Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நார்வேயைத் தோற்கடித்த மேற்குலக இராசதந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நார்வேயைத் தோற்கடித்த

மேற்குலக இராசதந்திரம்

- ஜெயராஜ்

போர் நிறுத்த உடன்பாட்டின் எதிர் காலம் பெரும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இன்று யுத்த நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு ஓர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் நடந்து கொண்டிருக் கின்றது என்பதே கள யதார்த்த மாகும்.

ஒருபுறத்தில் யுத்த நிறுத்த மீறலானது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது போன்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை மற்றும் தெரிவு செய்யப்பட்ட இலக்குகள் மீதான தாக்குதல் என்ற ரீதியில் சிறிலங்கா விமானப்படை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இதேசமயம், நார்வேத் தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், அடுத்தகட்ட முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவிப்புச் செய்யும் நிலை நோர்வேத் தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது.

இத்தகையதொரு நிலையில், அடுத்த கட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட போர்தானா? அது எப்பொழுது? என்ற கேள்வியே பரவலாகஉள்ளது. வேறுவிதமாகக் கூறுவதனால், இரு தரப்பினரும் யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டனர் இறுதிக் கட்டத் தயார்ப்படுத்தலில் உள்ளனர் எனக் கூறின் மிகையாகாது.

நார்வேத் தரப்பும் இதனைத் தெளிவாகவே விளங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையிலேயே நார்வே ஏற்பாடு செய்த ஒஸ்லோச் சந்திப்புத் தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாக யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஐந்து கேள்விகளை நோர்வே அரசு இருதரப்பிடமும் முன்வைத்துள்ளது. இவ் ஐந்து கேள்விக்குமான பதில்கள் மூலம் யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர இருதரப்பும் இணங்குகின்றனவா? என்பதை மீண்டும் ஒரு தடவை உறுதி செய்வதே நார்வேத் தரப்பின் முயற்சியாகும்.

இம்முயற்சியினால் பயன் ஏதும் உண்டா? என்பதும் கேள்விக்குரியதொன்றே. ஒப்பந்தங்கள் மூலம் இணக்கப்பாடு காண்பதும், பின்னர் அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் சிறிலங்கா அரசாங்கத்தின் நீண்டகாலச் செயற்பாடகும். இதற்கு ஏற்கனவே, செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாடு, ஜெனீவா இணக்கப்பாடு என்பன அண்மைய உதாரணங்களாகும். இவற்றில் சிறிலங்கா அரச தரப்பினருடன் விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் தொடர்புபட்டிருந்தது. ஆனால், சிறிலங்கா அரசு அதனை அமுல் செய்யவில்லை.

ஆனால், சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவ்விதம் நடந்துகொள்வது தற்போதுதான் என்பதல்ல. அவர்களிடம் இது தொடர்பாக நீண்ட வரலாறு உள்ளது. தமிழர் தரப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அவை என்றுமே நிறைவு செய்ததில்லை. இந்நிலை யில் தற்பொழுது நார்வே விடுத்துள்ள கேள்விக்குச் சிறிலங்கா அரசு இணக்கமான பதில் அளிப்பதினால் விவகாரத்தில் முன்னேற்றம் கண்டுவிட வாய்ப்பில்லை. ஆகையினால், தமிழர் தரப்பு இதற்குப் பதில் அளித்தாலும் ஒன்று தான் பதில் அளிக்காதுபோனாலும் ஒன்றுதான். சிறிலங்கா அரசு இன அழிப்புச் செயலை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை.

இன்று போர் நிறுத்த உடன்பாடு கேள்விக்குள்ளாகியுள்ளமைக்க

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

ம்.. இதுவும் உங்க செய்திதான்.. இந்தியாவையும் யப்பானையும் நோர்வேயையும் இப்ப (சதியிலையிருந்து)விடுதலைசெய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.