Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்குச்சந்தை - உள்ளும் புறமும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரங்கநாதனுக்கு 1 லட்சம் பணம் தேவைப்பட்டது. என்ன செய்யலாம்? அந்தக் காலமாக இருந்தால் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கேட்கவேண்டும். இல்லா விட்டால் நகையையோ, நிலத்தையோ, வீட்டையோ அடகு வைத்துப் பணம் பெற்றுக்கொள்ளலாம். இப்பொழுது ஒரு டயல் செய்தால் போதும். வீட்டிற்கே வந்து காசோலை கொடுத்து விட்டுச் செல்கிறார்கள். இந்தப் பணம் கடன். தனிநபர் கடன். திருப்பி வட்டியுடன் செலுத்த வேண்டும்.

இன்னொரு ரங்கநாதன் இருக்கிறார். ரங்கநாதன் & கம்பெனி. அவருக்கும் பணம் தேவைப்பட்டது. ஆனால் திருப்பிச் செலுத்தும் கடனாக இல்லாமல் திருப்பிச் செலுத்தாத வகையில் பணம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். பணம் என்ன கூரையில் இருந்தா கொட்டும்? ஆனால் ஒரு நிறுவனத்திற்குத் திருப்பிச் செலுத்த அவசியமில்லாத வகையில் பணம் கிடைக்கும் ஒரு வழியுண்டு. அதுதான் பங்குகள் மூலம் பணம் திரட்டுவது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குபவர்கள், அந்தப் பங்கு களின் பங்குதாரர்கள் ஆகிறார்கள். அந்தப் பங்குகளின் வளர்ச்சியிலும் நஷ்டத்திலும் அவர்களுக்குப் பங்கு உண்டு. எனவே பங்குகளுக்காக முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை ஒரு நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை. பங்குகளின் விலை உயரும் பொழுது முதலீட்டாளர்களின் முதலீடும் உயருகிறதுதானே? அதுதான் முதலீட்டாளர்களுக்கு லாபம்.

ரங்கநாதன் & கம்பெனியின் மதிப்பு 10 கோடி. ஆனால் அவருக்கு தேவைப்பட்டதோ 1 கோடி. தனக்கு தேவைப்பட்ட தொகைக்கு பங்குகளை வெளியிடுவது என்று முடிவு செய்தார். இதற்காகப் பத்து லட்சம் பங்குகளை வெளியிட தீர்மானித்தார். ஒரு பங்கின் விலை (ஊஹஸ்ரீங் யஹப்ன்ங்) 10 ரூபாய் (10,00,000 ஷ் 10). 1 கோடி ரூபாய் கிடைத்துவிடும். ஆனால் தன் நிறுவனத்தின் மதிப்பு 10 கோடியாயிற்றே. இந்தப் பங்குகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என்று நினைத்தார். 5 ரூபாய் பிரீமியம் வைத்து பங்குகளின் விலையை 15 ரூபாய் முதல் 18 ரூபாய்க்குள் ஏலம் எடுக்கலாம் என்று அறிவித்துப் பங்குகளை வெளியிட்டார். இவ்வாறு முதல் முறைப் பங்குகளை வெளியிடும் முறைக்கு ஐய்ண்ற்ண்ஹப் டன்க்ஷப்ண்ஸ்ரீ ஞச்ச்ங்ழ் - ஐடஞ என்று பெயர். ஐடஞ டழ்ண்ம்ஹழ்ஹ் ஙஹழ்ந்ங்ற் - முதன்மைச் சந்தை எனப்படும் சந்தையில் முதýல் வெளியிடப்படுகிறது.

