Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிகளை அரவணைத்துள்ள கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுத்தரும்? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

ஈழத்தமிழரின் உரிமைப்போருக்கான திறவுகோல்களாய் இருந்த வராலற்று மாந்தர்களை நினைவு கொண்டாடும் இடத்தில், கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தங்கள் அழுக்கு முகத்தைக் காண்பித்திருக்கின்றது.

தமிழீழ கோட்பாட்டை நிலைநிறுதியதற்காகவும், அரசியல் ரீதியாகக் கூறிய தீர்க்க தரிசனங்களுக்காகவும் இன்றளவும் தமிழர்கள் தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகின்றனர். இந்த இடத்தில், அவருக்கு நிகராக சில துரோகிகளின் பெயர்களையும் நினைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பினுள் நுழைந்திருக்கின்ற துரோகிகள் கும்பல் ஒன்று செயற்படுகின்றமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பட்டமாகியிருக்கின்றது.

தந்தை செல்வநாயகத்தில் 114வது பிறந்த தின நிகழ்வுகள் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கியிருந்த தன்னையரு மூத்த அரசியல்வாதி என அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர், சில துரோகிகளின் பெயர்களையும் கூறி அவர்களின் வரலாறுகளையும் தமிழர்கள் தீர்க்கமாக தெரிந்து கொள்ள வேண்டும் என வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார்.

அது அவர்களில் தவறில்லை. அனைத்துத் தவறும் கூட்டமைப்பின் தலைமையின் மீதேயிருக்கின்றது. அதாவது அரசியல் ரீதியிலான ஒற்றுமை என்பது வெறுமனே பொலிவுக்காக ஏற்படுத்தப்படும் ஒன்றல்ல. அது கொள்கை ரீதியானதாக இருக்கவேண்டும். அவ்வாறான ஒற்றுமையே அந்தக் கட்சி சார்ந்துள்ள மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், வரலாற்றை செம்மையாகவும், உண்மையாகவும் சந்தத்திகளுக்கு வழங்குவதாகவும் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பவை வேறு. யுத்தம் முடிந்த கையுடன், ‘அண்ணை எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும்’ என காத்திருந்தவர்களைப்போல், கூட்டமைப்பிற்குள்ளே சில துரோகிகளை இணைத்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் வரலாற்று நோக்கத்திற்கு எதிராக செயற்பட்டது கூட்டமைப்பின் தலைமை. கூட்டமைப்பிற்குள் நுழைக்கப்பட்ட இந்த புதிய கூட்டாளிகள் நேர்மையான மனிதர்களென்றால், தமது இனம் சார்ந்தும் அதன் நன்மைகளுக்காகவும் சிந்திப்பவர்கள் என்றால் இந்த அதிமேதாவிகளை அன்றைக்கே தேசியத் தலைவர் பிரபாகரன், தமிழ் மக்களின் தேசிய அரசியலில் இணைத்திருப்பார்.

துரோகிகளாக இருந்தும் விடுதலைப் போராட்டத்தை நேசித்த பல இயக்கங்களின் தலைமைகள் கூட்டமைப்பினுள் புலிகளிள் அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆகவே இவர்களையும் இணைத்திருக்க முடியும். ஆனால் நடந்தது வேறு. இந்த அற்பர்கள் அப்போதும் துரோகிகளாகவே இருந்தனர். அதனால்தான் இவர்களை இணைத்துக்கொள்ளவில்லை. இப்போதும் இவர்கள் துரோகிகளாகவே இருக்கின்றனர்.

ஆனாலும், துரோகிகளுக்கு துரோகிகள் நண்பர்கள் என்ற தோரணையில், இந்த துரோகிக் கூட்டாளிகள் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார்கள். இவர்களை இணைத்து புலிகளுக்குச் செய்த துரோகத்தின் மூலம் கூட்டமைப்பும் துரோகியகாவே பார்க்கவேண்டும். எனவே துரோகிகள் அனைவருமாகச் சேர்ந்து இப்போது கூட்டாளிகளாகி விட்டனர்.

இதுபோக அந்த பிறந்தின கூட்டத்தில் ஒரு மூத்த அரசியல்வாதி பேசும்போது ஒரு கட்டத்தில் சொன்னார், ‘தமிழீழம் தந்தால் நான்வேண்டாமென்றா சொல்லப்போகிறேன். யாரும் தந்தால் ஒரு கும்பிடு போட்டுக் கொண்டு வாங்கிக் கொள்வேன்.’ ஏன்றார். ஆகா..! என்னவொரு அரசியல் ஞானம் பாருங்கள். தமிழீத்தை யாரும் கொடுத்தால் வாங்கிக் கொள்வாராம், தான் ஒருபோதும் அதற்கு முயற்சிக்கப்போவதேயில்லை.

அதையும் தாண்டி உயிர் வெறுத்து, ஆயுதம் தாங்கி போராடுகிறவர்களையும் துரோகியாக்கி அவர்களை மூச்சுவிடமுடியாதபடி தாக்குங்கள் என்றெல்லாம் சொன்னவர், இன்று தமிழீழம் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் என்கின்றார். இந்தப் பேச்சுக்கு நிச்சயமாக செருப்பை கழற்றி வீசவேண்டும் போலிருந்தது.

