Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்றலாம் - ச.ச.முத்து

Featured Replies

ஒரு விடுதலை இயக்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுபோகும் பாதையில் அதற்கு முதலில் கரம்கொடுக்ககூடியதும் அதனுடன் பேசக்கூடியதும் உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு விடுதலை அமைப்புதான். இவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழி ஒன்று உண்டு. அதுதான் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்ற மொழி. ஆனால் வெறுமனே ஒரு விடுதலை அமைப்பு என்ற கடித இலட்சினை மட்டுமே ஒரு விடுதலை இயக்கத்துக்கு நெருக்கமாக மற்றைய விடுதலை அமைப்புகள் வருவதற்கு போதுமானவை அல்ல.

தமிழ் புதிய புலிகள் இயக்கத்தையும் அதன் வரலாற்றுப் பாதையில் பெயர் மாற்றம்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஆரம்பித்த தேசியத் தலைவர் இதனை நன்கு புரிந்திருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆரம்பித்து புதிய போராளிகளை உள்வாங்கிய அந்தத் தருணங்களில் தேசியத் தலைவர் தனது தெரிவுகளாக ஒவ்வொரு முகாமிலும் ஒவ்வொரு பண்ணையிலும் இருக்கவேண்டிய புத்தகங்களாக விடுதலைப் போராட்ட வரலாற்று புத்தகங்களையே அதிகமாக வாங்கிக் கொடுத்திருந்ததார்.

இந்த உணர்வு வெறுமனே உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தெரிந்துகொள்வது என்பதற்கு அப்பால் அவர்களுடன் மானசீகமாக ஒன்றிணைவது என்பதுதான்.

ஆரம்பகால விடுதலைப் புலிகளின் இருப்பிடங்கள், பண்ணைகளில் அயர்லாந்து விடுதலைக்கான ஆரம்ப போராளிகளான தான்பிரின், மைக்கல் கொலின்ஸ் போன்றோரின் வரலாறுகள், தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் நவரெட்ணம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட யூதமக்களின் தாயகப் பயண ஆக்கமான ‘நமக்கென்றோர் மண்’ (எக்சோடஸ்), வீரமிகு வியட்னாம் என்ற வியட்னாமியரின் விடுதலை வரலாறு, சுபாஸ் சந்திரபோசின் வரலாறு என்பன நிச்சயமாக இருந்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் மற்றைய விடுதலை இயக்கங்களை உற்றுக்கவனித்து அவற்றின் எழுச்சி, வீழ்ச்சி என்பனவற்றை கற்றுக்கொண்டிருந்ததைபோலவே மற்றைய உலகத்து போராட்ட அமைப்புகளும் தமிழர் தாயகத்தில் ஏதோ ஒரு ஆயுத எதிர்வினை தோன்றி இருந்ததை தெரிந்திருந்தனர் அந்த 70களின் இறுதியில்.

சிங்களதேசத்து ஆளும் கட்சியின் தமிழர் பிரதேச பொறுப்பாளர்கள் பகிரங்கமாக அழிக்கப்பட்டதும், சிங்கள அரசபடைகளின் தமிழர் பகுதி மீதான வலையமைப்பு சிதைக்கப்பட்டு அதன் காவல்துறை அதிகாரிகள் அழிக்கப்படுவதும் எல்லோருக்கும் செய்திகளாக இருந்தபோதும், உலகின் விடுதலை அமைப்புகளுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் அவை வேறுவிதமான சேதிகளாகவும் இன்னொரு தேசத்தின் பிறப்புக்காக யாரோ ஒரு அமைப்பினர் சாகவும் துணிந்து போராடுகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தியது.

இந்த நேரத்தில் இன்னுமொன்றும் நடந்துவிடுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் 70களின் இறுதியில் தாயகத்தில் நடாத்திய தாக்குதல்களைத் தாமே செய்ததாக வெறும் வாய்மொழி உரிமை கோரல்களை அந்த நேரம் ஐரோப்பாவில் இருந்த சிலர் செய்ததன் ஊடாக விடுதலை அமைப்புகள் சிலவற்றின் தொடர்புகளைப் பெற்றுவிடுகின்றனர்.

