா வேணு. இந்திய ராணுவ அதிகாரியாகக் கதை நகர்விற்கும், பரபரப்பைக் கடத்தவும் உதவியிருக்கிறது நவீன் சந்திராவின் பொறுப்பான நடிப்பு. ஒரே காட்சியில் தன் கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்திக் கைதட்டல் வாங்குகிறார் ரூபா கொடுவாயூர். ஆக்ரோஷம், காதல் என்ற இருவழிப்பாதையைப் போராடிக் கடந்திருக்கிறார் சனந்த். வீட்டுப் பெரியவராக நமச்சிவாயம், ஆணவமான ராணுவ வீரராக ரோஹித் கொகாடே ஆகியோர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர, சிது குமரேசன், 'கயல்' வின்செண்ட், விது ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. நீளிரா விமர்சனம் | Neelira Review ஓர் இரவு, ஒரு வீடு, அவ்வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம் என மிகச்சிறிய கதைக்களத்திற்குள் ரிப்பீட் அடிக்காத ப்ரேம்களால் பதற்றத்தையும், எமோஷன்களையும் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபன். முக்கியமாக, ஒளியைக் கச்சிதமாகப் பயன்படுத்திய விதத்தாலும், ஆங்காங்கே வரும் கவித்துவமான ப்ரேம்களாலும் கதாபாத்திரங்களின் கையறுநிலையையும் இறுக்கத்தையும் பார்வையாளர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார். அழுத்தமான எமோஷனையும், நிதானமான த்ரில் அனுபவத்தையும் அதன் அழுத்தம் குறையாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர். சிவா பத்மயன் இசையில், வாகீசன் ராசய்யா குரலில் 'கலியான பைலா' பாடல் 'துள்ளல்' ரகம்! எமோஷனை அடர்த்தியாக்கி, காட்சிகளை வீரியமாக்கியிருக்கிறது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுதும் வரும் கே-வின் பின்னணி இசை. 80களின் இறுதியிலுள்ள ஈழத்தின் கல்யாண முறை, அக்கால வீடுகள், சினிமா டெக்குகள் எனக் கலை இயக்குநர் மார்டினின் எதார்த்தப் படையலுக்கு, சுபைர்-தரங்கேனி கூட்டணியின் ஆடை வடிவமைப்பும் கைகொடுத்திருக்கிறது. சிறுவர்களின் விளையாட்டு, கல்யாண வீட்டுக் குதூகலம், உறவுகளுக்கிடையிலான செல்லச் சண்டைகள் என ஆர்ப்பாட்டமில்லாமல் வீட்டிற்குள்ளே இருந்து தொடங்கும் திரைக்கதை, வெளியுலகிற்குள் செல்ல செல்ல, போர்ச் சூழலையும், ராணுவ அடக்குமுறைகளையும் கதையோட்டத்துடனேயே சொல்லத்தொடங்குகிறது. கல்யாண சடங்குகள், விஜயகாந்த் படங்கள், அச்சூழலிலிருக்கும் வாழ்வாதாரங்கள் என எக்கச்ச விவரணைகளுடன் நுணுக்கமாக விரிகிறது திரைக்கதை. இரவிற்குப் பின் த்ரில்லர் மோடுக்கு நகரும் படம், இடைவேளைக் காட்சி வரை பரபர பிடியை விடாமல் பற்றிக்கொள்கிறது.முன்னாள் ராணுவ வீரரான வீட்டுப் பெரியவர், குடும்பத்தைக் காக்கும் வாசுகி, கல்யாணக் கனவிலிருக்கும் மணப்பெண், இளம் காதல் ஜோடி, குச்சியை வைத்து விளையாடும் சிறுவர்கள் என எல்லாத் தலைமுறை கதாபாத்திரங்களும் இடம்பெற்றிருப்பதும், அவற்றை தனித்தனியாகக் கிளைக்கதைகளாக விவரிக்காமல், மையக்கதையுடனேயே விவரித்திருப்பதும் திரைக்கதையை ஆழமாக்குகின்றன. ராணுவத்தால் அக்கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் வெவ்வேறு தாக்கங்களும் அழுத்தமாகப் பதிகின்றன.முக்கியமாக, தன்னைப் பற்றி வீட்டுப் பெரியவர் சொல்லும் கதை, ராணுவம் மீது கட்டமைக்கப்படும் புனிதங்களை உடைத்தெறிகிறது. நீளிரா விமர்சனம் | Neelira Review டெக் சினிமாவிற்கு இடையில் ஓடும் இயக்கப் பிரசாரப் பாடல், ராணுவம் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூடுதல் ஆடைகளை உடுத்தும் பெண்கள், மரக்குச்சிகளை துப்பாக்கிகளாகப் பாவித்து விளையாடும் சிறுவர்கள் எனக் குறியீடுகள் நிறைய வந்தாலும், அவை மேதாவித்தனமாகக் காட்சிப்படுத்தப்படாமல் எதார்த்தமாகவும் உயிர்ப்போடும் வருவது அவ்வீட்டிற்குள்ளே நம்மையும் ஓர் உறுப்பினராக்கிவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகு ஒரே இடத்திலேயே காட்சிகள் சுழல்வது போன்ற அயர்ச்சி சில இடங்களில் மேலோங்கினாலும், நுணுக்கமான விவரணைகள் அவற்றைக் களைத்து, சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மைப் பரபர பாதைக்கு மடைமாற்றிவிடுகின்றன.உணர்ச்சிகளைப் பிழிய எக்கச்சக்க தருணங்கள் இருந்தாலும், அவற்றை விடுத்து, மையக்கதையிலிருந்து எங்கும் பிறழாமல், எதார்த்தமான உணர்ச்சிகளையும் வசனங்களையும் வைத்தே, போரின் வலியை ஆழமாகப் பேசியிருக்கிறது திரை எழுத்து. 