Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இளமை நினைவுகள்

Featured Replies

[size=2]

1976ம் ஆண்டு அன்னக்கிளி வழியாக சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு இசைத்துறையில் இது 31 வது ஆண்டு.[/size]

[size=2]

அன்னக்கிளி உன்னைத்தேடுதே எனத் தொடங்கிய இந்த இசையருவி நதியாக ஒடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணையபுரம் கிராமம். இப்போது அது தேனி மாவட்டமாக உள்ளது. அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். இரண்டாவது மனைவியின் ஐந்தாவது குழந்தை தான் இளையராஜா. ஆறாவது பிறந்தவர் தான் அமர்சிங் என்ற கங்கை அமரன். தனது இளம் வயது நினைவுகளை இளையராஜாவே சொல்கிறார்.[/size]

[size=2]

"நான் பிறந்தது 3&6&1943. அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் ‘இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷத்தை அனுபவித்த பிறகுதான் நீ போவாய்’ என்று சொன்னார். அப்பா சொன்னதில் உள்ள உள் அர்த்தம் அம்மாவை பாதிக்க செய்துவிட்டது. ‘நீங்க என்ன சொல்றீங்க?’ என்று பதட்டதுடன் கேட்க, பதிலுக்கு அப்பா ‘எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும் போது நான் போய்விடுவேன்’என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது போலவே என் 9வது பயதில் காலமாகிவிட்டார். அப்பா இறக்கும் போது நான் நான்காவது படித்துக்கொண்டு இருந்தேன். [/size]

[size=2]

எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும் போது ராஜையா என்று மாற்றிவிட்டார். ஆனால் ராசையா என்றே கூப்பிடுவார்கள். படிப்பில் பெரிய விசேஷம் கிடையாது. [/size]

[size=2]

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு தியேட்டர் தான் இருந்தது. அதுவும் கொட்டகை.[/size][size=2]

இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் படித்த லைலா மஜ்னு இந்த படத்தை பாடல்களுக்காக நான்கு முறை பார்த்திருக்கிறேன். அண்ணன் பாவலர் எப்போதும் அந்தப் பாடல்களை பாடிக்கொண்டு இருப்பார். [/size]

[size=2]

நான் வளர வளர லைலா மஜ்னு மீது காதல் அதிகமாகிவிட்டது. படத்துக்கு இசையமைத்த சி.ஆர்.சுப்பராமன் என்னுடைய மானசீக குருவாகிவிட்டார். [/size]

[size=2]

பறிபோன ஏலக்காய் எஸ்டேட்![/size][size=2]

அப்பா இறந்த நேரத்தில் ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்ப சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. [/size]

[size=2]

‘இரு கொலைகள்’, பாட்டாளியின் குரல் என்ற இரு நாடகங்களையும் அண்ணனே கதை, பாடல்கள், வசனம் எழுதி இயக்கினார். நாடக ஒத்திகை எங்கள் வீட்டில் தான் நடக்கும். அத்தனை பேருக்கும் ஒரு மாதம் எங்கள் வீட்டில் தான் சாப்பாடு. ஆடு, கோழி, மீன் என சமையல் அமர்க்களப்படும். நாடகம் நடத்த வேண்டிய தினத்தில் தான் சோதனை நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு ஒடிவிட்டார். அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன் தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார். [/size][size=2]

ஆனால் பலருக்கு பணம் பாக்கி கொடுக்க வேண்டி இருந்தது. [/size]

[size=2]

அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன் நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காண் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார். இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு தான்.அண்ணன் பட்ட கடனுக்காக சொத்தை விற்கு பிரச்சினையை சரி செய்தார் அம்மா. [/size]

[size=2]

இப்படியாக இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாம் வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதங்களையும் பார்க்க விரும்பி பழனிச்சாமி, சந்தானம் என இரு ஜோதிடர்களை வரவழைத்திருந்தார். அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும். [/size][size=2]

இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது என்று உறுதியாக சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ந்தே போனேன். ஆனால் அது தான் நடந்தது. [/size]

[size=2]

