Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிகரம் ருசாங்கன் ஊடகவியலாளர் என்ற போர்வையில் இருக்கும் இராணுவ புலனாய்வாளர்'

Featured Replies

ஊடகவியலாளர் என்ற போர்வையில் இராணுவப் புலனாய்வாளராக செயற்படுபவர்தான் சிகரம் ஊடகத்தின் இயக்குநர் ருசாங்கன் என சிறிதரன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ebfe572c922b9fe090d77374b2ca93da.jpg

 

 

இன்று தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

 

கடந்த 12ஆம் திகதி ரி.ஐ.டி கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகத்தினை சோதனை செய்யும் போது அரசாங்கத்திற்கு சார்பான ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்தன. ஆனால் சுயாதீனமாக செயற்படும் பத்திரிகை மற்றும் இணைய ஊடகங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை.


இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும் சோதனை நடவடிக்கை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டது.

 

இதில் அரசாங்கத்திற்கு ஒத்து ஊதக்கூடிய தினமுரசு, டான், வசந்தம் மற்றும் சிகரம் ஆகிய ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். கொண்டு வந்ததை வைத்துவிட்டு தாங்களே தேடி எடுத்துவிட்டோம் என்று தமது ஊடகங்களுக்கு காட்டிக் கொண்டமை கேவலமான விடயம்.


அதிலும் தான் ஊடகவியலாளர் என்ற போர்வையில் இராணுவத்திற்கு புலனாய்வு வேலை செய்பவர்தான் ருசாங்கன் என்பவர். இவர் சம்பவத்திற்கு முன்னர் ஒரு போதும் எனது அலுவலகத்திற்கே வந்திரா நபர். அன்றைய தருணம் ஏன் வந்தார்.இவரால் தான் மற்றைய கொழும்பு ஊடகங்களுக்கும் உடனடியாக சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செயற்பாட்டிற்கு அவரும் உடந்தையானவர் என்று உறுதிப்படுத்த முடிகின்றது. இவர் ஒரு ஊடகவியலாளர் அல்லர்.முழுமையான இராணுவப்புலனாய்வாளர் என்பது எனது அலுவலக சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.


இதேவேளை ஏற்கனவே ருசாங்கன் செய்தி சேகரிக்கச் சென்றமை தொடர்பில் விமர்சனங்கள் வெளியிடப்பட்ட போது தினமுரசு பத்திரிகையில் ருசாங்கன் ஒரு கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தார்.

 

எனினும் சம்பவம் அவருக்கு தெரியாது என்றும் தமிழ்மிரரில் செய்தியைப்பார்த்ததும் உடனே அந்த இடத்திற்கு சென்றதாகவும் கூறியிருந்தார். அத்துடன் தற்செயலாக தான் அங்கு போன சமயம் சம்பவத்தை கேள்வியுற்று சிறிதரனின் அலுவலகத்திற்கு சென்றிருந்ததாகவும் மாறுபாடான தகவல்களைக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும் அவர் சோதனை ஆரம்பிக்கப்பட்டு சில மணித்தியாலயங்களில் வந்திருந்தார் என ஆதார பூர்வமான தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=549171804031633271

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.