Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது பாலாவின் கதை - பாலுமகேந்திராவுடன் இருந்தது பொற்காலம்!

Featured Replies

[size=2]

இன்றைய இளம் இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரம் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘பிதாமகன்’ என இவர் வெற்றி பயணம் தொடர்கிறது. [/size]

[size=2]

மதுரை மாவட்டம் கம்பம் அருகேயுள்ள நாராயண தேவன் பட்டி தான் நான் பிறந்த ஊர். என்னை ஒரு பெரிய ஆபிஸரா ஆக்கிப் பார்க்கணும்கிற கனவுல மதுரை அமெரிக்கன் காலேஜ் சேத்துவிட்டாங்க. அங்கே பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சேன். பட்டிமன்ற நாயகன் சாலமோன் எனக்கு பேராசிரியர். [/size]

[size=2]

நான் படிப்பில் அவ்வளவு கெட்டி கிடையாது. பி.ஏ. தமிழ் இலக்கியம் கூட தேறல.தமிழ் மேல் உள்ள பற்றாலயோ, இலக்கிய ஆர்வத்தாலயோ நான் தமிழ் இலக்கியம் படிக்கலங்க. வேறு எந்த படிப்பிற்கு லாயக்கு இல்லேன்னு இதுல தள்ளி விட்டுட்டாங்க. இப்ப கூட எனக்கு வல்லினம், மெல்லினம், இடையினத்திற்கு உள்ள வித்தியாசம் தெரியாது. [/size]

[size=2]

கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் வேலை தேடும் படலம். நான் படிச்ச லட்சணத்துக்கு அரசாங்க உத்தியோகமா தூக்கி தரப் போறாங்க. யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்து சினிமா தான் னு தீர்மானிச்சுட்டேன்.[/size][size=2]

சினிமாவில் எதிர் காலத்தை தேடி ஏதோ ஒரு வேகத்துல சென்னைக்கு வந்துட்டேனே தவிர சின்ன விஷயம் வட தெரியாமத்தான் இருந்தேன். கதை ஞானம் சுத்தமா கிடையாது. திரைக்கதை அமைக்க இயக்குனராகணும்கிற ஆசை.... அப்புறம்?[/size]

[size=2]

நண்பர்கள் அறிவுமதி, எஸ்.எஸ். ராமன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளரா இருந்தாங்க. படத்தில் அங்கீகாரமில்லாத அசிஸ்டெண்டாக சேர்ந்தேன். எல்லா வேலைகளையும் இழுத்துக் போட்டு பார்ப்பேன். இதனால் இயக்குநருக்கு என் மேல் கரிசனம் பிறக்க, நேரம் பார்த்து அறிவுமதியும் சிபாரிசு செய்யவே தெலுங்க படங்களிலும் பணியாற்றினேன். பாலுமகேந்திராவுடன் இருந்த வாழ்க்கை பொற்காலமாகும். [/size]

[size=2]

எனக்கும் அவருக்கும் உள்ள உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அக்கறையோடு பல தொழில் நுட்பங்களை சொல்லித் தந்தார்.அவர் கற்று கொடுத்த விஷயங்கள் என்னை கலை நயமிக்க சிலையாக அடையாளம் காட்டியிருக்கிறது. பாலு மகேந்திராவிடம் இருக்கும் போதே எனக்கு சில வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. [/size]

[size=2]

ஆனால் அவர் அவசரப்படாதே இன்னும் பக்குவப்படணும் பொறுமையா இரு என்றார். இதனால் பல வாய்ப்புகள் பறிபோயின.[/size]

[size=2]

என்னை முழுமைப்படுத்திட்டு சேது கதையை தயார் செய்து பல பேரிடம் சொன்னேன். ஒருத்தரும் படம் பண்ண வரல. நீண்ட போராட்டத்திற்க பின் தைரியமும், தன்னம்பிக்கையுமுள்ள ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க முன் வந்தார். அது அகிலன் என்கிற பெயரில் பிரம்மாண்டமான அளவில் பூஜை ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் என் துரதிஷ்டம் படம் தயாரிக்கும் முடிவை அவர் திடீரென மாற்றிவிட்டார்.[/size]

[size=2]

அதன் பிறகும் இதே கதைக்கு இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் பூஜை போட ஆரம்பித்து வரிசையாக தடங்கல்... தோல்வி. உடனே ஊருக்கு கிளம்பிவிட்டேன். ஒரு விரக்தியில் மதுரை வந்த பிறகும் சினிமாவை சுத்திட்டே தான் இருந்துச்சு. நம்ம ஊரு பக்கத்துல இருக்கிற தயாரிப்பாளரை கொண்டு போகணும்னு முடிவு செய்து நானும் என் நண்பர்களும் சேர்ந்து வலை வீசி பிடிச்ச விலங்கு மீன் தான் ‘சேது’ பட தயாரிப்பாளர் கந்தசாமி. [/size]

[size=2]

பலபல போராட்டங்களுக்கு பிறகு சேது படம் தயாரானது. படத்தை பார்த்த என்னை பாராட்டி நம்பிக்கை தந்தவர்களில் முக்கிமானவர் இளையராஜா. ஆனால் ஐம்பது தடவைக்கும் மேலாக படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டும் விற்பனையாகவில்லை. ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. இயக்குநருக்கு நல்ல பேர் கிடைக்கும். நிறைய படம் வரும். ஆனால் நட்சத்திர அந்தஸ்து இல்லை. அதனால் தயாரிப்பாளர் போண்டி தான் என்று என் காது படவே பேச ஆரம்பித்தனர். [/size]

[size=2]

இந்த வார்த்தை என் பல நாள் தூக்கத்தை கெடுத்தது. ஒரு அர்த்த ராத்திரியில் திடீரென தயாரிப்பாளரை வரச் சொன்னேன். அவர் பதறி போய் ஒடிவந்தார். வெற்று பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தேன். எனக்கு நிறைய படம் வாய்ப்பு வருகிறது போலவும், நீங்கள் நடுத் தெருவுக்கு போயிடுவீங்கன்னும் பேசுறாங்க. எதிர்காலத்தில் நான் சம்பாதிக்கும் எல்லாத்தையும் நீங்களே எடுத்துகலாம்னு சொல்லி அந்த பத்திரங்களை அவரிடமே கொடுத்துவிட்டேன். உடனே படத்தை சொந்தமாக வெளியீட முடிவு செய்தார். [/size]

[size=2]

சேதுவை மக்கள் ஜெயிக்க வைச்சாங்க. எனக்கு கிடைச்ச பாராட்டு, புகழ் இவற்றை விட எனக்கு கிடைத்த அடுத்த படங்களை விட நான் சந்தோசப்பட்ட விஷயம் தயாரிப்பாளர் கல்லா நிறைஞ்சது தான். [/size][size=2]

பிரமாண்டம் என்கிற பித்தலாட்டம். கிராபிக்ஸ், அசத்தல் என்கிற பம்மாத்து வேலை நடிப்பை மறந்து கவர்ச்சி பாகத்தை மட்டுமே காட்ட தெரிந்த நாயகி, இப்படி சொல்லப்படாத விதிகளை உடைத்து கதையை மட்டுமே நம்பி களம் இறங்கி ‘சேது’ வழியாக சிம்மாசனம் ஏறிய பாலா ‘நான் கடவுள்’ ‘அவன் அவன்’ அடுத்து பரதேசி என வெற்றி பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறார்.[/size]

[size=2]

http://pirapalam.net/news/cinema-news/dir-bala-080912.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.