சம்பளம் 1 ரூபாய்[/size][size=2]

எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக சோதனை வந்தது. உத்தமபாளையத்தில் சென்று பரீட்சை எழுத வேண்டும். அங்கே மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அதற்கு உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும். பணம் கட்ட வேண்டி கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் அக்கா கமலம் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார். அதுவும் கணவருக்கு தெரியாமல். அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பது தான் பெரிதாகத் தெரிந்தது. இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த எனக்கு ஒன்பதாம் வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது. அதற்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அம்மா யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும் நடக்கவில்லை. பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. ஜோதிடர்கள் சொன்னது நினைவுக்கு வர வருத்தப்பட தொடங்கினேன். [/size][size=2]

அப்போது அக்காளின் கணவர் சிபாரிசால் வேலை கிடைத்தது. வைகை அணை கரையிலும், பூங்காவிலும் செடிகளுக்-கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு 1 ரூபாய் சம்பளம். வாரம் தோறும் ஏழு ரரூபாய் கொடுத்துவிடுவார்கள். அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம், தண்ணீர் பாய்ச்சும் போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.[/size]

[size=2]

இப்படியாக 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் பள்ளியில் சேர்த்து விடலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் 4 மாதம் பாடம் நடத்திருக்குமே என்ன செய்வது? சரி, ஒரேயடியாக அடுத்த ஆண்டு படிப்பை தொடரலாம் எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையை தொடர்ந்தேன். [/size]

[size=2]

ஒரு நாள் நான் பாடுவதை கேட்டு அணைக்கரை தலைமை என்ஜினியர் என்னை அழைத்து அவரது அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலைக்கு சேர்ந்தார். பாட்டு பாட வசதியில்லாமல் போனது. என்னுடைய வேலையிலும் திருப்தி இல்லை என்பதால் மீண்டும் தண்ணீர் பாய்ச்சும் வேலை.[/size]

[size=2]

ஜோதிடரின் ஏளன சிரிப்பு[/size][size=2]

கையில் பணம் சேர்ந்திருந்தது. இந்த ஆண்டு நிச்சம் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விட வேண்டும் என திட்டம் போட்டேன். அதே போல் பள்ளியிலும் சேர்ந்துவிட்டேன். அன்று நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஜோதிடர்களை சந்தித்து பள்ளியில் சேர்ந்துவிட்டதை சொன்னேன். அவர்கள் என்னை ஏளனமாக பார்த்தார்கள். ‘கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் 3 மாசம் தான். என்ன நடக்குது பார் என்றார்கள்.[/size]

[size=2]

அதையும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு படிப்பை தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணத்தை கொண்டு படிப்பையும் ஸ்கூலையும் விட்டுவிடக்கூடாது என்று எனக்குள் வைராக்கியம் வந்தது. காலாண்டு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் வாங்கினேன். திருவெறும்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் பாட அண்ணன் ஒப்புக்கொண்டு இருந்தார். ஆனால் உடல் நிலை சரியில்லாததால் அவரால் பாட முடியவில்லை. அப்போது என்னை அனுப்பி பாடவைத்தார். அந்த நிகழ்வு தான் என் வாழ்க்கையை மாற்றியது. சுமார் ஐம்பதாயிரம் முன்னிலையில் பாடினேன். கைதட்டல், கரகோஷம் என விண்ணை பிளந்தது. மமூன்று நாள் கச்சேரி முடிந்து பள்ளிக்கு சென்றால் பாடம் படிக்க மனம் ஒப்பவில்லை. [/size]

[size=2]

அண்ணனுக்கு ஏராளமாக கச்சேரி வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. நானும் கச்சேரிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். இசையின் வாசல் திறக்கப்பட்டு பள்ளி கதவுகள் மூடப்பட்டன. அப்போது நினைவுக்கு வந்தது ஜோதிடர் சிரித்த ஏளன சிரிப்பின் அர்த்தம். அவர் சொன்னது போலவே நடந்தது” என்கிறார் இளையராஜா.[/size]

[size=2]

http://pirapalam.net/news/cinema-news/ilayaraja-091012.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.