Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அளவுக்கதிகமான அரசியல் தலையீட்டால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திணறல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffnacampous1.jpg

[size=2][size=4]தமிழர்களின் அடையாளமாகவும் பெருமையாகவும் விளங்கும் அதியுயர் கல்வி நிலையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தற்போது அளவுக்கு அதிகமான அரசியல் தலையீட்டால் நிர்வாக ரீதியாகத் திணறிவருகின்றது. [/size][/size]

[size=2][size=4]கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்குள் அளவுக்கு அதிகமான அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகச் சமூகம் சீற்றத்துடன் உதயனிடம் தெரிவித்தது.[/size][/size]

[size=2][size=4]"முன்பிருந்த எந்தவொரு துணைவேந்தரின் காலத்தையும்விட இப்போது நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அதிகமாகிவிட்டது. துணைவேந்தரை நியமித்ததிலும் அரசியல் தலையீடுகள் அதிகம் இருந்ததால் இப்போது நிலைமை கட்டுமீறிப் போய்விட்டது'' என்று பேராசிரியர் ஒருவர் உதயனிடம் தெரிவித்தார். தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். [/size][/size]

[size=2][size=4]யாழ். பல்லைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணமோ, "நாங்கள் எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்கிறோம்'' என்று இதற்கு பதிலளித்தார் உதயனிடம். [/size][/size]

[size=2][size=4]அரசியல் தலையீடுகளின் உச்சம் காரணமாக ஏற்பட்ட சர்சைகளால் பீடாதிபதி ஒருவர் தனது பதவியில் இருந்து விலகப் போவதாகத் துணைவேந்தரிடம் எச்சரித்தார் என்று உதயனுக்கு நம்பகமாக அறியவந்தது. [/size][/size]

[size=2][size=4]கல்வி சாரா ஊழியர் நியமனங்களில் ஆரம்பித்த அரசியல் தலையீடுகள் இப்போது எல்லை தாண்டி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் ஊழியர்களை அமைச்சர் ஒருவர் தானே நேரடியாகக் கட்டுப்படுத்தி வழிப்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டுள்ளது என்ற பல்கலைக்கழகச் சமூகம் குற்றஞ்சாட்டுகிறது.[/size][/size]

[size=2][size=4]தான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இதனை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. "ஒரு சில மூத்த அதிகாரிகளின் மீதான கட்டுப்பாட்டை பல்கலைக்கழக நிர்வாகம் இழந்துள்ளமையானது பல்கலைக்கழக நிர்வாகத்தை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது'' என்று அந்த அறிக்கை கூறுகின்றது. [/size][/size]

[size=2][size=4]"உயர் அதிகாரிகள் சிலர் அடிக்கடி தியட்டருக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு அமைச்சரால் நேரடியான கட்டளைகள் வழங்கப்படுகின்றன'' என்று நம்பகமான நபர்கள் தெரிவிக்கின்றனர். [/size][/size]

[size=2][size=4]கணினி பிரயோக உதவியாளர்கள் மற்றும் எழுதுவினைஞர்கள் நியமனத்தில் இடம்பெற்ற அரசியல் தலையீடுகளே பல்கலைக்கழக நிர்வாகத்துக்குள் கடும் அதிருப்தியையும் குழப்பதையும் ஏற்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. [/size][/size]

[size=2][size=4]"இந்த நியமனங்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் நேர்மையாகத்தான் நடந்தது என்று பீடாதிபதிகள் "தியட்டரு"க்குச் சென்று விளக்கம் கொடுக்க வேண்டியளவுக்கு அரசியல் தலையீடு இருந்தது'' என்று உதயனிடம் தெரிவித்தார் பல்கலைக்கழக மூத்த அதிகாரி ஒருவர். [/size][/size]

[size=2][size=4]இந்த நியமனங்கள் ஏற்கனவே ஒரு தடவை மேற்கொள்ளப்பட்டு பின்னர் இடை நிறுத்தப்பட்டன. 359ஆவது பேரவைக் கூட்டத்தில் இந்த நியமனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், நியமனக் கடிதங்கள் தபாலில் சேர்க்கப்பட இருந்த தருணத்தில் திடீரென அது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் பேரவையின் 360ஆவது கூட்டத்தில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்டதற்கான தெளிவான காரணம் பேரவை கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் தலையீடே நியமனம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்று அடித்துக் கூறப்படுகிறது. [/size][/size]

[size=2][size=4]அந்த நியமனப்பட்டியலில் அடங்கியவர்கள் உட்பட விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் எழுத்துப் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் தெரிவு செய்யப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களில் சிலரை எழுதுவினைஞர்களாகச் சேர்த்துக் கொள்வதற்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்தத் தெரிவுப் பட்டியல் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை. [/size][/size]

[size=2][size=4]கல்வித் துறை சாராத வடக்கிலுள்ள அமைச்சர் ஒருவரின் தலையீட்டை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டது என்று திட்டவட்டமாகத் தெரிய வருகிறது.[/size][/size]

[size=2][size=4]http://www.onlineuth...841549926805095[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.