இதனைத் தடுப்பதற்காகவும் உண்மையான அர்ப்பணிப்புடன் இந்தத் தாக்குதல்களை நடாத்திய அமைப்புடன் தொடர்புகளை உலக விடுதலை இயக்கங்கள் தொடர வேண்டும் என்ற காரணத்துக்காவுமே முதன்முதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இலட்சினையுடனான உரிமைகோரல் கடிதம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வானது வேறுயாரும் உலக விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளை பேணுவதைத் தடுப்பதற்காக என்பதைவிட விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உலக விடுதலை இயக்கங்களுக்கு தன்னை வெளிப்படுத்தியதாகவே வரலாறு பதிகிறது.

Thalaivar%20and%20kiddu000122.jpg

இதன் இரண்டாம் கட்டமாக விடுதலைப் புலிகள் தமது கொள்கைளை தமது போராட்டப் பாதை பற்றிய விளக்கத்தைத் தெரிவித்தாகவேண்டிய ஒரு கட்டம் வருகின்றது. வெறும் பத்து அழித்தொழிப்புகளை மட்டும் செய்தவுடன் ஒரு அமைப்புடன் உலக விடுதலை இயக்கங்கள் கரம் குலுக்கப் போவது இல்லை என்ற யதார்த்தம் விடுதலைப் புலிகளுக்கு தெரிந்திருந்தது.

விடுதலைப் புலிகள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் நின்று அந்த நேரத்தை உலக அமைப்பை கருத்தில் கொண்டு இதனைத் திரும்பிப் பார்க்கவேண்டி இருக்கின்றது. அறுபதுகளின் நடுப்பகுதியும், அறுபதுகளின் இறுதியும் ஆபிரிக்காவில் இருண்டிருந்த, வெள்ளை இனத்தின் காலனிகளாக இருந்த தேசங்கள் விடுதலையான பொழுது அவை. புதிதாக உருவான தேசங்கள் பல அந்த நேரம் உலகம் முழுதும் இருந்திருந்தன.

புதிதாக சுதந்திரமான தேசங்களின் தலைவர்களாக அந்த அந்த தேசங்களின் விடுதலைக்கு போராடிய அமைப்புகளின் தலைவர்களே இருந்தார்கள். அதனால் புதிதாக விடுதலைக்கு போராடும் மக்களின் வலியும் அவர்களின் ஆன்மமும் அந்த புதிய தேசதலைவர்களால் ஆழமாக புரியப்பட்டும் உணரப்பட்டும் இருந்தன. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், விடுதலைக்கு போராடும் அமைப்புகளை முறியடிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து நின்ற முதலாளித்துவ - ஏகாதிபத்திய முகாம் ஒரு பக்கம்.

முதலாளித்துவ - ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு வடிவமாக விடுதலைப் போராட்டங்களை வளர்த்தெடுத்த நாடுகள் ஒரு முகாம். இந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் கொள்கை எதுவாக இருந்திருக்க முடியும். உலக விடுதலை இயக்கங்கள் அனைத்தும் கொண்டிருந்த அதே புரட்சிகர சமதர்ம தேசம் ஒன்றை எமக்கே உரிய சுயநிர்ணய உரிமையின்படி அமைத்துக்கொள்வதே என்பதாக இருந்தது.

விடுதலைப் புலிகள் வெளியிட்ட ‘சோசலிச தமிழீழம் நோக்கி’ என்பது விடுதலைப் புலிகள் தாம் யார் என்பதையும் எத்தகைய புரட்சிகர தத்துவத்தை வரித்துக்கொண்டு விடுதலைக்கு போராடுகின்றோம் என்பதையும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியதுடன் நின்றுவிடாமல் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு புலம்பெயர் தேசங்களில் 79ல் வெளியிட்டதன் மூலம் மற்றைய தேசத்து உலக விடுதலை இயக்கங்களுடன் ஒரே பதாகையின் கீழே நிற்க முன்வந்தனர்.

