Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழ் அரசியல் திட்ட கழகம் ஆகிய அமைப்புக்களின் கூட்டறிக்கை. சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு சிறிலங்கா கட்டுப்பட வேண்டும்

Featured Replies

[size=3]

ctc-form.gif[/size][size=3]

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழ் அரசியல் திட்ட கழகம் ஆகிய அமைப்புக்களின் கூட்டறிக்கை. சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு சிறிலங்கா கட்டுப்பட வேண்டும்

Nov 01 2012 01:21:53[/size]

[size=3]

[size=3]சிறிலங்காவில் போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை பரிசீலனை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது. 2008 க்குப் பிறகு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட பரிசீலனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான அறிக்கையை ஒட்டுமொத்தமாக 46 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே சமர்பித்திருந்தன. [/size][size=3]

ஐ நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் நிலைமைகளை ஆய்வு செய்யும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது மனிதஉரிமைகளை நிலைநாட்ட எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதோடு , இந்த விடயம் தொடர்பில் பிற உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துக்களை கூறவும் , கேள்வி எழுப்பவும் வாய்ப்பளிக்கப்படும். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்ற 99 நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து வரும் ராணுவக் கட்டுப்பாடுகள் , பெண்களுக்கெதிரான வன்முறை , சித்திரவதைகள் , காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரங்கள் , மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டது தொடர்பான விவகாரங்கள் குறித்த பல்வேறு கேள்விகள் ஐ.நா உறுப்பு நாடுகளால் ஏற்கனவே எழுப்பப்பட்டிருந்தும் இந்த விவகாரங்களில் சிறிலங்காவின் பதில் திருப்திகரமாக இல்லை உள்ளிட்ட பல அம்சங்கள் நேற்று விவாதிக்கப்பட்டன.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாத்து அவர்களைக் காப்பாற்ற சிறிலங்கா முற்றிலும் தவறி விட்டது என்று அமெரிக்க தமிழ் அரசியல் திட்டக் கழகத்தின் (United States Tamil Political Action Council (USTPAC), பிரித்தானிய தமிழர் அவை ( British Tamils Forum (BTF), கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress - CTC) ஆகிய மூன்று அமைப்புகளினதும் கூட்டு பேச்சாளரான Dr.யசோ நற்குணம் தெரிவித்தார். [/size][size=3]

ஏற்கனவே 2008 இல் இது போன்ற விவாதம் நடத்தப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட 26 முடிவுகளில் இரண்டினை மட்டுமே சிறிலங்கா நிறைவேற்றி உள்ளதும், அந்த சமயத்தில் சிறிலங்காவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 45 பரிந்துரைகளில் 5 மட்டுமே இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்தும் மனித உரிமைகளை சீர்குலைக்கும் விதத்தில் 2009 இல நடைபெற்ற போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இதற்குப் பின்னரும் மனித உரிமைகள் தொடர்பான விவாகாரங்களில் அதிகப்படியான உலக நாடுகளின் ஆதரவினைப் பெற சிறிலங்கா தொடர்ந்து முயன்று வருவதை பலர் கடுமையாகச் சாடினர்.

தன் நாட்டு குடிமக்களின் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட சிறிலங்க அரசாங்கம் தான் செய்த தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் சர்வதேச சமுதாயத்தையும் தவறாக வழிநடத்தும் வகையிலான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவித்த Dr.நற்குணம் உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் ஐ.நா திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.[/size]

[size=3]

www.ekuruvi.com[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.