Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய நாடுகள் சபையில் மூக்குடைபட்ட சிங்கள அரசபிரதிநிதிகள்.

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையில் மூக்குடைபட்ட சிங்கள அரசபிரதிநிதிகள்.

- பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 20:17

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபைகளின் முதலாவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று சுவிஸை தலைமைச் செயலகமாக கொண்டு இயங்கும் 'சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற அரச சார்பற்ற அமைப்பினால் நாடாத்தப்பட்ட 'தென் ஆசியாவில் மக்கள் உரிமை" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கருத்தரங்குக்கு சர்வதேச சர்வ நம்பிக்கை அமைப்பின் பொதுச் செயலளார் சாள்ஸ் கிறேவ் தலைமை தாங்கினார்.

இலங்கை தீவின் இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஸ்ரீலங்கா அரசு எந்த முயற்சியும் செய்யாது தமிழ் மக்களை படுகொலை செய்வதிலும், கைது செய்வதிலும், இடம்பெயர வைப்பதிலுமே ஈடுபட்டு வருகிறது.தமிழீழ மக்களின் பிரநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்தில் பொய்களை சொல்லி தடை செய்ய முயற்சிப்பதிலேயே தமது காலங்களை செலவிட்டு வருகின்றனர்;.

இப்படியான செயற்படுகளை சிங்கள அரசுகள் இன்று நேற்றல்ல, இலங்கை தீவு சுதந்திரம் அடைந்ததிலிருந்து செய்து வருகின்றன என்றார்.

இக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா அரசின் சுவிஸ் தூதரகப் பிரதிநிதி, கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த சட்ட மா அதிபர் அலுவலகப் பிரதிநிதி ஸ்ரீலங்கா மனித உரிமை அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். வழமைபோல் ஸ்ரீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை நியாயபடுத்த முனைந்தனர். இவர்களுக்கும் கிருபாகரனுக்கும் இடையில் மிகவும் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா அரச தரப்பினர் தமது கருத்துகளை முன்வைக்கும் போது,

முதிர்ந்த தமிழ் அரசியல்வாதியும், ஐனநாயாகவாதியுமான ஆனந்த சங்கரி போன்றோர் கிருபாகரன் கூறும் தமிழீழ மக்களின் பிரநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை என்று கூறினர்.

அதற்குப் பதிலளித்த கிருபாகரன்,

ஆனந்தசங்கரியின் பெயரை இங்கு அவர்கள் கூறியதற்கு நன்றி. 2002 ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்தினால் தான் பெரும்பான்மையான வாக்குகளால் ஆனந்தசங்கரி வெற்றி பெற்றார். அதற்கு எதிர்மாறாக 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலை புலிகளை ஆதரிக்காத ஒரே காரணத்தினாலேயே அவர் படுதோல்வி அடைந்தார்" என்று கூறினார்.

இதை அங்கு இருந்த பல இனத்தைச் சேர்ந்த பார்வையாளர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

நன்றி: சங்கதி

ம்... பண்டாரவன்னியன் கூற்று தவிர வேறையிடத்திலை ஒண்டையும் காணேல்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.