Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் படத்திலும் பாடிய தமிழ்த் திரைப் பாடகர் பி.பி.சிறிநிவாஸ்.!

Featured Replies

டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பிரபலமாவதற்கு முன்பு தமிழ்த் திரையில் கொடி கட்டிப் பறந்தவர் பி.பி.சிறிநிவாஸ்.

அவர் இன்றும் வாழ்கிறார். வயது 83. அவர் திரைக்குப் பாடிய ‘தோல்வி நிலையென நினைத்தால்’ என்ற பாடலை விடுதலைப் புலிகள் தமது முதலாவது எழுச்சிப் பாடலாகப் பயன்படுத்தினார்கள்.

அப்புறம் இந்தப் பாடலை ஒரு பக்கத்தில் வைத்து விட்டுச் சொந்தமாக எழுச்சிப் பாடல்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை விடுதலைப் புலிகளின் சிறப்பான முத்திரையாக அமைகின்றன. பாடகர் சிறிநிவாசின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம், காக்கிநாடா, வந்தாரை வரவேற்கும் சென்னைக்கு அவர் சிறு வயதில் வந்து விட்டார்.

தமிழ்ச் சினிமா கறுப்பு வெள்ளையாக இருந்த காலத்தில் பாடத் தொடங்கியவர் தான் சிறிநிவாஸ். அவருடைய பெற்றார் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். சிநிவாஸ் வர்த்தகப் படிப்பில் பி.கொம் பட்டதாரி. 1950ம் ஆண்டு ஜெமினி ஸ்ரூடியோவில் பணியாற்றிய உறவினர் மணிசங்கர சாஸ்திரியின் உதவியோடு சென்னை வந்தார்.

ஜெமினி தயாரித்த ‘மிஸ்டர் சம்பத்’ என்ற திரைப்படத்தில் பாடத் தொடங்கினார். அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்பட்ட ‘ஜாதகம்’ என்ற படத்தில் பாடினார். அதற்கு அவர் பாடிய ‘சிந்தனை என் செல்வமே’ என்ற பின்னணிப் பாடல் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம்.

காலஞ்சென்ற ஜெமினி கணேசன் நடித்த ‘பிரேம பாசம்’ என்ற படத்திற்காக அவர் பாடிய ‘அவனல்லால் புவியின் மீது அணுவும் அசையாது’ என்ற பாடல் அவரைப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. என்றாலும் அவருடைய வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த பாடல் வேறாக இருந்தது.

‘பாவ மன்னிப்பு’ படத்தில் அவர் பாடிய ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் அவர் வாழ்வில் வசந்தம் வீசச் செய்தது. பாடலைப் பாடியவர் கண்ணதாசன். இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள். இவர்களுடைய இசையில் அவர் வேறு பல பாடல்களைப் பாடியுள்ளார். ஜெமினி கணேசனுக்கும் அவருக்கும் ஒரே வகையான குரல்.

இதன் காரணமாக ஜெமினி கணேசன் படங்கள் பலவற்றிற்கு அவர் பாடினார். ஒரு இந்தி மொழிப் படத்தில் லதா மங்கெஷ்காருடன் சோடி சேர்ந்து டுயற் பாடினார்.

‘அள்ளப்பு கெதர’ அதாவது தமிழில் அடுத்த வீடு என்ற சிங்களப் படத்திற்கு அவர் சிங்களத்தில் பாடினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி, துளு, பெங்காலி, சிங்களம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பி.பி.சிறிநிவாஸ் பாடியுள்ளார். ஜெயலலிதா அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

http://www.sankathi24.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.