Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வையாளர்…

Featured Replies

நல்ல இனிமையான ஒரு மாலைப் பொழுதில் சுவையான தேநீர் குடித்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம்.. வீட்டு வரவேற்பறையில் நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே தொலைக்காட்சியில் காதுக்கு இனிய இசை நிகழ்ச்சியையோ, மனதிற்கினிய தொடர்களையோ பார்த்து ரசிக்கிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு பார்வையாளராய் நமக்கு பிடித்ததை, நமது ரசனைக்கு உகந்தவற்றை ரசிக்கிறோம்.. அந்த பொழுது மிக இனிமையாகத்தான் கழிகிறது.

 

ஆனால்.. இலங்கையில் மண்ணை நனைத்த மனித உரிமை மீறல் காட்சிகள் ஒவ்வொரு முறையும் புதிய தலைமுறையில் வெளிப்படுகிறது.. வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளில், ரத்தம் தோய்ந்த.. மனிதாபிமானம் அற்ற மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.


ஒருவேளை சுவையான தேநீருடனோ அல்லது நொறுக்குத்தீனியுடனோ.. இந்த முறை பார்வையாளராய் மட்டுமே இருப்பது மிக அவமானகரமானதாக இருக்கிறது.. ஆனாலும்.. கையைக் கட்டிக்கொண்டு ஒரு பார்வையாளராகத்தான் இருக்கிறோம்.

 

எப்போதோ நடந்ததுதான்.. 2009 ஆம் ஆண்டு அரங்கேறிய அவலங்கள்தான்.. உச்சகட்டமாய் போரின் இறுதிகட்டத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித மிருகங்கள், சகமனிதர்களை வேட்டையாடி இருக்கின்றன.. பெண்களை வன்மத்துடன் துவைத்திருக்கின்றன.. பால் மணம் மாறாத குழந்தைகளையும், குருத்துக்களையும் வேரோடு பிடுங்கியிருக்கின்றன.. இந்த காட்சிகளும் புதிய தலைமுறையில் அடிக்கடி வெளிச்சமிட்டு காட்டப்படுகிறது.

 

இப்போதும் நான் பார்வையாளராகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...

 

ஒரு மழைக்காலத்தில் இடியும் மின்னலுமான இரவு பொழுது அது.. வீட்டில் தனிமையில் குழந்தைகளுடன் தூங்கும் நேரத்தில் கனவுகள் வரவில்லை.. இடி நம் வீட்டில் விழுமோ.. குழந்தைகள் தூக்கம் கலையுமோ என்று பதற்றத்துடன் விழித்திருந்தது என் தாய்மை..

என்போன்ற தாய்மார்கள்தான் வெடிகுண்டுகள் இடி போல இடைவிடாமல் ஒலித்த அந்த தேசத்தில் குழந்தைகளை வாரி அணைத்துக்கொண்டு பதுங்கு குழிகளையோ.. பாதுகாப்பிடங்களையோ தேடி ஓடினர்..

 

உயிரை கையில் பிடித்துக்கொண்டு.. உறவுகளை அழைத்துக்கொண்டு அடுத்த கணம் என்னவாகும் என்ற பேரச்சத்தில் பெண்களும், ஆண்களுமாக ஓடிய காட்சிகள் கண்களை நிறைக்கின்றன..

 

கரகரவென கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. குண்டுசப்தம் மனதை துளைக்கிறது… அப்படி ஒடியவர்கள் எங்கே தஞ்சமடைந்திருப்பார்கள்? அவர்கள் எங்காவது உயிர்பிழைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா? தெரியவில்லை..

 

நான் பார்வையாளராக இப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்....

