Jump to content

அப்பிளின் சரிவு ஆரம்பம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிளின் சரிவு ஆரம்பம்?

By Kavinthan Shanmugarajah

2012-10-30 14:12:57

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.

ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.

இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.

அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை.

1024_apple_630x420.jpg

அது தற்போது சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

ஆம், அப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போமானால்,

ஐபோன் 5 இன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனமை,இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்தமையினால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு.

ஐ.ஓ.எஸ். 6 இயங்குதளத்தில் கூகுள் மெப்ஸ்க்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் அப்ளிகேசனை உபயோகித்தது அந்நிறுவனம்.

எனினும் அப்பிளின் சொந்த மெப் அப்ளிகேசன் சரிவர இயங்காமல் ஏகப்பட்ட குழப்பங்களை உண்டாக்கியது.

பலரின் விமர்சனத்துக்குள்ளாகிய மெப் விவகாரம் இறுதியில் அப்பிளின் தற்போதைய நிறைவேற்று அதிகாரி டிம் குக் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மனிப்புப்புக் கோரும் வரை சென்றது.

இதேபோல் 'சைரி' எனப்படும் குரல்கட்டளைக்கு இணங்க செயற்படும் அப்ளிகேசனில் காணப்பட்ட குறைபாடுகள் அதனால் ஏற்பட்ட சர்ச்சை என முன் எப்போதும் இல்லாதவாறான பல பிரச்சினைகளுக்கு அப்பிள் முகங்கொடுக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு பக்கத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க மறு பக்கத்தில் செம்சுங் அதிரடியாக விற்பனையில் சாதித்து வருவாயைப் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களின் ஊடாக அறிக்கை விட்டுக்கொண்டுள்ளது.

mobileos2012_large.jpg

இதுவும் அப்பிளுக்குத் தலையிடியாக மாற மறுபக்கத்தில் கூகுள் நெக்ஸஸ் டெப்லட்டை வெளியிட்டு ஐபேட்டின் சந்தையை சரிக்க மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறு எத்திசையில் திரும்பினாலும் பிரச்சினை, சர்ச்சை, சந்தையை இழக்கும் அபாயம் என நிஜத்திலும் ஆடித்தான் போயுள்ளது அப்பிள்.

இந்நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல புதிய அடியொன்றும் அப்பிளுக்கு விழுந்துள்ளது.

ஆம், அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட உப தலைவரான ஸ்கொட் போர்ஸ்டோல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அப்பிள் அறிவித்துள்ளது.

ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் அப்பிளின் மெப் மற்றும் சைரி ஆகியவற்றால் தோன்றிய குழப்பத்தின் காரணமாக நிறுவனத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்தே இவர் பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பிளின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸூடன் நெருங்கிய உறவைப் பேணிவந்த ஸ்கொட் போர்ஸ்டோல் நிறுவனத்தினுள் சற்று சர்ச்சைக்குரிய நபராகவே திகழ்ந்துள்ளார்.

Scott-Forstall-WINNING%20(1).jpg

இவர் 'divisive figure who "never'' fit into the culture at Apple' என அதிகமாக வர்ணிக்கப்படுகின்றார்.

அடுத்தவருடம் பதவி விலகவுள்ள இவர் டிம் குக்குக்கு ஆலோசகராக செயற்படுவார் எனவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்ற அதேவேளை அவர் அப்பிளை விட்டு வெளியேறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கொட் போர்ஸ்டோல் சுமார் 15 வருடங்களாக அப்பிளில் பணியாற்றி வருவதுடன் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகவும் திகழ்கின்றார்.

இதேவேளை அப்பிளின் சில்லறை வர்த்தகப்பிரிவின் தலைவராக செயற்பட்டவருமான ஜோன் பிரோவெட்டும் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

John-Browett-has-joined-A-007.jpg

அப்பிள் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் இத்தகைய பெரிய இரண்டு பதவிகள் வெற்றிடமாவது இதுவே முதன்முறையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்டீவ் ஜொப்ஸின் மறைவுக்குப் பின்னர் அப்பிளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இதனைக் கருதமுடியும்.

ஸ்டீவ் விட்டுப் போன இடத்தை குக்கினால் நிரப்ப முடியுமா என ஆரம்பத்திலேயே சந்தேகம் எழுந்தது. எனினும் சிறிது காலத்துக்கு சிறப்பாக செயற்பட்ட அவர் தற்போது சறுக்கத் தொடங்கியுள்ளதாக எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு மேலே குறிப்பிட்ட காரணங்களே சிறந்த உதாரணங்களாகும்.

http://www.virakesar...logy.php?vid=90

Link to comment
Share on other sites

[size=4]மறைந்த ஸ்டீவ் ஜொப்சின் அருமை ... தெரிகின்றது.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
    • வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது! யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1400407
    • அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......!   👍  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.