Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவின் வஞ்சக வலையில் இந்தியா வீழ்ந்து விடக்கூடாதாம் - ! கருணாநிதி அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi-11-250_21062008.jpg

[size=4]சிங்கள அரசும், ராஜபக்சவும் விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்து விடாமல் இனியாவது விழித்துக் கொண்டு ஈழ தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size]

[size=4]தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவிற்கு வருவது, அவருக்கு வரவேற்பு கொடுப்பது, மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்து வைப்பது ஆகியவற்றை எதிர்த்து உள்ளன. ஆனால், மத்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல, மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற் பதும், அவருக்கு பிரதமரே விருந்தளிப்பதும் மரபுப்படி தவிர்க்க முடியாதது என்றாலும் எந்த அளவிற்கு தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்பதை ஈழத் தமிழர்கள்பால் அன்பு கொண்டுள்ள அனைவரும் அறிவர்.[/size]

[size=4]சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மிக நெருக்கமான உறவை வளர்த்து, பல்வேறு காரியங்களுக்கு அவர்களை பயன்படுத்திக் கொண்டும், இந்தியாவை மிரட்டும் பாணியில் இலங்கை அரசு செயல்படுவதை, இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவனித்து வருவோர் நிச்சயமாக அறிவார்கள்.[/size]

[size=4]இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகிறது என்று நாம் திரும்பத் திரும்பச் சொன்னாலும், இந்திய அரசு அதை நம்புகிறதா? நம்பிச் செயல்படுகிறதா? நம்பிடவே இல்லையா? என்பது தெரியவில்லை. எனினும், ஆதாரங்களோடு தெரிவிப்பது நம் கடமை என்ற முறையில் ஒரு சிலவற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன்.[/size]

[size=4]* சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வூ பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.[/size]

[size=4]* ஒப்பந்தங்களின்படி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி ஆகியவற்றை இலங்கைக்கு சீனா அளிக்கவிருக்கிறது.[/size]

[size=4]* அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது, எல்லையில் விமான தளங்களை அமைப்பது என இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளை கொடுக்கும் சீனாவுக்கு இலங்கை மிகவும் நெருங்கிய நட்பு நாடாக மாறியுள்ளது.[/size]

[size=4]* திருச்சியில் பிடிபட்ட ஐஎஸ்ஐ உளவாளி தமீம் அன்சாரியிடமிருந்து இலங்கையில் உள்ள சம்பத் வங்கியின் ஏடிஎம் கார்டு ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்; இலங்கையில் ஐஎஸ்ஐ மையம் நிறுவி இந்தியா வுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்ற செய்தி பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ள நட்பின் ஆழத்தைத் தெளிவாக்குகிறது.[/size]

[size=4]* இந்திய மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்காமல் தொடர்ந்து தாக்கி வருகின்ற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.[/size]

[size=4]* விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 3 ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணுவம் 19 பிரிவுகளில், 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு 12,8,2012ல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்தியப் பிரதமருக்கு அனுப்பி இருக்கிறோம்.[/size]

[size=4]எனவே இனியாவது விழித்துக் கொண்டு, சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்சவும் விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்து விட வேண்டாம் என்றும், மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது காப்பாற்றி அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.