 

யாருடைய உயிருக்கும் பாதுகாப்பற்று இருந்த அந்த நேரத்தில் கூட பெண்கள் யாரும் தனியாக ஓடவில்லை.. குடும்பமாக, குழந்தைகளுடன்தான் ஓடினார்கள்.. குழந்தைகள், பெற்றவர்களை தேடிப் பதறினார்கள். விடுதலைப்புலிகளைப் பற்றியோ, இலங்கை அரசு பற்றியோ நான் பேசவில்லை.. என் மனம் அங்கிருந்த.. இப்போது இருக்கும் என்னைப்போன்ற என்போன்ற சாதாரண மனிதர்களைப் பற்றித்தான் இருக்கிறது..

 

நான் பார்வையாளராகவேதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..


சைக்கிள் ஒட்டி சிராய்த்துக்கொண்டு அழும் மகனைப் பார்த்து நான் அழுதேன்…. கண்ணீர் எந்த வலியையும், வேதனையையும் குறைத்துவிட முடியாது.. ஆனாலும் அழுதேன்.. சிராய்ப்பு சரியாகும்வரை மனதின் ஓரம் துடித்துக்கொண்டே இருந்தது. என்னைப்போன்ற தாய்மார்கள்தான், பெற்ற குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் துடிப்பது கண்டு செயலற்று புலம்பியிருக்கிறார்கள்..

 

பிரசவித்த வேதனை தீரும்முன்னே பிள்ளைகளை பறிகொடுத்திருக்கிறார்கள்.. குடும்பத்தை காப்பாற்ற இயலாமல் நிர்கதியாக தவித்தபடி நின்றிருந்த ஆண்களை பார்த்தேன்..உயிர் பிரிந்துகொண்டிருந்த சொந்தங்களை காப்பாற்ற வழிதெரியாமல் கதறியவர்களை பார்த்தேன்..


இப்போதும் பார்வையாளராகத்தான் இருக்கிறேன்.

 

பூப்பெய்திய நாளில் கொண்டாடி மகிழ்ந்த உறவுகள் நினைவுக்கு வருகிறார்கள்.. இனம் புரியாத பெருமிதமும், மிதப்பும் களைகொண்ட அந்த நாட்கள் நினைவுக்கு வருகிகின்றன. அப்படிப்பட்ட எந்த பெருமிதமும் மிதப்பும் கொள்ள முடியாத சிறுமிகள், இளம் பெண்கள் துடிதுடித்து இறந்திருக்கிறார்கள். …

உயிர் போனபின்னும் களங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இறந்த உடலுக்கான மரியாதை கூட கிடைக்காமல் குப்பைகளைப்போல வண்டிகளில் நிரப்பப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.. எங்கு கொண்டுசெல்லப்படுகிறோம்.. என்ன கதிக்கு ஆளாக்கப்படப் போகிறோம் என்ற அச்சத்தில்.. கலவரத்தில் வண்டிகளில் ஏற்றப்பட்ட இளம்பெண்கள் அதற்கு பின் திரும்பிவரவேயில்லை… அவர்களின் கலக்கம் மிகுந்த பார்வை இடைவிடாமல் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது..

 

அந்த காட்சிகளையும் வரவேற்பறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.. வெறும் பார்வையாளராக இருப்பதன் அவமானம் மனதை அரித்தெடுக்கிறது..


இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த செய்திகளை ஒவ்வொரு முறை எழுதும்போதும் இதயம் நொறுங்கிக்கொண்டிருக்கிறது..ஒவ்வொரு துயரக்காட்சிகளையும் மிஞ்சும் வகையில் மற்றொரு துயரங்கள் பதிந்த ஆதாரங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.. அந்த ஆதாரங்களை ஆவணப்படுத்தும்போது ஏற்படும் உணர்வு சொல்லில் விவரிக்க முடியாதது.. இப்போதாவது இந்த அநியாயங்கள் ஆதாரத்துடன் வெளிப்படுகிறதே..

 

இலங்கைத் தமிழருக்கான தாமதிக்கப்படும் நீதியையும் பார்வையாளராகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..


- பார்வதி பாமா

 

http://puthiyathalaimurai.tv/srilanka-genocide-2

Edited by akootha

நன்றி தோழா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.