Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்கள்! தேசிய செயற்பாட்டாளர்கள்! இளையோர்கள்! அனைவரும் விழிப்பாக இருங்கள்!

Featured Replies

u1_thamil-035-ss.jpg

தாயகத்தில்
நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில்
காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின்
கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே
அவலப்படவைத்துள்ளது.

ஆனால் பசியோடு
இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த
வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக்
கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள்
குரல்களிலிருந்து அறிய முடிகிறது.

இவர்கள்
அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள்
கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட
விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனுள்ளே
எல்லாச் சவால்களையும் சமாளிக்கக் கற்று வாழ்ந்து விடுகிறார்கள்.
இத்தகையோரையே எங்கள் சமூகமும் கொண்டு தனது வாழ்வையும் பண்பாட்டையும்
காப்பாற்றியதோடு சமூக ஒழுக்கநெறிகளையும் பேணிக்கொண்டது வரலாறு.

ஆனால்
எங்கள் இனத்தின் அடிக்கட்டுமானம் பண்பாடு பழக்க வழக்கம் ஒழுக்கம்
எல்லாவற்றையும் சிதைத்துக் கொண்டு தாயகத்திலிருந்து ஒரு பகுதி இளம் பெண்கள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை இத்தகைய இழிவு நிலைக்குள் தள்ளி
பணத்தைக்காட்டி எங்கள் சமூக கட்;டமைப்பையே சிதைப்பது இலங்கையரச
புலனாய்வாளர்களாக உள்ளார்கள்.

இலங்கையரச
புலனாய்வாளர்களால் தயார்படுத்தப்பட்ட யுவதிகள் திட்டமிட்ட வகையில்
புலம்பெயர் நாடுகளில் வாழும் போராளிகள், தேசியச் செயற்ப்பாட்டாளர்கள்
மற்றும் இளையோர் அமைப்புகளில் இயங்கும் இளையோரிடம் சாதுரியமா வௌ;வேறு
காரணங்களை முன்னிலைப்படுத்தி தொடர்புகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இத்
தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள இவர்கள் தம்மை முன்னாள் போராளியாகவும்
ஈழவிடுதலைமீது கடுமையான விசுவாசியாகவும் தம்மை அடையாளப்படுத்திக்
கொண்டுள்ளார்கள். இவர்களது அழகையும் கவர்ச்சியான பேச்சையும் நம்பிய பல
தேசியச் செயற்பாட்டாளர்கள், இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் இந்தச்
சதிவலையில் மாட்டிக் கொண்டுள்ளதை பல ஆதாரங்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது.
அதிகம் முகப்புத்தகம் , ஸ்கைப் மூலம் தொடர்பில் வந்தே பலரை தமது வலையில்
சிக்கவைத்துள்ளனர்.

இந்த வலையமைப்பானது
இளையோரைக் கொண்டதாக உள்ளதால் இலகுவில் இளையோர் பலரை காதல் என்ற மாயைக்குள்
வீழ்த்தி புலம்பெயர் தேசியச் செயற்பாட்டின் உள்ளக விபரங்களையும் இலகுவாகப்
பெற்றுக் கொள்கிறார்கள். பலர் இத்தகையோரின் காதல் வலையில் வீழ்ந்து தங்களது
உழைப்பு வாழ்வு யாவையும் இழந்து போயுள்ளார்கள். சிலர் தங்களை இந்தக்
குழுவின் முகவர்களாகவும் மாற்றி இயங்கத் தொடங்கியுள்ளார்கள்.

இக்கட்டமைப்பின்
நோக்கம் எமது அடுத்தகட்டப் போராட்ட நகர்வுபற்றிய தகவல்களை சேகரிப்பதாகவும்
இன்று இலங்கையை அச்சமூட்டிக் கொண்டிருக்கும் புலம்பெயர் சமூகத்தின்
ஒற்றுமைத் தளத்தை சிதைப்பதற்காகவுமே அதிகளவு தமிழ் ஆண் , பெண்களைக்
களமிறக்கி எங்கள் இனத்தினராலேயே எங்கள் ஒற்றுமையை சிதைக்கும் திட்டத்தை
அரங்கேற்றி வருகிறது.

இலங்கையரச புலனாய்வுப்
பிரிவினரால் பல பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். skype facebook மூலம்
பேசும் இவர்களை அடையாளம் காண்பது மிகக்கடினம். இவர்கள் எதிர் பார்க்கிற
தகவல்கள் உங்களிடம் கிடைக்காவிட்டாலும் தமது தேவைக்கான மேலதிக பணத்தினையும்
பொருட்களையும் வாங்கிக் கொண்டு காணாமல் போய்விடுகிறார்கள். 

எதிரியின்
தேவையும் நிறைவேறுகிற சம நேரத்தில் தங்களது சொந்த பணத்தாசையையும் இவர்கள்
இலகுவாக நிறைவேற்றிக் கொண்டு போய்விடுகிறார்கள்.இப் பெண்கள் குறித்து
விழிப்பாக இருக்குமாறு தேசியச் செயற்பாட்டாளர்கள் இளையோர் அமைப்பின்
அங்கத்தவர்கள் மற்றும் தேசியச் செயற்பாட்டோடு தொடர்புபட்ட யாவரையும்
கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா , மலேசியா ,
தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் இந்தக் குழுவினரையும்
இலங்கையரச புலனாய்வாளர்கள் அனுப்பி வைத்து இறுதி யுத்தத்தில் சரணடைந்து
காணாமற்போனவர்களின் குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறி வாழும் முன்னாள்
போராளிகளின் இருப்பிடங்களையும் அறிந்து அவர்களுக்கு உயிராபத்தினையும்
விளைவிக்கும் பல சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதனையும் விட
வெளிவாரிப்பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் போலவும் ஆசிய
நாடுகளுக்குள் பலரை களமிறக்கியுள்ளனர்.

இந்தப்
பெண்களும் ஆண்களும் பயன்படுத்தும் சுட்டுப்பெயர்களும் ஸ்கைப் ,
முகப்புத்தகத்தில் ஈழம் சார்ந்தும் மாவீரர்களின் பெயர்களையும் கொண்டதாகவுமே
அமைந்துள்ளதை அவதானித்துள்ளோம். இவர்களின் தொடர்புகள் பற்றி ஆள
ஆராய்ந்ததில் இவர்களைக் களமிறக்கியுள்ள புலனாய்வாளர்களின் பின்னணிகளையும்
அறிய முடிந்துள்ளது.இதில் பல ஊனமுற்ற பெண்களும் இணைக்கப்பட்டுள்ளார்கள். 

இவர்கள்
தங்களது ஊனத்தைக் காட்டி இலகுவாக நம்பிக்கையையும் பெறுவதோடு காதலிப்பதாகப்
பொய்கூறி பல இளைஞர்களை ஏமாற்றியும் வருகிறார்கள். ஒரே பெண் தற்போதைய
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் படங்களை முகம்மாற்றி அனுப்பி
நம்பவைத்து பலரது வாழ்வையும் துயரமாக்கியுள்ளார்கள்.

 

http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=inraiya&article=4821


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.