Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் தி.மு.க. செயற்குழு இன்று

Featured Replies

சென்னையில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

 

கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். 

 

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.  தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 7 முதல் 10 பேர் வரை உள்ளனர்.

 

இவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுடன் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

 

இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு உதாசீனப் படுத்தியதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் மத்திய மந்திரி சபையில் தி.மு.க. விலகி உள்ள சூழ்நிலையில் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

 

http://www.thinaboomi.com/2013/03/24/20430.html

  • தொடங்கியவர்

அதிருப்தி அழகிரி: மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகியது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். செயற்குழுவில், அவர் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

திண்டிவனம் பொதுக்கூட்டம் ரத்து தொடர்பாக, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பினருக்கும், மாவட்டச் செயலர், பொன்முடி தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு, இன்று முடிவு தெரிய வரும் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை தமிழர் பிரச்னையில், தி.மு.க., கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும் தி.மு.க., விலகியது. மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க., விலகியதில், அழகிரிக்கு உடன்பாடு இல்லை. அவர், தன் பதவியை ராஜினாமா செய்த பின், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களிடம், "காங்கிரசுடன், தி.மு.க., நட்பாகவே இருக்கும்' என, தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., விலகியதற்கு, ஸ்டாலின் காரணம் என்பதால், அவர் மீது, அழகிரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

 

திண்டிவனத்தில், தி.மு.க., கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை சார்பில், பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடைபெற இருந்தது.

 

வரவேற்புக்கு திட்டம்: வன்னியர், நாடார் சமுதாயத்தினர் இணைந்து, கனிமொழிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். மத்திய அரசிலிருந்து, தி.மு.க., விலகலுக்கான காரணத்தை, விளக்கிப் பேச கனிமொழி திட்டமிட்டிருந்தார். இதனால், அக்கூட்டம், தி.மு.க.,வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அக்கூட்டம் நடத்துவது தொடர்பாக, மாவட்டச் செயலர், பொன்முடியிடம் அனுமதி பெறவில்லை என்ற புகார், நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர், அன்பழகன், ஸ்டாலின் ஆகியோரிடம் கூறப்பட்டது. கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பான பொதுக் கூட்டத்தில், கனிமொழி பங்கேற்பதில் என்ன தவறு என, கனிமொழிக்கு ஆதரவாக கருணாநிதி, அன்பழகன் ஆகிய இருவரும் பேசியுள்ளனர். ஆனால், பொன்முடி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. "கனிமொழி அக்கூட்டத்தில் பங்கேற்றால், கூட்டம் நடத்துபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளார் பொன்முடி.

 

பொன்முடி தரப்பு: இதையடுத்து, பொதுக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை. திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் திட்டமிட்டு, கனிமொழியை புறக்கணிக்கும் நடவடிக்கையை, பொன்முடி தரப்பு மேற்கொண்டுள்ளது என்ற புகாரை, கனிமொழி ஆதரவாளர்கள் எழுப்பியுள்ளனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு, இன்று நடக்கும் செயற்குழுவில் முடிவு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகிய மூவருமே ஒற்றுமை இல்லாமல் செயல்படுவதால், கருணாநிதி மன வேதனை அடைந்துள்ளார். அதனால், அவர்கள் மூவரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த, தொ.மு.ச., கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், "யாரையும் எதிரியாகக் கருதாமல், அன்போடு பழகுங்கள்; ஒற்றுமையாக இருங்கள். நமக்குள் பிரிவினை வேண்டாம்; பிரிவினை பெருவினையாகி நம்மையே அழித்து விடும்' என்றார். இது, அதிருப்தியாளர்களுக்கு கூறப்பட்ட அறிவுரை என, கட்சித் தொண்டர்களிடம் பேசப்படுகிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=674225

  • தொடங்கியவர்

காங்கிரசுடன் இனி கூட்டணி இல்லை: ஸ்டாலின் திட்டவட்டம்

 

இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய காங்கிரஸ் அரசு தமிழர்களை ஏமாற்றி விட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

 

விரிவான செய்திக்கு: http://puthiyathalaimurai.tv/no-more-ties-with-congress-stalin

  • தொடங்கியவர்

கூடியது தி.மு.க. செயற்குழு: புறக்கணித்தார் அழகிரி

 

சென்னையில் நடந்து வரும் தி.மு.க. தலைமைச்செயற்குழு அவசரக் கூட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி புறக்கணித்துள்ளார்.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கியுள்ளார்.


இந்த கூட்டத்தில் தென் மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் புறக்கணித்துள்ளனர். ஆனால், நடிகை குஷ்பு இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

 

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது. இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலகினர்.


ஆனால், கூட்டணியில் இருந்து வெளியேற அழகிரிக்கு விருப்பமில்லை. இதனால் தனது ராஜினாமா கடிதத்தை மிகவும் தாமதமாகவே பிரதமரிடம் கொடுத்தார். ராஜினாமா செய்வது தொடர்பாக டி.ஆர்.பாலுவுக்கும், அழகிரிக்கும் நாடாளுமன்ற வளாகத்திலேயே மோதல் ஏற்பட்டது.


இந்த நிலையில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தை மு.க.அழகிரி, நகடிர் நெப்போலியன் புறக்கணித்துள்ளனர். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசிய நடிகை குஷ்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

 

இந்த கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க.வின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்தும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வியூகம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13194

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.