'எல்லா ராணுவமும் ஒன்றுதான்', 'போரில் எப்படி அமைதியைத் தேடுவீர்கள்?', 'இந்த வீட்டிலாவது அமைதியை நிலைநாட்டுங்கள்' என எல்லா வசனங்களும் உரையாடல்களோடே எதார்த்தமாக வருகின்றன. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் vs இந்திய ராணுவத் தரப்பு என விரியும் உரையாடல்களையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். நீளிரா விமர்சனம் | Neelira Review வசனங்களோ, நிறைய ஷாட்களோ இல்லாமல் மிகச் சில நொடிகள் மட்டுமே வரும் இறுதிக்காட்சி, கதையின் ஆன்மாவைப் பேசுகிறது. திரைமொழி, அரசியல், புனைவாக்கம் என எல்லாவற்றிலும் கவனிக்க வைத்து, தமிழ் சினிமாவில் முக்கிய முன்னெடுப்பாக மாறியிருக்கிறது இந்த 'நீளிரா'.
  2. தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! - வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்! சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10. 5 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. அசையும் சொத்துக்களின் மதிப்பு 12. 92 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு 7.72 கோடி உள்ளது என்றும் கையில் 50,000 ரொக்கம் இருப்பதாகவும் வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார். தவிர 1 கோடி மதிப்பில் உள்ள டிஃபென்டர் கார் ஒன்றும் 23 லட்ச ரூபாய் மதிப்பில் இன்னோவா கார் ஒன்றும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தங்கம், வெள்ளி, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.!- வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம் | Details of Udhayanidhi’s nomination affidavit released - Vikatan
  3. 02 Apr, 2026 | 12:21 PM யாழ்ப்பாணத்தை சேர்ந்த 'பிக்பொஸ்' ஜனனி என அழைக்கப்படும் நடிகை ஜனனியை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் நேற்றைய தினம் (1) காலை தனது அலுவலகத்திலும் இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியிலும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அமைச்சர், எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக நடிகை ஜனனி மிளிரவேண்டும் என தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அமைச்சர், அதில் குறிப்பிட்டுள்ளதாவது, பிக்பாஸ் ஜனனி, நடிகை ஜனனி, அறிவிப்பாளர் ஜனனி என எவ்வாறான பாதைகளில் இருந்தாலும், அவர் எம்முடைய சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார் என்ற உணர்வை எமது சந்திப்பு மேலும் உறுதிப்படுத்தியது. எங்களின் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அன்று பிக்பொஸ் நிகழ்ச்சியில் அறியப்பட்ட ஜனனியை விட, இன்று தனது திறமைகள், சுயநம்பிக்கை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கலைஞராக அவர் வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. அவ்வாறான ஆளுமைமிக்க ஜனனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் கலை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உயர்ந்து, கலை உலகில் தனித்துவமான தடத்தைப் பதிக்கும் சிறந்த கலைஞராக அவர் விளங்கவேண்டும் என வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 'பிக்பொஸ்' ஜனனியை சந்தித்தார் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரர் | Virakesari.lk
  4. யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது. மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அத்துடன், கடல்வளமற்ற வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியைப் பிரத்தியேகமாக மேம்படுத்தலாம். குஞ்சு உற்பத்தி நிலையங்களின் பற்றாக்குறை, மன்னார் (மாந்தை மேற்கு, நானாட்டான்) மற்றும் கிளிநொச்சி (பூநகரி) பகுதிகளில் புதிய காணிகளை அடையாளங்காண்பதில் வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களுடனான முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை மற்றும் காலாவதியான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தலில் ஏற்படும் தாமதங்கள் ஆகியன பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். யாழில் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது - கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் | Virakesari.lk
