Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது - ஜனாதிபதி 
[Monday, 2013-01-07 09:51:12]
 
பதில் நீதியரசரை நியமிப்பதில் சட்டச் சிக்கல் உள்ளது என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க குற்றப் பிரேரணையை எதிர்நோக்கியுள்ளதால், பதில் நீதியரசர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தேசிய சுதந்திர முன்னணி, தேசிய அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவுக்குமிடையில் தொலைபேசி ஊடாக குற்றப் பிரேரணை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றுள்ளது.
 
இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு பதில் பிரதம நீதியரசரொருவரை நியமிக்குமாறு குணதாச அமரசேகர ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறு செய்வதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை, பிரதம நீதியரசரொருவர் விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்தாலோ, நோய்வாய்ப் பட்டிருந்தாலோ அல்லது அந்தப் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தாலோ பதில் நீதியரசரொருவரை நியமிக்கமுடியும்.
 
இந்த விடயங்கள் அரசமைப்பின் 109 ஆவது பிரிவில் மிகவும் தெளிவான முறையில் கூறப்பட்டுள்ளன என சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், நீதியரசருக்கு எதிராக விசாரணைகள் நடைபெறும் நிலையில், பதில் நீதியரசரொருவரை நியமிக்க முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இதற்கிடையில், புதிய பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை நியமிப்பது குறித்து அரச மட்டத்தில் மந்திராலோசனை நடத்தப்படுகின்றது என்றும், அதற்கு கடும்போக்குடைய அமைச்சர்களும், சிங்கள பேரினவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும் அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் என்றும் அறிய முடிகின்றது.
 
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் 78 ( ஏ) பிரிவுக்கமைய நியமிக்கப் பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு, பிரதம நீதியரசர் ஒருவரைக் குற்றவாளியென அறிவித்து தண்டிக்கும் அதிகாரம் இல்லை என்றும், எனவே, குற்றப் பிரேரணை விசாரணை அறிக்கை வலுவற்றது என்றும் உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானத்துக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.
 
இதனால், பிரதம நீதியரசருக்கு எதிரான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக தெரிவுக்குழு சட்டவலுவற்றது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும், தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கையை விவாதத்துக்கு உட்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 
எதிர்வரும் 8 ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இது விடயம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் விவாதத் திகதியை அறிவிப்பார் என்றும் தெரியவருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.