Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெயர் குறிப்பிடாத மருத்துவருக்கு "வாழும் நாயகன்" விருதினை வழங்கிச் சிறப்பித்தது கனடியத் தமிழர் பேரவை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
CTC-event-news-220113-jeevan-150.jpg

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றோரியோ மாகாண சபையினர், ரொறன்ரோ மாநகர காவல்துறை அதிகாரிகள் , யோர்க் மாநகர காவல்துறையினர் உள்ளிட்ட பெருந்திரளானோர் ஆர்வத்துடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். கனடியத் தமிழ் பேரவையின் இப்பொங்கல் நிகழ்வில் கனடிய அரசு சார்பில் கிறிஸ் அலெக்சாண்டனர், ரொக்சான் ஜேம்ஸ் மற்றும் ஜோ டாணியல் ஆகியோரும் , பிரதான எதிர்க்கட்சிகளான லிபரல் கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் பல முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

  

 

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கனடிய தமிழர் பேரவை பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகிறது என்ற போதிலும் கூட ஆறாவது முறையாக இந்த ஆண்டும் பிரமாண்ட பொங்கல் விழா ரொறன்றோவின் ஹில்ரன் ஐந்து நட்சத்திர உல்லாச விடுதி அரங்கினுள் நடைபெற்றது.

 

விழாவின் முக்கிய அம்சமாக மண்ணின் மனத்துடன் பொங்கலிடப்பட்டது மட்டுமன்றி தமிழ்ச் சமுதாயத்தைச் சர்ர்ந்த சிறுவர், சிறுமிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ரொறொன்ரோ காவல்துறை ஆணையர் உட்பட பல முக்கியப் பிரமுகர்களுக்கு விழாவின் போது நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

 

கனடிய தமிழ் சமுதாயம் இதுவரையிலும் கண்டிராத வகையிலான மாபெரும் இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான முக்கியப் பிரமுகர்களும் , விருந்தினர்களும் விழாவிற்கு வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்.

 

மார்க்கம் நகரின் சார்பில் அதன் துணை மேயர் ஜாக் ஹீத், ஒன்ரோறியோ அரசு சார்பில் மார்க்கம் ஓக்ரிட்ஜ் தொகுதியிலிருந்து சட்டபேரவைக்கு தேர்வான Dr. Helena Jackzek , கனடிய அரசின் சார்பில் அஜக்ஸ் பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்சாண்டர் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து கட்டங்களையும் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளும் , பல்வேறு கட்சித் தலைவர்களும், லிபரல் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்றது கனடியத் தமிழர்களின் வலிமையை தரணிக்கே அறிவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

 

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் உள்ளிட்ட தமிழ் சமுதாயத்தினைச் சார்ந்த முக்கியப் பிரதிநிதிகள் இவ்விழாவினில் கலந்து கொண்டிருந்தனர். மறைந்த என்.டி.பி தலைவர் ஜாக் லேடனின் மனைவியும் ,

 

கனடிய பாராளுமன்ற உறுப்பினருமான ஒலிவியா சோ அவர்களும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் பங்கேற்றார். 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற கனடியத் தமிழர் பேரவை பொங்கல் விழாவின் போது சிறந்த முறையில் சேவையாற்றியமைக்கான விருது தன் கணவருக்கு வழங்கப்பட்டதை ஒலிவியா சோ அப்போது நினைவு கூர்ந்தார் .

 

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் சுந்தரமூர்த்தி உமாசுதன் விழாவிற்கு வருகை புரிந்த விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு , 2012 ஆம் ஆண்டில் கனடியத் தமிழர் பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மனிதாபிமானமற்ற முறையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சுதந்திர சர்வதேச விசாரணை அவசியம் என்பதனை வலியுறுத்தும் வகையிலும் அதற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் கனடியத் தமிழர் பேரவை தொடர்ந்தும் செயல்படும் எனவும் மார்ச் 2013 இல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 22 வது அமர்வில் கனடியத் தமிழர் பேரவை பங்கெடுக்க உள்ளதையும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரமாண்ட இரவு விருந்தில் பல முக்கிய விருதுகளும் வழங்கப்பட்டது. மாற்றங்களுக்கான தலைவர் விருது ரொறொன்ரோ மாநகர காவல்துறை ஆணையர் பில் ப்ளைருக்கும் , பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சிறிலங்க சமாதான மற்றும் நீதி இயக்கத்திற்கு சிறந்த சேவைக்கான விருதும் வழங்கப்பட்டது.

 

விழாவின் முக்கிய அம்சமாக " வாழும் நாயகன் " என்ற புதிய விருதும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிலங்காவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய �Still Counting the Dead� என்ற பிரான்செஸ் ஹாரிசன் புத்தகத்தில் இடம்பெற்ற மருத்துவருக்கு " வாழும் நாயகன் " என்ற சிறப்பு மிகு விருது அளிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இப்புத்தகத்தின் தமிழ் பதிப்பும் விழாவில் வெளியானது. நாளைய தலைவர்களாகத் துடிக்கும் 13 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களின் சிறப்புரை விருந்து விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

 

News By

நவஜீவன் அனந்தராஜ்

 

CTC-event-news-220113-jeevan-(1).jpg

 

 

CTC-event-news-220113-jeevan-(2).jpg

 

 

CTC-event-news-220113-jeevan-(3).jpg

 

 

CTC-event-news-220113-jeevan-(6).jpg

 

 

CTC-event-news-220113-jeevan-400-(4).jpg

 

 

CTC-event-news-220113-jeevan-450-(1).jpg

 

 

CTC-event-news-220113-jeevan-612-(5).jpg

 

மேலும் படத்தொகுப்பு...

 

http://www.seithy.com/breifNews.php?newsID=74406&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.