Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போனவர்களுக்காய் ஒரு குரல்.... வன்னியில் இருந்து ஒரு குமுறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களுக்காய் ஒரு குரல்.... வன்னியில் இருந்து ஒரு குமுறல்

30 ஆகஸ்ட் 2012

காணாமல் போனோர் தினமாய் இன்று அநுஸ்ட்டிக்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டுள்ளனர். இனி வரும் காலங்களில் கைதாகுதல், காணாமல் போகுதல் என்ற சூழல் அருகி வரும் விதமாய் நடவடிக்கை ஒன்றை அரசு ஏற்படுத்தவேண்டும். காணாமல் போதல் என்பது ஒவ்வொரு உறவுகளிற்கும் உள்ளூர வலியை, உளவியல் தாக்கத்தை உண்டாக்கும்.

உண்மையைப் பேசினால் . உரக்கக் குரல் கொடுத்தல் உடனே அந்த நபர் காணாமல் போவது இன்றைய நாளில் எம் தேசத்தில் சர்வசாதாரணம். எத்தனை ஆண்டுகள் தம் உறவுகளை தொலைத்து விட்டு கண்ணீருடன் அலையும் மனிதர்கள் எத்தனை பேர் . இழப்பிலாதவர்களால் இழந்தவர்களின் வலியை உணர்ந்து கொள்ள முடியாது, என்றாலும் அவர்களிடத்து நின்று அவ்வலியை நாமும் சிறிது ஜீரணிக்கலாமே?

கடத்தப்பட்டவர் சரணடைந்தவர் என்போரை என்ன செய்தார்கள் என்ற உண்மையை உறவுகளிற்கு சொல்ல அரசுக்கு தைரியம் வரவில்லையா? அல்லது உலக நாடுகளின் அழுத்தம் அவர்களை மிரளச் செய்யவில்லையா? அல்லது அழுத்தம் என்ற போர்வையில் அரசியல் நடத்துகிறார்களா?

என் அப்பா எங்கே, என் கணவன் எங்கே ,என் பிள்ளை எங்கே, என் உடன்பிறந்தவர் எங்கே என்ற கேள்விகளால் வருந்தி எந்த பலனும் இதுவரை ஏற்ப்படதாகத் தெரியவில்லை.

எத்தனை மனித உயிர்களை குதறிக் கொன்றவருக்கு என்ன தயக்கம் எஞ்சியோரையும் புதைத்து விட்டோம் என்று மார்தட்டிச் சொல்வதற்கு.? உண்மைகள் நீண்ட காலத்திற்கு உறங்கமாட்டாது என்பர். ஆனால் நீண்ட காலம் கடந்தும் கடத்தப்பட்டவர், சரணடைந்தவர் எங்கே என்ற கேள்விக்கு இதுவரை பதில் தர யாரும் முன் வரவில்லை என்பது மிக வருத்தத்திற்கு உரியது.

காணாமல் போனோரில் தமிழரின் எண்ணிக்கை அதிகம். 2009 இன் பின் அதன் கோரமுகத்தை நேரடி ஒளிபரப்பில் பார்த்ததைப் போல பலர் சாட்சியாக உள்ளனர். ஆனால் அவர்களது கூற்றை அரசு மறுத்து வருவதோடு, அவர்களை மிரட்டவும் செய்கிறது. அப்படி ஒரு நபர் சரணடையவில்லை என அழுத்தமாய் பொய் உரைத்துவருகிறது. அவர்களின் மரணச் சான்றிதழை அவர்களின் உறவுகளிற்கு கட்டாயப்படுத்தி கையளிக்க எத்தனிக்கிறது. இதன் அர்த்தம் என்ன?

முள்ளிவாய்க்காலில் பிரான்சிஸ் ஜோசெப் என்ற பாதிரியாரின் முன்னிலையில் நூற்றுக்கணக்கான போராளிகள் பொதுமக்கள், குழந்தைகள் என சரணடைந்தார்கள்.

அவர்களின் இன்றைய நிலை என்ன என்பது இதுவரை அறியத்தரவில்லை அந்த பாதிரியாரின் நிலை உட்பட. உலகமே மதிப்பளிக்கும் கிறித்தவ சபையால் அவரின் நிலை அறிய முடியவில்லை என்பது மிக வருத்தம் அளிக்கிறது. மதிப்பு மிகு ஆயர் மல்கம் ரஞ்சித் என்பவரால் பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாருக்காக குரல் கொடுக்க முடியவில்லை என்பதும் ஆச்சரியம் தான்.

தனி மனிதனாய் தன் உறவுகளிற்கு குரல் கொடுத்தால் அவர்களும் இன்றைய நிலையில் காணமால் போய்விடுவார்கள் . அந்த அழகில் உள்ளது எம் ஜனநாயக ஆட்சி.

சிறைக்கம்பிகளிற்கு அப்பால் நம்மினம் படும் துயர் இன்று அரசின் மூர்க்கத்தனமான செய்கைகளால் வெளிக்கொணரப்படுகின்றது. அப்படிஎன்றால் காணாமல் போனோரின் கதி என்ன ஆகியிருக்கும் என்ற கேள்விக்கு சிறிது விடை கிடைத்துள்ளது. ஆனாலும் குற்றம் செய்தவர் ஒப்புக்கொள்ளும் வரை குரல்கள் உரத்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். வன்முறைகள் வரலாறை ஒரு போதும் வெல்ல முடியாது என்பது நிதர்சனம்.

போராட்டம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது எனவும் , நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்திவிட்டதாக பொய்ப்பிரச்சாரங்களை பரப்பி , இன்னொரு பக்கம் தமிழினம் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது அரசு. போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் எத்தனை விதமான சீரழிவுகளை எமது சமூகம் எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது. கலாச்சாரச் சீரழிவு தொட்டு பல சீரழிவுக்குள் எமது சமூகம் சிக்கிக் கொண்டிருக்கிறது.

அப்பா வருவார் என்று பிள்ளைகள், கணவன் உயிருடன் இருக்கிறான் என்ற மனைவிகளின் நம்பிக்கைகள், பிள்ளைகள் நாளை வருவார் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்புகள், உடன் பிறந்தோரின் வருகைக்காய் காத்திருக்கும் சகோதரர் என எத்தனை அவலம் நிரம்பிய வாழ்வு வாழ்கிறோம்.

நம்பிக்கை தான் வாழ்க்கை என்றாலும் காத்திருப்பு கொடுமையல்லவா?

மனித நேய அமைப்புகள் , அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் இந்த காணமல் போனவர்க்கான போராட்டத்தை இன்றுடன் முடித்து விடாது கனமான அழுத்தத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும். கதறும் மக்களுக்கு நியாயம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

இவர்களின் கண்ணீரில் மேடை அமைத்து அரசியல் பேசும் தருணமல்ல இது. அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமது உறவுகளை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் என்று வேதனையுடன் கேட்டுக்கொள்கிறோம். காணாமல் போனவர் தமிழனாய் இருக்கட்டும், சிங்களவனாய் இறுக்கட்டும், முஸ்லிமாய் இருக்கட்டும் . எல்லோருக்கும் வலிகள் ஒன்று தான்.

உள்ளம் மரத்துப் போன உணர்வுகளிற்கு சிறிது உயிர் ஊட்டும் விதமாய் இன்றைய நாள் சிறிது நம்பிக்கை அளிக்கிறது. அது இன்றுடம் முடிந்து விடாது நமது உறவுகளின் நிலை அறிய தொடர்ந்து முன்னேறுவோம்...

இந்த உள்ளக் குமுறல் வன்னியில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82217/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.