Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன?
ஜன 30, 2013
         
முப்பது வருடங்களாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கின்ற நிலையில், இந்த மக்களை தொடர்ந்தும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளவே சிங்கள அரசாங்கம் சிந்தித்து அதற்கேற்ப திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தத் திட்டங்களிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு சர்வதேச நாடுகளிடமே இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்விற்கான பந்து தற்போது சர்வதேசத்திடமே இருக்கின்றது என்பதை பலரும் ஏற்கனவே தெரிவித்து வந்த நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கருத்தை அமெரிக்காவிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு சர்வதேசமே பொறுப்புக்கூறவேண்டுமென்று அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் உயரதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தது. அமெரிக்காவின் உதவி வெளிவிவகாரச் செயலர் ஜேம்ஸ் முர்ரே, உதவி வெளிவிவகாரச் செயலர் ஜேன் கிம் மர்மான், பிரதி பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகிய உயரதிகாரிகள் சிறீலங்காவிற்கு வருகை தந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்காவின் மேற்படி உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை முக்கியத்துவம் மிக்கவையாக உள்ளன. குறிப்பாக தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் மீள்கட்டுமானங்கள் தொடர்பாகவும் கடந்த தடவை நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சிங்கள தேசம் இதுவரை கடைப்பிடிக்காமை மற்றும் நிறைவேற்றாமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலேயே இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் சர்வதேசமே பொறுப்புக் கூற வேண்டுமென்று இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் முக்கியமான விடயங்களை வலியுறுத்தியமையை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கின்றனர். இந்தச் சந்திப்பின் போது, ‘கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் சிறீலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்கா அரசு பின்னடிப்பதை ஆதாரங்களுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் சுட்டிக்காட்டியதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ விஸ்தரிப்பு, இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமாக எடுத்துரைத்ததாக சுமந்திரன் கூறியிருக்கிறார். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்திற்கான காரணங்கள் மற்றும் அதற்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தயாரிப்பதற்கென சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை. பொறுப்புக் கூறுதலுக்கான முயற்சியை சிறீலங்கா இன்னமும் உருவாக்கவில்லை என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும், சிறீலங்கா அரசால் கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட செயற்றிட்டத்தில் சிறீலங்கா இராணுவமும் பங்குவகித்திருந்தது. ஆனால், அந்தச் செயற்றிட்டத்துக்கு அமைவாக தங்களால் செயற்பட முடியாது என்று தற்போது இராணுவம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் அமெரிக்க குழுவுக்கு விரிவாக கூட்டமைப்பு விளக்கமளித்திருக்கிறது.

இந்தக் கருத்துக்களைக் கேட்டறிந்த அமெரிக்கப் பிரதிநிதிகளும் தமது பதில் கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர். அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது சிறீலங்காவிற்கு எதிராகப் பிரேரணை கொண்டுவருவதற்கு தாங்கள் தயாராகி வருவதாக அமெரிக்கா உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே சிறீலங்கா அரசு உதாசீனம் செய்து வருவதால், புதிய தீர்மானத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்காவின் சிறீலங்காவிற்கான இந்தப் பயணம் மற்றும் கூட்டமைப்புடனான சந்திப்பு, இங்கு பரிமாறப்பட்ட கருத்துக்கள் என்பன முற்றுமுழுதாக இராஜதந்திரம் நிறைந்ததொரு செயற்பாடாகும். அதாவது, உலக வல்லரசு என்ற நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதில் அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க இராணுவம் என்பதற்கு அப்பால் ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களும் மிக அக்கறையாக இருக்கின்றனர். அதற்கேற்றாற் போலவே அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்து வருகின்றன.

இந்த நிலையில் இலங்கைத் தீவில் மனித உரிமை மீறப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமெரிக்கா உண்மையிலேயே கவனம் செலுத்தியிருந்தது. இதன் வெளிப்பாடே கடந்த ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் போது அமெரிக்காவால் சிறீலங்காவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம். மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டுதானிருக்கிறது.

இதற்கு அப்பால் அண்மையில் தென்னிலங்கையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவைக் கடுமையாகச் சாடியிருந்தார். இந்த நிலமைகளின் பின்னணியிலேயே அமெரிக்கா உயரதிகாரிகள் குழுவொன்று சிறீலங்காவிற்கு வந்திருக்கிறது. இது கூட்டமைப்புடன் சந்திப்பை ஏற்படுத்தியதன் மூலமும் கூட்டமைப்புடன் வித்தியாசமான முறையில் கலந்துரையாடியதன் மூலமும் சிறீலங்கா அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

சிறீலங்கா அரசு இனியாவது நல்ல நோக்கத்தை வெளிக்காட்டாத பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் மீண்டும் இறுக்கமான தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கும் என்ற செய்தியை மறைமுகமாக அரசுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. ஜனநாயகச் செயற்பாடுகளைப் பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் இன்று எந்தவொரு நாடும் மற்றைய நாடுகளுக்கு எதிராக வன்முறைக் கருத்துக்களை முன்வைக்காத நிலையில் இன்று உலகிலும் ஐ.நா சபையிலும் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்திருக்கின்ற அமெரிக்கா சிறீலங்கா போன்ற நாடுகளின் விடயத்தில் தலையிட வேண்டிய பெரும் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நல்லபடியாக அமைய வேண்டுமாயின் உலகிலுள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் அமெரிக்கா தனது நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக சிறுபான்மை மக்களை அடக்கியாளும் நாடுகள் மீது அமெரிக்கா தனது பலத்தைப் பிரயோகிக்க வேண்டும். சில நாடுகளில் தனது அரசியல் பலத்தையும் வேறு சில நாடுகளில் தனது இராணுவ பலத்தையும் காட்டி வெற்றி பெற்ற அமெரிக்கா சிறுபான்மை மக்கள் அடக்கியாளப்படுகின்ற இலங்கைத் தீவிலும் தனது பலத்தைப் பிரயோகிக்க வேண்டும். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத சிறீலங்கா மீது மற்றுமொரு தீர்மானம் கொண்டுவர எத்தனிப்பதானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பதற்கு காலம் கடத்தும் ஒரு செயற்பாடாகவே அமையும். இதற்கு மாறாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் அமெரிக்கா உடனடி நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட வேண்டும்.

எனவே, சிறீலங்காவின் விடயத்தில் அமெரிக்கா வித்தியாசமான முறையில் செயற்பட வேண்டுமென்று சர்வதேசம் பூராகவுமுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் எப்படிச் செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக அமெரிக்காவிடம் தெளிவான நிலைப்பாடொன்று இருக்கலாம். ஆனால், புலம்பெயர் தமிழ் மக்கள் முயற்சி செய்வது ஈழத்தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையலாம்.

புலம்பெயர் தமிழ் மக்கள்  அந்தந்த நாடுகளிலுள்ள அமெரிக்கா தூதரகங்களுக்கு முன்பாக அமைதியான முறையில் ஒன்றுகூடி அமெரிக்காவிற்கு அழுத்தமொன்றைக் கொடுக்க வேண்டும். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு இலத்திரனியல் கடிதம் (ஈ-மெயில்) மற்றும் தந்தி என்பன அனுப்புவதன் மூலமும் இதனைச் சாதிக்க முடியும். இந்த விடயங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் அக்கறை எடுக்க வேண்டுமென்று ஈழத்தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்புப் பார்வை - தாயகத்திலிருந்து வீரமணி
நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/26408/64//d,fullart.aspx
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.