  5. 02 Apr, 2026 | 05:48 PM கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (2) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட அவர், சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நான்கு முறை தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டிருந்த நிலையில், இறுதி உத்தரவு நாளை (3) நிறைவடையவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். உபவேந்தர் காணாமல்போன சம்பவம் மட்டுமன்றி, பிரிட்டனின் 'செனல்-4' (Channel 4) தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த ஒரு வருடமாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். பிள்ளையானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த அசாத் மௌலானா முன்வைத்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த குழுவினருக்கும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்புகளை ஒருங்கிணைக்க பிள்ளையான் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன. முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தார். இருப்பினும், 2021ஆம் ஆண்டு சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிள்ளையான் விளக்கமறியலில்! | Virakesari.lk
  6. Published By: Digital Desk 3 02 Apr, 2026 | 04:57 PM (செ.கவிஷனா) பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்களை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் ‘செல்பி’ புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது பல தரப்பினர் பல நாட்களுக்கு தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளிப்பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதையும், அங்கு எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு நீங்களே தெரியப்படுத்துவதாக அமைகிறது. மேலும், தங்களது பயணத் திட்டங்கள் அல்லது தற்போதைய இருப்பிடம் குறித்து வெளி நபர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமற்ற விடயமாகும். இவ்வாறான பதிவுகளைக் காண்பதன் மூலம் திருடர்கள் திட்டமிட்டு இருப்பிடங்களுக்குள் புகுந்து பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடிக்கத் தூண்டுவதாக அமைகிறது. அவ்வாறு நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது சிவில் பாதுகாப்புக்குழு தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அத்துடன் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கமராக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புக்களை சரியாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பதிலும் சொத்துக்களை கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார். பண்டிகை கால சுற்றுலா பயணங்களின்போது புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk
  7. 02 Apr, 2026 | 04:51 PM தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார். மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர் | Virakesari.lk
  8. தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த கடிதத்தில் உள்துறை செயலாளரின் பெயரை குறிப்பிடாமல் மணிப்பூர் ஆளுநரின் பெயரை குறிப்பிட்டிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடிதம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கியிருந்தார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதுசம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும் ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இதை ஊடகங்களுக்கு தவெக தரப்பிலிருந்தே அனுப்பவும் செய்திருந்தனர். அந்த கடிதத்தில் Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆதவ், ஆனந்த் ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவின் பெயரை குறிப்பிட்டிருக்கின்றனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறைச் செயலாளரின் பெயரை கூட சரியாக குறிப்பிடத் தெரியாதா என தவெகவை சமூகவலைதளங்களில் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். தினமும் யாருக்காவது கடிதமாகவே எழுதிக் கொண்டிருப்பதால் குழம்பி விட்டார்கள் போல! 'உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய விஜய்யின் தவெக!' |“Vijay’s TVK Sparks Debate: Letter Sent to Manipur Governor Instead of Home Secretary – What’s Behind It?” - Vikatan
