Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை': கோட்டா

Featured Replies

[size=5]'அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை': கோட்டா[/size]

[size=4]இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகால சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.[/size]

[size=4]குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்துவருவதாகவும் அது தவறு என்றும் கோட்டாபய கூறியுள்ளார்.

குற்றச்செயல்களும் தேசியப் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை காலை அரசின் தகவல் திணைக்களத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் பாதுகாப்புப் படையினரால் எந்தவொரு பாலியல் வன்முறைகளும் புரியப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் உயிரிழந்த பெண்களை படையினரே பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொன்றதாக வெளிநாட்டவர்களுக்கு தவறாக தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு இராணுவத்துக்கு போதிய அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதாகவும் அதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்ற தொனியிலும் கோட்டாபய ராஜபக்ஷ பேசியிருக்கிறார்.[/size]

[size=4][size=5]மர்மமான முறையில் கொலைகள்[/size][/size]

[size=4]இதேவேளை இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.[/size]

[size=4]ஹம்பாந்தோட்டை மாவட்டம், கட்டுவன பிரதேசத்தில் இன்று காலையும் ஆணொருவர் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.[/size]

[size=4]மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இந்த சடலங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.[/size]

[size=4]இதே கட்டுவன பிரதேசத்தில் தான் கடந்த மாதத்தில் ஜேவிபியினரின் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.[/size]

[size=4]இதேவேளை, அண்மையில் இரத்தினபுரி மாவட்டம் காவத்தைப் பகுதியில் ஒரு தாய் மற்றும் மகளின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.[/size]

[size=4]இதே பிரதேசத்தில் இதற்கு முன்னரும் இரண்டு வயோதிப பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு முன்னரும் அப்பகுதியில் பல கொலைச்சம்பவங்கள் மர்மமான முறையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/07/120723_gotacrimes.shtml

  • தொடங்கியவர்

[size=4]கோத்தா,[/size]

[size=4]ஐ.நா. மனித உரிமைகள் தொடருக்கு பயந்து அவசரகால சட்டத்தை நீக்கியது பிழைதான். சிறிலங்கா ஐ.நா.வில் இருந்து விலகி தனி நாடாக முழு இறைமையுடனும் இருக்கவேண்டும். [/size]

[size=4]அத்துடன் குற்றச்செயல்களை பட்டியல் இடும் ஊடகங்களை மேர்வின் ஊடாக, அன்பாக ( பதியுதீன் நீங்கள் சொல்லி செய்தது போன்று) , ஒரு விசாரிப்பு செய்தால் ... சரியாகிவிடும். [/size]

[size=4]அடுத்து அண்ணனுக்கு துணையாக இருக்கும் நீங்கள் தான் இந்த லங்கா மாதாவின் சனாதிபதியாக வரவும் வேண்டும். [/size]

  • தொடங்கியவர்

[size=5]வடக்கு, கிழக்கில் நிலை கொண்டுள்ள படைகளை ஒருபோதும் அகற்றத் தேவையில்லை கோத்தபாய மீண்டும் விடாப்பிடி[/size]

[size=2][size=4]வடக்கு, கிழக்கில் குற்றச் சம்பவங்களில் படையினர் ஈடுபடுவதாக எழுப்பப்படும் குற்றச் சாட்டுகளை நேற்று திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவ்வாறான சூழ்நிலையில் அங்கு படைமுகாம்களை அகற்றுவதற்கோ, படைக்குறைப்பு செய்யவோ தேவையேற்பட வில்லையென்றும் சுட்டிக்காட்டினார். [/size][/size]

[size=2][size=4]நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருவது மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவது ஊடகங்களின் பங்குபற்றியும் நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குத் தலைமை வகித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறியவை வருமாறு:[/size][/size]

[size=2][size=4]நாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது எமது அமைச்சின் பொறுப்பு. அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகம் என்றும், படையினரே அதற்குப் பொறுப்பு என்றும் என்னைச் சந்தித்த தூதுவர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கில் படைக்குறைப்புச் செய்யவும், படைமுகாம்கள் அகற்றப்பட வேண்டுமென்பதையும் நியாயப்படுத்தியே அப்படிச் சொன்னார் தூதுவர். [/size][/size]

[size=2][size=4]நான் இதனை நன்கு ஆராய்ந்தேன். பாதிக்கப்பட்டவர்கள் பயத்தினால் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யபயப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள பதிவுகளின் ஊடாக விவரங்கள் திரட்டப்பட்டன. புள்ளி விவரங்களை நான் பார்த்தேன். அப்போது எந்தவொரு வகையிலும் படையினர் இந்தச் சம்பவங்களில் ஈடுபடவில்லையெனத் தெரியவந்தது. [/size][/size]

[size=2][size=4]மூன்று சம்பவங்களில் படையினருக்குத் தொடர்பு இருந்தது. அந்தச் சம்பவங்கள் வவுனியாவில் சிங்களப் பகுதிகளில் நடந்துள்ளன. படையிலிருந்து தப்பியோடிய சிப்பாய்களே இதில் தொடர்புபட்டுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]வடக்கு, கிழக்கிலுள்ள பெண்கள் மீதான வன்முறைகளுடன் அவர்களின் அயல்வாசிகள், நெருங்கிய உறவினர்கள், தெரிந்த நபர்கள் என்ற சிறு குழுக்கள் பின்னணியில் இருந்தமை தெரியவந்தது. பாதுகாப்புக்காக இருந்தவர்கள்தான் இவற்றைச் செய்துள்ளனர். [/size][/size]

[size=2][size=4]வடக்கு, கிழக்கின் நிலைமை இதுதான். போரின் பின்னர் விதவைகளாக இருப்போர் மீது படையினர் வன்புணர்வுகளில் ஈடுபடுவதாகப் பரப்புரைகள் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன.[/size][/size]

[size=2][size=4]கிருலப்பனை, தங்காலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது பெற்றோர்கள் பொறுப்பற்ற ரீதியில் இருந்துள்ளமை தெளிவாகப் புலனாகின்றது. பொறுப்பற்ற ரீதியில் செயற்பட்டு பாதுகாப்புத் தரப்பினரை எடுத்ததற்கெல்லாம் குற்றஞ்சுமத்தக் கூடாது.[/size][/size]

[size=2][size=4]குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்காக முப்படையினரைப் பயன்படுத்தும் அதிகாரங்கள் எம்மிடம் இல்லை. அதற்காக சட்டங்கள் திருத்தப்படவேண்டும். நீதித்துறையினரின், ஊடகங்களின் ஒத்துழைப்பு இதற்கு மிகவும் தேவையான ஒன்று. ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது தவறல்ல. அப்படிச் செய்திகள் வெளியிடப்படுவதால் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதாக நான் கூறமாட்டேன். [/size][/size]

[size=2][size=4]என்றாலும், குற்றச்சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது அவை சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ.[/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.