Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: - பா,ஜ.க வலிறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

BJP_logo_150saeithy.jpg

இலங்கையில் நெடுஞ்காலமாக இனவாத சிங்கள அரசால் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி அல்லலுற்று, அவதியுற்று, வாழ்கின்றனர். நடந்த உள்நாட்டு போரின் , போது ஒரே நேரத்தில் 70,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டவர்களில் முதியோர்கள், பெண்கள், சிறார்கள், போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதற்கு பதில், தமிழ்முகாம்களில் அடைத்து வைத்து தொடர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். இதன் உச்சக்கட்டமாக 12 வயது பாலகன் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் எந்த குற்றச்சாட்டும் இன்றி கொடூரமான முறையில் கொல்லப்பட்டான். இராஜபக்சே அரசின் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் தொடராமல் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

  

இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், படுகொலை செய்யப்படுவதையும், சிறைபிடித்து சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதையும் இச்செயற்குழு வேதனையோடு சுட்டிக் காட்டுவதோடு,1974-ல் இலங்கை அரசுக்கு தாரை வார்த்த கச்ச தீவை திரும்ப பெறுவதற்கு அரசியல் ரீதியாக உரிய வழி முறை காணுமாறு மத்திய அரசை இச் செயற்குழு வலியுறுத்துகிறது. டெசோ போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத அமைப்புகள் தனித்தனியாக இலங்கை பிரச்னைக்கு போராடுவதை கைவிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒருமித்த குரல் கொடுக்க, தமிழக அரசு சர்வ கட்சி மற்றும் அமைப்புகள் கூட்டத்தை கூட்டி ஆவன செய்ய வேண்டும் என இச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை உடனே அகற்ற இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். படிப்பினை நல்லிணக்க ஆணையக் குழுவின் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும். மேலும் இலங்கையில் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த வற்புறுத்த வேண்டும். இலங்கை இனப் படுகொலை தொடர்பாக பிறநாடுகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் பாரபட்சமில்லாத சர்வதேச விசாரணைக்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் அத்துடன் அந்த விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க இலங்கையிடம் உறுதி பெற வேண்டும்.

 

ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நாடாகமட்டும் இந்தியா விளங்கக் கூடாது, இந்தியாவே அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் நாடாக இருக்க வேண்டும் என இச் செயற்குழு மத்திய அரசை வலியுறுததுவேதோடு, காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச் செயற்குழு மத்திய அரசை வலிறுத்துகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=77804&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.