Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிவை நோக்கிச் செல்வதா? விடுதலையை நோக்கி போவதா? அரசும் சம்பந்தப்பட்டவர்களும் சிந்திக்க வேண்டும் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெல்கம் ரஞ்சித்

Malcom%20ranjith_CI.jpg

இலங்கையில் நிலையான இன ஐக்கியத்தை ஏற்படுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போதுமானதல்ல. மாறாக அதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டும். அது மட்டுமன்றி, செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பை பெற்றுக்கொள்வதே சிறந்தது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எமது தவறுகளை திருத்திக் கொண்டால் சர்வதேச நாடுகள் ஒருபோதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ சுட்டிக்காட்டவோ போவதில்லை. வரலாற்றில் தவறு செய்துள்ளோம். எனவே, அதனை இலங்கை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட சமூகத்தை அரவணைக்க வேண்டும். அவ்வாறு அல்லாது விமர்சிப்பவர்களையும் மாற்றுக் கருத்துக்களை உடையவர்களை விஷேட சட்டங்களை பயன்படுத்தி தண்டிப்பதும் தேசத்துரோகிகள் என்று வர்ணிப்பதும் யதார்த்தமான போக்குடையதாக அமையாது. இதனால் நாடு மீண்டும் அழிவுகளின் அடிமைத்தனத்திற்கே செல்லும். எனவே அரசாங்கம் உணர்வுகளுக்கு அடிபணியாது புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத் தில் நேற்று புதன்கிழமை 'பாஸ்கா' பண்டி கையை முன்னிட்டு நடைபெற்ற விஷேட நிகழ்வின் போதே கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுவித்து புண்ணிய தேசத்திற்கு அம்மக்களை இறைவன் கொண்டுசென்றார். இதனால் உள்ளார்ந்த மாற்றத்திற்கு இஸ்ரேல் சமூகம் பரிணாமம் அடைந்தது. இதற்கு இறைவனின் ஆசிர்வாதம் காணப்பட்டது. சுதந்திரம், சமாதானம் என்பவை ஒரு சமூகத்திற்கு முக்கிய மான விடயங்களாகும். ஆனால், மனிதர்கள் நன்மைகளை விட தீமைகளுக்கு விரைவில் நகர்ந்து விடுகின்றனர். இது மானிட குணாதிசயங்களாகும். எனவே தவறு செய்வது மனித இயல்பு, அதனை திருத்திக் கொண்டு அந்த நிலையிலிருந்து விடுதலையடைவது முக்கியமான செயற்பாடாகும்.

கடந்த முப்பதாண்டுக் கால யுத்தத்தில் தேசியத்துவத்திற்கும் சுயநலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இலங்கை சிறைப்பட்டிருந்தது.

எனவே, சிங்களம் என்பதற்காக ஏனைய சமூகங்களின் உணர்வுகளையும், உரிமை களையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போன சூழல்தான் காணப்பட்டது. தற்போது அந்நிலை மாற்றமடைந்திருக்க வேண்டும். ஏனெனில், யுத்தம் முடிவடைந்துவிட்டது. இனி அனைத்து இனங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும். இதற்கான மாற்றங்களையும் தேவைகளையும் அரசியல் தலைமைத்துவங்கள் பூரணப்படுத்த வேண்டும்.

உத்தேசிக்கும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் நாட்டில் ஏற்படுத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போதுமானதாக கருத முடியாது. அதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டும். வெறும் வார்த்தைகளில் மாற்றம் ஏற்பட்டு பயன் இல்லை. உள்ளார்ந்த மாற்றங்கள் அத்தியாவசியமாகும். இன, மத, மொழி, கட்சி பேதங்களை மறந்து செயற்பட வேண்டும். மற்றவர்கள் சொல்லித்தான் எமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமென்பதில்லை. துரதிஷ்டவசமாக எமது பிரச்சினைகள் சர்வதேசத்தில் பேசப்படுகின்றது.எனவே, மீண்டும் பிரச்சினைகளுக்கு வழி வகுக்காது விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

1983ஆம் ஆண்டில் சிங்கள சமூகம் தமிழ் மக்களுக்கு பாரியளவிலான அநீதியை இழைத்தது. அதேபோன்று புலிகளுக்கு ஆதரவளித்து தமிழ் சமூகம் தவறிழைத்தது. இவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும்.குறிப்பாக நாட்டின் யுத்தம் காணப்பட்ட காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட விஷேட சட்டங்களை பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை அரசு தண்டிக்கக் கூடாது. தற்போதும் இவ்வாறான சட்டங்கள் மூலம் பெருமளவிலானோர் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அரசாங்கம் உணர்வுகளுக்கு கட்டுப்படாது யதார்த்தமானதும் தார்மீகமானதுமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிப்படை சிந்தனையில் முழு அளவிலான மாற்றம் ஏற்படாது விட்டால் நாடு மீண்டும் அழிவினையே எதிர்கொள்ளும். அழிவை நோக்கிச் செல்வதா? விடுதலையை நோக்கி போவதா?என்பதனை அரசும் சம்பந்தப்பட்டவர்களும் சிந்திக்க வேண்டும் என மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.