Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

அவுஸ்திரேலியாவில்...

 

48140_365882130195212_711629414_n.jpg

 


(முகநூல்)

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

156090_128626353863391_1693785_n.jpg



-முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 8.4.13 மாலை 5மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடக்க இருக்கும் போதுக்கூட்டத்திற்கு ஆதரவு கேட்டு ஆட்டோ விளம்பரத்தில் மாணவர்கள்

 

 

Loyolahungerstrike -முகநூல்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை 5 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்ககாண மேடை தயாரிப்பு பணிகள் முடிவடைந்தது இன்னும் சில மணித்துளிகளில் ஆரம்பிக்க இருக்கிறோம்... — இன்று மாலை 5 மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழீழ வ (2 photos)

 

562987_603677619644267_782976254_n.jpg

601964_603677629644266_1259388058_n.jpg

 

Loyolahungerstrike -முகநூல்-

சென்னையில் மாணவர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம்...ஏப்ரல் 14.

 

557921_603678106310885_1884624372_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

64434_456146651127904_91587056_n.jpg

 

(முகநூல்)

விருத்தாச்சலத்தில் மாணவர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

564465_433138166776926_950804474_n.jpg

 

65621_433138303443579_93254012_n.jpg

 

563932_433138536776889_1453959539_n.jpg

 

558957_433138643443545_1428693402_n.jpg

 

525204_433138710110205_1533034127_n.jpg

 

529539_433138653443544_1725903432_n.jpg

 

558719_433138436776899_2090668284_n.jpg

 

526429_433138343443575_8167133_n.jpg

 

10066_433138340110242_572838110_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

733898_10151430823518579_836436089_n.jpg



-முகநூல்=

இப்படத்தில் காணும் இலங்கை திண்பண்டங்களை எங்கு பார்த்தாலும் வாங்காதீர் . இவைகள் கிடைக்குமிடம் சரவணா ஸ்டோர்ஸ் , நீல்கிரீஸ் , மெக்ரனட், சந்தோஷ் சிறப்பங்காடி மற்றும் தமிழகத்தில் பல அங்காடிகளில் இந்த பொருட்கள் விற்பனைக்கு உள்ளது . ஆகவே தயவு செய்து தின்பண்டங்கள் வாங்கும் போது, அது இலங்கையில் தயாரிக்கப்பட்டதா என்று ஒரு முறை படித்து விட்டு வாங்குங்கள் . இலங்கை தயாரிப்புகளை புறக்கணிப்போம்.

 

45490_10152709495230198_1318532251_n.jpg

 

(முகநூல்)

பிரான்சில் வரும் மே 18 அன்று மாபெரும் பேரணி.

 

522448_237766263034821_448601371_n.jpg

 

(முகநூல்)

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் 09.04.2013 அன்று ஈழ தமிழர்களுக்காக முழு கடையடைப்பு நடைபெறுகிறது.

 

தொடர்புக்கு ... இசக்கிமுத்து.

வியாபாரிகள் சங்க தலைவர்.

செல்: 9366707023

 

(முகநூல்)

Edited by துளசி

மாணவர்களின் போராட்டத்திற்கு மற்றும் ஒரு வெற்றி
சென்னை ஏர்டெல் நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் கம்பெனி முத்திரை பதித்துள்ள சீருடைகளை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக உடுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

 

24653_539086039476327_1662382964_n.jpg

 

(முகநூல்)

Krisna Eezham Tamil activist from Canada and iconic youth leader about student upsurge in Tamil Nadu.

 

 

(முகநூல்)

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பத்திரிகைச் செய்தி.

"தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்" சார்பில் 07/04/2013 ஞாயிறு மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் "மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம்" நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தை திருச்சி மாவட்ட மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இப்பொதுகூட்டம் காங்கிரஸ் கட்சியினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட மாணவர்கள் சார்பான கண்டனக்கூட்டமாகவும்,தமிழக சட்டமன்ற தீர்மானமான "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற 7 கோடி தமிழர்களின் விருப்பத்தினை இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும்,அதனடிப்படையில் இந்தியாவே ஐ.நா.வில் "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற தீர்மானத்தை கொண்டுவர வலியுறித்தியும் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்" ஒருங்கிணைப்பாளர்
சீ .தினேஷ் உள்ளிட்ட 15 க்கும் மேற்ப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் "தமிழீழமே தீர்வு" என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறித்திப் பேசினார்.இக்கூட்டத்திற்கு இக்கூட்டமைப்பின் நெறியாளர் களான அய்யா பழ.நெடுமாறன்,அய்யா ஆர்.நல்லகண்ணு ஆகியோர் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியினரின் காட்டுமிராண்டித்தனமான மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்ததுடன், தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தினை மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தினர்.இக்கூட்டத்திற்
கு இந்தி எதிர்ப்பு போராட்ட கால மாணவர் தலைவர் அய்யா ஜெயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றினார். எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாணவர்களால் கருத்தாழமிக்க கலைநிகழ்ச்சிகளும் , எழுச்சிப் பாடல்களும் பாடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் பொதுக்கூட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தெரிவித்தார்.மேலும்மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டத்தினை மக்களிடம் கொண்டுசேர்த்த ஊடகங்களை/செய்தித்தாள்களை பாராட்டியதுடன் ,ஊடகங்களின் குரல்வளையை(புதிய தலைமுறை தொலைகாட்சி) நெரிக்கும் விதத்தில் நடந்துகொண்ட ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவனை இப்பொதுகூட்டம் கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இப்பொதுக் கூட்டத்தில் மாணவர்களும்,பொதுமக்களும் திரளாக பங்கேற்று மாணவர்கள் போராட்டம் "தமிழீழம்" கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்பதை மெய்பித்துக்காட்டியுள்ளது.

 

(முகநூல்)

ஈழத் தமிழர்கள் விடயத்தில் இரட்டை வேடம் வேண்டாம்; பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதில் மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்புக் கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுதந்திரமாகச் செயற்படவும், மனிதநேயமின்றி ஈவு இரக்கமன்றி அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ஜனாதிபதியைப் போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மாநில மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் மதிப்பு கொடுக்காமல் இரட்டை வேடம் போட்டு மறைமுகமாக இலங்கையை ஆதரிக்கும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தால அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர்.

 

http://www.tamilcnn.org/archives/157778.html

5463_142744929230660_1671746388_n.jpg

 

(முகநூல்)


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

பாடகர் மாணிக்க விநாயகம் இசை நிகழ்ச்சிக்காக இலங்கை செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினால் போராட்டம் நடத்தப்பட்டது.பின்னர் மனுவும் கையளிக்கப்பட்டது.

 

44847_440835666003020_1756627358_n.jpg

 

149212_440835659336354_1969664849_n.jpg

 

(முகநூல்)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக , நேற்று விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாபெரும் மாணவர் பொதுகூட்டம் ...

சிங்களருடன் சேர்ந்து தமிழர்கள் இணக்கமாக வாழவேண்டும் என எந்த இந்திய அரசியல்வாதியாவது கூறினால் செருப்பாலே அடிப்போம் பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் ,ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் ஈழ இனப்படுகொலையை திரையிட்டு காட்டி இனி இந்த ப்ரொஜெக்டரை விலைக்கு வாங்கி ஒவ்வொரு கிராமமாக சென்று திரையிட்டு காட்டி மக்களுக்கு உண்மையை உணர்த்துவோம் என்றும் அறிவித்துள்ளர்கள் , மேலும் பொதுகூட்டத்தை பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றவர்கள் கையில் உப்பை கொடுத்து சோற்றில் போட்டு சாப்பிடுங்கள் அப்படியாவது சூடு, சொரணை வரட்டும் என முகத்தில் அடித்தாற்போல் ஆவேசமாக மாணவர்கள் கூறினார்கள் , மாணவர்களின் தூய்மையான தன்னலமற்ற போராட்டத்தை எந்த அமைப்புகளோ,கட்சிகளோ தங்களுக்கு சாதகமாக பயன்படித்தினால் அது சாப்பிட்டுவிட்டு தெருவில் வீசும் எச்சிலையை எடுத்து நக்குவதற்க்கு சமம் என உணர்ச்சியுடன் பேசினார்கள் மாணவர்கள். தமிழர்களின் ஒரே தீர்வான தமிழீழத்தை அடையும் வரை நாங்கள் எந்த வகையிலும் சமாதானமாக மாட்டோம் , தமிழ் எங்கள் குருதி , ஈழம் அது உறுதி என மாணவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தொடர்பிற்கு
மாறன் : 99522 24112
பிரவின் : 95000 78349



Loyolahungerstrike -முகநூல்-

மாபெரும்
எழுச்சிப் பேரணி 26.4.2013 வெள்ளிக்கிழமை- Germany - From Frankfurt
central railway station to consulate General of India,Frankfurt

 

 

560072_604096016269094_1819652356_n.jpg

 

பாடகர் மாணிக்க விநாயகம் பல தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை பயணத்தை நிறுத்தியுள்ளார்

-போராடிய தோழர்களுக்கு நன்றி-

(முகநூல்)

இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து.

