Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உரிய சட்டரீதியான பதிலை நாம் வழங்குவோம்: மனோ கணேசன்

Featured Replies

13 ஆம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உரிய சட்டரீதியான பதிலை நாம் வழங்குவோம்: மனோ கணேசன்

[sunday, 2012-11-11 19:08:28]

Mano_seithy-20121008-150.jpg

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு பதிலாக புதிய பத்தொன்பதாம் திருத்தம் கொண்டு வரும் அரசாங்கத்தின் திட்டம், அமைச்சர் விமல் வீரவன்சவின் சுதந்திர மக்கள் முன்னணியுடனான ஐதேக தலைவர் ரணில் தலைமையிலான குழுவினரின் பேச்சு ஆகியவை தொடர்பில் இன்று கூடிய, எதிரணி கூட்டமைப்பு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிய வருகிறது.

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இவைபற்றிய ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது கூறியதாவது,

வரவு செலவு திட்டம், வெலிக்கடை சிறைச்சாலை ஆகிய பரபரப்பான நிகழ்வுகளுக்கு மத்தியில், பத்தொன்பதாம் திருத்தம் என்ற ஒரு முயற்சி சத்தமில்லாமல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏனைய விடயங்களைவிட, இன்றைய தினத்தில் தமிழ் மக்களுக்கு இதுவே மிகவும் முக்கியமான விவகாரமாகும்.

இன்றைய கூட்டத்தில் இது சம்பந்தமாக, ஐதேக தலைவர் ரணிலிடம் நான் கேள்வி எழுப்பிய போது அது சம்பந்தமாக அவர், எனக்கும், சிறிதுங்க ஜெயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, ஹேமகுமார நாணயக்கார ஆகிய ஏனைய எதிரணி தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தினார். ரணிலின் பதில் பின்வருமாறு அமைந்திருந்தது.

விமல் வீரவன்சவுடனான கலந்துரையாடலின் போது அவர், பதின்மூன்றாம் திருத்தத்தை அகற்ற வேண்டும் என்ற கருத்தையும், அது எமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட சட்டம் என்றும் வலியுறுத்தினார். ஐதேக பதின்மூன்றை முழுமையாக அகற்ற உடன்படாது என்றும், ஆனால் அது திருத்தப்படும் அவசியத்தை ஐதேக ஏற்றுகொள்கிறது என்றும், அத்தகைய திருத்தங்கள், சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்ய வேண்டும் என்றும் தாம் அவருக்கு தெரிவித்தாக ரணில் எம்மிடம் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் ஐதேகவின் மாநாட்டில் தமது கட்சியின் கொள்கை பிரகடனம் வெளியிடப்படும் எனவும், அதில், பதின்மூன்றாம் திருத்தம், கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகள் மற்றும் சமூக ஜனநாயக பொருளாதார அமைவுமுறை ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் எம்மிடம் கூறினார். மேலும் புதிய ஒரு அரசியலமைப்பு பற்றியும் தாம் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதின்மூன்று என்பது ஒரு ஆரம்பம். அதிலிருந்து முன்னோக்கி செல்லும்படித்தான் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசும் கூறுகிறது. பதின்மூன்று திருத்தப்படும் போது,அல்லது ரணிலின் உத்தேச புது அரசியலமைப்பு யோசனைகளின் போது, பதின்மூன்றிலிருந்து முன்னோக்கி போக வேண்டுமே தவிர இருப்பதையும் வெட்டி குறைக்க கூடாது. அவ்வாறான திட்டங்களுக்கு ஐதேக உடன்படக்கூடாது என நான் தெரிவித்தேன். எனது கருத்துக்கு சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகியோரும் தமது உடன்பாட்டை தெரிவித்தார்கள்.

இது தொடர்பில், எதிரணி கூட்டமைப்புக்கு வெளியில் நாம் அமைத்துள்ள, 'அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற அமைப்பு அவதானமாக இருக்கும்.விமல் வீரவன்ச சொல்லுவதை போல் பதிமூன்றாம் திருத்தம் திடீரென அடாவடியாக கொண்டுவரப்பட்டது அல்ல. அதற்கு ஒரு பேச்சுவார்த்தை வரலாறு இருக்கிறது. எனவே, பதின்மூன்றாம் திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உரிய சட்டரீதியான பதிலை நாம் அவருக்கு வழங்குவோம்.

முழு நாட்டையும் இனவாத அடிப்படையில் வழி நடத்தி செல்ல எத்தனிக்கும் விமல் வீரவன்சவின் முயற்சிகளை, ஜனநாயக மக்கள் முன்னணி கடுமையாக எதிர்க்கும். நமது முயற்சிகளுக்கு நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாம் எமது ஏனைய கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து இனவாதிகளுக்கு எதிராக நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=69997&category=TamilNews&language=tamil

பி.கு:

மனோகனேசன் ஒருவர் பேசுவது மட்டும்தான் இப்போது இலங்கையிலிருந்து வருபவற்றில் வாசிக்கத்தக்கதாக இருக்கு. கூடடமைப்பு கூட உள் பிரச்சனையை தீர்க்காததால் படிக்க எரிச்சல் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.