Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுயத்தை தொலைத்துவிட்டு உரிமை குறித்து பேச முடியாது - தாயகத்தில் இருந்து இளங்கீரன்.

Featured Replies

இலங்கையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு அடிப்படையான சில காரணிகள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் துளிர்தெழுவதை சமகாலம் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதுவே இனப்பிரச்சினையின் தோற்றுவாய்கள் அடைக்கப்படாமல் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதொன்று என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்வதாயுள்ளது.

2009ம் ஆண்டின் ஈற்றோடு இந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் அகற்றப்பட்டுவிட்டதாக வெளிப்படையாகவே கூறப்பட்ட நிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பற்றிய பேச்சுக்களும் பேசப்பட்டன. ஆனாலும் கடந்த 3 வருடங்களில் இனங்களுக்கிடையில் ஏற்படவேண்டிய நல்லிணக்கத்திற்கு மாறாக உள்ளார்ந்தமாக கசப்புணர்வுகளே அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.

அதாவது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க காரணமாயிருந்த வடகிழக்கில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மத பரப்பல், தமிழரின் பாரம்பரியங்கள், கலாச்சார விழுமியங்களை சிதைத்தல் ஆகியன இன்று முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றது. இவற்றுக்கு மிக முக்கியமான காரணம் மிகக் கொடிய யுத்தம் மற்றும் அதனோடிணைந்த சில நடவடிக்கைகளால் இந்த அரசாங்கம் இன்று பேசக்கூடிய சந்ததியை அச்சுறுத்தி மௌனிகளாக மாற்றியிருக்கின்றது.

மற்றையது நிலைப்பாட்டில் தெளிவுள்ள ஒரு பேசும் சக்தியை தமிழர்கள் 2009ம் ஆண்டு யுத்தத்துடன் இழந்துவிட்டமை. மூன்றாவது இரண்டோடும் தொடர்புடைய வகையில் அதாவது அச்சுறுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தினால் தமது நிலைப்பாட்டை தம்மால் தெரிவு செய்யப்பட்ட கொள்கை ரீதியான அரசியல் தலைமைகளை அழைத்து தெரிவிக்க முடியாமை.

இந்த காரணிகளே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கூறிய விடயங்களுக்கு மிக முக்கியமானவையாக இருக்கும் என நினைக்க வேண்டியிருக்கின்றது. அந்த வகையில் தமிழர் தரப்பில் உள்ள சில குறைபாடுகள் தீர்க்கப்படுகின்றபோதே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கு ஒரு முட்டுக்கட்டையிட முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. மற்றபடி தமிழர் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள குடியேற்றங்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்க முயற்சிப்பதும், வெளி

நாடுகளின் தூதுவராலயங்களுக்கு முறையிடுவதும் கூட ஏமாற்று செயற்பாடுகளே.

ஏனெனில் இந்த நாட்டு அரசியல் அதிகார வர்க்கம் ஒருபோதும் சட்டதிட்டங்களை மதிக்கப்

போவதில்லை. இதனை வடகிழக்கு இணைப்பு குறித்த நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் நடந்த சம்பவங்கள் எமக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றன. அதைவிட உரிமைக்கான குரலை நசுக்க இன்னொரு ஆயுதத்தையும் அரசாங்கம் தற்போது வைத்துக் கொண்டிருக்கின்றது. அதாவது உரிமை பற்றி யார் பேசினாலும், அரசை யார் விமர்சித்தாலும் அவர் பிரிவினைவாதி, அல்லது புலி. அரசின் இந்த சித்தாந்தம் சிங்கள இனவாத மாயைக்குள் மூழ்கியிருக்கும் சிங்கள மக்களினதும், சிங்கள யதார்த்தவாதிகளினதும் கண்களைக் கூட மறைத்து விடுகின்றது.

இந்நிலையில் மிக நீண்டகால போரின் பின்னர் எங்கள் வரலாற்றுச் சுவடுகளை தேடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் நாங்கள் நிச்சயமாக மீண்டுமொரு முறை தோற்றுத்தான் போகப்போகின்றோம். ஏனெனில் தமிழரின் பாரம்பரிய வாழ்நிலங்கள் முழுவதும் சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பௌத்தர்களே இல்லாத இடத்திலெல்லாம் விகாரைகள் முளைத்து நின்று பௌத்தர்களின் வருகையினை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.

SLA%20Land%20jaffna.jpg

உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் இராணுவம் மதப்பிரச்சாரம் செய்கின்றது. விகாரைகளை அமைப்பதற்கு தமிழரின் நிலங்களை பறித்து அல்லது அபகரித்துக் கொடுக்கின்றது. சிங்களக் குடியேற்றம் யாழ்ப்பாணத்தில், முல்லைத்தீவில், வெளிப்படையாகவே வந்துவிட்டது. மறைமுகமாக எங்கெல்லாம் வரவிருக்கின்றதோ? தமிழரின் புனித பூமியில் இராணுவத்தினர் சப்பாத்துக் கால்களுடன் சுற்றிவருகிறார்கள், எங்கள் வரலாற்று பொக்கிசங்களை அபகரித்து வைத்துக் கொண்டு அதற்கு விலைபேசுகிறார்கள்.

இந்துக்களின் கோயில்களில் பெறுமதியான சிலைகள் திருடப்படுகின்றன அல்லது அடித்து உடைக்கப்படுகின்றன. இராணுவ முகாம்கள் உள்ள இடமெல்லம் விகாரைகள் கட்டப்படுகின்றன. தமிழர்கள் புண்ணிய பூமியாக கருதும் இடங்களிலெல்லாம் உல்லாச விடுதிகள் அமைக்க திட்டமிடப்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் கணகில்லை. எந்தவிதமான நடவடிக்கையும் கிடையாது.