சத்யனுக்குப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஆவல். வங்கிகளின் சொற்ப வட்டி, நிதி நிறுவனங்களின் ஓட்டம் போன்றவற்றைப் பார்த்து விட்டு பங்குகள்தான் சிறந்த முதலீடு என்று முடிவு செய்து பங்குகளில் முதலீடு செய்யத் தீர்மானித்தார். ஒரு பங்குத் தரகரைப் பிடித்தார். பங்குகள் பத்திரங்களாக இல்லாமல் கணினிமயமாகி விட்டதால், பங்குகளை வைக்கக் கூடிய டிமேட் கணக்கை முதýல் தொடங்கினார். பங்குகளை வாங்க விற்க, ஒரு டிரேடிங் கணக்கையும் தொடங்கினார்.

ரங்கநாதன் & கம்பெனியின் ஐடஞ வருவதை தெரிந்துகொண்ட சத்யன், அதற்கு விண்ணப்பித்தார். இணையத்தின் மூலமாக சுலபமாக ஒரு பொத்தானை அழுத்தி விண்ணப்பித்துவிட்டார். அவர் நண்பர் இளங்கோவோ, மற்றொரு தரகர் மூலமாக விண்ணப்பம் பூர்த்திசெய்து விண்ணப்பித்தார். இரு வாரங்களுக்குப் பிறகு ரங்கநாதன் & கம்பெனியின் பங்குகள் பங்குச்சந்தையில் ýஸ்ட் செய்யப்பட்டன. பங்குகள் ஏன் பங்குச்சந்தைக்கு வர வேண்டும்?

பங்குச்சந்தை என்பது பங்குகளை வாங்குபவர்களும் விற்பவர்களும் கூடுமிடம். பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள் தங்களது பங்குகளை இங்கே ýஸ்ட் செய்யும். ஒரு பங்கு குறிப்பிட்ட பங்குச்சந்தையில் விற்பனைக்கு வருவது தான் ýஸ்டிங் எனப்படுகிறது. பங்குச்சந்தையை இரண்டாம் சந்தை - நங்ஸ்ரீர்ய்க்ஹழ்ஹ் ஙஹழ்ந்ங்ற் என்பார்கள். நம் நாட்டின் முக்கியமான இரு பங்குச்சந்தைகள் மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை.

ரங்கநாதன் & கம்பெனி புதியதாகச் சில தொழில்களைத் தொடங்க, லாபம் அதிகரித்தது.

சத்யன் 500 பங்குகளை ஐடஞ மூலமாக 15 ரூபாய்க்கு வாங்கியிருந்தார். ரங்கநாதன் & கம்பெனியின் லாபம் அதிகரிக்க, பங்குகளின் விலையையும் உயர்த்தியது. 15 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்கு, மூன்று மாதங்களில் 25 ரூபாயை எட்டியது. இந்த விலைதான் சந்தை விலை -ஙஹழ்ந்ங்ற் டழ்ண்ஸ்ரீங் என்று சொல்லப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு 7,500 ரூபாய்க்குச் செய்யப்பட்ட முதலீடு இப்பொழுது 12,500 ரூபாய். சத்யன் லாபம் போதும் என்று விற்று விட்டார். சத்யனின் மற்றொரு நண்பரான முரளி, பங்குச்சந்தையில் நீண்ட நாட்களாக முதலீடு செய்பவர். ரங்கநாதன் & கம்பெனியின் பங்குகள் அதிகமாக உயர்வைக் கண்டதும் கொஞ்சம் அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.

ரங்கநாதன் & கம்பெனி நிறைய முதலீடுகளைப் புதிதாகச் செய்வதையும், தொழில்களை வேகமாக விஸ்தரித்துக் கொண்டிருப்பதையும் தெரிந்துகொண்டார். தற்பொழுது உள்ள நிலையில் இந்தப் பங்குகளின் ட/உ விகிதம் குறைவாக இருப்பதையும் கண்டுகொண்டார். அது என்ன ட/உ விகிதம் ?

ஒரு பங்கின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக இருக்கிறதா என்று கண்டுகொள்ளும் ஒரு கணக்கு. ஒரு நிறுவனத்தின் லாபத்தை அதன் சந்தை விலையுடன் ஒப்பிடும் முறை. முரளி நீண்ட காலமாக பங்குச் சந்தையில் முதலீடு செய்துகொண்டிருப்பதால் அவருக்கு அதைப் பற்றி தெரிந்திருந்தது.

