Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்​கை​யோடு இயைந்த வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சங்கப் பாடல்ளின் முக்கிய சிறப்பியல்பு மானிட வாழ்வின் மீது,​​ அதன் இன்ப,​​ துன்பங்ளின் மீது அதற்குள்ள அக்றையே ஆகும்.​ ஆனால்,​​ எந்த ஒரு பாடலும் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி நிற்க இயலாது.​ இயற்கை மானிட வாழ்வின் ஒரு நாடகம் அரங்கேறும் மேடையாவும்,​​ பின்ணியாவும் சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது.​
 
யற்கை அதன் எல்லாத் தன்மைளிலும் முக்கியத்துவம் பெற்று,​​ மனித வாழ்க்கையை வண்மாக்குகிறது.​ அதாவது,​​ இயற்கையின் முன்னிலையில் மனிதன் பெறும் உணர்ச்சிளைத் தெளிவாகக் காட்டுகிறது.​ காதனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு கடல்நீரின் "இழும்' எனும் ஓசை,​​ தன் சொந்த அழுகுலைப் போலவே கேட்கிறது ​(கலி.129).​ கடல் அவளோடு சேர்ந்து அழுதாகத் தோன்றுகிறது.​ சில வேளைளில் முரண்பாட்டுக்குரல் ஒலிக்கிறது.​ எதிர்ப்பு அல்லது அலட்சியம் உணரப்டுகிறது.​ அதே தலைவி,​​ சில வேளைளில்,​​ அலைகள் நிரம்பிய கடல் அவளுடைய துயரங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இரக்மற்று இருப்தாவும் உணர்கிறாள் ​(ஐங்.141).​
இவ்வாறு மாறிரும் மன நிலைளின் அழுத்தத்தைக் காட்ட,​​ சங்கப் புலவர்கள் இயற்கையைக் கருவியாக்கிக் கொண்னர்.​ இது உணர்வை பலப்டுத்த இயற்கையைப் பயன்டுத்திய நிலை.​ அதே இயற்கை,​​ உணர்வை ஏற்டுத்துதும் உண்டு.​
 


யற்கையின் வருணனை நம் கண்முன் காட்சியாய் விரியும் வண்ணம் அமைந்து சிறக்கிறது.​ கண்டும் கேட்டும் இன்புறுதற்கான நாட்டியக் கலையின் சொல்லோவியத்தை அகநானூற்றுப் பாடல்ளில் காணலாம்.​ இனிமையும் எழிலும் கொண்மைந்த ஆடற்கலை,​​ சங்காலத் தமிழ் மக்ளின் கலை வாழ்க்கையில் உயர்ந்த இடம் பெற்றுத் திகழ்ந்தது.​ அவர்ளுடைய பண்பாடுமிக்க வாழ்க்கையைத் தம் பாடல்ளில் புலவர்கள் பாடி,​​ அக்லைச் சிறப்பைப் போற்றியுள்னர்.​ மக்கள் மன்றத்திலும் மன்னர் அவையிலும் செல்வாக்குப் பெற்மையால்,​​ புலவர்கள் நாவிலும் கற்னையிலும் அக்கலை இடம் பெற்றது.​
 
நானூற்றில் இடம்பெற்ற கபிரின் இக்கற்பனை ஓவியம்,​​ குறிஞ்சி நில வளத்தையும்,​​ நலத்தையும் குறிக்க எழுந்தாயினும்,​​ தமிழ் மக்ளின் வாழ்வில் அன்று சிறப்பிடம் பெற்றிருந்த இசையும்,​​ நாடமும் எய்தியிருந்த சிறப்பை அடிப்டையாகக் கொண்டும் அமைந்துள்ளது.​
 
குறிஞ்சி,​​ எழில் நலமிக்க நீலலைச் சாரல்;​ அங்கு நெடிது வளர்ந்து,​​ அசைந்தாடி நிற்கும் மூங்கில்;​ அவற்றில் வண்டுளால் துளைக்கப்பட்ட துளை;​ அதனிடையே விரைந்து வீசும் காற்று;​ புல்லாங்குழலின் ஒலி அங்கு தானாய் எழுகிறது.​ அருகில் பாடிக் குதித்தோடும் பனிநீர் அருவி எழுப்பும் "இழும்' எனும் ஓசை,​​ எண்ண இனிக்கும் வண்ண மலர்கள்;​ அதில் தேனை உண்ண நாடிப் பறக்கும் வண்டுளின் இன்னோசை,​​ தோகை விரித்து இனிமையாக ஆடும் மயிலின் ஆட்டம்;​ இவற்றைக் கண்டும் கேட்டும் இன்புற்று வியக்கும் குரங்குகள்.​ இயற்கையின் இந்த எழிற்கோலத்தில் ஈடுபட்ட சங்கப் புலராகிய கபிலர்,​​ இதை அழகுமிக்தொரு நாட்டிய அரங்மாகக் கற்பனை செய்கிறார்.​
""ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழலின் துதை குரலாகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடும்யில்
நனவுப் புகு விறலியில் தோன்றும்''​
​(அகம்.​ 82: 1}10)
 
விஞர்தம் கற்னையில் குறிஞ்சி மலைச்சாரல் அழகிய ஆடுமாகிறது;​ மூங்கில் துளைக் காற்றின் இசை குழலோசை;​ முழங்கி இறங்கும் அருவியின் ஒலி முழவோசை;​ மான்ளின் சத்தம் பெருவங்கிய ஓசை;​ வண்டுளின் முரற்சி யாழோசை என அமைந்து,​​ இனிதொரு குழுவின் இசையாக விளங்குகிறது.​ மயில் விறல்பட ஆடும் விறலியாவும்,​​ மந்திகள் பார்வையாளர்ளாவும் அமைந்துவிடுகின்றன.​ இக்காட்சியில் ஈடுடுவர்கள் நாட்டிய அரங்கம் முழுதையும் தங்கள் அகக்கண்ணால் காண்தோடு,​​ அரங்கில் உள்ளோரில் ஒருராய் அமர்ந்து நாட்டிஇன்பம் துய்க்கும் உணர்வையும் பெறுகின்னர்.​
 
சங்காலத் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர்.​ காடு,​​ மலை,​​ கடல்,​​ வயல் ஆகிய நானில இயற்கை,​​ இளமையில் அவர்ளின் தாய்டியாவும்,​​ வளர்ச்சியில் பள்ளியாவும் திகழ்ந்தது.​ திங்ளும் தென்லும்,​​ புல்லும் பூக்ளும்,​​ மரமும்,​​ பறவையும் விலங்கும் அவர்ளுக்கு அறிவூட்டும் ஆசிரியர்ளாவும்,​​ ஆன்ம நலம் காட்டும் குருவாவும் அமைந்தன.​ இயற்கையின் மெü மொழிகளை உணரும் உள்ளம் படைத்திருந்னர் சங்கால மக்கள்.​ அவற்றின் அழகைக் கண்டு உணர்ந்து துய்க்கும் திறன் பெற்றிருந்னர்.​ சங்காலப் புலவர்கள்,​​ இயற்கையின் புறத்தோற்ற அழகில் மட்டுமே ஈடுபட்டுப் பாடவில்லை.​ மக்கள்தம் வாழ்வு நெறிக்மைந்த நல்தொரு பின்புமாகவே அப்பாடல்ளில் இயற்கை அமைந்துள்மையைக் காணமுடிகிறது.​​
 
நன்றி - தமிழ்மணி

 

http://www.thoguppukal.in/2012/03/blog-post_9890.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.