  9. தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணியில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'. ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ போன்ற முக்கிய படைப்புகளை தந்து ரசிக்க வைத்த இந்த கூட்டணி, முதன்முறையாக ஓடிடி களத்தில் இறங்கியிருப்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 10 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், ஒரு மனிதனின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டெடுக்கும் புள்ளியில் தொடங்கி, அவனது மர்மமான வாழ்க்கையை நோக்கிப் பயணிக்கிறது. தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள காவல் நிலையம், வழக்குகள் ஏதுமின்றி மூடப்படும் நிலையில் இருக்கிறது. அப்போது ஊரின் ஒதுக்குப்புறத்தில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு தலை கண்டெடுக்கப்படுகிறது. கூடவே, ஒரு பையில் கட்டுக் கட்டாக பணம், ஒரு கடிதமும் கிடைக்கிறது. அந்தத் தலைக்குச் சொந்தக்காரர் முத்து (விஜய் சேதுபதி) என்பது தெரியவருகிறது. தொடர் எப்படி? | ஓடிடி திரை அலசல் ஹெட் கான்ஸ்டபிள் காளை பாண்டியன் (வடிவேல் முருகன்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன் தலைமையிலான குழு, முத்துவின் பின்னணியை விசாரிக்கத் தொடங்குகிறது. இந்தத் தேடலில் முத்துவின் வாழ்க்கை ஒரு ரோலர்-கோஸ்டர் பயணம் போல தமிழகம் தாண்டி கேரளம் வரை விரிகிறது. அவர் ஒரு டான்ஸ் குழுவில் டிரைவர், கடிகாரம் பழுதுபார்ப்பவர்ம், யானைப் பாகன், ஆட்டுப்புழுக்கை விற்பவர் எனப் பல முகம் கொண்டவராக பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறார். உண்மையில் யார் இந்த முத்து என்கிற காட்டான்? அவர் ஏன் கொல்லப்பட்டார்? அவரை கொன்றது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த வெப் தொடர். இயக்குநர் மணிகண்டன் தன் வழக்கமான ஸ்லோ பர்னர் பாணியை இதிலும் கையில் எடுத்துள்ளார். ஆனாலும் எந்த இடத்திலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. கான்ஸ்டபிள் காளையாக வரும் வடிவேல் முருகனின் வாழ்க்கையிலிருந்து தொடங்கும் கதை, அடுத்தடுத்து பல அடுக்குகளாக விரிந்து நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. முத்துவின் வாழ்க்கையை அவசரமின்றி, ஒவ்வொரு பக்கமாக பிரித்துக் காட்டுவதில் திரைக்கதையில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முதல் ஐந்து எபிசோடுகள் முத்து யார் என்கிற மர்மத்தைத் தக்கவைப்பதில் செவ்வனே செயல்படுகின்றன. இருப்பினும், பிந்தைய எபிசோடுகளில் திரைக்கதை சற்றே தடம் மாறி, கேங்ஸ்டர் பாணிக்குள் நுழைவது பார்க்கும் நம்மை சடாரென வேறொரு மனநிலைக்கு கொண்டு சென்றுவிடுவது நெருடல். குறிப்பாக, கேரளாவில் நடக்கும் விசாரணை பகுதிகள் ஒரு புலனாய்வு தொடரைப் போல அல்லாமல், முத்துவை பற்றிய ஒரு ஆவணப்படத்தை நேர்காணல் செய்வது போலவே நீள்கின்றன. காவல் துறையினர் உண்மையான விசாரணை நடத்துவதை விட, முத்துவுடன் பழகியவர்களிடம் பேசுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவது திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கிறது. விஜய் சேதுபதி் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இன்றி, மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒருபுறம் காட்டான் என்று அழைக்கப்பட்டாலும், மறுபுறம் அவர் காட்டும் எல்லையற்ற மனிதாபிமானம் நெகிழ வைக்கிறது. அதற்காக தொடர் முழுக்க ஏராளமான உணர்வுபூர்வமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் முதியவரை அதே ஹோட்டலுக்கு முதலாளியாக்கும் காட்சியை சொல்லலாம். தொடர் முழுக்கவே அவரது அட்டகாசமான நடிப்பு கதையின் கனத்தைத் தாங்கி நிற்கிறது. வடிவேல் முருகனுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம். சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இதில் நகைச்சுவையுடன் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், வடிவேல் முருகனின் குடும்பம் தொடர்பாக வரும் காட்சிகள், எபிசோடுகளை நகர்த்த மட்டுமே உதவி இருக்கிறதே தவிர, அவற்றால் திரைக்கதைக்கு எந்தப் பயனும் இல்லை. அவரது மனைவியாக வரும் விஜே பார்வதிக்கும் அவரது மாமியாருக்கும் இடையிலான சில