Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் திருமணம்:பாமக மிரட்டுவதாக ஆசிரியை கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தங்களை கொன்றுவிடுவதாக பாமக மிரட்டுகிறது என்று காதல் திருமணம் செய்த  ஆசிரியை கணவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து  புகார் அளித்துள்ளார். 
 
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள படைத்தலைவன்குடி கிராமத்தைச்  சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகள் வினோதா (22).இவர் அதே பகுதியைச் சேர்ந்த  தேவேந்திரன் என்ற வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வினோதா ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்துள்ளார்.தேவேந்திரன் ஓட்டல்  மேனேஜ்மெண்ட் முடித்துள்ளார்.சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில்  படித்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்து  கொண்டனர்.இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்,வினோதாவின்  வீட்டில் இக்காதல் திருமணத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
 
இதனால் இருவரும் சொந்த ஊரை விட்டு சென்னை வந்து,தேனாம்பேட்டையில்  உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளனர்.இந்நிலையில் வினோதாவும், தேவேந்திரனும்  இன்று மதியம் 12 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்து,புகார் மனு அளித்தார்.
 
கும்பகோணத்தில் பதிவு செய்ததற்கான திருமண சான்றிதழை இனைத்து அவர்  அளித்துள்ள புகார் மனுவில்,"எனது கணவர் இந்து ஆதிதிராவிடர் இனத்தைச்  சேர்ந்தவர்.நான் இந்து படையாச்சி சமூகத்தைச் சேர்ந்தவர்.நாங்கள் திருமணம் செய்து  கொண்டது பிடிக்காமல் எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள்.
 

 

 

எனது கணவரை விட்டு பிரிந்து வராவிட்டால் இருவரையும் கொன்று விடுவதாக  மிரட்டுகிறார்கள்.கும்பகோணத்தைச் சேர்ந்த ரவுடி முருகன், எனது மாமா  கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. தவமணி ஆகியோர் எனது கணவரின்  குடும்பத்தாரை சந்தித்து மிரட்டியுள்ளனர்.
 
எங்கள் ஜாதி பெண்ணை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால் சேத்தியாதோப்பு பகுதியில்  நடந்தது போல உங்களை கொலை செய்து விடுவோம். வன்னியர் சங்க தலைவர்  காடுவெட்டி குரு இதற்கான உத்தரவை போட்டுள்ளார் என்று கூறி 10-க்கும் மேற்பட்ட  ரவுடி கும்பல் எனது கணவரின் உறவினர்களை மிரட்டி வருகிறது.
 
மேற்கண்ட நபர்களால் எங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு  தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.