Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் தரையிறக்கமும், அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானமும்!

Featured Replies

யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கை உச்சமடைந்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களது முதலாவது உயிராயுதத்தைப் பயன்படுத்தினார்கள். கப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற வேங்கை கரும்புலியாக மாறி சிங்கள இராணுவத்தின் இதயத்தின்மீது வெடித்துச் சிதறினான். 05 ஜுலை 1987 அன்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தின்மீது மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்களப் படையினர் பலியானார்கள்.

இந்த முதலாவது கரும்புலித் தாக்குதலில் அதிர்ந்தது சிங்கள தேசம் மட்டுமல்ல, இந்திய ஆட்சியாளரும் கூடத்தான். தனது கட்டுக்குள் அடங்க மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்த முயன்ற தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது கட்டுப்பாடுகளை மீறிய விடுதலைப் புலிகளால் இலக்கு நோக்கி நகர்த்தப்படுவதனை இந்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டனர். விடுதலைப் புலிகளை அப்படியே விட்டுவிட்டால் தமிழீழம் மலர்வது தவிர்க்க முடியாமல் போய்விடும் என்ற எச்சரிக்கை, அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இலங்கைக்கான பொறியாக எண்ணிச் செயற்பட்ட இந்தியா தனது கைமீறிப் போகும் நிலையை உணர்ந்துகொண்டு இலங்கைத் தீவில் நேரடியாகத் தலையீடு செய்யும் தருணமாக விடுதலைப் புலிகளது முதலாவது தற்கொடைத் தாக்குதலைப் பயன்படுத்தியது. மிகுந்த அழுத்தங்களையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்திய இந்திய அரசு 29 ஜுலை 1987 அன்று சிங்கள ஆட்சியாளர்களுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டது. அந்த உடன்படிக்கையின் பிரகாரம், இந்தியப் படைகள் 'அமைதிப் படை' என்ற நாமத்துடன் அன்றைய தினமே கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் படைகளின் ஒரு தொகுதி தரையிறங்க, மறுநாள் 30 ஜுலை 1987 அன்று யாழ்ப்பாணத்தில் இன்னொரு தொகுதி இந்தியப் படைகள் வான் வழியாகத் தரையிறங்கினார்கள்.

இலங்கைத் தீவில் இந்தியா மேற்கொண்ட மேலாதிக்க தலையீட்டுக்கான திறவு கோலாக இந்தியா தமிழீழ மக்களது அவலங்களைப் பயன்படுத்திக்கொண்டது. அன்றிலிருந்து, இன்றைய அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம்வரை தமிழீழ மக்களது அவலங்களைத் தனக்குச் சாதகமான களநிலை மாற்றத்திற்காகப் பயன்படுத்தியே வருகின்றது.

அன்றைய இந்தியாவின் தரையிறக்கத்திற்கும், இன்றைய அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்திற்கும் அதிக வேறுபாட்டினைக் காண முடியாது. எதிர்க்க முடியாத சக்திகளுடன் இணங்கிப் பொவதன் அவசியம் மட்டுமே இதில் உணரப்படுகின்றது. அனைத்துலக பெரு மன்றில் தமிழீழ மக்களது அவலங்கள் விவாதப் பொருளாக்கப்படுவதன் சாதகத்திற்கு மேலான எதனையும் தீர்க்கமாக உணர்ந்து கொள்ள முடியவில்லை.

actu-monde-ban-ki-moon-obama.jpg

அமெரிக்காவின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழ் மக்களாலும் முற்றாக நிராகரிக்கப்பட்ட சிங்கள தேசத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை மையப்படுத்தியே உள்ளது. சிங்கள தேசத்தின்மீதான போர்க் குற்றத்தையும், தமிழீழ மக்களது தாயக நிலப்பரப்பையும், தேசிய அபிலாசைகளையும் நிராகரித்து, சிங்கள ஆட்சியாளர்களது விருப்பங்களுடன் உருவாக்கப்பட்ட அறிக்கையில் தமிழீழ மக்களது அவலங்களைத் தீர்க்கும் எந்த வழிமுறைகளும் தெரிவிக்கப்படவில்லை. ஒப்புக்குச் சப்பாணியாகத் தெரிவிக்கப்பட்ட ஒரு சில தீர்மானங்களையே நிறைவேற்றும்படி அமெரிக்கா கோரியுள்ளது. ஆனாலும், நடுக் கடலில், மாலுமியும், சுக்கானுமற்ற படகில் விடப்பட்ட தமிழீழ மக்கள் அமெரிக்காவாலாவது ஏதும் நல்லது நடக்காதா? என்ற ஏக்கத்துடன் காத்திருப்பதும் தவிர்க்க முடியாததாகவுள்ளது.

சீனாவின் பிரமாண்டமான பொருளாதார வளர்ச்சியையும், அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற ஒற்றை வரியையும் தனக்குச் சாதகமாகக் கொண்டு, இந்தியாவின் பிராந்திய வல்லரசுக் கனவின் ஊடாகத் தமிழீழ மக்களை இனப்படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கடிவாளம் பூட்டும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் நகர்வைத் தமிழீழ மக்கள் சாதகமாக்குவதைத் தவிர வேறு தெரிவேதும் தற்போது கிடையாது.

எனவே, அடிக்கும் காற்றின் திசையில் பாயை விரித்துப் பயணிப்பதன் ஊடாக, சிங்களப் பெரும் சுழலிலிருந்து தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மட்டுமே அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்தை நோக்கலாம்.

இந்த வேளையில், தேசியத் தலைவர் அவர்கள் 04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் தமிழீழ மக்கள் முன்னிலையில் நிகழ்த்திய உரையினை மீள் வாசிப்பு செய்வது மிக அவசியமானதும், பொருத்தமானதுமாகும்.

'எமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்? ....

'பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்....

'எமது எதிரிகளிடம் இருந்து... ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.'

25 வருடங்களுக்கு முன்னர், தேசியத் தலைவர் அவர்கள் நிகழ்த்திய சுதுமலைப் பிரகடனம் இப்போதும் உயிர்ப்புடனே, அமெரிக்காவுக்கும் பொருந்தி வருகின்றது. தமிழீழம் இன்னொரு திசையிலிருந்து தமக்கான விடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது, இந்தியாவைப் போலல்லாது, ஈழத் தமிழர்களுக்கு உண்மையான வெளிச்சத்தை வழங்கட்டும்!

- தமிழ்ச்செல்வன்

www.Tamilkathir.com

ஜெனீவா தீர்மானத்தால் என்ன நன்மை என்பதற்கு ஒரு அழகான பதில் :

எனவே, அடிக்கும் காற்றின் திசையில் பாயை விரித்துப் பயணிப்பதன் ஊடாக, சிங்களப் பெரும் சுழலிலிருந்து தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மட்டுமே அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்தை நோக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.