Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தின் அடுத்த நகர்வுகள் / தேவைகள் என்ன??

Featured Replies

போராட்டத்தின் அடுத்த நகர்வுகள் / தேவைகள் என்ன ?

 

 

தமிழர்களுக்கு உரிமையும், நீதியும் கிடைக்க முதலில் புதுடில்லியை தள்ளி வைத்து விட்டு உலகநாடுகளோடு தமிழர்கள் நேரடியாக அழுத்தம் கொடுத்து, கோரிக்கைகளை முன்வைத்து சந்திப்புகளை நடத்தி ஆதரவை திரட்ட வேண்டும்.

 

எந்த காலத்திலும் புதுடில்லி தமிழர்களுக்கு நீதியும், உரிமையும் பெற உதவுமென்ற நம்பிக்கையில்லை. கிடைக்கிறவற்றையும் தடுக்கிற வேலையை டில்லி ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை கேட்க எந்த முயற்சியையும் எடுக்காத புதுடில்லியை புறக்கணிப்பது ஒன்றே தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை தரும்.


தமிழக அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டுமென்கிற மாணவர் கோரிக்கை மிக முக்கியமாகிறது.

 

தமிழக கடல் எல்லையில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கடற்படை உருவாக்கமும் அவசியமாகிறது.

  • தொடங்கியவர்

எமக்கென ஊடகங்கள் தேவை

 

லண்டனில் இருக்கும் என் நண்பருடன் தொலைபேசியில் கதைத்தபோது அவருக்கு மாணவர் போராட்டம் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்...

 

# நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் செய்திகள் பார்ப்பதில்லையா என்று...?
அதற்கு அவர் சொன்னார் "கலைஞர்" செய்திகள் பார்ப்பேன் அதில் போராட்டம் பற்றி எதுவும் சிறப்பாக கூறவில்லையே என்றார்...


உடனே நான் அவருக்கு சில முகநூல் பக்கங்களின் இணைப்புங்களை மின்னஞ்சல் மூலமாக வழங்கினேன்..

 

# சிறிது நேரம் கழித்து அவர் என்னுடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி எனக்கு நன்றி சொன்னார்
தமிழகத்தில் இவ்வளவு போராட்டம் நடந்திருக்கு எனக்கு தெரியாமல் போய்விட்டது அதற்காக அவர் வருத்தப்பட்டார்...


பத்து நாட்களாக தொலைக்காட்சி செய்யாத பரப்புரையை சில மணித்தியாலத்தில் முகநூல் செய்து விட்டது...

 

#இந்த நண்பர் போல் இன்னும் பல தமிழர்கள் தொலைக்காட்சியை நம்பியே வாழ்கின்றார்கள்
அதனால் நண்பர்களே உங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லோருக்கும் முகநூல் பக்கங்களின் இணைப்புக்களை வழங்குங்கள் போராட்டம் அனைவருக்கும் தெரியட்டும்....

 

 

  • தொடங்கியவர்

மாணவர்களே, அடுத்தது என்ன, எப்படி?

 

புரட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால் தொடர்வது கடினம். ஒரு பெரும் புயலுக்கு நடுவே, ஒரு சின்ன அகல் விளக்கை அணையாமல் எடுத்துச் செல்லும் வித்தை போன்றது அது. அசாத்தியமானதல்ல என்றாலும் அசாதாரணமான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.


களத்தில் நிற்கும் கல்லூரிகள், மாணவர்கள் அனைவரும் அவரவர் கல்லூரியில் அனைத்துத் தரப்பு மாணவ-மாணவியரை உள்ளடக்கிய 10 பேர் ஒருங்கிணைப்புக் குழுவை உடனடியாக ஏற்படுத்தியாக வேண்டும்.

 

மாவட்டத்திலுள்ள அனைவருமாக சேர்ந்து ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்துவதும் மிகவும் இன்றியமையாதது. பிற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுடனும் தொடர்பு ஏற்படுத்திப் பேசிக்கொண்டிருப்பது, தகவல் பரிமாறிக் கொள்வது மிக அவசியம்.

 

போராட்டத்தை ஃபேஸ் புக் புரட்சியாக மாற்றி விடாமல், சிறு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள், ஒட்டுப்படம் (sticker) போன்றவற்றை அச்சடித்து, உங்கள் பகுதியில் வீடு வீடாக சென்று விநியோகித்து, மக்களை சந்தித்துப் பேசி, உங்களுக்குத் தேவையான பொருளுதவியையும் கேட்டுப் பெறலாம். மக்கள் ஆதரவும், பொருளுதவியும் ஒருங்கேக் கிடைக்க இது ஒன்றே வழி.


கல்லூரி நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் போன்றோரிடம் உறுதியாக ஆனால் மரியாதையாகப் பேசுவது நல்லது. அவர்கள் நம்மை வெறுக்கும்படியான மொழி, உடல்மொழி, கோஷம், அணுகுமுறை, அராஜகம் வேண்டாம். அதுபோல ஊடகங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது.

 

கல்லூரி நிர்வாகமோ, மத்திய, மாநில அரசுகளோ போராட்டங்களை விரும்புவதில்லை, சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை மாற்றியமைக்கவும் எளிதில் முன்வருவதில்லை. பொறுமையிழக்காமல், உறுதி பிறழாமல், நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து முன்னேறுவதுதான் ஒரே வழி. தொலைநோக்குப் பார்வை, அறிவுபூர்வமான அணுகுமுறை, தொடர்ந்த கருத்துப் பரிமாற்றம் அவசியம் வேண்டும்.


பெற்றோரின் கடின உழைப்பையும், காசையும் பெற்று வாழ்கிற மாணவர்கள் அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். கூடவே சமூகக் கடமையை ஏற்றுக் கொள்வதால் அதற்காகவும் உழைக்க வேண்டும். இரண்டுமே முக்கியமானதால், இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டும். இது ஒன்றும் கடினமானதல்ல. நேர மேலாண்மை ரகசியம் தெரிந்தால் போதும்.

 

“படிப்பைப் பார், தேவையற்ற வேலை எதற்கு” என்றெல்லாம் இடித்துரைப்பார்கள் பலரும். இப்படி நல்லவர் எல்லோருமே ஒதுங்கிப் போனதால்தான் ஓர் அவல நிலைக்குள் சிக்கிக் கிடக்கிறோம். எங்கள் உலகை நாங்கள் உருவாக்குகிறோம், எந்த கல்லூரியும், பேராசிரியரும் கற்றுத்தராத பல அற்புதமான வாழ்க்கைப் பாடங்களை நாங்கள் பயில்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். நாம் வளர நாடு வாழ்வது அவசியம்.


இருளுக்குள் உழன்று கொண்டிருந்த தமிழினம் உங்களால் நம்பிக்கைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து அறவழியில் போராடுங்கள். ஒற்றுமையாய்ப் போராடுங்கள். ஐம்பது வருடங்களாக தொடர்ந்து ஏமாற்றப்பட்டிருக்கிற நம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு உங்களால் உருவாகட்டும்!

 

 

சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மார்ச் 21, 2013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.