ஆனால் செருப்பிற்கிருந்த மரியாதை இதனால் போய்விடுமோ என்று நினைத்து சும்மா இருக்கவேண்டியதாயிற்று. அவரே இன்னொரு கட்டத்தில் சொன்னார், அதன் அர்த்தம் இவ்வாறுதானிருந்தது. அதாவது தமிழர்களுடைய பிரச்சினை புலிகள் காலத்திற்கு முன்னரே சர்வதேத்திற்குத் தெரிந்து விட்டது.

அதாவது மிதவாத சக்திகளாலேயே வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது என்பதே. இதற்குப் பதிலளித்து இனமானமுள்ள ஒரு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். ‘தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் இலங்கையில் தமிழர்களின் உரிமைப்போராட்டம் குறித்துப்பேசினால் நீ என்ன மலையாளியா? என்றே கேட்பார்கள்.

ஆனால் இன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகைவரையும் எமது தமிழர்களுடைய பிரச்சினை கொண்டு செல்லப்பட்டிருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் 30 வருட யுத்தத்தில் விலை கொடுக்கப்பட்ட 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களதும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களினதும் உயிர்க்கொடைகளும், தியாகங்களும் மட்டுமே காரணம்.’ என்றார்.

கேட்கும்போதே உடªல்லாம் புல்லரிப்பதை உண்மையாகவே உணர முடிந்தது. நிச்சயமாகவே அதுதான் காரணம். அது மட்டும்தான் காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவே முடியாது. இங்கே தந்தை செல்வா சிறந்தவரா? புலிகள் சிறந்தவர்களா? என்பதைப் பற்றியெல்லாம் நாம் விமர்சிக்கவோ, ஆராய்வதற்கோ விளையவில்லை. உண்மையில் தந்தை செல்வநாயகத்தின் சிந்தனையிலிருந்து பெற்றுக் கொண்ட தனித்தமிழீழ கோட்பாட்டையே இறுக்கமாகவும், உறுதியாகவும், கடந்த 30 வருடம் சுமந்து வந்திருக்கின்றார் தேசியத் தலைவர்.

ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் தோல்வியில் தந்தை செல்வநாயம் இனி தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என சொன்னது. நிச்சயமாகவே போராட்ட வடிவம் ஜனநாயக வரன்முறைகளுக்கு அப்பால், தீமையினை தீமையினால் சூடு என்ற கருத்துப்பட்டதாகவே இருந்திருக்கவேண்டும் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு, அதிலுள்ள சரிபிழைகள் பற்றித் தெரியவில்லை. ஆனாலும் இந்த சிந்தனை அடிக்கடி எழுவதுண்டு.

இதேபோல் ஆயுதம் தாங்கிய ஒரு விடுதலைப் போராட்டத்திற்கும், ஒரு போராளிக்கும் இதுதான் மரணம்தான் முடிவும் என்பதும், ஆயுதம் தாங்கித் தனது சுதந்திரத்திற்காக போராடிய இனங்கள் ஈற்றில் அழிவுகளைச் சுமந்து, அதன் பின்னர் விடுதலை பெற்ற வரலாற்று யதார்த்தங்களையும், தலைவர் பிரபாகரனும், அவருடனிருந்த ஆற்றல் மிக்க தளபதிகளும், போராளிகளும் அறிந்திருக்காமல் இல்லை.

அதேவேளை வேறு வழியும் இல்லை என்ற நிலைப்பாட்டில் தங்கள் உயிர்களை இறுதிவரையில் போராடி தாயக மண்ணுக்காக கொடுக்க நினைத்தவர்களை, அந்தத் தியாகிகளை இன்று துரோகிகளாக்கவும், தங்கள் சொல்வழி கேட்கவில்லை எனவும், நாங்கள் இப்படியரு அழிவோடுதான் யுத்தம் நிறைவுபெறும்.

எனவே யுத்தத்தை கைவிடுங்கள் என்றும் பலதடவை கேட்டதாகவும், இன்று சொல்கின்றார்கள். ஆயுதப் போராட்டங்கள் ஆரம்பித்தபோது பணத்திற்காக ஆயுதப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தவர்களும், உயிருக்குப் பயந்து ஆயுதங்களை வீசிவிட்டு தமது கொள்கைக்கு எதிரான வழியில் ஓடியவர்களும், தமிழீழத்தைப் பற்றியும், விடுதலைப் புலிகளைப் பற்றியும், தலைவர் பிரபாகரனைப் பற்றியும் பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.

இந்த நிலைப்பாட்டில் தமிழர்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். இந்த நிலையில் நாம் மேலே குறிப்பிட்டிருந்த வரலாற்றுத் துரோகிகள் எமக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப்போகின்றார்கள்? அல்லது அவர்களை இணைத்துக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு தமிழர்களுக்கு எதைச் செய்து கொடுக்கப்போகின்றது என்பதில் பல கேள்விகள் இருக்கவே செய்கின்றது.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.