Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவிடம் நிலையான தீர்வினை வலியுறுத்தினார் பாப்பரசர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pope-100x100.jpg

இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருடன் வத்திக்கானின் வெளிநாட்டு உறவுகளுக்கான செயலாளர் நாயகம் பேராயர் டொமினிக்கியூ மம்பேட்டியும் கலந்துகொண்டார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது பாப்பரசர் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் அதிகம் பேசியதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவித்தன.

சகல கட்சிகளின் பங்களிப்புடனும் இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என வத்திக்கான் விரும்புகிறது. அப்படியான ஒரு சூழ்நிலை விரைவாக ஏற்படும் என்றும் நாம் நம்புகிறோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் பொருளாதார, சமூக அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் இலங்கை அரசு காட்டும் அக்கறை போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அரசு அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பாப்பரசர் ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துக்கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த முயற்சியின் மூலமே நாட்டில் அமைதி சாத்தியப்படும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்காக சமயம், கல்வி, கலாசாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பங்களிப்புச் செய்ய தயாராகவுள்ளதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்

http://www.saritham.com/?p=61698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தங்களுக்கு மத்தியிலும் புனித பாப்பரசரசரைச் சந்தித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ! camera_icon.jpeg

Paparasar-mahintharajapacse-080612seithy-150.jpg

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்கள், முக்கிய விடயமாக பலராலும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், புனித பாப்பரசரை சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

சிறிலங்கா அரசுத் தலைவரின் சவால்மிகுந்த பிரித்தானியப் பயணத்தினைத் தொடர்ந்து, வற்றீக்கானுக்கான பயணம் அமைந்திருந்தது.

அண்ணளவாக 30 நிமிடங்கள் வரை அமைந்த இந்தச் சந்திப்பின் போது, நீண்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தணித்து, சமூக - பொருளதார அபிவிரித்தி குறித்தும், இன நல்லிணக்கம் குறித்தும், புனித பாப்ரசரால் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டதாக வற்றிக்கானின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்ள்ளது.

Paparasar-mahintharajapacse-080612seithy-380-003.jpg

மேலும் இசந்திப்பின் போது வத்திக்கானின் சர்வதேச விவகாரங்களுக்கான Archbishop Dominique Mamberti அவர்களும் கூடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் கத்தோலிக்க குருமார்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து இவ்வேளை இசந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதா என்பது பற்றி உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை.

Paparasar-mahintharajapacse-080612seithy-355-001.jpg

இருப்பினும் இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஏலவே கோரிக்கையொன்றினை விடுத்திருந்தார்.

Paparasar-mahintharajapacse-080612seithy-285-004.jpg

Paparasar-mahintharajapacse-080612seithy-373-002.jpg

சிறிலங்காவின் ஆயுதப்படைகளினால் பல கத்தோலிக்க குருமார்கள் பலர் படுகொலை செய்யப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர் என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவர்களில் சில குருமார்கள் இன்னும் உயிருடன் இருக்கலாம் எனவும், அவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதான ஐயம் நிலவுகின்றதெனவும் தெரிவித்திருந்தார்.

*- அருட் தந்தை மேரி பஸ்தியான் (சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்)

*- அருட் தந்தை ஈகுஜீன் கேர்பர்ட் ளுது (கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளார்)

*- அருட் தந்தை ச. செல்வராசா (கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)

*- அருட் தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிரவுண் ( கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்)

*- அருட் தந்தை பாக்கியரஞ்சித் (கொலை செய்யப்பட்டுள்ளார்)

*- அருட் தந்தை சேவியர் கருணாரத்தினம் (கொலை செய்யப் பட்டுள்ளார்)

*- அருட் தந்தை பிரான்சிஸ் ஜோசேப்பு ( 2009ஆம் ஆண்டு முதல் காணமல் போயுள்ளார். இவர் யாழ் புனித சம்பத்தரிசியார் கல்லூரி முன்னை நாள் அதிபர்- இவரைசிறிலங்கா ஆயுதப் படையினர் கூட்டிச்சென்றதை மக்கள் கண்டுள்ளார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது என இதுவரை தெரியவில்லை.)

மேற்குறித்த கத்தோலிக்க குருமார்களுக்கு நேர்ந்த அவலம் குறித்தும், புனித பாப்பரசர் அவர்களுக்கு, பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இதேவேளை மன்னர் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களுக்கு, சிறிலங்கா அரசாங்கத்தினாலும், இனவாதிகளினாலும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார். அதில் :

2009இல் சிறிலங்கா இராணுவத்தினரது இறுதியுத்த காலத்தின் போது 146,679 எண்ணிக்கையான தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையாக கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும்ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படும் பௌத்த இனவாத அமைப்பாக ஜாதிக கெல உறுமய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களைக் கைது செய்யம்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. அண்மையில் மற்றுமொரு சிறிலங்காவின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் ஆண்டகை அவர்களை மிரட்டியுள்ளதுடன், அவரது சமூகப் பணிகள் பற்றியும் மிரட்டும் பாணியில் நடந்துள்ளார்.

சிறிலங்காவில் மிகக் கூடுதலான கத்தோலிக்க மக்கள் வாழும் மன்னார் மாவட்டத்திலும் புத்த சிலைகள் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த தேவாலயங்களில் ஒன்றான மடு தேவாலயமும் மன்னார் மாவட்டத்தில் தான் அமைந்து ள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புனித பாப்பரசருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

நாதம் ஊடகசேவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.