Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு

Featured Replies

டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., திடீர் வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் தமக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது என்றும் இது போதாது என்றும் குறைபட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனால் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பானது.


மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது என்றும் முதல்வர் ஜெ., தெரிவித்தார். அவர் மேலும் கூட்ட அரங்கின் வெளியே

நிருபர்களிடம் பேசுகையில்:

 

குரல்வளையை நெறிப்பது ஏன்? எதிர்ப்பு மாநில முதல்வர்கள் பேசப்படுவதற்கு வழங்கப்படும் நேரம் மிக குறைவு. இவ்வாறு குரல்வளையை நெறித்து, கேவலப்படுத்துவது ஏன்? இதற்கு எங்களை அழைக்காமல் இருக்க வேண்டியது தானே? எங்களை இந்த அளவு குறைந்த நேரம் கொடுக்கப்படுவது அர்த்தமற்றது, நான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளேன்.பெண்கள் பாதுகாப்பில் அனைத்து மாநில முதல்வர்களும் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் இன்று டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சிகவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில் குறிப்பிட்டார்.

 

 

பொருளாதாரமுன்னேற்றம் :


இம்மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில்: உலக அளவிலான பொருளாதார மந்த நிலை கவலை அளிக்கிறது. உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பழங்கால பேச்சு தவிர்க்கப்பட வேண்டும். தமது அரசை பொறுத்தவரை கீழ்நோக்கி போயிருக்கும் பொருளாதார நிலையை மேம்படுத்திட முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுவே மிக முக்கியமானதாக கருதி அரசு பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேளாண் துறையில் முன்னேற்றம் காண வழிவகை செய்யப்படும். உள்நாட்டு மின்உற்பத்தியை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை 8 சதமாக உயர்த்துவதே எங்களின் இலக்கு.

 

 


பெண்கள் பாதுகாப்பு:


சமீபத்தில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் பெரும் கவலையை தந்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். இது தொடர்பான தண்டனை சட்ட மாற்றம் கொண்டு வரப்படும். இது போன்ற சம்பவம் நடவாமல் பாதுகாத்திட அனைத்து மாநில முதல்வர்களும் முழு கவனத்துடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C-%E0%AE%B5-060300377.html

 

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

ஜெ., வை கேவலப்படுத்தியிருந்தால்., கருணாநிதி கண்டனம்

 

டில்லி கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ.,கேவலப்படுத்தப்பட்டிருந்தால் அது கண்டனத்திற்குரியது என தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று காலையில் டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., பேசுவதற்கு 10 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெ., கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து வெளியேறினார்.

 

இது தமக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் , மணி அடித்து என்னை கேவலப்படுத்தி விட்டனர் என்று பேட்டி அளித்தார். இந்த விஷயம் குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு கருணாநிதி பதில் அளிக்கையில்: கால அவகாசம் நிர்ணயிப்பது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு ஜெ.,வை வேண்டுமென்றே கேவலப்படுத்தியிருக்குமானால் இது கண்டிக்கத்தக்கது.

 

 

நானும் பேசியிருக்கிறேன் :


இது போன்ற கூட்டங்களில் தானும் கலந்திருக்கிறேன். ஒரு முதல்வர் பேசும் பேச்சுக்கள் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு இது வரையறுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட முதல்வர் பேச்சுக்கான கால நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு நடக்கும் போது சில நிமிடம் அதிகம் தேவைப்பட்டால் தொடர்ந்து 5 முதல் 10 நிமிடம் வரை பேசிகொள்ளலாம். இது போன்று நானும் பேசியிருக்கிறேன்.

 

இதனை விட்டு மணி அடித்து விட்டார்கள் நான் பேசமுடியவில்லை என்பது ஏற்ககூடியது அல்ல. ஜெ.,வின் செயல்பாடு வித்தியாசமாகத்தான் இருக்கிறது. மேலும் அச்சடிக்கப்பட்ட பிரதியை கொடுத்தால் அதுவும் மத்திய அரசு பேச்சாக எடுத்துக்கொள்ளும் . இவ்வாறு கருணாநிதி கூறினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9C-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8D-111700827.html

  • தொடங்கியவர்

நானும் பேசியிருக்கிறேன் :

இது போன்ற கூட்டங்களில் தானும் கலந்திருக்கிறேன். ஒரு முதல்வர் பேசும் பேச்சுக்கள் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு இது வரையறுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட முதல்வர் பேச்சுக்கான கால நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு நடக்கும் போது சில நிமிடம் அதிகம் தேவைப்பட்டால் தொடர்ந்து 5 முதல் 10 நிமிடம் வரை பேசிகொள்ளலாம். இது போன்று நானும் பேசியிருக்கிறேன்.

 

இதனை விட்டு மணி அடித்து விட்டார்கள் நான் பேசமுடியவில்லை என்பது ஏற்ககூடியது அல்ல. ஜெ.,வின் செயல்பாடு வித்தியாசமாகத்தான் இருக்கிறது. மேலும் அச்சடிக்கப்பட்ட பிரதியை கொடுத்தால் அதுவும் மத்திய அரசு பேச்சாக எடுத்துக்கொள்ளும் . இவ்வாறு கருணாநிதி கூறினார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9C-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8D-111700827.html

 

 இந்த நியாயமான வெளிநடப்பால் எங்கே ஜெயலலிதா தமிழக மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கு பெற்றுவிடுவாரோ என்ற பயம்  :lol:

ஜெயலலிதாவை வாங்கும் முயற்சியில் காங்கிரஸ் மிக கடினமாக உழைக்கிறது.

 

இதுவரையில் ஆந்திர கோட்டு வழக்கு தொடக்கம் கர்நாடக தண்ணி, கூடன்குள அணு உலை எதிலும் அ.தி.மு.க வும்கும் காங்கிரசுகும் உடன்படிக்கை வரத்தாகதாக இல்லை.

 

காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல் வரை உழைக்கும். இப்போது விடுவதெல்லாம் சாதாரண பாணங்கள். தேர்தல் நேரம் இராமபாணங்களாக வெளிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.