Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் கலாசார சீரழிவு நடைபெற்ற நாது விடுதி இழுத்து மூடப்பட்டது.

Featured Replies

யாழ். மாநகர சபையின் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்ததோடு கலாசார சீரழிவுகள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டதனாலேயே யாழ். கோயில் வீதியில் உள்ள “நாது’ விடுதி இழுத்து மூடப்பட்டது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு மேலதிக விளக்கங்களுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ். நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

கடந்த மாதம் 23 ஆம் திகதி யாழ். மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் அந்த விடுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த விடுதி உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்கிவந்தது தெரியவந்தது.

அத்துடன் அன்றையதினம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விடுதிக்குச் சென்ற போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர் விடுதிக்கு முன்பாகச் சென்று அங்கு நின்ற ஹைஏஸ் வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார்.

அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டு உள்ளே விசாரணை செய்யப்பட்டது. அதன்போது அறை ஒன்றில் வெற்று மதுப்போத்தல்களுடன், கலாசாரச் சீரழிவுகள் இடம்பெற்றதற்கான இன்னும் சில ஆதாரங்களை இனங்காண முடிந்தது.

விடுதியின் விருந்தினர் பதிவேட்டைப் பார்வையிட்ட போது 22 வயதுடைய இளைஞன் மற்றும் 18 வயதுடைய யுவதி ஆகியோர் ஒரே அறையில் இருந்ததற்கான பதிவுகள் காணப்பட்டன.

அதனையடுத்து மாநகர சபையினால் விடுதி மூடப்பட்டு, திறப்பு மன்றில் ஒப்படைக்கப்பட்டது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம் மன்றில் தெரிவித்தார்.

“மாநகர சபையின் விதிமுறைகளை மீறியதுடன், குறித்த விடுதியில் சமூகத்தைச் சீரழிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றதனை அவதானிக்கமுடிகிறது. எனவே இவ்வாறான விடுதிகள் யாழில் இயங்கினால் எமது எதிர்கால சந்ததி பாதிக்கக்கூடும்” என அவர் வாதாடியிருந்தார்.

எதிரிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி “இவை வெறும் கட்டுக்கதை. அங்கு எந்தச் சீர்கேடும் இடம்பெறவில்லை. தப்பிச் சென்ற யுவதியைப் பிடித்திருக்க வேண்டுமே தவிர மன்றைத் திசைதிருப்ப பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக் கூடாது.

குறித்த தினத்தன்று தமக்கு 27 ஆயிரம் ரூபாவை பணமாகத் தந்தால் விடுதியை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்று மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் லஞ்சம் கேட்டுள்ளனர். அதற்கு மறுப்புத் தெரிவித்ததாலேயே இவ்வாறான வழக்கு தொடரப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்து, விடுதியை திறந்து நடத்த மன்று அனுமதிக்க வேண்டும் என்று வாதிடினார். எனினும் இதனை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி கடுமையாக ஆட்சேபித்து அதனை மறுத்திருந்தார்.

மாநகர சபையால் சமர்ப்பிக்கப்படவுள்ள மேலதிக விடயங்கள் மற்றும் விளக்கத்துக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.