Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி பருத்தித்துறையில் சகோதரியை பணயமாக்கி பூசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னால் பெண் போராளி மீண்டும் கைது! அச்சத்தில் உறவினர்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

soothanai12548.jpg

பூசா தடுப்பு முகாமில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னால் பெண் போராளி ஒருவரின் சகோதரியை பணயமாக்கி குறித்த முன்னால் பெண் போராளியை மீண்டும் சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ள சம்பவம் வடமராட்சி பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருகையில். வெளிநாடுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்காக அண்மையில் தொடர்ச்சியாக முன்னால் போராளிகளை புணர்வாழ்வளித்து கட்டம் கட்டமாக சிறிலங்கா அரசு விடுவித்து வருவதாக நாடகமாடிவருகின்றது.

அதன்படி அண்மையில் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட குறித்த பெண் போராளி வன்னியில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுவிக்கப்பட்ட முன்னால் போராளிகளை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கை பரவலாக இடம்பெற்று வரும் நிலையில் சில தினங்களிற்கு முன்னர் பருத்தித்துறையில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்ற சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் குறித்த முன்னால் பெண்போராளியைப் பற்றி குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளார்கள்.

அவர் வன்னியில் வேலை செய்வதாக அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்த போது உடனடியாக அவரை அழைத்து தம்மிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியதாகவும் அதற்கு இப்பதானே இத்தனை வருசமா சிறையில வைத்து சித்திரவதை செய்துபோட்டு விட்டனியள் பேந்து இப்ப வந்து திரும்பபிடிச்சுக் கொண்டு போறதுக்கு நிக்கிறியள் என இயல்பான தமது ஆதங்கத்தை குடும்பத்தவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறிலங்கா புலனாய்வாளர்கள் அங்கு வீட்டில் நின்ற முன்னால் போராளியின் சகோதரியை பிடித்து பணயமாக வைத்துக் கொண்டு முன்னால் பெண்போராளியின் விபரங்களை தரமறுத்தால் இவரை கொண்டு பேகவேண்டிவரும் என மிரட்டியுள்ளார்கள்.

இந்த அதிர்ச்சியான சம்பவத்தினால் நிலைகுலைந்த குடும்பத்தவர்கள் செய்வதறியாது வன்னியில் உள்ள விடுவிக்கப்பட்ட முன்னால் பெண்போராளியின் விபரங்களை கொடுத்துள்ளார்கள். அதனைப் பெற்ற சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் அங்கிருந்தபடியே வன்னியில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள தமது தரப்பினரை தொடர்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்தி குறித்த முன்னால் பெண்போராளியை கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியே திரும்பச் சென்றுள்ளார்கள்.

இதனால் பருத்தித்துறையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளதுடன் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது குழம்பிப்போயுள்ளார்கள்.

சர்வதேசஅழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக முன்னால் போராளிகளை விடுவிப்பதை விளம்பரப்படுத்தும் சிறிலங்கா அரசு பின்னர் தமது புலனாய்வாளர்களை ஏவி மீண்டும் அவர்களை கைது செய்துவருவது தொடர்கதையாகி வருகின்றது. இது தமிழர்களை மீண்டும் பதற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

விடுவிக்கப்படும் முன்னால் போராளிகள் மீண்டும் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகையில் அது குறித்து அவர்களது உறவினர்கள் அச்சம் காரணமாக எவ்வித முறைப்பாடுகளையும் செய்யாது இருக்கின்ற நிலைமையினையும் அப்படி முறையிட்டாலும் முறைப்பாடுகள் சிறிலங்கா காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற சூழ்நிலையில் இது குறித்த உத்தியோக பூர்வதகவல்கள் எதுவும் வெளிவருவதில்லை.

இதனை தாயகத்தில் உள்ள எமது உறவுகளும் வெறும் வதந்திகள் என புறந்தள்ளி புலத்தில் உள்ளவர்களும் சில இணையத்தளங்களும் வேண்டுமென்றே இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருவதாக பொறுப்பற்ற விதமாக பேசிக் கொள்வதுதான் வேதனையாக உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தலையிட்டு இந்த இராணுவ அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இதனால் பாதிக்கபட்ட்டுள்ள மக்கிளனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஈழதேசம் வடமராட்சி செய்தியாளர் - மு.காங்கேயன்.

http://www.eeladhesa...chten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.