இளங்கோவோ கொஞ்சம் பழங்காலத்து மனிதர் போலத்தான் முதலீடு செய்வார். இணையத்தைப் பயன்படுத்தாமல் இன்னமும் தன் தரகரை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை செய்வார். அவர் தரகரும் இந்தப் பங்குகள் இன்னும் உயரக்கூடும். ரங்கநாதன் & கம்பெனி லாபம் அதிகம் தரும் தொழில்களில் முதலீடு செய்வதால் பங்குகள் ஏற்றமடையும் என்று கூற, ஐடஞவில் வாங்கிய பங்குகளுக்கு இன்னும் கூடுதலாகப் பங்குகளை பங்குச் சந்தையில் வாங்கினார்.

இந்தக் கதையைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன புரிகிறது?

பங்குகள் முதன்மைச் சந்தையில் வெளியிடப்பட்டு, இரண்டாம் சந்தையான பங்குச்சந்தையில் விற்பனைக்கு வரும் என் பதைப் பார்த்தீர்கள். பங்குகள் வாங்குவதற்கு டீமேட் கணக்கும், டிரேடிங் கணக்கும் தேவைப்படும் என்பதையும் அறிந்திருப்பீர்கள். நிறுவனத்தின் லாபத்திற்கேற்ப பங்குகளின் விலை உயர்வதைக் கவனித்திருப்பீர்கள். நிறுவனத் தின் லாபம் உயரும் பொழுது அதன் சந்தை விலையும் உயர்கிறது. சந்தை விலை அதன் லாபத்திற்கேற்ற சரியான விலையில் இருக்கிறதா, அதிக/குறைந்த விலையில் இருக்கிறதா என்று ட/உ மூலம் கண்டு கொள்ளலாம் என்றும் அறிந்திருப்பீர்கள்.

நல்ல லாபத்துடன் சென்றுகொண் டிருந்த ரங்கநாதன் & கம்பெனி, தன்னுடைய காலாண்டு அறிக்கையில் சில தொழில்களில் அடைந்த நஷ்டத்தால் தன்னுடைய ஒட்டு மொத்த லாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இந்தப் பங்குகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த முரளி, உடனடியாகப் பங்குகளை விற்றுவிட்டார். பங்குகளை 30 ரூபாயில் விற்றதால் லாபமும் கிடைத்தது.

இளங்கோ இந்தப் பங்குகள் சரிவடை வதைப் பார்த்ததும் உடனடியாக தன் தரகரைத் தொடர்புகொண்டார். பங்குகள் மேலும் சரியக்கூடும் என்று தரகர் கூறினார். விற்று விடுவது நல்லது என்றும் சென்னார். இளங்கோ பங்குகளை 27 ரூபாய்க்கு விற்று விட்டார். இளங்கோவுக்கு ஒரு நண்பர் இருக்கிறார், செல்வி. அவருக்குப் பங்குகள் பற்றி எதுவும் தெரியாது. இளங்கோவின் பேச்சைக் கேட்டே ரங்கநாதன் & கம்பெனி பங்குகளை வாங்கினார். அவ்வப்பொழுது இளங்கோவிடம் இந்தப் பங்குகளின் நில வரத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

ஆனால் இளங்கோ பங்குகளை விற்ற பொழுது அவருக்கு தெரியாது. திடீரென்று அவரைச் சில மாதங்களுக்குப் பிறகு சந்தித்த பொழுது இந்தப் பங்குகள் பற்றி விசாரித்தார். தான் பங்குகளை விற்றுவிட்டதாக இளங்கோ சொல்ல செல்விக்கு ஷாக். “என்னப்பா இப்படி செஞ்சிட்டியே? என்னிடம் சொல்ýயிருக்கலாமே?’ என்று நொந்து கொண்டே, உடனடியாகத் தன் தரகரைத் தொடர்புகொண்டார். அப்பொழுது பங்குகளின் விலை 5 ரூபாய். வேறு வழி? பங்குகளை நஷ்டத்தில் விற்றார்.