இவைகள் எல்லாமே விடுதலைப் புலிகள் அமைப்பு உலக விடுதலை இயக்கங்களுடன் ஒன்றிணைந்து நிற்க விரும்புவதற்கான சமிஞ்ஞைகளே. இதன்மூலம் விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் புரிந்துகொண்டு விடுதலைப் புலிகளுடன் கரம்கோர்த்த விடுதலை இயக்கங்கள் ஏராளம்.

விடுதலைப் புலிகள் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதனை மற்றயவர்கள் போல வெறுமனே வாய்ச்சொல்லில் சொல்வதுடன் நின்றுவிடாமல், உளச்சுத்தியுடன் தொடர்ந்தனர். உதாரணத்துக்கு, 1984ல் அமெரிக்காவில் வசித்த மருத்துவரான பஞ்சாட்சரம் என்பவர் தமிழீழ விடுதலை அமைப்புகள் பங்குகொள்ளும் மாநாடு ஒன்றை அமெரிக்காவில் நடாத்தினார்.

அந்த மாநாட்டுக்கு வரும்படி விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அழைப்பு அனுப்பட்டது. அதற்கு தேசியத் தலைவர் எழுதிய கடிதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘விடுதலைப் புலிகள்’ல் யூலை மாதம் 1984ல் வெளியிடப்பட்டது. அதில் மிகவும் தெளிவாகவே அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும் அதன் சிஐஏ சிலந்திவலை பற்றியும் தலைவர் விபரித்து எழுதி, அத்தகைய இடத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரமுடியாது எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த கடிதமும் அந்த நேரத்தில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த கடிதம் பகிரங்கமாக வெளியிடப்படதற்கு பின்னாலும் உலக விடுதலை இயக்கங்களுடன் ஒரே அணியில் ஒரே முகாமாக நின்று போராடும் அவாவே இருந்தது. இவற்றுக்குள்ளாக கிடைத்த தொடர்புகளும் உதவிகளும் பற்றி இந்த நேரத்தில் விபரமாக பதிவது சாத்தியமற்று இருக்கலாம். ஆனால் விடுதலைக்கு போராடிய ஒரு அமைப்பு உலக விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை பேணாமல் விட்டுவிட்டது என்று போகும் போக்கில் அவதூறு செய்பவர்களுக்கு ஒன்று எதுவுமே திருப்தி தரமுடியாது.

இந்த விடுதலை இயக்கத்தின் தலைமையும் அதன் முன்னணி தளபதிகளும் எப்போதும் இதனை நோக்கியே நின்றனர். நடக்கமுடியாத, ஊன்றுகோலுடன் ஒற்றை காலுடன் தமிழீழ விடுதலைக்காக நாடுநாடாக அலைந்து திரிந்த கிட்டு என்ற விடுதலைப் புலி வீரன், கண்டம் கடந்து மொழி தெரியாத ஒரு தேசமான மெக்சிக்கோவில் போய்நின்று கொண்டு 90களின் ஆரம்பத்தில் லத்தீன் அமெரிக்க புரட்சி அமைப்புகளுடன் தொடர்பில் நின்றானே அது ஒன்றுபோதும் விடுதலைப் புலிகள் எப்படியான தொடர்புகளை மற்றைய உலக விடுதலை அமைப்புகளுடன் மேற்கொள்ள முயன்றார்கள், பெற்றார்கள் என்பதை காட்டும்.

இன்றைக்கும் புலம்பெயர் தேசங்களில் தங்கள் தங்கள் தாயகத்தின் விடுதலையை நெஞ்சில் சுமந்தபடி திரியும் ஒரு குர்தீஸ்காரனோ, ஒரு பாலஸ்தீனனோ, ஒரு ஆபிரிக்கனோ, யாரோ ஒரு இலத்தீன் அமெரிக்கனோ, அல்லது ஒரு காஸ்மீரியோ யாராக இருந்தாலும் எப்போ அவர்கள் மீண்டும் வருவார்கள் என்று கேட்கிறார்களே, அதுதான் விடுதலைப் புலிகள் உலக விடுதலை அமைப்புகளுடன் வைத்த உணர்வு ரீதியான தொடர்பு.

நன்றி: ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.