Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வரும் நவிப்பிள்ளை வடக்கு கிழக்கிற்கும் செல்வாராம்

Featured Replies

[size=2]

[size=4]இலங்கைக்கு வரும் நவிப்பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=2]

[size=4]எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரான நவநீதம்பிள்ளை, தனது விஜயத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=2]

[size=4]எனினும் அவரது முன்னைய நிகழ்ச்சி நிரலில் படி அவர் கொழும்பில் தங்யிருந்தே அனைவரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்தார்.[/size][/size]

[size=2]

[size=4]எனினும் தற்போது அவர் போர் நடைபெற்ற இரு மாகாணங்களுக்கும் செல்வதற்கான நிகழ்ச்சி நிரலை தனது பயணத்தில் சேர்த்துள்ளார் எனவும் அறியவருகின்றது.[/size][/size]

[size=2]

[size=4]அதன்படி தனது குழுவினருடன் வரும் நவிப்பிள்ளை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து நிலமைகளையும் கண்டறியவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=151751389104413192[/size]

  • தொடங்கியவர்

[size=5]இலங்கையில் மறு குடியமர்த்தல் பணி:பார்வையிட வருகிறது ஐ.நா., குழு[/size]

[size=3][size=4]இலங்கையில் நடைபெற்று வரும், மறு குடியமர்த்தல் பணிகளை பார்வையிட,ஐ.நா., நிபுணர் குழு, வரும், 14ம் தேதி, அங்கு செல்கிறது.இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின் போது, அப்பாவிப் பொதுமக்கள், வேண்டுமென்றே, குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மார்ச் மாதம், ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தின் போது, இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.[/size][/size]

[size=3][size=4]அதில், இறுதிப் போருக்குப் பின், இலங்கை அரசு அமைத்த கமிஷனின் பரிந்துரைகளை, விரைவாக நிறைவேற்ற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.மேலும், போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்காக, செயல் திட்டம் ஒன்றை, இலங்கை அரசு உருவாக்க வேண்டும். ஐ.நா., தீர்மானத்தில் கூறப்பட்ட பரிந்துரைகளை, நிறைவேற்ற தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, இலங்கை அரசுடன் கலந்து ஆலோசித்த பின், ஐ.நா., மனித உரிமை கமிஷன் அலுவலகம் வழங்கும் என்றும், தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]ஆனால், இந்த தீர்மானத்தை ஏற்க, இலங்கை அரசு முதலில் மறுத்தது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடும் செயல் இது என்றும் கூறியது.[/size][/size]

[size=3][size=4]இதன்பின், தன் நிலையை மாற்றிக் கொண்ட இலங்கை அரசு, ஐ.நா., மனித உரிமைகள் குழுவின் தொழில்நுட்பக் குழுவை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இதையடுத்து, வரும், 14ம் தேதி, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய ஐகமிஷனர் நவி பிள்ளை தலைமையில், தொழில் நுட்பக் குழு, இலங்கை செல்கிறது. இக்குழுவினர், இலங்கையில், போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, மறு குடியமர்த்த மேற்கொண்டு வரும் பணிகளையும், போர் காரணமாக, அந்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்னைகள் குறித்தும், ஆய்வு செய்வர். பின், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் பற்றிய ஆலோசனைகளை, இலங்கை அரசுக்கு, குழுவினர் வழங்குவர். [/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-180100018.html[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.