Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குஜராத், மகாராஷ்டிரத்தில் நேற்று (சனிக்கிழமை -ஏப்ரல் 14) நிலநடுக்கம்

Featured Replies

குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை -ஏப்ரல் 14) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5 அலகாகவும், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு 4.1 அலகாகவும் பதிவாகியிருந்தது. இரு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் பிந்தைய அதிர்வு ஏற்பட்டது. அதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகாகப் பதிவானது.

குஜராத்தில் காலை 8.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கட்ச் பகுதியில் உள்ள வம்கா தாலுகாவில் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்தின் அதிர்வை கட்ச் மாவட்டம் முழுவதும் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். தவிர, செளராஷ்டிர பகுதியில் வசிக்கும் மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. பல அடுக்குமாடிகள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வீதிகளுக்கு ஓடிவந்தனர். சில மணி நேரம் அச்சத்துடன் வீதிகளில் உலாவினர். அச்சத்தில் இருந்து மீளவில்லை: நிலநடுக்கத்தால் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது தெரியவந்ததும் மக்கள் வீடுகளுக்கு மெதுவாகத் திரும்பினர். இருப்பினும் குஜராத் மக்கள் நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மட்டுமல்லாது நிலநடுக்கம் ஏற்படாத பகுதியில் வசிக்கும் மக்களும் பயத்தில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் வீச்சு குறைவாக இருந்ததால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்: குஜராத்தை நிலநடுக்கம் தாக்கிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு காலை 10.55 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சதாரா மாவட்டத்தில் உள்ள கோஷத்வாடி கிராமத்தில் மையம் கொண்டிருந்தது. மும்பை, புணே, சதாரா, சாங்லி, கோல்ஹாபூர், ரத்னகிரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிர்வை உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்துள்ளன. இதனால் மக்கள் வீடுகளையும், அலுவலகங்களையும் விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டனர்.

தொடரும் அச்சம்: இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை இரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கங்களின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 8.5, 8.2 அலகுகளாகப் பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் கடலுக்கு அடியில் உருவாகியதால் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உயரமான அலைகள் கடலோரப் பகுதிகளைத் தாக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேசிய நிலநடுக்கத்தின் தாக்கத்தை தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக உணர முடிந்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மகாராஷ்டிரம், குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அணு உலைகளுக்கு பாதிப்பில்லை

நிலநடுக்கம் ஏற்பட்டதால் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள அணு உலைகளின் நிலை என்ன என்று கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ள இந்திய அணுசக்தி கழகம், இவ்விரு மாநிலங்களில் உள்ள அணு உலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவை வழக்கம் போல் சீராக இயங்குகின்றன. நிலநடுக்கத்தால் அணுமின் உலைகளின் மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அணைக்கு ஆபத்தில்லை

சதாராவில் கொய்னா அணை அமைந்துள்ள இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இருப்பினும் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அது பாதுகாப்பாக உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதியான ஜுஹுவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் இல்லம் உள்ளது. நிலநடுக்கத்தால் தனது வீடு சில நிமிடம் அதிர்ந்ததை தான் உணர்ந்ததாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் நிலநடுக்க அதிர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MTgzNDY2NDUy.htm

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாத்தையும் வைத்து பார்க்கையில் ....... 2012 ஆண்டு சரியில்லை என்பது மட்டும் தெரிகின்றது. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.