Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உச்சநீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத கர்நாடகா?

Featured Replies

தமிழகத்துக்கு காவிரி நதியிலிருந்து 10,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தும், வியாழக்கிழமை வரை கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து வியாழனன்று அம்மாநில சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் சித்தராமைய்யா உட்பட எதிர்கட்சியின் உறுப்பினர்கள் வாதிட்டனர்.


ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்துவிடுவது அல்லது இல்லை என்று எந்தவிதமான முடிவையும் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபையில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
 

தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி தண்ணீரை அளிக்காது என்று முதலமைச்சர் பகிரங்கமாக அறிவிக்காததை அடுத்து, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கைக்கு முன்னர் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

உச்சநீதிமன்றத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என, சட்டசபை விவாதத்துக்கு முன்னர் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

மேலும் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கர்நாடகாவில் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கவுள்ளதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபையில் தெரிவித்தார்.
 

இதற்கிடையே, கர்நாடகமாநில அரசு மற்றும் அரசியல்கட்சிகளின் இந்த போக்கு தமிழ்நாட்டில் இருக்கும் காவிரிபாசன பகுதி விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக கூறுகிறார் காவிரிபாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மன்னார்குடி ரங்கநாதன்.
 

உச்சநீதிமன்றம் உடனடியாக அளிக்கச்சொல்லியிருக்கும் மூன்று டி எம் சி தண்ணீர் கூட தமிழக விவசாயிகளின் தற்போதைய சம்பா பயிரை காப்பாற்ற போதுமானதல்ல என்று கூறும் ரங்கநாதன், அந்த குறைந்தபட்ச தண்ணீரைக் கூட தர மறுத்து அடம்பிடிக்கும் கர்நாடக மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது என்கிறார்.



http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121206_cauverykarnataka.shtml

  • தொடங்கியவர்

கர்நாடகத்தைக் கண்டித்து நாளை தஞ்சை, நாகை, திருவாரூரில் பந்த் -

300 இடங்களில் பஸ், ரயில் மறியல்"
==================

 

தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் 300 இடங்களில் பஸ், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

 

உச்சநீதிமன்றம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு தொடர்ந்து உத்தரவு மேல் உத்தரவு பிறப்பித்து வருகிறது. பிரதமரும் சொல்கிறார், காவிரி கண்காணிப்புக் குழுவும் சொல்கிறது... ஆனால் எந்த உத்தரவையும் மதிக்க முடியாது, தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. உத்தரவுகளை செயல்படுத்த அது முனைந்தால் அரசியல்கட்சிகள், விவசாயிகளைத் தூண்டி விட்டுப் போராட்டம், வன்முறை என்று பாதை மாறிப் போவதால் பிரச்சினை மேலும் மேலும் வலுத்து வருகிறது.


கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடக்கவில்லை. சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடகம் மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரின்றி கருகி வருகிறது.

 

இந்நிலையில் காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும், தண்ணீர் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


பந்த்தின்போது 300 இடங்களில் பஸ் மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள், மத்திய அரசின் அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை கடைகளும் அடைக்கப்படுகின்றன. மருந்துக் கடைகளையும் அடைக்கவுள்ளனர். தனியார் மருத்துவமனைகளும் மூடப்படுகின்றன.

 

 

  • தொடங்கியவர்

இந்திய தேசம் ஒரு நாள் பிரிந்தே ஆகும்.

 

 

அதற்கு இது மாதிரியான, அதாவது நடுவண் அரச உச்ச நீதிமன்ற தீர்ப்பினை ஒரு மாநிலம் மீறும்பொழுது, மற்றைய மாநிலம் இயல்பாகவே கேட்கும் கேள்வி :
 

கூட்டாட்சியால் என்ன பயன்?

 

இந்திய தேசம் ஒரு நாள் பிரிந்தே ஆகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.