காட்சிகள் மட்டும் ஈர்க்கின்றன. இயக்குநர் பாலாஜி சக்திவேல் கிராமத்து சேட்டைக்கார பெருசுகளை கண்முன் நிறுத்துகிறார். அவர் பேசும் சில வசனங்கள் குபீர் ரகம். இவர்கள் தவிர மிலிந்த் சோமன், முத்துகுமார், சிங்கம் புலி, சுதேவ் நாயர், அயலி அபி நக்சத்ரா, ரிஷா ஜாகோப் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக, இந்தத் தொடரின் ஒளிப்பதிவு கிராமப்புற எழிலை மிக அழகாகப் படம்பிடித்துள்ளது. பின்னணி இசை குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கதையின் தீவிரத்தை உணர உதவுகிறது. எடிட்டிங் பகுதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 10 எபிசோடுகளாக நீண்டிருக்கும் இந்தக் கதையை 8 எபிசோடுகளுக்குள் சுருக்கியிருந்தால் அதன் தாக்கம் இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். வெறும் 26 நிமிடத்துக்கு ஒரு எபிசோட் ஓடுகிறது. கெட்டவார்த்தைகள் தேவையின்றி திணிக்கப்பட்டதாக தோன்றுகின்றன. ‘முத்து என்கிற காட்டான்’ சீரியசான காட்சிகள் கொண்ட வழக்கமான க்ரைம் த்ரில்லர் அல்ல. ஒவ்வொரு எபிசோடிலும் முத்துவின் வாழ்க்கையை ஆடியன்ஸுக்கு புரிய வைத்து, நெகிழ்வான தருணங்கள் கொண்ட ஒரு ஸ்லோ பர்னர் முயற்சி. மணிகண்டனின் முந்தைய படங்களின் தரத்தோடு ஒப்பிடும்போது சில சறுக்கல்கள் இருந்தாலும், இந்தத் தொடரை தாராளமாகப் பார்க்கலாம். மணிகண்டனின் முந்தைய படங்களின் ரசிகர்களுக்கு இது ஒரு திருப்திகரமான அனுபவமாக அமையும். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. https://www.hindutamil.in/news/ott-platform/ott-review/muthu-alias-kaattaan-review
  10. ‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது என பலர் நடித்துள்ள படம், 'நீளிரா'. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள இப்படத்தை சோமிதரன் இயக்கியுள்ளார். ஏப்.3-ல் வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன், தன் வலியை, தன் நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இப்படம் வெறுப்பை பேசவில்லை. வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படமல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. இந்தப் படம் யாரையும் நேரடியாக விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்புக்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களைத் தான் பதிலாக சொல்ல முடியும்" என்றார். ‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்
  11. மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் ; உயிர் தப்பிய பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல். Published By: Digital Desk 3 31 Mar, 2026 | 05:04 PM மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு, நகைகள் கொள்ளை இட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்ட பெண் தனக்கு நடந்த அவலத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்ததாவது, சம்பவ தினத்தன்று காலை 10.30 மணியளவில் மட்டக்களப்புக்கு செல்வதற்காக வவுணதீவு சந்தியில் என் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது அங்கு வயோதிபப் பெண்ணொருவரும் காத்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு முச்சக்கரவண்டி வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டனர். நான் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியபோது, 100 ரூபாய் என்ற கட்டணத்தில் ஏறுமாறு கூறினர். நான் குழந்தையுடன் ஏறினேன்; அங்கு இருந்த வயோதிபப் பெண்ணும் ஏறினார். முச்சக்கரவண்டி நகரை நோக்கி சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கினார். பின்னர், “நீங்கள் எங்கு செல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டபோது, நான் புடவைக்கடை வீதியில் இறக்குமாறு கூறினேன். அங்கு சென்றபின், முச்சக்கரவண்டியில் இருந்த பெண் தானும் சாறி வாங்கச் செல்ல இருப்பதாகவும், தனது வேலை முடிந்ததும் மீண்டும் அதே வண்டியில் சேர்ந்து செல்லலாம் என்றும் கூறினார். மேலும், “சத்தர் கடையடியில் காத்திருப்பேன்” என்றும் தெரிவித்தார். அதன்படி, நான் குழந்தையுடன் நகைக்கடைக்கு சென்று ஈடு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபாய் செலுத்தி மீட்டுக்கொண்டேன். பின்னர் அந்த பெண் கூறிய இடத்திற்கு