ஆனால் பௌத்தர்களின் புனித இடத்தில் ஏனைய மத வழிபாட்டிடங்கள் அமைக்கவே கூடாது. இதற்காக பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாட்டின் பிரதம மந்திரி விரைந்து நடவடிக்கை எடுக்கின்றார். எனவே இங்கு நடப்பது பௌத்த பேரினவாத ஆட்சி என குறிப்பிடுவதில் என்ன தவறிருக்க முடியும்? வடகிழக்கு மக்களுக்கொரு நீதி, தெற்கு மக்களுக்கொரு நீதி என இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது தெளிவாக புலப்படுகின்றது.

மற்றபடி ஒரே நாடு, ஒரே மக்கள் என்பதெல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டுகள் என்பது தற்போது புரிந்திருக்கின்றது. எனவே அரசாங்கம் ஒரு விடயத்தை தெளிவாக வைத்திருக்கின்றது. அதாவது வடகிழக்கை அடிப்படையாக கொண்ட தமிழரின் தாயகக் கோட்பாட்டை சிதைத்தல், இதற்காகவே தமிழர் பகுதியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், அதன்பின் நாசுக்காகவோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ பௌத்தத்தையும் உள்நுழைத்தல். இவற்றின் அடிப்படையில் 2009ம் ஆண்டுடன் முடிந்துபோன போரின் வடுவை மறந்துபோன அடுத்தடுத்த சந்ததிகளின் உரிமைக் குரலை நிரந்தரமாக மூடுதல்.

இந்த சிந்தனை தற்போதுள்ளதுபோன்று அரசிற்கு தொடர்ந்தும் வெற்றியை கொடுக்குமாயின் எமது அடுத்தடுத்த சந்ததிகளின் உரிமைக்குரல் நிச்சயமாகவே மூடப்படத்தான் போகின்றது. எனவே தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பேசும் முன்பு, சர்வதேச சக்திகளிடம் முதலில், தமிழரின் பாரம்பரிய நிலத்தில் இன நல்லிணக்கம் என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள குடியேற்றங்கள், தமிழரின் நிலத்தை, வளங்களை இராணுவ இயந்திரத்தின் மூலம் பறித்தெடுத்து சிங்கள மக்களிடம் கையளித்தல், அதிகரித்துக் கொண்டிருக்கும் விகாரைகளும், நாளுக்குநாள் அதிகமாய் வந்து கொண்டிருக்கும் சிங்கள மக்களுக்கு வடகிழக்கு சிங்களவரின் பூமி என்று கற்பிக்கப்படும் பாடம் குறித்தும் கட்டாயம் பேசவேண்டியிருக்கின்றது.

ஏனெனில் எங்கள் சுயத்தை தொலைத்துவிட்டு உரிமை குறித்து நாங்கள் பேச முடியாது. முல்லைத்தீவில் 1965ம் ஆண்டின் பின்னர் தமிழர்களை துரத்திவிட்டு இராணுவப் பாதுகாப்புடன் தொழில் புரிந்தவர்கள், நாங்கள் இங்கே தொழில் செய்தோம் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு தமிழருக்குச் சொந்தமான கடல்வளத்தை முற்றாக அபகரித்திருக்கின்றனர்.

எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் 1984களில் யாழில் தொழில் நோக்கத்திற்காக வந்திருந்தவர்கள், நாங்கள் இங்கே வாழ்ந்தோம் என கூறிக் கொண்டு சிங்கள மக்கள் மீண்டும் யாழ். வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு உடனடியாகவே அரச காணிகளில் இருப்பிடங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டு விட்டன. இதேபோன்று அம்பாறையில் தமிழர்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்குப் போக முடியுமா? போனால் அரச காணிகள் வழங்கப்படுமா? நிச்சயமாக கிடையாது.

எனவே அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நிகழ்வொன்றில் குறிப்பிட்டதைப்போன்று, தமிழர்கள் தங்கள் வாழ்நிலத்திற்காக, சமயநெறிகளுக்காக, கலாச்சார விழுமியங்களுக்காக போராடவேண்டித்தானிருக்கின்றது. எனவே இந்த நெருடல்கள் தொடர்ந்தும் தங்கியிருக்கும் வரையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றதொன்று. இதையே தமிழர்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இனநல்லிணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த அரச இயந்திரம் இத்தனையினையும் செய்து கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் மறுபுறம் உணராமலும் இருக்கின்றோம். அந்தவகையில் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொண்டாகவேண்டும். அதாவது பௌத்த மேலாதிக்கச் சிந்தனையில் இருக்கின்ற இந்த அரசாங்கத்திடமிருந்து போராடாமல் தமிழர்கள் ஒரு சிறு உரிமையை கூட பெற்றுக்கொள்ள முடியாது.

அந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. அது சாத்வீக வழியில் உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதாக கூட இருக்கலாம். அதற்காக இன்று அவசியமான தேவையாகவுள்ளது ஒன்றேயன்றுதான், மக்களுக்காக உயிரை துச்சமாக மதித்து வீதியில் இறங்கிபோராடக் கூடிய அரசியல் தலைமைகள். ஆனால் அறிக்கை அரசியல் கலாச்சாரம் விளைந்துபோயிருக்கும் எமது தமிழ்த் தேசிய அரசியலில் சாத்தியமா? ஏன்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அதுவொன்றே சிறிய ஆறுதலையாவது கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.