Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

Featured Replies

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அணு உலையைத் துவக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.


பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் சார்பில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அந்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை நிறைவடைந்தது.


இன்றைய விவாதத்தின்போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணு உலை இந்த மாத இறுதியில் துவங்கும் என நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.


விசாரணை முழுமை பெறாத நிலையில், அணு உலையைத் துவக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் கோரிக்கை வைத்தார். அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது கூட முடிவாகாத நிலையில், அணு உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.


ஆனால், வழக்கு முடியும் வரை அணு உலையைத் துவக்க மாட்டோம் என்று மத்திய அரசின் சார்பில் எந்த உத்தரவாதமும் தரவில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கூறிவிட்டது. எனவே, இடைக்காலத் தடை கோரிக்கை ஏற்கப்படவில்லை.. அதே நேரத்தில், விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.


அதே நேரத்தில், அணுக்கழிவுகள் எங்கு சேமித்து வைக்கப்படும் என்பது குறித்து 10 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீசிமன்றம் உத்தரவிட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இதுபற்றித் தெரிவித்த மத்திய அரசு, அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


ஆனால், அமெரிக்காவில் கூட இதேபோன்ற ஒரு நிலையில், அணுக்கழிவுகளை எங்கு சேமித்து வைப்பது என்பதை அணு உலை துவங்குவதற்கு முன்பே முடிவு செய்யப்பட் வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்தும் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக் கொண்டுவரப்பட்டது.
மேலும், வேறு யாராவது அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தாலும் அடுத்த 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், அணு உலையை அடுத்துள்ள ராதாபுரம், இடிந்தகரை, உவரி, பெருமணல் உள்பட 10 கிராமங்களில் மக்களைத் தங்கவைக்க போதிய வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

அடுத்த 6 மாதங்களுக்குள் கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர்கால தற்காப்புப் பயிற்சிகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அந்தப் பகுதியின் குடிநீர் தேவைக்ககாக, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

 

இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு

ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம் என்றும், அதை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121206_kulamsc.shtml



382040_226948317437310_1711532583_n.jpg

  • தொடங்கியவர்

இந்த மாத இறுதியில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கும்

 

அணுசக்தி கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பஜாஜ் டில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணு உலையில், இரண்டாவது கட்ட வெப்பமூட்டும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அணுமின் நிலையத்தின் அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகளும், பாதுகாப்பு அம்சங்களும் பரிசோதிக்கப்படும்.


இந்த பரிசோதனைகள் முடிந்ததும், அதன் முடிவுகளை அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பீடு செய்யும்; அதன்பின், மின் உற்பத்தியை துவக்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு, படிப்படியாக மின் உற்பத்தி துவங்கும். இந்த மாத இறுதியில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கும், என்றார்.



http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B3-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-231500536.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.