சென்றபோது, அவர் முச்சக்கரவண்டி சாரதியை தொலைபேசியில் அழைத்து, மணிக்கூட்டு கோபுரம் பகுதியில் வருமாறு கூறினார். நானும் அந்த பெண்ணும் அங்கு சென்று மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏறினோம். அதன் பின்னர் பொதுசந்தை வீதியில் சென்று வண்டியை நிறுத்திய சாரதி, சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து வவுணதீவு நோக்கி பயணித்தார். வலையிறவு பாலம் அருகே சென்றபோது, அந்த பெண் மூன்று ஜூஸ் பாட்டில்களை எடுத்தார். எனக்கும் என் குழந்தைக்கும் பச்சை நிற ஜூஸ் கொடுத்து, எனக்கு விளாம்பழ ஜூஸ் வழங்கினார். அதை நான் குடித்தேன். அதன் பின்னர் வவுணதீவு சந்தியில் அந்த பெண் இறங்கினார். அதன்பின், தாள் கத்தியுடன் ஒரு இளைஞன் முச்சக்கரவண்டியில் ஏறினார். நான் இதைப் பற்றி கேட்டபோது, “மாட்டுக்கு புல் வெட்டச் செல்கிறார்” என்று கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்குமாறு தெரிவித்தேன். ஆனால், முச்சக்கரவண்டி வேறு பாதையில் பாவற்கொடிச்சேனை நோக்கி சென்றது. நான் காரணம் கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாக கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன். நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?" என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன். இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், "அம்மா, அம்மா" என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். "மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?" என்று கத்தினேன். அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது. மட்டக்களப்பு கொள்ளை சம்பவம் ; உயிர் தப்பிய பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் | Virakesari.lk
  12. Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலையாக 92,76,03,409 ரூபாய் உள்ளதாகவும் 5 கார்கள் மற்றும் 1 TVS XL வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தவிர, விஜய் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறார் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி N. ஆனந்திற்கு 3 கோடி கொடுத்திருப்பதாகவும், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு 3 கோடியும், அவரது தாய் சோபா சந்திரசேகருக்கு 8 லட்ச ரூபாயும் கடன் கொடுத்திருப்பதாக விஜய் வேட்மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் கொடுத்த கடன் விவரங்கள் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் Tvk Vijay: தந்தைக்கு 3 கோடி; தாய்க்கு 8 லட்சம் - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் | 3 crore to his father, 8 lakh to his mother – Loan details declared by Vijay - Vikatan டிஸ்கி: இந்திய வரலாற்றிலேயே அப்பா அம்மாவுக்கு கொடுத்த பணத்தை கடன் என்று லிஸ்டிய பாசமான பிள்ளை விஜய்
  13. Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்! பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவிர விஜய் 5 கார்கள், 1 இருசக்கர வாகனம் வைத்திருப்பதாகவும் விவரம் வெளியாகிறது.. அதன்படி விஜய் வைத்திருக்கும் கார்கள் BMW 530 (2020) — ரூ.80,54,119 Toyota Lexus 350 (2024) — ரூ.3,01,57,881 Toyota Vellfire (2024) — ரூ.1,63,45,118 BMW I7 (2024) — ரூ.2,00,64,296 Maruti Swift (2024) — ரூ.5,35,000 TVS XL Super (2025) — ரூ.67,400 விஜய் வைத்திருக்கும் 5 கார்கள் அசையாச் சொத்துகள் (மொத்தம்: ரூ.82,81,93,010): விள்பட்டி கிராமம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் நிலங்கள் மற்றும் வணிகக் கட்டடங்கள். கல்வித் தகுதி: B.scB.Sc Degrees Online 2025 - Best Course After 12th | Compa...Find the best B.Sc course after 12th. Compare accredited online B.Sc degrees in Computer Science, Data Science, Nursing & more. Start your career journey. இடைநிற்றல் — லயோலா கல்லூரி, சென்னை, 1992 தொழில்: சுய தொழில் (நடிப்பு), விஜய் வித்யாசிரம் நிர்வாகம், ஜெயா நகர் பிராபர்டி பி லிட் மேலாண்மை இயக்குநர், விதியா சாரிடபுள் டிரஸ்ட் குற்றவியல் வழக்குகள்: இல்லை வெள்ளி பொருட்கள் ரூ.15,00,000 (883 கிராம்) தங்கம் 3,132 கிராம் — ரூ.4,07,16,000 வைரம் 134.91 கேரட் — ரூ.1,00,00,000 Tvk Vijay: ' BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 இருசக்கர வாகனம்'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்| “BMW among 5 cars, 1 two-wheeler” – Vijay’s nomination affidavit details released. - Vikatan
