Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணையல்ல, சந்தர்ப்பவாதம்!

Featured Replies

கருணையல்ல, சந்தர்ப்பவாதம்!

மார்ச் 31-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்த பல்வந்த் சிங்கின் மரண தண்டனையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தானே நேரில் சென்று, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து கருணை மனு கொடுத்ததால் இந்த நடவடிக்கை.

மனு கொடுத்த மிகச் சில மணி நேரங்களிலேயே தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகின்றது என்பதைப் பார்க்கும்போது, இந்த முடிவு பல்வந்த் சிங் மீது ஏற்பட்ட பரிவினால் அல்ல. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இந்த அரசியல்தான் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு வகையான மனக்கசப்பை மேலும் கூட்டுகிறது.

ஒரு கொலைக் குற்றவாளியின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதில் நீதிமன்றத்தைக் காட்டிலும் கூடுதலான ஒரு சலுகை- இதை அதிகாரம் என்று சொல்ல முடியுமா-அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. இதனை அனைவருக்கும் ஒன்றாகப் பயன்படுத்தாமல் அரசியல் கைதிகளுக்கு ஒரு கருணையும், வேண்டாத அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கைதிகளுக்கு கருணை மறுப்பும் சாத்தியமில்லை.

கருணை என்பதற்கு வேண்டியவர், வேண்டாதவர் எல்லாரும் ஒன்றுதான். கருணையில் பாகுபாடு பார்க்கும் நிலைமை ஏற்பட்டால் அது கருணை அல்ல. அது சந்தர்ப்பவாதம்.

உலகம் முழுவதும் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை நீக்கியும் உள்ளன. இந்தியாவில் அந்த நிலைமை வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

மனிதாபிமானம் கைதிகள் மீது காட்டப்படுவதில் தவறில்லை, அவர்கள் மனிதர்களாக இருந்தால் என்கின்ற நிபந்தனை விதிப்போரும் இந்தியாவில் இருக்கின்றனர். மன்னிப்பது என்று தொடங்கிவிட்டால், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப் முதல், நாடாளுமன்றத்தைத் தாக்கிட உதவி செய்த அப்சல் குரு, மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் மரண தண்டனையை அரசு ரத்து செய்ய வேண்டும்.

இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்றால் எந்தவிதமான அரசியல் கைதிகளுக்கும் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது. ஆனால், மத்திய அரசு அவ்வாறு நடந்துகொள்வதாகத் தெரியவில்லை.

பஞ்சாப் மாநில முதல்வர் பியந்த் சிங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். மனித வெடிகுண்டை அனுப்பி வைத்தவர். ஆனால் இதுவரை அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததே கிடையாது. தனக்காக எந்த வழக்குரைஞரையும் வைத்துக்கொள்ளவில்லை. யாரும் தனக்காக எவரிடமும் தனது மரண தண்டனையை ரத்து செய்யும்படி கருணை மனு அளிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டவர்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடத்திய புளு ஸ்டார் நடவடிக்கை, அதன்பிறகு சீக்கியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழிவாங்கவே தான் இதனை நடத்தியதாகவும், இது தன்னளவில் சரியான நடவடிக்கை என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தவர்.

கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் இதுவரை தனது கொள்கையில் உறுதியாகவே இருந்து வருகிறார். ஆனால் அவரது தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தவுடன் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட எதிர்ப்புக் குரல் காரணமாக முதல்வர் நேரடியாக குடியரசுத் தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

ஏறக்குறைய இதே நிலைதான் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும். தற்போது மரண தண்டனை பெற்றுள்ளவர்கள் மனித வெடிகுண்டுக்கு தேவையான உதவிகளைச் செய்தவர்கள்.

பல்வந்த் சிங் போல, கருணை மனு கொடுக்கக்கூடாது என்று சொல்லாவிட்டாலும், அவர்களும் ஏறக்குறைய 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்கள். தற்போது இவர்களது தூக்கு தண்டனை நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, நீதிமன்ற உத்தரவினால் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, அரசின் கருணையாலோ அல்லது குடியரசுத் தலைவரின் கருணையாலோ அல்ல.

இத்தகைய கருணை அரசியல் மாநில உறவுகளுக்கு குந்தகமாக அமையும் என்பதை மத்திய அரசோ குடியரசுத் தலைவரோ புரிந்துகொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

மரண தண்டனையை நீக்கிவிட இந்திய அரசு முடிவு செய்யுமானால் அதில் யாருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இருக்கப்போவதில்லை. எல்லாரையும் -கசாப், அப்சல் குரு, பேரறிவாளன், சாந்தன், முருகன், மற்றும் சிறையில் வாடும் அரசியல்சாராத கொலைக் குற்றவாளிகள் எல்லாரையும் தூக்கிலிருந்து காப்பாற்றிவிடலாம். ஆனால், கருணையிலும் அரசியல் பாகுபாடு என்பது, ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போன்றது.

ஒன்று, மரண தண்டனையை சட்டத்திலிருந்தே நீக்கிவிடுங்கள். அல்லது கருணை அரசியலை தூக்கிலிடுங்கள். பாரபட்ச கருணை, பல்வேறு பாரபட்ச நிலைமைக்கு வழிவகுக்கும்.

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.