அப்பொழுது தான் செல்விக்குப் பங்குகளை வாங்கிப் போட்டு விட்டு, நாம் சந்தையில் இருந்து விலகிவிடக் கூடாது என்பது புரிந்தது. சந்தையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், பங்குச் சந்தையைப் பற்றித் தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்றும் தோன்றியது. பங்குச் சந்தைப் பற்றிக் கற்றுக்கொள்வது நல்லது என்று முடிவு செய்தார். தன் தரகர் சிபாரிசு செய்த புத்தகங்களைப் படித்தார். அவ்வப் பொழுது தன் தரகு நிறுவனம் ஏற்பாடு செய்த முதலீட்டாளர்கள் கூட்டங்களுக்கும் சென்றார். தன் சந்தேகங்களை தரகரிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டார்.

“அது என்ன குறியீடு’ என்று தன் தரகரைக் கேட்டார்.

தரகர் சொன்னார் “குறியீடு என்பது சில பங்குகளின் குழுமம். பல்வேறு துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களின் பங்குகளைத் தெரிவுசெய்து குறியீட்டை உருவாக்குவார்கள். இந்தக் குறியீடு, சந்தையின் மொத்தப் போக்கையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பிரதிபýப்பதாக இருக்கும். ஆநஉ இதைப் போன்ற 30 பங்குகளையும், சநஉ 50 பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது’

சரி.. ஏன் பங்குகள் திடீரென்று உயருகின்றன? சரிகின்றன ?

“பங்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உயரும். சரியும். நாட்டின் பொருளாதாரத்திற்கோ, நிறுவனங்களின் லாபத்திற்கோ பாதகம் ஏற்படுத்தும் செய்திகளால் பங்குகள் சரியும். இதற்கு நேர்மாறாக நல்ல செய்திகள் கிடைத்தால் பங்குகள் உயரும்’.

உதாரணம் கொடுக்க முடியுமா ?

“கச்சா எண்ணெய் விலை உயருகிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தானே? இந்த விலை உயர்வால் பாதிப்படையக் கூடிய துறைகளின் பங்குகள் சரியும். இன்போசிஸ் நல்ல லாபத்தைப் பெற்றிருப்ப தாக அறிக்கையைத் தாக்கல் செய்கிறது. இன்போசிஸ் பங்குகள் எகிறும்’

இப்படி ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தால் எப்படித்தான் முதலீடு செய்வது?

பங்குகள், லாட்டரிச் சீட்டுகள் அல்ல. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை ஒட்டியோ, சரிவைச் சார்ந்தோதான் பங்குகள் உயரும்/சரியும். சில நேரங்களில் சில துறையைச் சார்ந்த பங்குகள் மட்டும் உயரும். மென்பொருள் பங்குகள் சில நேரங்களில் உயரும். சில நேரங்களில் வங்கிப் பங்குகள் உயரும். இது அந்தத் துறைக்கு இருக்கும் ஏற்றத்தையும் சரிவையும் சார்ந்தது.

இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் எப்படிக் கண்டுகொள்வது?

நல்ல வணிகத் தினசரிகளை தினமும் படிக்கவேண்டும். செய்திகளுக்கேற்ப, சந்தையில் வரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். நாம் வாங்கியிருக்கும் பங்குகள் இந்தச் சூழ்நிலையில் உயருமா/சரியுமா என்று கவனிக்க வேண்டும். பல தொலைக்காட்சிகளில் வரும் பகுத்தாய்வாளர்களின் கருத்து களையும், பங்குத்தரகர்களின் ஆலோசனையையும் பெறலாம். இவை தவிர வணிகத் தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஊன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் அய்ஹப்ஹ்ள்ண்ள் எனப்படும் பங்குகளின் அடிப்படையை ஆராயும் முறை, பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் அய்ஹப்ஹ்ள்ண்ள் எனப்படும் பங்குகளின் தற்போதைய சூழலை அலசும் முறை போன்றவற்றைக் கொண்டு பங்குகளைப் பற்றி அலசுவார்கள். அதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். அதற் கேற்றவாறு பங்குகளை வாங்கலாம்/விற்கலாம்.