  14. 25 Mar, 2026 | 09:50 AM மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலைமைகள் காரணமாக, அந்த நாட்டு மக்கள் உணவுப் பொருட்களைக் கையிருப்பில் வைக்க முற்பட்டுள்ளதால், தேயிலைக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் ராஜ் ஒபேசேகர தெரிவித்துள்ளார். கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விற்பனை விலை ரூ. 1,153 ஆகக் காணப்பட்டது. ஏலத்தில் விற்பனையாகாத தேயிலையின் அளவு 8% முதல் 10% வரை மாத்திரமே உள்ளது. இது சந்தையின் சாதாரண நிலையாகும். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக குவைத், சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்கு மாற்று கப்பல் பாதைகள் ஊடாக ஏற்றுமதிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக, சந்தையில் நிலவிய பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தேயிலை செய்கையில் ஈடுப்படும் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்சாலைகளின் உற்பத்தியைத் தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பதற்றம் மத்தியில் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு – இலங்கை தேயிலை சபை | Virakesari.lk
  15. தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்! 25 Mar, 2026 | 05:21 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொடுவ வத்த பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய தம்பதியினர் திடீரென காணாமல் போயிருந்தனர். இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் ஆரம்பத்தில் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், நீண்ட காலமாக எவ்விதத் தடயங்களும் கிடைக்காத நிலையில் அந்த விசாரணை முடங்கியிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள், இது குறித்து ஜனாதிபதி செயலகத்திலும் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர். இந்த நிலையில், காணாமல் போன பெண்ணின் சகோதரி, தனது சகோதரிக்குச் சொந்தமான தங்கத் தோடு போன்றே ஒரு தோட்டை அண்டை வீட்டுப் பெண் அணிந்திருப்பதை தற்செயலாகக் கண்டுள்ளார். இது குறித்து எழுந்த பலத்த சந்தேகத்தையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல மணிநேர விசாரணைகளின் பின்னர், அண்டை வீட்டைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மற்றும் அவரது 48 வயதுடைய மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேக நபர் ஒரு கடும் போதைப்பொருள் பாவனையாளர் என்றும், அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வழங்கிய அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தின்படி, இரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த தொடர்ச்சியான வாக்குவாதங்கள் மற்றும் தகராறுகள் காரணமாகவே இந்த இரட்டைக்கொலை இடம்பெற்றுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தம்பதியினரைத் தங்களது வீட்டிற்குப் பின்புறமாக அழைத்துச் சென்று, கூர்மையான ஆயுதங்களால் கழுத்தை வெட்டியும், தலையைத் துண்டித்தும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். பின்னர் சடலங்களை எவரும் கண்டுபிடிக்க முடியாதபடி வீட்டின் பின்புறம் உள்ள ஒரு பள்ளத்தில் புதைத்து மறைத்தமையால், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்து வந்துள்ளது. அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 04 நீதவானின் உத்தரவிற்கமைய, இன்று (24) சம்பவ இடத்திற்கு சந்தேக நபர்கள் அழைத்து வரப்பட்டு விசாரணை மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறப்பு தடயவியல் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் மருத்துவ அதிகாரியின் முன்னிலையில், தற்போது அந்த இடத்தில் சடலங்களை தோண்டி எடுக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. ஆறு வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் கொழும்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.