Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷிராணி பண்டாரநாயக்கா விவகாரம்: பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசதரப்பு ஆலோசனை!

Featured Replies

ஷிராணி பண்டாரநாயக்கா விவகாரம்: பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசதரப்பு ஆலோசனை!

சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம் உக்கிரமடைந்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது குறித்து, அரசாங்கத் தரப்பின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரதம நீதியரசரின் மிதமிஞ்சிய சொத்துகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தாம் தயாராக உள்ளோம் என்றும், அதற்கான இரகசிய எழுத்துமூலமான ஆவணங்கள் பல தமக்குக் கிடைத்துள்ளன என்றும் சிறிலங்காவின் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் பிரதம நீதியரசருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகள் முடிகின்ற காலம் வரையில், அவரை வழக்கு விசாரணை நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இதன்பொருட்டு, சிறிலங்கா அரசியல் யாப்பின் 109 (1) சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கமைய, பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது குறித்து அரசாங்கத்தின் சட்ட வல்லுநர்களும், அரசியல் ஆலோசகர்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.

அரசியல் குற்றப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள காலத்தில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதம நீதியரசருக்குப் பதிலாக, பதில் நீதியரசர் ஒருவரை நியமிப்பது குறித்து சிறிலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கருத்து தெரிவிக்கையில்,

'சிறிலங்காவின் அரசியல் யாப்பின் 109 (1) ஆம் சரத்துக்கமைய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி பிரதம நீதியரசருக்குப் பதிலாக, பதில் நீதியரசர் ஒருவரை நியமிக்க முடியும். ஆயினும், இந்த பதில் நீதியரசர் நியமனமானது பதினான்கு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலும், அந்த நியமனத்திற்கு நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை' என்று தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின் அரசியல் குற்றப் பிரேரணை தொடர்பான தெரிவுக்குழு விசாரணைகள் முடிவடையும் காலம்வரை பிரதம நீதியரசர் விடுமுறை பெற்றுக் கொள்ளவும் முடியும்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுகயீனம் மற்றும் நாட்டுக்கு வெளியே இருத்தல் உட்பட வேறு சில காரணங்களினால் தமது பதவியின் நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களில் பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ஆகியோருக்குப் பதிலாக குறிப்பிட்டகால எல்லைக்குள், பதில் நீதியரசர், பதில் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஆகியோரை நியமிப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதிக்கு சட்டவரையறை உள்ளது என சிறிலங்கா அரசமைப்பின் 109 (1) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான 14 குற்றச்சாட்டுகளுள், மிதமிஞ்சிய சொத்துக்குவிப்பு குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தாம் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள இருக்கின்றோம் என சிறிலங்காவின் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெதி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் பிரதம நீதியரசரை ஆணைக்குழுவின் முன்னிலையில் கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள சட்டத்தில் இடமுள்ள போதிலும், அவரின் பதவிக்கு கௌரவமளித்து, விசாரணை அதிகாரி ஒருவரை அவரிடம் அனுப்புவித்து, மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை உறுதிசெய்து கொள்வதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றிலிருந்தும், உள்நாட்டு வருமானம் மற்றும் காணி பதிவாளர் ஆணையாளர் திணைக்களத்தினரிடமிருந்தும் பல இரகசிய எழுத்துமூலமான ஆவணங்களைப் பெற்று, விசாரணை நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டு வருகின்றோம் என்று சிறிலங்காவின் இலஞ்ச மற்றும் ஊழல் திணைக்களத்தின் தலைவர் பாலபட்டபெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=fe23ce46-0de7-48b1-87cd-769328fee23a

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.