 

10-manicka-vinayagam-300.jpg

 

 

சென்னை: தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25 பேர் இலங்கை செல்ல இருந்தனர்.

இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவான்மியூர் சாஸ்திரி நகரில் உள்ள மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டார்கள்.

மாணிக்க விநாயகத்திடம் இலங்கை செல்ல வேண்டாம் என வற்புறுத்தி மனுவும் கொடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணிக்க விநாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து 11-ந்தேதி (நாளை) இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு நானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்பதையும், எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டோம் என்பதை யும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/10/tamilnadu-manikka-vinayagam-s-programme-sri-lank-173242.html

 

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு.

அன்புடைய ஊடகவியளாள நண்பர்களுக்கு,
தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பின்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்துகொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்துகொண்டுள்ளோம்.

அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11 லிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும்.

ஐநா மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐநா வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம்.

அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜே.என்.யூ.- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம்.

தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். ‘தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல்’ 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.

பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்.

கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள்(We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம்.

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக

அ.மணிகண்டன் – 72995 69699 (லயோலா கல்லூரி)

 

(முகநூல்: loyolahungerstrike)

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக விருதாசலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாணவர் பிரவீன்ராஜ் உரையிலிருந்து தனித்தமிழீழ விடுதலையின் மீதும் விடுதலை புலிகளின் மீதும் மாணவர்கள் வைத்திருந்த்த மதிப்பும் ஈர்ப்பும் தெளிவாகத்தெரிகிறது.

 

மேலும் அவர்களின் அரசியலறிவு மிகவும் கூர்மையாக உள்ளதையும் அறிய முடிகிறது. இன்றைய அரசியல் வாதிகளின் நிலைப்பாட்டையும் ஈழ சிக்கல்களையும் இந்தியாவின் கீழ்த்தரமான நிலைப்பாட்டையும், தமிழக துரோக அரசியலையும் அவர்கள் மேடையில் தோலுரித்துக்காட்டியது பொது மக்களுக்கு புல்லரிக்கச்செய்தது.

 

மேலும் அவர்கள் உரைகளுக்கு நடுவே ஈழப்போரில் காங்கிரசு அரசு இலங்கைக்கு ஆயுதம் உட்பட அனைத்து உதவிகள் செய்ததை காணொளியிட்டும், திமுக வின் மறைமுக ஆதரவை காணொளியிட்டும் காண்பித்தனர். மேலும் மாணவர்கள் சொந்தமாக புரெஜெக்டர் வாங்கி கிராமம் கிராமமாக திரையிட்டு காட்டப்போவதாக அறிவித்தவுடன் மக்கள் வெள்ளத்தில் எழுந்த கரகோஷம் விண்ணை பிளந்தது எனவே மாணவர்கள் கையில் அரசியல் சென்றுவிட்டது அரசியல் வாதிகள் இனி ஓய்வெடுக்கவேண்டியதுதான்

தொடர்பிற்கு
மாறன் : 99522 24112
பிரவின் : 95000 78349

 

 

 

(முகநூல்)

 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக நேற்றைய முன்தினம் விருதாச்சலத்தில் நடந்த மாபெரும் மாணவர் பொதுகூட்டத்தில் பல முகநூல் நண்பர்களின் கருத்துகளை பிரதிபலித்த என்னுடைய உரை , இது என்னுடைய முதல் மேடை பேச்சு, பிழை இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்...

 

- பிரவீன்ராஜ் -

 

(முகநூல்)

 

Edited by துளசி

thank you CSK ,for respecting the Tamil sentiments and for removing the srilankan players from entire IPL series..

 

(முகநூல்)

 

பி.கு: இது சம்பந்தமான இணைப்பு கிடைத்தால் யாராவது இணையுங்கள். :rolleyes:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏ. ஆர்.முருகதாஸ் ஈழம் பற்றிய கருத்து இணைப்பதற்கு முயற்சி பண்ணிப்பார்த்தேன் முடியவில்லை யாரிடமாவது இருந்தால் இணைத்து விடவும். 

 
நன்றி. 

 

 

Edited by தமிழரசு

தலைவரின் படம், பெயருடன் கூடிய உணவகம்.

 

547280_585440054814243_1536624882_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.