சரி…நம் முதலீட்டு உத்தி எப்படி அமையவேண்டும் ?

ஒரே நிறுவனப் பங்குகளிலோ, ஒரே துறையிலோ மொத்தப் பணத்தையும் முதலீடு செய்யக்கூடாது.

முதலீடு செய்யும் பணத்தை பல்வேறு துறை களில் பிரித்து முதலீடு செய்யவேண்டும். அவ்வப்பொழுது சந்தையில் இருக்கும் ஏற்ற இறக்கங் களைப் பற்றிக் கவலைப் படாமல் நல்ல நிறுவனங்களின் பங்குகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் பணத்தைப் பெருக்கலாம். குறுகிய கால முதலீட்டை விட நீண்ட காலத்திற்குச் செய்யும் முதலீடு, லாபத்தைக் கொடுக்கும்.

என் நண்பன் சில பங்குகளைக் காலையில் வாங்கி, மாலையில் விற்று நிறைய பணம் சம்பாதிக்கிறானே, அதை எப்படிச் செய்வது?

வந்துடுச்சா.. .பங்குச்சந்தைக்கு வந்தவுடன் பேராசை வந்திடுமே? சரி.. சொல்றேன்.. நாம் இதற்கு முன்பு பேசியதெல்லாம் முதலீடு (ஐய்ஸ்ங்ள்ற்ம்ங்ய்ற்). பங்குகளைக் காலையில் வாங்கி மாலையில் விற்கும் முறைக்குத்தான் டிரேடிங் (பழ்ஹக்ண்ய்ஞ்) என்று பெயர். பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்த பிறகு, ஓரளவு முதலீட்டு அனுபவம் பெற்ற பிறகு டிரேடிங் செய்யலாம். சில மணிநேரங்களில் பங்குகளை விற்று லாபம் பார்க்கலாம். இதற்கு நம்மிடம் பணம் முழுவதாக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. 10,000 ரூபாய் இருந்தால் போதும். 50,000 ரூபாய்க்குப் பங்குகளை வாங்கலாம்

அது எப்படி?

இதற்கு மார்ஜின் டிரேடிங் (ஙஹழ்ஞ்ண்ய் பழ்ஹக்ண்ய்ஞ்) என்பது பெயர். ஆனால் ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்றுவிட வேண்டும். காலையில் 100 பங்குகளை ஒரு பங்கு 50 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். மாலையில் அந்தப் பங்கு 60 ரூபாய்க்கு எகிறுகிறது. விற்று விடலாம். நம் லாபம் 1000 ரூபாய். சில மணிநேரங்களில் 1000 ரூபாய். அது சரி..பங்கு சரிஞ்சிடுச்சின்னா?

நஷ்டம்தான். ஆனாலும் தப்பிக்கலாம். பேராசையோடு வெறும் 10,000 ரூபாயை வைத்துக்கொண்டு 50,000 ரூயாய்க்கு பங்குகளை வாங்கக்கூடாது. இருக்கின்ற பணத்துக்கு ஏற்றாற்போல பங்குகள் வாங்க வேண்டும். லாபம் வந்தால் விற்று லாபமடையலாம். நஷ்டம் வந்தால் டெýவரி எடுத்துக்கொள்ளலாம்.

அது என்ன டெýவரி ?

