Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லலைத்தீவு மாவட்டத்தில் சட்ட மருத்துவ அதிகாரியாக சிங்களவர் நியமனம்!

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சட்ட மருத்துவ அதிகாரியாக சிங்கள இனத்தவரை சேர்ந்த எஸ் .சேனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கடந்த காலங்களில் சட்ட மருத்துவ அதிகாரியினை நியமிக்காத சிறீலங்கா அரசு தற்போது சிங்களவரைநியமித்துள்ளது எத்தனையோ தமிழர்கள் சட்டமருத்துவ அதிகாரியாக இருக்கின்ற நிலையில் தற்போது சிங்களவரை நியமித்ததன் பிண்ணயியில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்,முல்லைத்தீவு மாவட்டத்தில் இறந்தவர்களை உடற்கூற்று பரிசோதனையினை மேற்கொள்ள மருத்துவ அதிகாரிகள் இல்லாத காரணத்தால் கிளிநொச்சி,வவனியா,யாழ்ப்பாண மாவட்டங்களுக்கே உடலங்கள் செலவு செய்து மக்கள் எடுத்து சென்றுள்ளார்கள்.

முற்று முழுதாகமுல்லைத்தீவு மாவட்டம் தமிழ்மக்களை கொண்டு வாழும் பகுதியாக காணப்படுகின்ற நிலையில் சிங்கள இனத்தினை சேர்ந்தவரை சட்ட மருத்துவ அதிகாரியாக நியமனம் செய்துள்ளமையினால் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாள்தோறும் ஏதேஒருவகையில் இறப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது,குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு வயோதிபர்கள்போரின் தாக்கத்தினால் வெடிமருந்து புகையினையும் நச்சுக்குண்டு புகையினையும் சுவாசித்த தாக்கத்தினால் கசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் அதன் தாக்கத்தினை மூடிமறைக்கும் செயற்பாடுகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது குறிப்பாக வன்னியில் நோய்த்தாக்கதில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துள்ளது.

இன்னிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மனித உடலங்களில் எச்சங்கள் காணப்படும் நிலையில் இவற்றினையும் மூடிமறைக்கும் செயற்பாடாகவே முல்லைத்தீவு மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரியாக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இறுதிக்கட்டத்தில் போர் உக்கிரம் பெற்ற இடமாக முள்ளிவாய்க்கால்,புதுக்குடியிருப்பு,மாத்தளன் பகுதிகள் வலைஞர்மடம்,இரட்டைவாய்க்கால்,வெட்டுவாகல் போன்ற இடங்கள் காணப்படுகின்றன.

இறுதிக்கட்டத்தில் நடந்த தமிழின படுகொலையின் எச்சங்கள் இந்த பிரதேசங்களிலேகாணப்படுகின்றன.

புதுக்குடியிருப்பு ஆனந்தபுர மண்ணில் எத்தனையோ மாவீரர்கள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்,அவர்களின் வித்துடல்களை அந்தந்த இடங்களில் பதுங்கு குளிகளில் படையினர் போட்டு மூடியுள்ளார்கள் இதேபோல் படையினரின் நகர்வுகளன்போது பதுங்ககழிகளில் வாழ்ந்த மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகமூடப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் பகுதியில்இறுதியாக அந்த மண்ணை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த மக்களின் கண்களுக்கு ஆங்காங்கே ஊதிப்பெருகிய உடலங்கள்தான் காட்சிகொடுத்து என்பதை மறந்துவிடவில்லை,இவ்வாறே டாங்கிகள்,கவசவாகனங்கள் சகிதம் நகர்ந்த படையினர் மக்கள் இறந்து கிடக்க அவர்களின் உடலங்களுக்குமேலால் அவற்றை ஏற்றிச்சென்றதை கண்ணூடாக கண்ட சாட்சிகளும் இருக்கின்றன இவற்றை எல்லாம் எவ்வாறு மண்ணுக்குள் புதைக்கமுடியுமோ அவ்வாறு புதைத்துவிட்டு தற்போது மக்களை மீள்குடியேற்றம் செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்து மக்களின் பாவனைக்கா முள்ளிவாய்க்காலினை திறந்துவிட்ட படையினர் மண்ணுக்குள்ளும் தமிழனின் எச்சங்கள் சாட்சிகளாக இருக்கின்றது என்பதை மறந்துவிட்டார்கள் இவ்வாறான பகுதிகளில் எங்கு பார்த்தாலும் முழத்திற்குமுழம் சாணுக்கு சாண் தமிழர்களின் உடலங்களில் எச்சங்கள்தான் காணப்படும்,கொத்துக்கொத்தாக பதுங்குகுழிக்குள்ளும் மருத்துவமளைகளுக்குள்ளும் வாழ்இடங்களிலும் கொல்லப்பட்ட மக்கள் அந்தந்த இடங்களிலே மண்போட்டு மூடப்பட்டுள்ளது என்பது அங்குநின்றவர்களுக்கு நன்கு தெரியும்,இவற்றை எல்லாவற்றிற்கும் மேலாக படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்கள் கொத்துக்கொத்தாகவே குழிகளில் போட்டு மூடப்பட்டது என்பதை அங்கு பணிசெய்த தெண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்களுக்கும் தெரியும் இவற்றைஎல்லாலம் நன்கு அறிந்தே குறிப்பிட்ட பகுதிகளில் தமிழ்மக்கள் செல்வதற்கு சிங்கள் அரசு தடைவித்த்துள்ளது.

இவ்வாறன நிகழ்வுகளை மூடிமறைக்கும் நீண்டகால திட்டத்தினை கருத்தில் கொண்டே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சிங்கள இனத்தினை சேர்ந்த சட்டமருத்துவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது என்றால் அது சிங்கள அரசின் திட்டமிட்ட செயலாகவே கருதமுடியும்.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.