பங்குகள் நம் டிமேட் கணக்குக்கு வருவதற்குப் பெயர்தான், டெýவரி. பொதுவாக பங்குகள் வாங்கிய நாளுக்கு இரண்டாம் நாள், பங்குகள் நம் கணக்குக்கு வந்துவிடும் (ப+2). நாம் வாங்கிய பங்கு அடுத்த நாள் எகிறினால் விற்றுவிடலாம். இல்லாவிட்டால் டிமேட் கணக்குகளில் வைத்துக்கொள்ளலாம்.

சரி.. எந்தப் பங்கு இத்தகைய டிரேடிங்கிற்கு ஏற்றதாக இருக்கும்?

எந்தெந்தப் பங்குகளை நிறையப்பேர் வாங்குகிறார்களோ, அல்லது விற்கிறார்களோ, அந்தப் பங்குகளை வாங்கலாம். இதனை ஙர்ள்ற் அஸ்ரீற்ண்ஸ்ங் நற்ர்ஸ்ரீந்ள் என்று சொல்வார்கள். இதே போல அன்றைக்குச் செய்திகளில் அடிபடும் பங்குகளையே வாங்கவேண்டும். இதனை ஙர்ம்ங்ய்ற்ன்ம் பழ்ஹக்ண்ய்ஞ் என்று சொல்வார்கள். இந்த வகை டிரேடிங்கின் தத்துவம், ஒரு பங்கு ஙர்ம்ங்ய்ற்ன்ம் சமயத்தில் எகிறும்/இறங்கும். இந்த ஙர்ம்ங்ய்ற்ன்ம் சமயத்தில் நாம் நம் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், இதற்கு நாம் பங்குச் சந்தையை தினமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். சந்தையைக் கூர்ந்து கவனிக்க முடியாதவர்கள் டிரேடிங் பக்கம் வரக்கூடாது.

மலைப்பாக இருக்கிறதே? நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் போல இருக்கிறதே?

தொடக்கத்தில் அப்படித்தான் இருக்கும். போகப் போக உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். சந்தையைக் கூர்ந்து கவனித்தால் சந்தையின் சூட்சமம் புரிபடும்.

பங்குகளைப் பற்றி ஓரளவிற்கு விஷயம் தெரிந்துவிட்டது. முதலீடு செய்துவிட வேண்டியதுதான் என்று செல்வி புறப்பட, தரகர் சொன்னார்.

பங்குகள் எகிறவும் செய்யும், சரியவும் செய்யும். ஒரு நாள் சரியும் பங்கு, பிறகு எகிறும். இந்த ஏற்ற இறக்கங்களில் நமக்கு உடனடித் தேவையாயிருக்கும் பணத்தை முதலீடு செய்யக்கூடாது.

மிகுதியாக இருக்கும் பணத்தையே முதலீடு செய்ய வேண்டும். “இவை எல்லாவற்றையும்விட முக்கியமான ஒன்று. முதலீடு செய்யும் எல்லோருக்கும் தேவை. அது என்ன என்று தெரியுமா?’ என்று தரகர் கேட்க, செல்வி உடனே சொன்னாள்.

“சந்தையின் ஏற்ற இறக்கச் சூழ்நிலைகளில் பணத்தைப் பெருக்க, நிறையப் பொறுமை வேண்டும் என்பது எனக்குத் தெரியும் தரகரே’

“நல்லது. இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள். யார் சொன்னாலும், அப்படியே கேட்காமல் அலசி ஆராய்ந்து சொந்தமாக முடிவு எடுங்கள். ஏனெனில் முதலீடு செய்யப்படுவது நீங்கள் பாடுபட்டுச் சேர்த்த பணம்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு விதிகளே இருக்கின்றன.

முதல் விதி - எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் பணத்தை இழந்துவிடக்கூடாது.

இரண்டாவது விதி - முதல் விதியை எப்பொழுதும் மறந்துவிடக்கூடாது.

உங்களுக்கு நிச்சயம் வெற்றிதான். முதலீடு செய்யுங்கள். பணத்தைப் பெருக்குங்கள்’

by தமிழ் சசி

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல் இனைப்புக்கு நன்றி அருன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.